• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
இரண்டற கலந்தனவே 🥰
நாயகன்: ஆதித்யா
நாயகி: மிருதுளா
நாயகன் ஆதித்யா கட்டிடபொறியாளர் பணக்கார வீட்டின் வாரிசு அப்பா ராஜசேகர் பணக்கார செருக்கு உடையவர்
நாயகி மிருதுளா தூரிகை கொண்டு இயற்கை ஓவியங்களின் படைப்பாளி தகப்பன் விஸ்வநாதன் மிடில்கிளாஸ் கௌரவ பொறுப்பாளி😞😞😞
எதிர்பாராத சந்திப்பில் மிருதுவான உள்ளம் கொண்ட பெண்ணின் மீது ஆதி காதல் கொள்கிறார் அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் சந்திப்பு இருவருக்கும் காதலாக இரு வீட்டாரும் காதலை எதிர்க்க வீட்டை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர் 💐 💐 ❤
அவர்களை வாழ விடாமல் பொருளாதார ரீதியாக பெற்றோர்கள் தடுக்க காதல் ஜோடிகள் இரண்டும் இயற்கை அன்னை ஊட்டியை தஞ்சம் அடைந்து வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அவர்களின் காதலின் பரிசு பிரபுவின் மணி வயிற்றில் 💖 💖 💖 💖
மிருவின் கர்பப்பை வீக்கமாக இருப்பதால் ஒரு குழந்தையை சுமக்கும் பலம் இல்லை அதனால் அவளின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் குழந்தையை காத்து தன் உயிரை தியாகம் செய்கிறார்😔😔😔
கை குழந்தை உடன் ஆதி படும் கஷ்டம் படிக்கும் போது கண்ணீரை வரவழைக்கிறது ஆதியின் கண்மூடி தனமான காதலே குழந்தையை விற்க அவன் எடுக்கும் முயற்சிகள் 😞😞
சூழ்நிலையை கையாள தெரியாமல் அவன் தவிக்கும் தவிப்பு அவனின் மிருதுளா மீதான காதலின் எதிரொலி
வெண்மதி தாயாக இருந்து இருகுழந்தையையும் காப்பாயாக😔😔
மிகவும் அழுத்தமான கதைக்களம் அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 ❤
 
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
காதல் ராஜ வீதியிலே
நாயகன்: மணிமொழி
நாயகி: மதிவதனி
ஒரு ஆதரவற்ற இல்லத்தின் நிர்வாகியாக இருக்கும் நாயகன் அவ்வில்லத்திற்க்கு உதவி செய்யும் குடும்ப இளவரசியே நம் நாயகி சிறு வயதில் இருந்தே பார்த்து வளரும் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து எவ்வாறு 🥰🥰
செல்வமணி நீங்கள் பரிகாரமாக செய்த செயல் சிறுவயதில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தி இருக்க மொழியின் மனதில் தன் வாழ்க்கை பதில்தான் என்று பதிவு செய்து இருக்கும்
மூடநம்பிக்கையின் மொத்த பலனையும் நன்றாக அனுபவித்து விட்டீர்கள் 😡😡
மொழி நீ மதியை கல்யாணம் பண்ணா அந்த பாத்திரக்கடை அதிபர் பேசுவதை கேட்க மட்டுமே செய்ய முடியும் 🤣🤣🤣பதிலே சொல்ல முடியாது 🧡 🥰
மதிவாணன் டாக்டர் வைத்தியம் பார்க்க சொன்னா உதவிக்கு வந்த புள்ளை மனசுல லவ்ஸூ உடற 🤣🤣
கயல் அம்மா தைராய்டு ஒரு விஷயமாக அதை வச்சு பொண்ணுக்கு கல்யாணம் ஆகாதா நல்ல சுயநலமாக அம்மா 😡😡
உங்கள் பொண்ணு உயிரை காப்பாத்த எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு அதை சரிபண்ண நினைக்கிற மொழிக்கு எதிராக மறுபடியும் பிராயச்சித்தம் பண்ண போறிங்க செல்வகுமார் இவ்வளவு முட்டாளாக நீங்க
ஜம்பு உங்களுக்கு உங்கள் பையனாலையே முடிவு 😡
மூடநம்பிக்கையின் பலனே இந்த கதையின் மூலம் தெளிவாக புரியவைத்து எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மா 🥰 💐 💐 💐
 
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
தேன் நாட்டு பைங்கிளி
நாயகன்: அருள்மொழி வர்மன் 💓
நாயகி: வானதி
நம்ம நாயகி பெற்றோர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தாய் உமையாள் சென்னை தந்தை யோகராஜா இலங்கையை சார்ந்தவர் கல்லூரி வந்த இடத்தில் காதல் கொண்டு இருவரும் இலங்கையில் வாழ்ந்த வாழ்க்கையின் பரிசுகளே வானதி பார்த்திபேந்திரன்
பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளை தாய்வழி சொந்தமான ஆண்டாள் உமையாளின் அக்கா குடும்பம் அரவணைக்க தன் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் நாயகி நிதர்சனத்தை ஏற்று தமிழ் நாட்டில் காலடி பதிக்கிறார் அங்கு அவளுக்கு கிடைக்கும் அனுபவங்களே கதையின் கரு💓💓💓
சோழர்களின் பெயர்களையே தேன் நாட்டு பைங்கிளி கதை மாந்தர்கள் அனைவருக்கும் சூடி உள்ளார் எழுத்தாளர் 🥰🥰
கரிகாலன் அவனின் இறுக்கமான முகத்தின் பின்னர் பாசமான அண்ணனின் பிம்பம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது🧡🧡🧡🧡.. சகாயம் பெற்றோர்கள் இல்லாமல் வரும் குழந்தைகளை உங்கள் சூழ்நிலையில் ஏற்று கொள்வது மிகவும் பாராட்டக்கூடிய விடயம்🥰🥰
பருவ வயதில் ஏற்படும் ஈர்ப்பு அதனால் வரும் பிரச்சனைகளும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இந்த கதை மூலம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிதர்சனமான உண்மை 🥺🥺🥺
சுஜிதா நீ எல்லாம் பொண்ணா வாழதகுதி இல்லை போய் செத்துடு😈😈
அருளு நீ இந்த தேன் நாட்டு பைங்கிளியை கரம்பிடிக்க அவளோட நாட்டின் மருமகனாகசென்றது சூப்பர் 🥰🥰🥰 நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 🥰 💐 ❤
 
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
காதல் காவியம் நீ
நாயகன்: ரொஷான்
நாயகி: மீரா
இலங்கையில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் அதனால் வரும் பிரச்சனைகளும் கதைக்களம் 🥰 🥰
தமிழ் இனப்பிரச்சினை என்றும் தீர்க்கப்படாத உன் என்பது இக்கதையின் மூலம் தெரிகிறது 😥 😥 😥
சிறுவயதில் தாயை பறிகொடுத்த நம் நாயகிக்கு மாற்றாந்தாய் ஆக வரும் விசாலாட்சி தனக்கு பிறந்த பெண் பிள்ளையின் உரிமையை நிலை நாட்ட மீராவிற்க்கு செய்யும் துரோகம் தன் பெண்ணின் நிம்மதியை இரண்டாம் கல்யாணம் தடுத்து விட்ட குற்ற உணர்வில் தவிக்கும் தகப்பன் கந்தன் தன் பேத்திக்கு தாயாக அரவணைக்கும் பாட்டி கமலம் என்னும் குடும்ப அரசியலில் வளரும் நாயகி 😞😞😞
படித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்ள வேலை தேடி செல்லும் இடத்தில் இராணுவ பிரச்சினைகளால் படிப்பு சான்றிதழ்களை இழந்து விபத்தில் சிக்க நம்ம நாயகன் அவளை காப்பாற்றி அடைக்கலம் தருகிறார் சிங்கள குடியிருப்பில் தமிழ் பெண் இருக்க இயலாத காரணத்தால் எதிர்பாராத திருமண பந்தத்தில் இணைகின்றனர்🥰🥰🥰
நாயகன் சிங்கள மேஜர் கர்னல் ரோபோ போன்ற அவன் இறுக்கமான வாழ்வில் தென்றலென மீராவின் வரவில் மகிழ்ச்சி கொள்ள முடியாமல் அவளின் ஒதுக்கம் தடுக்கிறது 😔😔😔
மீராவும் ரொஷனை காதல் கொண்டு வாழ்க்கை ஆரம்பித்து வாழ ஆரம்பிக்கும் நேரம் எதிர்பாராத ரொஷனின் பணியின் காரணமாக எங்கே சென்றான் என்று தெரியா நிலையில் கர்ப்பிணியாக மீராவின் தவிப்பு வேதனை என்று கண்கலங்க வைக்கும் நிமிடங்கள் 🥺🥺🥺
பேபி பேபி என்று ரொஷான் சீனாவிடம் உருகும் போது ரோபோவுக்கு காதலா🤣🤣🤣
இந்த ரொஷான் பய காதல் உண்மையில் காவியக் காதல் தான் 🥰🥰🥰
ரொஷான் என்ற கண்ணனை தேடி மீராவின் காதல் பயணம்
நல்ல வித்தியாசமான அழுத்தமான கதைக்களம் அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 🥰 🥰 🥰
 
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
அழகுப் பதுமை யின் அன்பிற்கினியவனே
நாயகன்:அன்பிற்கினிய வன்
நாயகி: சிற்பிகா
நாயகி சிறு வயதில் சுயநினைவின்றி சாலையில் அடிபட்டு இருக்க நாயகனின் குடும்பம் தங்கள் வீட்டில் நாயகனின் அத்தை மகளாக வளர்க்கப்படுகிறார் யார் என்று தெரியவில்லை என்றாலும் சொந்த பெண் போலவே வளர்த்து படிக்க வைக்கும் தாய் பாக்கியம் அண்ணன் மாரிமுத்து அன்பில் திளைத்து வளர்கிறான் சிற்பிகா🥰🥰🥰
ஒரே வீட்டில் வளர பருவ வயதில் நாயகனுக்கு நாயகி மீது காதல் அதற்க்கிடையே இருந்து வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும் இல்லை எனில் நாயகன் உயிருக்கு ஆபத்து என்ற மூடநம்பிக்கையை நம்பி நாயகனின் அம்மா பாரிஜாதம் பாட்டி மங்கம்மா இரண்டு பேரும் ஆதரவற்ற பெண் தானே என்ற அலட்சியத்தால் சிறப்பினை மணம் முடித்து வைக்கின்றனர் 🥺🥺
அவளை தோஷபரிகாரத்திற்க்கு தான் திருமணம் செய்து வைத்து உள்ளோம் அவனுடன் வாழக்கூடாது என்று மிரட்டி வைக்க காலங்கள் கடந்து வாலிப வயதில் இருவரும் காதலில் கணவன் மனைவியாக வாழ அதை தெரிந்து கொள்ளும் மங்கம்மா கர்பவதியான சிறப்பினை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டைவிட்டு துரத்துகிறார் இதற்கு பாரிஜாத மும் அமைதியாக இருந்து கொள்கிறார்🥺🥺🥺
நம் நாயகன் மனைவியை காணத துக்கத்தில் வீட்டிற்கு செல்லாமல் விவசாயம் மட்டுமே உயிர் மூச்சாக இருக்க விவசாயத்தில் இரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் பயிரிட உதவி செய்வதற்க்காக தொழில் அதிபரின் மகளான நிஹரிகா வருகிறார் அவரின் மீது அன்புவின் பார்வை காதலாக படிய மீதி கதையின் போக்கில் 🧡 🧡 🧡
இத்தனை வருடங்கள் மனைவியை பிரிந்து வாடும் அன்பு நிஹரிகா மீது காதல் கொண்டது எதனால்
சிற்பி என்ன ஆனால் என்பதை எழுத்தாளர் விறுவிறுப்பான முறையில் சொல்லி உள்ளார் 👏 💐 💐 💐 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 💐 💐
 

Kalai Karthi

Active member
நிலவின் அக ஒலி கதை அருமை. கதை சின்னது தான் என்றாலும் ஹீரோ ஆரன் கலக்குகிறான் அதிரடியான போலீஸ் வழக்கு எல்லாம் ஜெயிக்கும் போலீஸ். வழக்குக்காக மாற்றல் ஆகி வர எதிர் வீட்டில் நாயகி இவள் அப்பா வேற ஒரு தொடர்பில் வீட்டைவிட்டு போக இவள் படித்து பேங்க் வேலைக்கு போய் தங்கை களையும் அம்மாவையும் கவனிக்கும் பொறுப்பு அவளுக்கு அவளும் சூப்பர். தங்கைகள் சூப்பர். மதுரன் ஆரன் இருவரின் கலாட்டா சூப்பர். வில்லன் சைக்கோ அவனையும் கண்டறிந்து காதலையும் ஜெயித்து குழந்தை வருவதோடு சுபம். ஆரன் அம்மாவை டீல் பண்ணுவது வில்லனை டம்மி ஆக்குவது என்று கலக்கி நம்மை ரசிக்க வைக்கிறான். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026


கதையின் பெயர்: மேகத்தில் தொலைந்த நிலவு
நாயகன்: தரிந்து சேனாநாயக்க
நாயகி: மேகலா அரவிந்தன்
நம் நாயகன் வான் படை கமாண்டர்
நாயகி ஏரோசிஸ்ட்
நாயகன் நாயகியை கண்டதும் காதல் கொள்கிறார்..
மேகாவின் பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி நடக்கும் சந்திப்புகளில் விபத்து ஒன்றில் நாயகன் நாயகியை காப்பாற்ற மேகாவும் தரிந்து வின் காதலை ஏற்றுக் கொண்டு காதல் பறவைகள் உல்லாசமாக கண்டி நகரை சுற்றி வருகின்றனர்😍😍😍😍
ஏஞ்சல் இருந்தால் டெவிலும் வருமே நம்ம காஞ்சனா பேயும் மேகாவோட பயிற்சி வகுப்பில் இருக்கு அதில் மேகா தோழி சுபா சரவணன் பிருந்தா என்று ஒரு குழு காஞ்சனா பேயும் தரிந்து வை விரும்ப தரிந்து பார்வை மேகா மேல் இருக்க பொறாமையில் தீ விபத்து ஒன்றை ஏற்படுத்தி எதிர்பாராத விதமாக காதலர்களை தெரியாமலே சேர் காரணமாக இருக்கிறாள்
ஆனால் இவர்கள் காதலுக்கு மிகப்பெரிய எதிரியாக இருப்பது இவர்களின் இனம் நம்ம பொண்ணு இலங்கை தமிழ் பொண்ணு பையன் சிங்கள ஆடவன்😥😥😥😥
சிங்கள இராணுவத்தால் மேகாவின் அப்பாஅரவிந்தன் ஒரு காலை இழந்து வீல் சேரில் இருக்கும் நிலை அண்ணன் முரளி சிறுவயதில் பயங்கர துன்பம் பட்டு தப்பி வந்த மருத்துவன் எனவே சிங்கள மருமகனை நிராகரிக்க இவர்களின் காதல் சேர்ந்ததா என்பதை சுவாரசியமாக எழுத்தாளர் சொல்லி உள்ளார் 😍 😍 😍
அனுஷ்கா சுபா சரவணன் இப்படி பட்டவர்கள் நம் வாழ்வில் வருவது வரம்
சாமியாராக இருக்கும் முரளி மூன்று வருடத்தில் தேவசேனா வை லோடுசேனாவாவே மாத்தி வச்சிட்டாங்க🤣🤣🤣🤣
சூப்பர் காதல் கதை காஞ்சனா பேய்க்கு சரியான தண்டனை கடவுள் கொடுத்துட்டார்
மேகா குடும்பம் அவள் காதலை ஏற்றுக் கொள்ள தயங்க காரணம் அவள் மீது உள்ள அன்பின் அடையாளம் தான் 🥰🥰🥰 ஏன்னா சிங்கள இராணுவத்தால் அவர்கள் பட்ட காயம் அதிகம்
நல்ல கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
 
Top Bottom