Thank you so much sis.🫂#தாமரை_இலையுள்_உறை_தண்ணீராய்.,..
#கௌரிஸ்ரிவ்யூ…..
அழுத்தமான கதைகளம்……
தமிழ்செல்வன் போலீஸ் ஆபீசர்…..
ரொம்ப வருஷமா பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவது, சிறு பெண்களை கடத்தி அவர்களின் அனுமதி இல்லாமல் **** செய்ய வைக்கும் கும்பலை தகுந்த ஆதாரத்தோடு பிடிக்க தன் தங்கை அரசியை அந்த கும்பலிடம் அனுப்ப……
அவளும் அண்ணனுக்கு ஏற்ற தங்கையா ஆதாரம் திரட்டி, அக்கயவர்களை பிடிக்க போன இடத்தில் நிலாவை பார்க்கிறான்…..
அவளும் அந்த நரகத்தில் இருந்து விடுபட…..தற்*கொலை செய்ய போக…..
அவளையும் அவர்களோடு மீட்டு….நிலா, அவள் தோழி சூர்யா & அவ தம்பி கார்த்தி மூவரையும் மருத்துவனையில் சேர்த்துட்டு…..
மீதி பெண்களை தமிழ் அம்மா நடத்தும் காப்பகத்தில் சேர்க்கறாங்க……
எப்படியோ பிழைத்த நிலாவும்…..ரொம்ப violent ஆகி மறுபடியும் முயற்சி பண்ண…..
அதுவும் தமிழால் தகர்க்க படுது…..
இப்படி இருப்பவளை தனியே விட பயந்து, அவன் வீட்டுக்கே கூட்டி போக…..
அங்கே அவளுக்கோ பேரதிர்ச்சி காத்திருக்கு…..
யாரை இவ்வுலகில் அதிகம் வெறுக்கிறாளோ, யாரால் அவ வாழ்க்கை இப்படி ஆனதோ அவர் அந்த வீட்டில் இருந்தால்?????
அவளின் நிலை?????
யார் அந்த நபர்?????
எப்படி இப்படி பட்ட இடத்தில் வந்து மாட்டினா?????
இனி அவ வாழ்க்கை????
அது தான் மீதி கதை……
நிலா…..இவளுக்கு இழக்கப்பட்டது எல்லாமே அநீதி தான்…..அம்மாவில் ஆரம்பிச்சு, அப்பா, அத்தை, மாமா எல்லாருமே தான்…..
இப்படி இத்தனை உறவுகள் இருந்தும் அவளை இப்படி விட்டிகளே….
அது தான் செம்ம காண்டு ஆகும்…..
அதும் இவங்க அம்மா…..
தமிழ்…இவன் தான் கொஞ்சம் சுத்தம் அவன் குடும்பத்தில்….. நிலாக்காக பார்த்து பார்த்து செய்வது cute![]()
![]()
![]()
……
சிவநேசன் & தெய்வா….. நேசன் ஒரு கலெக்டர்…ஆன அந்த பதவி இருந்தும் அவர் ஒன்னும் பண்ணலை…..
தெய்வா….இவங்க ஒரு தெய்வ தாய்…..இவங்க நியாயம் எல்லாம் வேற ரகம்…..
சொந்த தம்பி வாழ்க்கை எப்படி போனாலும்….இவங்களுக்கு ஒரு உயிரை காப்பாத்தனும்…அதும் எப்படி பட்ட உயிர் தெரியுமா….கணவன் & பிள்ளைனு விட்டு போய்….கண்ட படி ஆடிட்டு இன்னொரு பிள்ளையையும் பெத்துட்டு வரும் மாதரசியை…..
அதுசரி….தம்பி வாழ்க்கை தானே…. அப்ப தானம் பண்ணுனு ஈசியா சொல்ல வரும்….இதே இவங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தா அப்படி தான் இருப்பாங்களா?????
போதிய வரை இதை திட்டியதால்….அடுத்த கேரக்டர் போலாம்……
பூமா….அந்த மாதரசி இவங்க தான்…..சோ
சீதா…..எல்லா ப்ராப்ளம்கும் பெரிய பிள்ளையார் சுழி போட்ட மேதாவி இவங்க தான்…..தியாக செம்மல்
அப்படின்னு அவங்களே நினைச்சிட்டு பெத்த பெண் வாழ்க்கையை பாழ் பண்ணினத்தில் முக்கிய culprit இவங்க தான்……
இன்னும் சில கேரக்டர்ஸ் …..அவங்களுக்கு திட்றது…. ரெஸ்ட் in ஹிஸ்டரி…..
சுனிதா….எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்….உங்களுக்கும் பிடிக்கும்னு தோணுது…..ஏன்னா…நம்ம மைண்ட் வாய்ஸ் அப்படியே அம்மணி பேசுவாங்க🫰சோ ஸ்வீட்…..
சூர்யா….அடுத்து இவளை தான் பிடிச்சது🫰🫰🫰🫰🫰…..செம்ம வில் பவர்
கதை நல்ல விறுவிறுப்பா, பரபரப்பா இருந்தது….எனக்கும் ரொம்பவே பிடிச்சது![]()
![]()
![]()
![]()
![]()
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
லிங்க்
![]()
STN - 72 தாமரை இலையுள் உறை தண்ணீராய்…
nidhaniprabunovels.com
கதையோட ஒவ்வொரு கேரக்டரை பத்தியும் என்ன ஃபீல் பண்ணிங்களோ அதை அப்படியே விமர்சனத்துல பிரதிபலிச்சு இருக்கீங்க.. ரொம்ப நன்றி டியர்