#நான்_அறிய_நீ_விமர்சனம்
வடிவான இலங்கை தமிழில் திருகோணமலையில் ஆரம்பிக்கும் இயல்பான குடும்பம் மற்றும் காதல் கதை ❤
பிராத்தனாவை மையப்படுத்துன கதை ❤ குடிக்கு அடிமையாகி அனைத்தையும் இழந்த தந்தை 😓 அனுதினமும் தந்தையை வசைப்பாடும் நோயாளி அன்னை 😰 சுயநலமான தம்பி விமலன் மற்றும் தங்கை நிலானி 😓😓
இப்படி அருமையான குடும்ப சூழ்நிலை மற்றும் சுமையால் பாறையாக மாறிப்போன பிராத்தனா 😞😞 இந்த பாறையிலும் நீர் சுரக்காதா என்று அறிய முயற்சிக்கும் நாயகன் வரோதயன் 😍😍
வாங்க வரோவுடன் சேர்ந்து நாமும் பிராத்தனா, அவளின் குடும்பம், பணி, மற்றும் இலங்கையின் சில பகுதிகளையும் சேர்த்து அறிந்துகொள்வோம் ❣❣
நாயகன் நாயகி முதல் சந்திப்பு இந்த கதை மாதிரி எந்த கதையிலும் படித்ததில்லை 🤣👌👌👌👌
இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்தது இயல்புதன்மை மாறாத கதாபாத்திரங்கள் மற்றும் நேர்த்தியான எழுத்து 👏👏
ஒவ்வொரு உவமைகளும் அடிதூள் 👏👏👏
ஒரு அக்காவாக தங்கையை காணாத பரிதவிப்பு அப்பப்பா 😢😢 ஆனால் அவளை கண்டவுடன் தனாவின் எதிர்வினை அட்டகாசம் 😍😍
சுற்றியும் சுயநலக்குடும்ப உறுபினர்கள் மத்தியில் இரமணி,பாலா மாதிரி நல் உள்ளங்கள் தான் தனா மாதிரி சுமைதாங்கிகளுக்கு ஆறுதல் 😊
வறுமை, வலி, சுயநலம், பணதேவைனு போனா கதைல என்னபா சுவாரஸ்யம் இருக்கப்போகுதுனு நினைச்சா அங்க தான் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனையை வைத்து சிறப்பா செஞ்சுட்டாங்க எழுத்தாளர் 👏👏
வரோ வாழ்வில் யுத்தம் சார்ந்து நடந்ததா சொன்ன நிகழ்வுகள் முற்றிலும் புதிய தகவல். உயிரை காப்பாற்ற என்னென்ன வழிகள் பின்பற்றப்பட்டிருக்கு 😓
வரோவின் காதல் மட்டுமல்ல எந்த சுழல்நிலையிலும் தனாவின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் பிடித்தது ❤
பிராத்தனாவின் மேல் பரிதாபம் தான் வருகிறது. சிறுவயது பக்குவமின்மை காரணமாக அவளின் முடிவுகளை குறை சொல்லுவதற்கு இல்லை 😰 கொஞ்சம் சுயநலமும் அவசியம் பிராத்தனானு சொல்லனும்னு தோணுது ❤
பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே எனக்கு பிடித்தது ❤ தனா, ரமணி, மற்றும் நிலானி சுயநலமாக யாரை பற்றியும் சிந்திக்காமல் திருமணம் செய்து கொண்டாலும் இறுதியில் கொஞ்சமாவது தனாவை பற்றி சிந்தித்தது சிறப்பு ❤
நிறைய காட்சிகள் மிகவும் பிடித்தது ❤ எல்லாமே சொல்ல முடியாததுனால ஒன்று மட்டும் குறிப்பிடுகிறேன் . இங்க இருக்கவே மூச்சுமுட்டுது என்று தனா வரோவிடும் பேசும் காட்சி அருமை 😍👌 இப்படியும் சம்மதம் சொல்லலாமா என்று இருந்தது ❤
கதை எனக்கு மிகவும் பிடித்தது ❤
நான் அறிந்த பிராத்தனாவின் வரோவை அனைவரும் அறிந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍