அத்தியாயம் 16
மேனகாவின் மொத்தக் குடும்பத்துடனும் நாவினி ஏழாலைக்கு வந்து சேர்ந்தாள். இரண்டாம் நாளே அவர்கள் ஊர்ப் பிள்ளையார் கோவிலில் வைத்துத் தாலி கட்டி, அவளைத் தன் மனைவியாக்கிக்கொண்டான் கேசிகன்.
இருவர் மனத்திலும் பெரும் போராட்டம். அவன் மனத்தில் மொழியும், அவளோடான திருமண நாளும் நின்று ஆட்டின என்றால், அவள் மனத்தில் இந்த உலகத்தை விட்டே போய்விட்ட அவள் குடும்பத்தினர் நிறைந்திருந்தனர்.
ஒரு காலத்தில் இருவரும் கண்ட கனவு இது. இந்த நாளை எப்படி உருவாக்கிக்கொள்ளப்போகிறோம் என்று ஏங்கியிருக்கிறார்கள். ஆனால் இன்று, அந்தத் திருமணத்தை இறுக்கம் படர்ந்த மனநிலையுடனேயே கடந்தனர்.
மனைவி பிள்ளைகளோடு வந்திருந்தான் மயூரன். திருமண வேலைகள் அனைத்தையும் முகிலனையும் துணைக்கு வைத்துக்கொண்டு இழுத்துப்போட்டுச் செய்தான். நாவினி அவனை இயல்பாக எதிர்கொண்டாள் என்றால், கேசிகன் அவன் முகம் பார்த்துப் பேசவே மறுத்தான்.
பரமேஸ்வரனுக்கு நேரிலேயே சென்று அழைத்தார்கள். அவர் முகத்துக்கு நேராகவே மிக மோசமாகத் திட்டி அனுப்பியிருந்தார். கூடவே தன் மகள் மருமகனையும் போகக் கூடாது என்று தடுத்துவிட்டார். அதனால் கேசிகனின் மாமாவும் அத்தையும் வரவில்லை. ஆனால், அவன் அம்மம்மா யாரையும் பொருட்படுத்தவில்லை. பேரனின் திருமணத்திற்கு வந்திருந்தார்.
மேனகாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். என்னவோ தான் பெற்ற பெண்ணுக்கே ஒரு நல்லது நடந்தது போன்ற மனநிலையில் இருந்தார். சிவதாசனுமே நெகிழ்ந்துபோன மனநிலையில் அவள் தலையை வருடிவிட்டார். அவர்கள் மகன் உதயன், அவன் மனைவி பிரியதர்சினி, ஐந்து வயது மகன் சாருகன் எல்லோருமே வந்திருந்தார்கள்.
இந்தச் சில நாள்களாக வீட்டில் நடந்த தடல்புடல்களுக்கான காரணம் சஜிதனுக்குப் புரியவில்லை. அவன் விசாரித்தபோது, “நவி அன்ட்ரிய உங்களுக்குப் பிடிக்குமா?” என்று கேட்டிருந்தார் பிரேமா.
“பிடிக்குமே.”
“அப்ப அவாவக் கூட்டிக்கொண்டு வந்து எங்களோடயே வச்சிருப்பமா? தம்பிக்குட்டியோட விளையாடி, படிப்புச் சொல்லித் தந்து, உங்களோடயே இருந்து, உங்களோடயே அன்ட்ரி படுக்கிற மாதிரி இருக்கச் செய்வமா?”
“அப்ப அப்பா?” கெட்டிக்காரக் குழந்தை உடனேயே வினவினான்.
“அப்பாவும்தான். அப்பா, சஜுக்குட்டி, நவி அன்ட்ரி எல்லாரும் ஒண்டா இருக்கலாம்.”
“அப்ப அப்பும்மா?”
நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது பிரேமாவுக்கு. அவன் உலகத்தில் அவரும் முக்கியமானவராக இருக்கிறார் என்கிற புளகாங்கிதத்தில் அரும்பிவிட்ட கண்ணீருடன் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு சிரித்தார்.
“நானும்தான். என்ர பேரக்குஞ்சனை விட்டுட்டு நான் எங்க போகப் போறன்?”
“அப்ப கூப்பிடுவம்.” உடனேயே சம்மதம் தந்தான் அவன்.
“அவாவக் கூப்பிடுறதுக்குத்தான் இந்த வேலை எல்லாம் நடக்குது. நவி அன்ட்ரி ஜெர்மன்ல இருக்கிறா எல்லா. அவா வந்ததும் பிள்ளையாரப்பட்டக் கூட்டிக்கொண்டு போய், அவருக்கு முன்னால பூசை செய்து, அப்பா அம்மாவக் கலியாணம் முடிச்ச பிறகு, நவி அன்ட்ரிய நாங்க எங்கட வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வருவம் என்ன.”
“ஓகே!” என்றான் தலையையும் சேர்த்து ஆட்டி.
அதன் படியே குழந்தை அந்தத் திருமணத்தையும் ஏற்றுக்கொண்டான். கோயிலில் வைத்தே பகல் உணவும் முடிய, நாவினி வீட்டுக்குத்தான் வந்தார்கள். மேனகாவும் சிவதாசனும்தான் அன்னை தந்தையாக நின்று அவளைத் தாரை வார்த்துக் கொடுத்தவர்கள். வீட்டுக்கு வந்த மணமக்களை ஆலம் சுற்றி வரவேற்றதும் அவர்கள்தான். அதற்குமேல் முடியாமல் மேனகாவைக் கட்டிக்கொண்டு அழுகையில் குலுங்கினாள் நாவினி.
மேனகாவுக்குமே கண்கள் கலங்கிப்போயிற்று. ஆனாலும் அங்கே ஒரு பெரிய மனிதன் நடப்பவற்றை எல்லாம் தன் உருண்டைக் கண்களால் அளவெடுத்தபடி இருந்ததில் எல்லோரும் எல்லாவற்றையும் முடிந்தவரையில் சாதாரணமாகவே கடந்தார்கள்.
போன முறை வந்தபோது மயான அமைதியில் திளைத்திருந்த வீடு, இன்று இத்தனை ஆள்களோடு கலகலப்பாக இருப்பதைக் கண்டு, தன் குடும்பம் இன்று இருந்திருக்கக் கூடாதா என்று நினைத்து நினைத்தே மருகினாள் நாவினி.
அவள் திருமணத்தை எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று பலமுறை அபிராமி நாகரத்தினத்திடம் சொல்வதை இவளே கேட்டிருக்கிறாள். அவர்களின் சேமிப்பில் ஒரு பகுதி இவள் திருமணத்திற்காக என்று ஒதுங்கும்.
அப்படி, எத்தனையோ வருடங்களுக்கு முதலே இந்த ஒரு நாளுக்காகத் திட்டம் போட்டு அனைத்தையும் செய்தவர்கள் இன்று இல்லை. சட்டென்று நிறைந்துவிட்ட விழிகளைச் சஜிதன் பார்க்க முதல் கையில் இருந்த டிஷ்யூவினால் துடைத்துக்கொண்டாள்.
கேசிகன் அவளைக் கவனிக்காமல் இல்லை. எதையெல்லாம் எண்ணித் தனக்குள் மருகுகிறாள் என்றும் தெரியும். எழுந்துபோய் அவளுக்குத் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான்.
திகைப்புடன் நிமிர்ந்தவளிடம், “குடி!” என்றான்.
அவள் வாங்கிப் பருகியதும் அந்தக் கப்பைக் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்து மீண்டும் அவளருகில் அமர்ந்துகொண்டான்.
பாராதது போன்று பார்த்திருந்த எல்லோர் மனங்களும் மகிழ்ந்துபோயின.
யாருமே அவளுக்கு ஆறுதல் சொல்லப் போகவில்லை. அப்படி ஆறுதல் சொல்கிறோம் என்று எதைக் கதைத்தாலும் அது அவளை அழ வைக்கும் என்பதில் சஜிதனை அவளிடம் தள்ளிவிட்டனர்.
கோயில் என்றாலே அவன் நெற்றிப் பட்டைக்குக் குறைவிருக்காது. திருமணம் என்கையில் கேட்கவா வேண்டும்? தகப்பனைப் போலவே பட்டு வேட்டி சட்டை அணிந்து, கூடவே பட்டுச் சால்வையையும் தோளில் போட்டிருந்தான். நெற்றி நிறையத் திருநீறு. எப்போதும்போல் புருவங்கள் இரண்டையும் தொடும் அளவில் பெரிய சந்தனப்பொட்டு, காதில் பூ என்று திரிந்தவனைக் கண்டு எல்லோருக்குமே சிரிப்பு.
வீட்டுக்கு வந்த பிறகு கையோடு கொண்டுவந்திருந்த உடையை மாற்றச் சொன்னார் பிரேமா. அவன் மறுத்துவிட்டான். அதைவிடத் தகப்பன் ஒரு முறை ஏதோ வேலை செய்வதற்காக வேட்டியை மடித்துக் கட்டியதைக் கவனித்துவிட்டான். தனக்கும் அப்படிக் கட்டிவிடச் சொன்னவன், அது அவிழ்ந்த பொழுதுகளில் எல்லாம் ஓடிவந்து தகப்பனைக் கட்டிவிடச் சொன்னான்.
“தம்புடு! அப்பா இப்ப இறக்கிவிட்டுட்டன். நீங்களும் இறக்கி விடுங்கோ.” என்று கேசிகன் சொன்னதற்கு, “அப்பா, உங்களுக்கு வேலை இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கு. கட்டி விடுங்கோ.” என்றான் அவன்.
“அப்பாவ விட மகன்தான் மாப்பிள்ளைக் கோலத்தில அசத்தல்.” என்று தெரியாமல் சொல்லிவிட்டார் சாரதா.
“ஓமா?” என்றவன் ஓடி வந்து, “நவி அன்ட்ரி, மாப்பிள்ளைக் கோலத்தில் நான் வடிவா, அப்பா வடிவா?” என்று கேட்டான்.
“என்ன கேள்வி இது? நீங்கதான் வடிவு.”
“அப்ப அப்பா வடிவில்லையா?”
பக்கத்தில் இவர்களைக் கவனித்துக்கொண்டு அந்த அப்பா இருக்கிறானே.
“அவரும்தான் வடிவு.”
“அப்ப ஆர் கூட வடிவு?”
“நீங்கதான்.”
“அப்ப அப்பா?”
“ரெண்டு பேரும் வடிவுதான்.”
அவனைச் சமாளிப்பதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்றாயிற்று. அவர்களுக்கான இரவுத் தங்கல், மேலே அவள் அறையில்தான் ஏற்பாடானது.
உதயன் குடும்பம் இங்கே இன்னொரு அறையில் தாங்கிக்கொள்ள, பிரேமா அவர்கள் வீட்டில் தனியாக இருக்க வேண்டாம் என்று மேனகாவும் சிவதாசனும் அவருடன் சென்றனர்.
அந்த நொடியில் அன்னையை எண்ணிக் கேசிகனின் உள்ளம் கனத்துப் போயிற்று. நேர் வீதி. நினைத்ததும் ஓடிப்போகும் தூரம். அதற்கே அவர் புறப்படுகையில் மனத்தைப் போட்டுப் பிசைந்தது. மொத்தமாக அவன் ஜெர்மன் புறப்படுகையில்?
யோசிக்கக் கூட முடியாமல் மகனையும் தூக்கிக்கொண்டு அவர்களோடு தானும் போனான். இனி இதுதான், நான் தனிதான் என்று எண்ணி அவர் வருந்திவிடக் கூடாது என்பது அவனுக்கு.
ஆனால், அவனை வீட்டுக்குள் பிரேமா விடவில்லை. “நாளைக்குக் குடும்பமா சேந்து வாய்யா. அம்மாக்கு ஒரு கவலையும் இல்ல. என்ர மகன் என்னைத் தனியா விடமாட்டான் எண்டு தெரியுமப்பு. நீங்க போங்கோ.” என்று அவன், பேரன் இருவர் முகங்களையும் வாஞ்சையோடு தடவிச் சொல்லி அனுப்பிவைத்தார்.
பேரன் வேறு, “அப்பும்மா, பயப்பிடக் கூடாது. பாம்பு, பூச்சி வந்தா அப்பான்ர ஃபோனுக்கு எடுத்து எனக்குச் சொல்லுங்கோ. பெரிய தடி எடுத்துக்கொண்டு வருவன்.” என்று சொன்னான்.
வேறு என்ன வேண்டும் அவருக்கு? சந்தோசமாகவே மேனகாவையும் சிவதாசனையும் கவனித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றார்.
நாவினி தன் அறைக்கு வந்து, மூவருக்கும் ஏற்ற வகையில் தலையணை போர்வைகள் எடுத்துப்போட்டாள். அவளுக்கு ஏற்றாற்போல் சின்ன கட்டில்தான் முதலில் இருந்தது. மேனகாதான் அங்கிருக்கும் போதே அதையெல்லாம் விசாரித்து, கேசிகனைக் கொண்டு அனைத்தையும் மாற்றியிருந்தார். அணிந்திருந்த சேலை மாற்றி, சின்னதாக ஒரு குளியல் போடுவதற்குச் சென்றாள்.
மகனோடு மேலே வந்த கேசிகன், அவள் அறையின் கதவு சாற்றியிருக்கவும் உள்ளே செல்லவில்லை. அங்கிருந்த பால்கனியில் சென்று நின்றுகொண்டான். அவர்கள் வீட்டில் இப்படி மாடியோ, பால்கனியோ இல்லை என்பதில் சஜிதனுக்கு இது ஆச்சர்யமான ஒன்றாயிற்று. அங்கேயே அவன் விளையாட ஆரம்பித்துவிட்டான். அங்கிருந்த நாற்காலி ஒன்றில் தன்னைப் புதைத்துக்கொண்டு மகனில் கவனமாக இருந்த கேசிகனின் சிந்தனை, தன் முதல் திருமண வாழ்க்கையில் தேங்கி நின்றது.
அன்று, இனி மொழிதான் தன் வாழ்க்கை என்று முடிவு செய்து திருமணத்தினுள் நுழைந்தாலும் நாவினியின் நினைவுகள் போட்டு அலைக்கழித்தன. இன்று, இனி நாவினிதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்து நுழைந்தாலும் மொழியின் நினைவுகள் போட்டு வாட்டின.
அவன் அன்னை என்னதான் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் என்ன பாடுபடுவர் என்று தெரியும். கடைகளை இனி என்ன செய்வது என்று தெரியாது.
இப்படி இன்னது என்றில்லாத விடயங்களை எல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவன் அவள் அறையின் கதவு திறந்த சத்தம் கேட்டாலும் அங்கே செல்வதற்கு அவசரம் காட்டவில்லை.
சஜிதனின் சத்தம் கேட்டு அவள் வெளியில் வந்து பார்க்கவும்தான் மகனோடு அறைக்குள் வந்தான்.
மேனகாவின் மொத்தக் குடும்பத்துடனும் நாவினி ஏழாலைக்கு வந்து சேர்ந்தாள். இரண்டாம் நாளே அவர்கள் ஊர்ப் பிள்ளையார் கோவிலில் வைத்துத் தாலி கட்டி, அவளைத் தன் மனைவியாக்கிக்கொண்டான் கேசிகன்.
இருவர் மனத்திலும் பெரும் போராட்டம். அவன் மனத்தில் மொழியும், அவளோடான திருமண நாளும் நின்று ஆட்டின என்றால், அவள் மனத்தில் இந்த உலகத்தை விட்டே போய்விட்ட அவள் குடும்பத்தினர் நிறைந்திருந்தனர்.
ஒரு காலத்தில் இருவரும் கண்ட கனவு இது. இந்த நாளை எப்படி உருவாக்கிக்கொள்ளப்போகிறோம் என்று ஏங்கியிருக்கிறார்கள். ஆனால் இன்று, அந்தத் திருமணத்தை இறுக்கம் படர்ந்த மனநிலையுடனேயே கடந்தனர்.
மனைவி பிள்ளைகளோடு வந்திருந்தான் மயூரன். திருமண வேலைகள் அனைத்தையும் முகிலனையும் துணைக்கு வைத்துக்கொண்டு இழுத்துப்போட்டுச் செய்தான். நாவினி அவனை இயல்பாக எதிர்கொண்டாள் என்றால், கேசிகன் அவன் முகம் பார்த்துப் பேசவே மறுத்தான்.
பரமேஸ்வரனுக்கு நேரிலேயே சென்று அழைத்தார்கள். அவர் முகத்துக்கு நேராகவே மிக மோசமாகத் திட்டி அனுப்பியிருந்தார். கூடவே தன் மகள் மருமகனையும் போகக் கூடாது என்று தடுத்துவிட்டார். அதனால் கேசிகனின் மாமாவும் அத்தையும் வரவில்லை. ஆனால், அவன் அம்மம்மா யாரையும் பொருட்படுத்தவில்லை. பேரனின் திருமணத்திற்கு வந்திருந்தார்.
மேனகாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். என்னவோ தான் பெற்ற பெண்ணுக்கே ஒரு நல்லது நடந்தது போன்ற மனநிலையில் இருந்தார். சிவதாசனுமே நெகிழ்ந்துபோன மனநிலையில் அவள் தலையை வருடிவிட்டார். அவர்கள் மகன் உதயன், அவன் மனைவி பிரியதர்சினி, ஐந்து வயது மகன் சாருகன் எல்லோருமே வந்திருந்தார்கள்.
இந்தச் சில நாள்களாக வீட்டில் நடந்த தடல்புடல்களுக்கான காரணம் சஜிதனுக்குப் புரியவில்லை. அவன் விசாரித்தபோது, “நவி அன்ட்ரிய உங்களுக்குப் பிடிக்குமா?” என்று கேட்டிருந்தார் பிரேமா.
“பிடிக்குமே.”
“அப்ப அவாவக் கூட்டிக்கொண்டு வந்து எங்களோடயே வச்சிருப்பமா? தம்பிக்குட்டியோட விளையாடி, படிப்புச் சொல்லித் தந்து, உங்களோடயே இருந்து, உங்களோடயே அன்ட்ரி படுக்கிற மாதிரி இருக்கச் செய்வமா?”
“அப்ப அப்பா?” கெட்டிக்காரக் குழந்தை உடனேயே வினவினான்.
“அப்பாவும்தான். அப்பா, சஜுக்குட்டி, நவி அன்ட்ரி எல்லாரும் ஒண்டா இருக்கலாம்.”
“அப்ப அப்பும்மா?”
நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது பிரேமாவுக்கு. அவன் உலகத்தில் அவரும் முக்கியமானவராக இருக்கிறார் என்கிற புளகாங்கிதத்தில் அரும்பிவிட்ட கண்ணீருடன் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு சிரித்தார்.
“நானும்தான். என்ர பேரக்குஞ்சனை விட்டுட்டு நான் எங்க போகப் போறன்?”
“அப்ப கூப்பிடுவம்.” உடனேயே சம்மதம் தந்தான் அவன்.
“அவாவக் கூப்பிடுறதுக்குத்தான் இந்த வேலை எல்லாம் நடக்குது. நவி அன்ட்ரி ஜெர்மன்ல இருக்கிறா எல்லா. அவா வந்ததும் பிள்ளையாரப்பட்டக் கூட்டிக்கொண்டு போய், அவருக்கு முன்னால பூசை செய்து, அப்பா அம்மாவக் கலியாணம் முடிச்ச பிறகு, நவி அன்ட்ரிய நாங்க எங்கட வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வருவம் என்ன.”
“ஓகே!” என்றான் தலையையும் சேர்த்து ஆட்டி.
அதன் படியே குழந்தை அந்தத் திருமணத்தையும் ஏற்றுக்கொண்டான். கோயிலில் வைத்தே பகல் உணவும் முடிய, நாவினி வீட்டுக்குத்தான் வந்தார்கள். மேனகாவும் சிவதாசனும்தான் அன்னை தந்தையாக நின்று அவளைத் தாரை வார்த்துக் கொடுத்தவர்கள். வீட்டுக்கு வந்த மணமக்களை ஆலம் சுற்றி வரவேற்றதும் அவர்கள்தான். அதற்குமேல் முடியாமல் மேனகாவைக் கட்டிக்கொண்டு அழுகையில் குலுங்கினாள் நாவினி.
மேனகாவுக்குமே கண்கள் கலங்கிப்போயிற்று. ஆனாலும் அங்கே ஒரு பெரிய மனிதன் நடப்பவற்றை எல்லாம் தன் உருண்டைக் கண்களால் அளவெடுத்தபடி இருந்ததில் எல்லோரும் எல்லாவற்றையும் முடிந்தவரையில் சாதாரணமாகவே கடந்தார்கள்.
போன முறை வந்தபோது மயான அமைதியில் திளைத்திருந்த வீடு, இன்று இத்தனை ஆள்களோடு கலகலப்பாக இருப்பதைக் கண்டு, தன் குடும்பம் இன்று இருந்திருக்கக் கூடாதா என்று நினைத்து நினைத்தே மருகினாள் நாவினி.
அவள் திருமணத்தை எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று பலமுறை அபிராமி நாகரத்தினத்திடம் சொல்வதை இவளே கேட்டிருக்கிறாள். அவர்களின் சேமிப்பில் ஒரு பகுதி இவள் திருமணத்திற்காக என்று ஒதுங்கும்.
அப்படி, எத்தனையோ வருடங்களுக்கு முதலே இந்த ஒரு நாளுக்காகத் திட்டம் போட்டு அனைத்தையும் செய்தவர்கள் இன்று இல்லை. சட்டென்று நிறைந்துவிட்ட விழிகளைச் சஜிதன் பார்க்க முதல் கையில் இருந்த டிஷ்யூவினால் துடைத்துக்கொண்டாள்.
கேசிகன் அவளைக் கவனிக்காமல் இல்லை. எதையெல்லாம் எண்ணித் தனக்குள் மருகுகிறாள் என்றும் தெரியும். எழுந்துபோய் அவளுக்குத் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான்.
திகைப்புடன் நிமிர்ந்தவளிடம், “குடி!” என்றான்.
அவள் வாங்கிப் பருகியதும் அந்தக் கப்பைக் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்து மீண்டும் அவளருகில் அமர்ந்துகொண்டான்.
பாராதது போன்று பார்த்திருந்த எல்லோர் மனங்களும் மகிழ்ந்துபோயின.
யாருமே அவளுக்கு ஆறுதல் சொல்லப் போகவில்லை. அப்படி ஆறுதல் சொல்கிறோம் என்று எதைக் கதைத்தாலும் அது அவளை அழ வைக்கும் என்பதில் சஜிதனை அவளிடம் தள்ளிவிட்டனர்.
கோயில் என்றாலே அவன் நெற்றிப் பட்டைக்குக் குறைவிருக்காது. திருமணம் என்கையில் கேட்கவா வேண்டும்? தகப்பனைப் போலவே பட்டு வேட்டி சட்டை அணிந்து, கூடவே பட்டுச் சால்வையையும் தோளில் போட்டிருந்தான். நெற்றி நிறையத் திருநீறு. எப்போதும்போல் புருவங்கள் இரண்டையும் தொடும் அளவில் பெரிய சந்தனப்பொட்டு, காதில் பூ என்று திரிந்தவனைக் கண்டு எல்லோருக்குமே சிரிப்பு.
வீட்டுக்கு வந்த பிறகு கையோடு கொண்டுவந்திருந்த உடையை மாற்றச் சொன்னார் பிரேமா. அவன் மறுத்துவிட்டான். அதைவிடத் தகப்பன் ஒரு முறை ஏதோ வேலை செய்வதற்காக வேட்டியை மடித்துக் கட்டியதைக் கவனித்துவிட்டான். தனக்கும் அப்படிக் கட்டிவிடச் சொன்னவன், அது அவிழ்ந்த பொழுதுகளில் எல்லாம் ஓடிவந்து தகப்பனைக் கட்டிவிடச் சொன்னான்.
“தம்புடு! அப்பா இப்ப இறக்கிவிட்டுட்டன். நீங்களும் இறக்கி விடுங்கோ.” என்று கேசிகன் சொன்னதற்கு, “அப்பா, உங்களுக்கு வேலை இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கு. கட்டி விடுங்கோ.” என்றான் அவன்.
“அப்பாவ விட மகன்தான் மாப்பிள்ளைக் கோலத்தில அசத்தல்.” என்று தெரியாமல் சொல்லிவிட்டார் சாரதா.
“ஓமா?” என்றவன் ஓடி வந்து, “நவி அன்ட்ரி, மாப்பிள்ளைக் கோலத்தில் நான் வடிவா, அப்பா வடிவா?” என்று கேட்டான்.
“என்ன கேள்வி இது? நீங்கதான் வடிவு.”
“அப்ப அப்பா வடிவில்லையா?”
பக்கத்தில் இவர்களைக் கவனித்துக்கொண்டு அந்த அப்பா இருக்கிறானே.
“அவரும்தான் வடிவு.”
“அப்ப ஆர் கூட வடிவு?”
“நீங்கதான்.”
“அப்ப அப்பா?”
“ரெண்டு பேரும் வடிவுதான்.”
அவனைச் சமாளிப்பதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்றாயிற்று. அவர்களுக்கான இரவுத் தங்கல், மேலே அவள் அறையில்தான் ஏற்பாடானது.
உதயன் குடும்பம் இங்கே இன்னொரு அறையில் தாங்கிக்கொள்ள, பிரேமா அவர்கள் வீட்டில் தனியாக இருக்க வேண்டாம் என்று மேனகாவும் சிவதாசனும் அவருடன் சென்றனர்.
அந்த நொடியில் அன்னையை எண்ணிக் கேசிகனின் உள்ளம் கனத்துப் போயிற்று. நேர் வீதி. நினைத்ததும் ஓடிப்போகும் தூரம். அதற்கே அவர் புறப்படுகையில் மனத்தைப் போட்டுப் பிசைந்தது. மொத்தமாக அவன் ஜெர்மன் புறப்படுகையில்?
யோசிக்கக் கூட முடியாமல் மகனையும் தூக்கிக்கொண்டு அவர்களோடு தானும் போனான். இனி இதுதான், நான் தனிதான் என்று எண்ணி அவர் வருந்திவிடக் கூடாது என்பது அவனுக்கு.
ஆனால், அவனை வீட்டுக்குள் பிரேமா விடவில்லை. “நாளைக்குக் குடும்பமா சேந்து வாய்யா. அம்மாக்கு ஒரு கவலையும் இல்ல. என்ர மகன் என்னைத் தனியா விடமாட்டான் எண்டு தெரியுமப்பு. நீங்க போங்கோ.” என்று அவன், பேரன் இருவர் முகங்களையும் வாஞ்சையோடு தடவிச் சொல்லி அனுப்பிவைத்தார்.
பேரன் வேறு, “அப்பும்மா, பயப்பிடக் கூடாது. பாம்பு, பூச்சி வந்தா அப்பான்ர ஃபோனுக்கு எடுத்து எனக்குச் சொல்லுங்கோ. பெரிய தடி எடுத்துக்கொண்டு வருவன்.” என்று சொன்னான்.
வேறு என்ன வேண்டும் அவருக்கு? சந்தோசமாகவே மேனகாவையும் சிவதாசனையும் கவனித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றார்.
நாவினி தன் அறைக்கு வந்து, மூவருக்கும் ஏற்ற வகையில் தலையணை போர்வைகள் எடுத்துப்போட்டாள். அவளுக்கு ஏற்றாற்போல் சின்ன கட்டில்தான் முதலில் இருந்தது. மேனகாதான் அங்கிருக்கும் போதே அதையெல்லாம் விசாரித்து, கேசிகனைக் கொண்டு அனைத்தையும் மாற்றியிருந்தார். அணிந்திருந்த சேலை மாற்றி, சின்னதாக ஒரு குளியல் போடுவதற்குச் சென்றாள்.
மகனோடு மேலே வந்த கேசிகன், அவள் அறையின் கதவு சாற்றியிருக்கவும் உள்ளே செல்லவில்லை. அங்கிருந்த பால்கனியில் சென்று நின்றுகொண்டான். அவர்கள் வீட்டில் இப்படி மாடியோ, பால்கனியோ இல்லை என்பதில் சஜிதனுக்கு இது ஆச்சர்யமான ஒன்றாயிற்று. அங்கேயே அவன் விளையாட ஆரம்பித்துவிட்டான். அங்கிருந்த நாற்காலி ஒன்றில் தன்னைப் புதைத்துக்கொண்டு மகனில் கவனமாக இருந்த கேசிகனின் சிந்தனை, தன் முதல் திருமண வாழ்க்கையில் தேங்கி நின்றது.
அன்று, இனி மொழிதான் தன் வாழ்க்கை என்று முடிவு செய்து திருமணத்தினுள் நுழைந்தாலும் நாவினியின் நினைவுகள் போட்டு அலைக்கழித்தன. இன்று, இனி நாவினிதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்து நுழைந்தாலும் மொழியின் நினைவுகள் போட்டு வாட்டின.
அவன் அன்னை என்னதான் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் என்ன பாடுபடுவர் என்று தெரியும். கடைகளை இனி என்ன செய்வது என்று தெரியாது.
இப்படி இன்னது என்றில்லாத விடயங்களை எல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவன் அவள் அறையின் கதவு திறந்த சத்தம் கேட்டாலும் அங்கே செல்வதற்கு அவசரம் காட்டவில்லை.
சஜிதனின் சத்தம் கேட்டு அவள் வெளியில் வந்து பார்க்கவும்தான் மகனோடு அறைக்குள் வந்தான்.