உறை நீர் - 19
பல காலமாய் தன்னை விட்டு தன் நிழலை விட்டு தனித்திருந்த மகள் தனக்கே தனக்காய் இந்த தந்தையின் தாய்மையை தேடும் தருணம் அதை முழுதுமாய் தந்துவிட தயக்கம் காட்டுமோ அந்த பெற்றவரின் பெருமனம்..
கண்கள் பொங்க நா தழுதழுக்க கரகரத்த குரலில் "நவிக்குட்டி .. நீ எங்க கூப்பிட்டாலும் இந்த அப்பா வரத் தயாரா இருக்கேன்.. ஒரு அப்பாவா சிந்துவும் ரியாவும் இனி என் கூட இருக்க முடியாதேன்னு எனக்கு வருத்தம் இருக்கும்.. அவங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. ஆனா நான் இல்லன்னாலும் இந்த வீட்டுல அவங்க பாதுகாப்பா இருப்பாங்க.. ஆனா இப்போ உன்னை இங்கருந்து போக விட்டா எந்த பாதுகாப்பும் இல்லாம திரும்ப உனக்கு ஏதாவது தப்பா நடக்கிறதுக்கு நானே ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் குடுத்த மாதிரி ஆகிடும்.. அப்படி ஒரு நிலைமைல உன்னை தள்ள நான் தயாரா இல்லைடா.. இத்தனை காலமா நீ இழந்த இந்த அப்பாவோட பாசத்தை உனக்கு சேர்த்து வச்சு குடுப்பேன்டா.. சிந்துவும் ரியாவும் என்னை புரிஞ்சிப்பாங்கன்னு நம்புறேன்.."
என்றவர் சிந்து ரியாவின் பக்கம் ஒரு இறைஞ்சலான பார்வையை செலுத்த அவர்களுக்கோ இதை ஏற்கவே முடியவில்லை..
"அது எப்படிப்பா? குழந்தையா இருந்த என்னை ஆறு வருஷம் உங்க அக்கா கிட்ட விட்டுட்டு நீங்க சீதா அம்மாவோட இருந்தீங்க.. எனக்கு புரியுது.. என் அம்மா மேல தப்பு இருக்கு.. ஆனா ஆறு வருஷம் கழிச்சு அம்மாவோட நீங்க இங்க வரணும்ன்னு சொன்னப்போ சிந்து ஏற்கனவே தனியா இருக்க பழகிட்டா... அவ அப்படியே தனியா இருந்துருவான்னு சொன்ன நீங்க இப்போ இவளுக்கு மட்டும் வேற நியாயம் பேசறீங்களேப்பா.. அது என்னப்பா அவ அவ்வளவு ஸ்பெஷல்? நானும் நீங்க பெத்த பொண்ணு தானேப்பா?" சிந்து தன் தந்தையை ஆழமாய் பார்த்தபடி கேட்க
"இல்லடா சிந்து.. இப்பவும் சொல்றேன்.. எனக்கு நீங்க வேற நவி வேற இல்ல.. ஆனா நவி நிறைய கஷ்டப்பட்டுட்டாடா.. அதுக்கு உங்க அம்மா மட்டும் இல்ல சீதா நானு ஏன் இந்த வீட்ல இருக்குற எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில காரணம் தான்.. இப்போ நான் அவ கூட போகாம அவளை தனியா இங்கே இருந்து வெளியே போக விட்டா அவ வாழ்க்கை மொத்தமா சீரழிஞ்சு போயிரும்.. உங்க ரெண்டு பேருக்கும் உங்க அம்மா இருக்கா.. உங்களைப் பார்த்துக்க இத்தனை உறவுகள் இருக்கு.. ஆனா நவிக்கு நான் மட்டும் தானடா இருக்கேன்?" அவருக்கு தொண்டையை அடைக்க வார்த்தைகள் ரொம்பவும் சிரமப்பட்டு வெளி வந்தது..
"இல்லப்பா.. அந்த பொண்ணு இங்க உங்களோட இருக்கணும்னா.." என்றவளை முறைத்த பூமா
"சிந்து.. அவ பேரு நவ்யா.. அவ உன் தங்கச்சி.. அது ஞாபகம் இருக்கட்டும்.." என்றாள்..
"இல்லம்மா.. முதல்ல அவளை என் தங்கச்சின்னு சொல்லாதீங்க.. அவ உங்களுக்கு பொறக்கல.."
"அதனால.. அவ உன் தங்கச்சி இல்லையா? அப்படி பார்த்தா ரியா கூட உன் அப்பாக்கு பொறந்தவ இல்லை.. அதனால அவளையும் உன் தங்கச்சி இல்லன்னு சொல்லிடுவியா?"
"இல்லம்மா.. ரியா என் கூடவே வளர்ந்தவ.. அதனால இப்பவும் நான் அவளை என் தங்கச்சியா தான் பார்க்குறேன்.. ஆனா நிலா..? என்னதான் இருந்தாலும் அந்த மாதிரி ஒரு இடத்துல இருந்துட்டு வந்தவளை என் தங்கச்சின்னு என்னால வெளில சொல்லிக்க முடியாது.. அது எனக்கு அவமானம்.. ரியா எப்படியோ.. இது வரைக்கும் நான் எந்த ஒரு தப்பும் இல்லாம ஒழுக்கமா தான் நடந்துருக்கேன்.. நிலாவோட நிலைமையை நெனைச்சு என்னால அனுதாபப் பட முடியும்.. ஆனா அவளை சொந்தம் கொண்டாட முடியாது.. இப்ப இல்லைன்னாலும் இவ இங்க இருந்தா மத்தவங்க எல்லாருடைய பார்வையும் நம்மள குத்தும் போது கொஞ்சம் கொஞ்சமா இங்க இருக்குற எல்லாருக்கும் இப்படி தான் தோணும்.. எங்களை விடுங்க.. அழகு மாமா வந்தாருன்னா.. இவ இந்த வீட்ல அடுத்து ஒரு நிமிஷம் இருக்க முடியாது.. அவர் இருக்கவும் விடமாட்டார்.."
கொஞ்சமும் வருத்தம் இல்லாமல் சிந்து பேச "சிந்து.. நவி இந்த வீட்ல இருக்கணுமா இல்லையாங்கிறதை உன் அப்பாவும் மாமாவும் தான் டிசைட் பண்ணனும்.. வேற யாருக்கும் அவ இங்க இருக்க கூடாதுன்னு சொல்ற உரிமை கிடையாது.. அப்புறம்.. இந்த ஒழுக்கங்கறது உடம்பு சம்மந்தப்பட்டது இல்ல மனசு சம்பந்தப்பட்டது.. இது உனக்கு புரியலைன்னா உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல.. இனிமே மாமா தான் டிசைட் பண்ணனும்.."
தமிழ் தன் மாமனை ஒரு கேள்வியோடு பார்த்த படி சொன்னான்.
"அப்பா.. இந்த விஷயத்தை பேசறதுக்கு எனக்கு உரிமை கிடையாதுன்னு நீங்க நினைக்கலாம்.. ஏன்னா நீங்க என்னை பெத்தவர் கிடையாது.. இதுவரைக்கும் நீங்க எனக்கு அப்பாவா இருந்து செஞ்சதே பெரிய விஷயமா இருக்கலாம்.. நான் ஒருவேளை நிலாவை விட்டுட்டு நீங்க என்கூட தான் இருக்கணும்னு சொன்னா நீங்க அதை இக்னோர் பண்ணிட்டு நிலா கூட போகலாம்.. ஆனா யூ ஹேவ் ரெஸ்பான்ஸிபிலிட்டி டுவார்ட்ஸ் சிந்து.. நீங்க அவளோட பெத்த அப்பா.. அவ அவளோட தான் நீங்க இருக்கணும்னு சொல்லும்போது அதுவும் அவளோட அப்பாவா அவ அம்மாவோட புருஷனா இருக்கணும்னு சொல்லும்போது நீங்க எப்படிப்பா அதை மறுக்க முடியும்? ஆர் யூ கோயிங் டு எஸ்கேப் ஃப்ரம் யுவர் ரெஸ்பான்சிபிலிட்டி?" என்று கேட்டவளை அடிபட்ட பார்வை பார்த்தார் ஜெகந்நாதன்..
அந்தப் பார்வையிலேயே அவருடைய முடிவு தெரிந்து போனது நவ்யாவுக்கு..
"ம்ஹூம்.. வேண்டாம்.. இவர் என்ன முடிவு சொல்வாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. அப்படியே என்னை மகளா ஏத்துக்கிட்டு இவர் என்னோட வந்தாலும் இவரால நிம்மதியா இருக்க முடியாது.. குற்ற உணர்ச்சில செத்தே போயிருவாரு.." என்றவள் ஒரு பெருமூச்சை விட்டு
"நான் இந்த வீட்டை விட்டு வெளியே போறேன்.. என்னால சிந்துவும் ரியாவும் என் கூட இருக்கிறதை கூட பொறுத்துக்க முடியும்.. ஆனா இவரோட மனைவியா இதோ இவங்க இருக்கிறதைப் பொறுத்துக்கிட்டு இவரோட மகளா என்னால இந்த வீட்ல இருக்க முடியாது.. அதனால நான் கிளம்புறேன்.." என்றவளின் கையை ஓடி வந்து பற்றிய பூமா
"அம்மாடி.. உனக்கு நான் இந்த வீட்ல இருக்குறது தான் பிரச்சனைனா நான் இந்த வீட்டை விட்டு போயிடறேன்மா.. நீ உங்க அப்பா கூட சந்தோஷமா இரு.. ஏற்கனவே என் அக்கா வாழ்க்கையையும் உன் வாழ்க்கையையும் மொத்தமா அழிச்சிட்டேன்.. இதுக்கு மேல உன் வாழ்க்கை கெட்டுப் போறதுக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்.. நான் இந்த நிமிஷம் இந்த வீட்டை விட்டு போயிடுறேன்.." என்றவளை ஒரு கண்டிப்பான பார்வையோடு
"அம்மாஆஆ.." என்று மிரட்டலாய் அழைத்தனர் சிந்துவும் ரியாவும்..
"ஆமாம்.. இந்த வீட்டு இளவரசி நவ்யா.. அவ இந்த வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டாம்.. நான் போறேன்.. நான் அவுட் ஹவுஸ்ல போய் இருக்கேன்.. நீ இங்கேயே இருடா நவிமா.." கெஞ்சினாள் பூமா..
அதைப் பார்த்த சிந்துவுக்கம் ரியாவுக்கும் எரிச்சலாய் வந்தது.
ஆனால் நவ்யாவோ அவள் வார்த்தைக்கு கொஞ்சமும் செவி சாய்க்காமல் தன் கைகளை பிடித்திருந்த அவள் கையை விலக்கிவிட்டு கார்த்தியை வைத்துக் கொண்டு அருகே நின்று கொண்டிருந்த சூர்யாவின் கையை பிடித்துக் கொண்டு "வா சூர்யா போலாம்.." என்று அங்கிருந்து போக வாசல் பக்கம் திரும்பினாள்..
"நவி ஒரு நிமிஷம்" என்றான் தமிழ்..
அவளை அப்படி அழைத்தவன் முன்பக்கம் திரும்பி சுனிதாவோடு கண்களால் ஏதோ பேசினான்.. அவளும் கண்ணை மூடி திறந்து ஆமோதிப்பாக தலையாட்ட அதைக் கண்டவன் இதழில் ஒரு நெகிழ்வான புன்னகை மலர்ந்தது.. அடுத்ததாய் தன் அன்னை தந்தையை அவன் பார்க்க அவர்களும் புன்னகை முகமாக அவன் எடுத்த முடிவைப் புரிந்து சம்மதம் தெரிவித்திருந்தார்கள்..
அவன் பார்வையிலே அவன் என்ன முடிவெடுத்து இருப்பான் என்று புரிந்து போனது அவர்களுக்கு.. தனக்கு பின்னால் நின்றிருந்த நவ்யாவின் பக்கம் திரும்பியவன் "உன்னால இந்த வீட்ல என் மாமாவோட மகளாத் தானே இருக்க முடியாது.. ஆனா என் மனைவியா இருக்க முடியும் இல்ல..?"
அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து அவனை நம்ப முடியாத பார்வை பார்த்தாள் நவ்யா..
"என்ன பேசுறீங்க நீங்க? உங்களால எப்படி இப்படி பேச முடியுது? உங்களுக்கும் இதோ இவங்களுக்கும்.." என்று சுனிதாவை காட்டியவள்
"கல்யாணம் பேசி நிச்சயம் பண்ணி இருக்காங்க.. அப்படி இருக்கும்போது ஒரே நிமிஷத்துல என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீங்க.. இந்த ஆம்பளைங்க எல்லாருமே இப்படித்தானா? ஒரு பொண்ணோட பழகி அவ மனசை கலைச்சுட்டு அவளை வேண்டாம்னு ஈஸியா சொல்ல முடியுது இல்ல உங்களால..?" என்று முகத்தில் ஒரு இகழ்ச்சி பாவனையோடு அவள் சொல்ல
அதற்கு பதிலைத் தமிழ் சொல்லவில்லை.. சுனிதா சொன்னாள்..
"ஐயோ நவி தெய்வமே.. எனக்கு இப்பத்தான் இந்த கல்யாணத்திலிருந்து எஸ்கேப் ஆகறதுக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு ஆத்தா.. தயவு செஞ்சு அதைக் கெடுத்துடாத நவிம்மா.. இந்த ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு இத்தனை நாள் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன்.. எங்க அப்பா சொன்ன ஒரே காரணத்துக்காக தான் வேற வழி இல்லாம இந்த உம்மணா மூஞ்சி ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.." என்று அவள் சொல்ல
"போதும் உங்க நடிப்பு.. சும்மா எனக்காக தியாகம் பண்றதா நெனைச்சுக்கிட்டு அவரை பிடிக்காத மாதிரி நடிக்காதீங்க.. நிச்சயமா உங்களை மாதிரி தைரியமான பொண்ணுங்க எல்லாம் யாருடைய வற்புறுத்தலுக்காகவும் பிடிக்காத ஒருத்தரை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.. எனக்காக யாரும் உங்க வாழ்க்கையை விட்டுக் கொடுக்க வேண்டாம்.."
உறுதியாகச் சொன்னாள் அவள்..
"ஏன்? உனக்கு என்னை பிடிக்கலையா நவ்யா..? என்கிட்ட ஏதாவது குறை இருக்கா? உனக்கு ஒரு நல்ல புருஷனா நான் இருக்கமாட்டேன்னு தோணுதா? என்னை வேணாம்னு சொல்ல என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா மேடம்.." என்று தமிழ் கேட்க அவன் அருகே வந்து அவனை ஆழ்ந்து பார்த்தாள் நவ்யா.. அந்தப் பார்வையில் ஆயிரம் கேள்விகள் புதைந்து கிடந்தன..
"நான் சொல்றது இருக்கட்டும்.. நீங்க எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? இதுக்கு பரிதாபம் காரணமா? இல்லை உங்க மாமா பொண்ணுங்கற கடமை காரணமா?" பளிச்சென்று தெளிவாய் கேட்டாள் அவள்.
"ரெண்டும் இல்லை" என்றான் அவன்..
நீர் உறையும்..
பல காலமாய் தன்னை விட்டு தன் நிழலை விட்டு தனித்திருந்த மகள் தனக்கே தனக்காய் இந்த தந்தையின் தாய்மையை தேடும் தருணம் அதை முழுதுமாய் தந்துவிட தயக்கம் காட்டுமோ அந்த பெற்றவரின் பெருமனம்..
கண்கள் பொங்க நா தழுதழுக்க கரகரத்த குரலில் "நவிக்குட்டி .. நீ எங்க கூப்பிட்டாலும் இந்த அப்பா வரத் தயாரா இருக்கேன்.. ஒரு அப்பாவா சிந்துவும் ரியாவும் இனி என் கூட இருக்க முடியாதேன்னு எனக்கு வருத்தம் இருக்கும்.. அவங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. ஆனா நான் இல்லன்னாலும் இந்த வீட்டுல அவங்க பாதுகாப்பா இருப்பாங்க.. ஆனா இப்போ உன்னை இங்கருந்து போக விட்டா எந்த பாதுகாப்பும் இல்லாம திரும்ப உனக்கு ஏதாவது தப்பா நடக்கிறதுக்கு நானே ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் குடுத்த மாதிரி ஆகிடும்.. அப்படி ஒரு நிலைமைல உன்னை தள்ள நான் தயாரா இல்லைடா.. இத்தனை காலமா நீ இழந்த இந்த அப்பாவோட பாசத்தை உனக்கு சேர்த்து வச்சு குடுப்பேன்டா.. சிந்துவும் ரியாவும் என்னை புரிஞ்சிப்பாங்கன்னு நம்புறேன்.."
என்றவர் சிந்து ரியாவின் பக்கம் ஒரு இறைஞ்சலான பார்வையை செலுத்த அவர்களுக்கோ இதை ஏற்கவே முடியவில்லை..
"அது எப்படிப்பா? குழந்தையா இருந்த என்னை ஆறு வருஷம் உங்க அக்கா கிட்ட விட்டுட்டு நீங்க சீதா அம்மாவோட இருந்தீங்க.. எனக்கு புரியுது.. என் அம்மா மேல தப்பு இருக்கு.. ஆனா ஆறு வருஷம் கழிச்சு அம்மாவோட நீங்க இங்க வரணும்ன்னு சொன்னப்போ சிந்து ஏற்கனவே தனியா இருக்க பழகிட்டா... அவ அப்படியே தனியா இருந்துருவான்னு சொன்ன நீங்க இப்போ இவளுக்கு மட்டும் வேற நியாயம் பேசறீங்களேப்பா.. அது என்னப்பா அவ அவ்வளவு ஸ்பெஷல்? நானும் நீங்க பெத்த பொண்ணு தானேப்பா?" சிந்து தன் தந்தையை ஆழமாய் பார்த்தபடி கேட்க
"இல்லடா சிந்து.. இப்பவும் சொல்றேன்.. எனக்கு நீங்க வேற நவி வேற இல்ல.. ஆனா நவி நிறைய கஷ்டப்பட்டுட்டாடா.. அதுக்கு உங்க அம்மா மட்டும் இல்ல சீதா நானு ஏன் இந்த வீட்ல இருக்குற எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில காரணம் தான்.. இப்போ நான் அவ கூட போகாம அவளை தனியா இங்கே இருந்து வெளியே போக விட்டா அவ வாழ்க்கை மொத்தமா சீரழிஞ்சு போயிரும்.. உங்க ரெண்டு பேருக்கும் உங்க அம்மா இருக்கா.. உங்களைப் பார்த்துக்க இத்தனை உறவுகள் இருக்கு.. ஆனா நவிக்கு நான் மட்டும் தானடா இருக்கேன்?" அவருக்கு தொண்டையை அடைக்க வார்த்தைகள் ரொம்பவும் சிரமப்பட்டு வெளி வந்தது..
"இல்லப்பா.. அந்த பொண்ணு இங்க உங்களோட இருக்கணும்னா.." என்றவளை முறைத்த பூமா
"சிந்து.. அவ பேரு நவ்யா.. அவ உன் தங்கச்சி.. அது ஞாபகம் இருக்கட்டும்.." என்றாள்..
"இல்லம்மா.. முதல்ல அவளை என் தங்கச்சின்னு சொல்லாதீங்க.. அவ உங்களுக்கு பொறக்கல.."
"அதனால.. அவ உன் தங்கச்சி இல்லையா? அப்படி பார்த்தா ரியா கூட உன் அப்பாக்கு பொறந்தவ இல்லை.. அதனால அவளையும் உன் தங்கச்சி இல்லன்னு சொல்லிடுவியா?"
"இல்லம்மா.. ரியா என் கூடவே வளர்ந்தவ.. அதனால இப்பவும் நான் அவளை என் தங்கச்சியா தான் பார்க்குறேன்.. ஆனா நிலா..? என்னதான் இருந்தாலும் அந்த மாதிரி ஒரு இடத்துல இருந்துட்டு வந்தவளை என் தங்கச்சின்னு என்னால வெளில சொல்லிக்க முடியாது.. அது எனக்கு அவமானம்.. ரியா எப்படியோ.. இது வரைக்கும் நான் எந்த ஒரு தப்பும் இல்லாம ஒழுக்கமா தான் நடந்துருக்கேன்.. நிலாவோட நிலைமையை நெனைச்சு என்னால அனுதாபப் பட முடியும்.. ஆனா அவளை சொந்தம் கொண்டாட முடியாது.. இப்ப இல்லைன்னாலும் இவ இங்க இருந்தா மத்தவங்க எல்லாருடைய பார்வையும் நம்மள குத்தும் போது கொஞ்சம் கொஞ்சமா இங்க இருக்குற எல்லாருக்கும் இப்படி தான் தோணும்.. எங்களை விடுங்க.. அழகு மாமா வந்தாருன்னா.. இவ இந்த வீட்ல அடுத்து ஒரு நிமிஷம் இருக்க முடியாது.. அவர் இருக்கவும் விடமாட்டார்.."
கொஞ்சமும் வருத்தம் இல்லாமல் சிந்து பேச "சிந்து.. நவி இந்த வீட்ல இருக்கணுமா இல்லையாங்கிறதை உன் அப்பாவும் மாமாவும் தான் டிசைட் பண்ணனும்.. வேற யாருக்கும் அவ இங்க இருக்க கூடாதுன்னு சொல்ற உரிமை கிடையாது.. அப்புறம்.. இந்த ஒழுக்கங்கறது உடம்பு சம்மந்தப்பட்டது இல்ல மனசு சம்பந்தப்பட்டது.. இது உனக்கு புரியலைன்னா உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல.. இனிமே மாமா தான் டிசைட் பண்ணனும்.."
தமிழ் தன் மாமனை ஒரு கேள்வியோடு பார்த்த படி சொன்னான்.
"அப்பா.. இந்த விஷயத்தை பேசறதுக்கு எனக்கு உரிமை கிடையாதுன்னு நீங்க நினைக்கலாம்.. ஏன்னா நீங்க என்னை பெத்தவர் கிடையாது.. இதுவரைக்கும் நீங்க எனக்கு அப்பாவா இருந்து செஞ்சதே பெரிய விஷயமா இருக்கலாம்.. நான் ஒருவேளை நிலாவை விட்டுட்டு நீங்க என்கூட தான் இருக்கணும்னு சொன்னா நீங்க அதை இக்னோர் பண்ணிட்டு நிலா கூட போகலாம்.. ஆனா யூ ஹேவ் ரெஸ்பான்ஸிபிலிட்டி டுவார்ட்ஸ் சிந்து.. நீங்க அவளோட பெத்த அப்பா.. அவ அவளோட தான் நீங்க இருக்கணும்னு சொல்லும்போது அதுவும் அவளோட அப்பாவா அவ அம்மாவோட புருஷனா இருக்கணும்னு சொல்லும்போது நீங்க எப்படிப்பா அதை மறுக்க முடியும்? ஆர் யூ கோயிங் டு எஸ்கேப் ஃப்ரம் யுவர் ரெஸ்பான்சிபிலிட்டி?" என்று கேட்டவளை அடிபட்ட பார்வை பார்த்தார் ஜெகந்நாதன்..
அந்தப் பார்வையிலேயே அவருடைய முடிவு தெரிந்து போனது நவ்யாவுக்கு..
"ம்ஹூம்.. வேண்டாம்.. இவர் என்ன முடிவு சொல்வாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. அப்படியே என்னை மகளா ஏத்துக்கிட்டு இவர் என்னோட வந்தாலும் இவரால நிம்மதியா இருக்க முடியாது.. குற்ற உணர்ச்சில செத்தே போயிருவாரு.." என்றவள் ஒரு பெருமூச்சை விட்டு
"நான் இந்த வீட்டை விட்டு வெளியே போறேன்.. என்னால சிந்துவும் ரியாவும் என் கூட இருக்கிறதை கூட பொறுத்துக்க முடியும்.. ஆனா இவரோட மனைவியா இதோ இவங்க இருக்கிறதைப் பொறுத்துக்கிட்டு இவரோட மகளா என்னால இந்த வீட்ல இருக்க முடியாது.. அதனால நான் கிளம்புறேன்.." என்றவளின் கையை ஓடி வந்து பற்றிய பூமா
"அம்மாடி.. உனக்கு நான் இந்த வீட்ல இருக்குறது தான் பிரச்சனைனா நான் இந்த வீட்டை விட்டு போயிடறேன்மா.. நீ உங்க அப்பா கூட சந்தோஷமா இரு.. ஏற்கனவே என் அக்கா வாழ்க்கையையும் உன் வாழ்க்கையையும் மொத்தமா அழிச்சிட்டேன்.. இதுக்கு மேல உன் வாழ்க்கை கெட்டுப் போறதுக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்.. நான் இந்த நிமிஷம் இந்த வீட்டை விட்டு போயிடுறேன்.." என்றவளை ஒரு கண்டிப்பான பார்வையோடு
"அம்மாஆஆ.." என்று மிரட்டலாய் அழைத்தனர் சிந்துவும் ரியாவும்..
"ஆமாம்.. இந்த வீட்டு இளவரசி நவ்யா.. அவ இந்த வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டாம்.. நான் போறேன்.. நான் அவுட் ஹவுஸ்ல போய் இருக்கேன்.. நீ இங்கேயே இருடா நவிமா.." கெஞ்சினாள் பூமா..
அதைப் பார்த்த சிந்துவுக்கம் ரியாவுக்கும் எரிச்சலாய் வந்தது.
ஆனால் நவ்யாவோ அவள் வார்த்தைக்கு கொஞ்சமும் செவி சாய்க்காமல் தன் கைகளை பிடித்திருந்த அவள் கையை விலக்கிவிட்டு கார்த்தியை வைத்துக் கொண்டு அருகே நின்று கொண்டிருந்த சூர்யாவின் கையை பிடித்துக் கொண்டு "வா சூர்யா போலாம்.." என்று அங்கிருந்து போக வாசல் பக்கம் திரும்பினாள்..
"நவி ஒரு நிமிஷம்" என்றான் தமிழ்..
அவளை அப்படி அழைத்தவன் முன்பக்கம் திரும்பி சுனிதாவோடு கண்களால் ஏதோ பேசினான்.. அவளும் கண்ணை மூடி திறந்து ஆமோதிப்பாக தலையாட்ட அதைக் கண்டவன் இதழில் ஒரு நெகிழ்வான புன்னகை மலர்ந்தது.. அடுத்ததாய் தன் அன்னை தந்தையை அவன் பார்க்க அவர்களும் புன்னகை முகமாக அவன் எடுத்த முடிவைப் புரிந்து சம்மதம் தெரிவித்திருந்தார்கள்..
அவன் பார்வையிலே அவன் என்ன முடிவெடுத்து இருப்பான் என்று புரிந்து போனது அவர்களுக்கு.. தனக்கு பின்னால் நின்றிருந்த நவ்யாவின் பக்கம் திரும்பியவன் "உன்னால இந்த வீட்ல என் மாமாவோட மகளாத் தானே இருக்க முடியாது.. ஆனா என் மனைவியா இருக்க முடியும் இல்ல..?"
அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து அவனை நம்ப முடியாத பார்வை பார்த்தாள் நவ்யா..
"என்ன பேசுறீங்க நீங்க? உங்களால எப்படி இப்படி பேச முடியுது? உங்களுக்கும் இதோ இவங்களுக்கும்.." என்று சுனிதாவை காட்டியவள்
"கல்யாணம் பேசி நிச்சயம் பண்ணி இருக்காங்க.. அப்படி இருக்கும்போது ஒரே நிமிஷத்துல என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீங்க.. இந்த ஆம்பளைங்க எல்லாருமே இப்படித்தானா? ஒரு பொண்ணோட பழகி அவ மனசை கலைச்சுட்டு அவளை வேண்டாம்னு ஈஸியா சொல்ல முடியுது இல்ல உங்களால..?" என்று முகத்தில் ஒரு இகழ்ச்சி பாவனையோடு அவள் சொல்ல
அதற்கு பதிலைத் தமிழ் சொல்லவில்லை.. சுனிதா சொன்னாள்..
"ஐயோ நவி தெய்வமே.. எனக்கு இப்பத்தான் இந்த கல்யாணத்திலிருந்து எஸ்கேப் ஆகறதுக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு ஆத்தா.. தயவு செஞ்சு அதைக் கெடுத்துடாத நவிம்மா.. இந்த ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு இத்தனை நாள் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன்.. எங்க அப்பா சொன்ன ஒரே காரணத்துக்காக தான் வேற வழி இல்லாம இந்த உம்மணா மூஞ்சி ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.." என்று அவள் சொல்ல
"போதும் உங்க நடிப்பு.. சும்மா எனக்காக தியாகம் பண்றதா நெனைச்சுக்கிட்டு அவரை பிடிக்காத மாதிரி நடிக்காதீங்க.. நிச்சயமா உங்களை மாதிரி தைரியமான பொண்ணுங்க எல்லாம் யாருடைய வற்புறுத்தலுக்காகவும் பிடிக்காத ஒருத்தரை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.. எனக்காக யாரும் உங்க வாழ்க்கையை விட்டுக் கொடுக்க வேண்டாம்.."
உறுதியாகச் சொன்னாள் அவள்..
"ஏன்? உனக்கு என்னை பிடிக்கலையா நவ்யா..? என்கிட்ட ஏதாவது குறை இருக்கா? உனக்கு ஒரு நல்ல புருஷனா நான் இருக்கமாட்டேன்னு தோணுதா? என்னை வேணாம்னு சொல்ல என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா மேடம்.." என்று தமிழ் கேட்க அவன் அருகே வந்து அவனை ஆழ்ந்து பார்த்தாள் நவ்யா.. அந்தப் பார்வையில் ஆயிரம் கேள்விகள் புதைந்து கிடந்தன..
"நான் சொல்றது இருக்கட்டும்.. நீங்க எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? இதுக்கு பரிதாபம் காரணமா? இல்லை உங்க மாமா பொண்ணுங்கற கடமை காரணமா?" பளிச்சென்று தெளிவாய் கேட்டாள் அவள்.
"ரெண்டும் இல்லை" என்றான் அவன்..
நீர் உறையும்..
Last edited: