அத்தியாயம் 4
டுபாயில் இறங்கி, இரண்டரை மணிநேரம் காத்திருந்து, அடுத்த விமானத்தில் பயணித்துக் கொழும்பு வந்து இறங்கினாள் நாவினி.
எங்குத் திரும்பினும் அன்னை சகோதரர்கள் முகங்களே மின்னி மறைந்தன. அழக் கூடாது, தைரியமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவுதான் நினைத்தாலும் முடியவில்லை.
தாயகமும் தாய்க்கு ஒப்பானதாயிற்றே. தாய் மண்ணில் காலை வைத்த கணமே தாய் சகோதரர்களோடு வந்த நாள் நினைவில் வந்து கண்ணீர் சொரிய வைத்தது.
நம் வாழ்வில் பெரும் மகிழ்வான நாள் ஒன்றை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே பல நாள்களைச் சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறோம். என்றைக்கு அது இனித் திரும்பவே கிடைக்காது என்று தெரிய வருகிறதோ, அன்றைக்குக் கடந்துபோன அந்த நாளை எண்ணியே கண்ணீர் சொரிகிறோம். அப்படி ஒரு நிலையில் இருந்தாள் நாவினி.
அன்று, அவள் சிந்தை எல்லாம் இவர்கள் வாகனத்தில் புறப்பட்டபோது வாகனத்துடனேயே நடந்து வந்தவனும், அவன் முகத்தில் தெரிந்த தவிப்பும் மட்டுமே நிறைந்திருந்தன. ஆனால் இன்று?
ஒரு வழியாகத் தன் பயணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
மாதவன் இலங்கை காவல்துறையில் காவல்துறை உதவிக் கண்காணிப்பாளராகப்(Assistant Superintendent Of Police) பணியாற்றுகிறார். நேர்மை தவறாத, கண்டிப்பான காவல் அதிகாரி.
அவரை அவள் முன்பின் பார்த்ததில்லை. ஆனால், மேனகா அவரின் புகைப்படம் காட்டியிருந்தார். கூடவே புறப்பட முதல் அவரோடு இவளைக் காணொளி அழைப்பில் பேசவைத்திருந்தார்.
ஆனாலும் மெல்லிய மிரட்சியோடு வந்தவளை மேனகாவுக்கு இணையான பாசத்தோடு அரவணைத்துக்கொண்டனர் மாதவனும் அவர் மனைவி வைதேகியும்.
மாதவன், வைதேகிக்கு அவள்பற்றி அனைத்தும் தெரியும். மேனகா சொல்லியிருந்தார். ஆனால், அதைப் பற்றிப் பேசி அவளைக் காயப்படுத்த விரும்பாமல், தெரியாததுபோலவே காட்டிக்கொண்டார்கள்.
நாவினிக்கும் அது புரிந்தது. அந்தப் புரிந்துணர்வுடன் கூடிய அன்பில் நெகிழ்ந்தாள்.
கொழும்பிலிருந்து ஊரை நோக்கிய அவர்களின் பயணம் ஆரம்பித்தது. அவளால் கலங்கும் மனத்தையும் கண்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த வைதேகி, “என்னம்மா?” என்று ஒரு கேள்விதான் கேட்டார்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை ஆட்டியவள் கையில் இருந்த டிஷ்யூ பேப்பரில் முகத்தைப் புதைத்துக் கண்ணீர் உகுத்தாள்.
“தைரியமா இருக்கோணும் பிள்ளை. ஒண்டுமில்லையம்மா.” அப்போதும் அவள் இழப்பைப் பற்றிப் பேசாமல், அவள் தலையை வருடித் தைரியம் கொடுத்தார் வைதேகி.
மாதவன், மேனகாவின் சொந்த இடம் பருத்தித்துறை. அதில் மாதவன் அவளை முதலில் பருத்தித்துறைக்குத்தான் அழைத்துச் சென்றார்.
திரும்பவும் எட்டுத் தொடக்கம் ஒன்பது மணி நேரப் பயணம். அவர்களின் வீடு சென்று சேர்ந்தபோது மனத்தின் போராட்டம், கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியாமல் கசிந்த கண்ணீர், நீண்ட நெடிய பயணத்தினால் உண்டான களைப்பு என்று முற்றிலுமாகச் சோர்ந்துபோனாள் நாவினி.
காவல்துறையினருக்காக ஒதுக்கியிருந்த குவார்டசில்தான் தங்கியிருந்தார் மாதவன். அவருக்கு வளர்ந்த பிள்ளைகள் மூவர். மூவருமே திருமணமாகித் தனித்தனியாகப் போயிருந்தார்கள்.
அதில் தற்போது கணவன் மனைவி மட்டுமே வசித்து வந்தனர். அவர்களுக்கு அவள் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. கொழும்புக்குப் புறப்பட முதலே அவளுக்கென்று ஒரு அறையைத் தயார் செய்துவிட்டுத்தான் வந்தார் வைதேகி.
அங்கே தன் உடைமைகளை வைத்துவிட்டு, குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தவளுக்கு ஏற்கனவே குழைத்துப் புளிக்க வைத்திருந்த தோசை மாவில் புதுவிதமான மசாலா தோசை செய்துகொடுத்தார் வைதேகி.
நல்லெண்ணெய் விட்ட முறுகல் தோசையினுள் உருளைக்கிழங்குப் பிரட்டலோடு தேங்காய்ச் சம்பலும் வைத்து, அதற்கு மேலே பருப்புச் சாம்பார் ஊற்றியிருந்தார்.
வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றினாலும் சொல்லவில்லை அவள். இலேசாக ஒரு வாய் பிய்த்து வாயில் வைத்தவள் விழிகள் வியப்பில் விரிந்தன.
நல்லெண்ணெய் வாசம், அதில் இலேசாக முறுக்கியிருந்த தோசை சாம்பாரில் நனைந்து, தேங்காய்ச் சம்பலின் காரத்தைச் சுமந்து, அது இரண்டையும் சமப்படுத்துவது போன்று உருளைக்கிழங்கு மசியல் என்று அற்புதச் சுவையோடு இருந்தது.
“நல்லாருக்காம்மா?” அவள் முகத்தையே கவனித்திருந்த வைதேகி சின்ன முறுவலுடன் வினவினார்.
“அருமையா இருக்கு அன்ட்ரி. என்னடா இது ஒரு தோசைக்க எல்லாத்தையும் போட்டுத் தாறீங்களே எண்டு நினைச்சன்.” என்றவளைக் கண்டு மாதவன் நகைத்தார்.
“அதுதான் என்ர மனுசின்ர கைப்பக்குவம். என்ர வண்டிய(வயிறு) பாத்தோன்னயே இத நீங்க யோசிச்சிருக்கோணும்.” என்றார் தன் வயிற்றைத் தடவிக்காட்டி.
உண்மைதான். கிட்டத்தட்டப் பன்னிரண்டு மாத வயிற்றைச் சுமந்திருந்தார் மனிதர். அதைக் கண்டு சிரிப்பை அடக்க முயன்றும் முடியாமல் சிரித்துவிட்டாள் நாவினி. அந்தச் சிரிப்பினோடே அவளை இன்னும் இரண்டு மசாலாத் தோசைகளைச் சாப்பிட வைத்திருந்தார் வைதேகி.
அன்றிரவு நன்றாக உறங்கி எழுந்து வந்தவளிடம் வீட்டுப் பத்திரங்களை வாங்கினார் மாதவன். முதலே அங்கிருந்து ஸ்கான் பண்ணி அனுப்பியிருந்தாள்தான். என்றாலும் ஒரிஜினல் உறுதியை வாங்கி ஆராய்ந்துவிட்டு, அத்தனையையும் தானே கைப்பேசி மூலம் ஸ்கான் பண்ணி, ‘பிடிஎஃப்’ வடிவத்தில் யாரோ ஒருவருக்கு அனுப்பிவைத்தார்.
அப்படியே அவருக்கு அழைத்து, “அண்டைக்குச் சொன்ன விசயம் இது ராஜன். தாயின்ர சீதனக் காணி. இவா ஏழு வயதா இருக்கேக்கையே தாய் இறந்திட்டா. அப்பவே தகப்பன் இவான்ர பெயருக்கு மாத்தி இருக்கிறார். ஆனா, பதினெட்டு வயதாகி, அத முறையா மாத்தி எடுக்கிற காலத்தில இவா இஞ்ச இல்ல. இப்ப நாங்க இத இவான்ர பெயருக்கு முறையா மாத்தோணும். அவாட ஐடென்ட்ரி கார்ட், பிறப்புச் சான்றிதழ் எல்லாம் அனுப்பி இருக்கிறன். தேவை எண்டு வந்தா விதானையின்ர(கிராம சேவையாளர்) கடிதமும் வாங்கலாம். அதெல்லாம் பிரச்சினை இல்ல. எல்லா வேலையையும் கெதியா முடிச்சுப்போட்டுச் சொல்லுங்கோ, அவாவைக் கூட்டிக்கொண்டு வாறன். அவான்ர பெயருக்கு மாத்தி விடுவம். அப்பிடியே அவவின்ர மாமா இதே காணிக்குப் பொய் உறுதி முடிச்சு, வீட்டை விக்கப்போறாராம் எண்டு கேள்வி. அதையும் ஒருக்கா விசாரிச்சுச் சொல்லுங்கோ.” என்று சொல்லி, பரமேஸ்வரனின் விபரங்களையும் கொடுத்துவிட்டு வைத்தார் மாதவன்.
அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவள் உள்ளம் கலங்கிப்போயிற்று. என்ன இருந்தாலும் மாமா. அவரே அவளுக்கு இப்படியெல்லாம் செய்கிறாரே என்று அழுவாளா? இல்லை, அவருக்கு எதிராக நிற்கும் நிலையில் அவள் இருக்கிறாளே என்று அழுவாளா?
அவளுக்கு அந்த வீடு பெரிதில்லை. அந்த வீட்டில் வாழ்ந்த நினைவுகள்தான் இன்று பொக்கிசமாகிப்போயின. அவரே வைத்திருந்திருந்தால் கூட இருக்கும் வரை இருக்கட்டும் என்று விட்டிருக்கலாம். அவர் விற்கப்போகிறாராம் என்றதும்தான் தன்னுடையதைத் தானே எடுத்துக்கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தாள்.
அதைவிட அந்த வீட்டுக்காகத் தந்தை பட்ட அல்லல்களைப் பக்கத்திலேயே இருந்து பார்த்தவள் எப்படி விடுவாள்?
அன்று இவர்கள் ஜெர்மன் புறப்பட முதல் அவர்களின் வீட்டில் நாகரத்தினத்தின் தூரத்து உறவினர்களை அமர்த்தியிருந்தார் அபிராமி. வாடகை வேண்டாம், வீட்டையும் காணியையும் காணிக்குள் இருக்கிற மரங்களையும் பராமரித்தால் போதும் என்பதுதான் பேச்சு.
ஆனால், இவர்கள் வெளிநாடு சென்றுவிட்ட கொஞ்ச நாள்களிலேயே அவர்களோடு மல்லுக்கு நிற்க ஆரம்பித்திருந்தார் பரமேஸ்வரன். பரிமளாவைத் திருமணம் செய்து கொடுத்த காலத்திலேயே பெரிய காணியில் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் பெறுமதி பெரிது. அப்படியிருக்க அந்த நேரம் சில கோடிகள் வந்தது. அதை இழக்க பரமேஸ்வரன் தயாராக இல்லை.
கடைசியில் இவர்களின் தூரத்து உறவினர்களால் பரமேஸ்வரனோடு மல்லுக்கட்ட முடியவில்லை. நாகரத்தினமோ அபிராமியோ இருந்திருந்தால் வேறு. இவர்களே அவர்களின் வீட்டில் சும்மா இருக்கிறவர்கள்.
அப்படியிருக்க வெட்கமே இல்லாமல் அடுத்தவன் வீட்டுச் சொத்தில் வந்து சுகமாகக் குந்திக்கொண்டு அனுபவிக்கிறீர்களே, ரோச மானம் இல்லையா, சோற்றில் உப்புப் போட்டுத் தின்பதில்லையா போன்ற பரமேஸ்வரனின் மோசமான கேள்விகளை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் முடியாமல், அங்கிருந்து எழுந்திருந்தார்கள் அவர்கள்.
அடுத்த சில நாள்களிலேயே பரமேஸ்வரன் அங்கே குடிவந்தார். இதை அறிந்த நாகரத்தினத்துக்கு மிகுந்த ஆத்திரம். தொலைபேசியில் என்ன பேசியும் அவரை வெளியேற்ற முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் பரமேஸ்வரன் அழைப்பை ஏற்க மறுத்தார்.
ஊரிலிருக்கும் யார் மூலம் பேசியும் பிரயோசனம் இல்லை. கேசிகன் குடும்பம் உட்பட நாகரத்தினத்துக்குச் சார்பாகக் கதைக்க எல்லோருமே தயங்கினர். அப்படியே கதைத்தாலும் பரமேஸ்வரன் அதைக் கேட்க வேண்டுமே. அதைவிட ஒரு சிலருக்கு இவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் நொடிந்துபோயிருக்கும் பரமேஸ்வரனுக்கு அதைக் கொடுத்தால்தான் என்ன என்கிற எண்ணம்.
கடைசியில் உறுதி தன்னிடம்தானே உண்டு, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் நாகரத்தினம்.
அதே நேரத்தில் ஜெர்மன் வந்து கொஞ்ச நாள்களிலேயே கேசிகனின் நண்பன் மயூரன் வீட்டு விலாசத்திற்கு ஜெர்மனியில் தங்கள் வீட்டு விலாசத்தையும், தந்தையின் கைப்பேசி இலக்கத்தையும் எழுதி அனுப்பினாள் நாவினி.
அவனிடம் இருந்தும் பதில் வந்தது. இன்னுமே இன்னது என்று வரையறுக்காத உறவு அவர்களது. கூடவே எதையும் வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவும் இல்லை. அன்று பிரியும் நாளில் தம்மை மீறி வெளிப்படுத்திய அன்பு, இருவர் உள்ளங்களிலும் ஆழமாக இருந்தாலும், அப்படியே மனத்திலேயே வைத்திருந்தார்கள்.
எல்லாவற்றையும் விடத் தாம் இன்னுமே அதற்குரிய வயதிற்கு வரவில்லை என்கிற எண்ணம் கேசிகனை உடைத்துப் பேச விடவில்லை. அதைவிட இன்னுமே கடிதப் போக்குவரத்துத்தான். அவனிடம் கைப்பேசி இருந்தாலும் அவளிடம் இல்லை. அவளின் தந்தைக்கு அழைத்து அவளோடு பேசப்போகிறேன் என்று சொல்ல முடியாதே.
அதில் எழுதுகிற கடிதங்களில் என்ன செய்கிறாய், எப்படி இருக்கிறாய், மொழி படிக்க ஆரம்பித்துவிட்டாயா, நாடு பிடித்திருக்கிறதா, முடிந்தால் புகைப்படம் அனுப்பு போன்றவைதான் இடம்பெற்றன. அவள் இன்னுமே சின்ன பெண் என்கிற எண்ணம் ஒருபுறம் என்றால், தன் கடிதத்தை அவள் தாயோ தந்தையோ பார்த்தால் என்னாகும் என்கிற கவனம் இன்னொரு புறம்
டுபாயில் இறங்கி, இரண்டரை மணிநேரம் காத்திருந்து, அடுத்த விமானத்தில் பயணித்துக் கொழும்பு வந்து இறங்கினாள் நாவினி.
எங்குத் திரும்பினும் அன்னை சகோதரர்கள் முகங்களே மின்னி மறைந்தன. அழக் கூடாது, தைரியமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவுதான் நினைத்தாலும் முடியவில்லை.
தாயகமும் தாய்க்கு ஒப்பானதாயிற்றே. தாய் மண்ணில் காலை வைத்த கணமே தாய் சகோதரர்களோடு வந்த நாள் நினைவில் வந்து கண்ணீர் சொரிய வைத்தது.
நம் வாழ்வில் பெரும் மகிழ்வான நாள் ஒன்றை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே பல நாள்களைச் சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறோம். என்றைக்கு அது இனித் திரும்பவே கிடைக்காது என்று தெரிய வருகிறதோ, அன்றைக்குக் கடந்துபோன அந்த நாளை எண்ணியே கண்ணீர் சொரிகிறோம். அப்படி ஒரு நிலையில் இருந்தாள் நாவினி.
அன்று, அவள் சிந்தை எல்லாம் இவர்கள் வாகனத்தில் புறப்பட்டபோது வாகனத்துடனேயே நடந்து வந்தவனும், அவன் முகத்தில் தெரிந்த தவிப்பும் மட்டுமே நிறைந்திருந்தன. ஆனால் இன்று?
ஒரு வழியாகத் தன் பயணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
மாதவன் இலங்கை காவல்துறையில் காவல்துறை உதவிக் கண்காணிப்பாளராகப்(Assistant Superintendent Of Police) பணியாற்றுகிறார். நேர்மை தவறாத, கண்டிப்பான காவல் அதிகாரி.
அவரை அவள் முன்பின் பார்த்ததில்லை. ஆனால், மேனகா அவரின் புகைப்படம் காட்டியிருந்தார். கூடவே புறப்பட முதல் அவரோடு இவளைக் காணொளி அழைப்பில் பேசவைத்திருந்தார்.
ஆனாலும் மெல்லிய மிரட்சியோடு வந்தவளை மேனகாவுக்கு இணையான பாசத்தோடு அரவணைத்துக்கொண்டனர் மாதவனும் அவர் மனைவி வைதேகியும்.
மாதவன், வைதேகிக்கு அவள்பற்றி அனைத்தும் தெரியும். மேனகா சொல்லியிருந்தார். ஆனால், அதைப் பற்றிப் பேசி அவளைக் காயப்படுத்த விரும்பாமல், தெரியாததுபோலவே காட்டிக்கொண்டார்கள்.
நாவினிக்கும் அது புரிந்தது. அந்தப் புரிந்துணர்வுடன் கூடிய அன்பில் நெகிழ்ந்தாள்.
கொழும்பிலிருந்து ஊரை நோக்கிய அவர்களின் பயணம் ஆரம்பித்தது. அவளால் கலங்கும் மனத்தையும் கண்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த வைதேகி, “என்னம்மா?” என்று ஒரு கேள்விதான் கேட்டார்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை ஆட்டியவள் கையில் இருந்த டிஷ்யூ பேப்பரில் முகத்தைப் புதைத்துக் கண்ணீர் உகுத்தாள்.
“தைரியமா இருக்கோணும் பிள்ளை. ஒண்டுமில்லையம்மா.” அப்போதும் அவள் இழப்பைப் பற்றிப் பேசாமல், அவள் தலையை வருடித் தைரியம் கொடுத்தார் வைதேகி.
மாதவன், மேனகாவின் சொந்த இடம் பருத்தித்துறை. அதில் மாதவன் அவளை முதலில் பருத்தித்துறைக்குத்தான் அழைத்துச் சென்றார்.
திரும்பவும் எட்டுத் தொடக்கம் ஒன்பது மணி நேரப் பயணம். அவர்களின் வீடு சென்று சேர்ந்தபோது மனத்தின் போராட்டம், கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியாமல் கசிந்த கண்ணீர், நீண்ட நெடிய பயணத்தினால் உண்டான களைப்பு என்று முற்றிலுமாகச் சோர்ந்துபோனாள் நாவினி.
காவல்துறையினருக்காக ஒதுக்கியிருந்த குவார்டசில்தான் தங்கியிருந்தார் மாதவன். அவருக்கு வளர்ந்த பிள்ளைகள் மூவர். மூவருமே திருமணமாகித் தனித்தனியாகப் போயிருந்தார்கள்.
அதில் தற்போது கணவன் மனைவி மட்டுமே வசித்து வந்தனர். அவர்களுக்கு அவள் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. கொழும்புக்குப் புறப்பட முதலே அவளுக்கென்று ஒரு அறையைத் தயார் செய்துவிட்டுத்தான் வந்தார் வைதேகி.
அங்கே தன் உடைமைகளை வைத்துவிட்டு, குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தவளுக்கு ஏற்கனவே குழைத்துப் புளிக்க வைத்திருந்த தோசை மாவில் புதுவிதமான மசாலா தோசை செய்துகொடுத்தார் வைதேகி.
நல்லெண்ணெய் விட்ட முறுகல் தோசையினுள் உருளைக்கிழங்குப் பிரட்டலோடு தேங்காய்ச் சம்பலும் வைத்து, அதற்கு மேலே பருப்புச் சாம்பார் ஊற்றியிருந்தார்.
வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றினாலும் சொல்லவில்லை அவள். இலேசாக ஒரு வாய் பிய்த்து வாயில் வைத்தவள் விழிகள் வியப்பில் விரிந்தன.
நல்லெண்ணெய் வாசம், அதில் இலேசாக முறுக்கியிருந்த தோசை சாம்பாரில் நனைந்து, தேங்காய்ச் சம்பலின் காரத்தைச் சுமந்து, அது இரண்டையும் சமப்படுத்துவது போன்று உருளைக்கிழங்கு மசியல் என்று அற்புதச் சுவையோடு இருந்தது.
“நல்லாருக்காம்மா?” அவள் முகத்தையே கவனித்திருந்த வைதேகி சின்ன முறுவலுடன் வினவினார்.
“அருமையா இருக்கு அன்ட்ரி. என்னடா இது ஒரு தோசைக்க எல்லாத்தையும் போட்டுத் தாறீங்களே எண்டு நினைச்சன்.” என்றவளைக் கண்டு மாதவன் நகைத்தார்.
“அதுதான் என்ர மனுசின்ர கைப்பக்குவம். என்ர வண்டிய(வயிறு) பாத்தோன்னயே இத நீங்க யோசிச்சிருக்கோணும்.” என்றார் தன் வயிற்றைத் தடவிக்காட்டி.
உண்மைதான். கிட்டத்தட்டப் பன்னிரண்டு மாத வயிற்றைச் சுமந்திருந்தார் மனிதர். அதைக் கண்டு சிரிப்பை அடக்க முயன்றும் முடியாமல் சிரித்துவிட்டாள் நாவினி. அந்தச் சிரிப்பினோடே அவளை இன்னும் இரண்டு மசாலாத் தோசைகளைச் சாப்பிட வைத்திருந்தார் வைதேகி.
அன்றிரவு நன்றாக உறங்கி எழுந்து வந்தவளிடம் வீட்டுப் பத்திரங்களை வாங்கினார் மாதவன். முதலே அங்கிருந்து ஸ்கான் பண்ணி அனுப்பியிருந்தாள்தான். என்றாலும் ஒரிஜினல் உறுதியை வாங்கி ஆராய்ந்துவிட்டு, அத்தனையையும் தானே கைப்பேசி மூலம் ஸ்கான் பண்ணி, ‘பிடிஎஃப்’ வடிவத்தில் யாரோ ஒருவருக்கு அனுப்பிவைத்தார்.
அப்படியே அவருக்கு அழைத்து, “அண்டைக்குச் சொன்ன விசயம் இது ராஜன். தாயின்ர சீதனக் காணி. இவா ஏழு வயதா இருக்கேக்கையே தாய் இறந்திட்டா. அப்பவே தகப்பன் இவான்ர பெயருக்கு மாத்தி இருக்கிறார். ஆனா, பதினெட்டு வயதாகி, அத முறையா மாத்தி எடுக்கிற காலத்தில இவா இஞ்ச இல்ல. இப்ப நாங்க இத இவான்ர பெயருக்கு முறையா மாத்தோணும். அவாட ஐடென்ட்ரி கார்ட், பிறப்புச் சான்றிதழ் எல்லாம் அனுப்பி இருக்கிறன். தேவை எண்டு வந்தா விதானையின்ர(கிராம சேவையாளர்) கடிதமும் வாங்கலாம். அதெல்லாம் பிரச்சினை இல்ல. எல்லா வேலையையும் கெதியா முடிச்சுப்போட்டுச் சொல்லுங்கோ, அவாவைக் கூட்டிக்கொண்டு வாறன். அவான்ர பெயருக்கு மாத்தி விடுவம். அப்பிடியே அவவின்ர மாமா இதே காணிக்குப் பொய் உறுதி முடிச்சு, வீட்டை விக்கப்போறாராம் எண்டு கேள்வி. அதையும் ஒருக்கா விசாரிச்சுச் சொல்லுங்கோ.” என்று சொல்லி, பரமேஸ்வரனின் விபரங்களையும் கொடுத்துவிட்டு வைத்தார் மாதவன்.
அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவள் உள்ளம் கலங்கிப்போயிற்று. என்ன இருந்தாலும் மாமா. அவரே அவளுக்கு இப்படியெல்லாம் செய்கிறாரே என்று அழுவாளா? இல்லை, அவருக்கு எதிராக நிற்கும் நிலையில் அவள் இருக்கிறாளே என்று அழுவாளா?
அவளுக்கு அந்த வீடு பெரிதில்லை. அந்த வீட்டில் வாழ்ந்த நினைவுகள்தான் இன்று பொக்கிசமாகிப்போயின. அவரே வைத்திருந்திருந்தால் கூட இருக்கும் வரை இருக்கட்டும் என்று விட்டிருக்கலாம். அவர் விற்கப்போகிறாராம் என்றதும்தான் தன்னுடையதைத் தானே எடுத்துக்கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தாள்.
அதைவிட அந்த வீட்டுக்காகத் தந்தை பட்ட அல்லல்களைப் பக்கத்திலேயே இருந்து பார்த்தவள் எப்படி விடுவாள்?
அன்று இவர்கள் ஜெர்மன் புறப்பட முதல் அவர்களின் வீட்டில் நாகரத்தினத்தின் தூரத்து உறவினர்களை அமர்த்தியிருந்தார் அபிராமி. வாடகை வேண்டாம், வீட்டையும் காணியையும் காணிக்குள் இருக்கிற மரங்களையும் பராமரித்தால் போதும் என்பதுதான் பேச்சு.
ஆனால், இவர்கள் வெளிநாடு சென்றுவிட்ட கொஞ்ச நாள்களிலேயே அவர்களோடு மல்லுக்கு நிற்க ஆரம்பித்திருந்தார் பரமேஸ்வரன். பரிமளாவைத் திருமணம் செய்து கொடுத்த காலத்திலேயே பெரிய காணியில் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் பெறுமதி பெரிது. அப்படியிருக்க அந்த நேரம் சில கோடிகள் வந்தது. அதை இழக்க பரமேஸ்வரன் தயாராக இல்லை.
கடைசியில் இவர்களின் தூரத்து உறவினர்களால் பரமேஸ்வரனோடு மல்லுக்கட்ட முடியவில்லை. நாகரத்தினமோ அபிராமியோ இருந்திருந்தால் வேறு. இவர்களே அவர்களின் வீட்டில் சும்மா இருக்கிறவர்கள்.
அப்படியிருக்க வெட்கமே இல்லாமல் அடுத்தவன் வீட்டுச் சொத்தில் வந்து சுகமாகக் குந்திக்கொண்டு அனுபவிக்கிறீர்களே, ரோச மானம் இல்லையா, சோற்றில் உப்புப் போட்டுத் தின்பதில்லையா போன்ற பரமேஸ்வரனின் மோசமான கேள்விகளை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் முடியாமல், அங்கிருந்து எழுந்திருந்தார்கள் அவர்கள்.
அடுத்த சில நாள்களிலேயே பரமேஸ்வரன் அங்கே குடிவந்தார். இதை அறிந்த நாகரத்தினத்துக்கு மிகுந்த ஆத்திரம். தொலைபேசியில் என்ன பேசியும் அவரை வெளியேற்ற முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் பரமேஸ்வரன் அழைப்பை ஏற்க மறுத்தார்.
ஊரிலிருக்கும் யார் மூலம் பேசியும் பிரயோசனம் இல்லை. கேசிகன் குடும்பம் உட்பட நாகரத்தினத்துக்குச் சார்பாகக் கதைக்க எல்லோருமே தயங்கினர். அப்படியே கதைத்தாலும் பரமேஸ்வரன் அதைக் கேட்க வேண்டுமே. அதைவிட ஒரு சிலருக்கு இவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் நொடிந்துபோயிருக்கும் பரமேஸ்வரனுக்கு அதைக் கொடுத்தால்தான் என்ன என்கிற எண்ணம்.
கடைசியில் உறுதி தன்னிடம்தானே உண்டு, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் நாகரத்தினம்.
அதே நேரத்தில் ஜெர்மன் வந்து கொஞ்ச நாள்களிலேயே கேசிகனின் நண்பன் மயூரன் வீட்டு விலாசத்திற்கு ஜெர்மனியில் தங்கள் வீட்டு விலாசத்தையும், தந்தையின் கைப்பேசி இலக்கத்தையும் எழுதி அனுப்பினாள் நாவினி.
அவனிடம் இருந்தும் பதில் வந்தது. இன்னுமே இன்னது என்று வரையறுக்காத உறவு அவர்களது. கூடவே எதையும் வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவும் இல்லை. அன்று பிரியும் நாளில் தம்மை மீறி வெளிப்படுத்திய அன்பு, இருவர் உள்ளங்களிலும் ஆழமாக இருந்தாலும், அப்படியே மனத்திலேயே வைத்திருந்தார்கள்.
எல்லாவற்றையும் விடத் தாம் இன்னுமே அதற்குரிய வயதிற்கு வரவில்லை என்கிற எண்ணம் கேசிகனை உடைத்துப் பேச விடவில்லை. அதைவிட இன்னுமே கடிதப் போக்குவரத்துத்தான். அவனிடம் கைப்பேசி இருந்தாலும் அவளிடம் இல்லை. அவளின் தந்தைக்கு அழைத்து அவளோடு பேசப்போகிறேன் என்று சொல்ல முடியாதே.
அதில் எழுதுகிற கடிதங்களில் என்ன செய்கிறாய், எப்படி இருக்கிறாய், மொழி படிக்க ஆரம்பித்துவிட்டாயா, நாடு பிடித்திருக்கிறதா, முடிந்தால் புகைப்படம் அனுப்பு போன்றவைதான் இடம்பெற்றன. அவள் இன்னுமே சின்ன பெண் என்கிற எண்ணம் ஒருபுறம் என்றால், தன் கடிதத்தை அவள் தாயோ தந்தையோ பார்த்தால் என்னாகும் என்கிற கவனம் இன்னொரு புறம்