மனம் - 4:
“அந்த புள்ளை உன்கூட தான் வேலை பார்க்குறதா அசோக் மாப்ள சொன்னாரே குரு. நீயும் அந்த பிள்ளையும் ஒண்ணா வேலை பார்க்குறது அந்த பொண்ணு வீட்டுக்கு தெரியுமா தம்பி.” என குணசீலன் குருவை அழைத்து விசாரித்தார். சென்னை சென்று வந்த இருநாட்களிலே அசோகன் குணசீலனுக்கு தகவல் சொல்லிவிட்டார்.
“அப்பா.” என பல்லை கடித்தவன்,
“இப்ப உங்களுக்கு என்ன தெரியணும்? நான் யார்கிட்டயும் எதையும் மறைச்சி செய்யல. அத்தான் ஊருக்கு வந்தாங்க; அவளை பார்த்தப்ப பேசுனாங்க. அவங்க வீட்டுக்கு தெரியுமா இல்லையான்றது எனக்கு தேவையில்லாதது ப்பா.”
இப்படி எடுத்தெரிந்து பேசுகிறானே என ஒருபக்கம் தோன்றினாலும், “அதுக்கில்லைய்யா. மறுபடியும் எதாவது பிரச்சனை வர போகுதுன்னு தான் அப்பா சொல்லுறேன்.” என குணசீலன் தணிந்த குரலில் சொல்ல,
“பிரச்சனை வருமான்னு தெரியாது. அப்படியே வந்தாலும் அதை நானே பார்த்துக்குறேன்.” என சொல்லிவிட்டு உடனே அழைப்பை துண்டித்தான்.
தந்தையான குணசீலனுக்கு அவனின் வார்த்தைகள் வலிக்க தான் செய்தன. “போதும். நீங்க செஞ்சது எல்லாமே போதும். இதோட நிறுத்திக்கோங்க.” என அன்று அவன் இவர்களிடம் சண்டையிட்டது நினைவில் வர, அவர்களின் குலதெய்வம் ஐயனாரை வேண்டிக்கொள்ள மட்டும் முடிந்தது அவரால்.
அன்று பவ்யா விடுமுறை எடுத்திருந்ததால், மதிய உணவு நேரத்தில் அட்சயா தனியாக தான் கேன்டீன் வந்திருந்தாள். அங்கேயோ கூட்டம் நிரம்பி வழிந்தது. ‘இன்னைக்கு சாப்பிட்ட மாதிரி தான்.’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அங்கே நால்வர் அமரும் இடத்தில் அபிலாஷும் குருபிரசாத்தும் மட்டும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவளை கவனித்த அபிலாஷ் கையசைத்து அழைத்தான்.
எங்கும் இருக்கைகள் காலியாக இல்லாமல் இருக்க, அவர்களுடனே சென்று அமர்ந்தாள். இருவரையும் பார்த்து ஸ்நேகமாக சிரித்தவள் உணவினை எடுத்து உண்ண துவங்கினாள்.
இருவாய் உணவை உண்டதும், அட்சயாவுக்கு விக்கல் வந்தது. அங்கிருந்த டம்ளரில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. ஜக் முழுவதும் தண்ணீர் இருந்ததால் அவளால் இடக்கையில் அதனை தூக்க முடியவில்லை.
அவளிடம் இருந்து ஜக்கை வாங்கிய குருபிரசாத், “டம்பளரை பிடி..” என தண்ணீரை ஊற்றினான்.
தண்ணீர் குடித்து முடித்ததும், “தேங்க்ஸ்” என கூற வந்தவள் குருபிரசாத்தின் பார்வையில் அவ்வார்த்தையையும் முழுங்கிவிட்டாள்.
“நெருக்கமானவங்க யாரோ நினைக்குறாங்க போல அட்சயா. அதான் உனக்கு விக்கல் வருது.” என அபிலாஷ் சிரிப்புடன் சொல்ல, அவனின் காலிலே மிதித்தான் குரு.
சாப்பிட்டு முடித்த அபிலாஷ், “எனக்கு மீட்டிங் இருக்கு.” என எழுந்து சென்றுவிட்டான்.
சாப்பிட்டு முடித்தாலும் ஃபோனை பார்த்துக்கொண்டே அவளுக்காக அமர்ந்திருந்த குருபிரசாத்திடம், “உங்களுக்கு வேலை இருக்கும். நீங்க போங்க..” என சொல்ல,
அலைபேசியில் இருந்து கண்களை நிமிர்த்தியவன், “பாதில விட்டுட்டு போற பழக்கம் எனக்கில்லை.” என அவளின் கண்ணை நோக்கினான்.
அவளால் அவனை எதிர்கொள்ள முடியவில்லை. குனிந்தபடியே உணவையும் உண்டு முடித்தாள்.
ஒரு முடிவை எடுத்தபின் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்றாலும், நிம்மதியாவது கிடைக்க வேண்டும். அப்படி நிம்மதியும் கிடைக்கவில்லையெனின் அம்முடிவு நிச்சயம் நமக்கானது அல்ல.
அட்சயாவும் அந்நிலையில் தான் இருக்கிறாள். சூழ்நிலை கைதியாக, சுயநலமாக அவசரப்பட்டு எடுத்த முடிவை பரிசீலிக்கவும் முடியாமல் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறாள்.
அதுநாள் வரை குருபிரசாத்தை பார்க்காமல் இருந்தவளிற்கு அவனின் சந்திப்பின் தாக்கத்தால் மனதில் உருவான குழப்பம், குற்றவுணர்வு, ஆதங்கம், நெருடல் என கலவையான உணர்வுகளில் காதல் இருப்பதாக அவளால் உணர முடியவில்லை.
“அந்த புள்ளை உன்கூட தான் வேலை பார்க்குறதா அசோக் மாப்ள சொன்னாரே குரு. நீயும் அந்த பிள்ளையும் ஒண்ணா வேலை பார்க்குறது அந்த பொண்ணு வீட்டுக்கு தெரியுமா தம்பி.” என குணசீலன் குருவை அழைத்து விசாரித்தார். சென்னை சென்று வந்த இருநாட்களிலே அசோகன் குணசீலனுக்கு தகவல் சொல்லிவிட்டார்.
“அப்பா.” என பல்லை கடித்தவன்,
“இப்ப உங்களுக்கு என்ன தெரியணும்? நான் யார்கிட்டயும் எதையும் மறைச்சி செய்யல. அத்தான் ஊருக்கு வந்தாங்க; அவளை பார்த்தப்ப பேசுனாங்க. அவங்க வீட்டுக்கு தெரியுமா இல்லையான்றது எனக்கு தேவையில்லாதது ப்பா.”
இப்படி எடுத்தெரிந்து பேசுகிறானே என ஒருபக்கம் தோன்றினாலும், “அதுக்கில்லைய்யா. மறுபடியும் எதாவது பிரச்சனை வர போகுதுன்னு தான் அப்பா சொல்லுறேன்.” என குணசீலன் தணிந்த குரலில் சொல்ல,
“பிரச்சனை வருமான்னு தெரியாது. அப்படியே வந்தாலும் அதை நானே பார்த்துக்குறேன்.” என சொல்லிவிட்டு உடனே அழைப்பை துண்டித்தான்.
தந்தையான குணசீலனுக்கு அவனின் வார்த்தைகள் வலிக்க தான் செய்தன. “போதும். நீங்க செஞ்சது எல்லாமே போதும். இதோட நிறுத்திக்கோங்க.” என அன்று அவன் இவர்களிடம் சண்டையிட்டது நினைவில் வர, அவர்களின் குலதெய்வம் ஐயனாரை வேண்டிக்கொள்ள மட்டும் முடிந்தது அவரால்.
அன்று பவ்யா விடுமுறை எடுத்திருந்ததால், மதிய உணவு நேரத்தில் அட்சயா தனியாக தான் கேன்டீன் வந்திருந்தாள். அங்கேயோ கூட்டம் நிரம்பி வழிந்தது. ‘இன்னைக்கு சாப்பிட்ட மாதிரி தான்.’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அங்கே நால்வர் அமரும் இடத்தில் அபிலாஷும் குருபிரசாத்தும் மட்டும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவளை கவனித்த அபிலாஷ் கையசைத்து அழைத்தான்.
எங்கும் இருக்கைகள் காலியாக இல்லாமல் இருக்க, அவர்களுடனே சென்று அமர்ந்தாள். இருவரையும் பார்த்து ஸ்நேகமாக சிரித்தவள் உணவினை எடுத்து உண்ண துவங்கினாள்.
இருவாய் உணவை உண்டதும், அட்சயாவுக்கு விக்கல் வந்தது. அங்கிருந்த டம்ளரில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. ஜக் முழுவதும் தண்ணீர் இருந்ததால் அவளால் இடக்கையில் அதனை தூக்க முடியவில்லை.
அவளிடம் இருந்து ஜக்கை வாங்கிய குருபிரசாத், “டம்பளரை பிடி..” என தண்ணீரை ஊற்றினான்.
தண்ணீர் குடித்து முடித்ததும், “தேங்க்ஸ்” என கூற வந்தவள் குருபிரசாத்தின் பார்வையில் அவ்வார்த்தையையும் முழுங்கிவிட்டாள்.
“நெருக்கமானவங்க யாரோ நினைக்குறாங்க போல அட்சயா. அதான் உனக்கு விக்கல் வருது.” என அபிலாஷ் சிரிப்புடன் சொல்ல, அவனின் காலிலே மிதித்தான் குரு.
சாப்பிட்டு முடித்த அபிலாஷ், “எனக்கு மீட்டிங் இருக்கு.” என எழுந்து சென்றுவிட்டான்.
சாப்பிட்டு முடித்தாலும் ஃபோனை பார்த்துக்கொண்டே அவளுக்காக அமர்ந்திருந்த குருபிரசாத்திடம், “உங்களுக்கு வேலை இருக்கும். நீங்க போங்க..” என சொல்ல,
அலைபேசியில் இருந்து கண்களை நிமிர்த்தியவன், “பாதில விட்டுட்டு போற பழக்கம் எனக்கில்லை.” என அவளின் கண்ணை நோக்கினான்.
அவளால் அவனை எதிர்கொள்ள முடியவில்லை. குனிந்தபடியே உணவையும் உண்டு முடித்தாள்.
ஒரு முடிவை எடுத்தபின் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்றாலும், நிம்மதியாவது கிடைக்க வேண்டும். அப்படி நிம்மதியும் கிடைக்கவில்லையெனின் அம்முடிவு நிச்சயம் நமக்கானது அல்ல.
அட்சயாவும் அந்நிலையில் தான் இருக்கிறாள். சூழ்நிலை கைதியாக, சுயநலமாக அவசரப்பட்டு எடுத்த முடிவை பரிசீலிக்கவும் முடியாமல் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறாள்.
அதுநாள் வரை குருபிரசாத்தை பார்க்காமல் இருந்தவளிற்கு அவனின் சந்திப்பின் தாக்கத்தால் மனதில் உருவான குழப்பம், குற்றவுணர்வு, ஆதங்கம், நெருடல் என கலவையான உணர்வுகளில் காதல் இருப்பதாக அவளால் உணர முடியவில்லை.
Author: STN - 92
Article Title: அத்தியாயம் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.