கண்ணிமைப்பொழுதுதான், அந்த அறைக்குள்ளிருந்தாள், இலக்கியா. ஒரு கை அறைக்கதவைச் சாத்த மறுகையால் அவள் வாய் பொத்தப்பட்டிருந்தது. அதுவும் கணப்பொழுதில்!
சற்றிலும் எதிர்பாராது நடந்துவிட்ட நிகழ்வில் கணம் செயலிழந்து விட்டாளவள். மறுகணமோ, அடிவயிற்றிலிருந்து வீரிட்டெழுந்த அவலக்குரல் அதேவேகத்தில் அடங்கியுமிருந்தது.
அறையில் இருட்டாகவிருந்தாலும்...
வாயைப்போத்தியிருந்த கரத்தைத் தன்னிரு கரங்களாலும் விலக்க முனைந்தபடியே முழங்கையால் விட்டாள் ஒரு இடி!
"டோய்ய்ய்...ஏன்டி!" பட்டென்று கரத்தை விலக்கிக்கொண்டு தன்விலாவைப் பிடித்தபடி நெளிந்தான், வேந்தன்.
"மென்டலா நீங்க?" சுவரைத் தடவி மின்விசையைத்தட்டிவிட்டவள் நெருப்புப் பார்வை பார்த்தாள். அவன் முகத்திலோ, நேசமும் குறும்பும் பலத்த போட்டியில்!
"நீ...நீ...கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல எல்லா! சந்தோசப்படுவ எண்டு பார்த்தா இந்த இடி இடிக்கிறயப்பா!" சீண்டினான்.
நொடிகளேயென்றாலும் இதயத்தின் ஓட்டத்தை நிறுத்தப் பார்த்தானே! இதற்குள் பெரிய சாதனை செய்த வகையில் இளிப்பு!
"உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டா என்ன?" விழிகள் கலங்க அவன் நெஞ்சில் இடித்தவள் கரமிரண்டையும் இறுகப்பற்றி அருகில் இழுத்திருந்தவன் பார்வை, இமைக்காது அவள் விழிகளில் தங்கிற்று!
சளைக்காது பார்க்க முயன்றாளவள். கணம் கூடத் தாங்கவில்லை, தவிப்போடு மெல்ல அப்பால் விலகிற்று. அவன் அன்புச் செய்கையும் ஏகாந்தமும் மென்மயக்கம் தூவத்தொடங்கிற்று!
அவன் உதடுகள் முறுவலைப் பூசிக்கொண்டன.
"போயிட்டு வாறன் எண்டு சொல்லத் தேடினா ஓடிப் போய் ஒளிஞ்சிட்ட என்ன? அப்பிடியே விட்டுட்டுப் போவனா என்ன? எப்பிடி என்ர ஐடியா!" அவன் குரலில் பட்டென்று கலைந்தவள், "மண்ணாங்கட்டி! இதெல்லாம் விளையாட்டா வேந்தன்? இப்ப மாறன் சித்தப்பா குளிக்க வருவார், ஐயோ!" பதற்றத்தோடு நகர முயன்றவளை அப்படியே இழுத்து இறுக அணைத்துக் கொண்டானவன்.
சில நொடிகளுக்குமுன் விலகிச் செல்ல முயன்ற அவளுள்ளமோ, அவள் மீதான நேசத்தை சுவாசிக்கும் அவன் நெஞ்சில் சாய்ந்தடங்கிவிடேனென்றது. சற்றுமுன் வரை தந்தை, அம்மம்மா சித்தப்பாமாரென்று எவ்வளவோ தவித்த உள்ளம், அவனருகில், அவனிருகிறானென்ற துணிவில் அமைதியாகிற்று!
மௌனத்தின் ஆட்சியில் அவ்விடத்தில் நேச மூச்சு மட்டுமே சுதந்திரத்தோடு வலம் வந்தது.
திடீரென்று வந்த எண்ணத்தில் முதல் நாளிரவுதான் அறை கிடைக்குமாவென்று விசாரித்திருந்தான், வேந்தன். அது அவர்கள் அறைக்குப் பக்கத்திலேயே கிடைத்தது, நிச்சயம் எதிர்பாராதது. அவனதிஸ்ட்டமே!
இவள், அஜியோடு அவர்கள் அறைக்குச் செல்கையிலேயே இலேசாகத் திறந்திருந்த கதவால் நோட்டம் விட்டபடித்தானிருந்தான். குளிக்கச் செல்லும் போது இழுத்துவிடுவோம் என்று ஆயத்தமாக நிற்க ரதி வந்து குறுக்கிட்டுவிட்டார்.
"வேந்தன்" நீண்டதாக உணர்த்திய மௌனத்தை முதலில் கலைத்தது அவள்தான்.
"ம்ம்"
"நான் போகோணும், மாறன் சித்தப்பா குளிக்க வருவார் வேந்தன்." விலக முயன்றாள்.
"வரட்டும்" அவனணைப்பு இளகேன் என்றது. முகம் தேடிக் குனிந்தான்.
“அடிதான் வாங்குவீங்க...விடுங்கோ!" திமிறியவள் விழிகளோ வேறு கதை சொல்லிட்டு! அவன் உதடுகளில் முறுவல் விரிந்தது.
"முடியவே முடியாது!" பிடிவாதமாக மறுத்தவனை என்ன செய்வதாம்.
"இப்ப நான் உங்களோடு நிக்கிறப் பார்த்தா என்ன எண்டாலும் வீட்டாக்கள் தாங்க மாட்டினம் வேந்தன். அதும் அப்பம்மா! ஐயோ விடுங்க!" ஒரே உதறலில் விலகியிருந்தாள்.
சற்றிலும் எதிர்பாராது நடந்துவிட்ட நிகழ்வில் கணம் செயலிழந்து விட்டாளவள். மறுகணமோ, அடிவயிற்றிலிருந்து வீரிட்டெழுந்த அவலக்குரல் அதேவேகத்தில் அடங்கியுமிருந்தது.
அறையில் இருட்டாகவிருந்தாலும்...
வாயைப்போத்தியிருந்த கரத்தைத் தன்னிரு கரங்களாலும் விலக்க முனைந்தபடியே முழங்கையால் விட்டாள் ஒரு இடி!
"டோய்ய்ய்...ஏன்டி!" பட்டென்று கரத்தை விலக்கிக்கொண்டு தன்விலாவைப் பிடித்தபடி நெளிந்தான், வேந்தன்.
"மென்டலா நீங்க?" சுவரைத் தடவி மின்விசையைத்தட்டிவிட்டவள் நெருப்புப் பார்வை பார்த்தாள். அவன் முகத்திலோ, நேசமும் குறும்பும் பலத்த போட்டியில்!
"நீ...நீ...கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல எல்லா! சந்தோசப்படுவ எண்டு பார்த்தா இந்த இடி இடிக்கிறயப்பா!" சீண்டினான்.
நொடிகளேயென்றாலும் இதயத்தின் ஓட்டத்தை நிறுத்தப் பார்த்தானே! இதற்குள் பெரிய சாதனை செய்த வகையில் இளிப்பு!
"உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டா என்ன?" விழிகள் கலங்க அவன் நெஞ்சில் இடித்தவள் கரமிரண்டையும் இறுகப்பற்றி அருகில் இழுத்திருந்தவன் பார்வை, இமைக்காது அவள் விழிகளில் தங்கிற்று!
சளைக்காது பார்க்க முயன்றாளவள். கணம் கூடத் தாங்கவில்லை, தவிப்போடு மெல்ல அப்பால் விலகிற்று. அவன் அன்புச் செய்கையும் ஏகாந்தமும் மென்மயக்கம் தூவத்தொடங்கிற்று!
அவன் உதடுகள் முறுவலைப் பூசிக்கொண்டன.
"போயிட்டு வாறன் எண்டு சொல்லத் தேடினா ஓடிப் போய் ஒளிஞ்சிட்ட என்ன? அப்பிடியே விட்டுட்டுப் போவனா என்ன? எப்பிடி என்ர ஐடியா!" அவன் குரலில் பட்டென்று கலைந்தவள், "மண்ணாங்கட்டி! இதெல்லாம் விளையாட்டா வேந்தன்? இப்ப மாறன் சித்தப்பா குளிக்க வருவார், ஐயோ!" பதற்றத்தோடு நகர முயன்றவளை அப்படியே இழுத்து இறுக அணைத்துக் கொண்டானவன்.
சில நொடிகளுக்குமுன் விலகிச் செல்ல முயன்ற அவளுள்ளமோ, அவள் மீதான நேசத்தை சுவாசிக்கும் அவன் நெஞ்சில் சாய்ந்தடங்கிவிடேனென்றது. சற்றுமுன் வரை தந்தை, அம்மம்மா சித்தப்பாமாரென்று எவ்வளவோ தவித்த உள்ளம், அவனருகில், அவனிருகிறானென்ற துணிவில் அமைதியாகிற்று!
மௌனத்தின் ஆட்சியில் அவ்விடத்தில் நேச மூச்சு மட்டுமே சுதந்திரத்தோடு வலம் வந்தது.
திடீரென்று வந்த எண்ணத்தில் முதல் நாளிரவுதான் அறை கிடைக்குமாவென்று விசாரித்திருந்தான், வேந்தன். அது அவர்கள் அறைக்குப் பக்கத்திலேயே கிடைத்தது, நிச்சயம் எதிர்பாராதது. அவனதிஸ்ட்டமே!
இவள், அஜியோடு அவர்கள் அறைக்குச் செல்கையிலேயே இலேசாகத் திறந்திருந்த கதவால் நோட்டம் விட்டபடித்தானிருந்தான். குளிக்கச் செல்லும் போது இழுத்துவிடுவோம் என்று ஆயத்தமாக நிற்க ரதி வந்து குறுக்கிட்டுவிட்டார்.
"வேந்தன்" நீண்டதாக உணர்த்திய மௌனத்தை முதலில் கலைத்தது அவள்தான்.
"ம்ம்"
"நான் போகோணும், மாறன் சித்தப்பா குளிக்க வருவார் வேந்தன்." விலக முயன்றாள்.
"வரட்டும்" அவனணைப்பு இளகேன் என்றது. முகம் தேடிக் குனிந்தான்.
“அடிதான் வாங்குவீங்க...விடுங்கோ!" திமிறியவள் விழிகளோ வேறு கதை சொல்லிட்டு! அவன் உதடுகளில் முறுவல் விரிந்தது.
"முடியவே முடியாது!" பிடிவாதமாக மறுத்தவனை என்ன செய்வதாம்.
"இப்ப நான் உங்களோடு நிக்கிறப் பார்த்தா என்ன எண்டாலும் வீட்டாக்கள் தாங்க மாட்டினம் வேந்தன். அதும் அப்பம்மா! ஐயோ விடுங்க!" ஒரே உதறலில் விலகியிருந்தாள்.
Last edited: