VIN - 27
நாற்காலியின் மீது குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவள், ஜன்னல் கம்பிகளைத் தாண்டி எங்கோ தொலைதூரத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.
அபித்ரனின் வழக்கு குறித்து ஷோபனாவின் பெற்றோர், சித்தி–சித்தப்பா, அம்மம்மா, மாமியார், யாழினி என அனைவரின் கருத்துக்களும், அறிவுரைகளும், ஏச்சுக்களும், பேச்சுக்களும் எல்லாமே ஒரே புள்ளியில் வந்து நின்றன.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னாலும், அவர்களது வார்த்தைகளின் சாரம் ஒன்றுதான்.
என்ன நடந்தாலும் அபித்ரன் உயிருடன் திரும்பி வரப்போவதில்லை. ஆகவே, இந்த வழக்கிற்காக இனியும் தன்னையே வருத்திக் கொள்ளாமல், தன் உடல் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் கவனித்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது.
ஆம்!
போன உயிர் மீளப்போவதில்லை என்பது, அவளும் அறிந்ததே...
ஆனால், அபித்ரனின் தற்கொலைக்கான உண்மையான காரணமும், அதற்குப் பின்னால் இருந்தவர்களும், பாடசாலை வளாகத்திலும் தனியார் வகுப்புகளிலும் மறைமுகமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அந்தச் சட்டவிரோதச் செயல்களும் சமூகத்தின் பார்வைக்கு வரவேண்டும் என்பதே அவளது ஒரே எண்ணம்.
ஆனால் அந்த எண்ணம் நிறைவேற்றப்பட்டால் கூட, இயல்பு நிலைக்கு திரும்புவது என்பது நிச்சயமாக இப்போதைக்கு இயலாது.
சித்தி வீட்டுக்குள் நுழைந்ததுமே தன்னிச்சையாய் தடதடவென படியேறி மாடியறைக்கு செல்லத் துடிக்கும் கால்களை வேண்டுமானால் கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டு வர முடியுமே தவிர, இரத்தம் வடித்து துடித்தழும் இதயத்தை, இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் என்பது அவளால் இயலவே இயலாதே...
இறுதி நேரத்தில் அன்னை- தந்தைக்கு கூட எழுதாதவன், அவளுக்கல்லவா எழுதியிருந்தான்.
அப்படியிருக்க, இந்த உண்மைகளைக்கூட வெளிக்கொணராவிடின், அவளெல்லாம் என்ன தமக்கை??
எல்லாவற்றையும் விட,
அவளுக்கு இன்னொரு தம்பியும் இருக்கிறானே...
அவனும் அதே பாடசாலையில்தான் படிக்கிறான். அதே மைதானத்தில்தான் விளையாடுகிறான். அதே சூழலில்தான் தினமும் நடமாடுகிறான்.
இன்று அபித்ரனுக்கு நடந்தது, நாளை வேறொரு பிள்ளைக்கோ... அல்லது....
நினைக்கவே நெஞ்சு நடுங்குகின்றதே...
குறைந்தபட்சம் அவன் நலனுக்காகவாவது, இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.
வரவே வேண்டும்...
திடுமென அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தான் வருண்.
காலையிலேயே எங்கோ கிளம்பிச் சென்றவன், அவள் எழுந்ததிலிருந்து கண்களிலேயே படவில்லை. இப்போதுதான் வீடு திரும்பியிருந்தான்.
அவன் அறைக்குள் நுழைந்ததும், ஷோபனாவின் விழிகள் தன்னிச்சையாக மேசைக் கடிகாரத்தை நோக்கின.
நேரம், சரியாக ஒன்று ஐம்பது.
"ஷோபா... ஒருக்கா ஹோலுக்க வாவன்."
"இப்பவா!? ஏன்?"
"வா... வந்து பாரன்." என்று ஷோபனாவின் கைபிடித்து அழைத்துச் சென்றான் வருண்.
விறாந்தையில் அமுதாவுடன் பேசியபடி அமர்ந்திருக்கும் பெண்மணி, அன்று கமலசேகரின் வீட்டில் நின்றிருந்தவர்.
அவரருகிலிருந்த மாதவனைக் கண்ட மாத்திரத்தில், உள்ளுக்குள் எழுந்த ஆத்திரத்தை உதடுகளை அழுத்திப் பிடித்து அடக்கியவாறு நடந்தாள்.
ஷோபனாவை கண்டதும், படபடக்கும் விழிகளோடும், தடதடக்கும் இதயத்தோடும் அவசரமாய் எழுந்து நின்றான் மாதவன்.
அவனின் அன்னை தேவியும், உடனே எழுந்து அவளருகே சென்றவர், "என்னம்மா நீ! இதுதான் விஷயமென்டு அன்டைக்கொரு வார்த்த எனட்ட சொல்லிருந்தியன்டா... இந்த ராஸ்கலுக்கு முதுகுல நாலு இழு இழுத்து உன்னோடயே அனுப்பி வச்சிருப்பனேம்மா..." என்றார் அவளின் கைபிடித்து.
அவரது குரலில் மகன் மீது இருந்த கோபமும், ஷோபனாவிடம் இருந்த வருத்தமும் ஒன்றாகக் கலந்திருந்தது.
பதிலுக்கு சிறிதாகத் தலையசைத்த ஷோபனா, எதுவும் பேசாமல் வருணைப் பார்த்தாள்.
வருண் மெலிதாக சிரித்துவிட்டு, "அது... இன்னொருக்கா ட்ரை பண்ணி பாப்பமென்டு, மார்னிங் அந்த லோயர்ட வீட்ட போனா... அவர் இல்லயாம். இவங்க யாரென்டு கேட்டுட்டு, நைசா விஷயத்த சொல்லி பாத்தன். அஞ்சே நிமிஷத்துல மகனோட வந்துட்டாங்க. அப்படியே போலீஸ் ஸ்டேஷன் போனோம். இப்பதான் வாரம். மத்த போய்ஸ் இன்னும் அங்கதான்..." என்றான் எதிரில் இருந்தவளின் மீது பார்வையை விலக்காமல்.
கண்களை எட்டாத மில்லிமீட்டர் புன்னகையோடு அறைக்குள் செல்வதற்காய் திரும்பியவளை,
"ஹேய்! வா எல்லாருமா சேந்து சாப்பிடுவம்."என்று வருணும்,
" சாப்பிட்டுப் போமா..." என்று அமுதாவும் அழைக்க,
"இல்ல. எனக்குப் பசியில்ல." என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, யாருடைய முகத்தையும் பார்க்காமல் அறையை நோக்கி நடந்தாள்.
வருணுக்குத்தான் முகம் மாறாமல் காப்பது பெரும் கஷ்டமாயிற்று. மனதுக்குள் ஒரு கனமான அதிருப்தி பரவ, அமைதியாக உணவு மேசையில் அமர்ந்தான்.
அவள் விலகிச் சென்ற திசையையே சில நொடிகள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.
************
மாலை ஐந்தரை மணியளவில், அறைக்குள் வந்து வேகவேகமாய் தயாரான கணவனை கண்களால் பின்தொடர்ந்தபடி அமைதியாக பார்த்திருந்தாள் ஷோபனா.
தயாராகியதும், முதுகுப்பையை ஒற்றைத் தோளில் மாட்டியபடி, அவளை ஊடுருவும் பார்வை பாரத்தவன்,
"இன்னும் எத்தன நாளைக்கு இப்படியே உம்மென்டு இருக்கிற ஐடியா?" அவனது நிதானமான கடுமையிலும், நியாயமான கோவத்திலும் கண்கள் குளம் கட்டத்தொடங்க, வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்து நின்றிருந்தவன்,
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" என தணிந்த குரலில் கேள்வி எழுப்பவும்,
சட்டென்று அவன் முகம் பார்த்தாள்.
ஷோபனா நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவனுடன் சிரித்து, மகிழ்ந்து, இனிமையாகப் பேசுவாள்.
ஆனால், அவன் அப்படியல்ல.
எத்தனை முறை அவள் அவனை எடுத்தெறிந்து பேசியிருந்தாலும், 'டேப்லெட் போடு ஷோபா...'அல்லது 'டாக்டர்கிட்ட போ ஷோபா...' என்பதுதான் அந்த உரையாடலில் அவனது கடைசி வார்த்தைகளாக இருக்கும்.
எவ்வளவு கோபமாக இருந்தாலும், அந்தச் சில வார்த்தைகளிலேயே தன் அக்கறையையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்திவிடுவான்.
அதை நினைத்தவளுக்கு, தன்னைத் தானே எண்ணி வெட்கமாக இருந்தது.
தான் எத்துனை பெரிய சுயநலவாதி என, உள்ளுக்குள் தன்னையே நிந்தித்தபடி அவன் வார்த்தைகளுக்காக காத்திருந்தாள்.
"தயவு செஞ்சு... நானா எடுக்கும் வரைக்கும், எனக்குக் கோல் எடுக்காத. உங்கட அம்மாட்டயும் அதையே சொல்லு... ப்ளீஸ்..." என்றவன், கதவை அறைந்து சாற்றிவிட்டு சென்றிருந்தான்.
ஷோபனாவோ, அவன் உதவியாக என்ன கேட்டான்- என்பதை நம்பமுடியாமல், மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி கிரகிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அம்மாட்டையும் சொல் என்பதன் அர்த்தம்? ஷோபனாவுக்கு இனிமேல் என்ன நடந்தாலும் அவனுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்பது தானே..!
****************
மூன்று வாரங்கள் கடந்திருந்தன.
ஆனால், அபித்ரனின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் அடங்கியிருக்கவில்லை.
'ஒரு மாணவனின் தற்கொலை' என்று தொடங்கிய செய்தி, இப்போது 'பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை', 'மாணவர்களை குறிவைக்கும் போதைப்பொருள் வலையமைப்பு', என நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எடுத்துக் கொண்டே சென்றது.
போலீஸ் விசாரணையும் தொடர்ந்து கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்தும், தனியார் வகுப்பு நடத்துபவர்களிடமிருந்தும் தொடர்ந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
சம்பவத்துடன் தொடர்புடைய 'குரு' என்பவன் கைது செய்யப்பட்டதாகவும், மற்றவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
சரணும், மனோவும் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக ஊரெங்கும் பேசப்பட்டது. அந்தப் பேச்சின் உண்மைத்தன்மை உறுதியாகத் தெரியாதபோதிலும், சம்பந்தப்பட்ட குடும்பங்களின் நிம்மதியை, அது வெகுவாகக் குலைத்திருந்தது.
பாடசாலை நிர்வாகமும் கைகட்டி நிற்கவில்லை.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மாணவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பெற்றோர்களுக்கான விசேட சந்திப்புகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் நட்பு வட்டம் முதல் சமூக வலைத்தளப் பயன்பாடு வரை, ஒவ்வொன்றையும் பெற்றோர் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், விசேட அனுமதி வழங்கப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர, வெளியாட்கள் எவரும் பாடசாலைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்திற்குள் நுழையக் கூடாது என்ற புதிய விதியும் நடைமுறைக்கு வந்திருந்தது.
அபித்ரனுக்கு நீதி கோரி மாணவர்களும், சமூக அமைப்புகளும் இணைந்து அமைதிப் போராட்டங்களை நடத்தினர்.
"எங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்!"
" மாணவரிடத்தில் போதைப்பொருளுக்கு இடமில்லை!"
என்ற முழக்கங்கள், அந்த ஊரின் பிரதான வீதிகளில் பல நாட்கள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.
அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மாணவர்களின் அடையாளங்களை மறைத்தே செய்திகளை வெளியிட்ட போதிலும், சமூக வலைத்தளங்கள் எந்த எல்லையையும் மதிக்கவில்லை.
யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோரின் கைப்பேசிகளை அடைந்துவிட்டன.
சம்பந்தப்பட்ட நால்வரின் புகைப்படங்களும், பெயர்களும், அவர்கள் படிக்கும் பாடசாலையின் பெயரும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவின.
அந்தச் செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு முக்கியக் காரணம், சரணின் தந்தை கமலசேகர்.
இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க இருந்த அவரை குறிவைத்து, அரசியல் கட்சிகள் இந்தச் சம்பவத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கின.
'சட்டம் பேசும் லோயரால் சொந்த மகனையே ஒழுங்காக வளர்க்க முடியவில்லையாம்.'
'உண்மையை மறைக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறாராம்.'
என்ற விமர்சனங்கள் அரசியல் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவின.
அவரது ஆதரவாளர்கள் அதை அரசியல் சதியென்று மறுத்தனர்.
எதிரணியினரோ, 'ஒரு மாணவனின் உயிரைவிட எந்தப் பதவியும் பெரியதல்ல' என்று பொதுக்கூட்டங்களில் பேசத் தொடங்கினர்.
ஒரு மாணவனின் மரணம், ஒரு குடும்பத்தின் துயரத்தைத் தாண்டி அரசியல் விவாதப் பொருளாகவும் மாறியிருந்தது.
வருண் சொல்லியதன் பேரில், மாதவனும் அவன் அன்னை தேவியும் யாழினியின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
வருண் வந்து கேட்ட போது, யாழினி ஒரேயடியாக மறுத்திருந்தாள். சிவா, கொஞ்சம் எடுத்து சொல்லிய பிறகு தான் சரி என்றிருந்தாள்.
ஆரம்ப நாட்களில், ஆதியை மாதவனுடன் தனியாக விட யாழினி பெரிதும் தயங்கினாள்; பயந்தாள். அதை மாதவனும் உணர்ந்தே இருந்தான். ஆனால், நிலைமையைப் புரிந்துகொண்டு அமைதியாகவே நடந்துகொண்டான்.
நாள்கள் நகர நகர, யாழினியின் மனமும் மாறியது. முன்பைப் போல இல்லாமல், அவர்களுடன் இயல்பாகப் பேசத் தொடங்கினாள்.
மாதவன், அம்மாவிடம் கெஞ்சிக் கெஞ்சி ஒருவழியாய் அனுமதி பெற்றுக்கொண்டு, தன் மாமாவைப் பார்க்க சென்றிருந்தான். ஆனால் கமலசேகரும், சரணும் அவன் முகம் பார்க்கவே மறுத்துவிட்டனர்.
மனோவும் அவனுடன் பேசவில்லை. அன்டனி மாத்திரம் மாதவனுடன் பழையபடி இயல்பாய் பேசினான்.
மாலை நேரங்களில், சிவாவையும் ஆதியையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த பூங்காவிற்கோ, விளையாட்டு மைதானத்திற்கோ, சில சமயங்களில் கடற்கரைக்கோ செல்வான் மாதவன்.
ஆதியுடன் சேர்ந்து காற்பந்து விளையாடும் அந்தச் சில மணித்துளிகள்தான், அவன் மனதில் தேங்கியிருந்த பாரத்தை ஓரளவாவது மறக்கச் செய்தன.
ஆனால், வெளி உலகம் அவனை மறக்கவில்லை.
ஒருநாள் மாலை, பூங்காவிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த மதுஷ்ணவியின் தந்தையைக் கண்டான்.
அவனை யாரென்று இனங்கண்டு கொண்டவர், ஒரு கணம் அவன் முகத்தையே பார்த்துவிட்டு விலகி நடந்தார்.
திட்டவும் இல்லை.
சாபமிடவும் இல்லை.
ஆனால், அந்த ஒற்றைப் பார்வையில் இருந்த வெறுப்பும், அருவருப்பும், மாதவனைத் தலைகுனிய வைத்தன; கண்கலங்க வைத்தன.
இதையெல்லாம் விட, மாதவனை அதிகம் வதைத்தது வேறொன்று.
இந்த மூன்று வாரங்களில் ஷோபனா இருமுறை யாழினியின் வீட்டிற்கு வந்திருந்தாள். தேவியுடன் நல்லமுறையில் பேசினாள்; பழகினாள்.
மாதவனிடம் மட்டும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
அவன் எவ்வளவோ முறை, "அக்கா..." என்று தயக்கத்தோடு அழைத்துப் பார்த்தான். ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கேட்டான்.
அவளோ, அவன் சொற்களைக் கேட்காதவளைப் போல அமைதியாக விலகிச் சென்றாள்.
அந்த அமைதியான ஒதுக்கம்...
மாதவனின் குற்றவுணர்வை நாளுக்கு நாள் இன்னும் ஆழமாகக் கீறிக்கொண்டே இருந்தது.
*****************
இன்று ஷோபனாவின் பிறந்தநாள்...
காலையிலேயே பெற்றோருடன் கோயிலுக்குச் சென்று வந்தவள், அறைக்குள் நுழைந்ததும் கைபேசியைத்தான் எடுத்தாள்.
பேட்டர்ன் லொக்கைத் திறப்பதும்...
மீண்டும் அணைப்பதுமாகவே இருந்தாள்.
வருணிடமிருந்து ஒரு சிறிய வாழ்த்துச் செய்தியேனும் வந்திருக்குமோ என்ற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு முறையும் அவளை கைபேசியை நோக்கி இழுத்தது.
ஆனால்...
திரையில் இருந்தது ஏமாற்றம் மட்டும்தான்.
"தயவு செஞ்சு... நானா எடுக்கும் வரைக்கும் எனக்குக் கோல் எடுக்காத...... ப்ளீஸ்..."
அன்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.
அந்தக் குரலில் இருந்த உச்சகட்ட இயலாமையும், கலங்கிய கெஞ்சலும் இன்றுவரை அவளால் மறக்க முடியவில்லை.
அதற்குப் பிறகு அவளும் அவனை அழைக்கவில்லை.
அவனிடமிருந்தும் ஒரு அழைப்பு வரவில்லை.
இடையில் போயா தின விடுமுறையன்று வீட்டிற்கு வராதபோது மட்டும், குமரனுக்கு அழைத்துப் பேசியிருந்தாள்.
குமரன், தான் அழைத்த விஷயத்தை சொல்லியதும் வருண் தனக்கு அழைக்கக்கூடும் என்ற நம்பிக்கையோடு அன்றிரவு முழுவதும் காத்திருந்தாள்.
ஆனால்...
கல்நெஞ்சக்காரன்.
அவன் புறத்திலிருந்து ஒரு அழைப்புகூட வரவில்லை.
அந்த நினைவு மீண்டும் மனதைத் துளைக்க, இனியும் பிடிவாதம் பிடித்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது.
மனம் கேட்காமல், அவனது எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
எடுக்கப்படவில்லை.
மீண்டும் முயற்சித்தாள்.
மீண்டும்...
'No Answer.'
இதயம் காரணமே இல்லாமல் கனத்தது.
இதோ.. அந்த வழமையான இறுக்கம், நெஞ்சம் முழுவதும் மெல்லப் பரவத் தொடங்கியது. தன் நெஞ்சுப்பகுதியை நீவி விட்டவளுக்கு,
'மயங்கிக் கியங்கி விழுந்தாலும்...'
என்ற எண்ணம் தோன்றவும்,
உடனே சென்று குளிர்ந்த நீரை எடுத்து பருகினாள்.
சற்றுநேரம் தன்னைத்தானே சமாளிக்க முயன்றவள், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
யாழினி வீட்டுக்கு போகலாம். வருணைப் பற்றி நன்றாகவே கோள் சொல்லிக் கொடுக்கலாம். என்று நினைத்தவளுக்கு, உதட்டோரத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
அப்போதுதான் இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது.
யாழினியும் இன்னும் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லையே!
'பரவாயில்லை... அப்படியே,அவக்கும் சேர்த்து முதுகுல இரண்டு அடி போடலாம்.'
என்று முணுமுணுத்தபடி, நீண்ட நாட்களின் பின் ஒரு குஷியான மனநிலையில் வீட்டை விட்டு வெளியேறினாள்.
*****************
வழமையாக வண்டியை நிறுத்தும் இடத்தில் அதை நிறுத்திவிட்டு, யாழினியின் வீட்டிற்குள் நுழைந்தாள் ஷோபனா.
விறாந்தையில், தரையில் கால்களை மடக்கி அமர்ந்தபடி, ஆராவுடன் சேர்ந்து வண்ணப் பென்சில்களால் சித்திரம் வரைந்து கொண்டிருந்தார் தேவி.
வாசலில் நின்ற ஷோபனாவைக் கண்டதும், அவர் முகம் சட்டென்று மலர்ந்தது.
"வாம்மா..."
என்று புன்னகையுடன் தலையசைத்தவருக்கு, பதிலாக அழகான முறுவலொன்றைச் சிந்தினாள் ஷோபனா.
"ஹாப்பி பர்த்டே மாமி!"
என்று ஓடி வந்த ஆதி, அவளிடம் கை கொடுத்து வாழ்த்தினான்.
"தேங்க்ஸ் டா..."
என்று அவன் தலையை வருடியவள், வீட்டுக்குள் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாள்.
அந்த நேரம்தான் ஹாலின் மறுபக்கத்தில் நின்றிருந்த மாதவன் மெதுவாக முன்னே வந்தான்.
தயக்கத்தோடு...
கிட்டத்தட்ட குற்றவாளியைப் போல...
முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த, வண்ணத்தாளால் சுற்றப்பட்ட அந்த சிறிய பரிசை அவள் முன் நீட்டி,
"ஹாப்பி பர்த்டே... அக்கா.."
மெல்லிய குரலில் சொன்னான்.
ஒரு கணம்...
வீடே அமைதியாகிப் போனது.
தேவியின் கண்களில் எதிர்பார்ப்பு.
யாழினியின் முகத்திலோ,
இறுக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.
ஒரு நொடி தயங்கிய ஷோபனா...
பிறகு மெதுவாகக் கையை நீட்டி அந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டாள்.
"தேங்க்ஸ்..."
என்ற ஒற்றை வார்த்தை, மிகவும் மெல்லிய குரலில் அவளிடமிருந்து வெளியேறியது.
அந்த ஒரு வார்த்தை போதும் என்பதுபோல, மாதவனின் முகத்தில் நிம்மதி பரவியது.
"பிரிச்சு பாருங்கக்கா..." என்றுபுதுவித உரிமைக் குரலில் அவன் சொன்னதைக் கேட்காதது போல , அதை ஸ்டூலில் வைத்திருந்தாள் ஷோபா.
மாதவன் உள்ளுக்குள் சுணங்கினாலும், அதைப் பெரிதாகவெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. அவனது அக்கா அதை வாங்கியதே அவனுக்கு மகிழ்ச்சி தான்.
அடுத்த நொடியே,
ஆதியைப் பார்த்து கையை உயர்த்தினான்.
"யெஸ்!"
என்று இருவரும் ஹை-ஃபை அடித்துக்கொண்டு, தங்களது சந்தோஷத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.
அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் மீண்டும் சமையலறைக்குள் சென்றாள் யாழினி.
அந்தச் சிறிய காட்சியைப் பார்த்த தேவி, யாருக்கும் தெரியாமல் பெருமூச்சொன்றை வெளியேற்றினார்.
*************************
நாற்காலியின் மீது குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவள், ஜன்னல் கம்பிகளைத் தாண்டி எங்கோ தொலைதூரத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.
அபித்ரனின் வழக்கு குறித்து ஷோபனாவின் பெற்றோர், சித்தி–சித்தப்பா, அம்மம்மா, மாமியார், யாழினி என அனைவரின் கருத்துக்களும், அறிவுரைகளும், ஏச்சுக்களும், பேச்சுக்களும் எல்லாமே ஒரே புள்ளியில் வந்து நின்றன.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னாலும், அவர்களது வார்த்தைகளின் சாரம் ஒன்றுதான்.
என்ன நடந்தாலும் அபித்ரன் உயிருடன் திரும்பி வரப்போவதில்லை. ஆகவே, இந்த வழக்கிற்காக இனியும் தன்னையே வருத்திக் கொள்ளாமல், தன் உடல் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் கவனித்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது.
ஆம்!
போன உயிர் மீளப்போவதில்லை என்பது, அவளும் அறிந்ததே...
ஆனால், அபித்ரனின் தற்கொலைக்கான உண்மையான காரணமும், அதற்குப் பின்னால் இருந்தவர்களும், பாடசாலை வளாகத்திலும் தனியார் வகுப்புகளிலும் மறைமுகமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அந்தச் சட்டவிரோதச் செயல்களும் சமூகத்தின் பார்வைக்கு வரவேண்டும் என்பதே அவளது ஒரே எண்ணம்.
ஆனால் அந்த எண்ணம் நிறைவேற்றப்பட்டால் கூட, இயல்பு நிலைக்கு திரும்புவது என்பது நிச்சயமாக இப்போதைக்கு இயலாது.
சித்தி வீட்டுக்குள் நுழைந்ததுமே தன்னிச்சையாய் தடதடவென படியேறி மாடியறைக்கு செல்லத் துடிக்கும் கால்களை வேண்டுமானால் கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டு வர முடியுமே தவிர, இரத்தம் வடித்து துடித்தழும் இதயத்தை, இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் என்பது அவளால் இயலவே இயலாதே...
இறுதி நேரத்தில் அன்னை- தந்தைக்கு கூட எழுதாதவன், அவளுக்கல்லவா எழுதியிருந்தான்.
அப்படியிருக்க, இந்த உண்மைகளைக்கூட வெளிக்கொணராவிடின், அவளெல்லாம் என்ன தமக்கை??
எல்லாவற்றையும் விட,
அவளுக்கு இன்னொரு தம்பியும் இருக்கிறானே...
அவனும் அதே பாடசாலையில்தான் படிக்கிறான். அதே மைதானத்தில்தான் விளையாடுகிறான். அதே சூழலில்தான் தினமும் நடமாடுகிறான்.
இன்று அபித்ரனுக்கு நடந்தது, நாளை வேறொரு பிள்ளைக்கோ... அல்லது....
நினைக்கவே நெஞ்சு நடுங்குகின்றதே...
குறைந்தபட்சம் அவன் நலனுக்காகவாவது, இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.
வரவே வேண்டும்...
திடுமென அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தான் வருண்.
காலையிலேயே எங்கோ கிளம்பிச் சென்றவன், அவள் எழுந்ததிலிருந்து கண்களிலேயே படவில்லை. இப்போதுதான் வீடு திரும்பியிருந்தான்.
அவன் அறைக்குள் நுழைந்ததும், ஷோபனாவின் விழிகள் தன்னிச்சையாக மேசைக் கடிகாரத்தை நோக்கின.
நேரம், சரியாக ஒன்று ஐம்பது.
"ஷோபா... ஒருக்கா ஹோலுக்க வாவன்."
"இப்பவா!? ஏன்?"
"வா... வந்து பாரன்." என்று ஷோபனாவின் கைபிடித்து அழைத்துச் சென்றான் வருண்.
விறாந்தையில் அமுதாவுடன் பேசியபடி அமர்ந்திருக்கும் பெண்மணி, அன்று கமலசேகரின் வீட்டில் நின்றிருந்தவர்.
அவரருகிலிருந்த மாதவனைக் கண்ட மாத்திரத்தில், உள்ளுக்குள் எழுந்த ஆத்திரத்தை உதடுகளை அழுத்திப் பிடித்து அடக்கியவாறு நடந்தாள்.
ஷோபனாவை கண்டதும், படபடக்கும் விழிகளோடும், தடதடக்கும் இதயத்தோடும் அவசரமாய் எழுந்து நின்றான் மாதவன்.
அவனின் அன்னை தேவியும், உடனே எழுந்து அவளருகே சென்றவர், "என்னம்மா நீ! இதுதான் விஷயமென்டு அன்டைக்கொரு வார்த்த எனட்ட சொல்லிருந்தியன்டா... இந்த ராஸ்கலுக்கு முதுகுல நாலு இழு இழுத்து உன்னோடயே அனுப்பி வச்சிருப்பனேம்மா..." என்றார் அவளின் கைபிடித்து.
அவரது குரலில் மகன் மீது இருந்த கோபமும், ஷோபனாவிடம் இருந்த வருத்தமும் ஒன்றாகக் கலந்திருந்தது.
பதிலுக்கு சிறிதாகத் தலையசைத்த ஷோபனா, எதுவும் பேசாமல் வருணைப் பார்த்தாள்.
வருண் மெலிதாக சிரித்துவிட்டு, "அது... இன்னொருக்கா ட்ரை பண்ணி பாப்பமென்டு, மார்னிங் அந்த லோயர்ட வீட்ட போனா... அவர் இல்லயாம். இவங்க யாரென்டு கேட்டுட்டு, நைசா விஷயத்த சொல்லி பாத்தன். அஞ்சே நிமிஷத்துல மகனோட வந்துட்டாங்க. அப்படியே போலீஸ் ஸ்டேஷன் போனோம். இப்பதான் வாரம். மத்த போய்ஸ் இன்னும் அங்கதான்..." என்றான் எதிரில் இருந்தவளின் மீது பார்வையை விலக்காமல்.
கண்களை எட்டாத மில்லிமீட்டர் புன்னகையோடு அறைக்குள் செல்வதற்காய் திரும்பியவளை,
"ஹேய்! வா எல்லாருமா சேந்து சாப்பிடுவம்."என்று வருணும்,
" சாப்பிட்டுப் போமா..." என்று அமுதாவும் அழைக்க,
"இல்ல. எனக்குப் பசியில்ல." என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, யாருடைய முகத்தையும் பார்க்காமல் அறையை நோக்கி நடந்தாள்.
வருணுக்குத்தான் முகம் மாறாமல் காப்பது பெரும் கஷ்டமாயிற்று. மனதுக்குள் ஒரு கனமான அதிருப்தி பரவ, அமைதியாக உணவு மேசையில் அமர்ந்தான்.
அவள் விலகிச் சென்ற திசையையே சில நொடிகள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.
************
மாலை ஐந்தரை மணியளவில், அறைக்குள் வந்து வேகவேகமாய் தயாரான கணவனை கண்களால் பின்தொடர்ந்தபடி அமைதியாக பார்த்திருந்தாள் ஷோபனா.
தயாராகியதும், முதுகுப்பையை ஒற்றைத் தோளில் மாட்டியபடி, அவளை ஊடுருவும் பார்வை பாரத்தவன்,
"இன்னும் எத்தன நாளைக்கு இப்படியே உம்மென்டு இருக்கிற ஐடியா?" அவனது நிதானமான கடுமையிலும், நியாயமான கோவத்திலும் கண்கள் குளம் கட்டத்தொடங்க, வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்து நின்றிருந்தவன்,
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" என தணிந்த குரலில் கேள்வி எழுப்பவும்,
சட்டென்று அவன் முகம் பார்த்தாள்.
ஷோபனா நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவனுடன் சிரித்து, மகிழ்ந்து, இனிமையாகப் பேசுவாள்.
ஆனால், அவன் அப்படியல்ல.
எத்தனை முறை அவள் அவனை எடுத்தெறிந்து பேசியிருந்தாலும், 'டேப்லெட் போடு ஷோபா...'அல்லது 'டாக்டர்கிட்ட போ ஷோபா...' என்பதுதான் அந்த உரையாடலில் அவனது கடைசி வார்த்தைகளாக இருக்கும்.
எவ்வளவு கோபமாக இருந்தாலும், அந்தச் சில வார்த்தைகளிலேயே தன் அக்கறையையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்திவிடுவான்.
அதை நினைத்தவளுக்கு, தன்னைத் தானே எண்ணி வெட்கமாக இருந்தது.
தான் எத்துனை பெரிய சுயநலவாதி என, உள்ளுக்குள் தன்னையே நிந்தித்தபடி அவன் வார்த்தைகளுக்காக காத்திருந்தாள்.
"தயவு செஞ்சு... நானா எடுக்கும் வரைக்கும், எனக்குக் கோல் எடுக்காத. உங்கட அம்மாட்டயும் அதையே சொல்லு... ப்ளீஸ்..." என்றவன், கதவை அறைந்து சாற்றிவிட்டு சென்றிருந்தான்.
ஷோபனாவோ, அவன் உதவியாக என்ன கேட்டான்- என்பதை நம்பமுடியாமல், மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி கிரகிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அம்மாட்டையும் சொல் என்பதன் அர்த்தம்? ஷோபனாவுக்கு இனிமேல் என்ன நடந்தாலும் அவனுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்பது தானே..!
****************
மூன்று வாரங்கள் கடந்திருந்தன.
ஆனால், அபித்ரனின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் அடங்கியிருக்கவில்லை.
'ஒரு மாணவனின் தற்கொலை' என்று தொடங்கிய செய்தி, இப்போது 'பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை', 'மாணவர்களை குறிவைக்கும் போதைப்பொருள் வலையமைப்பு', என நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எடுத்துக் கொண்டே சென்றது.
போலீஸ் விசாரணையும் தொடர்ந்து கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்தும், தனியார் வகுப்பு நடத்துபவர்களிடமிருந்தும் தொடர்ந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
சம்பவத்துடன் தொடர்புடைய 'குரு' என்பவன் கைது செய்யப்பட்டதாகவும், மற்றவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
சரணும், மனோவும் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக ஊரெங்கும் பேசப்பட்டது. அந்தப் பேச்சின் உண்மைத்தன்மை உறுதியாகத் தெரியாதபோதிலும், சம்பந்தப்பட்ட குடும்பங்களின் நிம்மதியை, அது வெகுவாகக் குலைத்திருந்தது.
பாடசாலை நிர்வாகமும் கைகட்டி நிற்கவில்லை.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மாணவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பெற்றோர்களுக்கான விசேட சந்திப்புகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் நட்பு வட்டம் முதல் சமூக வலைத்தளப் பயன்பாடு வரை, ஒவ்வொன்றையும் பெற்றோர் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், விசேட அனுமதி வழங்கப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர, வெளியாட்கள் எவரும் பாடசாலைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்திற்குள் நுழையக் கூடாது என்ற புதிய விதியும் நடைமுறைக்கு வந்திருந்தது.
அபித்ரனுக்கு நீதி கோரி மாணவர்களும், சமூக அமைப்புகளும் இணைந்து அமைதிப் போராட்டங்களை நடத்தினர்.
"எங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்!"
" மாணவரிடத்தில் போதைப்பொருளுக்கு இடமில்லை!"
என்ற முழக்கங்கள், அந்த ஊரின் பிரதான வீதிகளில் பல நாட்கள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.
அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மாணவர்களின் அடையாளங்களை மறைத்தே செய்திகளை வெளியிட்ட போதிலும், சமூக வலைத்தளங்கள் எந்த எல்லையையும் மதிக்கவில்லை.
யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோரின் கைப்பேசிகளை அடைந்துவிட்டன.
சம்பந்தப்பட்ட நால்வரின் புகைப்படங்களும், பெயர்களும், அவர்கள் படிக்கும் பாடசாலையின் பெயரும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவின.
அந்தச் செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு முக்கியக் காரணம், சரணின் தந்தை கமலசேகர்.
இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க இருந்த அவரை குறிவைத்து, அரசியல் கட்சிகள் இந்தச் சம்பவத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கின.
'சட்டம் பேசும் லோயரால் சொந்த மகனையே ஒழுங்காக வளர்க்க முடியவில்லையாம்.'
'உண்மையை மறைக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறாராம்.'
என்ற விமர்சனங்கள் அரசியல் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவின.
அவரது ஆதரவாளர்கள் அதை அரசியல் சதியென்று மறுத்தனர்.
எதிரணியினரோ, 'ஒரு மாணவனின் உயிரைவிட எந்தப் பதவியும் பெரியதல்ல' என்று பொதுக்கூட்டங்களில் பேசத் தொடங்கினர்.
ஒரு மாணவனின் மரணம், ஒரு குடும்பத்தின் துயரத்தைத் தாண்டி அரசியல் விவாதப் பொருளாகவும் மாறியிருந்தது.
வருண் சொல்லியதன் பேரில், மாதவனும் அவன் அன்னை தேவியும் யாழினியின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
வருண் வந்து கேட்ட போது, யாழினி ஒரேயடியாக மறுத்திருந்தாள். சிவா, கொஞ்சம் எடுத்து சொல்லிய பிறகு தான் சரி என்றிருந்தாள்.
ஆரம்ப நாட்களில், ஆதியை மாதவனுடன் தனியாக விட யாழினி பெரிதும் தயங்கினாள்; பயந்தாள். அதை மாதவனும் உணர்ந்தே இருந்தான். ஆனால், நிலைமையைப் புரிந்துகொண்டு அமைதியாகவே நடந்துகொண்டான்.
நாள்கள் நகர நகர, யாழினியின் மனமும் மாறியது. முன்பைப் போல இல்லாமல், அவர்களுடன் இயல்பாகப் பேசத் தொடங்கினாள்.
மாதவன், அம்மாவிடம் கெஞ்சிக் கெஞ்சி ஒருவழியாய் அனுமதி பெற்றுக்கொண்டு, தன் மாமாவைப் பார்க்க சென்றிருந்தான். ஆனால் கமலசேகரும், சரணும் அவன் முகம் பார்க்கவே மறுத்துவிட்டனர்.
மனோவும் அவனுடன் பேசவில்லை. அன்டனி மாத்திரம் மாதவனுடன் பழையபடி இயல்பாய் பேசினான்.
மாலை நேரங்களில், சிவாவையும் ஆதியையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த பூங்காவிற்கோ, விளையாட்டு மைதானத்திற்கோ, சில சமயங்களில் கடற்கரைக்கோ செல்வான் மாதவன்.
ஆதியுடன் சேர்ந்து காற்பந்து விளையாடும் அந்தச் சில மணித்துளிகள்தான், அவன் மனதில் தேங்கியிருந்த பாரத்தை ஓரளவாவது மறக்கச் செய்தன.
ஆனால், வெளி உலகம் அவனை மறக்கவில்லை.
ஒருநாள் மாலை, பூங்காவிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த மதுஷ்ணவியின் தந்தையைக் கண்டான்.
அவனை யாரென்று இனங்கண்டு கொண்டவர், ஒரு கணம் அவன் முகத்தையே பார்த்துவிட்டு விலகி நடந்தார்.
திட்டவும் இல்லை.
சாபமிடவும் இல்லை.
ஆனால், அந்த ஒற்றைப் பார்வையில் இருந்த வெறுப்பும், அருவருப்பும், மாதவனைத் தலைகுனிய வைத்தன; கண்கலங்க வைத்தன.
இதையெல்லாம் விட, மாதவனை அதிகம் வதைத்தது வேறொன்று.
இந்த மூன்று வாரங்களில் ஷோபனா இருமுறை யாழினியின் வீட்டிற்கு வந்திருந்தாள். தேவியுடன் நல்லமுறையில் பேசினாள்; பழகினாள்.
மாதவனிடம் மட்டும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
அவன் எவ்வளவோ முறை, "அக்கா..." என்று தயக்கத்தோடு அழைத்துப் பார்த்தான். ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கேட்டான்.
அவளோ, அவன் சொற்களைக் கேட்காதவளைப் போல அமைதியாக விலகிச் சென்றாள்.
அந்த அமைதியான ஒதுக்கம்...
மாதவனின் குற்றவுணர்வை நாளுக்கு நாள் இன்னும் ஆழமாகக் கீறிக்கொண்டே இருந்தது.
*****************
இன்று ஷோபனாவின் பிறந்தநாள்...
காலையிலேயே பெற்றோருடன் கோயிலுக்குச் சென்று வந்தவள், அறைக்குள் நுழைந்ததும் கைபேசியைத்தான் எடுத்தாள்.
பேட்டர்ன் லொக்கைத் திறப்பதும்...
மீண்டும் அணைப்பதுமாகவே இருந்தாள்.
வருணிடமிருந்து ஒரு சிறிய வாழ்த்துச் செய்தியேனும் வந்திருக்குமோ என்ற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு முறையும் அவளை கைபேசியை நோக்கி இழுத்தது.
ஆனால்...
திரையில் இருந்தது ஏமாற்றம் மட்டும்தான்.
"தயவு செஞ்சு... நானா எடுக்கும் வரைக்கும் எனக்குக் கோல் எடுக்காத...... ப்ளீஸ்..."
அன்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.
அந்தக் குரலில் இருந்த உச்சகட்ட இயலாமையும், கலங்கிய கெஞ்சலும் இன்றுவரை அவளால் மறக்க முடியவில்லை.
அதற்குப் பிறகு அவளும் அவனை அழைக்கவில்லை.
அவனிடமிருந்தும் ஒரு அழைப்பு வரவில்லை.
இடையில் போயா தின விடுமுறையன்று வீட்டிற்கு வராதபோது மட்டும், குமரனுக்கு அழைத்துப் பேசியிருந்தாள்.
குமரன், தான் அழைத்த விஷயத்தை சொல்லியதும் வருண் தனக்கு அழைக்கக்கூடும் என்ற நம்பிக்கையோடு அன்றிரவு முழுவதும் காத்திருந்தாள்.
ஆனால்...
கல்நெஞ்சக்காரன்.
அவன் புறத்திலிருந்து ஒரு அழைப்புகூட வரவில்லை.
அந்த நினைவு மீண்டும் மனதைத் துளைக்க, இனியும் பிடிவாதம் பிடித்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது.
மனம் கேட்காமல், அவனது எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
எடுக்கப்படவில்லை.
மீண்டும் முயற்சித்தாள்.
மீண்டும்...
'No Answer.'
இதயம் காரணமே இல்லாமல் கனத்தது.
இதோ.. அந்த வழமையான இறுக்கம், நெஞ்சம் முழுவதும் மெல்லப் பரவத் தொடங்கியது. தன் நெஞ்சுப்பகுதியை நீவி விட்டவளுக்கு,
'மயங்கிக் கியங்கி விழுந்தாலும்...'
என்ற எண்ணம் தோன்றவும்,
உடனே சென்று குளிர்ந்த நீரை எடுத்து பருகினாள்.
சற்றுநேரம் தன்னைத்தானே சமாளிக்க முயன்றவள், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
யாழினி வீட்டுக்கு போகலாம். வருணைப் பற்றி நன்றாகவே கோள் சொல்லிக் கொடுக்கலாம். என்று நினைத்தவளுக்கு, உதட்டோரத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
அப்போதுதான் இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது.
யாழினியும் இன்னும் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லையே!
'பரவாயில்லை... அப்படியே,அவக்கும் சேர்த்து முதுகுல இரண்டு அடி போடலாம்.'
என்று முணுமுணுத்தபடி, நீண்ட நாட்களின் பின் ஒரு குஷியான மனநிலையில் வீட்டை விட்டு வெளியேறினாள்.
*****************
வழமையாக வண்டியை நிறுத்தும் இடத்தில் அதை நிறுத்திவிட்டு, யாழினியின் வீட்டிற்குள் நுழைந்தாள் ஷோபனா.
விறாந்தையில், தரையில் கால்களை மடக்கி அமர்ந்தபடி, ஆராவுடன் சேர்ந்து வண்ணப் பென்சில்களால் சித்திரம் வரைந்து கொண்டிருந்தார் தேவி.
வாசலில் நின்ற ஷோபனாவைக் கண்டதும், அவர் முகம் சட்டென்று மலர்ந்தது.
"வாம்மா..."
என்று புன்னகையுடன் தலையசைத்தவருக்கு, பதிலாக அழகான முறுவலொன்றைச் சிந்தினாள் ஷோபனா.
"ஹாப்பி பர்த்டே மாமி!"
என்று ஓடி வந்த ஆதி, அவளிடம் கை கொடுத்து வாழ்த்தினான்.
"தேங்க்ஸ் டா..."
என்று அவன் தலையை வருடியவள், வீட்டுக்குள் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாள்.
அந்த நேரம்தான் ஹாலின் மறுபக்கத்தில் நின்றிருந்த மாதவன் மெதுவாக முன்னே வந்தான்.
தயக்கத்தோடு...
கிட்டத்தட்ட குற்றவாளியைப் போல...
முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த, வண்ணத்தாளால் சுற்றப்பட்ட அந்த சிறிய பரிசை அவள் முன் நீட்டி,
"ஹாப்பி பர்த்டே... அக்கா.."
மெல்லிய குரலில் சொன்னான்.
ஒரு கணம்...
வீடே அமைதியாகிப் போனது.
தேவியின் கண்களில் எதிர்பார்ப்பு.
யாழினியின் முகத்திலோ,
இறுக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.
ஒரு நொடி தயங்கிய ஷோபனா...
பிறகு மெதுவாகக் கையை நீட்டி அந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டாள்.
"தேங்க்ஸ்..."
என்ற ஒற்றை வார்த்தை, மிகவும் மெல்லிய குரலில் அவளிடமிருந்து வெளியேறியது.
அந்த ஒரு வார்த்தை போதும் என்பதுபோல, மாதவனின் முகத்தில் நிம்மதி பரவியது.
"பிரிச்சு பாருங்கக்கா..." என்றுபுதுவித உரிமைக் குரலில் அவன் சொன்னதைக் கேட்காதது போல , அதை ஸ்டூலில் வைத்திருந்தாள் ஷோபா.
மாதவன் உள்ளுக்குள் சுணங்கினாலும், அதைப் பெரிதாகவெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. அவனது அக்கா அதை வாங்கியதே அவனுக்கு மகிழ்ச்சி தான்.
அடுத்த நொடியே,
ஆதியைப் பார்த்து கையை உயர்த்தினான்.
"யெஸ்!"
என்று இருவரும் ஹை-ஃபை அடித்துக்கொண்டு, தங்களது சந்தோஷத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.
அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் மீண்டும் சமையலறைக்குள் சென்றாள் யாழினி.
அந்தச் சிறிய காட்சியைப் பார்த்த தேவி, யாருக்கும் தெரியாமல் பெருமூச்சொன்றை வெளியேற்றினார்.
*************************
Last edited: