அத்தியாயம் 15
இன்னொரு முறையும் நாவினியிடம் பேசிப் பார்த்த மேனகாவினால் அவள் மனத்தை மாற்ற முடியவில்லை. அதைப் பிரேமாவிடம் சொல்லி, ஜெர்மனிலேயே அவளுக்குத் திருமணத்திற்குப் பார்ப்பதாகச் சொன்னார்.
பிரேமாவுக்கு அதை ஏற்க முடியவில்லை. இங்கே கேசிகனிடம் அவளை மணப்பதற்குச் சம்மதிக்கச் சொல்லிப் பிடிவாதமாக நின்றார்.
கேசிகனுக்கு வாழ்க்கையே வெறுக்கும் நிலை. நாவினியின் குறுந்தகவல்கள் ஒருவகையாக அவனைக் கொன்றன என்றால் அன்று அவள் சொன்ன வார்த்தைகள் அவனை உறங்கவோ உண்ணவோ விடாமல் துரத்தியடித்துக்கொண்டிருந்தன.
அவன் செய்ததுதான் சரியாம். அவளைப் போன்று ஒரு இடத்தில் நின்றிருக்கக் கூடாதாம். அவளைத் தாண்டி நகர்ந்தான்தான். ஆனால், ஆசைப்பட்டு நகரவில்லையே. மொழி மீது ஆசைப்பட்டு மணக்கவில்லையே. மணந்தபிறகு ஆசைப்பட்டு வாழ்ந்தான். அது வேறாயிற்றே. இதை எப்படி அவனால் அவளிடம் உடைத்துப் பேச முடியும்?
இதில் நாவினி இரண்டாம் முறையாகவும் அவனை வேண்டாம் என்று சொன்னது தெரியும். அவனும் இன்னொரு திருமணத்திற்குத் தயாராக இல்லைதான். அதுவும் அவளை மணப்பதற்கான தகுதி தனக்கு இல்லவே இல்லை என்று நினைத்தான்.
அதே நேரத்தில் நாவினியின் உயிர் நேசத்திற்குத் தான் கொஞ்சமும் நியாயமாக நடக்கவில்லை என்கிற அந்த நினைப்பு, பொதுவாக அன்னை திருமணத்திற்குக் கேட்டபோது உறுதியாக நின்று மறுத்தது போன்று, நாவினியைக் கேட்டபோது மறுக்க விடாமல் செய்தது.
அதில், “அவளே வேண்டாம் எண்டு சொல்லுறாள். பிறகும் ஏனம்மா அவளையே கட்டு எண்டு எனக்கு அரியண்டம் தாறீங்க? எனக்குத் தம்பி மட்டும் போதும் எண்டு இன்னும் எத்தினை தரம் சொல்லுறது?” என்று சினந்தான்.
“உனக்குப் போதும். உன்ர மகனுக்கு நீ மட்டும் போதாது தம்பி!” என்றார் அவரும் விடாமல்.
“நீ சொல்லு. எல்லாமா இருந்து உன்னை நான் வளத்தேன்தான். அம்மம்மா, தாத்தா, நல்லவையோ கெட்டவையோ மாமா, மாமி, மச்சான் எண்டு உன்னச் சுத்தி எல்லாரும் இருந்தவேதான். ஆனாலும் ஒரு நாள் கூட அப்பாக்காக நீ ஏங்கினதே இல்லையா?” என்று அவர் கேட்டபோது வீம்புக்கு மறுக்க நினைத்தாலும் முடியாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தான் அவன்.
“அதேதான் தம்பி உன்ர மகன்ர நிலமையும். இன்னும் விவரம் தெரிய ஆரம்பிக்கேல்ல அவனுக்கு. தெரிய வரேக்க நீ எப்பிடி என்னட்ட ஒண்டும் சொல்லாம உனக்குள்ளேயே வச்சிருந்தியோ அதே மாதிரி உன்னட்ட ஒண்டும் சொல்லாம தனக்குள்ளேயே வச்சு மருகுவார். நீ பெத்த பிள்ளை அப்பிடி அழுறதுதான் உனக்கு விருப்பமா?”
“அம்மா!” அவர் கேட்டு முடிக்க முதலே அதட்டினான். அப்படி அவன் மகன் மருகுவதற்கா அப்பா என்று அவன் இருக்கிறான்?
“சும்மா வாயால சொன்னதுக்கே உனக்குக் கோபம் வருது. ஆனா அதுதான் நடக்கப்போகுது. அதுக்குத்தான் நீ இவ்வளவு பிடிவாதமா நிக்கிறாய்.” என்று அவர் விடுவதாகவே இல்லை.
வர வரக் கேசிகனுக்கு வீடு நரகம் போலாயிற்று. அந்தளவில் அவனைக் கண்டாலே பிரேமா திருமணத்தைப் பற்றியேதான், அதுவும் நாவினியைக் கட்டு என்றுதான் பேசினார். இதேதான் நிறைமொழியைத் திருமணத்திற்குக் கேட்டு, இவன் மறுத்தபோதும் நடந்தது. இப்போது மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார்.
நாவினி அங்கே வேறு ஒருவனுக்குச் சம்மதித்துவிடுவாளோ என்று அவருக்குள் ஒரு பதற்றம். அதற்குள் இங்கே மகனிடம் சம்மதம் பெற்றுவிட நினைத்தார்.
நாவினியையும் விடவில்லை. அன்று அவன் வீட்டில் இருக்கையில் வேண்டுமென்றே வீடியோ கோலில் அவளுக்கு அழைத்தார். இப்படியான பொழுதுகளில் எல்லாம் புத்திசாலித்தனமாக மயூரனின் தம்பி முகிலனைக் கூப்பிட்டு, பேரனை அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.
சாரதா இவர்களின் முகம் பார்க்க முடியாமல் வருவதை நிறுத்திவிட்டதில் இது அவருக்கு வசதியாகிற்று. கூடவே பேரன் இல்லாத பொழுதுகளில் திருமணம் குறித்து மகனிடம் விடாமல் பேசினார். அவரின் இந்தத் திட்டமிட்ட செய்கைகள் அவர் ஒரு முடிவோடு இருப்பதைக் கேசிகனுக்குத் தெளிவாக உணர்த்தின.
நாவினி காணொளி அழைப்பில் வந்ததும், “பேரன் இருக்கிறதால யோசிக்கிறீங்களாம்மா?” என்றார் நேராகவே. இப்போதெல்லாம் நாசுக்கு, நாகரீகம் பார்க்கும் நிலைகளை அவர் தாண்டியிருந்தார்.
“ஐயோ அன்ட்ரி. சஜுக்குட்டிய அப்பிடி எல்லாம் சொல்லாதீங்க.” என்றாள் அவள் அவசரமாக.
“ஏற்கனவே கட்டி வாழ்ந்தவன், ஒரு மகன் வேற இருக்கிறான் எண்டு வேண்டாம் எண்டு சொல்லுறீங்களா?” இதையெல்லாம் கேட்டு மகன் தனக்குள் இறுகுவதைக் கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல் வினவினார். அவனுக்கும் ஒரு தெளிவு பிறக்குமே.
“அன்ட்ரி ப்ளீஸ், அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை. இப்பிடி எல்லாம் கதைக்காதீங்கோ.” அவளுக்கு இந்த விதமான பேச்சே மிகுந்த சங்கடத்தை உண்டாக்கிற்று.
“பிறகு ஏனம்மா இவ்வளவு பிடிவாதமா வேணாம் எண்டு நிக்கிறீங்க? நானும் உங்களுக்குத் தாய் மாதிரித்தான். என்னில சத்தியமா இதையெல்லாம் கடந்து வந்திட்டீங்க, இன்னொரு வாழ்க்கைக்குத் தயார் எண்டு சொல்லுங்கோ. நான் கதைக்கேல்ல.” என்றவருக்கு ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்தாள் அவள்.
கேசிகனுக்கு அன்னை அவளை மறுக்க முடியாத இடத்தில் நிறுத்திச் சம்மதத்தை வாங்கிவிட முயல்வது தெளிவாகப் புரிந்தது. அதே நேரத்தில் அவள் மனத்தில் உண்மையில் என்ன இருக்கிறது என்று அவனுக்கும் அறியவேண்டியிருந்தது.
“உங்களை நான் வற்புறுத்தேல்ல ஆச்சி. என்ர மகனால ஒரு பொம்பிளைப் பிள்ளை கலியாண வாழ்க்கைக்க போகேலாம நிக்கிறதை என்னால பாக்கேலாம இருக்கன. உங்கட அம்மா இருந்தா உங்கள இப்பிடியே விடுவாவா சொல்லுங்க? உங்களுக்கு என்ன குறை, உங்கட மனதில என்ன இருக்கு எண்டு கேட்டுச் செய்வாதானே? அதத்தான் நானும் செய்ய நினைக்கிறன்.” என்றவர் பேச்சில் மௌனமாகக் கண்ணீர் உகுத்தாளே தவிர்த்து ஏதும் சொன்னாள் இல்லை அவள்.
பிரேமாவுக்கே பாவமாய் இருந்தது. ஆனால், இதற்கு ஒரு முடிவு வேண்டுமே. அவள் சம்மதித்துவிட்டால் மகன் மறுக்கமாட்டான் என்று தெரியும். அவளோ அவர் சொல்லும் அனைத்தையும் கேட்டுக்கொண்டாளே தவிர்த்து அசைவதாக இல்லை.
கடைசியில், “இவ்வளவு கேட்டும் சொல்லுறீங்க இல்லை என்னம்மா? ஒரு வயசான பொம்பிளையக் கவலைப்பட வச்சுப் பாக்க ஆசைப்படுறீங்களா நாவினி? எனக்குத்தான் ஒரு நல்ல வாழ்க்கை வாழக் குடுத்து வைக்கேல்ல எண்டு பாத்தா இப்ப என்ர மகனுக்கும் அதே நிலை. என்னவோ எங்கட தலைல சாகிற வரைக்கும் ஒற்றையாவே கிடந்து சாகுங்கோ எண்டு எழுதியிருக்குப் போல.” என்று சொல்லவும் கேசிகன் துடித்துப்போனான். இந்தளவுக்கு எல்லாம் அன்னை யோசித்திருப்பார் என்று அவன் நினைக்கவே இல்லை.
“அன்ட்ரி ப்ளீஸ். இப்பிடி எல்லாம் சொல்லாதீங்கோ.” என்று நாவினியும் அழுதாள்.
“நீங்களும் இந்தளவுக்குப் பிடிவாதம் பிடிக்கக் கூடாதுதானேம்மா?” அவருக்கும் உள்ளம் அழுததில் குரல் உடைந்து வந்தது.
சில கணங்களுக்கு அமைதியாக இருந்துவிட்டு, “திரும்பவும் இன்னொருத்தர நம்பப் பயமா இருக்கு. அது உங்கட மகனாவே இருந்தாலும்.” என்று நலிந்து மெலிந்து வந்த அவள் பேச்சில் அடிபட்டவனாகத் துடித்து நிமிர்ந்தான் கேசிகன்.
பிரேமாவுக்கும் கண்ணீர் சுரந்துபோயிற்று. மகன் புறம் பார்வை சென்றுவர, “அப்பிடி எல்லாம் பயப்பிடாதீங்கோ நாவினி.” என்றார் வேதனையோடு.
அவள் கண்ணீருடன் முறுவலித்தாள்.
“அவருக்கு எப்பிடி என்னைப் பற்றின எந்தத் தகவலும் தெரியாதோ அப்பிடித்தான் எனக்கும். என்ன செய்றார், எப்பிடி இருக்கிறார், என்ன மனநிலையில் இருக்கிறார் எண்டு எதுவுமே தெரியாது. ஆனாலும் என்னை எதிர்பாத்துக்கொண்டு இருப்பார் எண்டுற நம்பிக்கையோடதான் அத்தனை வருசமும் இருந்தனான். ஆனா அவர்… அவரால இன்னொரு வாழ்க்கைக்க போக முடிஞ்சிருக்கு. சந்தோசமா வாழ முடிஞ்சிருக்கு. அப்பிடியானவரைத் திரும்ப ஏற்க எனக்கு விருப்பம் இல்ல.” என்றதும் பிரேமாவுக்கே பேச்சற்றுப் போயிற்று.
“அதோட…”
“அதோட?”
“எனக்கெண்டு இந்த உலகத்தில ஆருமே இல்லை அன்ட்ரி. ஆர் என்ன சொன்னாலும், உனக்கு நாங்க இருக்கிறோம் எண்டு நம்பிக்கை தந்தாலும் நான் அநாதை எண்டுறதுதான் உண்மை…” என்றவள் பேச்சில் கேசிகனின் தாடை இறுகிற்று.
“அம்மாச்சி, என்னன கதை இது?”
“இல்லை அன்ட்ரி. இத நான் கழிவிரக்கத்தில சொல்லேல்ல. உண்மையக் கதைக்கிறன். அப்பிடித் தனியா நிக்கிற எனக்குத் துணையா வாறவருக்கு எல்லாமா நான் இருக்கோணும் எண்டு ஆசைப்படுறன். அவரின்ர அன்பு எனக்கு மட்டுமே வேணும். நான் பேராசைப்படுறனா இல்லை சாத்தியப்படாத ஒண்டுக்கு ஆசைப்படுறனா தெரியேல்ல. அம்மா, அப்பா, தம்பியாக்கள் இருந்திருந்தா இப்பிடி எதிர்பாத்திருக்க மாட்டேனா இருக்கும். ஆனா இண்டைக்கு எனக்கானவருக்கு நான் முக்கியமானவளா இருக்கோணும். ஆனா உங்கட மகன்…” என்று நிறுத்தினாள்.
பிரேமாவுக்கே நெஞ்சின் துடிப்பு கூடிப்போயிற்று என்கையில் கேசிகனின் நிலை?
“அவரின்ர மனதில ஏற்கனவே இன்னொருத்தி இருக்கிறா. அவரின்ர உலகத்தில அவரின்ர வைஃப் முதன்மையா இருப்பா. அடுத்ததுதான் நான். எனக்கு அப்பிடி ஒரு வாழ்க்கை வேணாம்.”
அவசரமாக மகனைத்தான் பார்த்தார் பிரேமா. இறுக்கிவிட்ட முகத்துடன் அவன் எழுந்து போவது தெரிந்தது.
இன்னொரு முறையும் நாவினியிடம் பேசிப் பார்த்த மேனகாவினால் அவள் மனத்தை மாற்ற முடியவில்லை. அதைப் பிரேமாவிடம் சொல்லி, ஜெர்மனிலேயே அவளுக்குத் திருமணத்திற்குப் பார்ப்பதாகச் சொன்னார்.
பிரேமாவுக்கு அதை ஏற்க முடியவில்லை. இங்கே கேசிகனிடம் அவளை மணப்பதற்குச் சம்மதிக்கச் சொல்லிப் பிடிவாதமாக நின்றார்.
கேசிகனுக்கு வாழ்க்கையே வெறுக்கும் நிலை. நாவினியின் குறுந்தகவல்கள் ஒருவகையாக அவனைக் கொன்றன என்றால் அன்று அவள் சொன்ன வார்த்தைகள் அவனை உறங்கவோ உண்ணவோ விடாமல் துரத்தியடித்துக்கொண்டிருந்தன.
அவன் செய்ததுதான் சரியாம். அவளைப் போன்று ஒரு இடத்தில் நின்றிருக்கக் கூடாதாம். அவளைத் தாண்டி நகர்ந்தான்தான். ஆனால், ஆசைப்பட்டு நகரவில்லையே. மொழி மீது ஆசைப்பட்டு மணக்கவில்லையே. மணந்தபிறகு ஆசைப்பட்டு வாழ்ந்தான். அது வேறாயிற்றே. இதை எப்படி அவனால் அவளிடம் உடைத்துப் பேச முடியும்?
இதில் நாவினி இரண்டாம் முறையாகவும் அவனை வேண்டாம் என்று சொன்னது தெரியும். அவனும் இன்னொரு திருமணத்திற்குத் தயாராக இல்லைதான். அதுவும் அவளை மணப்பதற்கான தகுதி தனக்கு இல்லவே இல்லை என்று நினைத்தான்.
அதே நேரத்தில் நாவினியின் உயிர் நேசத்திற்குத் தான் கொஞ்சமும் நியாயமாக நடக்கவில்லை என்கிற அந்த நினைப்பு, பொதுவாக அன்னை திருமணத்திற்குக் கேட்டபோது உறுதியாக நின்று மறுத்தது போன்று, நாவினியைக் கேட்டபோது மறுக்க விடாமல் செய்தது.
அதில், “அவளே வேண்டாம் எண்டு சொல்லுறாள். பிறகும் ஏனம்மா அவளையே கட்டு எண்டு எனக்கு அரியண்டம் தாறீங்க? எனக்குத் தம்பி மட்டும் போதும் எண்டு இன்னும் எத்தினை தரம் சொல்லுறது?” என்று சினந்தான்.
“உனக்குப் போதும். உன்ர மகனுக்கு நீ மட்டும் போதாது தம்பி!” என்றார் அவரும் விடாமல்.
“நீ சொல்லு. எல்லாமா இருந்து உன்னை நான் வளத்தேன்தான். அம்மம்மா, தாத்தா, நல்லவையோ கெட்டவையோ மாமா, மாமி, மச்சான் எண்டு உன்னச் சுத்தி எல்லாரும் இருந்தவேதான். ஆனாலும் ஒரு நாள் கூட அப்பாக்காக நீ ஏங்கினதே இல்லையா?” என்று அவர் கேட்டபோது வீம்புக்கு மறுக்க நினைத்தாலும் முடியாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தான் அவன்.
“அதேதான் தம்பி உன்ர மகன்ர நிலமையும். இன்னும் விவரம் தெரிய ஆரம்பிக்கேல்ல அவனுக்கு. தெரிய வரேக்க நீ எப்பிடி என்னட்ட ஒண்டும் சொல்லாம உனக்குள்ளேயே வச்சிருந்தியோ அதே மாதிரி உன்னட்ட ஒண்டும் சொல்லாம தனக்குள்ளேயே வச்சு மருகுவார். நீ பெத்த பிள்ளை அப்பிடி அழுறதுதான் உனக்கு விருப்பமா?”
“அம்மா!” அவர் கேட்டு முடிக்க முதலே அதட்டினான். அப்படி அவன் மகன் மருகுவதற்கா அப்பா என்று அவன் இருக்கிறான்?
“சும்மா வாயால சொன்னதுக்கே உனக்குக் கோபம் வருது. ஆனா அதுதான் நடக்கப்போகுது. அதுக்குத்தான் நீ இவ்வளவு பிடிவாதமா நிக்கிறாய்.” என்று அவர் விடுவதாகவே இல்லை.
வர வரக் கேசிகனுக்கு வீடு நரகம் போலாயிற்று. அந்தளவில் அவனைக் கண்டாலே பிரேமா திருமணத்தைப் பற்றியேதான், அதுவும் நாவினியைக் கட்டு என்றுதான் பேசினார். இதேதான் நிறைமொழியைத் திருமணத்திற்குக் கேட்டு, இவன் மறுத்தபோதும் நடந்தது. இப்போது மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார்.
நாவினி அங்கே வேறு ஒருவனுக்குச் சம்மதித்துவிடுவாளோ என்று அவருக்குள் ஒரு பதற்றம். அதற்குள் இங்கே மகனிடம் சம்மதம் பெற்றுவிட நினைத்தார்.
நாவினியையும் விடவில்லை. அன்று அவன் வீட்டில் இருக்கையில் வேண்டுமென்றே வீடியோ கோலில் அவளுக்கு அழைத்தார். இப்படியான பொழுதுகளில் எல்லாம் புத்திசாலித்தனமாக மயூரனின் தம்பி முகிலனைக் கூப்பிட்டு, பேரனை அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.
சாரதா இவர்களின் முகம் பார்க்க முடியாமல் வருவதை நிறுத்திவிட்டதில் இது அவருக்கு வசதியாகிற்று. கூடவே பேரன் இல்லாத பொழுதுகளில் திருமணம் குறித்து மகனிடம் விடாமல் பேசினார். அவரின் இந்தத் திட்டமிட்ட செய்கைகள் அவர் ஒரு முடிவோடு இருப்பதைக் கேசிகனுக்குத் தெளிவாக உணர்த்தின.
நாவினி காணொளி அழைப்பில் வந்ததும், “பேரன் இருக்கிறதால யோசிக்கிறீங்களாம்மா?” என்றார் நேராகவே. இப்போதெல்லாம் நாசுக்கு, நாகரீகம் பார்க்கும் நிலைகளை அவர் தாண்டியிருந்தார்.
“ஐயோ அன்ட்ரி. சஜுக்குட்டிய அப்பிடி எல்லாம் சொல்லாதீங்க.” என்றாள் அவள் அவசரமாக.
“ஏற்கனவே கட்டி வாழ்ந்தவன், ஒரு மகன் வேற இருக்கிறான் எண்டு வேண்டாம் எண்டு சொல்லுறீங்களா?” இதையெல்லாம் கேட்டு மகன் தனக்குள் இறுகுவதைக் கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல் வினவினார். அவனுக்கும் ஒரு தெளிவு பிறக்குமே.
“அன்ட்ரி ப்ளீஸ், அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை. இப்பிடி எல்லாம் கதைக்காதீங்கோ.” அவளுக்கு இந்த விதமான பேச்சே மிகுந்த சங்கடத்தை உண்டாக்கிற்று.
“பிறகு ஏனம்மா இவ்வளவு பிடிவாதமா வேணாம் எண்டு நிக்கிறீங்க? நானும் உங்களுக்குத் தாய் மாதிரித்தான். என்னில சத்தியமா இதையெல்லாம் கடந்து வந்திட்டீங்க, இன்னொரு வாழ்க்கைக்குத் தயார் எண்டு சொல்லுங்கோ. நான் கதைக்கேல்ல.” என்றவருக்கு ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்தாள் அவள்.
கேசிகனுக்கு அன்னை அவளை மறுக்க முடியாத இடத்தில் நிறுத்திச் சம்மதத்தை வாங்கிவிட முயல்வது தெளிவாகப் புரிந்தது. அதே நேரத்தில் அவள் மனத்தில் உண்மையில் என்ன இருக்கிறது என்று அவனுக்கும் அறியவேண்டியிருந்தது.
“உங்களை நான் வற்புறுத்தேல்ல ஆச்சி. என்ர மகனால ஒரு பொம்பிளைப் பிள்ளை கலியாண வாழ்க்கைக்க போகேலாம நிக்கிறதை என்னால பாக்கேலாம இருக்கன. உங்கட அம்மா இருந்தா உங்கள இப்பிடியே விடுவாவா சொல்லுங்க? உங்களுக்கு என்ன குறை, உங்கட மனதில என்ன இருக்கு எண்டு கேட்டுச் செய்வாதானே? அதத்தான் நானும் செய்ய நினைக்கிறன்.” என்றவர் பேச்சில் மௌனமாகக் கண்ணீர் உகுத்தாளே தவிர்த்து ஏதும் சொன்னாள் இல்லை அவள்.
பிரேமாவுக்கே பாவமாய் இருந்தது. ஆனால், இதற்கு ஒரு முடிவு வேண்டுமே. அவள் சம்மதித்துவிட்டால் மகன் மறுக்கமாட்டான் என்று தெரியும். அவளோ அவர் சொல்லும் அனைத்தையும் கேட்டுக்கொண்டாளே தவிர்த்து அசைவதாக இல்லை.
கடைசியில், “இவ்வளவு கேட்டும் சொல்லுறீங்க இல்லை என்னம்மா? ஒரு வயசான பொம்பிளையக் கவலைப்பட வச்சுப் பாக்க ஆசைப்படுறீங்களா நாவினி? எனக்குத்தான் ஒரு நல்ல வாழ்க்கை வாழக் குடுத்து வைக்கேல்ல எண்டு பாத்தா இப்ப என்ர மகனுக்கும் அதே நிலை. என்னவோ எங்கட தலைல சாகிற வரைக்கும் ஒற்றையாவே கிடந்து சாகுங்கோ எண்டு எழுதியிருக்குப் போல.” என்று சொல்லவும் கேசிகன் துடித்துப்போனான். இந்தளவுக்கு எல்லாம் அன்னை யோசித்திருப்பார் என்று அவன் நினைக்கவே இல்லை.
“அன்ட்ரி ப்ளீஸ். இப்பிடி எல்லாம் சொல்லாதீங்கோ.” என்று நாவினியும் அழுதாள்.
“நீங்களும் இந்தளவுக்குப் பிடிவாதம் பிடிக்கக் கூடாதுதானேம்மா?” அவருக்கும் உள்ளம் அழுததில் குரல் உடைந்து வந்தது.
சில கணங்களுக்கு அமைதியாக இருந்துவிட்டு, “திரும்பவும் இன்னொருத்தர நம்பப் பயமா இருக்கு. அது உங்கட மகனாவே இருந்தாலும்.” என்று நலிந்து மெலிந்து வந்த அவள் பேச்சில் அடிபட்டவனாகத் துடித்து நிமிர்ந்தான் கேசிகன்.
பிரேமாவுக்கும் கண்ணீர் சுரந்துபோயிற்று. மகன் புறம் பார்வை சென்றுவர, “அப்பிடி எல்லாம் பயப்பிடாதீங்கோ நாவினி.” என்றார் வேதனையோடு.
அவள் கண்ணீருடன் முறுவலித்தாள்.
“அவருக்கு எப்பிடி என்னைப் பற்றின எந்தத் தகவலும் தெரியாதோ அப்பிடித்தான் எனக்கும். என்ன செய்றார், எப்பிடி இருக்கிறார், என்ன மனநிலையில் இருக்கிறார் எண்டு எதுவுமே தெரியாது. ஆனாலும் என்னை எதிர்பாத்துக்கொண்டு இருப்பார் எண்டுற நம்பிக்கையோடதான் அத்தனை வருசமும் இருந்தனான். ஆனா அவர்… அவரால இன்னொரு வாழ்க்கைக்க போக முடிஞ்சிருக்கு. சந்தோசமா வாழ முடிஞ்சிருக்கு. அப்பிடியானவரைத் திரும்ப ஏற்க எனக்கு விருப்பம் இல்ல.” என்றதும் பிரேமாவுக்கே பேச்சற்றுப் போயிற்று.
“அதோட…”
“அதோட?”
“எனக்கெண்டு இந்த உலகத்தில ஆருமே இல்லை அன்ட்ரி. ஆர் என்ன சொன்னாலும், உனக்கு நாங்க இருக்கிறோம் எண்டு நம்பிக்கை தந்தாலும் நான் அநாதை எண்டுறதுதான் உண்மை…” என்றவள் பேச்சில் கேசிகனின் தாடை இறுகிற்று.
“அம்மாச்சி, என்னன கதை இது?”
“இல்லை அன்ட்ரி. இத நான் கழிவிரக்கத்தில சொல்லேல்ல. உண்மையக் கதைக்கிறன். அப்பிடித் தனியா நிக்கிற எனக்குத் துணையா வாறவருக்கு எல்லாமா நான் இருக்கோணும் எண்டு ஆசைப்படுறன். அவரின்ர அன்பு எனக்கு மட்டுமே வேணும். நான் பேராசைப்படுறனா இல்லை சாத்தியப்படாத ஒண்டுக்கு ஆசைப்படுறனா தெரியேல்ல. அம்மா, அப்பா, தம்பியாக்கள் இருந்திருந்தா இப்பிடி எதிர்பாத்திருக்க மாட்டேனா இருக்கும். ஆனா இண்டைக்கு எனக்கானவருக்கு நான் முக்கியமானவளா இருக்கோணும். ஆனா உங்கட மகன்…” என்று நிறுத்தினாள்.
பிரேமாவுக்கே நெஞ்சின் துடிப்பு கூடிப்போயிற்று என்கையில் கேசிகனின் நிலை?
“அவரின்ர மனதில ஏற்கனவே இன்னொருத்தி இருக்கிறா. அவரின்ர உலகத்தில அவரின்ர வைஃப் முதன்மையா இருப்பா. அடுத்ததுதான் நான். எனக்கு அப்பிடி ஒரு வாழ்க்கை வேணாம்.”
அவசரமாக மகனைத்தான் பார்த்தார் பிரேமா. இறுக்கிவிட்ட முகத்துடன் அவன் எழுந்து போவது தெரிந்தது.