“மாப்பிள்ள யாரம்மா, எங்களுக்கெல்லாம் தெரியாம ரகசியமாப் பாத்தீங்களோ?”
கவியின் கேள்வியில் ஏகப்பட்ட வியப்பு! என்னுள்ளும் தானே!
அவள் கேட்டதற்கு, சித்தி பட்டென்று பதில் சொல்லவில்லை. தன்னைக் கட்டிப்பிடித்திருந்த மகள்களை விலக்கிவிட்டு, முதல் இருந்த கதிரையில் சென்றமர்ந்து கொண்டவர், சில கணங்கள் என்னையே ஊன்றிப் பார்த்தார்.
ஏன் இப்படிப் பார்க்கின்றார் என்ற குழப்பம் என்னுள்!
“இங்க பார் உதயா, ஒன்பது வயசில இருந்து உன்ன வளர்த்தவள் நான்; இப்ப உன்ர அப்பாவும் உயிரோட இல்ல; என்னதான் நீ உழைச்சுத் தந்தாலும் இந்த வீட்டுக்குப் பெரியவள் நான் தானே?” நிதானமாகக் கேட்டு நிறுத்தினார்.
என்னிடம் பதிலை எதிர்பார்க்கிறாரோ! குழப்பமாக இருந்தது. இதற்கு என்ன பதில் சொல்வேன்? கேள்வியிலேயே பதில் இருக்கே! யார் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் அவர்தான் இந்த வீட்டுக்குப் பெரியவர்.
நான் தங்கைகளைப் பார்க்க, சித்தியோ, என் பதிலை எதிர்பார்க்கவில்லை என்ற கணக்கில் தொடர்ந்தார்.
“காலா காலத்தில உனக்கு ஒரு கலியாணத்தச் செய்து வைக்கிறது என்ர கடமை தானே?”
ஓ! இதைச் சொல்லத்தான் அந்த ஆரம்பமா?
“இப்பவே நிறையப் பேர், ‘உதயாக்கு மாப்பிள்ள பார்க்கிறியா? பார்க்கேல்லையா?’ அப்பிடி இப்பிடிக் கேட்கீனம். எத்தின நாட்களுக்கெண்டு அதையும் இதையும் சாட்டாச் சொல்லுறது?”
“அது எண்டால் சரிதானம்மா, மாப்பிள்ள யாரெண்டு கெதியாச் சொல்லுங்கோவன்!” இடையிட்டாள் கவி.
அதைக் காதில் வாங்காது தொடர்ந்தார் சித்தி.
“உன்ர உழைப்பை வாங்கித் தின்றுகொண்டு சொகுசா இருக்கிறாள் எண்ட பேச்சு இப்பவே அரசல் புரசலாக இருக்கு - நீயும் இப்பிடியே இருந்த எண்டு வை...கேட்கவே வேணாம்.” என்னில் படிந்த பார்வையை விலக்காது சொல்லிக்கொண்டே போனார்.
‘உனக்குக் கலியாணம்’ என்று அவர் சொன்னதும் நிச்சயம் அதிர்ந்தேன் தான். கூடவே நிறையவுமே ஆச்சரியப்பட்டேன். காரணம், சித்தி எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் எல்லாம் செய்து வைப்பார் என்றளவில் என்னுள் எந்த எண்ணமோ, துளி எதிர்பார்ப்போ இருக்கவில்லை.
‘ஓ! அப்ப நீயாகவே உனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்வாயோ?’ என்றேதும் இடக்காக நினைக்காதீர்கள்.
“போயிட்டு வாறன் மா!” என்றுவிட்டு, வேலைக்குச் சென்ற அப்பா திரும்பிவரவே இல்லை. மலிந்து கிடக்கும் பாதை விபத்துகள் அவரையும் விட்டு வைக்கவில்லை. மின்னாமல் முழங்காமல் நிகழ்ந்த அந்நிகழ்வுக்குப் பின்னரான இந்த மூன்று வருடங்களில் என்னுள் வேறெந்த நினைவுகளுமே இல்லை.
‘என்ர தங்கச்சிகள நல்லாப் படிப்பிக்க வேணும்; வீட்டப் பார்த்துக்கொள்ள வேணும்’ என்ற சிந்தனையிலேயே இருந்து விட்டேன். அப்படியிருக்க, திடீரென்று என்ன இதெல்லாம்?
என்னைச் சூழ்ந்திருந்த ஆச்சரியம் மெல்ல மெல்ல வடிந்தே போயிற்று!
மாப்பிள்ளை யாரென்று அறியும் அவா எல்லாம் எழவில்லை. மாறாக, “நான் கலியாணம் செய்து போய்ட்டால் இவேண்ட நிலை? தங்கச்சிகளிட படிப்பு?” சித்தியிடமே கேட்டேன்.
அவர் சட்டென்று பதில் சொல்லவில்லை. நெற்றி சுருங்க என்னையே பார்த்திருந்தார்.
இதை நான் கேட்பேன் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் போலிருந்தது. அதில் பிழையும் இல்லை தானே?
“அப்ப...வீட்டு நிலை என்ன எண்டு உனக்கே விளங்குது தானே உதயா?”
அவர் குரலில் என்றுமில்லாத கனிவு. உற்றுப் பார்த்தால் அவரின் விழிகள் கலங்கியிருப்பது தெரிந்தது.
“இதென்ன கேள்வி சித்தி? நம்மட வீட்டு நிலை எனக்குத் தெரியாதா என்ன? இந்த நிலையில என்ர கலியாணம் எல்லாம் அநாவசியம்.” என்றுவிட்டேன். உண்மையும் தானே?
“அக்கா! நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கோ பாப்பம்!” குட்டித் தங்கை சீறினாள்.
இலேசாகச் சிரித்தேன். அந்தச் சிரிப்பைப் பார்த்து முறைத்தாள் பெரியவள்.
“இங்க பாருங்கோம்மா, இந்த விசயத்தில நாங்க ரெண்டு பேருமே உங்கட பக்கம் தான்; அக்கா சொல்லுறத எல்லாம் கேட்கவே வேணாம் சொல்லிப் போட்டன்; மாப்பிள்ளை யார், எந்த இடம் எண்ட விபரம் சொல்லுங்கோ!”
என்னை ஒரு வெட்டும் பார்வை பார்த்தபடி பெரிய மனிசி போன்ற தோரணையில் கேட்டாள் கவி.
“இங்க பாருங்க, நீங்க ரெண்டு பேரும் சின்னப்பிள்ளைகள். ‘அக்காக்குக் கலியாணமா?’ எண்டு கேட்டுச் சந்தோசப்பட்டதோட அமைதியா இருக்க வேணும்.” அதட்டினார் சித்தி.
இருவருக்கும் முகம் சுண்டிப்போயிற்று. “நாங்க ஒண்டும் சின்னப்பிள்ளைகள் இல்ல!” கவிதான் சொன்னாள்.
“சரி, நீ பெரியவளாவே இரு! ஆனால், இப்ப வாயை மூடிக்கொண்டிரு! இல்லையோ எழும்பி அங்கால போ!”
சற்றுமுன் மிகவும் அதிசயமாகக் கனிவைக் காட்ட முயன்றவர், பழையபடி முகத்தில் கடுமையை அப்பிக்கொண்டு சீறினார்.
கவியின் கேள்வியில் ஏகப்பட்ட வியப்பு! என்னுள்ளும் தானே!
அவள் கேட்டதற்கு, சித்தி பட்டென்று பதில் சொல்லவில்லை. தன்னைக் கட்டிப்பிடித்திருந்த மகள்களை விலக்கிவிட்டு, முதல் இருந்த கதிரையில் சென்றமர்ந்து கொண்டவர், சில கணங்கள் என்னையே ஊன்றிப் பார்த்தார்.
ஏன் இப்படிப் பார்க்கின்றார் என்ற குழப்பம் என்னுள்!
“இங்க பார் உதயா, ஒன்பது வயசில இருந்து உன்ன வளர்த்தவள் நான்; இப்ப உன்ர அப்பாவும் உயிரோட இல்ல; என்னதான் நீ உழைச்சுத் தந்தாலும் இந்த வீட்டுக்குப் பெரியவள் நான் தானே?” நிதானமாகக் கேட்டு நிறுத்தினார்.
என்னிடம் பதிலை எதிர்பார்க்கிறாரோ! குழப்பமாக இருந்தது. இதற்கு என்ன பதில் சொல்வேன்? கேள்வியிலேயே பதில் இருக்கே! யார் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் அவர்தான் இந்த வீட்டுக்குப் பெரியவர்.
நான் தங்கைகளைப் பார்க்க, சித்தியோ, என் பதிலை எதிர்பார்க்கவில்லை என்ற கணக்கில் தொடர்ந்தார்.
“காலா காலத்தில உனக்கு ஒரு கலியாணத்தச் செய்து வைக்கிறது என்ர கடமை தானே?”
ஓ! இதைச் சொல்லத்தான் அந்த ஆரம்பமா?
“இப்பவே நிறையப் பேர், ‘உதயாக்கு மாப்பிள்ள பார்க்கிறியா? பார்க்கேல்லையா?’ அப்பிடி இப்பிடிக் கேட்கீனம். எத்தின நாட்களுக்கெண்டு அதையும் இதையும் சாட்டாச் சொல்லுறது?”
“அது எண்டால் சரிதானம்மா, மாப்பிள்ள யாரெண்டு கெதியாச் சொல்லுங்கோவன்!” இடையிட்டாள் கவி.
அதைக் காதில் வாங்காது தொடர்ந்தார் சித்தி.
“உன்ர உழைப்பை வாங்கித் தின்றுகொண்டு சொகுசா இருக்கிறாள் எண்ட பேச்சு இப்பவே அரசல் புரசலாக இருக்கு - நீயும் இப்பிடியே இருந்த எண்டு வை...கேட்கவே வேணாம்.” என்னில் படிந்த பார்வையை விலக்காது சொல்லிக்கொண்டே போனார்.
‘உனக்குக் கலியாணம்’ என்று அவர் சொன்னதும் நிச்சயம் அதிர்ந்தேன் தான். கூடவே நிறையவுமே ஆச்சரியப்பட்டேன். காரணம், சித்தி எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் எல்லாம் செய்து வைப்பார் என்றளவில் என்னுள் எந்த எண்ணமோ, துளி எதிர்பார்ப்போ இருக்கவில்லை.
‘ஓ! அப்ப நீயாகவே உனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்வாயோ?’ என்றேதும் இடக்காக நினைக்காதீர்கள்.
“போயிட்டு வாறன் மா!” என்றுவிட்டு, வேலைக்குச் சென்ற அப்பா திரும்பிவரவே இல்லை. மலிந்து கிடக்கும் பாதை விபத்துகள் அவரையும் விட்டு வைக்கவில்லை. மின்னாமல் முழங்காமல் நிகழ்ந்த அந்நிகழ்வுக்குப் பின்னரான இந்த மூன்று வருடங்களில் என்னுள் வேறெந்த நினைவுகளுமே இல்லை.
‘என்ர தங்கச்சிகள நல்லாப் படிப்பிக்க வேணும்; வீட்டப் பார்த்துக்கொள்ள வேணும்’ என்ற சிந்தனையிலேயே இருந்து விட்டேன். அப்படியிருக்க, திடீரென்று என்ன இதெல்லாம்?
என்னைச் சூழ்ந்திருந்த ஆச்சரியம் மெல்ல மெல்ல வடிந்தே போயிற்று!
மாப்பிள்ளை யாரென்று அறியும் அவா எல்லாம் எழவில்லை. மாறாக, “நான் கலியாணம் செய்து போய்ட்டால் இவேண்ட நிலை? தங்கச்சிகளிட படிப்பு?” சித்தியிடமே கேட்டேன்.
அவர் சட்டென்று பதில் சொல்லவில்லை. நெற்றி சுருங்க என்னையே பார்த்திருந்தார்.
இதை நான் கேட்பேன் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் போலிருந்தது. அதில் பிழையும் இல்லை தானே?
“அப்ப...வீட்டு நிலை என்ன எண்டு உனக்கே விளங்குது தானே உதயா?”
அவர் குரலில் என்றுமில்லாத கனிவு. உற்றுப் பார்த்தால் அவரின் விழிகள் கலங்கியிருப்பது தெரிந்தது.
“இதென்ன கேள்வி சித்தி? நம்மட வீட்டு நிலை எனக்குத் தெரியாதா என்ன? இந்த நிலையில என்ர கலியாணம் எல்லாம் அநாவசியம்.” என்றுவிட்டேன். உண்மையும் தானே?
“அக்கா! நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கோ பாப்பம்!” குட்டித் தங்கை சீறினாள்.
இலேசாகச் சிரித்தேன். அந்தச் சிரிப்பைப் பார்த்து முறைத்தாள் பெரியவள்.
“இங்க பாருங்கோம்மா, இந்த விசயத்தில நாங்க ரெண்டு பேருமே உங்கட பக்கம் தான்; அக்கா சொல்லுறத எல்லாம் கேட்கவே வேணாம் சொல்லிப் போட்டன்; மாப்பிள்ளை யார், எந்த இடம் எண்ட விபரம் சொல்லுங்கோ!”
என்னை ஒரு வெட்டும் பார்வை பார்த்தபடி பெரிய மனிசி போன்ற தோரணையில் கேட்டாள் கவி.
“இங்க பாருங்க, நீங்க ரெண்டு பேரும் சின்னப்பிள்ளைகள். ‘அக்காக்குக் கலியாணமா?’ எண்டு கேட்டுச் சந்தோசப்பட்டதோட அமைதியா இருக்க வேணும்.” அதட்டினார் சித்தி.
இருவருக்கும் முகம் சுண்டிப்போயிற்று. “நாங்க ஒண்டும் சின்னப்பிள்ளைகள் இல்ல!” கவிதான் சொன்னாள்.
“சரி, நீ பெரியவளாவே இரு! ஆனால், இப்ப வாயை மூடிக்கொண்டிரு! இல்லையோ எழும்பி அங்கால போ!”
சற்றுமுன் மிகவும் அதிசயமாகக் கனிவைக் காட்ட முயன்றவர், பழையபடி முகத்தில் கடுமையை அப்பிக்கொண்டு சீறினார்.