VIN - 25
அவர்களருகில் வந்த அபித்ரன்,
"டேய் மாதவா!! என்னடா இதெல்லாம்? " முகத்தை அசூசையாக வைத்துக்கொண்டு குரலில் அதிர்ச்சியை காட்டி கேட்டதில், கையில் இருந்ததை அனிச்சை செயலாக மேசையில் வைத்துவிட்டான் மாதவன்.
மாதவனுக்கும் இந்த விஷயத்தில் துளியும் உடன்பாடுஇல்லை. வேண்டுமாயின், அளப்பரிய பிரியத்திற்குரிய அம்மா மேல்கூட சத்தியம் செய்து கூறுவான்.
என்னசெய்வது, ஆருயிர் நண்பன் சரணுக்கு துணை போக வேண்டிய கட்டாயத்தில் அவனது குழுவினருடன் இழுபட்டு வந்து நிற்கிறான். அன்னைக்குத் தெரிந்ததோ கொலைதான் விழும்.
"மனோ டேய்!! இஞ்ச.. இவர்ட முகத்தப்பாரன். எங்களையெல்லாம் பார்க்க அரியண்டமா இருக்காம் அவருக்கு.." அபியை சுட்டிக்காட்டி சரண் நக்கலாய் சொல்ல
"அன்டைக்கு எங்களோட சேந்து சிகரெட் அடிக்கக்குள்ள கேவலமா இருக்கல்லையோ?" எகத்தாளமாய் கேட்டான் மனோ என விளிக்கப்பட்டவன்.
"நான் கேட்டது மாதவன்ட்ட."
நண்பனிடமே பார்வையைப் பதித்தபடி சொன்னான் அபி.
அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மாதவன் கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.
அபித்ரனும் மாதவனும் வெவ்வேறு வகுப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
ஆரம்பத்தில் பெரிதாகப் பழக்கம் இல்லை என்றாலும், காற்பந்தாட்டம் இருவரையும் நெருக்கமாக்கியிருந்தது.
பாடசாலை உதைபந்தாட்டக் குழுவில் இணைந்த பிறகு, டீம் லீடரான மாதவனை அபி ஒரு தனி மதிப்புடனும் பிரியத்துடனும் பார்த்தான். அவனது மட்டில்லாத் திறமையை ஆகர்ஷிக்கும் ஒரு விசிறி என்று கூட சொல்லலாம்.
போகப் போக மாதவனுக்கும் அவன் மேல் ஒரு பிரத்யேக பாசம் ஏற்பட்டிருந்தது.
எது எப்படி இருந்தாலும், மாதவன் இவர்களுடன் சேர்ந்து இந்த இழி செயலை செய்வதற்கு உடந்தையாக இருப்பதை அபித்ரனால் ஏற்க முடியவில்லை.
" அபி! நீ போடா.. இங்க பாரு, சத்தியமா நான் ஒன்டும் உள்ளுக்க எடுக்கல்ல." மாதவன் எப்படியாவது அவனை அனுப்பிவிட முனைந்தான்.
"ஓஹ்!! ஏன் வேணுமெண்டா நீங்களும் உங்கட யாலுவாவோட ஜோடி சேந்து போகலாமே..?" சரண் குரலில் வெளிப்படையான எரிச்சல் கலந்த நக்கல்.
"ஓம். போகத்தான் போறம். குரு அண்ணா.. இல்லாட்டி, சேர்.. யாராவது ஒரால் வரட்டும். நின்டு சொல்லிட்டுப் போறம்." அபியின் குரல் இறுகியது.
அதை கேட்டதும் "ஐயோ அபி! அதெல்லாம் வேணாம். இது சும்மா.. ஒருக்கா என்டுதான் . அப்படித்தானே... சொல்லுங்களண்டா.." ஆன்டனி முகம் வெளிற சமாளித்தான்.
"ஏய்!! அப்படி விசர் வேலை எல்லாம் பார்த்துறாத" அபியிடம் சீறினான் சரண்.
"என்ன சொன்னாலும் சரி. இன்டைக்கு சொல்லத்தான் போறன்....
சிகரெட் குடிச்சி மாட்டுப்பட்ட நேரத்துலயே எவ்வளோ அடி வாங்கினம்." என்றுவிட்டு, அவர்கள் மளமளவென ஜீன்ஸ் பாக்கெட்க்குள் திணித்தவற்றை சுட்டிக்காட்டி,
"இதெல்லாம் என்ன முதல்? எங்கால கிடச்சது? பயம் இல்லையாடா உங்களுக்கெல்லாம்?" வார்த்தைகள் கடுமையாக வந்தாலும், குரலில் நடுக்கம் இருந்தது.
அபித்ரனுக்கோ ஏதோ தான் செய்ததைப் போலப் பயமாக இருந்தது. சிகரெட் விஷயம் வீட்டுக்குத் தெரிந்தபோது வாங்கிய அடி இன்னும் மறக்கவில்லை.
இதைவிட பெரிய பிரச்சினையில் சிக்கினால் என்ன ஆகும் என்ற பதற்றம் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
ஆனாலும் அமைதியாக விலகிப் போகவும் முடியவில்லை.
அபித்ரன் வகுப்பில் பெரிய ரவுடி ரகமெல்லாம் இல்லை. எடுப்பார் கைப்பிள்ளை என்று கூட சொல்லலாம். இவர்கள் சற்று ஏற்றிவிட்டால் சுர்ரென மண்டைக்கேறும் ரகம். அருளுடன் சேர்ந்தால் மட்டும் கொஞ்சம் கெத்தாகச் சுற்றித்திரிவான். அவ்வளவுதான்.
ஆனால் இன்று...
அவர்கள் எவ்வளவு சொல்லியும் அசையாமல், தங்களுக்கு எதிராக ஒரேபிடியில் நின்றவனைப் பார்க்க, உண்மையிலேயே போய் சொல்லிவிடுவானோ என்ற பயம் அனைவருக்குள்ளும் முளைக்கத் தொடங்கியது. இலேசாக வியர்வை அரும்பியது.
சரண் மனோவிடம் கண்ணைக் காட்டிவிட்டு, தன் போனை எடுத்துக் கொண்டு சற்றுத்தள்ளி சென்றான்.
மற்றவர்கள் அபியிடம் 'சொல்லவேண்டாம்' என்று வெவ்வேறு விதமாய் கேட்டுப்பார்க்க, அவன் ஒரேடியாக மறுதலித்து நின்றான்.
அந்த நேரத்தில் தான் குரு உள் நுழைந்தான். அந்த டியூஷன் சென்டரில் உதவியாளனாக வேலை பார்ப்பவன்.
வேளா வேளைக்கு சென்டரைத் திறப்பது, பூட்டுவது, வகுப்பறைகளைச் சுத்தம் செய்வது, மாதாந்திர கட்டணங்களை வசூலித்து பதிவு செய்வது, வரவுகளைப் பார்ப்பது, பரீட்சைப் புள்ளிகளை டைப் பண்ணி அறிவிப்புப் பலகையில் ஒட்டுவது என சென்டரின் பெரும்பாலான வேலைகளையும் கவனிப்பவன் குரு.
அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அவன் வெறும் உதவியாளன் அல்ல. பிரியத்திற்குரிய 'குரு அண்ணா.'
அந்தச் சென்டருக்கு வரும் மாணவர்களின் குடும்பப் பின்னணி முதல் நட்பு வட்டம் வரை பல விஷயங்கள் குருவுக்கு அத்துப்படி.
குருவின் தலையைக் கண்டதும் அபித்ரன் அவசரமாக ஓடிச்சென்றான்.
"குருண்ணா! அவங்கட பொக்கட், பேக் எல்லாத்தையும் ஒருக்கா செக் பண்ணுங்கவன். முழுக்க ட்ரக்ஸ்... சேருக்கு கெதிய கோல் எடுங்கண்ணா!"
"சரி... சரி... முதல்ல நீ இங்க வா," என்று அங்கிருந்த மர வாங்கிலில் அபித்ரனை அமரவைத்தான் குரு.
தோளில் கைபோட்டு அமைதிப்படுத்துவது போல,
"ஏதோ தெரியாம செஞ்சிட்டானுகள் டா. ஒருக்கா தானே... விட்ருவம். சேர்ட்ட எல்லாம் கொண்டு போகவேணாம். சரியா?" என்று பொறுமையாகக் கேட்பவனை குழப்பமாக பார்த்துவிட்டு,
"என்னண்ணா நீங்க?? நானே போய் சேர்ட சொல்றன் அப்ப." என்றான் முடிவாய்.
குருவின் முகம் இறுகியது. எழுந்து மற்ற நால்வரிடமும் சென்றான்.
பீதியால் பேதலித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களை நெருங்கி, "அறஞ்சனென்டா..." உச்சகட்ட கோபத்தில் கையை உயர்த்தியவன், "இவன ஏன்டா சேர்த்தனீங்க மொக்குகளே!! புத்திசாலித்தனமா தப்பிக்கவும் தெரியல. என்னையும் சேர்த்து மாட்டி விட்டுதுகள். சனியனுகள்..." கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்பினான் குரு.
அடுத்த கணமே திரும்பி அபித்ரனிடம் வந்தவன்,
"டேய்! ஆம்புளப்பிள்ள தானே நீ? என்ன அது... பெட்டையல் மாதிரி கோள்மூட்டுறதிலயே நிக்கிறாய்?"
அவன் குரல் உயர்ந்ததும் அபித்ரனின் கண்கள் கலங்கின.
ஆனால் பின்வாங்கவில்லை.
"நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் என்டதையும் சேத்து மாட்டிக்குடுப்பன்."என்ற அபித்ரனின் குரல் நடுங்கினாலும், வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாய் வெளிவந்தன.
ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்த குரு பிறகு எள்ளலாக நகைத்தான்.
"சரி... மாட்டிக்குடு." அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவன்,
"நானும் மாட்டிக்குடுக்கிறன். புது வருஷக் கொண்டாட்டமன்டைக்கு அருள காவலுக்கு வச்சுக்கொண்டு, கிளாஸ் பின்பக்கமா போய்... அது... இவர்ட ஆள்... அந்தப் பெட்டைட பேர் என்னடா மாதவா?" கேட்டுவிட்டு குரு அவனைப் பார்க்க, விடை கூறாது கலங்கிப்போன முகத்துடன் நண்பனைப் பார்த்தான் மாதவன்.
"மதுஷ்ணவி.. மது." பதில் சொன்னது மனோ.
"ஆஹ்!! பின்பக்கமிருந்த CCTVயையும் மறந்து.. அவளோட சரியான கத நம்மட அபி. கத ருசில அஞ்சும்கெட்டு அறிவும்கெட்டுப் போச்சுப் போல தம்பியருக்கு. கடைசில டைரி மில்க் வேற குடுத்தவர் சேர். போ அபி.. நீ போய் மாட்டிக்குடு . நான் மதுட சித்தப்பாட நம்பருக்கு டைரி மில்க் வீடியோவ அனுப்பி வைக்கிறேன். போ.. போ.. ஓடு." குரு போனை எடுத்துக் கொண்டே சொல்ல , மாதவனைத் தவிர மற்றவர்கள் முகத்தில் சின்னதாய் பிரகாசம்.
அந்த நொடியே அபித்ரனின் முகத்திலிருந்த தைரியம் கரைந்தது.
தொண்டை வறண்டு போனது.
எச்சிலை விழுங்கிக்கொண்டான்.
"என்னடா? போகலையா?" குருவின் குரலில் வெற்றி வெளிப்பட்டது.
"குருண்ணா... கொஞ்சம் சும்மா இருங்களன். அவன் யார்ட்டையும் ஒன்டும் சொல்ல மாட்டான். அபி, வாயத்திறந்து சொல்லன்டா..."
மாதவன் அவசரமாக அபித்ரனின் தோளைத் தொட்டான்.
"அண்ணா ப்ளீஸ்..." தொடங்குகையிலே
அபித்ரனின் குரல் உடைந்துவிட்டது.
"அப்படி எதுவும் செஞ்சிறாதிங்கண்ணா. நான்... நான் யார்ட்டையும் சொல்ல மாட்டேன்."
அழாத குறையாக கெஞ்சினான் அபி.
"ஆஹ்!! அது..."
என்று அலட்சியமாகச் சிரித்த குரு,
"எங்க... அபிட கையில ரெண்டு சாமானை குடுங்க. ஒரு போட்டோ எடுத்து வெப்பம். யாருக்கு தெரியும்...பிரேக்-அப் ஆனா மனசு மாறினாலும் மாறிரும்."
அவன் பேச்சில் ஒரு நக்கல் கலந்த அழுத்தம் இருந்தது.
அருகிலிருந்தவர்களிடம் இருந்து இரண்டு பாக்கெட்டுகளை வாங்கி அபித்ரனின் கையில் திணித்து, ஒரு புகைப்படம் எடுத்தான்.
"ஏய்! நில்லு. நில்லு."
மீண்டும் ஒன்று எடுத்துவிட்டே அவனை விடுவித்தான்.
ஒரு வார்த்தையும் பேசாமல்,
வலி நிறைந்த கண்களினால் தன்னை ஏமாற்றமாய் பார்த்துவிட்டு சென்ற நண்பனின் முகத்தை மாதவனால் என்றுமே மறக்க முடியாது.
அதற்குப் பிறகு அபித்ரன், மாதவனுடன் பேசுவதே இல்லை. சரண் மற்றும் மற்றவர்களுடன் கூட ஏதோ பேசுவான்.
மாதவனின் மன்னிப்புகளும் மன்றாடல்களும் அபியின் மனதை கரைக்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் அவனும் முயற்சிப்பதை நிறுத்திவிட்டான்.
'கொஞ்ச நாள் போனால் சரியாகிடும்...'
என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் கொஞ்ச நாட்களில் அவன் முழுதாகப் போய்விட்ட செய்திதான் கிடைத்தது.சில்லு சில்லாய் நொறுங்கிப் போனான் மாதவன்.
நண்பனின் விபரீதமுடிவுக்கு தானும் ஓர் காரணம் என்ற உண்மையை அவனால் மாற்றவும், கழிவிரக்கம் கொண்டு தன்னைத்தானே மன்னிக்கவும் முடியாது.
இப்போதெல்லாம் ஃபுட்பால் விளையாடுவதில் விருப்பமே இல்லை. டீம் லீடர் ஆயிற்றே.. கடமைக்கு செல்கிறான்.
அபித்ரனின் பேச்சில் 'ஷோபிஅக்கா..' எனும் நபர் அடிக்கடி வந்து போவார்.
இறப்பு வீட்டில் வைத்து அவள் அழுதகாட்சி, மாதவனை வெகுவாய் பாதித்திருந்தது. எந்த அளவுக்கென்றால், அவளிடம் மட்டுமாவது உண்மையை சொல்லி விடுவோமா என்று சரணிடம் கேட்கும் அளவிற்கு. சரண் விட்டால் தானே...
சரண். நண்பன் என்ற உறவுக்கும் மேற்பட்டவன். மாதவனுக்கு சகோதரனைப் போன்றவன்.
சரணின் தந்தை, 'கமலசேகர்' மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற ஓர் சட்டத்தரணி. இப்போது அரசியலிலும் இறங்கிவிட்டார்.
மாதவனின் அப்பா அவன் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். கமலசேகரின் வீட்டில்தான் ஏதோ வேலை செய்தாராம். அவர் இறந்ததுமே மாதவனின் அன்னையை அந்த வீட்டில் வேலைக்கு எடுத்துக் கொண்டார்களாம். பின்னர் தங்க இடமில்லாமல் போன சமயம், அவர்களையும் அங்கேயே தங்கச்செய்தார்கள்.
மாதவன் பிறந்ததிலிருந்தே அந்த வீட்டில் தான். இந்த பதினாறு வருடங்களில் மாதவனுக்கு நினைவு தெரிந்து, ஒரு நாள் கூட இந்த வீட்டினரால் வேலைக்காரியின் மகனாக நடத்தப்பட்டதே இல்லை அவன்.
ஒருவேளை சிறுவயதில் ஏதேனும் பாரபட்சம் காட்டி இருக்கலாம். ஆனால் சரணின் உயிர் நண்பனான பிறகு, அவனை எப்படி நடத்தினார்களோ, அதே மாதிரி தான் மாதவனையும் நடத்தினார்கள்.
மாதவனும், சரண் “நில்” என்றால் நிற்பான். “உட்கார்” என்றால் உட்காருவான். தன் அன்னைக்கு பிடிக்காவிட்டாலும்...
என்னவோ அவனால் சரணின் வார்த்தைகளை மீற முடிவதில்லை.
கடைசியில் அபித்ரனின் விஷயத்திலும் 'வாய் திறக்க கூடாது' என்று அவனைக் கட்டிப்போட்டு விட்டானே.
மாதவனால் என்ன முயன்றும் அபியின் மறைவைக் கடந்து வர இயலவில்லை. குற்ற உணர்ச்சி பெரிய ஒரு முட்டுக்கட்டையாய் முன்னே நின்றது.
அன்று மைதானத்தில் ஷோபனாவைப் பார்த்ததுமே அவனையறியாமல் ஓடிவந்திருந்தான் . அருகில் சென்றபோது தான் அவள் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது. மாதவனுக்கும் தொண்டையை அடைத்தது.
அன்றிரவே இன்ஸ்டாகிராமில் அவளிடம் பெயரின்றி மன்னிப்பு வேண்டியிருந்தான்.
அபித்ரனின் அக்கா இப்போதெல்லாம் அடிக்கடி மைதானத்திற்கு வருகிறாள். சரணின் மறுப்பையும் மீறி அவளிடம் ஓரிரு வார்த்தைகளாவது பேசிவிடுவான். அதனால் அவனது மனநிலையில் ஒரு மண்ணாங்கட்டி மாற்றமும் ஏற்படவில்லை. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகிப் போனது அவன் கதையும்.
எப்போதும் போல இப்போதும் நடுஇரவில் தூக்கம் தொலைத்து எழுந்துநின்ற மாதவன், நடந்தவைகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து வேதனை தாளாமல் ஊமையாய் கண்ணீர் வடித்தான்.
***************
அந்த பாடசாலையின் முன்றலில் காலை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
“அடுத்த நிகழ்வாக லக்ஷிகா அவர்களின் உரை இடம்பெறும்” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு மாணவியிடம் ஒலிவாங்கி கையளிக்கப்பட்டது.
“அனைவருக்கும் வணக்கம்.”
சிறிய இடைவெளிக்குப் பிறகு பேசத் தொடங்கினாள்.
“நான் பேசப்போகும் தலைப்பு மிகவும் முக்கியமான ஒன்று. இன்றைய செய்திகளில் பெரும்பாலானவை ஒரே துயரத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள்… அவர்கள் எடுத்துக்கொள்ளும் விபரீத முடிவுகள் நம்மை தினமும் பதறவைக்கின்றன.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகில் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை சம்பவம் இடம்பெறுகிறது. ஒவ்வொரு சில வினாடிகளுக்கும் ஒரு தற்கொலை முயற்சி நடைபெறுகிறது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
நம் நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கும் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 50 தற்கொலைகள் இடம்பெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.தென் ஆசியாவில் தற்கொலை வீதம் அதிகமாக காணப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று எனவும் கூறப்படுகிறது.
பிரச்சினைகள் ஏற்படும் போது இலகுவில் மனம் புண்படும் தன்மையுடையவர்கள், அவற்றை தாங்க முடியாதவர்கள், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவர்கள், தங்களது பிரச்சினைகளுக்கு இதுவே ஒரே நிரந்தரத் தீர்வு என்று தவறாக நம்பி அந்த விபரீத முடிவை எடுக்கின்றனர்................."
இன்னும் அந்த தலைப்பைச் சார்ந்த பல விடயங்களை தனது உரையில் விவரித்துவிட்டு,
இறுதியாக குரலை தணித்து, அதில் வருத்தத்தை சற்று குலைத்து,
“சமீபத்தில் எங்கள் பாடசாலையையே சேர்ந்த அண்ணா ஒருவரும்… துரதிருஷ்டவசமாக இப்படியான ஒரு விபரீத முடிவை எடுத்திருந்தார். அவர் எப்போதும் மைதானத்தில் சிரிப்புடன் ஓடி விளையாடும், கால்பந்து அணியின் உயிராக இருந்த ஒரு மாணவர். நண்பர்களை உற்சாகப்படுத்தும் அவரது குரலும், அந்த சிரிப்பும் இன்னும் எங்கள் நினைவுகளில் உயிருடன் இருக்கின்றன.
இன்று அவரை இழந்துவிட்டோம் என்பது நம்ப முடியாத ஒரு உண்மையாகவே நம்மை வலிக்க வைக்கிறது. அவரது இழப்பு எங்கள் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்…!!
வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், பேசக்கூடிய ஒருவர் எப்போதும் இருக்கிறார் என்பதை நாம் மறக்கக் கூடாது.
மேலும்… எங்கள் நண்பர்களில் யாராவது மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்றால், அதை கவனிக்காமல் விடக்கூடாது. அவர்களுக்காக நாமும் ஒரு துணையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டியவளாக விடைபெறுகிறேன்.
நன்றி!!. வணக்கம்! "
என்றதோடு அவளது உரையை முடித்துக் கொண்டாள்...
கூட்டத்தில் நின்றிருந்த சில மாணவர்களின் முகம் இயல்பாகவே இறுகியது. சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்; பார்வையில் சொல்ல முடியாத ஒரு அசௌகரியம்.
அந்த சிலருள் அண்டனியும் அடக்கம்.
அண்டனி இதுவரை ஒருபோதும் காலை கூட்ட நிகழ்ச்சிகளை அந்த அளவுக்கு கவனமாகக் கேட்டதே இல்லை.
பொதுவாகவே, அப்படியான உரைகள் அவனுக்கு சலிப்பை மட்டுமே தரும். சில நிமிடங்களில் பார்வை வேறெங்கோ சிதறிவிடும்; நண்பர்களுடன் குசுகுசுப்புகள் தொடங்கிவிடும்.
ஆனால் இன்று…
அவன் அசையாமல் நின்றிருந்தான்.
ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்குள் ஆழமாக இறங்கியது. பயம் ஒரு பந்து போல உள்ளே உருண்டு பெரிதாகிக் கொண்டிருந்தது. கை கால்கள் தானாகவே உதறத் தொடங்க, நின்ற இடமே சுழலுவது போல மயக்கம் வந்தது.
அபித்ரனின் இறப்பு சம்பவம் கேட்டு அதிர்ந்த நொடி இதயம் எப்படி வேகமடுத்து துடித்ததோ, சரியாக அதைப்போலவே துடிக்க தொடங்கியது.
அதற்குப் பிறகு இரவுகள் அவனுக்கு எளிதாக இல்லை. இன்றுவரை தூங்கும்போது மின்விசிறியை எக்குத்தப்பாய் பார்த்துவிட்டாலே போதும்—யாருடைய இரு கால்களோ தலைக்கு மேல் தொங்குவது போல ஒருகாட்சி மனதில் திடீரென மிதந்து வந்துவிடும்.
அரங்கில் காலைக் கூட்டத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின.
அன்டணியின் இதயக் கூடத்தில் அடுத்தடுத்து நினைவுகள் நகரத் தொடங்கின.
அவர்களருகில் வந்த அபித்ரன்,
"டேய் மாதவா!! என்னடா இதெல்லாம்? " முகத்தை அசூசையாக வைத்துக்கொண்டு குரலில் அதிர்ச்சியை காட்டி கேட்டதில், கையில் இருந்ததை அனிச்சை செயலாக மேசையில் வைத்துவிட்டான் மாதவன்.
மாதவனுக்கும் இந்த விஷயத்தில் துளியும் உடன்பாடுஇல்லை. வேண்டுமாயின், அளப்பரிய பிரியத்திற்குரிய அம்மா மேல்கூட சத்தியம் செய்து கூறுவான்.
என்னசெய்வது, ஆருயிர் நண்பன் சரணுக்கு துணை போக வேண்டிய கட்டாயத்தில் அவனது குழுவினருடன் இழுபட்டு வந்து நிற்கிறான். அன்னைக்குத் தெரிந்ததோ கொலைதான் விழும்.
"மனோ டேய்!! இஞ்ச.. இவர்ட முகத்தப்பாரன். எங்களையெல்லாம் பார்க்க அரியண்டமா இருக்காம் அவருக்கு.." அபியை சுட்டிக்காட்டி சரண் நக்கலாய் சொல்ல
"அன்டைக்கு எங்களோட சேந்து சிகரெட் அடிக்கக்குள்ள கேவலமா இருக்கல்லையோ?" எகத்தாளமாய் கேட்டான் மனோ என விளிக்கப்பட்டவன்.
"நான் கேட்டது மாதவன்ட்ட."
நண்பனிடமே பார்வையைப் பதித்தபடி சொன்னான் அபி.
அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மாதவன் கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.
அபித்ரனும் மாதவனும் வெவ்வேறு வகுப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
ஆரம்பத்தில் பெரிதாகப் பழக்கம் இல்லை என்றாலும், காற்பந்தாட்டம் இருவரையும் நெருக்கமாக்கியிருந்தது.
பாடசாலை உதைபந்தாட்டக் குழுவில் இணைந்த பிறகு, டீம் லீடரான மாதவனை அபி ஒரு தனி மதிப்புடனும் பிரியத்துடனும் பார்த்தான். அவனது மட்டில்லாத் திறமையை ஆகர்ஷிக்கும் ஒரு விசிறி என்று கூட சொல்லலாம்.
போகப் போக மாதவனுக்கும் அவன் மேல் ஒரு பிரத்யேக பாசம் ஏற்பட்டிருந்தது.
எது எப்படி இருந்தாலும், மாதவன் இவர்களுடன் சேர்ந்து இந்த இழி செயலை செய்வதற்கு உடந்தையாக இருப்பதை அபித்ரனால் ஏற்க முடியவில்லை.
" அபி! நீ போடா.. இங்க பாரு, சத்தியமா நான் ஒன்டும் உள்ளுக்க எடுக்கல்ல." மாதவன் எப்படியாவது அவனை அனுப்பிவிட முனைந்தான்.
"ஓஹ்!! ஏன் வேணுமெண்டா நீங்களும் உங்கட யாலுவாவோட ஜோடி சேந்து போகலாமே..?" சரண் குரலில் வெளிப்படையான எரிச்சல் கலந்த நக்கல்.
"ஓம். போகத்தான் போறம். குரு அண்ணா.. இல்லாட்டி, சேர்.. யாராவது ஒரால் வரட்டும். நின்டு சொல்லிட்டுப் போறம்." அபியின் குரல் இறுகியது.
அதை கேட்டதும் "ஐயோ அபி! அதெல்லாம் வேணாம். இது சும்மா.. ஒருக்கா என்டுதான் . அப்படித்தானே... சொல்லுங்களண்டா.." ஆன்டனி முகம் வெளிற சமாளித்தான்.
"ஏய்!! அப்படி விசர் வேலை எல்லாம் பார்த்துறாத" அபியிடம் சீறினான் சரண்.
"என்ன சொன்னாலும் சரி. இன்டைக்கு சொல்லத்தான் போறன்....
சிகரெட் குடிச்சி மாட்டுப்பட்ட நேரத்துலயே எவ்வளோ அடி வாங்கினம்." என்றுவிட்டு, அவர்கள் மளமளவென ஜீன்ஸ் பாக்கெட்க்குள் திணித்தவற்றை சுட்டிக்காட்டி,
"இதெல்லாம் என்ன முதல்? எங்கால கிடச்சது? பயம் இல்லையாடா உங்களுக்கெல்லாம்?" வார்த்தைகள் கடுமையாக வந்தாலும், குரலில் நடுக்கம் இருந்தது.
அபித்ரனுக்கோ ஏதோ தான் செய்ததைப் போலப் பயமாக இருந்தது. சிகரெட் விஷயம் வீட்டுக்குத் தெரிந்தபோது வாங்கிய அடி இன்னும் மறக்கவில்லை.
இதைவிட பெரிய பிரச்சினையில் சிக்கினால் என்ன ஆகும் என்ற பதற்றம் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
ஆனாலும் அமைதியாக விலகிப் போகவும் முடியவில்லை.
அபித்ரன் வகுப்பில் பெரிய ரவுடி ரகமெல்லாம் இல்லை. எடுப்பார் கைப்பிள்ளை என்று கூட சொல்லலாம். இவர்கள் சற்று ஏற்றிவிட்டால் சுர்ரென மண்டைக்கேறும் ரகம். அருளுடன் சேர்ந்தால் மட்டும் கொஞ்சம் கெத்தாகச் சுற்றித்திரிவான். அவ்வளவுதான்.
ஆனால் இன்று...
அவர்கள் எவ்வளவு சொல்லியும் அசையாமல், தங்களுக்கு எதிராக ஒரேபிடியில் நின்றவனைப் பார்க்க, உண்மையிலேயே போய் சொல்லிவிடுவானோ என்ற பயம் அனைவருக்குள்ளும் முளைக்கத் தொடங்கியது. இலேசாக வியர்வை அரும்பியது.
சரண் மனோவிடம் கண்ணைக் காட்டிவிட்டு, தன் போனை எடுத்துக் கொண்டு சற்றுத்தள்ளி சென்றான்.
மற்றவர்கள் அபியிடம் 'சொல்லவேண்டாம்' என்று வெவ்வேறு விதமாய் கேட்டுப்பார்க்க, அவன் ஒரேடியாக மறுதலித்து நின்றான்.
அந்த நேரத்தில் தான் குரு உள் நுழைந்தான். அந்த டியூஷன் சென்டரில் உதவியாளனாக வேலை பார்ப்பவன்.
வேளா வேளைக்கு சென்டரைத் திறப்பது, பூட்டுவது, வகுப்பறைகளைச் சுத்தம் செய்வது, மாதாந்திர கட்டணங்களை வசூலித்து பதிவு செய்வது, வரவுகளைப் பார்ப்பது, பரீட்சைப் புள்ளிகளை டைப் பண்ணி அறிவிப்புப் பலகையில் ஒட்டுவது என சென்டரின் பெரும்பாலான வேலைகளையும் கவனிப்பவன் குரு.
அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அவன் வெறும் உதவியாளன் அல்ல. பிரியத்திற்குரிய 'குரு அண்ணா.'
அந்தச் சென்டருக்கு வரும் மாணவர்களின் குடும்பப் பின்னணி முதல் நட்பு வட்டம் வரை பல விஷயங்கள் குருவுக்கு அத்துப்படி.
குருவின் தலையைக் கண்டதும் அபித்ரன் அவசரமாக ஓடிச்சென்றான்.
"குருண்ணா! அவங்கட பொக்கட், பேக் எல்லாத்தையும் ஒருக்கா செக் பண்ணுங்கவன். முழுக்க ட்ரக்ஸ்... சேருக்கு கெதிய கோல் எடுங்கண்ணா!"
"சரி... சரி... முதல்ல நீ இங்க வா," என்று அங்கிருந்த மர வாங்கிலில் அபித்ரனை அமரவைத்தான் குரு.
தோளில் கைபோட்டு அமைதிப்படுத்துவது போல,
"ஏதோ தெரியாம செஞ்சிட்டானுகள் டா. ஒருக்கா தானே... விட்ருவம். சேர்ட்ட எல்லாம் கொண்டு போகவேணாம். சரியா?" என்று பொறுமையாகக் கேட்பவனை குழப்பமாக பார்த்துவிட்டு,
"என்னண்ணா நீங்க?? நானே போய் சேர்ட சொல்றன் அப்ப." என்றான் முடிவாய்.
குருவின் முகம் இறுகியது. எழுந்து மற்ற நால்வரிடமும் சென்றான்.
பீதியால் பேதலித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களை நெருங்கி, "அறஞ்சனென்டா..." உச்சகட்ட கோபத்தில் கையை உயர்த்தியவன், "இவன ஏன்டா சேர்த்தனீங்க மொக்குகளே!! புத்திசாலித்தனமா தப்பிக்கவும் தெரியல. என்னையும் சேர்த்து மாட்டி விட்டுதுகள். சனியனுகள்..." கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்பினான் குரு.
அடுத்த கணமே திரும்பி அபித்ரனிடம் வந்தவன்,
"டேய்! ஆம்புளப்பிள்ள தானே நீ? என்ன அது... பெட்டையல் மாதிரி கோள்மூட்டுறதிலயே நிக்கிறாய்?"
அவன் குரல் உயர்ந்ததும் அபித்ரனின் கண்கள் கலங்கின.
ஆனால் பின்வாங்கவில்லை.
"நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் என்டதையும் சேத்து மாட்டிக்குடுப்பன்."என்ற அபித்ரனின் குரல் நடுங்கினாலும், வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாய் வெளிவந்தன.
ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்த குரு பிறகு எள்ளலாக நகைத்தான்.
"சரி... மாட்டிக்குடு." அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவன்,
"நானும் மாட்டிக்குடுக்கிறன். புது வருஷக் கொண்டாட்டமன்டைக்கு அருள காவலுக்கு வச்சுக்கொண்டு, கிளாஸ் பின்பக்கமா போய்... அது... இவர்ட ஆள்... அந்தப் பெட்டைட பேர் என்னடா மாதவா?" கேட்டுவிட்டு குரு அவனைப் பார்க்க, விடை கூறாது கலங்கிப்போன முகத்துடன் நண்பனைப் பார்த்தான் மாதவன்.
"மதுஷ்ணவி.. மது." பதில் சொன்னது மனோ.
"ஆஹ்!! பின்பக்கமிருந்த CCTVயையும் மறந்து.. அவளோட சரியான கத நம்மட அபி. கத ருசில அஞ்சும்கெட்டு அறிவும்கெட்டுப் போச்சுப் போல தம்பியருக்கு. கடைசில டைரி மில்க் வேற குடுத்தவர் சேர். போ அபி.. நீ போய் மாட்டிக்குடு . நான் மதுட சித்தப்பாட நம்பருக்கு டைரி மில்க் வீடியோவ அனுப்பி வைக்கிறேன். போ.. போ.. ஓடு." குரு போனை எடுத்துக் கொண்டே சொல்ல , மாதவனைத் தவிர மற்றவர்கள் முகத்தில் சின்னதாய் பிரகாசம்.
அந்த நொடியே அபித்ரனின் முகத்திலிருந்த தைரியம் கரைந்தது.
தொண்டை வறண்டு போனது.
எச்சிலை விழுங்கிக்கொண்டான்.
"என்னடா? போகலையா?" குருவின் குரலில் வெற்றி வெளிப்பட்டது.
"குருண்ணா... கொஞ்சம் சும்மா இருங்களன். அவன் யார்ட்டையும் ஒன்டும் சொல்ல மாட்டான். அபி, வாயத்திறந்து சொல்லன்டா..."
மாதவன் அவசரமாக அபித்ரனின் தோளைத் தொட்டான்.
"அண்ணா ப்ளீஸ்..." தொடங்குகையிலே
அபித்ரனின் குரல் உடைந்துவிட்டது.
"அப்படி எதுவும் செஞ்சிறாதிங்கண்ணா. நான்... நான் யார்ட்டையும் சொல்ல மாட்டேன்."
அழாத குறையாக கெஞ்சினான் அபி.
"ஆஹ்!! அது..."
என்று அலட்சியமாகச் சிரித்த குரு,
"எங்க... அபிட கையில ரெண்டு சாமானை குடுங்க. ஒரு போட்டோ எடுத்து வெப்பம். யாருக்கு தெரியும்...பிரேக்-அப் ஆனா மனசு மாறினாலும் மாறிரும்."
அவன் பேச்சில் ஒரு நக்கல் கலந்த அழுத்தம் இருந்தது.
அருகிலிருந்தவர்களிடம் இருந்து இரண்டு பாக்கெட்டுகளை வாங்கி அபித்ரனின் கையில் திணித்து, ஒரு புகைப்படம் எடுத்தான்.
"ஏய்! நில்லு. நில்லு."
மீண்டும் ஒன்று எடுத்துவிட்டே அவனை விடுவித்தான்.
ஒரு வார்த்தையும் பேசாமல்,
வலி நிறைந்த கண்களினால் தன்னை ஏமாற்றமாய் பார்த்துவிட்டு சென்ற நண்பனின் முகத்தை மாதவனால் என்றுமே மறக்க முடியாது.
அதற்குப் பிறகு அபித்ரன், மாதவனுடன் பேசுவதே இல்லை. சரண் மற்றும் மற்றவர்களுடன் கூட ஏதோ பேசுவான்.
மாதவனின் மன்னிப்புகளும் மன்றாடல்களும் அபியின் மனதை கரைக்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் அவனும் முயற்சிப்பதை நிறுத்திவிட்டான்.
'கொஞ்ச நாள் போனால் சரியாகிடும்...'
என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் கொஞ்ச நாட்களில் அவன் முழுதாகப் போய்விட்ட செய்திதான் கிடைத்தது.சில்லு சில்லாய் நொறுங்கிப் போனான் மாதவன்.
நண்பனின் விபரீதமுடிவுக்கு தானும் ஓர் காரணம் என்ற உண்மையை அவனால் மாற்றவும், கழிவிரக்கம் கொண்டு தன்னைத்தானே மன்னிக்கவும் முடியாது.
இப்போதெல்லாம் ஃபுட்பால் விளையாடுவதில் விருப்பமே இல்லை. டீம் லீடர் ஆயிற்றே.. கடமைக்கு செல்கிறான்.
அபித்ரனின் பேச்சில் 'ஷோபிஅக்கா..' எனும் நபர் அடிக்கடி வந்து போவார்.
இறப்பு வீட்டில் வைத்து அவள் அழுதகாட்சி, மாதவனை வெகுவாய் பாதித்திருந்தது. எந்த அளவுக்கென்றால், அவளிடம் மட்டுமாவது உண்மையை சொல்லி விடுவோமா என்று சரணிடம் கேட்கும் அளவிற்கு. சரண் விட்டால் தானே...
சரண். நண்பன் என்ற உறவுக்கும் மேற்பட்டவன். மாதவனுக்கு சகோதரனைப் போன்றவன்.
சரணின் தந்தை, 'கமலசேகர்' மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற ஓர் சட்டத்தரணி. இப்போது அரசியலிலும் இறங்கிவிட்டார்.
மாதவனின் அப்பா அவன் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். கமலசேகரின் வீட்டில்தான் ஏதோ வேலை செய்தாராம். அவர் இறந்ததுமே மாதவனின் அன்னையை அந்த வீட்டில் வேலைக்கு எடுத்துக் கொண்டார்களாம். பின்னர் தங்க இடமில்லாமல் போன சமயம், அவர்களையும் அங்கேயே தங்கச்செய்தார்கள்.
மாதவன் பிறந்ததிலிருந்தே அந்த வீட்டில் தான். இந்த பதினாறு வருடங்களில் மாதவனுக்கு நினைவு தெரிந்து, ஒரு நாள் கூட இந்த வீட்டினரால் வேலைக்காரியின் மகனாக நடத்தப்பட்டதே இல்லை அவன்.
ஒருவேளை சிறுவயதில் ஏதேனும் பாரபட்சம் காட்டி இருக்கலாம். ஆனால் சரணின் உயிர் நண்பனான பிறகு, அவனை எப்படி நடத்தினார்களோ, அதே மாதிரி தான் மாதவனையும் நடத்தினார்கள்.
மாதவனும், சரண் “நில்” என்றால் நிற்பான். “உட்கார்” என்றால் உட்காருவான். தன் அன்னைக்கு பிடிக்காவிட்டாலும்...
என்னவோ அவனால் சரணின் வார்த்தைகளை மீற முடிவதில்லை.
கடைசியில் அபித்ரனின் விஷயத்திலும் 'வாய் திறக்க கூடாது' என்று அவனைக் கட்டிப்போட்டு விட்டானே.
மாதவனால் என்ன முயன்றும் அபியின் மறைவைக் கடந்து வர இயலவில்லை. குற்ற உணர்ச்சி பெரிய ஒரு முட்டுக்கட்டையாய் முன்னே நின்றது.
அன்று மைதானத்தில் ஷோபனாவைப் பார்த்ததுமே அவனையறியாமல் ஓடிவந்திருந்தான் . அருகில் சென்றபோது தான் அவள் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது. மாதவனுக்கும் தொண்டையை அடைத்தது.
அன்றிரவே இன்ஸ்டாகிராமில் அவளிடம் பெயரின்றி மன்னிப்பு வேண்டியிருந்தான்.
அபித்ரனின் அக்கா இப்போதெல்லாம் அடிக்கடி மைதானத்திற்கு வருகிறாள். சரணின் மறுப்பையும் மீறி அவளிடம் ஓரிரு வார்த்தைகளாவது பேசிவிடுவான். அதனால் அவனது மனநிலையில் ஒரு மண்ணாங்கட்டி மாற்றமும் ஏற்படவில்லை. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகிப் போனது அவன் கதையும்.
எப்போதும் போல இப்போதும் நடுஇரவில் தூக்கம் தொலைத்து எழுந்துநின்ற மாதவன், நடந்தவைகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து வேதனை தாளாமல் ஊமையாய் கண்ணீர் வடித்தான்.
***************
அந்த பாடசாலையின் முன்றலில் காலை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
“அடுத்த நிகழ்வாக லக்ஷிகா அவர்களின் உரை இடம்பெறும்” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு மாணவியிடம் ஒலிவாங்கி கையளிக்கப்பட்டது.
“அனைவருக்கும் வணக்கம்.”
சிறிய இடைவெளிக்குப் பிறகு பேசத் தொடங்கினாள்.
“நான் பேசப்போகும் தலைப்பு மிகவும் முக்கியமான ஒன்று. இன்றைய செய்திகளில் பெரும்பாலானவை ஒரே துயரத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள்… அவர்கள் எடுத்துக்கொள்ளும் விபரீத முடிவுகள் நம்மை தினமும் பதறவைக்கின்றன.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகில் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை சம்பவம் இடம்பெறுகிறது. ஒவ்வொரு சில வினாடிகளுக்கும் ஒரு தற்கொலை முயற்சி நடைபெறுகிறது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
நம் நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கும் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 50 தற்கொலைகள் இடம்பெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.தென் ஆசியாவில் தற்கொலை வீதம் அதிகமாக காணப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று எனவும் கூறப்படுகிறது.
பிரச்சினைகள் ஏற்படும் போது இலகுவில் மனம் புண்படும் தன்மையுடையவர்கள், அவற்றை தாங்க முடியாதவர்கள், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவர்கள், தங்களது பிரச்சினைகளுக்கு இதுவே ஒரே நிரந்தரத் தீர்வு என்று தவறாக நம்பி அந்த விபரீத முடிவை எடுக்கின்றனர்................."
இன்னும் அந்த தலைப்பைச் சார்ந்த பல விடயங்களை தனது உரையில் விவரித்துவிட்டு,
இறுதியாக குரலை தணித்து, அதில் வருத்தத்தை சற்று குலைத்து,
“சமீபத்தில் எங்கள் பாடசாலையையே சேர்ந்த அண்ணா ஒருவரும்… துரதிருஷ்டவசமாக இப்படியான ஒரு விபரீத முடிவை எடுத்திருந்தார். அவர் எப்போதும் மைதானத்தில் சிரிப்புடன் ஓடி விளையாடும், கால்பந்து அணியின் உயிராக இருந்த ஒரு மாணவர். நண்பர்களை உற்சாகப்படுத்தும் அவரது குரலும், அந்த சிரிப்பும் இன்னும் எங்கள் நினைவுகளில் உயிருடன் இருக்கின்றன.
இன்று அவரை இழந்துவிட்டோம் என்பது நம்ப முடியாத ஒரு உண்மையாகவே நம்மை வலிக்க வைக்கிறது. அவரது இழப்பு எங்கள் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்…!!
வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், பேசக்கூடிய ஒருவர் எப்போதும் இருக்கிறார் என்பதை நாம் மறக்கக் கூடாது.
மேலும்… எங்கள் நண்பர்களில் யாராவது மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்றால், அதை கவனிக்காமல் விடக்கூடாது. அவர்களுக்காக நாமும் ஒரு துணையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டியவளாக விடைபெறுகிறேன்.
நன்றி!!. வணக்கம்! "
என்றதோடு அவளது உரையை முடித்துக் கொண்டாள்...
கூட்டத்தில் நின்றிருந்த சில மாணவர்களின் முகம் இயல்பாகவே இறுகியது. சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்; பார்வையில் சொல்ல முடியாத ஒரு அசௌகரியம்.
அந்த சிலருள் அண்டனியும் அடக்கம்.
அண்டனி இதுவரை ஒருபோதும் காலை கூட்ட நிகழ்ச்சிகளை அந்த அளவுக்கு கவனமாகக் கேட்டதே இல்லை.
பொதுவாகவே, அப்படியான உரைகள் அவனுக்கு சலிப்பை மட்டுமே தரும். சில நிமிடங்களில் பார்வை வேறெங்கோ சிதறிவிடும்; நண்பர்களுடன் குசுகுசுப்புகள் தொடங்கிவிடும்.
ஆனால் இன்று…
அவன் அசையாமல் நின்றிருந்தான்.
ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்குள் ஆழமாக இறங்கியது. பயம் ஒரு பந்து போல உள்ளே உருண்டு பெரிதாகிக் கொண்டிருந்தது. கை கால்கள் தானாகவே உதறத் தொடங்க, நின்ற இடமே சுழலுவது போல மயக்கம் வந்தது.
அபித்ரனின் இறப்பு சம்பவம் கேட்டு அதிர்ந்த நொடி இதயம் எப்படி வேகமடுத்து துடித்ததோ, சரியாக அதைப்போலவே துடிக்க தொடங்கியது.
அதற்குப் பிறகு இரவுகள் அவனுக்கு எளிதாக இல்லை. இன்றுவரை தூங்கும்போது மின்விசிறியை எக்குத்தப்பாய் பார்த்துவிட்டாலே போதும்—யாருடைய இரு கால்களோ தலைக்கு மேல் தொங்குவது போல ஒருகாட்சி மனதில் திடீரென மிதந்து வந்துவிடும்.
அரங்கில் காலைக் கூட்டத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின.
அன்டணியின் இதயக் கூடத்தில் அடுத்தடுத்து நினைவுகள் நகரத் தொடங்கின.
Last edited: