கொழும்பு வெள்ளவத்தை காலிவீதியில், குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 1 ஆம் ஷாப்பல் லேனுக்கு எதிர்புற நடைபாதையில் மெல்ல, மிக மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தார் கணேசன்.
இவர் வெளியில் வரத் தயாராகவும், "விழா ஆரம்பிக்கிற நேரத்தில எங்க போறீங்க அப்பா? அதுவும் தனியா?" வாசலில் வைத்தே தடுத்துக் கேட்டிருந்தான் இளையமகன் பரசு.
சிலமாதங்களுக்கு முன்னர் தான் பைப்பாஸ் சர்ஜரி நடந்த உடம்பு . அதனால் குடும்பத்தாரிடம் இப்படியான கரிசனைமிக்க அன்புத் தொல்லைகள் அதிகம்.
" இல்லயப்பு, நிறைய நாட்களுக்குப் பிறகு இங்க வந்திருக்கிறன். நீங்கதான் இப்பவெல்லாம் ஹோட்டலுக்கும் வர விடுறதில்ல. இப்பிடி வரும் போதுசரி நான் நடந்து திரிஞ்ச இடங்களை ஒருக்காப் பார்த்திட்டு வாறனே. " கணேசன் பிடிவாதமாகச் சொல்ல, "கனக்கத் தூரம் எல்லாம் போக வேணாம் பா; ஒரு பத்து நிமிசத்தில திரும்பி வர வேணும்."அன்பு கலந்த கண்டிப்போடு சொல்லிச் சென்றிருந்தான் மகன்.
" நான் என்ன குழைதையாடா?"
பாசத்தோடு அவன் முதுகில் தட்டிவிட்டு வெளியில் வந்து இரண்டு நிமிட நடையில் காலிவீதியில் ஏறியிருந்தார் கணேசன். அந்த மூலையில் இருந்தது அவர்களின் ஹோட்டல்.
அவரின் பல வருடக் கனவு நனவாகும் விழா நடக்கவிருப்பது ஹோட்டலின் பின்புறத்தில் உள்ள புத்தம் புது இரு மாடிக் கட்டிடத்தில்.
ஹோட்டலின் முன்னால் கொஞ்ச நேரம் நின்றார் கணேசன்.
இன்று, இந்தப் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குச் சுவையான பதார்த்தங்களும் சுத்தமான பரிமாறல்களும் என்று எல்லோரையும் சுண்டியிழுக்கும் இதே ஹோட்டல், அன்று, மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்துப் பேரைச் சற்றே சிரமத்துடன் உள்ளடங்கிவிடும் அளவுக்குத் தான் இருந்தது. அந்தச் சிறிய இடமே இவரின் சொர்க்கமாக இருந்தது.
கடந்து வந்த இத்தனை வருடங்களின் கடுமையான உழைப்பின் மினுக்கம் அவரில் பட்டுத் தெறித்தது.
அவர் வாழ்வு மாறிய இடமல்லவா இது? அடங்காப் பாசத்தோடு ஹோட்டலைப் பார்வையால் வருடிவிட்டு மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினார் அவர்.
பார்வையோ பாதையின் இரு மருங்கையும் ஆர அமரத் தொட்டுத் தொட்டு நகர்ந்தது. எத்தனை எத்தனை தடவைகள் பார்த்தாலும் புதிது புதிதாக உணர்வுகளைக் கிளப்பி விடும் வல்லமை இந்த இடங்களின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் உண்டென்பது அவர் மட்டுமே முழுமையாக அறிந்த இரகசியம்.
சிறு பிராயத்து நினைவுகள் சில, அவை மகிழ்வானவையாகவோ உள்ளத்தைப் போட்டு உறுத்துபவையாகவோ இருப்பினும் கல்வெட்டென மனதில் பதிந்துவிடும் தெரியுமா?
ஒரு காலத்தில் ...ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னால் பத்து வயதுச் சிறுவனாக இந்தப் பகுதிக்கு வந்திருந்தான் அவன். தந்தை யாரென்று தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. அரவணைத்தாலும் சீறினாலும் சினந்தாலும் தாய் என்ற உறவொன்றுதான்.
கண்களை மூடிக்கொண்ட கணேசனின் முகத்தில் ஆரம்பத்தில் பலநாட்கள் இந்த நினைப்பு வருகையில் அருவருப்புத்தான் தோன்றும். பிறகு பிறகு ஏனோ அருவருக்கவும் முடியவில்லை.
அன்று வயிற்றின் பசி மட்டுமே பிரதானமாக உணர்ந்திருந்த பருவத்தில் அருவருத்த, அடங்காக் கோபத்தையும் எரிச்சலையும் உருவாக்கிய விசயத்தைப் பின்னரோ, விழுங்கிவிட்டுக் கடக்க முடிந்திருந்தது.
அன்று இந்தப் பகுதியெங்கும் ஒரு இறப்பர் செருப்புக் கூடப் போடாது கொளுத்தும் வெயிலில் காய்ந்து வறண்டு கருகிப் போன பாதங்களோடு, தாயோடு, பல வேளைகளில் தாயின் கிழிந்துபோன சேலைத் தலைப்பைப் பிடித்தபடி கையேந்தித் திரிந்தான், அந்தச் சிறுவன்.
நாள் முழுவதும் இரந்தும் இரவில் காந்தும் வயிற்றைத் தணிப்பதென்பது குதிரைக்கொம்பாகவே இருந்தது.
ஆமாம்! அவனைப் பொறுத்தமட்டில் வயிறு மட்டுமே 'என்னைக் கொஞ்சம்... துளியேனும் கவனியேன்' என்று இறைஞ்சி நின்றது. எவ்வளவுதான் மரத்துப் போனாலும் பசி, தாகம் இரண்டையும் துல்லியமாக இனம் கண்டு கொண்டது அவன் உள்ளம் .
இவர் வெளியில் வரத் தயாராகவும், "விழா ஆரம்பிக்கிற நேரத்தில எங்க போறீங்க அப்பா? அதுவும் தனியா?" வாசலில் வைத்தே தடுத்துக் கேட்டிருந்தான் இளையமகன் பரசு.
சிலமாதங்களுக்கு முன்னர் தான் பைப்பாஸ் சர்ஜரி நடந்த உடம்பு . அதனால் குடும்பத்தாரிடம் இப்படியான கரிசனைமிக்க அன்புத் தொல்லைகள் அதிகம்.
" இல்லயப்பு, நிறைய நாட்களுக்குப் பிறகு இங்க வந்திருக்கிறன். நீங்கதான் இப்பவெல்லாம் ஹோட்டலுக்கும் வர விடுறதில்ல. இப்பிடி வரும் போதுசரி நான் நடந்து திரிஞ்ச இடங்களை ஒருக்காப் பார்த்திட்டு வாறனே. " கணேசன் பிடிவாதமாகச் சொல்ல, "கனக்கத் தூரம் எல்லாம் போக வேணாம் பா; ஒரு பத்து நிமிசத்தில திரும்பி வர வேணும்."அன்பு கலந்த கண்டிப்போடு சொல்லிச் சென்றிருந்தான் மகன்.
" நான் என்ன குழைதையாடா?"
பாசத்தோடு அவன் முதுகில் தட்டிவிட்டு வெளியில் வந்து இரண்டு நிமிட நடையில் காலிவீதியில் ஏறியிருந்தார் கணேசன். அந்த மூலையில் இருந்தது அவர்களின் ஹோட்டல்.
அவரின் பல வருடக் கனவு நனவாகும் விழா நடக்கவிருப்பது ஹோட்டலின் பின்புறத்தில் உள்ள புத்தம் புது இரு மாடிக் கட்டிடத்தில்.
ஹோட்டலின் முன்னால் கொஞ்ச நேரம் நின்றார் கணேசன்.
இன்று, இந்தப் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குச் சுவையான பதார்த்தங்களும் சுத்தமான பரிமாறல்களும் என்று எல்லோரையும் சுண்டியிழுக்கும் இதே ஹோட்டல், அன்று, மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்துப் பேரைச் சற்றே சிரமத்துடன் உள்ளடங்கிவிடும் அளவுக்குத் தான் இருந்தது. அந்தச் சிறிய இடமே இவரின் சொர்க்கமாக இருந்தது.
கடந்து வந்த இத்தனை வருடங்களின் கடுமையான உழைப்பின் மினுக்கம் அவரில் பட்டுத் தெறித்தது.
அவர் வாழ்வு மாறிய இடமல்லவா இது? அடங்காப் பாசத்தோடு ஹோட்டலைப் பார்வையால் வருடிவிட்டு மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினார் அவர்.
பார்வையோ பாதையின் இரு மருங்கையும் ஆர அமரத் தொட்டுத் தொட்டு நகர்ந்தது. எத்தனை எத்தனை தடவைகள் பார்த்தாலும் புதிது புதிதாக உணர்வுகளைக் கிளப்பி விடும் வல்லமை இந்த இடங்களின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் உண்டென்பது அவர் மட்டுமே முழுமையாக அறிந்த இரகசியம்.
சிறு பிராயத்து நினைவுகள் சில, அவை மகிழ்வானவையாகவோ உள்ளத்தைப் போட்டு உறுத்துபவையாகவோ இருப்பினும் கல்வெட்டென மனதில் பதிந்துவிடும் தெரியுமா?
ஒரு காலத்தில் ...ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னால் பத்து வயதுச் சிறுவனாக இந்தப் பகுதிக்கு வந்திருந்தான் அவன். தந்தை யாரென்று தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. அரவணைத்தாலும் சீறினாலும் சினந்தாலும் தாய் என்ற உறவொன்றுதான்.
கண்களை மூடிக்கொண்ட கணேசனின் முகத்தில் ஆரம்பத்தில் பலநாட்கள் இந்த நினைப்பு வருகையில் அருவருப்புத்தான் தோன்றும். பிறகு பிறகு ஏனோ அருவருக்கவும் முடியவில்லை.
அன்று வயிற்றின் பசி மட்டுமே பிரதானமாக உணர்ந்திருந்த பருவத்தில் அருவருத்த, அடங்காக் கோபத்தையும் எரிச்சலையும் உருவாக்கிய விசயத்தைப் பின்னரோ, விழுங்கிவிட்டுக் கடக்க முடிந்திருந்தது.
அன்று இந்தப் பகுதியெங்கும் ஒரு இறப்பர் செருப்புக் கூடப் போடாது கொளுத்தும் வெயிலில் காய்ந்து வறண்டு கருகிப் போன பாதங்களோடு, தாயோடு, பல வேளைகளில் தாயின் கிழிந்துபோன சேலைத் தலைப்பைப் பிடித்தபடி கையேந்தித் திரிந்தான், அந்தச் சிறுவன்.
நாள் முழுவதும் இரந்தும் இரவில் காந்தும் வயிற்றைத் தணிப்பதென்பது குதிரைக்கொம்பாகவே இருந்தது.
ஆமாம்! அவனைப் பொறுத்தமட்டில் வயிறு மட்டுமே 'என்னைக் கொஞ்சம்... துளியேனும் கவனியேன்' என்று இறைஞ்சி நின்றது. எவ்வளவுதான் மரத்துப் போனாலும் பசி, தாகம் இரண்டையும் துல்லியமாக இனம் கண்டு கொண்டது அவன் உள்ளம் .
Last edited: