அத்தியாயம் 5
கேசிகனோடான தொடர்பு முற்றிலுமாக அறுந்து மூன்று வருடங்களாகியிருந்தன. எப்படி அவன் பற்றிய ஒரு செய்தி கூடத் தெரியாமல் வாழ்ந்தால் என்றே அவளுக்குத் தெரியாது. சிறகொடிந்த பறவையைப் போல்தான் அவள் நாள்கள் நகர்ந்திருந்தன.
உள்ளார்ந்து மகிழ்ந்து வாழ்ந்தாளா என்றால் இல்லை. காலங்கள் ஓடின. அந்த ஓடிய காலத்தில் ஜெர்மன் நாட்டு மொழியைப் படிப்பதும், பாடசாலையை முடித்துக் கல்லூரியில் சேர்வதும் அவளின் கடமைகளாக இருந்தன. அவற்றைத் திறம்படவே செய்தாள்.
இப்படி இருக்கையில்தான் நாகரத்தினத்தின் அன்னை காலமானார். ஊருக்கு உடனேயே புறப்பட்ட மனிதர், வீட்டுப் பிரச்சனையையும் என்னவென்று பார்க்க எண்ணினார். அதற்கு நாவினியையும் அழைத்துச் செல்ல வேண்டும்.
அதுவரையில் நாவினியும் கேசிகனும் கடிதத் தொடர்பில் இருந்து, பிறகு நாளாக நாளாக அது விடுபட்டுப் போயிற்று என்றுதான் நாகரத்தினத்துக்குத் தெரியும். மேலதிகமாக அவரிடம் எதையும் அபிராமி சொல்லப்போகவில்லை.
அபிராமிக்கு முதலில் அவளை அங்கே அனுப்புவதில் உடன்பாடில்லை. அதே நேரத்தில் ஊருக்குப் போகிறபோது வீட்டு விசயத்தையும் பார்த்துக்கொண்டு வர நினைப்பது மிக நல்ல யோசனையாகவே பட்டது.
அதைவிட இனி அவள் அடுத்தடுத்துத் தன் வாழ்வின் படிநிலைகளை நோக்கி நகரவேண்டியவள். அதற்கு இந்தப் பயணம் நிச்சயம் உதவும் என்று நம்பிச் சம்மதித்தார்.
இதை அறிந்த நாவினியின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வடிக்க முடியாது. ஒரு வார்த்தை அவன் பற்றிய செய்தி கிட்டாதா என்று தவித்துக்கொண்டிருந்தவள். இன்னும் சில நாள்களில் அவனையே பார்க்கப்போகிறாள் என்றால் எப்படி இருக்கும்?
மெதுவாக நழுவித் தன் அறைக்குள் நுழைந்துகொண்டவள் சந்தோசத்தில் சத்தமில்லாமல் துள்ளிக் குதித்தாள். அவனைப் பார்க்கப் போகிறாள். அவளுடைய அவனை, அவளின் நாயகனை, அவளின் கேசியைப் பார்க்கப்போகிறாள். சிரிப்பு, சந்தோசம், அழுகை என்று எல்லா வகையான உணர்வுகளும் கலந்துகட்டி வந்தன.
அன்று பதினேழு வயதில் புரிந்தும் புரியா உணர்வுகளைச் சுமந்து அவனையே சுற்றிய மனம், இன்று அவனைக் காதலின் நாயகனாக வரித்து, கண்ட கனவுகளை எல்லாம் ஒன்றைக் கூட மிச்சம் விடாமல் நெஞ்சினுள் சேமித்து வைத்திருக்கிறதே. அதையெல்லாம் அவனிடம் கொட்டப்போகிறாள்.
எப்படி இருப்பான்? அவளுக்கே இருபத்தி மூன்று என்கையில் அவன் இருபத்தி எட்டினைத் தொட்டவன். முழுமையான ஆண். அப்போதே நல்ல உயரம். இப்போது இன்னும் நன்றாக வளர்ந்து, அதற்கு ஏற்ற உடற்கட்டோடு, மீசை தாடி என்று இருப்பானாக இருக்கும். கற்பனையில் நினைக்கையிலேயே அவள் நெஞ்சினுள் என்னென்னவோ உணர்வுகள் பொங்கின.
இந்த உணர்வுகளின் தளம்பல் கொஞ்சமும் குறையாமல் இலங்கை சென்று இறங்கினாள். நேராக அப்பம்மா வீட்டுக்குத்தான் போனார்கள். நாகரத்தினம் ஒற்றை மகன் என்பதில் அவர்தான் கொள்ளி வைத்தார். அதில் எட்டாம் நாள் காரியம் ஆகாமல் அவரை வெளியில் செல்ல விடவில்லை.
நாவினியால் அப்படி வீட்டுக்குள்ளேயே இருக்க முடியவில்லை. ஒரே ஊரில் இருக்கிறாள். பதினைந்து நிமிட சைக்கிள் பயணத்தில் அவனைப் பார்த்துவிடலாம் என்கையில் எப்படி இருப்பது?
மூன்று நாள்கள் முடிந்ததும், “அப்பா, சும்மா வெளில போயிட்டு வரட்டா? என்ர ஃபிரெண்ட்ஸ பாக்கோணும் மாதிரி இருக்கு.” என்று தந்தையிடம் கேட்டு அனுமதி பெற்றுக்கொண்டு, பக்கத்து வீட்டு அக்காவின் சைக்கிளில் புறப்பட்டுவிட்டாள்.
அவர்களின் வீடு இருக்கும் பகுதிக்குத் தனியாகப் போக வேண்டாம் என்று நாகரத்தினம் சொல்லியிருந்தார். பரமேஸ்வரனோடு முறுகல் நிலையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் பெண் பிள்ளை அவளைத் தனியாக அனுப்ப அவருக்கு விருப்பமில்லை. ஆனால், அவர்கள் வீட்டுத் தெருவுக்குப் போக வேண்டும் என்கிற ஆசையிலேயே வந்தவள் என்ன செய்வாள்?
அவர்களின் தெரு நேராக வந்தால் ஒரு நாற்சந்தி. அந்த நாற்சந்தியிலிருந்து எங்கும் திரும்பாமல் திரும்பவும் நேராக வந்தால் பிரேமாவின் சீதனக்காணியைப் பார்க்கலாம். இத்தனை வருட இடைவெளியில் அங்கு வீட்டைக் கட்டியிருப்பானா, தன் அன்னையோடு குடிவந்திருப்பானா என்று அறியும் ஆவல் உந்தியதில் அவர்கள் வீட்டின் தெருப்பக்கமாக சைக்கிளை விடாமல் பிரேமாவின் சீதனக்காணி இருக்கும் தெருவுக்கு விட்டாள்.
இந்த ஐந்து வருட இடைவெளியில் சின்ன சின்னதாகவும் பெரிது பெரிதாகவும் நிறைய மாற்றங்கள். அங்கங்கே இலேசாகத் தடுமாறினாலும் சரியாகப் பிரேமாவின் சீதனக் காணி இருக்குமிடத்துக்கு வந்து சேர்ந்தாள்.
பார்த்தால் மதில் வைத்த வீடே கட்டியிருந்தான் அவன். ஆனால், பெரிய கேட்டினை தாங்கி நின்ற தூண்களில் ஒன்றில் ‘நிறைமொழி இல்லம்’ என்று இருக்கக் கண்டு குழம்பிப்போனாள். அந்தப் பெயர் வேறு நெருடியது.
இது அவர்கள் வீடு இல்லையோ, காணியை விற்றுவிட்டார்களோ? ஆவலாக உள்ளே போகப் போனவள் யோசித்தபடி தேங்கி நின்றாள். இல்லை, அவள்தான் அவர்களின் காணி என்று மாறி வந்துவிட்டாளா என்று நாளா பக்கமும் விழிகளைச் சுழற்றி அங்கிருந்த வீடுகளை ஆராய்ந்தாள்.
அப்போது அந்த நிறைமொழி இல்லத்தின் கேட்டின் ஒரு கதவு மட்டும் திறக்கப்பட்டது. பார்வையை அங்கே திருப்பினாள். இலேசாக மேடிட ஆரம்பித்த வயிற்றுடன் ஒரு பெண் வெளியில் வந்தாள்.
‘அச்சோ! இது நிறை அக்கா! அப்ப இது அவான்ர வீடா?’ அந்தப் பெண் மயூரனின் தங்கை நிறைமொழி என்று அவள் இனம் கண்டு முடிப்பதற்குள் பைக்கில் வெளியே வந்தான் அவன். அவளுடைய கேசிகன்.
ஆனந்த அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து நின்றுவிட்டாள். கண்கள் பனிக்க, முகம் அப்படியே பூவாக மலர அவனிடம் ஓடப்போனவள் அடுத்து நடந்த நிகழ்வில் பிரேக்கிட்டது போன்று அப்படியே நின்றாள்.
அங்கே நிறைமொழி அவன் தோளைப் பற்றிக்கொண்டு அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள். அவள் நெஞ்சமே இரண்டாகப் பிளந்துபோயிற்று. கால்கள் தரையில் நழுவின.
தன் கண்முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கும் காட்சி உண்மைதானா என்று நம்பமுடியாமல் அவள் அதிர்ந்து நிற்கையிலேயே, “கவனம் மொழி. வடிவாப் பிடி!” என்றுகொண்டு பின்புறம் திரும்பிய கேசிகனும் அப்போதுதான் அவளைப் பார்த்தான்.
அவனுக்கும் அதிர்ச்சிதான். அவளை அவன் அங்கே எதிர்பார்க்கவேயில்லை.
கணவனின் பார்வை தன் பின்னால் நிலைத்திருப்பதைக் கண்டு திரும்பிப் பார்த்த நிறைமொழியும் அப்போதுதான் நாவினியைக் கண்டாள்.
நம்பமுடியாத ஆனந்தமும் அதிர்ச்சியுமாக அவளைக் கூர்ந்துவிட்டு, “நவி! நீ நவிதானே? என்ர கடவுளே! எவ்வளவு பெரிய பிள்ளையா வளந்து நிக்கிறாய். வடிவா இருக்கிறாயடி. ஜெர்மன்ல இருந்து எப்ப வந்தனி? நீ வந்திருக்கிறாய் எண்டு ஒருத்தரும் சொல்லேல்லயே.” என்று ஆனந்தமாகப் படபடத்தபடி அவளிடம் வந்தாள் நிறைமொழி.
நாவினியால் பேச முடியவில்லை. தரையில் விழுந்த மீனாய் உள்ளம் துடித்துக்கொண்டிருந்தது. அடி வயிற்றிலிருந்து பொங்கிக்கொண்டு வந்த அழுகையை மறைக்க, நடுங்கிய உதடுகளால் சிரமப்பட்டுப் புன்னகைக்க முயன்றாள்.
“நவி? அழுறியா என்ன?” செக்கச் சிவந்துவிட்ட அவள் முகத்தையும் கலங்கிக்கிடந்த கண்களையும் கண்டுவிட்டுக் குழப்பத்துடன் வினவினாள் நிறைமொழி.
இல்லை என்று தலையசைத்தவளின் பார்வை, இது நீயா என்று நம்ப முடியா வலியையும் வேதனையையும் சுமந்து கேசிகனைத் தொட்டு வந்தது. அவனுக்கும் தன்னைச் சமாளித்துக்கொள்வது இலகுவாய் இல்லை. ஆனாலும் முகத்தைக் கடுமையாக மாற்றிக்கொண்டு, “மொழி வா! நேரமாகுது.” என்று அழைத்தான்.
“கேசி, இவள் நவி. மறந்திட்டீங்களா? உங்கட மாமா வீட்டுக்குப் பக்கத்தில இருந்தாவே. நீங்க படிப்பிச்ச உங்கட பெட்டச்சி.” அவளின் தோற்ற மாற்றத்தினால் அவனால் இனம்காண முடியவில்லையோ என்றெண்ணி அவளை அவனுக்கு நினைவூட்டினாள் நிறைமொழி.
நாவினிக்குச் சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்து வந்தன. அவளை அவனிடம் ஒருவர் அறிமுகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாளே.
“ஓ! அவாவா? வெளிநாடு போனதும் ஆளே மாறிட்டா.” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, “எப்பிடி இருக்கிறீங்க நவி, நல்லாருக்கிறீங்களா?” என்றான் அவளிடம்.
கண்ணீரும் புன்னகையும் ஒருங்கே தோன்ற ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தாள் நாவினி. அந்த விதி அவளை எப்படியான இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது? அவளுக்குத் தன் குரலில் நம்பிக்கை இல்லாமல் போனதில் நன்றாக இருக்கிறேன் என்று தலையை அசைத்தாள்.
“சந்தோசம். பிறகு பாப்பமன். இப்ப மொழியை டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போகோணும்.” என்று அவளை மிக நாசுக்காகக் கத்தரித்துவிட்டு, “மொழி வந்து ஏறு, நேரமாகுது.” என்றான் மனைவியிடம்.
“இல்லாட்டி வீட்டை போறியா நவி? மாமி வீட்டுலதான் இருக்கிறா.” ஏனோ அவளை அப்படியே விட்டுவிட்டுப் போக மனம் வராமல் சொன்னாள் நிறைமொழி.
“இல்ல… இல்லை அக்கா. அப்பம்மா மோசம் போய்ட்டா. அதுக்குத்தான் வந்தனாங்க. நான் அங்க போகோணும். இன்னொரு நாளைக்கு வாறனே.” எப்படிக் கோர்வையாகச் சொன்னாளோ தெரியாது. ஆனால் சமாளித்தாள்.
“ஓ! சொறியடா. எங்களுக்கு இது தெரியாதம்மா. எல்லாம் முடிஞ்ச பிறகு ஒரு நாளைக்குக் கட்டாயம் வீட்டுக்கு வா. இப்ப உண்மையாவே எனக்கு நேரமாயிற்றுது. வாறன் போயிற்று.” என்று அவள் கரம் பற்றிச் சொல்லிவிட்டுப் போனாள் அவள்.
எது உந்தியது என்று தெரியாது, “மொழி அக்கா!” என்று அழைத்து அவளை நிறுத்தினாள். திரும்பிப் பார்த்தவளிடம், “எப்ப கலியாணம் நடந்தது?” என்று விசாரித்தாள்.
முகம் பளீர் என்று மலர்ந்து சிரிக்க, “போன வருசம் நடந்தது. நடந்து எட்டு மாதமாகுது.” என்று பதில் சொன்னாள் அவள்.
பார்வை அவனிடம் பாய்ந்துவிடாமல் இருக்கப் பெரும் பாடு பட்டபடி, “அப்ப நீங்க ரெண்டுபேரும் நியூ கப்பிள். ரெண்டு பேருக்கும் ஹப்பி மேரீட் லைஃப் அக்கா.” என்று வாழ்த்திவிட்டு வந்துவிட்டாள்.
அதன் பிறகு அவளின் அப்பம்மா வீட்டை விட்டு அவள் வெளியில் வரவேயில்லை. வருவதற்கு தைரியம் வரவில்லை. கண்ணீரிலேயே கரைந்தாள்.
கேசிகனோடான தொடர்பு முற்றிலுமாக அறுந்து மூன்று வருடங்களாகியிருந்தன. எப்படி அவன் பற்றிய ஒரு செய்தி கூடத் தெரியாமல் வாழ்ந்தால் என்றே அவளுக்குத் தெரியாது. சிறகொடிந்த பறவையைப் போல்தான் அவள் நாள்கள் நகர்ந்திருந்தன.
உள்ளார்ந்து மகிழ்ந்து வாழ்ந்தாளா என்றால் இல்லை. காலங்கள் ஓடின. அந்த ஓடிய காலத்தில் ஜெர்மன் நாட்டு மொழியைப் படிப்பதும், பாடசாலையை முடித்துக் கல்லூரியில் சேர்வதும் அவளின் கடமைகளாக இருந்தன. அவற்றைத் திறம்படவே செய்தாள்.
இப்படி இருக்கையில்தான் நாகரத்தினத்தின் அன்னை காலமானார். ஊருக்கு உடனேயே புறப்பட்ட மனிதர், வீட்டுப் பிரச்சனையையும் என்னவென்று பார்க்க எண்ணினார். அதற்கு நாவினியையும் அழைத்துச் செல்ல வேண்டும்.
அதுவரையில் நாவினியும் கேசிகனும் கடிதத் தொடர்பில் இருந்து, பிறகு நாளாக நாளாக அது விடுபட்டுப் போயிற்று என்றுதான் நாகரத்தினத்துக்குத் தெரியும். மேலதிகமாக அவரிடம் எதையும் அபிராமி சொல்லப்போகவில்லை.
அபிராமிக்கு முதலில் அவளை அங்கே அனுப்புவதில் உடன்பாடில்லை. அதே நேரத்தில் ஊருக்குப் போகிறபோது வீட்டு விசயத்தையும் பார்த்துக்கொண்டு வர நினைப்பது மிக நல்ல யோசனையாகவே பட்டது.
அதைவிட இனி அவள் அடுத்தடுத்துத் தன் வாழ்வின் படிநிலைகளை நோக்கி நகரவேண்டியவள். அதற்கு இந்தப் பயணம் நிச்சயம் உதவும் என்று நம்பிச் சம்மதித்தார்.
இதை அறிந்த நாவினியின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வடிக்க முடியாது. ஒரு வார்த்தை அவன் பற்றிய செய்தி கிட்டாதா என்று தவித்துக்கொண்டிருந்தவள். இன்னும் சில நாள்களில் அவனையே பார்க்கப்போகிறாள் என்றால் எப்படி இருக்கும்?
மெதுவாக நழுவித் தன் அறைக்குள் நுழைந்துகொண்டவள் சந்தோசத்தில் சத்தமில்லாமல் துள்ளிக் குதித்தாள். அவனைப் பார்க்கப் போகிறாள். அவளுடைய அவனை, அவளின் நாயகனை, அவளின் கேசியைப் பார்க்கப்போகிறாள். சிரிப்பு, சந்தோசம், அழுகை என்று எல்லா வகையான உணர்வுகளும் கலந்துகட்டி வந்தன.
அன்று பதினேழு வயதில் புரிந்தும் புரியா உணர்வுகளைச் சுமந்து அவனையே சுற்றிய மனம், இன்று அவனைக் காதலின் நாயகனாக வரித்து, கண்ட கனவுகளை எல்லாம் ஒன்றைக் கூட மிச்சம் விடாமல் நெஞ்சினுள் சேமித்து வைத்திருக்கிறதே. அதையெல்லாம் அவனிடம் கொட்டப்போகிறாள்.
எப்படி இருப்பான்? அவளுக்கே இருபத்தி மூன்று என்கையில் அவன் இருபத்தி எட்டினைத் தொட்டவன். முழுமையான ஆண். அப்போதே நல்ல உயரம். இப்போது இன்னும் நன்றாக வளர்ந்து, அதற்கு ஏற்ற உடற்கட்டோடு, மீசை தாடி என்று இருப்பானாக இருக்கும். கற்பனையில் நினைக்கையிலேயே அவள் நெஞ்சினுள் என்னென்னவோ உணர்வுகள் பொங்கின.
இந்த உணர்வுகளின் தளம்பல் கொஞ்சமும் குறையாமல் இலங்கை சென்று இறங்கினாள். நேராக அப்பம்மா வீட்டுக்குத்தான் போனார்கள். நாகரத்தினம் ஒற்றை மகன் என்பதில் அவர்தான் கொள்ளி வைத்தார். அதில் எட்டாம் நாள் காரியம் ஆகாமல் அவரை வெளியில் செல்ல விடவில்லை.
நாவினியால் அப்படி வீட்டுக்குள்ளேயே இருக்க முடியவில்லை. ஒரே ஊரில் இருக்கிறாள். பதினைந்து நிமிட சைக்கிள் பயணத்தில் அவனைப் பார்த்துவிடலாம் என்கையில் எப்படி இருப்பது?
மூன்று நாள்கள் முடிந்ததும், “அப்பா, சும்மா வெளில போயிட்டு வரட்டா? என்ர ஃபிரெண்ட்ஸ பாக்கோணும் மாதிரி இருக்கு.” என்று தந்தையிடம் கேட்டு அனுமதி பெற்றுக்கொண்டு, பக்கத்து வீட்டு அக்காவின் சைக்கிளில் புறப்பட்டுவிட்டாள்.
அவர்களின் வீடு இருக்கும் பகுதிக்குத் தனியாகப் போக வேண்டாம் என்று நாகரத்தினம் சொல்லியிருந்தார். பரமேஸ்வரனோடு முறுகல் நிலையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் பெண் பிள்ளை அவளைத் தனியாக அனுப்ப அவருக்கு விருப்பமில்லை. ஆனால், அவர்கள் வீட்டுத் தெருவுக்குப் போக வேண்டும் என்கிற ஆசையிலேயே வந்தவள் என்ன செய்வாள்?
அவர்களின் தெரு நேராக வந்தால் ஒரு நாற்சந்தி. அந்த நாற்சந்தியிலிருந்து எங்கும் திரும்பாமல் திரும்பவும் நேராக வந்தால் பிரேமாவின் சீதனக்காணியைப் பார்க்கலாம். இத்தனை வருட இடைவெளியில் அங்கு வீட்டைக் கட்டியிருப்பானா, தன் அன்னையோடு குடிவந்திருப்பானா என்று அறியும் ஆவல் உந்தியதில் அவர்கள் வீட்டின் தெருப்பக்கமாக சைக்கிளை விடாமல் பிரேமாவின் சீதனக்காணி இருக்கும் தெருவுக்கு விட்டாள்.
இந்த ஐந்து வருட இடைவெளியில் சின்ன சின்னதாகவும் பெரிது பெரிதாகவும் நிறைய மாற்றங்கள். அங்கங்கே இலேசாகத் தடுமாறினாலும் சரியாகப் பிரேமாவின் சீதனக் காணி இருக்குமிடத்துக்கு வந்து சேர்ந்தாள்.
பார்த்தால் மதில் வைத்த வீடே கட்டியிருந்தான் அவன். ஆனால், பெரிய கேட்டினை தாங்கி நின்ற தூண்களில் ஒன்றில் ‘நிறைமொழி இல்லம்’ என்று இருக்கக் கண்டு குழம்பிப்போனாள். அந்தப் பெயர் வேறு நெருடியது.
இது அவர்கள் வீடு இல்லையோ, காணியை விற்றுவிட்டார்களோ? ஆவலாக உள்ளே போகப் போனவள் யோசித்தபடி தேங்கி நின்றாள். இல்லை, அவள்தான் அவர்களின் காணி என்று மாறி வந்துவிட்டாளா என்று நாளா பக்கமும் விழிகளைச் சுழற்றி அங்கிருந்த வீடுகளை ஆராய்ந்தாள்.
அப்போது அந்த நிறைமொழி இல்லத்தின் கேட்டின் ஒரு கதவு மட்டும் திறக்கப்பட்டது. பார்வையை அங்கே திருப்பினாள். இலேசாக மேடிட ஆரம்பித்த வயிற்றுடன் ஒரு பெண் வெளியில் வந்தாள்.
‘அச்சோ! இது நிறை அக்கா! அப்ப இது அவான்ர வீடா?’ அந்தப் பெண் மயூரனின் தங்கை நிறைமொழி என்று அவள் இனம் கண்டு முடிப்பதற்குள் பைக்கில் வெளியே வந்தான் அவன். அவளுடைய கேசிகன்.
ஆனந்த அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து நின்றுவிட்டாள். கண்கள் பனிக்க, முகம் அப்படியே பூவாக மலர அவனிடம் ஓடப்போனவள் அடுத்து நடந்த நிகழ்வில் பிரேக்கிட்டது போன்று அப்படியே நின்றாள்.
அங்கே நிறைமொழி அவன் தோளைப் பற்றிக்கொண்டு அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள். அவள் நெஞ்சமே இரண்டாகப் பிளந்துபோயிற்று. கால்கள் தரையில் நழுவின.
தன் கண்முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கும் காட்சி உண்மைதானா என்று நம்பமுடியாமல் அவள் அதிர்ந்து நிற்கையிலேயே, “கவனம் மொழி. வடிவாப் பிடி!” என்றுகொண்டு பின்புறம் திரும்பிய கேசிகனும் அப்போதுதான் அவளைப் பார்த்தான்.
அவனுக்கும் அதிர்ச்சிதான். அவளை அவன் அங்கே எதிர்பார்க்கவேயில்லை.
கணவனின் பார்வை தன் பின்னால் நிலைத்திருப்பதைக் கண்டு திரும்பிப் பார்த்த நிறைமொழியும் அப்போதுதான் நாவினியைக் கண்டாள்.
நம்பமுடியாத ஆனந்தமும் அதிர்ச்சியுமாக அவளைக் கூர்ந்துவிட்டு, “நவி! நீ நவிதானே? என்ர கடவுளே! எவ்வளவு பெரிய பிள்ளையா வளந்து நிக்கிறாய். வடிவா இருக்கிறாயடி. ஜெர்மன்ல இருந்து எப்ப வந்தனி? நீ வந்திருக்கிறாய் எண்டு ஒருத்தரும் சொல்லேல்லயே.” என்று ஆனந்தமாகப் படபடத்தபடி அவளிடம் வந்தாள் நிறைமொழி.
நாவினியால் பேச முடியவில்லை. தரையில் விழுந்த மீனாய் உள்ளம் துடித்துக்கொண்டிருந்தது. அடி வயிற்றிலிருந்து பொங்கிக்கொண்டு வந்த அழுகையை மறைக்க, நடுங்கிய உதடுகளால் சிரமப்பட்டுப் புன்னகைக்க முயன்றாள்.
“நவி? அழுறியா என்ன?” செக்கச் சிவந்துவிட்ட அவள் முகத்தையும் கலங்கிக்கிடந்த கண்களையும் கண்டுவிட்டுக் குழப்பத்துடன் வினவினாள் நிறைமொழி.
இல்லை என்று தலையசைத்தவளின் பார்வை, இது நீயா என்று நம்ப முடியா வலியையும் வேதனையையும் சுமந்து கேசிகனைத் தொட்டு வந்தது. அவனுக்கும் தன்னைச் சமாளித்துக்கொள்வது இலகுவாய் இல்லை. ஆனாலும் முகத்தைக் கடுமையாக மாற்றிக்கொண்டு, “மொழி வா! நேரமாகுது.” என்று அழைத்தான்.
“கேசி, இவள் நவி. மறந்திட்டீங்களா? உங்கட மாமா வீட்டுக்குப் பக்கத்தில இருந்தாவே. நீங்க படிப்பிச்ச உங்கட பெட்டச்சி.” அவளின் தோற்ற மாற்றத்தினால் அவனால் இனம்காண முடியவில்லையோ என்றெண்ணி அவளை அவனுக்கு நினைவூட்டினாள் நிறைமொழி.
நாவினிக்குச் சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்து வந்தன. அவளை அவனிடம் ஒருவர் அறிமுகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாளே.
“ஓ! அவாவா? வெளிநாடு போனதும் ஆளே மாறிட்டா.” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, “எப்பிடி இருக்கிறீங்க நவி, நல்லாருக்கிறீங்களா?” என்றான் அவளிடம்.
கண்ணீரும் புன்னகையும் ஒருங்கே தோன்ற ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தாள் நாவினி. அந்த விதி அவளை எப்படியான இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது? அவளுக்குத் தன் குரலில் நம்பிக்கை இல்லாமல் போனதில் நன்றாக இருக்கிறேன் என்று தலையை அசைத்தாள்.
“சந்தோசம். பிறகு பாப்பமன். இப்ப மொழியை டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போகோணும்.” என்று அவளை மிக நாசுக்காகக் கத்தரித்துவிட்டு, “மொழி வந்து ஏறு, நேரமாகுது.” என்றான் மனைவியிடம்.
“இல்லாட்டி வீட்டை போறியா நவி? மாமி வீட்டுலதான் இருக்கிறா.” ஏனோ அவளை அப்படியே விட்டுவிட்டுப் போக மனம் வராமல் சொன்னாள் நிறைமொழி.
“இல்ல… இல்லை அக்கா. அப்பம்மா மோசம் போய்ட்டா. அதுக்குத்தான் வந்தனாங்க. நான் அங்க போகோணும். இன்னொரு நாளைக்கு வாறனே.” எப்படிக் கோர்வையாகச் சொன்னாளோ தெரியாது. ஆனால் சமாளித்தாள்.
“ஓ! சொறியடா. எங்களுக்கு இது தெரியாதம்மா. எல்லாம் முடிஞ்ச பிறகு ஒரு நாளைக்குக் கட்டாயம் வீட்டுக்கு வா. இப்ப உண்மையாவே எனக்கு நேரமாயிற்றுது. வாறன் போயிற்று.” என்று அவள் கரம் பற்றிச் சொல்லிவிட்டுப் போனாள் அவள்.
எது உந்தியது என்று தெரியாது, “மொழி அக்கா!” என்று அழைத்து அவளை நிறுத்தினாள். திரும்பிப் பார்த்தவளிடம், “எப்ப கலியாணம் நடந்தது?” என்று விசாரித்தாள்.
முகம் பளீர் என்று மலர்ந்து சிரிக்க, “போன வருசம் நடந்தது. நடந்து எட்டு மாதமாகுது.” என்று பதில் சொன்னாள் அவள்.
பார்வை அவனிடம் பாய்ந்துவிடாமல் இருக்கப் பெரும் பாடு பட்டபடி, “அப்ப நீங்க ரெண்டுபேரும் நியூ கப்பிள். ரெண்டு பேருக்கும் ஹப்பி மேரீட் லைஃப் அக்கா.” என்று வாழ்த்திவிட்டு வந்துவிட்டாள்.
அதன் பிறகு அவளின் அப்பம்மா வீட்டை விட்டு அவள் வெளியில் வரவேயில்லை. வருவதற்கு தைரியம் வரவில்லை. கண்ணீரிலேயே கரைந்தாள்.