பேராதனை மாணவர்கள் இளைப்பாற, சில நேரங்களில் சேர்ந்திருந்து கற்க, பேசிச் சிரிக்க என்று எல்லாவற்றுக்கும் பயன்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அன்றும் அக்பர் பாலத்தின் மேலே, அதன் தொடக்கத்தில் நின்றிருந்தனர் சிசிர, மகிந்த நண்பர் கூட்டம். அவர்கள் சென்றுவந்த திரைப்படத்தைப் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டு இருந்தவர்களின் பார்வையில் பட்டாள் நிரல்யா. பாலத்தின் கீழே, பல்கலைக்குச் செல்லும் வீதியில், புத்தகங்களை மார்பில் அணைத்தபடி நடந்துகொண்டிருந்தாள்.
இனிமையாய் அதிர்ந்த சிசிர, “நிரா!” என்று மேலிருந்து கத்தினான். திடுக்கிட்டு நிமிர்ந்து மேலே அவள் பார்க்க, அங்கிருந்து கீழே பாய்வது போன்று அவன் செய்யவும் உண்மையாகவே பாய்ந்துவிடுவானோ என்று பயந்து, “ஏய், என்ன செய்றீங்க?” என்று தன்னை மறந்து கத்தியிருந்தாள் நிரல்யா.
அவனோ அவளுக்குப் பயம் காட்டிவிட்டு,
கைகள் இரண்டையும் பாலத்தின் சுவரில் ஊன்றியபடி அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.
என்ன விளையாட்டு இது? ஒருகணம் அவளுக்கு உயிரே போயிற்றே! நன்றாக முறைத்துவிட்டு விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள். மனம் அவனைத் திட்டித் தீர்த்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளின் முன்னே நின்றான் சிசிர.
இடுப்பில் கைகள் இரண்டையும் வைத்து, ஓடி வந்ததில் மூச்சு வாங்கியபடி, “எங்க போயிற்று வாறாய்?” என்று பேச்சுக் கொடுத்தான்.
அவனை ஒரு முறை முறைத்துவிட்டு அவள் தொடர்ந்து நடக்க, அவள் கைபற்றி நிறுத்தினான்.
‘இந்தச் சிங்களவனுக்குக் கையப் பிடிக்கிறதே வேலையாப் போச்சு!’ உள்ளம் பதற, “விடுங்க பிளீஸ்!” என்றாள் அழுத்தமாக.
அதிலேயே அவள் மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் என்று விளங்கிவிட, “ஓகே ஓகே விடுறன். ஆனா கோவிக்காத. அது சும்மா உன்னோட விளையாடினான்.” என்றான் சமாதானமாக.
அவளோடு கூட நடந்தபடி கெஞ்சியும் அவள் கேட்கவில்லை. கடைசியில் அவளைப் பெண்கள் விடுதி வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வந்தான் அவன்.
“என்னடா?” வேர்த்து விறுவிறுத்து வந்தவனிடம் வினவினான் மகிந்த.
“அவளுக்குக் கோவம் போல.”
“ஓ!” கும்பலே சேர்ந்து கோரஸ் வாசித்தது.
“என்னடா? நானே அவளை எப்பிடிச் சமாதானம் செய்றது எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்.” சுருண்ட குழல்களுக்குள் இரண்டு கைகளையும் நுழைத்துக் கோதியபடி சொன்னான்.
“உனக்கு விளங்க இல்லையாடா? யாரா இருந்தாலும் நீ செய்த வேலைக்கு அந்த நிமிசம் பயந்துதான் இருப்பினம். ஆனா, இந்தக் கோவம் ஏன் எண்டு யோசி மச்சான்.”
கேள்வியோடு நண்பனை நோக்கியவனின் விழிகள் சந்தோசத்தில் விரிந்தன. “உண்மையாவாடா?” என்றான் ஆர்வமாக.
“போடா…” என்றவன் அடுத்து என்ன சொல்ல வந்திருப்பானோ, வேகமாக அவன் வாயைப் பொத்தியிருந்தான் சிசிர. “சுந்தரச் சிங்களம் கதைக்காமப் பேசாம இரு. நான் கொஞ்சம் யோசிக்க வேணும்!” என்று மகிந்தவைச் சமாதானம் செய்தான்.
நண்பர்களும் அவர்களின் கேலிகளும் அவனைச் சுற்றிச் சூழ்ந்திருந்தாலும் அதில் அவன் கவனம் செல்லவேயில்லை. உதட்டோரம் பூத்திருந்த மென் முறுவலோடு நண்பர்கள் சொன்ன அந்த அழகான உணர்வில் தன்னை மறந்து திளைத்திருந்தான்.
அவள் அவர்களின் பல்கலைக்குத் தெரிவான நேரத்திலேயே அவள் பற்றிய அத்தனை தரவுகளும் அவர்களிடம் வந்திருந்தன. ராக்கிங்காக அதைப் பெற்றிருந்தாலும் தனியாகச் சேகரித்ததெல்லாம் அவன் வைத்துக்கொள்ளவில்லை.
எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பென்பதே இயற்கையானது. இதில் இன்னோர் இனத்தைச் சேர்ந்தவள், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு, அவர்களின் மொழி தெரியாமல் மலங்க மலங்க விழிக்கையில் அவன் நெஞ்சத்தைக் கவர்ந்தது என்னவோ உண்மைதான்.
அதுவரையில் அவளைத் தூரத்திலிருந்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வான். அதைப் பெரிதாகக் கொண்டுபோக எண்ணியதே இல்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு. அவனுடைய ரசனைக்குரியவளாக அவள் இருந்தாள். அவ்வளவுதான்.
அன்று மகிந்தனைப் பிடிக்க ஓடி வருகையில் சடசட என்று மழை கொட்ட ஆரம்பித்திருந்தது. அதிலிருந்து தப்பிக்கவும் இத்தனை நாள்களும் தூர இருந்து தன்னை ஈர்த்தவளை பக்கத்திலிருந்து பார்க்கும் ஆசையிலும்தான் அவள் குடைக்குள் புகுந்திருந்தான்.
ஆனால், அவள் மிரண்ட குழந்தையாகப் பயந்து நின்றது நெஞ்சை அள்ளியிருந்தது.
பக்கத்தில் பார்த்த பிறகு விலகி நிற்க முடியவில்லை. அவ்வளவு காலமும் சினமூட்டிய மழையை அதன் பிறகெல்லாம் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தான். அவனிடமிருந்த குடைகளெல்லாம் திடீரென்று தொலைந்து போயின.
இதில் அன்று குடையை விரிக்காமல் அவனுக்கு அவள் சவால் விட்ட அழகில் மயங்கியே போனான். பயந்தவள் என்றாலும் சேட்டைக்காரி என்று அன்றுதான் கண்டுகொண்டான். கூடவே, குடைக்குள் புகுவதை வேண்டுமென்றே செய்கிறான் என்று அவளும் கண்டுகொண்டிருக்கிறாள் என்று அறிந்துகொண்டான்.
அவள் கரம் பற்றிய கணத்தில் அதன் மென்மையில் அவன் தொலைந்து போனதும் உண்மைதான். லைப்ரரிக்குச் செல்லும் வழியில் அவள் சொன்ன ‘ம்ம்’ அடுத்த ஹைலைட். அப்படியே அள்ளியணைத்துக் கொஞ்சும் ஆசையைத் தூண்டி விட்டிருந்தாள்.
இனி? அவனுக்குத் தெரியவில்லை! அவனுக்கும் அவளுக்குமிடையில் என்ன நடக்கப் போகிறதென்றும் தெரியவில்லை.
அவனுடைய சொந்த இடம் காலி. மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். தந்தை தேநீர்க் கடை ஒன்றை அவர்களின் கிராமத்துச் சந்தியில் வைத்திருக்கிறார். அம்மா அவருக்கு உதவியாக இருப்பார். அவ்வப்போது வீட்டு வேலைகளுக்கும் போவார். ஒரு தங்கை. உண்மையைச் சொல்லப்போனால் மொத்தக் குடும்பமும் அவர்களின் சுக துக்கங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவனைப் படிப்பிக்கிறார்கள். மொத்த வீட்டினதும் பொறுப்பு அவன் தலையில் இருக்கிறது. இதில், ஒரு நேசம் துளிவிடும் சத்தம் அவன் இதயத்தினுள்.
அவள் வீட்டினரைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. ஆனால், வசதியான வீட்டுப் பிள்ளை என்று நன்றாகத் தெரிந்தது. அவளும் இவனிடமிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்றுதான் பார்ப்பாள். அப்படியிருக்க இன்று நண்பர்கள் சொன்ன ஒற்றை வார்த்தை அவன் இதயத்தையே பிரட்டிப் போட்டது.
அப்படியும் இருக்குமோ என்று அதிலேயே நின்று சுழன்றான். அவள்பால் பொங்கும் இந்த உள்ளக் கிளர்ச்சியை வளர்க்கவும் பயந்தான். ஒட்ட நறுக்கவும் முடியாத இயலாமையில் கிடந்து பொசுங்கினான்.
அடுத்த இரண்டு நாள்களும் மழை தூறினாலும் கூட அவள் குடை கொண்டு வரவில்லை. முதுகில் தொங்கும் பாக்கிலும் குடை இல்லை. சரண்யா இருந்தால் அவள் குடைக்குள் வந்தாள். இல்லையோ நனைந்தாள்.
அவளின் அந்தப் பாரா முகத்தில் திணறித்தான் போனான் சிசிர பண்டார. சின்னதாய் ஒரு விளையாட்டு. அவளைப் பார்த்த கணத்தில் தன்னை மீறிப் பொங்கிய உற்சாகத்தில் செய்திருந்தான். இப்போது எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரியாது நின்றான்.
கருத்திட
மக்களே,
பேராதனைக்கு நான் இதுவரையில் போனது இல்லை. எல்லாமே இணையத்தில் பெற்ற தரவுகளை வைத்துத்தான் எழுதுறேன். ஆனால், அடுத்தமுறை இலங்கை நான் போகும்போது என் சுற்றுலா திட்டத்தில் பேராதனை நிச்சயம் இருக்கும். ஓ ராதாவுக்கு அவர்கள் போன பொற்கோயில் போட்டோ போட்ட மாதிரி பேராதனைக்கும் நான் எடுத்த போட்டோஸ் போடுறேன். இப்ப இணையத்தில் எடுத்த போட்டோஸ் போடுறேன் பாருங்க.
கதை நல்லா போகுதா? ஓகேயா உங்க எல்லோருக்கும்? அனந்தன், நிரல், சிசிர இவர்கள் மூவரையும் சுற்றியதுதான் கதை. யார் ஹீரோ என்றால் இருவருமே என்றுதான் சொல்வேன். அப்படி இரண்டு நாயகர்கள் போல் வருவது மனத்துக்குப் பிடிக்காமல் இருக்கா? அப்படி எதுவும் இல்லைதானே? நிரலின் வாழ்க்கை இவர்கள் இருவரில் யாரோ ஒருவரோடுதான் இருக்கப் போகிறது. அவன் யார், ஏன் அப்படியானது என்பதுதான் கதை.
வேற என்ன சொல்ல? மிக்க மிக்க நன்றி, கருத்திடுவதற்கும், சிங்களம் தெரிந்தவர்கள் நீங்களாகவே முன் வந்து சிங்களச் சொற்கள், வசனங்கள் சொல்வதற்கும்.
அம்மா பிறந்தது, படித்தது எல்லாம் காலி. அவாவிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும். என்ன, ஒரு சொல்லுக்காக அவாக்கு கோலை(call) போட்டால் எழுதிக்கொண்டு இருக்கும் கதை மறந்து சொந்த கதைக்குள் நான் போய், கடைசியில் எழுதும் கதை என் கறிச் சட்டிக்குள்தான் வேகும்.
அதனால்தான் உங்களிடமே உதவிக்கு வந்துவிட்டேன். நன்றி நன்றி.
அடுத்த அத்தியாயம் பெரும்பாலும் அடுத்த திங்கள்தான் வரும். அனைவருக்கும் ஹாப்பி வீக்கெண்ட்!
அன்றும் அக்பர் பாலத்தின் மேலே, அதன் தொடக்கத்தில் நின்றிருந்தனர் சிசிர, மகிந்த நண்பர் கூட்டம். அவர்கள் சென்றுவந்த திரைப்படத்தைப் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டு இருந்தவர்களின் பார்வையில் பட்டாள் நிரல்யா. பாலத்தின் கீழே, பல்கலைக்குச் செல்லும் வீதியில், புத்தகங்களை மார்பில் அணைத்தபடி நடந்துகொண்டிருந்தாள்.
இனிமையாய் அதிர்ந்த சிசிர, “நிரா!” என்று மேலிருந்து கத்தினான். திடுக்கிட்டு நிமிர்ந்து மேலே அவள் பார்க்க, அங்கிருந்து கீழே பாய்வது போன்று அவன் செய்யவும் உண்மையாகவே பாய்ந்துவிடுவானோ என்று பயந்து, “ஏய், என்ன செய்றீங்க?” என்று தன்னை மறந்து கத்தியிருந்தாள் நிரல்யா.
அவனோ அவளுக்குப் பயம் காட்டிவிட்டு,
கைகள் இரண்டையும் பாலத்தின் சுவரில் ஊன்றியபடி அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.
என்ன விளையாட்டு இது? ஒருகணம் அவளுக்கு உயிரே போயிற்றே! நன்றாக முறைத்துவிட்டு விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள். மனம் அவனைத் திட்டித் தீர்த்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளின் முன்னே நின்றான் சிசிர.
இடுப்பில் கைகள் இரண்டையும் வைத்து, ஓடி வந்ததில் மூச்சு வாங்கியபடி, “எங்க போயிற்று வாறாய்?” என்று பேச்சுக் கொடுத்தான்.
அவனை ஒரு முறை முறைத்துவிட்டு அவள் தொடர்ந்து நடக்க, அவள் கைபற்றி நிறுத்தினான்.
‘இந்தச் சிங்களவனுக்குக் கையப் பிடிக்கிறதே வேலையாப் போச்சு!’ உள்ளம் பதற, “விடுங்க பிளீஸ்!” என்றாள் அழுத்தமாக.
அதிலேயே அவள் மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் என்று விளங்கிவிட, “ஓகே ஓகே விடுறன். ஆனா கோவிக்காத. அது சும்மா உன்னோட விளையாடினான்.” என்றான் சமாதானமாக.
அவளோடு கூட நடந்தபடி கெஞ்சியும் அவள் கேட்கவில்லை. கடைசியில் அவளைப் பெண்கள் விடுதி வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வந்தான் அவன்.
“என்னடா?” வேர்த்து விறுவிறுத்து வந்தவனிடம் வினவினான் மகிந்த.
“அவளுக்குக் கோவம் போல.”
“ஓ!” கும்பலே சேர்ந்து கோரஸ் வாசித்தது.
“என்னடா? நானே அவளை எப்பிடிச் சமாதானம் செய்றது எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்.” சுருண்ட குழல்களுக்குள் இரண்டு கைகளையும் நுழைத்துக் கோதியபடி சொன்னான்.
“உனக்கு விளங்க இல்லையாடா? யாரா இருந்தாலும் நீ செய்த வேலைக்கு அந்த நிமிசம் பயந்துதான் இருப்பினம். ஆனா, இந்தக் கோவம் ஏன் எண்டு யோசி மச்சான்.”
கேள்வியோடு நண்பனை நோக்கியவனின் விழிகள் சந்தோசத்தில் விரிந்தன. “உண்மையாவாடா?” என்றான் ஆர்வமாக.
“போடா…” என்றவன் அடுத்து என்ன சொல்ல வந்திருப்பானோ, வேகமாக அவன் வாயைப் பொத்தியிருந்தான் சிசிர. “சுந்தரச் சிங்களம் கதைக்காமப் பேசாம இரு. நான் கொஞ்சம் யோசிக்க வேணும்!” என்று மகிந்தவைச் சமாதானம் செய்தான்.
நண்பர்களும் அவர்களின் கேலிகளும் அவனைச் சுற்றிச் சூழ்ந்திருந்தாலும் அதில் அவன் கவனம் செல்லவேயில்லை. உதட்டோரம் பூத்திருந்த மென் முறுவலோடு நண்பர்கள் சொன்ன அந்த அழகான உணர்வில் தன்னை மறந்து திளைத்திருந்தான்.
அவள் அவர்களின் பல்கலைக்குத் தெரிவான நேரத்திலேயே அவள் பற்றிய அத்தனை தரவுகளும் அவர்களிடம் வந்திருந்தன. ராக்கிங்காக அதைப் பெற்றிருந்தாலும் தனியாகச் சேகரித்ததெல்லாம் அவன் வைத்துக்கொள்ளவில்லை.
எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பென்பதே இயற்கையானது. இதில் இன்னோர் இனத்தைச் சேர்ந்தவள், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு, அவர்களின் மொழி தெரியாமல் மலங்க மலங்க விழிக்கையில் அவன் நெஞ்சத்தைக் கவர்ந்தது என்னவோ உண்மைதான்.
அதுவரையில் அவளைத் தூரத்திலிருந்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வான். அதைப் பெரிதாகக் கொண்டுபோக எண்ணியதே இல்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு. அவனுடைய ரசனைக்குரியவளாக அவள் இருந்தாள். அவ்வளவுதான்.
அன்று மகிந்தனைப் பிடிக்க ஓடி வருகையில் சடசட என்று மழை கொட்ட ஆரம்பித்திருந்தது. அதிலிருந்து தப்பிக்கவும் இத்தனை நாள்களும் தூர இருந்து தன்னை ஈர்த்தவளை பக்கத்திலிருந்து பார்க்கும் ஆசையிலும்தான் அவள் குடைக்குள் புகுந்திருந்தான்.
ஆனால், அவள் மிரண்ட குழந்தையாகப் பயந்து நின்றது நெஞ்சை அள்ளியிருந்தது.
பக்கத்தில் பார்த்த பிறகு விலகி நிற்க முடியவில்லை. அவ்வளவு காலமும் சினமூட்டிய மழையை அதன் பிறகெல்லாம் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தான். அவனிடமிருந்த குடைகளெல்லாம் திடீரென்று தொலைந்து போயின.
இதில் அன்று குடையை விரிக்காமல் அவனுக்கு அவள் சவால் விட்ட அழகில் மயங்கியே போனான். பயந்தவள் என்றாலும் சேட்டைக்காரி என்று அன்றுதான் கண்டுகொண்டான். கூடவே, குடைக்குள் புகுவதை வேண்டுமென்றே செய்கிறான் என்று அவளும் கண்டுகொண்டிருக்கிறாள் என்று அறிந்துகொண்டான்.
அவள் கரம் பற்றிய கணத்தில் அதன் மென்மையில் அவன் தொலைந்து போனதும் உண்மைதான். லைப்ரரிக்குச் செல்லும் வழியில் அவள் சொன்ன ‘ம்ம்’ அடுத்த ஹைலைட். அப்படியே அள்ளியணைத்துக் கொஞ்சும் ஆசையைத் தூண்டி விட்டிருந்தாள்.
இனி? அவனுக்குத் தெரியவில்லை! அவனுக்கும் அவளுக்குமிடையில் என்ன நடக்கப் போகிறதென்றும் தெரியவில்லை.
அவனுடைய சொந்த இடம் காலி. மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். தந்தை தேநீர்க் கடை ஒன்றை அவர்களின் கிராமத்துச் சந்தியில் வைத்திருக்கிறார். அம்மா அவருக்கு உதவியாக இருப்பார். அவ்வப்போது வீட்டு வேலைகளுக்கும் போவார். ஒரு தங்கை. உண்மையைச் சொல்லப்போனால் மொத்தக் குடும்பமும் அவர்களின் சுக துக்கங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவனைப் படிப்பிக்கிறார்கள். மொத்த வீட்டினதும் பொறுப்பு அவன் தலையில் இருக்கிறது. இதில், ஒரு நேசம் துளிவிடும் சத்தம் அவன் இதயத்தினுள்.
அவள் வீட்டினரைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. ஆனால், வசதியான வீட்டுப் பிள்ளை என்று நன்றாகத் தெரிந்தது. அவளும் இவனிடமிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்றுதான் பார்ப்பாள். அப்படியிருக்க இன்று நண்பர்கள் சொன்ன ஒற்றை வார்த்தை அவன் இதயத்தையே பிரட்டிப் போட்டது.
அப்படியும் இருக்குமோ என்று அதிலேயே நின்று சுழன்றான். அவள்பால் பொங்கும் இந்த உள்ளக் கிளர்ச்சியை வளர்க்கவும் பயந்தான். ஒட்ட நறுக்கவும் முடியாத இயலாமையில் கிடந்து பொசுங்கினான்.
அடுத்த இரண்டு நாள்களும் மழை தூறினாலும் கூட அவள் குடை கொண்டு வரவில்லை. முதுகில் தொங்கும் பாக்கிலும் குடை இல்லை. சரண்யா இருந்தால் அவள் குடைக்குள் வந்தாள். இல்லையோ நனைந்தாள்.
அவளின் அந்தப் பாரா முகத்தில் திணறித்தான் போனான் சிசிர பண்டார. சின்னதாய் ஒரு விளையாட்டு. அவளைப் பார்த்த கணத்தில் தன்னை மீறிப் பொங்கிய உற்சாகத்தில் செய்திருந்தான். இப்போது எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரியாது நின்றான்.
கருத்திட
மக்களே,
பேராதனைக்கு நான் இதுவரையில் போனது இல்லை. எல்லாமே இணையத்தில் பெற்ற தரவுகளை வைத்துத்தான் எழுதுறேன். ஆனால், அடுத்தமுறை இலங்கை நான் போகும்போது என் சுற்றுலா திட்டத்தில் பேராதனை நிச்சயம் இருக்கும். ஓ ராதாவுக்கு அவர்கள் போன பொற்கோயில் போட்டோ போட்ட மாதிரி பேராதனைக்கும் நான் எடுத்த போட்டோஸ் போடுறேன். இப்ப இணையத்தில் எடுத்த போட்டோஸ் போடுறேன் பாருங்க.
கதை நல்லா போகுதா? ஓகேயா உங்க எல்லோருக்கும்? அனந்தன், நிரல், சிசிர இவர்கள் மூவரையும் சுற்றியதுதான் கதை. யார் ஹீரோ என்றால் இருவருமே என்றுதான் சொல்வேன். அப்படி இரண்டு நாயகர்கள் போல் வருவது மனத்துக்குப் பிடிக்காமல் இருக்கா? அப்படி எதுவும் இல்லைதானே? நிரலின் வாழ்க்கை இவர்கள் இருவரில் யாரோ ஒருவரோடுதான் இருக்கப் போகிறது. அவன் யார், ஏன் அப்படியானது என்பதுதான் கதை.
வேற என்ன சொல்ல? மிக்க மிக்க நன்றி, கருத்திடுவதற்கும், சிங்களம் தெரிந்தவர்கள் நீங்களாகவே முன் வந்து சிங்களச் சொற்கள், வசனங்கள் சொல்வதற்கும்.
அம்மா பிறந்தது, படித்தது எல்லாம் காலி. அவாவிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும். என்ன, ஒரு சொல்லுக்காக அவாக்கு கோலை(call) போட்டால் எழுதிக்கொண்டு இருக்கும் கதை மறந்து சொந்த கதைக்குள் நான் போய், கடைசியில் எழுதும் கதை என் கறிச் சட்டிக்குள்தான் வேகும்.
அதனால்தான் உங்களிடமே உதவிக்கு வந்துவிட்டேன். நன்றி நன்றி.
அடுத்த அத்தியாயம் பெரும்பாலும் அடுத்த திங்கள்தான் வரும். அனைவருக்கும் ஹாப்பி வீக்கெண்ட்!
Last edited:







