அத்தியாயம்-29
மாலை நேரக்காற்று சிலுசிலு என்று சுகமாக வீசிக்கொண்டிருந்தது. அதைக் கொஞ்சமும் உணராது, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் மரக்கட்டைகளினால் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் தர்சன். விழிகளோ வான்வெளியில் எங்கோ நிலைத்திருந்தன.
மனமோ பிரிந்து சென்றுவிட்ட மனைவியையே சுற்றிச் சுற்றி வந்தது. அவன் சொன்னதையும் மீறி அவள் தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாள் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை அவனால்!
திருமணமான புதிதில், மனம் ஒன்றாமல் அவனோடு வாழ்ந்த போதிலும் சரி, பின்னர் அவனையே நாய்க்குட்டி மாதிரி சுற்றிச் சுற்றி வந்த காலத்திலும் சரி, அவன் தன்னுடைய கோபங்களையும் ஆத்திரங்களையும் காட்டிய தருணங்களிலும் சரி, அவன் பேச்சை அவள் மீறியதே இல்லை.
அப்படியானவள் இன்று வீட்டைவிட்டு, அவனைவிட்டு சென்றிருக்கிறாளே! காரணம் என்ன என்று புரியாமல் இல்லை. ஆனால்….
அதற்குமேல் சிந்திக்க இயலவில்லை அவனால்!
அவன் மனதின் காயங்களை, ஆறா வடுக்களை, அவமானத்தின் சுவடுகளை அவனாலும் வாய்விட்டு சொல்ல இயலவில்லையே! அதற்குப் பரிசு மனைவியின் பிரிவா?
அவளை எப்படியாவது சமாதானப் படுத்திவிட வேண்டும் என்கிற ஆவலுடன், வேலை முடிந்து வேகமாக வீட்டுக்கு வந்தவனிடம் “லக்கி அவள் அம்மா வீட்டுக்கு போய்விட்டாள் தர்ஷா.” என்று அன்னை சொன்னபோது, அதிர்ந்து நின்றுவிட்டான் தர்சன்.
அவன் மனைவியா? நம்ப முடியவில்லை.
அவனைப் பிரிந்து அவளால் இருக்க இயலுமா?
அவள் இல்லாமல் ஒருகணமும் இருக்க முடியாமல் தவிக்கிறானே.. அவளால் மட்டும் எப்படி?
மனைவி கொடுத்த அந்தப் பிரிவின் வலியில்தான், தான் தன் மனைவியை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதே அவனுக்குப் புரிந்தது.
புரிந்த நொடியில் அதைப் பகிர்ந்துகொள்ள அவள்தான் இல்லாமல் போனாள்!
கனத்த மனதின் பாரத்தை ஒரு பெருமூச்சாக வெளியேற்றியபடி, சிகையை அவன் இரண்டு கைகளாலும் கோதிக் கொடுத்தபோது, “சாரி..” என்று, தயக்கத்துடன் கூடிய மெல்லிய குரல் கேட்டது.
சட்டெனத் திரும்பிப் பார்த்தான் தர்சன்.
அங்கே, கைகளை ஒன்றோடு ஒன்றைப் பற்றியபடி தயங்கிநின்ற வெண்பாவைக் கண்டதும், வெறுப்பின் அடையாளமாக முகத்தைச் சுளித்தான்.
அதில் கன்றிவிட்ட முகத்தோடு அவள் நிற்க, அவனது அடர்ந்த கரிய புருவங்கள், கேள்வியாகச் சுருங்கின.
“அது.. என்னால் தானே.. நான் வந்ததால் தானே உங்கள் மனைவி வீட்டைவிட்டுப் போனாள். அதுதான்...” என்றாள் வெண்பா மெல்ல.
அதைக்கேட்டு அவன் இதழ்கடையோரம் ஏளனமாக வளைய, “உன்னால் என் மனைவி போனாளா? அதுவும் வீட்டை விட்டு? உன் கற்பனை அபாரம்தான்!” என்றான் ஏளனமாக.
இலக்கியா வெளியேறியதற்கு அவள் காரணமில்லையா? பிறகு?
“பிற..கு ஏன் திடீரென்று போனாள்? அதுவும் நீங்கள் இல்லாத நேரத்தில்..” என்று அவள் கேட்டபோது, மனைவியின் மீது கோபம்தான் வந்தது தர்சனுக்கு.
பின்னே, இவள் எல்லாம் கேள்வி கேட்கும் அளவுக்கு வைத்துவிட்டாளே!
“நான் இல்லாத நேரம் போனால் என்ன? இருக்கும் நேரம் போனால் என்ன? அவள் போயிருப்பது தாய் வீட்டுக்கு. ஊரைவிட்டோ வீட்டை விட்டோ ஓடிப்போகவில்லை. அப்படிப் பட்டவளும் இல்லை என் மனைவி. கணவனை உயர்வாக ஈஈமதிப்பவள்!” என்றான் அழுத்தமான குரலில்.
அவமானக் கன்றலில் சிவந்தது வெண்பாவின் முகம். காலையில் அவனைக் கண்டதும் என்ன சொல்வானோ, எப்படி நடந்துகொள்வானோ என்று அவள் பயந்து நடுங்கியது என்னவோ உண்மைதான். ஆனால், சிரித்த முகமாக அவன் வரவேற்றபோது, சற்றே ஆறுதல் கொண்டவள், ஒன்றும் சொல்லமாட்டான் என்கிற தைரியத்தில் தான் இப்போது பேச வந்ததே!
அவனோ, காலையில் செய்ய மறந்ததை இப்போது செய்துகொண்டிருந்தான்.
“உங்களுக்கு என் மீதிருக்கும் கோபம் புரிகிறது. அதேபோல, நான் செய்தவைகள் எல்லாம் எவ்வளவு பெரிய தப்பு என்றும் உணர்ந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.” என்றாள், உண்மையாகவே தவறை உணர்ந்துகொண்ட சின்னக்குரலில்.
“இதென்ன அடுத்தப் புதுக்கதை? உன்மேல் எனக்குக் கோபமா? அப்படிக் கோபப்படும் அளவுக்கு எனக்கு நீ யார்?” என்று, அவள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து அவன் கேட்டபோது, திரும்பவும் அவமானப்பட்டு நின்றாள் வெண்பா.
“பிறகு ஏன் கோபமும் குத்தலுமாகப் பேசுகிறீர்கள்?”
“இந்தக் கோபம் உன் மீதல்ல! உன் பேச்சின் மீது!” என்றான் தர்சன் தெளிவாக.
“என் மனைவியைப் பற்றித் தெரியாமல், அவளின் நல்ல குணம் பற்றி அறியாமல் நீ குறை சொல்வாய். அதை நான் கேட்டுக்கொண்டு இருப்பேன் என்று நினைத்தாயா? முதலில், அவளைப்பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று அவன் கேட்டபோது, கூனிக் குறுகிப்போனாள் வெண்பா.
அவள் செய்தது பெரும் தப்பாகவே இருந்தபோதிலும், இலக்கியாவோடு ஒப்பிட்டு அவளைக் கேவலப்படுத்தியதில், மிகவும் அவமானமாக உணர்ந்தவளுக்கு அப்போதுதான் ஒரு விஷயம் மண்டையில் உறைத்தது!
இப்படித்தானே அன்று விஜயனோடு ஒப்பிட்டு இதே தர்சனை அவள் கேவலமாகப் பேசினாள்!
மனதளவில் குன்றியபோதும், அதை அவனுக்குக் காட்டாது, “உங்கள் மனைவியைப் பற்றி நான் குறை சொல்லவில்லை. என்னைக் கண்டதும் அவள் உங்களைப் பிரிந்து சென்றதால் வந்த குற்ற உணர்ச்சியில் தான் கேட்டேன். நான் உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் செய்ததே போதும், இதில் இது வேறா என்றிருந்தது.” என்றாள் வேதனை நிறைந்த குரலில்.
“முதலில் நீ ஒன்றை நன்றாகப் புரிந்துகொள். அவள் என்னைவிட்டுப் பிரிந்து போகவில்லை. போகவும் மாட்டாள்! அப்படிப் பிரிய நானும் விடமாட்டேன்! எங்கள் இருவரையும் பிரிக்கும் சக்தி அந்த மரணத்துக்கு மட்டுமே உண்டு!” என்று உறுதியான குரலில் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டு போனவனுக்கு அப்போதுதான் அவன் மனதே அவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக உறைத்தது.
அது உறைத்த நொடியில், தன்னை நினைத்து, தன் மனதை நினைத்து ஆச்சரியமாக உணர்ந்தான்!
பின்னே, எவ்வளவு தூரத்துக்கு மனைவியை அவன் நேசிக்கிறான். இதை அறியாமல் இவ்வளவு நாளும் மூடனாக இருந்துவிட்டானே!
மனதில் மகிழ்ச்சி பொங்கினாலும், தன் முன்னால் நிற்பவளைக் கருத்தில்கொண்டு, தன் காதலை தானே உணர்ந்துகொண்ட பூரிப்போடு குரலில் பெருமை துலங்கச் சொன்னான்.
“நான் இல்லாமல் அவளால் வாழவே முடியாது! அவளின் உயிர்ப்பும் துடிப்புமாக நான் இருக்கையில், எப்படி என்னைப் பிரிவாள் என் மனைவி?” என்று, மனைவியின் மனதில் நீக்கமற நிறைந்துவிட்ட கர்வத்தில் அவன் கேட்டபோது, வெண்பா வாயடைத்துப்போய் நின்றாள்.
“என்னாலும் அவள் இல்லாமல் வாழவே முடியாது! வாழ்வது என்ன, அப்படியொரு வாழ்க்கையை நினைத்துக்கூடப் ஈஈபார்க்கமுடியாது. அப்படி என் உயிரிலும் உணர்விலும் கலந்து விட்டவளைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?” என்று கேட்டு, நீ பரிதாபப்படும் இடத்திலோ, நீ கவலைப்படும் இடத்திலோ நான் இல்லை என்று காட்டினான் தர்சன்.
நீ இட்ட சாபத்தினால் எனக்கு வரம்தான் கிட்டியது என்று அவன் சொல்லாமல் சொன்னபோது, வியப்பும் அதிசயமுமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்பா.
அவனை எண்ணி அதிசயமாக இருந்த போதிலும் மனதில் ஒரு ஆறுதலும் கிட்டியது. அவள் செய்த காரியத்தால் அவன் வாழ்க்கைக்கு எதுவும் நடந்துவிடவில்லை. அவளைப்போலவே மணவாழ்க்கை அவனுக்கும் நன்றாகவே அமைந்திருக்கிறது.
“நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு மெய்யாகவே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றாள், ஏதோ ஒரு கட்டிலிருந்து விடுபட்ட உணர்வோடு..
“உன் மகிழ்ச்சி எனக்கு முக்கியமில்லை.” என்றான் பட்டெனத் தர்சன். “இனியும் நீ தேவையில்லாமல் என் மனைவியைப் பற்றிக் கண்டதும் பேசக்கூடாது என்பதற்காகச் சொன்னேன்!” என்றான், கண்டிப்பான குரலில்.
“அத்தையின் மகளாக மட்டுமே இங்கே நீ வந்திருக்கிறாய்! அதற்காக, இப்படி மன்னித்துவிடுங்கள் மறந்துவிடுங்கள் என்று கண்டதையும் சொல்லிக்கொண்டு என் முன்னால் வந்து நிற்காதே! உங்களின் வீடு கிடைத்ததும் அங்கே போய்ச் சேருகிற வழியைப்பார்!” என்றவன், விக்கித்து நின்றவளை அலட்சியம் செய்து நடந்தான்.
வெளியே போ என்று சொல்லாமல் சொன்னவனின் வார்த்தைகளால் உண்டான காயத்தால் வெண்பாவின் கண்களில் நிறைந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்து நிலத்தில் சிந்தியது.
சிறு வயதுமுதல் அவன்மேல் அவள் வளர்த்துக்கொண்ட வெறுப்பும், தந்தையை இழந்தபோதும் கஷ்டமே இல்லாமல் வளர்ந்ததில் வாழ்க்கையின் நிதர்சனம் புரியாமல் போன அறியாமையும், கூடவே விஜயன் மீதான காதலும் சேர்ந்துகொண்டதில், அசட்டுத் துணிச்சலில் அனைத்தையும் செய்துவிட்டாள் தான்.
இல்லாவிட்டாலும், விஜயன் அன்றி வேறு ஒருவரோடு- அது யாராக இருந்தாலும் அவளால் வாழமுடியாது என்பதும் மெய்யே!
இருந்தாலும், கணவனும் கணவன் வீட்டினரும் அவளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று எண்ணி விஜயனை அவள் கைப்பிடித்தபோது, வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டதாகவே உணர்ந்தாள்.
ஆனால், திருமணத்தைப் பற்றியும், அதன் பிறகான வாழ்க்கையைப் பற்றியும் நாம் காணும் கனவுகளுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் வேற்றுமைகள் பல உண்டன்றோ! அதை இந்த இரண்டரை வருடங்கள் அவளுக்கு மெல்ல மெல்லப் புகட்டின.
அது மட்டுமல்ல, அவள் செய்துவிட்டு வந்த காரியத்தின் வீரியமும்!
கணவன் மனைவி இருவரும் முதல் ஆறு மாதங்களையும், ஒரு தேனிலவைப் போன்று இனிமையாகக் கழித்தபோது, கணவன் வீட்டினர் அவளை ஏற்கவில்லை என்பது ஒரு விசயமாகவே அவளுக்குத் தோன்றவில்லை.
அந்தளவுக்கு மகிழ்ச்சிக் கடலில் முத்துக்குளிக்க வைத்தான் விஜயன்.
அந்த மகிழ்ச்சியான இல்லறத்தின் பரிசாக அவள் தாய்மை அடைந்துவிட, கணவனுக்கும் வேலையில் மாற்றல் கிட்டியது.
அவனும் சென்றுவிட, தனிமை வாழ்க்கையில் குடும்பப் பொறுப்பைத் தானே சுமக்கவேண்டிய சூழ்நிலையும், அதுகொடுத்த பொறுப்புணர்வும் என்று, அவள் மனமும் மெல்ல மெல்ல முதிரலாயிற்று!
அந்த முதிர்ச்சியும், தனிமையும் சிந்தனைகளைத் தூண்ட, தான் செய்தவைகள் சரிதானா என்கிற கேள்வி, முதன் முதலாக அப்போதுதான் அவளுள் எழுந்தது.
முதலில் வீட்டை விட்டு ஓடும் எண்ணம் அவளுக்கு இல்லாமல் இருந்தாலும், தர்சன் கட்டிய தாலி அப்படியான ஒரு நிலையை அவளுக்கு உருவாக்கினாலும், தர்சனுக்கு எரிச்சல் ஊட்டுவதற்காக அமலனுடன் நெருங்குவது போன்று அவள் ஆடிய நாடகமே அவனை அப்படிச் செய்யவைத்தது என்று விளங்கிக் கொண்டபோது கூசிப்போனாள் வெண்பா.
எவ்வளவு கேவலமாக நடந்துகொண்டோம்..
தோளில் படிந்த ஒரு கரம் அவளுள் ஓடிய சிந்தனையைத் தடுக்கத் திரும்பிப் பார்த்தாள் வெண்பா.
“இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டபடி அங்கே நின்றிருந்தார் மகேஸ்வரி.
நனைந்த விழிகளோடு, “ஏன்மா என்னை இங்கே கூட்டிக்கொண்டு வந்தீர்கள். இப்படி எல்லோரும் என்னை அவமானப் படுத்தவா? கொழும்பில் வைத்தே சொன்னேன் தானே, இவர்களால் என்னை என்றுமே மன்னிக்கவே முடியாது, அதனால் வரவில்லை என்று. நீங்கள்தான் அடம்பிடித்து, இதிலாவது அம்மா சொல்வதைக் கேள் என்று சொல்லி, அவரிடமும் பேசி சம்மதம் வாங்கி, ஒற்றைக் காலில் நின்று கூட்டி வந்தீர்கள். இப்போது பாருங்கள், எல்லோருமாகச் சேர்ந்து என்னை ஒதுக்குகிறார்கள்.” என்றாள் கண்ணீர் குரலில்.
மாலை நேரக்காற்று சிலுசிலு என்று சுகமாக வீசிக்கொண்டிருந்தது. அதைக் கொஞ்சமும் உணராது, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் மரக்கட்டைகளினால் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் தர்சன். விழிகளோ வான்வெளியில் எங்கோ நிலைத்திருந்தன.
மனமோ பிரிந்து சென்றுவிட்ட மனைவியையே சுற்றிச் சுற்றி வந்தது. அவன் சொன்னதையும் மீறி அவள் தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாள் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை அவனால்!
திருமணமான புதிதில், மனம் ஒன்றாமல் அவனோடு வாழ்ந்த போதிலும் சரி, பின்னர் அவனையே நாய்க்குட்டி மாதிரி சுற்றிச் சுற்றி வந்த காலத்திலும் சரி, அவன் தன்னுடைய கோபங்களையும் ஆத்திரங்களையும் காட்டிய தருணங்களிலும் சரி, அவன் பேச்சை அவள் மீறியதே இல்லை.
அப்படியானவள் இன்று வீட்டைவிட்டு, அவனைவிட்டு சென்றிருக்கிறாளே! காரணம் என்ன என்று புரியாமல் இல்லை. ஆனால்….
அதற்குமேல் சிந்திக்க இயலவில்லை அவனால்!
அவன் மனதின் காயங்களை, ஆறா வடுக்களை, அவமானத்தின் சுவடுகளை அவனாலும் வாய்விட்டு சொல்ல இயலவில்லையே! அதற்குப் பரிசு மனைவியின் பிரிவா?
அவளை எப்படியாவது சமாதானப் படுத்திவிட வேண்டும் என்கிற ஆவலுடன், வேலை முடிந்து வேகமாக வீட்டுக்கு வந்தவனிடம் “லக்கி அவள் அம்மா வீட்டுக்கு போய்விட்டாள் தர்ஷா.” என்று அன்னை சொன்னபோது, அதிர்ந்து நின்றுவிட்டான் தர்சன்.
அவன் மனைவியா? நம்ப முடியவில்லை.
அவனைப் பிரிந்து அவளால் இருக்க இயலுமா?
அவள் இல்லாமல் ஒருகணமும் இருக்க முடியாமல் தவிக்கிறானே.. அவளால் மட்டும் எப்படி?
மனைவி கொடுத்த அந்தப் பிரிவின் வலியில்தான், தான் தன் மனைவியை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதே அவனுக்குப் புரிந்தது.
புரிந்த நொடியில் அதைப் பகிர்ந்துகொள்ள அவள்தான் இல்லாமல் போனாள்!
கனத்த மனதின் பாரத்தை ஒரு பெருமூச்சாக வெளியேற்றியபடி, சிகையை அவன் இரண்டு கைகளாலும் கோதிக் கொடுத்தபோது, “சாரி..” என்று, தயக்கத்துடன் கூடிய மெல்லிய குரல் கேட்டது.
சட்டெனத் திரும்பிப் பார்த்தான் தர்சன்.
அங்கே, கைகளை ஒன்றோடு ஒன்றைப் பற்றியபடி தயங்கிநின்ற வெண்பாவைக் கண்டதும், வெறுப்பின் அடையாளமாக முகத்தைச் சுளித்தான்.
அதில் கன்றிவிட்ட முகத்தோடு அவள் நிற்க, அவனது அடர்ந்த கரிய புருவங்கள், கேள்வியாகச் சுருங்கின.
“அது.. என்னால் தானே.. நான் வந்ததால் தானே உங்கள் மனைவி வீட்டைவிட்டுப் போனாள். அதுதான்...” என்றாள் வெண்பா மெல்ல.
அதைக்கேட்டு அவன் இதழ்கடையோரம் ஏளனமாக வளைய, “உன்னால் என் மனைவி போனாளா? அதுவும் வீட்டை விட்டு? உன் கற்பனை அபாரம்தான்!” என்றான் ஏளனமாக.
இலக்கியா வெளியேறியதற்கு அவள் காரணமில்லையா? பிறகு?
“பிற..கு ஏன் திடீரென்று போனாள்? அதுவும் நீங்கள் இல்லாத நேரத்தில்..” என்று அவள் கேட்டபோது, மனைவியின் மீது கோபம்தான் வந்தது தர்சனுக்கு.
பின்னே, இவள் எல்லாம் கேள்வி கேட்கும் அளவுக்கு வைத்துவிட்டாளே!
“நான் இல்லாத நேரம் போனால் என்ன? இருக்கும் நேரம் போனால் என்ன? அவள் போயிருப்பது தாய் வீட்டுக்கு. ஊரைவிட்டோ வீட்டை விட்டோ ஓடிப்போகவில்லை. அப்படிப் பட்டவளும் இல்லை என் மனைவி. கணவனை உயர்வாக ஈஈமதிப்பவள்!” என்றான் அழுத்தமான குரலில்.
அவமானக் கன்றலில் சிவந்தது வெண்பாவின் முகம். காலையில் அவனைக் கண்டதும் என்ன சொல்வானோ, எப்படி நடந்துகொள்வானோ என்று அவள் பயந்து நடுங்கியது என்னவோ உண்மைதான். ஆனால், சிரித்த முகமாக அவன் வரவேற்றபோது, சற்றே ஆறுதல் கொண்டவள், ஒன்றும் சொல்லமாட்டான் என்கிற தைரியத்தில் தான் இப்போது பேச வந்ததே!
அவனோ, காலையில் செய்ய மறந்ததை இப்போது செய்துகொண்டிருந்தான்.
“உங்களுக்கு என் மீதிருக்கும் கோபம் புரிகிறது. அதேபோல, நான் செய்தவைகள் எல்லாம் எவ்வளவு பெரிய தப்பு என்றும் உணர்ந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.” என்றாள், உண்மையாகவே தவறை உணர்ந்துகொண்ட சின்னக்குரலில்.
“இதென்ன அடுத்தப் புதுக்கதை? உன்மேல் எனக்குக் கோபமா? அப்படிக் கோபப்படும் அளவுக்கு எனக்கு நீ யார்?” என்று, அவள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து அவன் கேட்டபோது, திரும்பவும் அவமானப்பட்டு நின்றாள் வெண்பா.
“பிறகு ஏன் கோபமும் குத்தலுமாகப் பேசுகிறீர்கள்?”
“இந்தக் கோபம் உன் மீதல்ல! உன் பேச்சின் மீது!” என்றான் தர்சன் தெளிவாக.
“என் மனைவியைப் பற்றித் தெரியாமல், அவளின் நல்ல குணம் பற்றி அறியாமல் நீ குறை சொல்வாய். அதை நான் கேட்டுக்கொண்டு இருப்பேன் என்று நினைத்தாயா? முதலில், அவளைப்பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று அவன் கேட்டபோது, கூனிக் குறுகிப்போனாள் வெண்பா.
அவள் செய்தது பெரும் தப்பாகவே இருந்தபோதிலும், இலக்கியாவோடு ஒப்பிட்டு அவளைக் கேவலப்படுத்தியதில், மிகவும் அவமானமாக உணர்ந்தவளுக்கு அப்போதுதான் ஒரு விஷயம் மண்டையில் உறைத்தது!
இப்படித்தானே அன்று விஜயனோடு ஒப்பிட்டு இதே தர்சனை அவள் கேவலமாகப் பேசினாள்!
மனதளவில் குன்றியபோதும், அதை அவனுக்குக் காட்டாது, “உங்கள் மனைவியைப் பற்றி நான் குறை சொல்லவில்லை. என்னைக் கண்டதும் அவள் உங்களைப் பிரிந்து சென்றதால் வந்த குற்ற உணர்ச்சியில் தான் கேட்டேன். நான் உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் செய்ததே போதும், இதில் இது வேறா என்றிருந்தது.” என்றாள் வேதனை நிறைந்த குரலில்.
“முதலில் நீ ஒன்றை நன்றாகப் புரிந்துகொள். அவள் என்னைவிட்டுப் பிரிந்து போகவில்லை. போகவும் மாட்டாள்! அப்படிப் பிரிய நானும் விடமாட்டேன்! எங்கள் இருவரையும் பிரிக்கும் சக்தி அந்த மரணத்துக்கு மட்டுமே உண்டு!” என்று உறுதியான குரலில் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டு போனவனுக்கு அப்போதுதான் அவன் மனதே அவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக உறைத்தது.
அது உறைத்த நொடியில், தன்னை நினைத்து, தன் மனதை நினைத்து ஆச்சரியமாக உணர்ந்தான்!
பின்னே, எவ்வளவு தூரத்துக்கு மனைவியை அவன் நேசிக்கிறான். இதை அறியாமல் இவ்வளவு நாளும் மூடனாக இருந்துவிட்டானே!
மனதில் மகிழ்ச்சி பொங்கினாலும், தன் முன்னால் நிற்பவளைக் கருத்தில்கொண்டு, தன் காதலை தானே உணர்ந்துகொண்ட பூரிப்போடு குரலில் பெருமை துலங்கச் சொன்னான்.
“நான் இல்லாமல் அவளால் வாழவே முடியாது! அவளின் உயிர்ப்பும் துடிப்புமாக நான் இருக்கையில், எப்படி என்னைப் பிரிவாள் என் மனைவி?” என்று, மனைவியின் மனதில் நீக்கமற நிறைந்துவிட்ட கர்வத்தில் அவன் கேட்டபோது, வெண்பா வாயடைத்துப்போய் நின்றாள்.
“என்னாலும் அவள் இல்லாமல் வாழவே முடியாது! வாழ்வது என்ன, அப்படியொரு வாழ்க்கையை நினைத்துக்கூடப் ஈஈபார்க்கமுடியாது. அப்படி என் உயிரிலும் உணர்விலும் கலந்து விட்டவளைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?” என்று கேட்டு, நீ பரிதாபப்படும் இடத்திலோ, நீ கவலைப்படும் இடத்திலோ நான் இல்லை என்று காட்டினான் தர்சன்.
நீ இட்ட சாபத்தினால் எனக்கு வரம்தான் கிட்டியது என்று அவன் சொல்லாமல் சொன்னபோது, வியப்பும் அதிசயமுமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்பா.
அவனை எண்ணி அதிசயமாக இருந்த போதிலும் மனதில் ஒரு ஆறுதலும் கிட்டியது. அவள் செய்த காரியத்தால் அவன் வாழ்க்கைக்கு எதுவும் நடந்துவிடவில்லை. அவளைப்போலவே மணவாழ்க்கை அவனுக்கும் நன்றாகவே அமைந்திருக்கிறது.
“நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு மெய்யாகவே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றாள், ஏதோ ஒரு கட்டிலிருந்து விடுபட்ட உணர்வோடு..
“உன் மகிழ்ச்சி எனக்கு முக்கியமில்லை.” என்றான் பட்டெனத் தர்சன். “இனியும் நீ தேவையில்லாமல் என் மனைவியைப் பற்றிக் கண்டதும் பேசக்கூடாது என்பதற்காகச் சொன்னேன்!” என்றான், கண்டிப்பான குரலில்.
“அத்தையின் மகளாக மட்டுமே இங்கே நீ வந்திருக்கிறாய்! அதற்காக, இப்படி மன்னித்துவிடுங்கள் மறந்துவிடுங்கள் என்று கண்டதையும் சொல்லிக்கொண்டு என் முன்னால் வந்து நிற்காதே! உங்களின் வீடு கிடைத்ததும் அங்கே போய்ச் சேருகிற வழியைப்பார்!” என்றவன், விக்கித்து நின்றவளை அலட்சியம் செய்து நடந்தான்.
வெளியே போ என்று சொல்லாமல் சொன்னவனின் வார்த்தைகளால் உண்டான காயத்தால் வெண்பாவின் கண்களில் நிறைந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்து நிலத்தில் சிந்தியது.
சிறு வயதுமுதல் அவன்மேல் அவள் வளர்த்துக்கொண்ட வெறுப்பும், தந்தையை இழந்தபோதும் கஷ்டமே இல்லாமல் வளர்ந்ததில் வாழ்க்கையின் நிதர்சனம் புரியாமல் போன அறியாமையும், கூடவே விஜயன் மீதான காதலும் சேர்ந்துகொண்டதில், அசட்டுத் துணிச்சலில் அனைத்தையும் செய்துவிட்டாள் தான்.
இல்லாவிட்டாலும், விஜயன் அன்றி வேறு ஒருவரோடு- அது யாராக இருந்தாலும் அவளால் வாழமுடியாது என்பதும் மெய்யே!
இருந்தாலும், கணவனும் கணவன் வீட்டினரும் அவளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று எண்ணி விஜயனை அவள் கைப்பிடித்தபோது, வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டதாகவே உணர்ந்தாள்.
ஆனால், திருமணத்தைப் பற்றியும், அதன் பிறகான வாழ்க்கையைப் பற்றியும் நாம் காணும் கனவுகளுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் வேற்றுமைகள் பல உண்டன்றோ! அதை இந்த இரண்டரை வருடங்கள் அவளுக்கு மெல்ல மெல்லப் புகட்டின.
அது மட்டுமல்ல, அவள் செய்துவிட்டு வந்த காரியத்தின் வீரியமும்!
கணவன் மனைவி இருவரும் முதல் ஆறு மாதங்களையும், ஒரு தேனிலவைப் போன்று இனிமையாகக் கழித்தபோது, கணவன் வீட்டினர் அவளை ஏற்கவில்லை என்பது ஒரு விசயமாகவே அவளுக்குத் தோன்றவில்லை.
அந்தளவுக்கு மகிழ்ச்சிக் கடலில் முத்துக்குளிக்க வைத்தான் விஜயன்.
அந்த மகிழ்ச்சியான இல்லறத்தின் பரிசாக அவள் தாய்மை அடைந்துவிட, கணவனுக்கும் வேலையில் மாற்றல் கிட்டியது.
அவனும் சென்றுவிட, தனிமை வாழ்க்கையில் குடும்பப் பொறுப்பைத் தானே சுமக்கவேண்டிய சூழ்நிலையும், அதுகொடுத்த பொறுப்புணர்வும் என்று, அவள் மனமும் மெல்ல மெல்ல முதிரலாயிற்று!
அந்த முதிர்ச்சியும், தனிமையும் சிந்தனைகளைத் தூண்ட, தான் செய்தவைகள் சரிதானா என்கிற கேள்வி, முதன் முதலாக அப்போதுதான் அவளுள் எழுந்தது.
முதலில் வீட்டை விட்டு ஓடும் எண்ணம் அவளுக்கு இல்லாமல் இருந்தாலும், தர்சன் கட்டிய தாலி அப்படியான ஒரு நிலையை அவளுக்கு உருவாக்கினாலும், தர்சனுக்கு எரிச்சல் ஊட்டுவதற்காக அமலனுடன் நெருங்குவது போன்று அவள் ஆடிய நாடகமே அவனை அப்படிச் செய்யவைத்தது என்று விளங்கிக் கொண்டபோது கூசிப்போனாள் வெண்பா.
எவ்வளவு கேவலமாக நடந்துகொண்டோம்..
தோளில் படிந்த ஒரு கரம் அவளுள் ஓடிய சிந்தனையைத் தடுக்கத் திரும்பிப் பார்த்தாள் வெண்பா.
“இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டபடி அங்கே நின்றிருந்தார் மகேஸ்வரி.
நனைந்த விழிகளோடு, “ஏன்மா என்னை இங்கே கூட்டிக்கொண்டு வந்தீர்கள். இப்படி எல்லோரும் என்னை அவமானப் படுத்தவா? கொழும்பில் வைத்தே சொன்னேன் தானே, இவர்களால் என்னை என்றுமே மன்னிக்கவே முடியாது, அதனால் வரவில்லை என்று. நீங்கள்தான் அடம்பிடித்து, இதிலாவது அம்மா சொல்வதைக் கேள் என்று சொல்லி, அவரிடமும் பேசி சம்மதம் வாங்கி, ஒற்றைக் காலில் நின்று கூட்டி வந்தீர்கள். இப்போது பாருங்கள், எல்லோருமாகச் சேர்ந்து என்னை ஒதுக்குகிறார்கள்.” என்றாள் கண்ணீர் குரலில்.
Last edited by a moderator: