மன்னிப்பாயா காதலே - 2026 புத்தகத் திருவிழாவிற்காக எழுதியது.
வாசக உறவுகளிடம் பலதரப்பட்ட கருத்துகளைப் பெற்ற ஒரு கதை. அதை எழுதிய ஆசிரியையாக இந்தக் கதையைப் பற்றி என் பக்கத்திலிருந்து சொல்லப்போகிற அதே நேரம், உங்களது சில ஆதங்கங்களுக்கும் சேர்த்து ஒரு விளக்கம் போன்று இதை எழுதலாம் என்று நினைத்தேன்.
இதன் பொருள் உங்கள் கருத்துகளை மறுத்துரைப்பது இல்லை. என்னால் முடிந்த விளக்கம். அவ்வளவுதான். இளம் வயதில் நேசிக்கும் இருவர். விதி வசத்தால் நாயகி வெளிநாடு செல்கிறாள். இதுதான் ஆரம்பப் புள்ளி.
சிலருக்கு அவனுக்கு நவியைத் தெரியாதா என்று ஒரு ஆதங்கம். அவன் எப்படி தொடர்பு விட்டுப் போனதும் மொழியைக் கட்டினான் என்று ஒரு குட்டிக் கோபம். ஆனால், வெளிநாடு செல்கிற பலர், தம் பொருளாதார நிலையில் மேலே சென்ற பின்னால் அப்படி மாறிப்போவதுதான் வழமை. நம்மோடு கூடப்பிறந்த சகோதரர்களே பொருளாதார நிலை உயருகையில் மாறிப்போகையில் நவியை அவனுக்கு தெரியாதா என்று கேட்க முடியாது இல்லையா.
அப்போதும் அவன் அவளை அப்படி நினைக்கவில்லை. அவள் தந்தையின் நம்பர் அவனிடம் இல்லை. அபிராமியோடுதான் அவனுக்கு நல்ல பழக்கம். அவரோடு அவன் தன்னால் முயன்ற வரையில் பேசுகிறான். அவர் அவனை வெட்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்.
அடுத்தது மயூரன். கேசி நாவினி மீது ஈர்ப்பு கொண்டபோதிலிருந்து நேசிக்க ஆரம்பித்த காலம் வரையில் அவனுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் நாவினிக்கு தெரிய முதலே மயூரனுக்குத்தான் அவன் காதல் தெரியும். முதன் முதலில் மொழியைப் திருமணத்திற்கு பேசியபோது மயூரனும் சேர்ந்துதான் மறுக்கிறான். அப்படியான நண்பன் தனக்குத் துரோகம் செய்வான் என்று கேசிகன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டான் இல்லையா?
அதன் அடிப்படையில் நாவினி நினைத்திருந்தால் எந்த சிரமமும் இல்லாமல் மயூரன் மூலம் தன்னை தொடர்புகொண்டிருக்க முடியும் என்பது கேசிகனின் ஆணித்தரமான எண்ணம். அவனுடைய புது நம்பரை அவன் அனுப்பியிருக்கிறான், அவள் கடிதம் போட்டிருந்தாள் இரவு போய் பகல் வருவது எத்தனை உறுதியோ அத்தனை உறுதியாக அது தன் கைக்கு சேர்ந்திருக்கும் என்று நம்புகிறான்.
இதில் அபிராமி வேறு அவள் வாழ்க்கை அங்கேதான் என்பதுபோல் சொல்கிறார். அவனை வெட்டி விடுவதில் குறியாக இருக்கிறார். இப்படியிருக்க அவளும் தொடர்புகொள்ளாமல் இருக்கிறாள் என்கையில் அபிராமி சொன்னது போன்று அவள் அங்கே தன் வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள், அதனாலதான் மூன்று வருடங்களாகியும் அவள் தன்னை தொடர்புகொள்ள விரும்பவே இல்லை என்று நினைக்கிறான்.
பரவாயில்லை, நான் வேண்டாம் என்றால் அதை சொல்லிவிட்டு நீ விலகியிருக்கலாம் என்பது அவன் ஆதங்கம். தன்னிடம் நேரடியாக சொல்ல தைரியம் இல்லாமல் அன்னையின் பின் ஒளிந்துகொண்டு தன்னை தாண்டி நகர்ந்துவிட்டாள் என்பது அவன் மனதில் கசப்பாக விழுகிறது.
அதே நேரத்தில்தான் இங்கே அவனுக்கு திருமணம் பேசுகிறார்கள். மொழியை திருமணம் பேசுகிற வரை மொழி என்கிற ஒருத்தியும் அதே ஊரில் அதே தெருவுல நண்பனின் தங்கையாக இருக்கிறாள் என்பது அவன் கருத்திலேயே இல்லை.
கதையில் நாவினி கேட்பாள். அதே ஆதங்கம் வாசகர்களுக்கும் உண்டு. அவளுக்கும்தான் அவன் தொடர்பு முற்றிலும் அறுந்துபோயிருந்தது. அவள் காத்திருக்க அவன் காத்திருக்கவில்லையே என்று.
தகப்பன் இல்லாமல் வளர்ந்த பிள்ளை அவன். அன்னை தாய் மாமா வீட்டில் எத்தனையோ சிரமங்களை அனுபவித்து அவனை வளர்த்திருக்கிறார். அவரின் ஆசையை ஒரு அளவுக்கு மீறி அவனால் தட்டிக் கழித்திருக்க முடியாது. அதைவிட நாளடைவில் உயிர் நண்பனின் ஆசையும் அதுவாகிறது. அவனை சின்ன வயதில் இருந்தே பார்த்து வளர்த்த சாரதாவின் அன்பான வேண்டுதல் அது.
அவர்கள் அறிமுகமற்ற மனிதர்களாக இருந்திருந்தால் கூட வேறு. நாம் நேசித்த, நம் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் முகங்களை முறிப்பது இலகுவே இல்லை. அதைவிட நாவினி மீதான காத்திருப்பு அவனையும் அழுத்திக்கொண்டேயிருக்கிறது. அதற்கு ஒரு விடுதலை வேண்டும் என்று எண்ணித்தான் அந்த வளவினுள் அவன் போகிறான்.
ஆனால் நாவினி விடயம் அப்படி இல்லை. அபிராமி அம்மாவிற்கு அவர்கள் காதல் தெரியும். அது வேண்டாம் என்று நினைக்கிறார். அதில் அவர் அவளை அவனிடமிருந்து முற்றிலும் பிரிப்பதில் கவனமாக இருக்கிறாரே தவிர இன்னொரு திருமணத்திற்கு அவளை தூண்டவில்லை, வற்புறுத்தவில்லை.
கூடவே அவள் அன்பு செலுத்துகிற, அவள் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு குடும்பம் பக்கத்திலேயே இருந்து என் மகனை வேண்டாம் என்பாயா என்று பார்க்கிற நேரமெல்லாம் கேட்கிற அந்த வதை அவளுக்கு இருக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் புத்திசாலித்தனமாக முதல் முறை அவளை தகப்பனோடு இலங்கை அனுப்புகையில் அவள் அங்கு போய் வருவதுதான் அவள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு உதவி செய்யும் என்று நினைக்கிறார். அதாவது கேசிகனுக்கு திருமணம் நடந்துவிட்டது அவருக்கு தெரியும். ஆனால் இங்கே நாவினி அவனுக்காகவே காத்திருக்கிறாள். இப்போது அவளை அங்கு அனுப்பி, கேசிகனின் திருமணத்தை பற்றி தெரிய செய்தால் அவள் அவனில் இருந்து கடந்து வந்துவிடுவாள் என்பது அவர் மட்டுமே போடும் கணக்கு.
கேசிகன் பிரேமா அம்மாவிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் எல்லாம் முடிவதில்லை. அதைவிட அவனும் எல்லாவற்றையும் தானாகவே கற்று வளரும் பிள்ளை. வயது மட்டுமே ஒருவருக்கு பக்குவத்தை கொடுத்துவிடுவதில்லை. பல நேரத்தில் 20 வயதுப் பிள்ளைக்கு இருக்கிற பக்குவம் கூட 40 வயதில் இருப்பவருக்கு இருப்பதில்லை. இது உண்மைதானே?
ஜெர்மன் சென்று பார்த்திருக்கலாம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அதுவும் இலங்கை போன்ற யுத்தம் நடந்த நாட்டிலிருந்து பக்கத்தில் இருக்கும் இந்தியாவிற்கு போவதற்கே பெரும் பாடு படவேண்டும். போகிற நாட்டில் அகதியாக தங்கி விடுவார்கள் என்பதாலேயே அனுமதிப்பதில்லை.
ஒரு காதல் தோல்வி. அதன் பிறகு இன்னொரு திருமணம். அந்தப் பெண்ணின் தூய அன்பு, தான் ஏற்கனவே ஒரு காதலில் இருந்து தோற்றவன் என்று தெரிந்தும் தங்கையை தந்த நண்பன் என்கிற காரணங்களே போதும் அவன் அந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ.
அப்போதுதான் நவி வருகிறாள். அவள் அவனை தேடி வந்த ஒன்றே சொல்லிவிடுகிறது நடுவில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்று. அன்றிலிருந்து அவன் நிம்மதி பறிபோகிறது. ஆனால், ஒன்றில் தெளிவாகிறான். யாரில் சரியோ பிழையோ அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். பிள்ளை வரப்போகிறது. அவன் வாழ்க்கை மொழியோடு. நாவினியும் இனி அவனைக் கடந்து சென்று இன்னொரு வாழ்விற்குள் செல்வது மட்டுமே இதற்கான தீர்வு என்று நினைத்துத்தான் அவன் முற்றிலுமாக நாவினியிடம் இருந்து ஒதுங்கி நிற்கிறான்.
மூன்றோ நான்கு மாத கருவாக இருக்கிறபோது நாவினி வந்து போகிறாள். மொழி குழந்தை பெற்றெடுக்கிறபோதுதான் அவன் நாவினி பற்றிய மனத்தின் தடுமாற்றத்திலிருந்து முற்றிலுமாக வெளியே வந்து இனி அவளை நினைக்க கூடாது என்று தெளிவாகிறான். ஆக மொழியோடு மனமொத்த வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் கூட நவியின் ஒற்றை வருகை அவன் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. என்ன, மொழிக்கு அவன் காதல் தெரியாத காரணத்தினால் கணவனின் தடுமாற்றங்களை அவள் கண்டுபிடிக்கவில்லையாக இருக்கலாம்.
இரண்டாவது தடவை நாவினியின் வருகை. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். கோயிலில் அவன் வேண்டுதல் அதுதான். அவளை மணக்க கேட்டபோது தனக்கு அந்த தகுதி இல்லை என்கிறான். கூடவே தான் அவளுக்குத் தகுதியானவன் இல்லை என்றும் சொல்கிறான்.
அன்னை திருமணத்திற்கு கேட்டபோது முற்றிலுமாக மறுத்தவனால் நாவினியைக் கேட்டபோது மறுக்க முடியவில்லை. அதன் பின்னிருப்பது அவளை மணக்கும் ஆசை இல்லை. அவளை மறுக்கும் தகுதி தனக்கில்லை என்று நினைக்கிறான். தன் வாயால் அவளை வேண்டாம் என்று சொல்லி அவளுக்கு அடுத்த மரண வலியை அவனால் கொடுக்க முடியாது. உண்மையில் முதலில் கேசிகனை வேண்டாம் என்று சொன்ன நாவினி, தன்னைக் கேசிகன் வேண்டாம் என்று சொன்னான் என்று அறிந்தால் நிச்சயம் முற்றிலும் உடைந்துபோவாள்.
அவள் பக்கம் இருந்து அந்த மறுப்பு வரவேண்டும் என்பதும், அவள் தன்னைக் கடந்து இன்னொரு வாழ்வினுள் செல்ல வேண்டும் என்பதும்தான் அவன் ஆசை.
அதேபோல் மேனகா அம்மா ஜெர்மனியிலும் திருமணத்திற்கு பார்க்கிறார். இலங்கை வரை தன் தமையனைக் கொண்டு அத்தனை உதவிகள் செய்து, பெற்ற மகளை போன்று பார்த்த மேனகா அம்மா பெயருக்கு அவளை திருமணத்திற்கு கேட்டிருக்க போவதில்லை. அவரும் நிறைய அழுத்தம் கொடுத்திருப்பார்கள். ஆனாலும் நழுவிக்கொண்டிருந்த நாவினி கேசிகனுக்கு மட்டும் ஏன் ஆம் என்று சொன்னாள்.
அவள் அங்கேயே தேங்கி நிற்க, அவளைக் கடந்துபோய் திருமணம் குழந்தை என்று வாழ்ந்தவனை அவள் மணந்திருக்க தேவையில்லை. அவளுக்கு எல்லா வகையிலும் பொருத்தமான, அவள் வசிக்கும் நாட்டிலேயே இருக்கும் நல்ல மாப்பிள்ளையும் இருந்தான். கேசிகனும் இருந்தான். அவள் சொன்ன வார்த்தைகளையேதான் நானும் சொல்வேன். மாற வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள் இல்லாமல் நாம் மாறப்போவதில்லை. இன்னொருவர் தூண்டுகிறவராக இருக்கலாம். முடிவு நம்முடையது. அதுதான் இங்கேயும். பிரேமா அம்மா தூண்டினார். அவள்தான் முடிவை எடுத்தாள்.
வாசக உறவுகளிடம் பலதரப்பட்ட கருத்துகளைப் பெற்ற ஒரு கதை. அதை எழுதிய ஆசிரியையாக இந்தக் கதையைப் பற்றி என் பக்கத்திலிருந்து சொல்லப்போகிற அதே நேரம், உங்களது சில ஆதங்கங்களுக்கும் சேர்த்து ஒரு விளக்கம் போன்று இதை எழுதலாம் என்று நினைத்தேன்.
இதன் பொருள் உங்கள் கருத்துகளை மறுத்துரைப்பது இல்லை. என்னால் முடிந்த விளக்கம். அவ்வளவுதான். இளம் வயதில் நேசிக்கும் இருவர். விதி வசத்தால் நாயகி வெளிநாடு செல்கிறாள். இதுதான் ஆரம்பப் புள்ளி.
சிலருக்கு அவனுக்கு நவியைத் தெரியாதா என்று ஒரு ஆதங்கம். அவன் எப்படி தொடர்பு விட்டுப் போனதும் மொழியைக் கட்டினான் என்று ஒரு குட்டிக் கோபம். ஆனால், வெளிநாடு செல்கிற பலர், தம் பொருளாதார நிலையில் மேலே சென்ற பின்னால் அப்படி மாறிப்போவதுதான் வழமை. நம்மோடு கூடப்பிறந்த சகோதரர்களே பொருளாதார நிலை உயருகையில் மாறிப்போகையில் நவியை அவனுக்கு தெரியாதா என்று கேட்க முடியாது இல்லையா.
அப்போதும் அவன் அவளை அப்படி நினைக்கவில்லை. அவள் தந்தையின் நம்பர் அவனிடம் இல்லை. அபிராமியோடுதான் அவனுக்கு நல்ல பழக்கம். அவரோடு அவன் தன்னால் முயன்ற வரையில் பேசுகிறான். அவர் அவனை வெட்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்.
அடுத்தது மயூரன். கேசி நாவினி மீது ஈர்ப்பு கொண்டபோதிலிருந்து நேசிக்க ஆரம்பித்த காலம் வரையில் அவனுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் நாவினிக்கு தெரிய முதலே மயூரனுக்குத்தான் அவன் காதல் தெரியும். முதன் முதலில் மொழியைப் திருமணத்திற்கு பேசியபோது மயூரனும் சேர்ந்துதான் மறுக்கிறான். அப்படியான நண்பன் தனக்குத் துரோகம் செய்வான் என்று கேசிகன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டான் இல்லையா?
அதன் அடிப்படையில் நாவினி நினைத்திருந்தால் எந்த சிரமமும் இல்லாமல் மயூரன் மூலம் தன்னை தொடர்புகொண்டிருக்க முடியும் என்பது கேசிகனின் ஆணித்தரமான எண்ணம். அவனுடைய புது நம்பரை அவன் அனுப்பியிருக்கிறான், அவள் கடிதம் போட்டிருந்தாள் இரவு போய் பகல் வருவது எத்தனை உறுதியோ அத்தனை உறுதியாக அது தன் கைக்கு சேர்ந்திருக்கும் என்று நம்புகிறான்.
இதில் அபிராமி வேறு அவள் வாழ்க்கை அங்கேதான் என்பதுபோல் சொல்கிறார். அவனை வெட்டி விடுவதில் குறியாக இருக்கிறார். இப்படியிருக்க அவளும் தொடர்புகொள்ளாமல் இருக்கிறாள் என்கையில் அபிராமி சொன்னது போன்று அவள் அங்கே தன் வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள், அதனாலதான் மூன்று வருடங்களாகியும் அவள் தன்னை தொடர்புகொள்ள விரும்பவே இல்லை என்று நினைக்கிறான்.
பரவாயில்லை, நான் வேண்டாம் என்றால் அதை சொல்லிவிட்டு நீ விலகியிருக்கலாம் என்பது அவன் ஆதங்கம். தன்னிடம் நேரடியாக சொல்ல தைரியம் இல்லாமல் அன்னையின் பின் ஒளிந்துகொண்டு தன்னை தாண்டி நகர்ந்துவிட்டாள் என்பது அவன் மனதில் கசப்பாக விழுகிறது.
அதே நேரத்தில்தான் இங்கே அவனுக்கு திருமணம் பேசுகிறார்கள். மொழியை திருமணம் பேசுகிற வரை மொழி என்கிற ஒருத்தியும் அதே ஊரில் அதே தெருவுல நண்பனின் தங்கையாக இருக்கிறாள் என்பது அவன் கருத்திலேயே இல்லை.
கதையில் நாவினி கேட்பாள். அதே ஆதங்கம் வாசகர்களுக்கும் உண்டு. அவளுக்கும்தான் அவன் தொடர்பு முற்றிலும் அறுந்துபோயிருந்தது. அவள் காத்திருக்க அவன் காத்திருக்கவில்லையே என்று.
தகப்பன் இல்லாமல் வளர்ந்த பிள்ளை அவன். அன்னை தாய் மாமா வீட்டில் எத்தனையோ சிரமங்களை அனுபவித்து அவனை வளர்த்திருக்கிறார். அவரின் ஆசையை ஒரு அளவுக்கு மீறி அவனால் தட்டிக் கழித்திருக்க முடியாது. அதைவிட நாளடைவில் உயிர் நண்பனின் ஆசையும் அதுவாகிறது. அவனை சின்ன வயதில் இருந்தே பார்த்து வளர்த்த சாரதாவின் அன்பான வேண்டுதல் அது.
அவர்கள் அறிமுகமற்ற மனிதர்களாக இருந்திருந்தால் கூட வேறு. நாம் நேசித்த, நம் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் முகங்களை முறிப்பது இலகுவே இல்லை. அதைவிட நாவினி மீதான காத்திருப்பு அவனையும் அழுத்திக்கொண்டேயிருக்கிறது. அதற்கு ஒரு விடுதலை வேண்டும் என்று எண்ணித்தான் அந்த வளவினுள் அவன் போகிறான்.
ஆனால் நாவினி விடயம் அப்படி இல்லை. அபிராமி அம்மாவிற்கு அவர்கள் காதல் தெரியும். அது வேண்டாம் என்று நினைக்கிறார். அதில் அவர் அவளை அவனிடமிருந்து முற்றிலும் பிரிப்பதில் கவனமாக இருக்கிறாரே தவிர இன்னொரு திருமணத்திற்கு அவளை தூண்டவில்லை, வற்புறுத்தவில்லை.
கூடவே அவள் அன்பு செலுத்துகிற, அவள் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு குடும்பம் பக்கத்திலேயே இருந்து என் மகனை வேண்டாம் என்பாயா என்று பார்க்கிற நேரமெல்லாம் கேட்கிற அந்த வதை அவளுக்கு இருக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் புத்திசாலித்தனமாக முதல் முறை அவளை தகப்பனோடு இலங்கை அனுப்புகையில் அவள் அங்கு போய் வருவதுதான் அவள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு உதவி செய்யும் என்று நினைக்கிறார். அதாவது கேசிகனுக்கு திருமணம் நடந்துவிட்டது அவருக்கு தெரியும். ஆனால் இங்கே நாவினி அவனுக்காகவே காத்திருக்கிறாள். இப்போது அவளை அங்கு அனுப்பி, கேசிகனின் திருமணத்தை பற்றி தெரிய செய்தால் அவள் அவனில் இருந்து கடந்து வந்துவிடுவாள் என்பது அவர் மட்டுமே போடும் கணக்கு.
கேசிகன் பிரேமா அம்மாவிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் எல்லாம் முடிவதில்லை. அதைவிட அவனும் எல்லாவற்றையும் தானாகவே கற்று வளரும் பிள்ளை. வயது மட்டுமே ஒருவருக்கு பக்குவத்தை கொடுத்துவிடுவதில்லை. பல நேரத்தில் 20 வயதுப் பிள்ளைக்கு இருக்கிற பக்குவம் கூட 40 வயதில் இருப்பவருக்கு இருப்பதில்லை. இது உண்மைதானே?
ஜெர்மன் சென்று பார்த்திருக்கலாம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அதுவும் இலங்கை போன்ற யுத்தம் நடந்த நாட்டிலிருந்து பக்கத்தில் இருக்கும் இந்தியாவிற்கு போவதற்கே பெரும் பாடு படவேண்டும். போகிற நாட்டில் அகதியாக தங்கி விடுவார்கள் என்பதாலேயே அனுமதிப்பதில்லை.
ஒரு காதல் தோல்வி. அதன் பிறகு இன்னொரு திருமணம். அந்தப் பெண்ணின் தூய அன்பு, தான் ஏற்கனவே ஒரு காதலில் இருந்து தோற்றவன் என்று தெரிந்தும் தங்கையை தந்த நண்பன் என்கிற காரணங்களே போதும் அவன் அந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ.
அப்போதுதான் நவி வருகிறாள். அவள் அவனை தேடி வந்த ஒன்றே சொல்லிவிடுகிறது நடுவில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்று. அன்றிலிருந்து அவன் நிம்மதி பறிபோகிறது. ஆனால், ஒன்றில் தெளிவாகிறான். யாரில் சரியோ பிழையோ அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். பிள்ளை வரப்போகிறது. அவன் வாழ்க்கை மொழியோடு. நாவினியும் இனி அவனைக் கடந்து சென்று இன்னொரு வாழ்விற்குள் செல்வது மட்டுமே இதற்கான தீர்வு என்று நினைத்துத்தான் அவன் முற்றிலுமாக நாவினியிடம் இருந்து ஒதுங்கி நிற்கிறான்.
மூன்றோ நான்கு மாத கருவாக இருக்கிறபோது நாவினி வந்து போகிறாள். மொழி குழந்தை பெற்றெடுக்கிறபோதுதான் அவன் நாவினி பற்றிய மனத்தின் தடுமாற்றத்திலிருந்து முற்றிலுமாக வெளியே வந்து இனி அவளை நினைக்க கூடாது என்று தெளிவாகிறான். ஆக மொழியோடு மனமொத்த வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் கூட நவியின் ஒற்றை வருகை அவன் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. என்ன, மொழிக்கு அவன் காதல் தெரியாத காரணத்தினால் கணவனின் தடுமாற்றங்களை அவள் கண்டுபிடிக்கவில்லையாக இருக்கலாம்.
இரண்டாவது தடவை நாவினியின் வருகை. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். கோயிலில் அவன் வேண்டுதல் அதுதான். அவளை மணக்க கேட்டபோது தனக்கு அந்த தகுதி இல்லை என்கிறான். கூடவே தான் அவளுக்குத் தகுதியானவன் இல்லை என்றும் சொல்கிறான்.
அன்னை திருமணத்திற்கு கேட்டபோது முற்றிலுமாக மறுத்தவனால் நாவினியைக் கேட்டபோது மறுக்க முடியவில்லை. அதன் பின்னிருப்பது அவளை மணக்கும் ஆசை இல்லை. அவளை மறுக்கும் தகுதி தனக்கில்லை என்று நினைக்கிறான். தன் வாயால் அவளை வேண்டாம் என்று சொல்லி அவளுக்கு அடுத்த மரண வலியை அவனால் கொடுக்க முடியாது. உண்மையில் முதலில் கேசிகனை வேண்டாம் என்று சொன்ன நாவினி, தன்னைக் கேசிகன் வேண்டாம் என்று சொன்னான் என்று அறிந்தால் நிச்சயம் முற்றிலும் உடைந்துபோவாள்.
அவள் பக்கம் இருந்து அந்த மறுப்பு வரவேண்டும் என்பதும், அவள் தன்னைக் கடந்து இன்னொரு வாழ்வினுள் செல்ல வேண்டும் என்பதும்தான் அவன் ஆசை.
அதேபோல் மேனகா அம்மா ஜெர்மனியிலும் திருமணத்திற்கு பார்க்கிறார். இலங்கை வரை தன் தமையனைக் கொண்டு அத்தனை உதவிகள் செய்து, பெற்ற மகளை போன்று பார்த்த மேனகா அம்மா பெயருக்கு அவளை திருமணத்திற்கு கேட்டிருக்க போவதில்லை. அவரும் நிறைய அழுத்தம் கொடுத்திருப்பார்கள். ஆனாலும் நழுவிக்கொண்டிருந்த நாவினி கேசிகனுக்கு மட்டும் ஏன் ஆம் என்று சொன்னாள்.
அவள் அங்கேயே தேங்கி நிற்க, அவளைக் கடந்துபோய் திருமணம் குழந்தை என்று வாழ்ந்தவனை அவள் மணந்திருக்க தேவையில்லை. அவளுக்கு எல்லா வகையிலும் பொருத்தமான, அவள் வசிக்கும் நாட்டிலேயே இருக்கும் நல்ல மாப்பிள்ளையும் இருந்தான். கேசிகனும் இருந்தான். அவள் சொன்ன வார்த்தைகளையேதான் நானும் சொல்வேன். மாற வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள் இல்லாமல் நாம் மாறப்போவதில்லை. இன்னொருவர் தூண்டுகிறவராக இருக்கலாம். முடிவு நம்முடையது. அதுதான் இங்கேயும். பிரேமா அம்மா தூண்டினார். அவள்தான் முடிவை எடுத்தாள்.