அத்தியாயம்-8
அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் மரகதமும் கவிநயாவும் நன்கு விடிந்தபின்னரே எழுந்தனர். கவிக்கு உடல்வலி என்றால் மரகதத்துக்கு மனதில் வலி!
கவிக்கு இன்று இன்னும் அதிகமாகக் கால்கள் வீங்கி, வலியும் அதிகமாக இருந்தது. நடக்கவே சிரமப் பட்டாள்.
"வலி அதிகமாக இருக்கிறதா கவி?" மரகதம் கேட்கவும்,
"கை வலிக்கும் வரை அடித்தீர்களே. உங்களுக்குத் தெரியாதா எவ்வளவு வலிக்கும் என்று?" கேட்டவளின் குரலில் சிறுபிள்ளைக் கோபம் மீண்டிருந்தது.
"நீ செய்யும் வேலைகளுக்கு உன்னைக் கொஞ்சுவார்களா?" என்று அதட்டிய மரகதமும் வழமைக்குத் திரும்பியிருந்தார்.
இதுதான் அவர்கள்! கவியின் துடுக்கு பிறப்பிலே வந்தது. மரகதத்தின் இறுக்கம் வாழ்வில் பலமாக அடிபட்டு வந்தது!
"காலை நீட்டியபடி நிலத்தில் இரு. வெந்நீர் ஒத்தடம் கொடுக்கிறேன்..." என்றவர், வெந்நீரையும் துண்டு ஒன்றையும் எடுத்துக்கொண்டு நிலத்தில் அமர்ந்தார்.
தாயை முறைத்த கவி, காலை மட்டும் அல்லாது முகத்தையும் நீட்டிக்கொண்டு அமர்ந்தாள்.
"இந்தக் கோபத்தைக் குறை என்று சொன்னால் மட்டும் கேட்டுவிடாதே. எவ்வளவு அடித்தாலும் திருந்தமாட்டாய்.” என்று சலித்தவர், மகளின் கால்களுக்கு மிக மிக மென்மையாக ஒத்தடம் கொடுத்தார்.
சனி ஞாயிரு இரண்டு நாட்களும், தாய்க்கும் மகளுக்கும் சின்னச் சின்ன வாக்கு வாதத்துடன் நகர்ந்தது.
திங்கட்கிழமை விடியவே, வழமை போல் கவிநயா பள்ளிக்குத் தயாராகவும், மகளை ஒரு பார்வை பார்த்தவர், "எந்த வம்புக்கும் போகாது போய்வா!" என்றார் சற்று அதட்டலாக.
தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "சரிம்மா. உங்கள் பல்லவியைத் திரும்பவும் ஆரம்பிக்காதீர்கள்!" என்று சினத்துடன் பதில் சொன்னாள் கவி.
மரகதம் முறைக்கவும், "அதுதான் வம்புக்குப் போகவில்லை என்று சொன்னேனே. பிறகு என்னம்மா. சும்ம்மா அதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்..” என்று கடுப்புடன் பதில் சொல்லிவிட்டுப் பள்ளிக்கு விரைந்தாள்.
சற்றுத் தூரம் நடந்ததும், வழமை போல் எதிரிலே ரவி வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்க்கக் கூடாது, அவன் என்ன சொன்னாலும் வாயே திறக்க கூடாது என்று உருப் போட்டபடியே நடந்தவளின் தலை, என்றுமில்லாது இன்று குனிந்திருந்தது.
தாய் அடித்தது உடலில் வலித்தாலும் மனதில் வலிக்கவில்லை அவளுக்கு. அடிக்கடி அடிவேண்டுவதால் அது பெரிதாகவும் தோன்றவில்லை. என்ன, இந்த முறை விழுந்த அடிகளின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்! அவ்வளவே!
ஆனால் தாய் கண்ணீர் விட்டு அழுதது அவளைப் பாதித்து இருந்தது. தாயின் உணர்வுகளை முழுதாக உணர்ந்துகொள்ளும் வயதோ அல்லது பக்குவமோ இல்லாத பருவமாகையால், தான் வாய் காட்டுவதால் அம்மா வருந்துகிறார் என்கிற வரையில் புரிந்திருந்தது அவளுக்கு.
அவன் எதுவும் பேசக்கூடாது. கடவுளே.. நானும் வாயைத் திறக்கக்கூடாது என்று கடவுளிடம் மன்றாடியபடி அவனைக் கடந்தவளுக்கு, அவனும் எதுவும் பேசாது இருக்கவே, 'அப்பாடி...' என்றிருந்தது. அவனைக் கடந்த பிறகுதான் தலையை மறுபடியும் நிமிர்த்தி நடந்தாள்.
தூரத்திலேயே அவளைக் கண்டுவிட்ட ரவிக்கு, மனதில் ஒருவித சுகம் பரவியது. உடலில் ஒருவித பரபரப்பு. இரண்டு நாட்களாக அவளைக் காணாது கண்ட அவனின் கண்கள் அவளையே மையம் கொண்டிருந்தாலும், வாய் அசைய மறுத்தது. ஏதாவது சொல்லி அவளைச் சீண்டி அவளின் கோபத்தை ரசிக்க வேண்டும் என்றுதான் அவனும் காத்திருந்தான். ஆனாலும் ஏனோ முடியவில்லை. அவளைப் பார்ப்பதே போதும் என்பதுபோல் ஆசையுடன் அவளையே பாத்திருந்தான்.
தன்னைக் கடந்து செல்பவளையே கண்வெட்டாது பாத்திருந்தவனின் இதயம் தாறுமாறாகத் துடிக்க, பிடரி முடியினை இருகைகளாலும் கோதிக்கொண்டவன், கண்களை இறுக மூடித்திறந்தான். உள்ளமோ ஏதோ ஒன்றை எதிர்பார்த்து, ஏங்கிக் கிடந்தது.
அவள் பார்வையிலிருந்து மறைந்தபின்னரும், அவள் சென்ற பக்கமே பார்வையை வைத்திருந்தவன் விழிகள் உருவமில்லாக் கனவில் மிதந்தது.
நீண்ட நேரத்திற்குப் பிறகே, எங்கே ராஜைக் காணவில்லையே என்று யோசித்தபடி கைக் கடிகாரத்தைப் பார்த்தான். நேரமோ, பள்ளி தொடங்கும் நேரத்தை நெருங்கியிருந்தது. இனியும் தாமதிக்க முடியாது என்று நினைத்தவன், சைக்கிளைப் பள்ளி நோக்கி மிதித்தான்.
அங்கே நடந்து சென்றுகொண்டிருந்த கவியைக் கண்டதும், ராஜைப் பற்றி அவளிடம் விசாரிக்கலாம் என்று நினைத்து, அவளின் அருகே சைக்கிளை கொண்டுபோய் அவன் நிறுத்தவும் கவி பயந்துபோனாள்.
"அம்மா...!" என்றபடி திகைத்து விலகியவளை, "ஹேய்...நான்தான்...!" என்றான் ரவி.
அப்போதும் அவள் பயத்துடன் மிரண்டு விழிக்கவும், "ஏய் காட்டுராணி, நீ கூட பயப்படுவாயா?" என்று கேட்டவனின் குரலில், கேலி இருந்தாலும் கனிவு கலந்து வந்தது.
புதிதாக அவனிடம் தெரிந்த அந்தக் கனிவு கூட அவளுக்குத் திகைப்பை உண்டுபண்ணியது போலும், அப்போதும் வாயைத் திறக்க முடியாமல் நின்றாள்.
அவளை ரசித்தபடி, "ராஜ் ஏன் இன்று வரவில்லை கவி? உனக்கு ஏதாவது தெரியுமா?" என்று அவன் சாதாரணமாகக் கேட்டான்.
இதுவரை இப்படியான சாதாரண உரையாடல்கள் அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்திருக்காத படியினால், அவனையே விழி விரிய பாத்திருந்தவளின் உதடுகள் அசைய மறுத்தது.
சில நொடிகளில் அவனின் கேள்வி புரியவே, "அது.. அது மாமாவுக்கு உடம்பு சரியில்லையாம். அதனால் தான் என்று நினைக்கிறேன். எனக்கு சரியாக தெரியாது, ராஜ் அண்ணா ஏன் வரவில்லை என்று..." திக்கியவாறே பதில் சொன்னாள் கவி.
அவன் நினைத்ததுதான் என்பதால் அந்த விஷயத்தை விட்டுவிட்டு, "எதற்காக திக்குகிறாய்? பயந்துவிட்டாயா?" என்று மீண்டும் இதமாகக் கேட்டான்.
அப்போதும் அவள் தலையை ஆம் என்பதாக அசைக்க, உண்மையாகவே பயந்துவிட்டாள் என்று புரிந்தது அவனுக்கு.
சின்னச் சிரிப்புடன், "லூசு! எதற்கு பயப்படுகிறாய்..!” என்று அவளின் தலையில் தன் கையினால் மெல்லத் தட்டி, "பயப்படாமல் போய்வா....!" என்று மென்மையாகச் சொன்னான். அவன் தலையில் தட்டியதும் அவளின் உடலில் மெல்லிய சிலிர்ப்பு ஒன்று ஓடி மறைந்தது.
அவனின் அந்தச் செயலும், அதை அவன் உணராது இயல்பாகச் செய்த விதமும் அவளுக்கு ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தது.
சரி என்பதாக அவள் தலையை அசைக்கவும், ‘இவளுக்கு என்ன ஆகிவிட்டது. இன்று அநியாயத்திற்கு அமைதியாக இருக்கிறாளே..’ என்று நினைத்தபடி தானும் பள்ளிக்குச் சென்றான் ரவி.
என்றுமில்லாது இன்று கவி என்று அவன் அழைத்ததும், மிகச் சாதாரண குரலில் பேசியதும், அவன் கண்களில் இருந்த கனிவும், குரலில் இருந்த மென்மையும், போதாக்குறைக்கு அவள் தலையை அவன் தட்டியதும் அவளின் வாயை அடைத்திருந்தது என்பது அவனுக்குப் புரியவில்லை.
அவன் செயல்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல், 'என்ன ஆகிவிட்டது இவனுக்கு? வித்தியாசமாக பேசுகிறானே இன்று', என்று சிந்தித்தபடியே சென்றாள் கவி.
அவளின் புதுவிதமான அமைதியே அன்று முழுவதும் ரவியின் மனதைக் குடைந்தது. அவனை அவள் பார்க்கும் பார்வையிலேயே முறைப்பு இருக்கும். இல்லையானால் என்னிடம் வம்பு வளர்த்தால் உன்னை ஏதாவது செய்துவிடுவேன் என்கிற மிரட்டல் இருக்கும். இன்றானால் ஏதோ ஒரு தயக்கம், பயம் அல்லது தடுமாற்றம் இருந்தது.
ஏன்? ஏன் அப்படிப் பார்த்தால் என்று யோசித்தவனை, "அடேய், ஏதாவது சாப்பிட வருகிறாயா என்று எத்தனை தடவை கேட்பது? காதை எங்கே வைத்திருக்கிறாய்...?" என்று பாய்ந்தான், ரவியின் நண்பர்களில் ஒருவனான தேவன்.
"அதுவாடா, அவனின் உயிர் நண்பன் ராஜ் இன்று பள்ளிக்கு வராததால் நம் நண்பன் சோகமாக இருக்கிறான். இல்லையாடா ரவி?" என்று கேட்ட கண்ணனின் குரலில் சிறு குத்தல் இருந்தது.
"என்னடா சொல்கிறாய்? அவன் உயிர் நண்பன் என்றால் நாம் யார், இவனின் தயிர் நண்பர்களா?" என்றான் தேவன்.
தங்களை விட ராஜுடன் ரவி நெருங்கிப் பழகுவதில், கண்ணனுக்கும் தேவனுக்கும் சிறு பொறாமை இருந்தது. அவர்கள் நால்வரும் படிப்பில் கெட்டிக்காரர்கள்! பணத்தில் ரவியளவு இல்லை என்றாலும் கண்ணனும் தேவனும் வசதியில் குறைந்தவர்கள் அல்ல!
அப்படி இருக்கையில், தினக்கூலியின் மகனான ராஜுடன் அவன் நட்பு பாராட்டுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
"அப்படியா ரவி? உனக்கு எங்களை விட அவன்தான் நெருங்கிய நண்பனோ?" தேவனின் குரலிலும் சிறு பொறாமை ஒழிந்திருந்தது.
"தேவை இல்லாமல் பேசாதீர்கள்...!" ரவியின் குரலில் அதட்டல் இருக்கவே,
"எது தேவை இல்லாத விடயம் ரவி? உன் ஊரிலேயே வசிக்கும் உன்னுடனேயே சுத்தும் எங்களை விட அவனுடன் நீ நெருங்கிப் பழகுவது எங்களுக்குத் தேவை இல்லாத விசயமாடா?" என்று கேட்ட தேவனின் குரலிலும் இப்போது சிறு கோபம் இருந்தது.
இந்த வாதத்தை வளர்க்க விரும்பாத ரவி, "விசராடா உங்களுக்கு? எனக்கு நீங்கள் மூவருமே ஒன்றுதான்! ராஜ் எனக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் நண்பன் தான். ஆனால் இப்போது நான் ராஜைப் பற்றி யோசிக்கவே இல்லை..." என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தைத் தவிர்க்க நினைத்து வாயை விட்டான்.
"நீ சொல்வதை நம்பிட்டோம்!" என்று நம்பாத குரலில் சொன்ன கண்ணன், "அப்படியானால் இலங்கையின் பொருளாதாரத்தை எப்படி உயர்த்தலாம் என்று யோசித்தாயா ரவி?" என்று நக்கலாக வேறு கேட்டான்.
"நான் கவியைப் பற்றி யோசித்தேனடா..." என்று முறைப்புடன் உள்ளதை உளறினான் ரவி.
"என்னது? கவியைப் பற்றியா? அவளைப் பற்றி யோசிக்க என்னடா இருக்கிறது?" என்று கேட்ட தேவனின் குரலில் புது ஆர்வம் பிறந்திருந்தது.
அவர்கள் இருவரின் பார்வையும் குறுகுறு என்று ரவியின் முகத்தை ஆராய்ந்தது.
அவர்களின் பார்வையை எதிர்கொள்ளாது, "இல்லை… இன்று அவள் இயல்பாக இல்லை. அதுதான் ஏன் என்று யோசிக்கிறேன்.." தன் யோசனையில் மிதந்தவாறே சொன்னான் ரவி.
"என்னடா..? அன்று நான் சொன்னதுபோல அவளைக் காதலிக்கிறாயா?" கேட்ட கண்ணனின் குரலில் சிறு ஏளனம்.
எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தவனின் செயல் இன்னுமே சுவாரசியத்தைத் தூண்ட, "ஓ.. காதல்தானா.....? அதுவும் அந்தக் குண்டுக் கறுப்பி மீது?" என்று தேவன் கேட்கவும், ரவி அவனை முறைத்தான்.
அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் மரகதமும் கவிநயாவும் நன்கு விடிந்தபின்னரே எழுந்தனர். கவிக்கு உடல்வலி என்றால் மரகதத்துக்கு மனதில் வலி!
கவிக்கு இன்று இன்னும் அதிகமாகக் கால்கள் வீங்கி, வலியும் அதிகமாக இருந்தது. நடக்கவே சிரமப் பட்டாள்.
"வலி அதிகமாக இருக்கிறதா கவி?" மரகதம் கேட்கவும்,
"கை வலிக்கும் வரை அடித்தீர்களே. உங்களுக்குத் தெரியாதா எவ்வளவு வலிக்கும் என்று?" கேட்டவளின் குரலில் சிறுபிள்ளைக் கோபம் மீண்டிருந்தது.
"நீ செய்யும் வேலைகளுக்கு உன்னைக் கொஞ்சுவார்களா?" என்று அதட்டிய மரகதமும் வழமைக்குத் திரும்பியிருந்தார்.
இதுதான் அவர்கள்! கவியின் துடுக்கு பிறப்பிலே வந்தது. மரகதத்தின் இறுக்கம் வாழ்வில் பலமாக அடிபட்டு வந்தது!
"காலை நீட்டியபடி நிலத்தில் இரு. வெந்நீர் ஒத்தடம் கொடுக்கிறேன்..." என்றவர், வெந்நீரையும் துண்டு ஒன்றையும் எடுத்துக்கொண்டு நிலத்தில் அமர்ந்தார்.
தாயை முறைத்த கவி, காலை மட்டும் அல்லாது முகத்தையும் நீட்டிக்கொண்டு அமர்ந்தாள்.
"இந்தக் கோபத்தைக் குறை என்று சொன்னால் மட்டும் கேட்டுவிடாதே. எவ்வளவு அடித்தாலும் திருந்தமாட்டாய்.” என்று சலித்தவர், மகளின் கால்களுக்கு மிக மிக மென்மையாக ஒத்தடம் கொடுத்தார்.
சனி ஞாயிரு இரண்டு நாட்களும், தாய்க்கும் மகளுக்கும் சின்னச் சின்ன வாக்கு வாதத்துடன் நகர்ந்தது.
திங்கட்கிழமை விடியவே, வழமை போல் கவிநயா பள்ளிக்குத் தயாராகவும், மகளை ஒரு பார்வை பார்த்தவர், "எந்த வம்புக்கும் போகாது போய்வா!" என்றார் சற்று அதட்டலாக.
தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "சரிம்மா. உங்கள் பல்லவியைத் திரும்பவும் ஆரம்பிக்காதீர்கள்!" என்று சினத்துடன் பதில் சொன்னாள் கவி.
மரகதம் முறைக்கவும், "அதுதான் வம்புக்குப் போகவில்லை என்று சொன்னேனே. பிறகு என்னம்மா. சும்ம்மா அதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்..” என்று கடுப்புடன் பதில் சொல்லிவிட்டுப் பள்ளிக்கு விரைந்தாள்.
சற்றுத் தூரம் நடந்ததும், வழமை போல் எதிரிலே ரவி வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்க்கக் கூடாது, அவன் என்ன சொன்னாலும் வாயே திறக்க கூடாது என்று உருப் போட்டபடியே நடந்தவளின் தலை, என்றுமில்லாது இன்று குனிந்திருந்தது.
தாய் அடித்தது உடலில் வலித்தாலும் மனதில் வலிக்கவில்லை அவளுக்கு. அடிக்கடி அடிவேண்டுவதால் அது பெரிதாகவும் தோன்றவில்லை. என்ன, இந்த முறை விழுந்த அடிகளின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்! அவ்வளவே!
ஆனால் தாய் கண்ணீர் விட்டு அழுதது அவளைப் பாதித்து இருந்தது. தாயின் உணர்வுகளை முழுதாக உணர்ந்துகொள்ளும் வயதோ அல்லது பக்குவமோ இல்லாத பருவமாகையால், தான் வாய் காட்டுவதால் அம்மா வருந்துகிறார் என்கிற வரையில் புரிந்திருந்தது அவளுக்கு.
அவன் எதுவும் பேசக்கூடாது. கடவுளே.. நானும் வாயைத் திறக்கக்கூடாது என்று கடவுளிடம் மன்றாடியபடி அவனைக் கடந்தவளுக்கு, அவனும் எதுவும் பேசாது இருக்கவே, 'அப்பாடி...' என்றிருந்தது. அவனைக் கடந்த பிறகுதான் தலையை மறுபடியும் நிமிர்த்தி நடந்தாள்.
தூரத்திலேயே அவளைக் கண்டுவிட்ட ரவிக்கு, மனதில் ஒருவித சுகம் பரவியது. உடலில் ஒருவித பரபரப்பு. இரண்டு நாட்களாக அவளைக் காணாது கண்ட அவனின் கண்கள் அவளையே மையம் கொண்டிருந்தாலும், வாய் அசைய மறுத்தது. ஏதாவது சொல்லி அவளைச் சீண்டி அவளின் கோபத்தை ரசிக்க வேண்டும் என்றுதான் அவனும் காத்திருந்தான். ஆனாலும் ஏனோ முடியவில்லை. அவளைப் பார்ப்பதே போதும் என்பதுபோல் ஆசையுடன் அவளையே பாத்திருந்தான்.
தன்னைக் கடந்து செல்பவளையே கண்வெட்டாது பாத்திருந்தவனின் இதயம் தாறுமாறாகத் துடிக்க, பிடரி முடியினை இருகைகளாலும் கோதிக்கொண்டவன், கண்களை இறுக மூடித்திறந்தான். உள்ளமோ ஏதோ ஒன்றை எதிர்பார்த்து, ஏங்கிக் கிடந்தது.
அவள் பார்வையிலிருந்து மறைந்தபின்னரும், அவள் சென்ற பக்கமே பார்வையை வைத்திருந்தவன் விழிகள் உருவமில்லாக் கனவில் மிதந்தது.
நீண்ட நேரத்திற்குப் பிறகே, எங்கே ராஜைக் காணவில்லையே என்று யோசித்தபடி கைக் கடிகாரத்தைப் பார்த்தான். நேரமோ, பள்ளி தொடங்கும் நேரத்தை நெருங்கியிருந்தது. இனியும் தாமதிக்க முடியாது என்று நினைத்தவன், சைக்கிளைப் பள்ளி நோக்கி மிதித்தான்.
அங்கே நடந்து சென்றுகொண்டிருந்த கவியைக் கண்டதும், ராஜைப் பற்றி அவளிடம் விசாரிக்கலாம் என்று நினைத்து, அவளின் அருகே சைக்கிளை கொண்டுபோய் அவன் நிறுத்தவும் கவி பயந்துபோனாள்.
"அம்மா...!" என்றபடி திகைத்து விலகியவளை, "ஹேய்...நான்தான்...!" என்றான் ரவி.
அப்போதும் அவள் பயத்துடன் மிரண்டு விழிக்கவும், "ஏய் காட்டுராணி, நீ கூட பயப்படுவாயா?" என்று கேட்டவனின் குரலில், கேலி இருந்தாலும் கனிவு கலந்து வந்தது.
புதிதாக அவனிடம் தெரிந்த அந்தக் கனிவு கூட அவளுக்குத் திகைப்பை உண்டுபண்ணியது போலும், அப்போதும் வாயைத் திறக்க முடியாமல் நின்றாள்.
அவளை ரசித்தபடி, "ராஜ் ஏன் இன்று வரவில்லை கவி? உனக்கு ஏதாவது தெரியுமா?" என்று அவன் சாதாரணமாகக் கேட்டான்.
இதுவரை இப்படியான சாதாரண உரையாடல்கள் அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்திருக்காத படியினால், அவனையே விழி விரிய பாத்திருந்தவளின் உதடுகள் அசைய மறுத்தது.
சில நொடிகளில் அவனின் கேள்வி புரியவே, "அது.. அது மாமாவுக்கு உடம்பு சரியில்லையாம். அதனால் தான் என்று நினைக்கிறேன். எனக்கு சரியாக தெரியாது, ராஜ் அண்ணா ஏன் வரவில்லை என்று..." திக்கியவாறே பதில் சொன்னாள் கவி.
அவன் நினைத்ததுதான் என்பதால் அந்த விஷயத்தை விட்டுவிட்டு, "எதற்காக திக்குகிறாய்? பயந்துவிட்டாயா?" என்று மீண்டும் இதமாகக் கேட்டான்.
அப்போதும் அவள் தலையை ஆம் என்பதாக அசைக்க, உண்மையாகவே பயந்துவிட்டாள் என்று புரிந்தது அவனுக்கு.
சின்னச் சிரிப்புடன், "லூசு! எதற்கு பயப்படுகிறாய்..!” என்று அவளின் தலையில் தன் கையினால் மெல்லத் தட்டி, "பயப்படாமல் போய்வா....!" என்று மென்மையாகச் சொன்னான். அவன் தலையில் தட்டியதும் அவளின் உடலில் மெல்லிய சிலிர்ப்பு ஒன்று ஓடி மறைந்தது.
அவனின் அந்தச் செயலும், அதை அவன் உணராது இயல்பாகச் செய்த விதமும் அவளுக்கு ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தது.
சரி என்பதாக அவள் தலையை அசைக்கவும், ‘இவளுக்கு என்ன ஆகிவிட்டது. இன்று அநியாயத்திற்கு அமைதியாக இருக்கிறாளே..’ என்று நினைத்தபடி தானும் பள்ளிக்குச் சென்றான் ரவி.
என்றுமில்லாது இன்று கவி என்று அவன் அழைத்ததும், மிகச் சாதாரண குரலில் பேசியதும், அவன் கண்களில் இருந்த கனிவும், குரலில் இருந்த மென்மையும், போதாக்குறைக்கு அவள் தலையை அவன் தட்டியதும் அவளின் வாயை அடைத்திருந்தது என்பது அவனுக்குப் புரியவில்லை.
அவன் செயல்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல், 'என்ன ஆகிவிட்டது இவனுக்கு? வித்தியாசமாக பேசுகிறானே இன்று', என்று சிந்தித்தபடியே சென்றாள் கவி.
அவளின் புதுவிதமான அமைதியே அன்று முழுவதும் ரவியின் மனதைக் குடைந்தது. அவனை அவள் பார்க்கும் பார்வையிலேயே முறைப்பு இருக்கும். இல்லையானால் என்னிடம் வம்பு வளர்த்தால் உன்னை ஏதாவது செய்துவிடுவேன் என்கிற மிரட்டல் இருக்கும். இன்றானால் ஏதோ ஒரு தயக்கம், பயம் அல்லது தடுமாற்றம் இருந்தது.
ஏன்? ஏன் அப்படிப் பார்த்தால் என்று யோசித்தவனை, "அடேய், ஏதாவது சாப்பிட வருகிறாயா என்று எத்தனை தடவை கேட்பது? காதை எங்கே வைத்திருக்கிறாய்...?" என்று பாய்ந்தான், ரவியின் நண்பர்களில் ஒருவனான தேவன்.
"அதுவாடா, அவனின் உயிர் நண்பன் ராஜ் இன்று பள்ளிக்கு வராததால் நம் நண்பன் சோகமாக இருக்கிறான். இல்லையாடா ரவி?" என்று கேட்ட கண்ணனின் குரலில் சிறு குத்தல் இருந்தது.
"என்னடா சொல்கிறாய்? அவன் உயிர் நண்பன் என்றால் நாம் யார், இவனின் தயிர் நண்பர்களா?" என்றான் தேவன்.
தங்களை விட ராஜுடன் ரவி நெருங்கிப் பழகுவதில், கண்ணனுக்கும் தேவனுக்கும் சிறு பொறாமை இருந்தது. அவர்கள் நால்வரும் படிப்பில் கெட்டிக்காரர்கள்! பணத்தில் ரவியளவு இல்லை என்றாலும் கண்ணனும் தேவனும் வசதியில் குறைந்தவர்கள் அல்ல!
அப்படி இருக்கையில், தினக்கூலியின் மகனான ராஜுடன் அவன் நட்பு பாராட்டுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
"அப்படியா ரவி? உனக்கு எங்களை விட அவன்தான் நெருங்கிய நண்பனோ?" தேவனின் குரலிலும் சிறு பொறாமை ஒழிந்திருந்தது.
"தேவை இல்லாமல் பேசாதீர்கள்...!" ரவியின் குரலில் அதட்டல் இருக்கவே,
"எது தேவை இல்லாத விடயம் ரவி? உன் ஊரிலேயே வசிக்கும் உன்னுடனேயே சுத்தும் எங்களை விட அவனுடன் நீ நெருங்கிப் பழகுவது எங்களுக்குத் தேவை இல்லாத விசயமாடா?" என்று கேட்ட தேவனின் குரலிலும் இப்போது சிறு கோபம் இருந்தது.
இந்த வாதத்தை வளர்க்க விரும்பாத ரவி, "விசராடா உங்களுக்கு? எனக்கு நீங்கள் மூவருமே ஒன்றுதான்! ராஜ் எனக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் நண்பன் தான். ஆனால் இப்போது நான் ராஜைப் பற்றி யோசிக்கவே இல்லை..." என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தைத் தவிர்க்க நினைத்து வாயை விட்டான்.
"நீ சொல்வதை நம்பிட்டோம்!" என்று நம்பாத குரலில் சொன்ன கண்ணன், "அப்படியானால் இலங்கையின் பொருளாதாரத்தை எப்படி உயர்த்தலாம் என்று யோசித்தாயா ரவி?" என்று நக்கலாக வேறு கேட்டான்.
"நான் கவியைப் பற்றி யோசித்தேனடா..." என்று முறைப்புடன் உள்ளதை உளறினான் ரவி.
"என்னது? கவியைப் பற்றியா? அவளைப் பற்றி யோசிக்க என்னடா இருக்கிறது?" என்று கேட்ட தேவனின் குரலில் புது ஆர்வம் பிறந்திருந்தது.
அவர்கள் இருவரின் பார்வையும் குறுகுறு என்று ரவியின் முகத்தை ஆராய்ந்தது.
அவர்களின் பார்வையை எதிர்கொள்ளாது, "இல்லை… இன்று அவள் இயல்பாக இல்லை. அதுதான் ஏன் என்று யோசிக்கிறேன்.." தன் யோசனையில் மிதந்தவாறே சொன்னான் ரவி.
"என்னடா..? அன்று நான் சொன்னதுபோல அவளைக் காதலிக்கிறாயா?" கேட்ட கண்ணனின் குரலில் சிறு ஏளனம்.
எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தவனின் செயல் இன்னுமே சுவாரசியத்தைத் தூண்ட, "ஓ.. காதல்தானா.....? அதுவும் அந்தக் குண்டுக் கறுப்பி மீது?" என்று தேவன் கேட்கவும், ரவி அவனை முறைத்தான்.