இரவு எட்டுமணியைக் கடந்திருந்தாலும் இருள் முழுமையாய் ஆட்சிக்கு வந்திருக்கவில்லை. ‘பேக்கர்ஸ்ஃபீல்ட்’ நோக்கி I-5N நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது வாகனம்.
வேந்தன், வாகனமோட்டுவதில் கவனமாகத்தான் இருந்தான். இருந்தாலும் ஏதோவொரு வேண்டாத சிக்கலை அண்மித்துவிட்டதாய் ஓருணர்வு அலைக்கழித்துக் கொண்டிருந்தது. கவியில் கோபம் கூட வந்திட்டு. பயணம் தொடங்கிய நாளிலிருந்து அழகியதொரு நட்புறவைக் காட்டியவளில் கொஞ்சம் பாவமுமாய். தன்னில் கூட கோபம் அவனுக்கு.
‘நானும் இலக்கியாவும் விரும்பிறம் எண்டு சொல்லியிருந்தா இக்கணம் வந்திராதும் இருக்கலாம்’ மனம் இடித்துரைத்தது. அதே மனம் தான், ‘சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளை வச்சு எடுக்கிற ஊகங்கள் எப்பவுமே சரியா இருக்க வேணும் எண்டும் இல்லையே. கவி பற்றி நான் நினைக்கிறது பிழையாவும் இருக்கலாம்' என்றதொரு கோணத்தையும் எடுத்துரைத்தது. இக்கணம், இப்படி எண்ணித் தன்னைத் தானே தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியும் இல்லையே!
அருகிலமர்ந்திருந்த நாதன் மௌனமாக இருந்தாரென்றால் பின்னாலும் ஒரே மௌனம்தான். இத்தனை நாளும் இல்லாத அமைதியாய்த் தோன்றி மிகுந்த அசௌகரியத்தைக் கொடுத்திட்டு!
மனம் விரும்பியவளை, அவளைச் சார்ந்தோரை அருகிலிருந்து பார்த்துப் பழகித் தெரிந்து கொள்ளக்கிடைத்த அருமையான சந்தர்ப்பமாக இப்பயணத்தையெண்ணி வந்தவனுக்கு, இப்போதோ, 'ஏண்டா வந்தம்?' என்றிருந்தது.
இப்பயணத் தொடக்கத்திலிருந்து சென்ற கணம் வரை அறிமுகம் செய்து வைத்திருந்த பல்வேறு இனிய தருணங்களை மழுங்கலடிக்கும் வகையில் அல்லவா இருக்கின்றது, கவியின் பார்வை!
பயணம் முடியப்போகுதே என, நாலைந்து நாட்கள் முன்னிருந்தே வருத்தப்பட்டான். இப்பயணம் இப்பிடியே நீண்டிடாதா என்றேங்கிய கணங்கள் கூட உண்டே! இக்கணமோ, எப்போதடா இதிலிருந்து விடுபட்டோடுவோம் என்றளவுக்கு மனம் நொந்து போனான்.
'பேசாமல் நாளைக்கு ஒரு டிரைவர் அரேஞ் பண்ணிட்டு நாம வீட்ட போய்ட்டா என்ன?' கேள்வி கேட்ட இதயம், தன்னை வியாபித்திருந்த இலக்கியாவின் ஆளுமையால் துவண்டிட்டு! அப்படிச் செய்து, நாளை பற்றிய அவள் சின்ன சின்ன எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போடத் துணியேன் என்றதுள்ளம்.
வெளிப்புறத்தில் இலக்கின்றித் தத்தளித்த பார்வையோடு அமர்ந்திருந்தாள், இலக்கியா. அவளுள்ளும் தமக்கை பற்றிய எண்ணமே! அவளறிந்த கவியில் இச்சில நாட்களாக மாற்றம் உணர்கிறாளே!
'வேந்தனில் அக்காவுக்கு விருப்பமோ' மிகச் சிறிதாக எழுந்த சந்தேகம் இப்போது சற்றே வளர்ந்த நிலையில் அவளைப் பாடாய்ப்படுத்தியது.
வேந்தன், ‘ஒண்ணுமில்ல’ என்று சமாளித்தாலும் ‘மதி எடுக்கிறான்’ என்று வெளியே போனதன்பின் அவன் முகமே சரியில்லையென்பதை தெள்ளத் தெளிவாய் உணர்ந்ததாலும் மறுநாளோடு பயணம் முடிகின்றதேயென்ற ஆதங்கத்தாலும் தான், 'முன்னுக்கு வந்து இருப்பீரா?' என, அவன் போட்ட குறுஞ்செய்திக்கு, 'நான் வீடியோ எடுக்கிறன், முன்னுக்கு இருக்கிறன் சித்தப்பா' சொல்லிவிட்டு, பதில் சொல்ல முதல் ஏறியமர்ந்து பெல்ட்டையும் போட்டு விட்டாள்.
விசுக்கென்று வந்த கவி, "இல்ல இறங்கு இலக்கி...நான் தான் இண்டைக்கு முழுதும் எடுத்து வச்சிருக்கிறன். நீ பின்னால ஏறு, நானே எடுக்கிறன்." அதட்டியிருந்தாள்.
"சின்னப்பிள்ளைகள் போல இவையளுக்கு முன்னுக்கு ஆர் இருக்கிறது எண்ட பிரச்சன!" சிரித்தபடி ஏறியமர்ந்தாள், அஜி.
"இதில இருக்கிற டவுன் டவுன்(Down town), இருபது நிமிசமும் வராது கவிக்கா. அதைவிட இலக்கி அக்கா உங்கள விட நல்லாவே வீடியோ எடுப்பா!" சீண்டியபடி ஏறியமர்ந்தான், ஆரூரன்.
கவியின் முகம் இறுகிற்று. “இறங்கடி இலக்கி!" எரிச்சலோடு அதட்டி, அந்தக் கோபத்தை தங்கையில் காட்ட முனைந்தாள்.
“கவி...இதென்ன சின்னப்பிள்ள விளையாட்டு? கெதியா ஏறு, இப்பவே நல்லா நேரம் போயிட்டு." நாதனின் அதட்டலில் அப்போதைக்குப் பின்னாலேறியமர்ந்தாலும், “பேக்கர்ஸ்ஃபீல்ட் போகேக்க நான் முன்னுக்கு இருப்பன் சொல்லீட்டன்." என்று சொல்லி, மாறன் நாதன் சுகுணா மூவரினதும் முறைப்பையும் வாங்கிக்கொண்டாள்.
வேந்தனோ, "மழைக் குணமா இருக்கோ!" உதடுகளுள் சிரிப்பை அடக்கிக்கொண்டு முணுமுணுத்து இலக்கியாவை வம்பிழுத்தான். தமக்கை ஒரு வார்த்தை சொன்னாலே விட்டுக் கொடுத்துவிட்டு போவதைக் கண்டிருந்தவனுக்கு இன்று அவள் ஏறியமர்ந்த விதமும் அசையாது அமர்ந்திருந்த விதமும் அவ்வளவு சந்தோசம் கொடுத்தது.
அவள், அவன் முகம் பார்க்கவில்லை. கவியின் பார்வை தன்னிலிருக்கும் என்று உள்ளுர்ணர்வு சொன்னதில் கைபேசியை இயக்கி வீடியோ எடுக்கத் தயார் செய்தாள்.
அடுத்த அரைமணிதியாலத்தில் ‘மெக்சிகன் சீ பூட்’ ரெஸ்டாரண்டில் இருந்தார்கள். கவி உம்மென்று தான் இருந்தாள். இருந்தாலும் மற்றவர்கள் கலகலப்பாகவே உணவை முடித்தார்கள். அருகிலேயே மோல் ஒன்று இருக்கவும் இளையவர்களும் அஜி, ரதியும் “கெதியா வந்திருவம்.” என்றுவிட்டு நுழைந்துவிட்டார்கள்.
வெளியே இருந்த இருக்கையொன்றில் அமர்ந்துவிட்ட சுகுணாவும் நாதன் மாறனும் மாறி மாறி தொலைபேசி விவாதத்திலிருந்தார்கள்.
கடைத்தொகுதிக்குள் சென்றவர்கள் சொன்னது போலவே வந்ததும், நகரைச் சுற்றிவிட்டு வெளிக்கிடுவம் என்று கதைத்து வாகனம் நிறுத்திய இடத்துக்கு வர, வேகமாக முன்னால் விரைந்து சென்று முன் கதவைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டாள், கவி.
வேந்தன், வாகனமோட்டுவதில் கவனமாகத்தான் இருந்தான். இருந்தாலும் ஏதோவொரு வேண்டாத சிக்கலை அண்மித்துவிட்டதாய் ஓருணர்வு அலைக்கழித்துக் கொண்டிருந்தது. கவியில் கோபம் கூட வந்திட்டு. பயணம் தொடங்கிய நாளிலிருந்து அழகியதொரு நட்புறவைக் காட்டியவளில் கொஞ்சம் பாவமுமாய். தன்னில் கூட கோபம் அவனுக்கு.
‘நானும் இலக்கியாவும் விரும்பிறம் எண்டு சொல்லியிருந்தா இக்கணம் வந்திராதும் இருக்கலாம்’ மனம் இடித்துரைத்தது. அதே மனம் தான், ‘சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளை வச்சு எடுக்கிற ஊகங்கள் எப்பவுமே சரியா இருக்க வேணும் எண்டும் இல்லையே. கவி பற்றி நான் நினைக்கிறது பிழையாவும் இருக்கலாம்' என்றதொரு கோணத்தையும் எடுத்துரைத்தது. இக்கணம், இப்படி எண்ணித் தன்னைத் தானே தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியும் இல்லையே!
அருகிலமர்ந்திருந்த நாதன் மௌனமாக இருந்தாரென்றால் பின்னாலும் ஒரே மௌனம்தான். இத்தனை நாளும் இல்லாத அமைதியாய்த் தோன்றி மிகுந்த அசௌகரியத்தைக் கொடுத்திட்டு!
மனம் விரும்பியவளை, அவளைச் சார்ந்தோரை அருகிலிருந்து பார்த்துப் பழகித் தெரிந்து கொள்ளக்கிடைத்த அருமையான சந்தர்ப்பமாக இப்பயணத்தையெண்ணி வந்தவனுக்கு, இப்போதோ, 'ஏண்டா வந்தம்?' என்றிருந்தது.
இப்பயணத் தொடக்கத்திலிருந்து சென்ற கணம் வரை அறிமுகம் செய்து வைத்திருந்த பல்வேறு இனிய தருணங்களை மழுங்கலடிக்கும் வகையில் அல்லவா இருக்கின்றது, கவியின் பார்வை!
பயணம் முடியப்போகுதே என, நாலைந்து நாட்கள் முன்னிருந்தே வருத்தப்பட்டான். இப்பயணம் இப்பிடியே நீண்டிடாதா என்றேங்கிய கணங்கள் கூட உண்டே! இக்கணமோ, எப்போதடா இதிலிருந்து விடுபட்டோடுவோம் என்றளவுக்கு மனம் நொந்து போனான்.
'பேசாமல் நாளைக்கு ஒரு டிரைவர் அரேஞ் பண்ணிட்டு நாம வீட்ட போய்ட்டா என்ன?' கேள்வி கேட்ட இதயம், தன்னை வியாபித்திருந்த இலக்கியாவின் ஆளுமையால் துவண்டிட்டு! அப்படிச் செய்து, நாளை பற்றிய அவள் சின்ன சின்ன எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போடத் துணியேன் என்றதுள்ளம்.
வெளிப்புறத்தில் இலக்கின்றித் தத்தளித்த பார்வையோடு அமர்ந்திருந்தாள், இலக்கியா. அவளுள்ளும் தமக்கை பற்றிய எண்ணமே! அவளறிந்த கவியில் இச்சில நாட்களாக மாற்றம் உணர்கிறாளே!
'வேந்தனில் அக்காவுக்கு விருப்பமோ' மிகச் சிறிதாக எழுந்த சந்தேகம் இப்போது சற்றே வளர்ந்த நிலையில் அவளைப் பாடாய்ப்படுத்தியது.
வேந்தன், ‘ஒண்ணுமில்ல’ என்று சமாளித்தாலும் ‘மதி எடுக்கிறான்’ என்று வெளியே போனதன்பின் அவன் முகமே சரியில்லையென்பதை தெள்ளத் தெளிவாய் உணர்ந்ததாலும் மறுநாளோடு பயணம் முடிகின்றதேயென்ற ஆதங்கத்தாலும் தான், 'முன்னுக்கு வந்து இருப்பீரா?' என, அவன் போட்ட குறுஞ்செய்திக்கு, 'நான் வீடியோ எடுக்கிறன், முன்னுக்கு இருக்கிறன் சித்தப்பா' சொல்லிவிட்டு, பதில் சொல்ல முதல் ஏறியமர்ந்து பெல்ட்டையும் போட்டு விட்டாள்.
விசுக்கென்று வந்த கவி, "இல்ல இறங்கு இலக்கி...நான் தான் இண்டைக்கு முழுதும் எடுத்து வச்சிருக்கிறன். நீ பின்னால ஏறு, நானே எடுக்கிறன்." அதட்டியிருந்தாள்.
"சின்னப்பிள்ளைகள் போல இவையளுக்கு முன்னுக்கு ஆர் இருக்கிறது எண்ட பிரச்சன!" சிரித்தபடி ஏறியமர்ந்தாள், அஜி.
"இதில இருக்கிற டவுன் டவுன்(Down town), இருபது நிமிசமும் வராது கவிக்கா. அதைவிட இலக்கி அக்கா உங்கள விட நல்லாவே வீடியோ எடுப்பா!" சீண்டியபடி ஏறியமர்ந்தான், ஆரூரன்.
கவியின் முகம் இறுகிற்று. “இறங்கடி இலக்கி!" எரிச்சலோடு அதட்டி, அந்தக் கோபத்தை தங்கையில் காட்ட முனைந்தாள்.
“கவி...இதென்ன சின்னப்பிள்ள விளையாட்டு? கெதியா ஏறு, இப்பவே நல்லா நேரம் போயிட்டு." நாதனின் அதட்டலில் அப்போதைக்குப் பின்னாலேறியமர்ந்தாலும், “பேக்கர்ஸ்ஃபீல்ட் போகேக்க நான் முன்னுக்கு இருப்பன் சொல்லீட்டன்." என்று சொல்லி, மாறன் நாதன் சுகுணா மூவரினதும் முறைப்பையும் வாங்கிக்கொண்டாள்.
வேந்தனோ, "மழைக் குணமா இருக்கோ!" உதடுகளுள் சிரிப்பை அடக்கிக்கொண்டு முணுமுணுத்து இலக்கியாவை வம்பிழுத்தான். தமக்கை ஒரு வார்த்தை சொன்னாலே விட்டுக் கொடுத்துவிட்டு போவதைக் கண்டிருந்தவனுக்கு இன்று அவள் ஏறியமர்ந்த விதமும் அசையாது அமர்ந்திருந்த விதமும் அவ்வளவு சந்தோசம் கொடுத்தது.
அவள், அவன் முகம் பார்க்கவில்லை. கவியின் பார்வை தன்னிலிருக்கும் என்று உள்ளுர்ணர்வு சொன்னதில் கைபேசியை இயக்கி வீடியோ எடுக்கத் தயார் செய்தாள்.
அடுத்த அரைமணிதியாலத்தில் ‘மெக்சிகன் சீ பூட்’ ரெஸ்டாரண்டில் இருந்தார்கள். கவி உம்மென்று தான் இருந்தாள். இருந்தாலும் மற்றவர்கள் கலகலப்பாகவே உணவை முடித்தார்கள். அருகிலேயே மோல் ஒன்று இருக்கவும் இளையவர்களும் அஜி, ரதியும் “கெதியா வந்திருவம்.” என்றுவிட்டு நுழைந்துவிட்டார்கள்.
வெளியே இருந்த இருக்கையொன்றில் அமர்ந்துவிட்ட சுகுணாவும் நாதன் மாறனும் மாறி மாறி தொலைபேசி விவாதத்திலிருந்தார்கள்.
கடைத்தொகுதிக்குள் சென்றவர்கள் சொன்னது போலவே வந்ததும், நகரைச் சுற்றிவிட்டு வெளிக்கிடுவம் என்று கதைத்து வாகனம் நிறுத்திய இடத்துக்கு வர, வேகமாக முன்னால் விரைந்து சென்று முன் கதவைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டாள், கவி.