• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

STN - 95

Member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026.
கதையின் பெயர்: என் துயர் நீங்க வந்த துணையே
நாயகன்: தேவா
நாயகி: சம்யுக்தா ❤🧡
நம் நாயகி சம்யுக்தா பெரிய கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறார் ஏன் என்று தெரியாமல் தன் குடும்பத்தை விட்டு விலகி இருக்க காரணம் என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம் 🥰🥰💐
பெண் பிள்ளைகள் வெளி ஆட்களை விட நமக்கு நன்றாக தெரிந்த வீட்டு ஆட்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் இதற்கு காரணம் பெற்றோர்கள் தான் 😥😥😥😥
குருமூர்த்தி பொண்ணு வயசு பிள்ளையை இப்படி கெடுத்துக் இல்லாமல் ஸ்ரீ மையும் பலவந்தப்படுத்த முயற்சி பண்ற😡😡😡
சுபாஷ் நீங்க கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தா அந்த குருமூர்த்திக்கு ஒரு முடிவு கட்டி நீங்கள் வாழ்ந்திருக்கலாம் 🥺🥺🥺
அந்த காலச்சக்கரம் மறுபடியும் அந்த கடன்காரன் கையில் கிடைச்சுடுமோன்னு பயந்துட்டே இருந்தேன் இந்த மாதிரி மாந்த்ரீகம் பண்றவங்களுக்கு இதுதான் பெரிய தண்டனை 😡😡😡
விக்கி விஷயம் தெரிஞ்சும் அதுக்காக தேடவும் முடியாமல் உன் வேதனையை உனக்குள்ளே வச்சிருக்க😥😥😥😥
இது புரியாமல் இந்த தேவா வேற😥😥
ஸ்ரீ மதி உன் பிரசன்னா மாமா மேல் கொஞ்சம் நம்பிக்கை வச்சிருக்க லாம்🙄🙄🙄
சம்மு உன் வேந்து உன் மனசை தான் நேசிக்கிறான் நீ எப்படி இருந்தாலும் அவன் காதல் மாறாதது💖💖💖💖ரகு அப்பா கீதாம்மா நீங்க விஷப்பாம்பை வீட்டில் வச்சிருக்கிங்க🥺🥺கீதா ராணி அபிராமி அம்மா ரூபவதி பாட்டி எல்லாரும் சம்மு மேல் வச்ச பாசம் என்னிக்கும் குறையாது❣❣❣ நல்ல அழகான கூட்டுக்குடும்பம் அமைப்பு சூப்பர் 😍😍😍 நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰🥰💐💐
நன்றி அக்கா.. ரொம்ப அழகான விமர்சனம்.. கதைய லாஸ்ட் டைம்ல முடிச்சன்.. ஒரு ஃபுல்பில் இல்லாம சுத்திட்டு இருந்தேன்.. இப்போ தான் உங்க ரிவ்யூ பாத்தேன்.. ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 😍😍
 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: நேசமுகை உதிரும் இளவேனில்
நாயகி: இளவேனில்
நாயகன்: இளநேயன்
நாயகன் நாயகி இவர்கள் இருவருக்கும் பெயரில் மட்டுமே பொருத்தம் இருக்கிறது 🥺🥺🥺
இளவேனில் தவறான ஒருவனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்தால் மனதளவிலும் உடல் அளவிலும் எப்படி எல்லாம் கஷ்டப்படலாம் என்பதை இவளின் வாழ்க்கை முறை உணர்த்தும் 🥺🥺🥺
இளநேயன் பெரிய காதல் மன்னன் மாதிரி வேணியை ஒரு திருமணத்தில் பார்த்து அவளை ஃபாலோ பண்ணி ஃபோன் நம்பர் கண்டுபிடிச்சு அவளை காதலிக்க வச்சு கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தைகளும் வந்து சரியான குடிகார பரதேசி நாய் இவன்😡😡😡
குடிச்சிட்டு வந்து குழந்தை முன்னாடியே இவன் பண்ற அலப்பறை எல்லாம் பொண்ணுங்க பொறுத்து போகனும்னு சொல்ர வேணியோட ஆம்மா கவினி😡😡
பொறுப்பில்லாத குடும்ப தலைவி பேயன் அம்மா க்ளாரின் தங்கை நிலோபர்
பிள்ளையை கண்டிக்காமல் தறுதலையா வளர்த்து விட்டு மருமகளை தேவையற்ற வார்த்தைகளால் அசிங்கப்படுத்தி இரண்டு பிள்ளைகள் மனசு எப்படி எல்லாம் வேதனை படும்🥺🥺🥺
சிலிண்டர் பிரச்சினையை சொல்லும் போதே சரி பண்ணி இருந்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்குமா நேயனின் பொறுப்பற்றதனம் மனைவி குழந்தைகளை விபத்தில் தள்ளிடுச்சி அந்த நேரத்தில் கூட அவ்வளவு போதை எமர்ஜென்சி காலத்தில் கூட தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாது ஆண் வாழவே தகுதி இல்லாதவன் 😡🔪🔪🔪
பேயன் உண்மையில் இல்லை எனில் எனக்கு சந்தோஷம் 😔😔😔
நல்ல அழுத்தம் நிறைந்த கதை ❤🧡🧡 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰🥰💐
 

skp

Member
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்
#STN_06
"கண்களுக்குள் பள்ளி கொண்டேன்"
சக்தி... ஆசிரமத்தில் வளர்ந்த பெண் ஆனால் தன்னம்பிக்கையும் ஆளுமையும் நிறைந்தவள்.
"பிறப்பு என் கையில் இல்லை ஆனால் என் வாழ்க்கை என் கையில்.." என்பதும்
இறந்த காலத்தை நினைத்து வருந்தி வருங்காலத்தை நினைத்து பயந்திருந்தால் நிகழ்காலம் கொடுமையாகிவிடும் என இவள் கூறுவதும் அருமை 👏👏👏
இவளின் பழுப்பு நிற கண்களுக்குள் பள்ளி கொள்ள வருகிறான் பிரகதீஸ்வரன்.. ஈஸ்வரின் சக்தியாக அவளை மாற்ற 🥰 பாரம்பரியமான ஈஸ்வர் குடும்பத்தின் முதல் வாரிசு ஆளுமையும் அதிகாரமும் தன் தாத்தாவைக் கொண்டு பிறந்தவன். ஆனால் தற்போது ஆட்சி செய்யும் பாட்டியின் செல்லப் பேரன் இருவரின் விழி பாஷைகளும் அருமை 🥰 இவர்களின் மௌன பேச்சில் சமைந்து நிற்பவர்கள் ஈஸ்வரனின் தம்பி சர்வேஸ்வரனும் தங்கை மகாலட்சுமியும் தான் 😀 அவர்கள் இருவருக்குமான பாண்டிங் வெகு அழகு 🥰
சக்தியின் ஒரே உயிர் தோழி தாரணி.. எங்கும் சக்தியை விடாமல் தன்னோடு நிறுத்தி வைத்துக் கொள்வதும் அவளின் தனிமையை அகற்ற தன்னால் முடிந்ததை செய்து அவளை சிரிக்க வைப்பதும் அவளின் மேல் அக்கறை கொள்வதும் அருமையான நட்பு 👏
சர்வா சக்தியின் பிரண்ட்ஷிப்பும் அழகு 🥰 மகாலட்சுமியின் கணவன் பாட்டியிடம் சக்தியை பற்றி பேசும் பேச்சும் வெகு அருமை 👏🥰
பரத் சிறிது நேரமே வந்தாலும் சக்தியை புரிந்து கொண்டு அவளை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ள முடியாது ஆனால் காலம் முழுவதும் நட்பாக இருக்க முடியும் என கூறுவதும் அருமை 👏🥰
வரலட்சுமி பாட்டி.. குடும்ப பாரம்பரியம், குலப்பெருமை முக்கியம் என கருதும் இவர் சக்தியை ஏற்றுக்கொள்ள மாட்டார் என நினைத்தால் அதற்கு மாறாக இவரின் செயலும் சொல்லும் வேற லெவல். மேன் மக்கள் மேன் மக்களே என்பதை உணர்த்தியது 👏🥰
ஈஸ்வர்.. பார்வையாலேயே காதலை உணர்த்தி அதைப் பெண் அவளுக்கும் கடத்தி உரிய நேரத்தில் அவள் அருகில் இருந்து, தேவையில்லாதவன் ஒருவன் பேச்சினை கேட்டு தன் பிறப்பை நினைத்து தடுமாறுபவளை அதட்டி, மிரட்டி தன் வழித்து கொண்டு வருவதெல்லாம் வேற லெவல் 🥰
பலராமனை ஈஸ்வர் சகோதரர்கள் ஏதாவது செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அது மட்டும் தான் குறை 😔
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹
Thank you so much ma ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
 

skp

Member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
நாயகன்:பிரகதீஸ்வரன்
நாயகி: சக்தி
நம் நாயகி பெற்றோர்கள் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்து படித்து தனக்கென தனி இடத்தை பிடித்து கட்டிடக்கலையில் பணிபுரிகிறார் நம் நாயகன் ஈஸ்வரன் பாரம்பரியமிக்க பெரிய குடும்பத்தில் பிறந்து அவரும் இதே கட்டிடதுறையைச்சார்ந்தவர் இவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சவால்கள் நிறைந்த காதல் குடும்பம் பாசம் இதுவே கதைக்களம் 🥰 💐 💐
சக்தி பெண் என்பவள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு உதாரணம் இந்த காந்த விழியால் தனக்கு யாரும் இல்லை என்று தளர்ந்து விடாமல் தனக்கென்று ஒரு கொள்கயை வைத்து அதை நோக்கி நிமிர்வாக பயணிக்கும் விதம் அருமை 🥰 🥰 🥰
சக்தி இன்றி இந்த (சிவன்) ஈஸ்வரன் இல்லை பணக்கார செருக்கு இல்லாமல் பெண்ணிடம் தான் இறங்கி போக வேண்டுமா என்று ஆணவம் இன்றி பழகும் விதம் சக்திக்கு ஏற்ற துணை💖💖💖💖
சக்தியின் நண்பர்களாக சர்வேஸ்வரன் நம் நாயகனின் தம்பி துணையாக இருக்கும் இடங்கள் எல்லாம் நட்புக்கு பேதம் இல்லை 🥰🥰🥰தாரணி சக்தி இரண்டு பேரும் நல்ல ஒரு பாண்டிங்
வரலெட்சுமி பாட்டி அவங்களுக்கு சக்தியை பிடிச்சாலும் அவங்க கௌரவம் பாரம்பரியம் எல்லாம் தடுக்க பாலகுமாரன் அதையும் தெரியப்படுத்தும் விதம் அருமை 👏 💐 ❤
பரத் சக்திக்கு கல்யாணம் செய்ய வரும் மாப்பிள்ளையாக எண்ட்ரி கொடுத்தாலும் அவளுக்கு ஒரு தோழனாக தோள் கொடுப்பேன் என்று சொல்ல எத்தனை பெரிய மனசு வேணும் ❣❣❣
இந்த பலராமன் இவ்வளவு கேவலமா நடந்தும் அவனை அப்படியே விட்டிருக்க கூடாது😡😡😡
மகாலெட்சுமி நம் நாயகனின் தங்கை நல்ல ஒரு புரிதலான உடன் பிறப்புகள் ❤❤❤
நல்ல எதார்த்தமான குடும்ப காதல் கதை ❤ 🧡 🧡 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
Thank u so much ma ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
 

ஷமீம்

Active member
#நான்_அறிய_நீ_விமர்சனம்


வடிவான இலங்கை தமிழில் திருகோணமலையில் ஆரம்பிக்கும் இயல்பான குடும்பம் மற்றும் காதல் கதை ❤


பிராத்தனாவை மையப்படுத்துன கதை ❤ குடிக்கு அடிமையாகி அனைத்தையும் இழந்த தந்தை 😓 அனுதினமும் தந்தையை வசைப்பாடும் நோயாளி அன்னை 😰 சுயநலமான தம்பி விமலன் மற்றும் தங்கை நிலானி 😓😓


இப்படி அருமையான குடும்ப சூழ்நிலை மற்றும் சுமையால் பாறையாக மாறிப்போன பிராத்தனா 😞😞 இந்த பாறையிலும் நீர் சுரக்காதா என்று அறிய முயற்சிக்கும் நாயகன் வரோதயன் 😍😍
வாங்க வரோவுடன் சேர்ந்து நாமும் பிராத்தனா, அவளின் குடும்பம், பணி, மற்றும் இலங்கையின் சில பகுதிகளையும் சேர்த்து அறிந்துகொள்வோம் ❣❣


நாயகன் நாயகி முதல் சந்திப்பு இந்த கதை மாதிரி எந்த கதையிலும் படித்ததில்லை 🤣👌👌👌👌


இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்தது இயல்புதன்மை மாறாத கதாபாத்திரங்கள் மற்றும் நேர்த்தியான எழுத்து 👏👏
ஒவ்வொரு உவமைகளும் அடிதூள் 👏👏👏


ஒரு அக்காவாக தங்கையை காணாத பரிதவிப்பு அப்பப்பா 😢😢 ஆனால் அவளை கண்டவுடன் தனாவின் எதிர்வினை அட்டகாசம் 😍😍


சுற்றியும் சுயநலக்குடும்ப உறுபினர்கள் மத்தியில் இரமணி,பாலா மாதிரி நல் உள்ளங்கள் தான் தனா மாதிரி சுமைதாங்கிகளுக்கு ஆறுதல் 😊


வறுமை, வலி, சுயநலம், பணதேவைனு போனா கதைல என்னபா சுவாரஸ்யம் இருக்கப்போகுதுனு நினைச்சா அங்க தான் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனையை வைத்து சிறப்பா செஞ்சுட்டாங்க எழுத்தாளர் 👏👏


வரோ வாழ்வில் யுத்தம் சார்ந்து நடந்ததா சொன்ன நிகழ்வுகள் முற்றிலும் புதிய தகவல். உயிரை காப்பாற்ற என்னென்ன வழிகள் பின்பற்றப்பட்டிருக்கு 😓


வரோவின் காதல் மட்டுமல்ல எந்த சுழல்நிலையிலும் தனாவின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் பிடித்தது ❤


பிராத்தனாவின் மேல் பரிதாபம் தான் வருகிறது. சிறுவயது பக்குவமின்மை காரணமாக அவளின் முடிவுகளை குறை சொல்லுவதற்கு இல்லை 😰 கொஞ்சம் சுயநலமும் அவசியம் பிராத்தனானு சொல்லனும்னு தோணுது ❤


பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே எனக்கு பிடித்தது ❤ தனா, ரமணி, மற்றும் நிலானி சுயநலமாக யாரை பற்றியும் சிந்திக்காமல் திருமணம் செய்து கொண்டாலும் இறுதியில் கொஞ்சமாவது தனாவை பற்றி சிந்தித்தது சிறப்பு ❤


நிறைய காட்சிகள் மிகவும் பிடித்தது ❤ எல்லாமே சொல்ல முடியாததுனால ஒன்று மட்டும் குறிப்பிடுகிறேன் . இங்க இருக்கவே மூச்சுமுட்டுது என்று தனா வரோவிடும் பேசும் காட்சி அருமை 😍👌 இப்படியும் சம்மதம் சொல்லலாமா என்று இருந்தது ❤


கதை எனக்கு மிகவும் பிடித்தது ❤


நான் அறிந்த பிராத்தனாவின் வரோவை அனைவரும் அறிந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
மிக அருமையான அழகான விமர்சனம்.. இந்த போட்டி நாவல்களில் நான் மிகவும் ரசித்து ஒவ்வொரு எபியையும் எதிர்பார்த்து படித்த கதைகளில் இதுவும் ஒன்று.. Hero heroine meet பண்ணும் காட்சி உண்மையில் இதுவரை படித்திடாதது..😆😆.

இதைவிட சிறந்த விமர்சனம் யாராலும் கொடுக்க முடியாது..👌👍🏻🙌🏻.
 
Top Bottom