இதில் யார் மீது அதிக தவறு என்று தான் பார்க்க வேண்டும்...சுபா குடும்ப நிலையை எண்ணி, கணவன் மீது நம்பிக்கை வைத்து பிரிவை ஏற்றாள்.. கொஞ்சம் கணவன் புறம் இருந்து யோசித்திருக்கலாம்...அது மட்டும் தான் அவள் தவறு..
ஆனால் காந்தன் செய்தது மன்னிக்க முடியாதது.. இரண்டு பெண்களுக்கும் தவறிழைத்து விட்டான்.. திருமணமாகாதவன் என்று அவள் நினைத்ததை மறுக்கவில்லை..நிலானி , என்ன பெண் அவள்..சிறிது காலமே பழகிய ஆணிடம் எந்த உரிமையில் இவ்வாறு நடந்து கொள்வது?? இருவருமே சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இதையெல்லாம் மீறி விட்டனர்.. இவர்கள் இருவரின் தவறை நியாயப்படுத்தவே முடியாது..
இதை எப்படி சரி செய்வது?