• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

STN - 91

Member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: ஒரு காதல் கனா காண்போம்
நாயகன்: இளங்கோ
நாயகி: யாஸ்மின்
ஆதிரன் இன்றைய காலகட்டத்தில் நல்ல காதலில் திளைத்து நவநாகரீக உலகில் ஊர்சுற்றி தெரியும் விளையாட்டு பையன் காதல் தோல்வியால் துவள அவனின் பெற்றோர்கள் இந்திரனின் தாத்தா வீட்டிற்க்கு கிராமத்திற்கு அனுப்புகின்றனர் அங்கே அவனுக்கு கிடைத்த அனுபவங்களே கதையின் கரு ❤❤🧡🥰
கனவு காணுங்கள் கனவுகளை நனவாக்க முயற்சி செய்யுங்கள் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இவ்வுலகில் இல்லை ❤❤❤
இளங்கோ நம்நாட்டில் பிரிட்டிஷ் அரசு ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் நடந்த யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கும் கதையே இது இளங்கோ ஆதியின் இருவரும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்..
இதில் வேறு மதத்தை சேர்ந்த யாஸ்மின் மீது காதல் கொண்டு யாஸ்மின் பெற்றோர்கள் யாஸ்மினை வீட்டுச் சிறையில் அடைக்கின்றனர்😍😍😍
அங்கே இருந்தும் தன் எழுத்துக்களின் மூலமாக சுதந்திர போராட்டத்தை தூண்டும் வகையில் பிரசுரங்களை பிரவிகித்து ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அடிமைத்தனத்திற்க்கு எதிராக குரல் கொடுக்க தூண்டுகிறார்❤❤❤
விக்டர் பிரிட்டிஷ் அரசின் அதிகாரியான இவர் செய்யும் அட்டூழியம் அதிகம் இதில் நம் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுகின்றனர்🥺🥺🥺
இளங்கோ இராணுவ அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று தொடர் போராட்டங்களின் மூலம் ஆங்கிலேயர்கள் வெளியேற சிறு குழந்தைகளை கடத்தி கப்பலில் ஏற்றுகின்றனர் இதை இளங்கோ கொடுப்பாரா டேவிட் என்ற மிருகத்தின் இருந்து யாஸ்மின் காப்பாற்ற பட்டாசா என்பது விறுவிறுப்பான முறையில் சொல்லி உள்ளார் ரைட்டர் 🥰💐💐
உண்மையில் இதைவிட எவ்வளவு பெரிய கஷ்டங்களை கடந்து நமக்கு சுதந்திரம் கசிந்துள்ளது என்பதை நினைத்தால் பெரிய அளவிலான தியாகங்கள் நடந்ததை நினைவூட்டுகிறது ❤❤ நல்ல வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் 💐💐❤🧡 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰💐
ரொம்ப அழகா கதையோட நகர்வுகளை கவனிச்சு ரிவ்யூ தந்தமைக்கு நன்றி சகி 🤎 தயக்கதில எழுதிய கதை. இறுதி வரை வாசித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகி 🤎 😍
 

STN - 95

Member
#என்_துயர்_நீக்கும்_துணையே….
#கௌரிஸ்ரிவ்யூ…..

சஸ்பென்ஸ் + காதல் கதை 🥰 🥰 🥰 🥰 🥰 🥰

சம்மு 10 வருஷம் கழித்து அவளோட சொந்த ஊருக்கு வர தோழி தேவி ஓட….

அவளோட தங்கை ஶ்ரீக்கு பங்ஷன் கூடவே அவளோட தொல் பொருள் ஆராய்ச்சிகாகவும்…..

அன்பான அப்பா விசு- அம்மா அபி, ரொம்ப பிரியமான அத்தை கீதா- மாமா ரகு….அவளின் காதலுக்காக காத்திருக்கும் தேவா….என எல்லாம் இருந்தும் ஏன் இவளோ கால பிரிவு?????

அதற்கு காரணம் அவளின் சைல்ட்வுட் டிராமா 😳😳😳😳😳….

அது என்ன????

அவள் ஆராய்ச்சி செய்ய வந்தது என்ன?????

இது தான் மீதி கதை…..

சம்மு….ஆரம்பத்தில் ஏன் இவ இப்படி இருக்கனு யோசிச்சா…அவளின் பின்னணி தெரிஞ்சதும் 🥺🥺🥺🥺🥺….

அவளோட விஜி அத்தையின் நிலை கண்டு குற்ற உணர்வு, அதீத காதல் இருந்தும் தேவாவை மறுக்கும் செயல்….என ரொம்ப பாவம்…..

தேவி…..சம்மு பிரெண்ட்….எனக்கு இவளை தான் ரொம்ப பிடிச்சது…ஒரு பாசிடிவ் வைப் இவ கிட்ட இருக்கு🥰🥰🥰🥰🥰…..

அதும் இவளோட மைண்ட் வாய்ஸ் 🤣🤣🤣🤣🤣

தேவா….இவன் காதலும், காத்திருப்பும்❤❤❤❤❤….இவளோ ஆழமா இருக்கும்னு நினைக்கல…..

விக்கி….இவனும் அதே போல தான்….அண்ணன் போலவே தம்பியும்🤩🤩🤩🤩🤩

ஆன மூஞ்சை மட்டும் வெறப்பா வெச்சிப்பான்ங்க 🤣🤣🤣🤣…..

விசு & அபி…..பொண்ணு 10 வருஷமா வீட்டுக்கே வரலையே ஏன்னு யோசிக்க மாட்டாங்களா?????

கதைக்களம் ரொம்ப நல்ல இருந்தது…..

ஆன இன்னும் அழுத்தமா பதிவு பண்ணி இருந்தா இன்னும் சூப்பரா இருந்து இருக்கும்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87.434/page-2
கருத்துக்கு நன்றி சகி ❤❤
 

Gowri Karthikeyan

Active member
#செந்தமிழ்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

பெண் பிள்ளைகளுக்கு சமுதாயத்தில் நடக்கும் அவலங்களையும், பாதிக்க பட்ட குடும்பங்கள் அனுபவிக்கும் சோதனைகளையும், வேதனைகளையும் சொல்லும் கதையே செந்தமிழ்……

மலர் இல்லத்தின் பூத்த புது மலரா இருக்கும் மலரினி பள்ளியில் மயங்கி விழுந்ததா சொல்ல….

பதறி அடித்து போகிரான் மருத்துவமனைக்கு அவளின் தாய் மாமன் நிலவன்😳😳😳😳😳 …..

அங்கு சொன்ன செய்தியோ…மயங்கி விழுந்த குழந்தை உயிரோடே இல்ல என்பதே🥺🥺🥺🥺🥺…..

எப்படி இந்த தீடிர் மரணம் என அவன் யோசிக்க…..

அந்த தளிரை ஒரு முறை கூட ஸ்பரிசிக்க விடல அவனை…..

கைகளில் கீறல்கள், மரணத்தில் சந்தேகம் என…. போலீசார் இடம் புகார் அளிக்க….

அவர்களும் அந்த தப்புக்கு துணை போக…..

அங்கே அந்த தளிருக்கு ஆன நியாயம் கிடைக்க படாமலே போக….

நிலவனோ தவித்து, துடித்து போகிறான்….

வசந்தனும் - மீராவின் அன்பு பெட்டகம் மலர் இப்போது இல்லை என்பதை அவர்களால் தாங்கவே முடியல…..

நிலவன் குடும்பமே உருக்குலைந்து போக….

தன் மலர் பாப்பாக்கு நியாயம் வாங்கி தர போராடும் போராட்டத்தில்…..

நியாயம் தேடிய இடத்தில் இருந்து சில பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வர….

அடுத்து அவன் போராட்டம் தான் மீதி கதை…..

கதை ரொம்பவே அழுத்தம் நிறைந்ததா இருக்கு…..

நம்மை அழ வைக்கவும் நிறைய இடங்கள் இருக்கு…..

கதைன்னு கடந்து போக முடியல…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.428/
 

Gowri Karthikeyan

Active member
#உன்னை_மீறிய_வரமில்லையே..….
#கௌரிஸ்ரிவ்யூ…..

அழுத்தமான கதைகளம்…..

கதை ஆரம்பத்திலே துவா…தன் கருவை கலைக்க அத்தை மகன் நவநீ துணை கொண்டு மருத்துவமனை வர😳😳😳😳…..

வந்த வேளையும் முடிய😬😬😬😬😬…..

இப்படி தான் இருக்கு ஆரம்பமே…..பதற வைக்கற மாறி….

ஆன அவ எடுத்த முடிவு சரின்னு தான் தோண வைக்கிறாங்க ….

எப்படி ?????

அது தான் கதை…..

துவா…..என்ன இவ இப்படி இருக்கானு யோசிச்சது போய்…. ப்பா சூப்பர்னு நினைக்க வெச்சிட்டா…..

இவளுக்கு நடந்த கொடுமை எல்லாம் ஒரு மாறி மரத்த நிலையில் அதை தாங்க காரணம் அவ அம்மாக்கு நிம்மதி தர தான்….

ஆன அந்த அம்மாவே இல்லைன்னு தெரிஞ்சி….அனைத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வரப்பா….

இந்த நவநீ அவளை காப்பாத்தரத நினைச்சி செஞ்ச வேலை 🤦🤦🤦🤦🤦…..

நவநீ…..சரியான லூசு பய😬😬😬😬அவளே அப்ப உண்மையை சொல்லி இருந்தா இவளோ ப்ராப்ளம் அந்த பொறுக்கி பண்ணி இருப்பானா?????

அவ தயங்கினது எல்லாம் அவ அம்மாக்காக மட்டும் தான்…..

இப்ப அவளே துணிஞ்சி நிற்கும் போது நீ பண்ணின வேலை இருக்கே😬😬😬😬😬….

லாஸ்ட்லா இப்படி பண்ணினதுக்கு துவா அன்னைக்கு ஊர் முன்னாடி சொல்லி இருந்தா….

அன்னையோட அது போய் இருக்கும்…..

இவன் பண்ணின வேலையில்….. ஊர் உலகமே அவளை எப்படி பழிச்சி பேசிட்டு😡😡😡😡😡…..

அவளுக்கு பயம்நாளும் தெளிவா தான் இருந்தா….

மாயவன் & கோ….இவங்க குடும்ப கதையை படிக்கங்காட்டியும் ஒரு நூறு தடவையாவது கருமம் ச்சீ இது எல்லாம் குடும்பமானு தோண வெச்சிட்டாங்க🤮🤮🤮🤮 🤮 🤮….

காத்து….எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளியே இந்த பெருசு தான்….

இது பண்ணின வேலை தான் துவா வாழ்க்கை இப்படி ஆக காரணம்…..

இது எல்லாம் பெரிய மனுஷன்னு ஊரில் திரியுது 😡😡😬😡😬

மாதங்கி….அப்பா பேச்சை கேட்டு நடக்கணும்னு இருந்த பெண்ணை….என்னடா பண்ணி வெச்சி இருக்கீங்க?????

கடைசி வர அவங்க வாழ்க்கையை வாழமலே போய்ட்டாங்க😔😔😔😔😔

துவா ஓட லாஸ்ட் மூவ்👏👏👏👏👏…இதை தான் அவ ஆரம்பத்திலே செய்ய நினைச்சா….

ஆன இந்த நவநீ தான் அவளுக்கு கெட்ட பேரு வாங்கி கொடுத்துட்டு அப்பறம் யோசிக்காரன்….

பைத்தியக்காரன்,...எப்படி தான் இவனை மன்னிக்க தோணிச்சோ துவாக்கு 🤷🤷🤷🤷🤷…..

இதில் இந்த பய துவாக்கு வரமாம்....அப்படியே இருந்துட்டாலும் 😏😏😏😏😏....நீ தான் மேன் லக்கி.....அந்த பிள்ளை இல்ல....

கதை நல்லா இருக்கு….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87.420/
 

ShaSri

Member
#தாமரை_இலையுள்_உறை_தண்ணீராய்_விமர்சனம்


5 வயது வரையில் நவ்யாவாக இருந்தவளை நிலாவாக மாற்றி , 18 வயதில் கயவர்கள் கையில் சிக்கி உடலவிலும் மனதளவிலும் பல இன்னல்களை அனுபவித்து தன்னவன் கைசேர்ந்து மீண்டும் நவ்யாவாக, அழகான மறுவாழ்வு அமைந்து வாழ்வில் எவ்வாறு முன்னேறுகிறாள் என்பதே கதை ❤


கதையின் போக்கு அருமை👌 பல எதிர்ப்பார்க்காத திரும்புமுனைகளுடன் தொய்வில்லாமல் சுவாரஸ்யமான கதை ❤


யாரு நாயகன்? யாரு நாயகி? என்று அறியவே பல அத்தியாயங்கள் கடக்க வேண்டி இருந்தது 😍


இதில் படபட பட்டாசாக சுனிதா கதாபாத்திரம் அருமை 😍 தன் மனதில் இருப்பதையும் திருமணம் மற்றும் வருங்கால கணவன் மேல் இருக்கும் எதிர்ப்பார்ப்பும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி பேசுவது நல்ல கதாபாத்திர படைப்பு ❤


தமிழை போலவே நானும் ஜெகன்நாதனை பிழையாக தான் எண்ணினேன் ஆனால் தமிழுடன் சேர்த்து எனக்கும் ஒரு அறை கொடுத்து அவர் யார் என்று சொன்னது நன்றாக இருந்தது ❤ அது மட்டுமா அதற்கு பிறகான முன் கதை அனைத்தும் சற்றும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனை 👏


அந்த முன் கதையிலும் சரி நடப்பிலும் சரி பெரியவர்கள் செய்த பிழையால் பாதிக்கபட்டது நவ்யா, சிந்து மற்றும் ரியா 😓😓


நிலா மற்றும் சூர்யா குறித்து சிந்து, ரியா மற்றும் அழகனின் கருத்துக்கள் நம் சமூகத்தின் பிரதிபலிப்பு 😰


சூர்யா நல்ல தோழி ❤ தன் தோழிக்காக மற்றும் தனக்காக அழகனிடம் வாதிடுவது சிறப்பு 👏


நிலா அனுபவத்த கொடுமைகள் 😭😭 மனதை கனக்க வைக்கிறது 😩 மாயன் மற்றும் டில்லி 😡போன்ற ஆட்களுக்கு ஆதிகேசவனுக்கு அளித்த தண்டனை போல் அளித்திருந்தால் நல்லா இருந்திருக்கும் 😓 சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது.


கதையின் நாயகன் தமிழ்செல்வன் காவல் அதிகாரி ❤ காவலனாக மட்டுமல்ல காதலனாகவும் மனதை கவர்கிறார் ❤


நவ்யாவுக்கு கிடைத்த வரம் தமிழ் ❤ தமிழின் காதலை மற்றும் நவ்யாவின் உணர்வுகளை விவரித்த விதம் எனக்கு பிடித்திருந்தது 🤩 நவ்யாவுக்கு தமிழை போல் பாதிக்கபட்ட பெண்களுக்கும் அழகான வாழ்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் ❤


சூர்யா மற்றும் நவ்யா சிங்கபெண்கள் ❤😍 பாதிக்கபட்டவர்களே பலப்பல கல்லடிகளை பட வேண்டி இருக்கும் அவல நிலையில் தான் நம் சமூகம் இன்னும் இருக்கிறது வேதனைக்குறிய விடயம் 🥺🥺


தமிழின் ஆத்மார்த்தமான காதலும் புரிதலும் அவளுக்கும் அவளின் கனவுக்கும் கொடுக்கும் மரியாதையும் ❤ மெய்சிலிர்க்க வைக்கிறது 😍 handsoff to you man ❤ இந்த காதல் காவலனை மிகவும் பிடித்தது 😍


இன்னும் கதையில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் பல உண்டு அதற்க்கான பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன் ❤


அருமையான கதை ❤


வாசகர்கள் அனைவரின் நெஞ்சிலும் தமிழுவும் நவியும் தாமரையாக மலர்ந்து நீங்கா இடம் பிடித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 

STN - 92

Active member
Staff member
என் ஆழ்மனம் நீயாக கதை சூப்பர் 😍😍😍... குரு அருமையான கதாபாத்திரம்.. எதையும் பொறுமையா தெளிவா யோசிச்சு பண்றான்... அட்சு அந்த வயசுல சூழ்நிலையில் அதைத்தான் அவளால செய்ய முடியும்.. ஆனாலும் அவனை எந்த இடத்திலேயும் மறக்கல🥰🥰🥰
அவளுக்கா குரு பண்ண விஷயங்கள் க்யூட்😍😍😍.. இவங்களுக்கு என்ன உறவு என்னப் பண்ணானு கதையை படிச்சு தெரிஞ்சிக்கோங்க.. நான் சொன்னா சுவாரஸ்யம் போயிடும்..
சபா பக்கம் நியாயமான காரணங்கள் இருந்தாலும் பூரி சொன்ன மாதிரி பாதிகப்பட்ட அட்சு அவளை புரிந்து கொண்டது இவன் புரிந்து கொள்ளாதது ரொம்ப தவறு.. என்னப் பண்றது காதல் கொண்ட மனசு அவனை மன்னிச்சு ஏற்றுக்கொண்டது.. ஆனா டக்குனு எல்லாம் ஏற்றுக்கொள்ளளல.. வச்சு செஞ்சிட்டு தான் ஏற்றுக் கொண்டாள்😂😂
ரோஷன்😡😡😡கேடு கெட்டவனுக்கு அம்மா சப்போர்ட் வேற😡😡😡
அழகான கதை.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா💐💐💐💐💐💐
நன்றி அக்கா😍
சைட்ல இப்ப தான் உங்க விமர்சனம் பாக்குறேன்❤
 

STN - 92

Active member
Staff member
என் ஆழ்மனம் நீயாக கதை அருமை. ஹீரோயின் அட்சயா படிப்பை முடித்து வேலைக்கு போக அங்கே குருவை சந்திக்க பார்த்தது போல் இருக்கே என்று நினைக்க குருவுக்கு ஏதோ மாதிரி இருக்க நமக்கும் முன்னாடியே தெரிந்தவங்களா?என்பதை கேள்வியோடு பயணிக்க. இரண்டு எபி போன பிறகு தெரிகிறது என்ன உறவு என்று தெரிந்ததும் கொஞ்சம் ஷாக் கொஞ்சம் மகிழ்ச்சி. குரு அச்சு இடையே காதல் உரிமை உணர்வு கோபம் கலந்து பயணிக்க இருவரும் ஒருவரையொருவர் நினைத்தபடி இருக்க பிறகு கல்யாணம் பிரச்சினை வந்தாலும் அவர்களின் எண்ணங்கள் அன்பாக இருக்க வரும் பிரச்சினை களைந்து வாழ்க்கை சந்தோஷமாக குழந்தை நட்பு உறவுகளோடு சுபம். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
மனமார்ந்த நன்றிகள் அக்கா❤
 

STN - 92

Active member
Staff member
#என்_ஆழ்மனம்_நீயாக….
#கௌரிஸ்ரிவ்யூ…..

கியூட்டான லவ் & பட் டெர்ரான குடும்ப கதை🤭🤭🤭🤩🤩🤩🤩🤩…..

குரு, ஐடிலா ஒர்க் பண்ணிகிட்டே அவனோட குடும்ப தொழிலையும் பார்த்துக்கிறான்….குட் பாய்❤❤❤❤….

அச்சு…வீட்டில் கல்யாணம் பண்ணிக்க நெருக்கடி கொடுக்க…வேலைக்கு போறேன்னு வந்த இடம் குரு ஒர்க் பண்ற அதே கம்பெனி🥰🥰🥰🥰🥰…..

ஆக்சுவலா அச்சுவை வேலையில் எடுத்ததே குரு தான்❤❤❤❤….

குரு அவளை தன்னிடம் தக்க வைத்து கொள்ள எடுத்த முதல் ஸ்டெப் தான் இந்த வேலை…..

அப்ப குருக்கு அச்சு மேல காதலா????

ஆமா மனைவி மேல காதல் இல்லாமல் போகுமா🤭🤭🤭🤭🤭…..

எதே மனைவியா?????.....

சந்தர்ப்ப சூழலில் ஆன தீடிர் கல்யாணம்….

ஆன வேகத்தில் முடிஞ்தும் போனது….குரு அம்மாவின் பேச்சால்😬😬😬😬….அச்சுவின் அவசரத்தால்😒😒😒😒…..

சந்தர்ப்ப சூழலில் கல்யாணம் பண்ணியதில் காதல் இல்லைனாலும்….

ரெண்டு பேருக்குமே கல்யாணம்னு நினைச்சால் ரெண்டு பேர் முகமும் தான் முதலில் நியாபகம் வருது…..

அச்சு மனசில் வெச்சி தவிக்க…. குரு அதற்கு செயல் வடிவம் கொடுத்துட்டான் ❤❤❤❤❤…..

ஏன் அப்படி அவசர கல்யாணம் & பிரிவு????

குரு - அச்சு சேர்ந்தார்களா என்பதே மீதி கதை……

குரு…..ரொம்ப சூப்பர் இவன்❤❤❤….அச்சு வேலை செய்ய வந்தது எல்லாம் அவனிடம் வர வைத்து அவளை தன்னிடம் தக்க வெத்து கொள்ளவே என தெரியும் போது🥰🥰🥰🥰🥰…..

ஒரே விஷயம் இவனிடம் பிடிக்கல….பூரி கிட்ட இவன் நடந்த விதம்😒😒😒😒….அவளிடம் என்ன குறையை கண்டான்😏😏😏😏😏…..

அச்சு….அவசரத்தில் எடுத்த முடிவில்…..அடுத்து என்ன செய்வது என தெரியாமல் வருந்தும் பெண்ணவள்😔😔😔….

தைரியம் வந்து குரு கிட்ட பேசினது🫰🫰🫰🫰🫰…..

பாக்கி….வில்லி போல முதலில் தெரிஞ்சாலும்….இவங்க பக்கம் இருந்து பார்க்கும் போது இவங்க கோபம் நியாயமே…..

சபா…. இஷ்டம்னா காதலிக்கவும், கஷ்டம்னா காதலியை கஷ்டப்படுத்தறதும் இவனை எனக்கு பிடிக்கல 😏😏😏😏😏…..

பூரி….தப்பே செய்யாம எவளோ கஷ்டம்🥺🥺🥺🥺🥺…..இந்த சபா பயலுக்கு இவ அதிகம் தான்😒😒😒😒😒……

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ❤❤❤❤❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇👇

நன்றி dear❤
 

STN - 72

Member
Staff member
#தாமரை_இலையுள்_உறை_தண்ணீராய்_விமர்சனம்


5 வயது வரையில் நவ்யாவாக இருந்தவளை நிலாவாக மாற்றி , 18 வயதில் கயவர்கள் கையில் சிக்கி உடலவிலும் மனதளவிலும் பல இன்னல்களை அனுபவித்து தன்னவன் கைசேர்ந்து மீண்டும் நவ்யாவாக, அழகான மறுவாழ்வு அமைந்து வாழ்வில் எவ்வாறு முன்னேறுகிறாள் என்பதே கதை ❤


கதையின் போக்கு அருமை👌 பல எதிர்ப்பார்க்காத திரும்புமுனைகளுடன் தொய்வில்லாமல் சுவாரஸ்யமான கதை ❤


யாரு நாயகன்? யாரு நாயகி? என்று அறியவே பல அத்தியாயங்கள் கடக்க வேண்டி இருந்தது 😍


இதில் படபட பட்டாசாக சுனிதா கதாபாத்திரம் அருமை 😍 தன் மனதில் இருப்பதையும் திருமணம் மற்றும் வருங்கால கணவன் மேல் இருக்கும் எதிர்ப்பார்ப்பும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி பேசுவது நல்ல கதாபாத்திர படைப்பு ❤


தமிழை போலவே நானும் ஜெகன்நாதனை பிழையாக தான் எண்ணினேன் ஆனால் தமிழுடன் சேர்த்து எனக்கும் ஒரு அறை கொடுத்து அவர் யார் என்று சொன்னது நன்றாக இருந்தது ❤ அது மட்டுமா அதற்கு பிறகான முன் கதை அனைத்தும் சற்றும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனை 👏


அந்த முன் கதையிலும் சரி நடப்பிலும் சரி பெரியவர்கள் செய்த பிழையால் பாதிக்கபட்டது நவ்யா, சிந்து மற்றும் ரியா 😓😓


நிலா மற்றும் சூர்யா குறித்து சிந்து, ரியா மற்றும் அழகனின் கருத்துக்கள் நம் சமூகத்தின் பிரதிபலிப்பு 😰


சூர்யா நல்ல தோழி ❤ தன் தோழிக்காக மற்றும் தனக்காக அழகனிடம் வாதிடுவது சிறப்பு 👏


நிலா அனுபவத்த கொடுமைகள் 😭😭 மனதை கனக்க வைக்கிறது 😩 மாயன் மற்றும் டில்லி 😡போன்ற ஆட்களுக்கு ஆதிகேசவனுக்கு அளித்த தண்டனை போல் அளித்திருந்தால் நல்லா இருந்திருக்கும் 😓 சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது.


கதையின் நாயகன் தமிழ்செல்வன் காவல் அதிகாரி ❤ காவலனாக மட்டுமல்ல காதலனாகவும் மனதை கவர்கிறார் ❤


நவ்யாவுக்கு கிடைத்த வரம் தமிழ் ❤ தமிழின் காதலை மற்றும் நவ்யாவின் உணர்வுகளை விவரித்த விதம் எனக்கு பிடித்திருந்தது 🤩 நவ்யாவுக்கு தமிழை போல் பாதிக்கபட்ட பெண்களுக்கும் அழகான வாழ்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் ❤


சூர்யா மற்றும் நவ்யா சிங்கபெண்கள் ❤😍 பாதிக்கபட்டவர்களே பலப்பல கல்லடிகளை பட வேண்டி இருக்கும் அவல நிலையில் தான் நம் சமூகம் இன்னும் இருக்கிறது வேதனைக்குறிய விடயம் 🥺🥺


தமிழின் ஆத்மார்த்தமான காதலும் புரிதலும் அவளுக்கும் அவளின் கனவுக்கும் கொடுக்கும் மரியாதையும் ❤ மெய்சிலிர்க்க வைக்கிறது 😍 handsoff to you man ❤ இந்த காதல் காவலனை மிகவும் பிடித்தது 😍


இன்னும் கதையில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் பல உண்டு அதற்க்கான பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன் ❤


அருமையான கதை ❤


வாசகர்கள் அனைவரின் நெஞ்சிலும் தமிழுவும் நவியும் தாமரையாக மலர்ந்து நீங்கா இடம் பிடித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
அடடா.. கதையின் முதல் விமர்சனமே அழகு.. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சிறப்புகளையும் உள்வாங்கி ஒரு முழுமையான நிறைவான விமர்சனத்தை வழங்கி இருக்கிறீர்கள். ரொம்பவும் நன்றி தங்கமே..🥰🥰🙏 முக்கியமான
முக்கியமாக தமிழின் கதாபாத்திரத்தை நான் எந்த நோக்கில் வாசகர்களிடம் எப்படி கொண்டு போய் சேர்க்கவேண்டும் என எதிர்ப்பார்த்து படைத்தேனோ அதே விதத்தில் நீங்கள் உணர்ந்து உங்கள் பிடித்தத்துக்கு உரியவனாய் அவன் மாறியது எனக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை தருகிறது.. மிக மிக நன்றி கண்மணி🙏🥰💖🤩😍
 

zeenath Sabeeha

New member
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டி கதைகள்.
#STN_85
நான் அறிய நீ
கொஞ்சும் இலங்கைத் தமிழில் மற்றும் ஒரு அழகான கதை 🥰
பிரார்த்தனா.. பாவம் பெண் அவள்.. தன் குடும்பத்திற்காக மெழுகாக உருகுகிறாள் ஆனால் இவளைப் பற்றி யோசிக்க அங்கு யாருமே இல்லை. சுயநலத்தின் உச்சமாகவே அனைவரும் இருக்கிறார்கள் இவர்களுக்காக இவள் ஏன் தன் வாழ்வை பாழாக்கி கொண்டாள் என்ற கோபம்தான் வருகிறது நமக்கு.
ரமணி இவளுக்கு இருக்கும் ஒரே ஆதரவு. இவளோடு அலுவலகத்தில் உயர் நிலையில் வேலை செய்யும் அன்பான ஆதரவான பெண். அவர் கொண்டு வரும் ருசியான உணவுகளை ஏதேதோ காரணங்களை கூறி இவளை சாப்பிட வைத்து இவள் கொண்டுவரும் காஞ்சி போன ரொட்டியை அவர் சாப்பிடுவதிலேயே இவள் மேலான அவரின் பாசம் புரிகிறது 🥰
வரோதயன்.. கதையின் நாயகனுக்கு ஒரு அழகான இன்ட்ரோ வைத்து இருக்கலாம். பாவம் முதல் காட்சியிலேயே இவன் உள்ளாடை தெரிந்து அதை சில பெண்கள் கேலி செய்ய நம் நாயகியும் அதை பார்த்துவிட்டு ஐயோ பாவம் என சங்கடப்பட்டு அதை அவனுக்கு தெரியப்படுத்த வெட்கம் கொண்டு தவித்து விடுகிறான் நம் நாயகன் 😀😂
தனா தன் தங்கை நிலானி வீட்டை விட்டு சென்ற பிறகு அவளை தேடி தவிப்பதும் அவளின் நலத்தை அறிய துடிப்பதும் அதற்கு உறுதுணையாக வரோதயன் இருப்பதும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது 🥰
இருவருக்குமே வருத்தமான கடந்த காலம் இருந்தாலும் வருங்காலத்தை சேர்ந்த பயணிக்கலாம் என முடிவு செய்தது மகிழ்வு 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤
Good luck ❤🥰
 
Top Bottom