அத்தியாயம்-26
ஒரு வாரம் மிக வேகமாகக் கடந்திருந்தது. தர்சன் மனைவியைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டான் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு அவளின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்தான்.
காலையில் தலை சுற்றலிலும் மயக்கத்திலும் சோர்ந்து கிடப்பவளை, தன் கைப்பிடியிலேயே வைத்து காலைக் கடன்களை முடிப்பது தொடங்கி, அவள் மறுக்க மறுக்கப் பிடிவாதமாக எதையாவது உண்ணவும் குடிக்கவும் கொடுப்பதில் இருந்து, கோவில், குளம் என்று அவளுக்குப் பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வது வரை பெரும்பாலான நேரத்தை அவளுடன் செலவழித்தான்.
ஆனால், அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இலக்கியா தான் இல்லை. அவன் பரிவும் பாசமும் காட்டக்காட்ட இன்னுமின்னும் அவனிடமிருந்து ஒதுங்கத் தொடங்கினாள்.
இப்போதெல்லாம் அவளுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. தனக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டாம்? என்று ஒன்றுமே பிடிபடவில்லை. அவர்களின் அறைக்குள் போகவே பிடிக்கவில்லை. தோட்டமே கதி என்று கிடந்தாள். அதைக் கவனித்துவிட்டு, அவளுக்குப் பிடித்த ரோஜாச்செடிகளைப் பல வண்ணங்களில் வாங்கிவைத்தான் தர்சன். அவளோ அவற்றைத் திரும்பியும் பார்த்தாள் இல்லை.
அங்கே, அவளது தாய்வீட்டில் இலக்கியாவின் அறையில் இருந்த ஒன்றிரண்டு ரமணிச்சந்திரனின் புத்தகங்களைக் காட்டி, “யார் படிப்பது?” என்று அவன் கேட்டபோது, “நான்தான். எனக்கு ரமணிம்மாவின் கதைகள் மிகவும் பிடிக்கும்.” என்று விழிகள் மின்ன அவள் சொன்னதை நினைவில் மீட்டியவன், ரமணிச்சந்திரன் எழுதிய அத்தனை புத்தகங்களையும் வாங்கிப் போட்டான். அவளோ அவற்றைத் தொட்டுக் கூடப் பார்த்தாள் இல்லை.
இப்படியெல்லாம் அவளுக்காக எதையாவது செய்துவிட்டு அதைப் பார்த்ததும் மலரும் அவளின் முகத்துக்காக, விழிகளை உயர்த்தி மகிழ்ச்சியோடு அவனைப் பார்க்கும் பார்வைக்காக, அந்தச் செவ்விதழ்கள் அவனைப் பார்த்துச் சிந்தும் புன்னகைக்காக அவன் ஆவலுடன் காத்திருக்க அவளோ அவன் முகம் பார்க்கவே மறுத்தாள்.
என் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது என்று சுள்ளென்று கோபம் வந்தாலும், அவள்மீது கொண்ட அன்பு அதைக் காட்டவிடாமல் தடுத்தது.
அன்று அவர்களது அறையில் கணவனோடு சோபாவில் அமர்ந்து இருந்தாள் இலக்கியா. அவன் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, அவளோ அவனிடம் ஏதோ சொல்ல எண்ணி அவன் புறமாகத் திரும்புவதும் பிறகு தலையைக் குனிந்து கைகளைப் பிசைவதுமாக இருந்தாள்.
அவளை முதலில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்த தர்சனுக்கு மனைவியின் செய்கை வேடிக்கையாக இருந்தாலும், அவளாகவே வாயை திறந்து சொல்லட்டும் என்று எண்ணி பேசாமலேயே இருந்தான்.
திண்டாட்டத்தோடு சற்று நேரத்தைக் கழித்துவிட்டு, “வந்து..” என்று இழுத்தாள் இலக்கியா.
அவள் இப்போதெல்லாம் தன்னை அத்தான் என்று அழைப்பதே இல்லை என்று உள்ளூர வருத்தத்துடன் எண்ணியபோதிலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் திரும்பி அவளைக் கேள்வியாகப் பார்த்தான் தர்சன்.
“வந்து…”
“நீ எப்போதோ என்னிடம் வந்துவிட்டாய். அதனால் விஷயத்தைச் சொல்லு லயா.” என்றான் புன்சிரிப்புடன்.
பெரிய புன்னகை மன்னன் என்று மனம் புகைந்தாலும், “இந்தக் கட்டிலை மாற்றுவோமா?” என்று மெல்லக் கேட்டாள் இலக்கியா.
தர்சனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. “ஏன்? அது நன்றாகத்தானே இருக்கிறது. அதைவிட எல்லாவற்றுக்கும் வசதியாக, பெரிதாகத்தானே இருக்கிறது.” என்றான் கண்ணைச் சிமிட்டி குறும்புடன்.
பெரிய காதல் மன்னன்! மனம் புகைய தலையைக் குனிந்துகொண்டாள் அவள்.
மனைவியையே சற்று நேரம் பார்த்த தர்சன் அவளின் காதருகில் குனிந்து, “உனக்குப் புதுக் கட்டில் வேண்டுமா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.
நிமிர்ந்து அவனைப் பாராதபோதும் அவள் தலை மேலும் கீழுமாக அசைந்தது.
“சரி. வாங்கிவிட்டால் போச்சு. இதைச் சொல்வதற்கா இந்தத் தயக்கம் தயங்கினாய்.” என்று சிரித்தான் அவன்.
“அது.. அது மட்டுமில்லை..”
“வேறு என்ன?”
“இந்தச் சோபாவையும்..” என்று அவள் இழுக்க, “மாற்றவேண்டுமா?” என்று கேட்டான் அவன்.
“ம்..” என்றாள் அவள் தயக்கத்துடன்.
விழிகளில் யோசனையுடன் மனைவியைப் பார்த்தான் தர்சன். அவள் தலையை உயர்த்தினால் அல்லவோ அந்தப் பார்வை புரிய.
“சரி. இதையும் மாற்றிவிடுவோம்.” என்றான் அவன்.
“எல்லாவற்றையும் மாற்றலாமே..” உள்ளே போய்விட்ட குரலில் சொன்னாள் இலக்கியா.
தர்சனுக்கு மனைவியை எண்ணி சற்று வியப்பாகவும் அதிசயமாகவும் இருந்தது. அன்று வவுனியாவில் வைத்து அவளுக்கு நகைகளும் உடைகளும் வாங்கியபோது, கஷ்டத்தை உணராமல் வளர்ந்ததில் காசை வீணாகச் செலவழிக்கிறீர்கள் என்று கோபப்பட்டவள் இன்று நல்ல பொருட்களை எல்லாம் எறிந்துவிட்டு புதிது வாங்குவோம் என்கிறாளே. அப்போ இது வீண் செலவில்லையா? அவனளவில் இந்தச் செலவெல்லாம் ஒரு விசயமே அல்லதான். ஆனாலும்...
அவள் மனதில் என்ன நினைக்கிறாள், எதற்காக இப்படி எல்லாவற்றையும் மாற்றச் சொல்கிறாள் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுவே பழைய தர்சனாக இருந்திருக்க விடாப்பிடியாக நின்று அவளின் மனதில் இருப்பதை அவள் வாயாலேயே வெளியே கொண்டுவந்திருப்பான்.
ஆனால், மனைவியை உயிராய் நேசிக்கும் இந்தப் புதிய தர்சனால் அது முடியவில்லை.
“சரி லயா. எல்லாவற்றையும் மாற்றிவிடலாம். ஆனால் ஏன் திடீரென்று?” என்று கேட்டான் தர்சன்.
என்ன சொல்வாள்? அவை அனைத்தும் உன் முதல் மனைவியை எனக்கு நினைவூட்டுகிறது என்றா? அல்லது நீ அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையை ஞாபகப் படுத்துகிறது என்றா? ஒன்றுமே சொல்லாமல் தலையைக் குனிந்து தன் விரல்களையே ஆராய்ந்தபடி அமைதியாகவே இருந்தாள் இலக்கியா.
மனைவியின் அருகே இன்னும் நெருங்கி, அவளின் வெண்டைப் பிஞ்சு விரல்களோடு தன் விரல்களை விளையாட விட்டபடி, “நாளைக்கே நாம் இருவருமாகப் போய் எல்லாவற்றையும் உனக்குப் பிடித்த விதமாகவே வாங்கி வரலாம். சரியா..?” என்று கேட்டான் தர்சன்.
“நா..ன் எதற்கு?” அவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள் இலக்கியா.
அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி, “இனி எல்லாமே உனக்குப் பிடித்தபடிதான் இருக்கவேண்டும்.” என்றான் அவன்.
நீயே நான் நினைத்தபடி இல்லையே என்று மனம் மருக, மீண்டும் தலையைக் குனிந்து கொண்டவளிடம், “இப்போதெல்லாம் நீ என்னோடு பழையமாதிரி பேசுவதே இல்லை லயா..” என்றான் தர்சன், தன்னுடைய வருத்தத்தை மறைக்க முயன்ற குரலில்.
அதைக் கேட்டவளின் விழிகளில் நீர் திரண்டது. ஆனாலும் வாயை திறந்து பதில் சொல்ல இயலவில்லை அவளால். சற்றுநேரம் அவளின் பதிலுக்காகக் காத்திருந்த அவனும் பிறகு அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை.
அடுத்த நாளே மனைவியை அழைத்துச் சென்று, அவள் கைகாட்டிய கட்டில் முதல்கொண்டு, சோபா, மேசை, நாற்காலி, டிரெஸ்ஸிங் டேபிள் என்று அனைத்தையும் அவளுக்குப் பிடித்த விதமாகவே வாங்கிப்போட்டான்.
ஏன் என்று கேட்ட அன்னையிடம், “பழையது எல்லாமே காலாவதி ஆகிவிட்டது.” என்றான் குதர்க்கமாக.
“டேய்! என்னடா உளறுகிறாய். இதுக்கு எல்லாமாடா காலாவதி திகதி இருக்கும்?” என்றவரிடம், “இருக்கும்மா. அதெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியாது.” என்றவனை, இவனுக்கு என்ன விசர் ஏதும் பிடித்துவிட்டதா என்பதாகப் பார்த்தார் மஞ்சுளா.
தாயின் பாவனையில் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சென்றுவிட்டான் தர்சன்.
மேலும் சில நாட்கள் பெரிய மாற்றம் இன்றிக் கடந்தது. ஆனாலும் லக்கியின் மனதின் அலைப்புறுதல் மட்டும் நிற்கவே இல்லை. இன்னுமின்னும் மனதில் ஒரு வேதனை நிரந்தரமாக இருந்து அரித்துக்கொண்டே இருந்தது.
வெண்பாவை நினைவு படுத்துகிறது என்று கட்டிலை மாற்றியவளால், சோபாவை மாற்றியவளால், மேசையை மாற்றியவளால் அதே வெண்பாவை நினைவு படுத்தும் கணவனை மாற்றமுடியுமா? அவன் இன்னொருத்தியுடன் வாழ்ந்தவன் என்கிற நினைப்பை மாற்ற முடியுமா? அவள் அவனுக்கு இரண்டாம் தாரம் என்கிற உண்மையைதான் மாற்ற முடியுமா?
எதையுமே மாற்ற முடியாதே!
மனதின் வெறுப்பும் கசப்பும் அடங்க மறுத்தது!.
அந்த நினைவுகளே அவளைக் கொல்லாமல் கொன்றதில் ஒரு கட்டத்தில் அவளால் அந்த வீட்டிலேயே இருக்க முடியாது போல் ஆனது.
இதில் உடலில் உண்டான மாற்றங்கள் வேறு அவளைப் போட்டு பாடாய்ப் படுத்தின.
ஒருநாள், “நான் அம்மா வீட்டுக்குப் போகவா?” என்று கேட்டபடி கணவனிடம் வந்து நின்றாள் இலக்கியா.
மனைவியின் ஒவ்வொரு விருப்பங்களையும் நிறைவேற்றக் காத்துக் கிடந்தவன், ”ஓ..! போகலாமே. நாளைக்கே போவோமா. காலையிலேயே போய்விட்டு இரவுக்குத் திரும்பலாம்.” என்றான் உற்சாகமாக.
“இல்லை.. அது நா..ன் அங்கே போய் இருக்கலாம் என்று..” அவனைப் பாராது அவள் சொல்ல, அவனது புருவங்கள் சுருங்கின.
‘நாம் போகலாமா’ என்றும் கேட்காமல் ‘நான் போய்விட்டு வரட்டுமா’ என்றும் கேட்காமல் ‘நான் போய் இருக்கப் போகிறேன்’ என்று சொல்கிறாளே. அதன் பொருள்?
கனமும் அவளைப் பிரியமுடியாமல் அவன் தவிக்க, அவளானால் தாய் வீட்டுக்குச் செல்கிறேன் என்கிறாளே என்று சட்டெனக் கோபம் மூண்டது. ஆனாலும் அடக்கிக்கொண்டான்.
“ஏன்?”
பதில் சொல்லாமல் நிற்கும் மனைவியையே கூர்ந்தான் தர்சன்.
“இங்கே உனக்கு என்ன குறை? அல்லது ஏதும் ஆசை இருந்தால் சொல்லு செய்கிறேன்.” என்று தணிவாகவே கேட்டான்.
“அம்மா வீட்டுக்குப் போகத்தான் விருப்பம்..” கிளிப்பிள்ளையாக மீண்டும் அதையே சொன்னாள் அவள்.
பிறந்த வீட்டுச் சொந்தங்களைக் காண ஆசைப் படுகிறாளோ என்று எண்ணியவன், ஒருகையால் அவளின் இடையை வளைத்து மறு கரத்தால் அவளது நெற்றி கன்னம் என்று வருடிகொண்டே, “நான் வேலைக்குப் போகும்போதெல்லாம் உன்னை அங்கே கொண்டுபோய் விடுகிறேன். நாள் முழுவதும் நீ அங்கேயே இரு. பிறகு வேலை முடிந்து வரும்போது வந்து உன்னையும் அழைத்துவருகிறேன். சரியா?” என்று இதமான குரலில் கேட்டான்.
இல்லையே.. அவளால் இந்த வீட்டில், இந்த அறையில் இருக்கவே முடியவில்லையே.. அவள் கேட்பது கணவனின் முகத்தையே பார்க்காத தனிமையை அல்லவா.. இதை எப்படி அவளால் அவனிடம் சொல்ல இயலும்?
“இல்லை.. நான் அங்கேயே..” என்று அவள் ஆரம்பிக்கையிலேயே, “அது முடியாது லயா!” என்று மறுத்தான் தர்சன்.
அதிர்ச்சியோடு அவள் நிமிர்ந்து பார்க்க, “இதுதான் உன் வீடு. இங்கேதான் நீ இருக்கவேண்டும். அம்மா வீட்டுக்கு விருந்துக்குப் போகலாமே தவிர அங்கே போய்த் தங்கமுடியாது. நான் விடமாட்டேன். புரிந்ததா?” என்று அதட்டியவன், “அவர்களைப் பார்க்க விருப்பம் என்றால் மட்டும் சொல்லு. போய்விட்டு வரலாம்!” என்று அழுத்தம் திருத்தமான குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
ஒரு வாரம் மிக வேகமாகக் கடந்திருந்தது. தர்சன் மனைவியைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டான் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு அவளின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்தான்.
காலையில் தலை சுற்றலிலும் மயக்கத்திலும் சோர்ந்து கிடப்பவளை, தன் கைப்பிடியிலேயே வைத்து காலைக் கடன்களை முடிப்பது தொடங்கி, அவள் மறுக்க மறுக்கப் பிடிவாதமாக எதையாவது உண்ணவும் குடிக்கவும் கொடுப்பதில் இருந்து, கோவில், குளம் என்று அவளுக்குப் பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வது வரை பெரும்பாலான நேரத்தை அவளுடன் செலவழித்தான்.
ஆனால், அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இலக்கியா தான் இல்லை. அவன் பரிவும் பாசமும் காட்டக்காட்ட இன்னுமின்னும் அவனிடமிருந்து ஒதுங்கத் தொடங்கினாள்.
இப்போதெல்லாம் அவளுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. தனக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டாம்? என்று ஒன்றுமே பிடிபடவில்லை. அவர்களின் அறைக்குள் போகவே பிடிக்கவில்லை. தோட்டமே கதி என்று கிடந்தாள். அதைக் கவனித்துவிட்டு, அவளுக்குப் பிடித்த ரோஜாச்செடிகளைப் பல வண்ணங்களில் வாங்கிவைத்தான் தர்சன். அவளோ அவற்றைத் திரும்பியும் பார்த்தாள் இல்லை.
அங்கே, அவளது தாய்வீட்டில் இலக்கியாவின் அறையில் இருந்த ஒன்றிரண்டு ரமணிச்சந்திரனின் புத்தகங்களைக் காட்டி, “யார் படிப்பது?” என்று அவன் கேட்டபோது, “நான்தான். எனக்கு ரமணிம்மாவின் கதைகள் மிகவும் பிடிக்கும்.” என்று விழிகள் மின்ன அவள் சொன்னதை நினைவில் மீட்டியவன், ரமணிச்சந்திரன் எழுதிய அத்தனை புத்தகங்களையும் வாங்கிப் போட்டான். அவளோ அவற்றைத் தொட்டுக் கூடப் பார்த்தாள் இல்லை.
இப்படியெல்லாம் அவளுக்காக எதையாவது செய்துவிட்டு அதைப் பார்த்ததும் மலரும் அவளின் முகத்துக்காக, விழிகளை உயர்த்தி மகிழ்ச்சியோடு அவனைப் பார்க்கும் பார்வைக்காக, அந்தச் செவ்விதழ்கள் அவனைப் பார்த்துச் சிந்தும் புன்னகைக்காக அவன் ஆவலுடன் காத்திருக்க அவளோ அவன் முகம் பார்க்கவே மறுத்தாள்.
என் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது என்று சுள்ளென்று கோபம் வந்தாலும், அவள்மீது கொண்ட அன்பு அதைக் காட்டவிடாமல் தடுத்தது.
அன்று அவர்களது அறையில் கணவனோடு சோபாவில் அமர்ந்து இருந்தாள் இலக்கியா. அவன் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, அவளோ அவனிடம் ஏதோ சொல்ல எண்ணி அவன் புறமாகத் திரும்புவதும் பிறகு தலையைக் குனிந்து கைகளைப் பிசைவதுமாக இருந்தாள்.
அவளை முதலில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்த தர்சனுக்கு மனைவியின் செய்கை வேடிக்கையாக இருந்தாலும், அவளாகவே வாயை திறந்து சொல்லட்டும் என்று எண்ணி பேசாமலேயே இருந்தான்.
திண்டாட்டத்தோடு சற்று நேரத்தைக் கழித்துவிட்டு, “வந்து..” என்று இழுத்தாள் இலக்கியா.
அவள் இப்போதெல்லாம் தன்னை அத்தான் என்று அழைப்பதே இல்லை என்று உள்ளூர வருத்தத்துடன் எண்ணியபோதிலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் திரும்பி அவளைக் கேள்வியாகப் பார்த்தான் தர்சன்.
“வந்து…”
“நீ எப்போதோ என்னிடம் வந்துவிட்டாய். அதனால் விஷயத்தைச் சொல்லு லயா.” என்றான் புன்சிரிப்புடன்.
பெரிய புன்னகை மன்னன் என்று மனம் புகைந்தாலும், “இந்தக் கட்டிலை மாற்றுவோமா?” என்று மெல்லக் கேட்டாள் இலக்கியா.
தர்சனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. “ஏன்? அது நன்றாகத்தானே இருக்கிறது. அதைவிட எல்லாவற்றுக்கும் வசதியாக, பெரிதாகத்தானே இருக்கிறது.” என்றான் கண்ணைச் சிமிட்டி குறும்புடன்.
பெரிய காதல் மன்னன்! மனம் புகைய தலையைக் குனிந்துகொண்டாள் அவள்.
மனைவியையே சற்று நேரம் பார்த்த தர்சன் அவளின் காதருகில் குனிந்து, “உனக்குப் புதுக் கட்டில் வேண்டுமா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.
நிமிர்ந்து அவனைப் பாராதபோதும் அவள் தலை மேலும் கீழுமாக அசைந்தது.
“சரி. வாங்கிவிட்டால் போச்சு. இதைச் சொல்வதற்கா இந்தத் தயக்கம் தயங்கினாய்.” என்று சிரித்தான் அவன்.
“அது.. அது மட்டுமில்லை..”
“வேறு என்ன?”
“இந்தச் சோபாவையும்..” என்று அவள் இழுக்க, “மாற்றவேண்டுமா?” என்று கேட்டான் அவன்.
“ம்..” என்றாள் அவள் தயக்கத்துடன்.
விழிகளில் யோசனையுடன் மனைவியைப் பார்த்தான் தர்சன். அவள் தலையை உயர்த்தினால் அல்லவோ அந்தப் பார்வை புரிய.
“சரி. இதையும் மாற்றிவிடுவோம்.” என்றான் அவன்.
“எல்லாவற்றையும் மாற்றலாமே..” உள்ளே போய்விட்ட குரலில் சொன்னாள் இலக்கியா.
தர்சனுக்கு மனைவியை எண்ணி சற்று வியப்பாகவும் அதிசயமாகவும் இருந்தது. அன்று வவுனியாவில் வைத்து அவளுக்கு நகைகளும் உடைகளும் வாங்கியபோது, கஷ்டத்தை உணராமல் வளர்ந்ததில் காசை வீணாகச் செலவழிக்கிறீர்கள் என்று கோபப்பட்டவள் இன்று நல்ல பொருட்களை எல்லாம் எறிந்துவிட்டு புதிது வாங்குவோம் என்கிறாளே. அப்போ இது வீண் செலவில்லையா? அவனளவில் இந்தச் செலவெல்லாம் ஒரு விசயமே அல்லதான். ஆனாலும்...
அவள் மனதில் என்ன நினைக்கிறாள், எதற்காக இப்படி எல்லாவற்றையும் மாற்றச் சொல்கிறாள் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுவே பழைய தர்சனாக இருந்திருக்க விடாப்பிடியாக நின்று அவளின் மனதில் இருப்பதை அவள் வாயாலேயே வெளியே கொண்டுவந்திருப்பான்.
ஆனால், மனைவியை உயிராய் நேசிக்கும் இந்தப் புதிய தர்சனால் அது முடியவில்லை.
“சரி லயா. எல்லாவற்றையும் மாற்றிவிடலாம். ஆனால் ஏன் திடீரென்று?” என்று கேட்டான் தர்சன்.
என்ன சொல்வாள்? அவை அனைத்தும் உன் முதல் மனைவியை எனக்கு நினைவூட்டுகிறது என்றா? அல்லது நீ அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையை ஞாபகப் படுத்துகிறது என்றா? ஒன்றுமே சொல்லாமல் தலையைக் குனிந்து தன் விரல்களையே ஆராய்ந்தபடி அமைதியாகவே இருந்தாள் இலக்கியா.
மனைவியின் அருகே இன்னும் நெருங்கி, அவளின் வெண்டைப் பிஞ்சு விரல்களோடு தன் விரல்களை விளையாட விட்டபடி, “நாளைக்கே நாம் இருவருமாகப் போய் எல்லாவற்றையும் உனக்குப் பிடித்த விதமாகவே வாங்கி வரலாம். சரியா..?” என்று கேட்டான் தர்சன்.
“நா..ன் எதற்கு?” அவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள் இலக்கியா.
அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி, “இனி எல்லாமே உனக்குப் பிடித்தபடிதான் இருக்கவேண்டும்.” என்றான் அவன்.
நீயே நான் நினைத்தபடி இல்லையே என்று மனம் மருக, மீண்டும் தலையைக் குனிந்து கொண்டவளிடம், “இப்போதெல்லாம் நீ என்னோடு பழையமாதிரி பேசுவதே இல்லை லயா..” என்றான் தர்சன், தன்னுடைய வருத்தத்தை மறைக்க முயன்ற குரலில்.
அதைக் கேட்டவளின் விழிகளில் நீர் திரண்டது. ஆனாலும் வாயை திறந்து பதில் சொல்ல இயலவில்லை அவளால். சற்றுநேரம் அவளின் பதிலுக்காகக் காத்திருந்த அவனும் பிறகு அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை.
அடுத்த நாளே மனைவியை அழைத்துச் சென்று, அவள் கைகாட்டிய கட்டில் முதல்கொண்டு, சோபா, மேசை, நாற்காலி, டிரெஸ்ஸிங் டேபிள் என்று அனைத்தையும் அவளுக்குப் பிடித்த விதமாகவே வாங்கிப்போட்டான்.
ஏன் என்று கேட்ட அன்னையிடம், “பழையது எல்லாமே காலாவதி ஆகிவிட்டது.” என்றான் குதர்க்கமாக.
“டேய்! என்னடா உளறுகிறாய். இதுக்கு எல்லாமாடா காலாவதி திகதி இருக்கும்?” என்றவரிடம், “இருக்கும்மா. அதெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியாது.” என்றவனை, இவனுக்கு என்ன விசர் ஏதும் பிடித்துவிட்டதா என்பதாகப் பார்த்தார் மஞ்சுளா.
தாயின் பாவனையில் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சென்றுவிட்டான் தர்சன்.
மேலும் சில நாட்கள் பெரிய மாற்றம் இன்றிக் கடந்தது. ஆனாலும் லக்கியின் மனதின் அலைப்புறுதல் மட்டும் நிற்கவே இல்லை. இன்னுமின்னும் மனதில் ஒரு வேதனை நிரந்தரமாக இருந்து அரித்துக்கொண்டே இருந்தது.
வெண்பாவை நினைவு படுத்துகிறது என்று கட்டிலை மாற்றியவளால், சோபாவை மாற்றியவளால், மேசையை மாற்றியவளால் அதே வெண்பாவை நினைவு படுத்தும் கணவனை மாற்றமுடியுமா? அவன் இன்னொருத்தியுடன் வாழ்ந்தவன் என்கிற நினைப்பை மாற்ற முடியுமா? அவள் அவனுக்கு இரண்டாம் தாரம் என்கிற உண்மையைதான் மாற்ற முடியுமா?
எதையுமே மாற்ற முடியாதே!
மனதின் வெறுப்பும் கசப்பும் அடங்க மறுத்தது!.
அந்த நினைவுகளே அவளைக் கொல்லாமல் கொன்றதில் ஒரு கட்டத்தில் அவளால் அந்த வீட்டிலேயே இருக்க முடியாது போல் ஆனது.
இதில் உடலில் உண்டான மாற்றங்கள் வேறு அவளைப் போட்டு பாடாய்ப் படுத்தின.
ஒருநாள், “நான் அம்மா வீட்டுக்குப் போகவா?” என்று கேட்டபடி கணவனிடம் வந்து நின்றாள் இலக்கியா.
மனைவியின் ஒவ்வொரு விருப்பங்களையும் நிறைவேற்றக் காத்துக் கிடந்தவன், ”ஓ..! போகலாமே. நாளைக்கே போவோமா. காலையிலேயே போய்விட்டு இரவுக்குத் திரும்பலாம்.” என்றான் உற்சாகமாக.
“இல்லை.. அது நா..ன் அங்கே போய் இருக்கலாம் என்று..” அவனைப் பாராது அவள் சொல்ல, அவனது புருவங்கள் சுருங்கின.
‘நாம் போகலாமா’ என்றும் கேட்காமல் ‘நான் போய்விட்டு வரட்டுமா’ என்றும் கேட்காமல் ‘நான் போய் இருக்கப் போகிறேன்’ என்று சொல்கிறாளே. அதன் பொருள்?
கனமும் அவளைப் பிரியமுடியாமல் அவன் தவிக்க, அவளானால் தாய் வீட்டுக்குச் செல்கிறேன் என்கிறாளே என்று சட்டெனக் கோபம் மூண்டது. ஆனாலும் அடக்கிக்கொண்டான்.
“ஏன்?”
பதில் சொல்லாமல் நிற்கும் மனைவியையே கூர்ந்தான் தர்சன்.
“இங்கே உனக்கு என்ன குறை? அல்லது ஏதும் ஆசை இருந்தால் சொல்லு செய்கிறேன்.” என்று தணிவாகவே கேட்டான்.
“அம்மா வீட்டுக்குப் போகத்தான் விருப்பம்..” கிளிப்பிள்ளையாக மீண்டும் அதையே சொன்னாள் அவள்.
பிறந்த வீட்டுச் சொந்தங்களைக் காண ஆசைப் படுகிறாளோ என்று எண்ணியவன், ஒருகையால் அவளின் இடையை வளைத்து மறு கரத்தால் அவளது நெற்றி கன்னம் என்று வருடிகொண்டே, “நான் வேலைக்குப் போகும்போதெல்லாம் உன்னை அங்கே கொண்டுபோய் விடுகிறேன். நாள் முழுவதும் நீ அங்கேயே இரு. பிறகு வேலை முடிந்து வரும்போது வந்து உன்னையும் அழைத்துவருகிறேன். சரியா?” என்று இதமான குரலில் கேட்டான்.
இல்லையே.. அவளால் இந்த வீட்டில், இந்த அறையில் இருக்கவே முடியவில்லையே.. அவள் கேட்பது கணவனின் முகத்தையே பார்க்காத தனிமையை அல்லவா.. இதை எப்படி அவளால் அவனிடம் சொல்ல இயலும்?
“இல்லை.. நான் அங்கேயே..” என்று அவள் ஆரம்பிக்கையிலேயே, “அது முடியாது லயா!” என்று மறுத்தான் தர்சன்.
அதிர்ச்சியோடு அவள் நிமிர்ந்து பார்க்க, “இதுதான் உன் வீடு. இங்கேதான் நீ இருக்கவேண்டும். அம்மா வீட்டுக்கு விருந்துக்குப் போகலாமே தவிர அங்கே போய்த் தங்கமுடியாது. நான் விடமாட்டேன். புரிந்ததா?” என்று அதட்டியவன், “அவர்களைப் பார்க்க விருப்பம் என்றால் மட்டும் சொல்லு. போய்விட்டு வரலாம்!” என்று அழுத்தம் திருத்தமான குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
Last edited by a moderator: