செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

zeenath Sabeeha

New member
Aug 23, 2025
14
5
3
Chennai
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும்
செந்தூரம் போட்டிக்கதைகள்.
"தேன் நாட்டு பைங்கிளி"
#STN_48
வானதி.. பார்த்திபன் இலங்கையில் தாய் தந்தையுடன் வாழும் இவர்களுக்கு நாட்டை பிரிந்து இந்தியாவிற்கு வரும் நிலைமை தாய், தந்தையரின் அகால மரணத்திற்கு பிறகு.
இவர்களை அழைத்துச் செல்ல வானதியின் பெரியம்மா மகன் கரிகாலன் வருகிறான் அவனோடு விருப்பம் இல்லாமல் இந்தியாவிற்கு கிளம்புகிறாள் வானதி கடும் கோபத்துடன். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் இவள் போகப் போக அவர்கள் இவள் மேல் கொண்டுள்ள பாசத்தை புரிந்து இவளும் அதை அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறாள்.
கரிகாலன் அருமையான கதாபாத்திரம் இவனுக்கு ஒரு ஜோடி சேர்த்திருக்கலாம்.. 🥰
அருள்மொழி வருமன்.. முதல் காதலின் தோற்று வாழ்வை வெறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. அதிலிருந்து மீண்டு வர முயற்சித்து அதில் வெற்றியும் பெறுகிறான்..
அலுவலகத்தில் வானதிக்கு இவன் ஹெட் ஆக இருக்கிறான்.. அவள் வேலையில் தவறு செய்ய கடுமை காட்டுகிறான் அவளிடம். பெண் அவளுக்கு அவனிடம் அளவிட முடியாத கோபம். கோபம் மட்டுமல்ல காதலும் தான்.. அதை தெரிந்து கொள்கிறான் வர்மன். ஆனால் தன் காதலை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள் வானதி ஒரு காலத்தில் காதல் இருந்தது தற்போது இருப்பது வெறுப்பு மட்டுமே என சாதிக்கிறாள். அவள் மனதில் தான் இருந்ததை நினைத்து பூரிப்படைகிறான் வர்மன். தன் மேல் அவளுக்கு இருந்த காதலை வெளிக் கொண்டு வர அனைத்து வகையிலும் முயற்சி செய்கிறான் அதில் வெற்றி பெற்றானா என்பது கதையில்.
ஒரே நாளில் தன் பைக்கை மாற்றுவதெல்லாம் வேற லெவல் 🥰
வானதியின் கோபம் நியாயம் தான்.
தகுதி இல்லாத இடத்தில் காதலை கொடுத்து அதற்கான வலியைப் பெற்றுக் கொண்டான் வர்மன்.
வெண்மதி.. அருமையான அம்மா 👏
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 👏
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
#காதல்_எங்கள்_சொந்தம்….
#கௌரிஸ்ரிவ்யூ….

காதல் கதை தான்…..கொஞ்சம் வித்யாசமா இருக்கு…..

சந்திரன் ஆபீஸ் விஷயமா கொடைக்கானல் வந்து இருக்கப்பா…அவன் தங்கை ஹேமாவும் தானும் வருவேன்னு வந்து காலை உடைச்சுகிட்டா…..

சந்திரனுக்கு ஆபீஸ் வேலை இருக்க…தங்கையை பார்த்து கொள்ள இடமும், ஆளும் வேணும் என மலர் ஹோட்டல் நடத்தும் காவ்யா கிட்ட கேட்ட…..

ரூம் தரேன், ஆள் எல்லாம் வெச்சி பார்த்துக்க முடியாதுனு கோவமா சொல்லிவிட….

சந்திரனுக்கு ஆத்திரம்….ஆன காவியாவின் முன் அனுபவம் அப்படி….

அது தெரியாது இல்ல சந்திரனுக்கு…..

அப்ப வள்ளி ஓட பெண் அமலாவை ஹாஸ்பிடல் கூட்டி போக சந்திரன் உதவ….

வள்ளி வீட்டு பெண் மீனா ஹேமாவை அவள் வீட்டில் வைத்து பார்த்துக்கரா…..

ஆன அமலாவை காப்பாத்த முடியாமல் போக…..

காவ்யா வந்து எல்லாம் வள்ளி ஃபேமிலிக்கு ஹெல்ப் பண்றா….

அப்ப காவ்யா ஓட பண்பை புரிஞ்சிக்கும் சந்திரனுக்கு அவள் மேல் சலனம்…..

இப்ப தான் வள்ளி ஓட பெண் அமலா இறந்து இருக்க….

காவ்யா ஹோட்டலில் தங்கி இருந்த சசி அம்மாவும் இறக்க …..

தனித்து இருக்கும் சசியை வள்ளி தானே வந்து ஏற்று கொள்ள…..

எல்லாம் நல்ல நிலையில் போகுது….

சந்திரனுக்கு காவ்யா மேல் இருந்த சலனம் காதலா மலர…

காவ்யா மனதிலோ நிரஞ்சன்…..

நிரஞ்சன், ஏதும் சொல்லாமல் எங்கோ சென்று விட….

பிரிவில் காவ்யா….

சந்திரன்…இங்கேயே செடில் ஆக வீடு பார்க்கும் பொறுப்பு ஹேமாவிடம் வர….

வீட்டை விக்க மறுக்கும் நிர்மல்….

இப்படி ஒருவொருத்தரும் ஒருவொரு நிலையில் இருக்க….

யாராருக்கு காதல் சொந்தமானது என்பது தான் கதை…..

சந்திரன்….அமைதியா இருந்தே காவியாவின் மனதில் இடம் பிடிச்சிக்கிறான்…..

காவ்யா….பிரிந்த காதலனை எண்ணி தவித்தாலும்….சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுத்து இருக்க…..

ஹேமா….இவளும் காவ்யா போல தான்….ஆன நிரஞ்சன் காவியாக்கு துரோகம் செய்யல….இங்க ஹேமாக்கு நடந்தது துரோகம்….அதும்🤬🤬🤬 🤬 🤬

நிர்மல்….முதலில் வீட்டை தர மறுத்து கோவமா நடந்த அவன்….அவன் மாற்றம் எப்படின்னு சொல்லவே இல்லையே…..

நிரஞ்சன்…..சரியான லூசு….காவ்யா கிட்ட சொல்லிட்டு போய் இருந்தா இப்படி வாழ்க்கையை தொலைச்சிட்டு நின்னு இருக்க வேணாம் இல்ல….

ஊரான் காதலை ஊட்டி வளர்த்தா தன் காதல் தானே வளரும்னு நினைச்சிட்டான் போல….

கலா….இது என்ன கேரக்டர்னு எனக்கு புரியவே இல்ல…..

அருண் துரோகம் செய்யல அப்படினா….ஆன துரோகம் confirm ஆனதும்….

நீங்க வேணாம்…ஆனா நீங்க கொடுத்த காரும், வீடும் நா வெச்சிக்கறேன்னு சொல்றது என்ன 🤦🤦🤦🤦🤦🤦…..

நிறைய கேரக்டர்ஸ்…..கதையை இன்னும் நல்லா கொண்டு போய் இருக்கலாம்னு தோணுது….சில இடங்கள் சலிப்பா இருக்கு…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇👇

F%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.462/
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
#செதுக்கிய_சிற்ப_பாவையே….
#கௌரிஸ்ரிவ்யூ…..

காத்தவராயன் - வெண்பாவுக்கு மூணு பெண்கள்….

நகை, சுடர் & கவி….இதில் நகை ரொம்ப அமைதி & பயந்த சுபாவம் கொண்ட பெண்…..

காத்தவராயன்…. தன் நான்கு தங்கைக்கும் கல்யாணம், சீர் என அனைத்தும் தன் சக்திக்கு மீறி செய்து அவர் மகள்களுக்கு படிப்பை தவிர எந்த சொத்துக்கும் சேர்த்து வைக்கல…..

அதும் எல்லாம் இப்ப தான் படிக்கும் பெண்கள் …..

அந்த தங்கைகளும் பெரிசா அண்ணன் என ஏதும் செய்வது இல்லை….அவரிடம் இருந்து இன்னும் எடுத்து கொண்டு தான் போக இருக்காங்க….

நகைக்கு, ஆனந்தி அத்தை மகனான பிரனேஷ் மேல காதல்….அவனுக்கும் தான்….

காத்து ஓட தங்கைகளிலே பேராசை பிடித்தவர் இந்த ஆனந்தி தான்😏😏😏😏😏…..

இவங்க காதல் ஆனந்திக்கு தெரிஞ்சி போக….காத்து - வெண்பாவை அவமான படுத்திறாங்க …..

தன் நிலையால் தான்…. தன் பெண்ணுக்கு அவள் விரும்பும் வாழ்வை அமையலா…தங்கைகளின் சுயரூபம் என காத்துவை அலைக்கழிக்க….

ஆக்சிடென்ட் ஆகிருது….வெண்பாவும் பெண்களும் நிலையில்லாமல் தவிக்க….

அந்த ஏரியாவில் இருக்கும் மெக்கானிக் பரமு தான் அவங்களுக்கு பக்க பலமா இருக்கான்….

காத்து மேல நல்ல மதிப்பு & வேற ஒரு காரணமும் இருக்கு…..

காத்து இனி நடக்க முடியாதுனு போக…..

அமைதியான, பயந்த சுபாவம் கொண்ட நகை…. ஆர்மியில் சேரார…

தன் அப்பாவையும், குடும்பத்தையும் சுமக்க பயணிக்கிறாள்…..

இனி அவங்க வாழ்க்கை, நகையின் ஆர்மி பணி, பரமனின் ரகசியம்….

இது எல்லாம் மீதி கதை…..

நகை…..தென்றல் புயலாகி வருதே…அது போல தான் நகையும்…..

இவளோட ஒரு ஒரு பரிமாணமும் ரொம்ப நல்லா இருக்கு 🔥🔥🔥🔥🔥

சுடர்….நகை போல அமைதியான பெண் இல்லைனாலும்….வீட்டின் சூழ்நிலை உணர்ந்து நடப்பது எல்லாம் 👏👏👏👏👏

காத்து…இவர் மேல கோபம் தான்..
அப்படி என்ன தங்கைகள் பாசம்?????

தனக்கும் பெண்கள் இருக்கு என நினைக்காமல்….இது என்ன இப்படி ஒரு நிலை…

கொஞ்சமாவது சுயநலமா இருந்து இருக்கலாம் இவர்…..

ஆனந்தி…கடைசி வரை திருந்தவே இல்ல🤦🤦🤦🤦🤦இவங்க பேராசைக்கு பலி இவங்க பையன் வாழ்க்கை தான்🤷🤷🤷🤷….

பரமன்….என்னடா இவன் இப்படி இருக்கான்னு பார்த்தா…இவனின் ரகசியம்🤩🤩🤩🤩🤩…..

லாஸ்டா வந்தாலும் இவன் கேரக்டர் 👏👏👏👏👏….அதிலும் பரமனின் நகையாமே….சோ ஸ்வீட் 🥰🥰🥰🥰…..

கதை ரொம்ப நல்ல இருந்தது ரைட்டர்…..

எனக்கு ஒரே ஒரு டவுட்…..காத்து eb la தானே இருந்தார்…..அப்பறம் ஏன் அவர் வேலை அவர் பெண்களுக்கு ஏன் கிடைக்கல????

அப்படி இருந்து இருந்தா….இவளோ கஷ்டம் இல்லை தானே…இவங்களுக்கு….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇👇

-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87.460/page-4
 

zeenath Sabeeha

New member
Aug 23, 2025
14
5
3
Chennai
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்
#STN116
மேகத்தில் தொலைந்த நிலவு
கொஞ்சம் இலங்கைத் தமிழில் மற்றுமொரு கதை 🥰
மேகலா அரவிந்தன்..
தந்தை அரவிந்தன் தாய் அண்ணன் முரளி இவர்களோடு ஆனந்தமாக வாழ்ந்து வருகிறாள் ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது இவளின் கனவு.. இவளின் கனவில் தந்தைக்கு விருப்பம் இல்லை என்றாலும் மகளின் ஆசைக்காக அவள் தேர்ந்தெடுத்த துறையில் செல்ல அனுமதிக்கிறார் வானில் பறவையாக பறக்கும் ஆசையோடு தன் உயிர் தோழி சுபாவுடன் தன் கனவை நோக்கி செல்கிறாள்.
அங்கு இவளை பார்த்த முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறான்
தரிந்து சேனநாயக்க.. விங்க் கமாண்டர்
ராணுவப் படையினரால் குடும்பமே இன்னல்களை அனுபவித்திருக்க அவர்களைப் பார்த்தாலே ஒவ்வாமை மேகலாவிற்கும் அவள் குடும்பத்திற்கும்.
அந்த ஒவ்வாமையை காதலாக மாற்றுகிறான் தரிந்து பெண் மேல் அவன் கொண்டுள்ள தீரா காதலால். மனதை வென்ற காதலனிடமே பிரிவை கேட்கிறாள் மேகலா குடும்பத்திற்காக..
காதல் கொண்டு தவிக்கும் அவள் மனம் மாறுவதற்காக குடும்பத்தினர் அவளுக்கு சில வருடங்களை கொடுத்திருக்க பல வருடங்கள் கழிந்தாலும் அவள் காதல் மாறாது என்பதை தன் உயிரைக் கொடுத்து நிரூபிக்க முயல்கிறாள் மேகலா.. மகளா அல்லது சிலரால் நேர்ந்த ரணமா என யோசிக்கையில் மகள் மேல் இருந்த பாசமே வெல்ல இவர்கள் காதலும் கை கூடுகிறது..
சிங்கள இனத்தைச் சேர்ந்த தரிந்துவின் மேல் வெறுப்பு கொண்டிருந்த முரளியை அதே இனத்தில் இருந்து வந்த அனுஷ்கா புயலாக அவனை சுற்றி சாய்கிறாள்.. அது எப்படி என்பதும் மேகலா தரிந்து இவர்களின் காதலும் கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good luck 🥰🌹
 
  • Love
Reactions: STN-116

STN-116

Well-known member
May 5, 2026
130
275
63
Sri Lanka 🇱🇰
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்
#STN116
மேகத்தில் தொலைந்த நிலவு
கொஞ்சம் இலங்கைத் தமிழில் மற்றுமொரு கதை 🥰
மேகலா அரவிந்தன்..
தந்தை அரவிந்தன் தாய் அண்ணன் முரளி இவர்களோடு ஆனந்தமாக வாழ்ந்து வருகிறாள் ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது இவளின் கனவு.. இவளின் கனவில் தந்தைக்கு விருப்பம் இல்லை என்றாலும் மகளின் ஆசைக்காக அவள் தேர்ந்தெடுத்த துறையில் செல்ல அனுமதிக்கிறார் வானில் பறவையாக பறக்கும் ஆசையோடு தன் உயிர் தோழி சுபாவுடன் தன் கனவை நோக்கி செல்கிறாள்.
அங்கு இவளை பார்த்த முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறான்
தரிந்து சேனநாயக்க.. விங்க் கமாண்டர்
ராணுவப் படையினரால் குடும்பமே இன்னல்களை அனுபவித்திருக்க அவர்களைப் பார்த்தாலே ஒவ்வாமை மேகலாவிற்கும் அவள் குடும்பத்திற்கும்.
அந்த ஒவ்வாமையை காதலாக மாற்றுகிறான் தரிந்து பெண் மேல் அவன் கொண்டுள்ள தீரா காதலால். மனதை வென்ற காதலனிடமே பிரிவை கேட்கிறாள் மேகலா குடும்பத்திற்காக..
காதல் கொண்டு தவிக்கும் அவள் மனம் மாறுவதற்காக குடும்பத்தினர் அவளுக்கு சில வருடங்களை கொடுத்திருக்க பல வருடங்கள் கழிந்தாலும் அவள் காதல் மாறாது என்பதை தன் உயிரைக் கொடுத்து நிரூபிக்க முயல்கிறாள் மேகலா.. மகளா அல்லது சிலரால் நேர்ந்த ரணமா என யோசிக்கையில் மகள் மேல் இருந்த பாசமே வெல்ல இவர்கள் காதலும் கை கூடுகிறது..
சிங்கள இனத்தைச் சேர்ந்த தரிந்துவின் மேல் வெறுப்பு கொண்டிருந்த முரளியை அதே இனத்தில் இருந்து வந்த அனுஷ்கா புயலாக அவனை சுற்றி சாய்கிறாள்.. அது எப்படி என்பதும் மேகலா தரிந்து இவர்களின் காதலும் கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤
Good luck 🥰🌹
மிக அருமையா படிக்க ஆர்வத்தை தூண்டுற விதத்தில் சொல்லிட்டீங்க... மிக்க நன்றி சிஸ் 😊
 
  • Love
Reactions: zeenath Sabeeha

zeenath Sabeeha

New member
Aug 23, 2025
14
5
3
Chennai
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்
#STN_94
"பாவையின்றி பார்வையில்லை"
ரிஷிவர்மன்.. குயில் ஓசை எஃப் எம் யில் ஆர் ஜே வாக இருக்கிறான். இவன் குரலிலும் இவன் கொடுக்கும் மோட்டிவேஷன் ஸ்பீச்சிலும் மயங்கி பாக்காமலே இவன் மீது காதல் கொள்கிறாள் நிருஷிகா.
தாய் மைதிலியின் மேல் கோபத்தில் இருக்கிறாள். தந்தையின் இறப்பிற்கு பிறகு தாயின் பாசம் அனைத்தும் இவளுக்கே கிடைக்க இவள் பத்தாவது படிக்கும் போது அன்னையின் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை இவளால். அன்னையின் கணவனான தேவராஜன் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் அத்துடன் அன்னையையும் வெறுக்கிறாள். மைதிலிக்கு புவன் புவனா என இரட்டை குழந்தைகளும் பிறக்கிறது அவர்களை நிரு தன் சகோதர சகோதரியாக ஏற்றுக் கொண்டாளா என்பது அவளுக்கே வெளிச்சம். தன் தனிமையான நேரங்களில் காதில் ஒலித்த குரலுக்கு சொந்தமானவனை தேடி செல்கிறாள் நிருஷி ஆனால் அவளை சந்திக்க மறுக்கிறான் ரிஷி. பெரும் போராட்டத்திற்கு பிறகு ரிஷியின் நண்பன் கதிர்மாறனின் துணையுடன் ரிஷியை சந்திப்பவள் அவள் காதலை கூறுகிறாள். பார்வை இல்லாமல் இருக்கும் ரிஷி அதை ஏற்க மறுக்கிறான் ஆனால் பின்னாளில் அவன் மனது மாறுகிறது. ரிஷியின் பார்வை போனதற்கான ஃப்ளாஷ் பேக் மற்றும் மைதிலி தேவராஜன் காதல் பிளாஷ் பேக் அனைத்தும் அருமை.
கதிர்மாறனின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியவில்லை இவன் நண்பன் மேல் வைத்திருந்த பாசம் வேற லெவல் 👏
அஸ்வின் சிறிது நேரமே வந்தாலும் அருமையான கதாபாத்திரம் 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹
 
  • Love
Reactions: STN - 94

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
#மேகத்தில்_தொலைந்த_நிலவு…
#கௌரிஸ்ரிவ்யூ…..

நிலவு மேகத்தில் மறையும் அப்ப அப்ப😒😒😒😒…

மேகம் கோவம் கொண்டு நிலவை மறைக்கல…மோகம்(காதல்) கொண்டே தன்னுள் ஒளிச்சிக்குது🤩🤩🤩🤩….

மேகத்தின் மோகத்தில் தன்னை தொலைத்தாலும் நிலவு தன் குழந்தைகளான விண்மீன்களை காண வெளி வரும்…..

அதற்கு மேகமும் நிலவை விட்டு நிற்கும்….ஆன விலகி போகாது❤❤❤❤…..

அதே போலவே…

சிங்கள வான்படை வீரன் தரிந்துக்கும், தமிழ் பெண் ஏர் ஹோஸ்டெஸ் மேகலாவுக்கும் காதல்…..

மேகலாவும் நிலவை போலவே குடும்பம் பட்ட வலிக்காக காதலை துறக்க…..

தரிந்து…அவள் நிலை உணர்ந்து அவளை விட்டு விலகி நிற்கிறான்….

மேகம் போலவே தக்க சமயத்தில் தன்னுள் எடுத்து கொள்ள…..

இவங்க காதல், ஊடல், கூடல் இது தான் இலங்கை தமிழில் அழகா சொல்லி இருக்காங்க ரைட்டர்👏👏👏👏👏

தரிந்து….இவனிடம் பிடித்ததே…இவனோட கண்ணியம் தான்❤❤❤❤❤….

அடுத்து அவனின் எல்லையில்லா காதல்🥰🥰🥰🥰🥰…..

இவங்க பெற்றோர் கூட அவளோ ஸ்வீட்…..

குடும்பம் தான் என மேகி போகும் போது கூட ஒரு சின்ன முறைப்பு கூட இவனிடம் இல்ல….

அதுக்காக அவன் மூவ் ஆன் பண்ணிடவும் இல்ல….

மேகி….தன் குடும்பம் பட்ட துன்பம் பச்சை ரணமா மனதில் இருந்தாலும் தரிந்துவின் காதலில் உருகுவது❤❤❤❤❤…..

குடும்பத்திற்காக அவனை விட்டு வந்தாலும்….வேற வாழ்க்கையை குடும்பம் திணிக்க நினைக்க…..

அந்த வாழ்வே வேணாம் என அவளின் முடிவு🥺🥺🥺🥺🥺…..

என்னையும் கூட்டி போய் இருக்க வேண்டியது தாணடி என தரித்துவின் வார்த்தைகள்🤧🤧🤧🤧🤧🤧…..

முரளி…. டாக்டர்…மேகியின் அண்ணா…இவனை ஆரம்பத்தில் கொஞ்சம் பிடிக்கல தான்….

அது என்ன யாரோ ஒருத்தி பேச்சை கேட்டு தன் தங்கையின் ஒழுக்கத்தை பேசுவது😬😬😬😬😬…..

ஆன அதே தங்கைக்கு ஒன்றும் என்றதும் அவனின் துடிப்பு நிஜம்❤❤❤❤…..

அரவிந்தன் - மகேஷ்வரி…..நல்ல அப்பா அம்மா…மேகியின் செயலில், தரிந்துவின் வார்த்தையில் அவரோட அத்தனை வருஷ ரணம் மறந்து காதலுக்கு சம்மதம் சொன்னது cute 🤩🤩🤩🤩🤩……

அனுஷ்கா….குட்டி அணுகுண்டு தான் இவ🤣🤣🤣🤣 🤣….ஆன பட்ட முரளியை வாயடைக்க வைக்கும் திறமை இவளிடமே 🤩🤩🤩🤩….

முரளியும் மகிழ்ந்தே ஆயுள் கைதி ஆகிட்டான் ☺☺☺☺☺….

சுபா - சரவணன் ஜோடியும் சூப்பரா இருந்தது🤩🤩🤩🤩….

அதும் சுபா ஓட பேச்சி🤣🤣🤣🤣🤣….

சிவா அகல் கூட சேர்ந்துட்டான் இல்லையா…..

கதை ரொம்ப ரொம்ப எனக்கு பிடிச்சது🤩🤩🤩🤩🤩…..

அதுக்குள்ள முடிஞ்சிருச்சினு ஒரே பீலிங்😒😒😒😒😒…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇👇

0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81.455/
 
  • Love
Reactions: STN-116

STN-116

Well-known member
May 5, 2026
130
275
63
Sri Lanka 🇱🇰
#மேகத்தில்_தொலைந்த_நிலவு…
#கௌரிஸ்ரிவ்யூ…..

நிலவு மேகத்தில் மறையும் அப்ப அப்ப😒😒😒😒…

மேகம் கோவம் கொண்டு நிலவை மறைக்கல…மோகம்(காதல்) கொண்டே தன்னுள் ஒளிச்சிக்குது🤩🤩🤩🤩….

மேகத்தின் மோகத்தில் தன்னை தொலைத்தாலும் நிலவு தன் குழந்தைகளான விண்மீன்களை காண வெளி வரும்…..

அதற்கு மேகமும் நிலவை விட்டு நிற்கும்….ஆன விலகி போகாது❤❤❤❤…..

அதே போலவே…

சிங்கள வான்படை வீரன் தரிந்துக்கும், தமிழ் பெண் ஏர் ஹோஸ்டெஸ் மேகலாவுக்கும் காதல்…..

மேகலாவும் நிலவை போலவே குடும்பம் பட்ட வலிக்காக காதலை துறக்க…..

தரிந்து…அவள் நிலை உணர்ந்து அவளை விட்டு விலகி நிற்கிறான்….

மேகம் போலவே தக்க சமயத்தில் தன்னுள் எடுத்து கொள்ள…..

இவங்க காதல், ஊடல், கூடல் இது தான் இலங்கை தமிழில் அழகா சொல்லி இருக்காங்க ரைட்டர்👏👏👏👏👏

தரிந்து….இவனிடம் பிடித்ததே…இவனோட கண்ணியம் தான்❤❤❤❤❤….

அடுத்து அவனின் எல்லையில்லா காதல்🥰🥰🥰🥰🥰…..

இவங்க பெற்றோர் கூட அவளோ ஸ்வீட்…..

குடும்பம் தான் என மேகி போகும் போது கூட ஒரு சின்ன முறைப்பு கூட இவனிடம் இல்ல….

அதுக்காக அவன் மூவ் ஆன் பண்ணிடவும் இல்ல….

மேகி….தன் குடும்பம் பட்ட துன்பம் பச்சை ரணமா மனதில் இருந்தாலும் தரிந்துவின் காதலில் உருகுவது❤❤❤❤❤…..

குடும்பத்திற்காக அவனை விட்டு வந்தாலும்….வேற வாழ்க்கையை குடும்பம் திணிக்க நினைக்க…..

அந்த வாழ்வே வேணாம் என அவளின் முடிவு🥺🥺🥺🥺🥺…..

என்னையும் கூட்டி போய் இருக்க வேண்டியது தாணடி என தரித்துவின் வார்த்தைகள்🤧🤧🤧🤧🤧🤧…..

முரளி…. டாக்டர்…மேகியின் அண்ணா…இவனை ஆரம்பத்தில் கொஞ்சம் பிடிக்கல தான்….

அது என்ன யாரோ ஒருத்தி பேச்சை கேட்டு தன் தங்கையின் ஒழுக்கத்தை பேசுவது😬😬😬😬😬…..

ஆன அதே தங்கைக்கு ஒன்றும் என்றதும் அவனின் துடிப்பு நிஜம்❤❤❤❤…..

அரவிந்தன் - மகேஷ்வரி…..நல்ல அப்பா அம்மா…மேகியின் செயலில், தரிந்துவின் வார்த்தையில் அவரோட அத்தனை வருஷ ரணம் மறந்து காதலுக்கு சம்மதம் சொன்னது cute 🤩🤩🤩🤩🤩……

அனுஷ்கா….குட்டி அணுகுண்டு தான் இவ🤣🤣🤣🤣 🤣….ஆன பட்ட முரளியை வாயடைக்க வைக்கும் திறமை இவளிடமே 🤩🤩🤩🤩….

முரளியும் மகிழ்ந்தே ஆயுள் கைதி ஆகிட்டான் ☺☺☺☺☺….

சுபா - சரவணன் ஜோடியும் சூப்பரா இருந்தது🤩🤩🤩🤩….

அதும் சுபா ஓட பேச்சி🤣🤣🤣🤣🤣….

சிவா அகல் கூட சேர்ந்துட்டான் இல்லையா…..

கதை ரொம்ப ரொம்ப எனக்கு பிடிச்சது🤩🤩🤩🤩🤩…..

அதுக்குள்ள முடிஞ்சிருச்சினு ஒரே பீலிங்😒😒😒😒😒…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇👇

0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81.455/
அவ்வளவு வடிவா கதையை உள்வாங்கி சொல்லிட்டீங்க... மிக்க நன்றி சிஸ் 😊
 
  • Love
Reactions: Gowri Karthikeyan

ShaSri

Member
Mar 4, 2026
35
23
8
Tamilnadu
#என்னோடுதான்_கண்ணாமூச்சி_விமர்சனம்


யுகபிரணிதாவை மையப்படுத்தின உணர்ப்பூர்வமான கதை ❤


யுகபிரணிதா மதுரையில் தன் தாய்மாமன் சங்கர் வீட்டில் வளர்கிறாள் ஏன்? அவள் பெற்றோர்கள் எங்கே? தன் தாய் பூர்வாவுடனான பிணக்கிற்கு என்ன காரணம்? சரி குடும்பத்தில் தான் ஏதோ பிரச்சினை என்றால் அலுவல் பணிக்காக கோவையில் விடுதியில் தங்குகிறாள். அங்கே அவளின் அறைவாசி தற்கொலை செய்துகொள்கிறாள் 🥺🥺 ஏன்? இப்படி எல்லா கேள்விகளுக்கும் சுவரஸ்சியமாக பதில் கதையில் 😍


யுகபிரணிதா வளர்ந்த குழந்தையாதான் தெரிகிறாள் எனக்கு ❣️❣️ எப்பவும் முதல் குழந்தை இருக்கும் போது இரண்டாவது குழந்தை வந்தா நிச்சயம் ஒரு பாதுகாப்பின்மை அந்த குழந்தைக்கு இருக்கும் அதை போக்க வேண்டியது பெற்றோரின் கடமை அதை இங்க செய்ய தவறிட்டாங்க பூர்வாவும் மணியப்பாவும் 😔😔
சசியிடம் செய்து கொடுத்த சத்தியத்தை மீற முடியாமல் தவிப்பது, நண்பர்களின் பேச்சை கேட்டு எதிர்மறை எண்ணங்கள் வளர்த்து கொண்டது மற்றும் பூவப்பா திரும்பி வருவாங்க என்று எண்களை எண்ணிவிட்டு வாசலை பார்ப்பதுனு அவளின் ஒவ்வொரு உணர்வுகளையும் நீங்க சொன்ன விதம் அருமை 👌👌👌


பூவரசன் பெயர் மட்டுமல்ல மனசும் பூ போன்றது தான் 😍 சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் கதை முழுக்க இந்த பூவின் நறுமணம் நிறைந்து கிடைக்குது ❣️❣️


பூவப்பாக்கு நிகராக மணிப்பாவின் அன்பு அவ்வளவு பரிசுத்தமானதா இருக்கு ❤


எல்லாம் சரி கதைக்கு நாயகன் யாருனு நீங்கள் கேட்பது புரியுது 🤪
நாயகன் பேரு ராகவன் ❤ பிரணிதாவுக்கு சரியான இணை ❣️❣️😍 அவளின் பிடிவாதம் எல்லாம் இவனின் முன் தூசு தான் 😍 அவர்களின் உரிமையான காதலும் ராகவா என்ற அழைப்பும் அருமை 😍😍


ஆகாஷ் ராகவன் இருவரின் உரிமை போராட்டம் நல்லா இருக்கு 🤣🤣


ஐஸ்வர்யா மாதிரி ஆளுங்களுக்கு தமிழ்செல்வன் தக்க தண்டனை வாங்கி தருவாரென்று நம்புகிறேன். தற்கொலை எதற்க்கும் தீர்வில்லை சசி 🤨🤨


தன்னை சுற்றி இத்தனை அன்பான உறவுகளை வைத்துக்கொண்டு நல்லா கண்ணாமூச்சி ஆடுறா இந்த பிரணிதா 😄😄


அழகான கதை ❤ கண்ணாமூச்சி ஆட்டத்தில் (போட்டியில்) வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 

thanga then mozhi

Active member
May 6, 2026
160
131
43
Cheyyar
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: புது மங்கல சௌபாக்கியம்
நாயகன்: நித்திக் சரண்
நாயகி: வெண்ணிலா
நம் நாயகன் சரணின் கீழ் நாயகி வெண்ணிலா வெண்ணிலாவின் வலக்கை இடக்கை நட்புகளான சரண்யா தேவி அபிஷேக் மூவரும் பேங்க்கில் வேலை செய்கின்றனர் ❤❤❤❤
சரணுடன் வெண்ணிலா அதிகமாக பேசி பழகியது இல்லை ஆனால் வச்சிட்டு வாங்காமல் சைட் அடிப்போம் சந்தோஷமா இருப்போம்🤩🤩🤩🤩
சரண் வெண்ணிலாவிடம் ஒரு உதவி கேட்டு அவளை அழைத்து கொண்டு உயிருக்கு போராடும் தனது தாய் யசோதா மற்றும் மாமா அத்தை சந்திரமோகன் லாவண்யா தன் காதலி மாமன் மகள் சரணின் பாப்பூ சாருலதா முன்பு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்கிறான்❣❣❣😡





நம்ம வெண்ணிலா அதிர்ச்சி ஆகனும்னு ஆனா அவ ஆகலை அதுக்கு பதில் சாரு வாட்டர் பால்ஸை ஓபன் பண்ணிக்கிட்டே ஓடி போறா எதுக்கு இந்த சரண் தாலி கட்டுனான் லவ்வாங்கி உட்பட பாப்பூ ஏன் வாட்டர் பால்ஸ் ஓபன் பண்ணா இதை எல்லாம் கதையை படிச்சு தெரிஞ்சுக்குங்க 🥰🥰🥰🥰





வெண்ணி நீ ஒரு பண்ணி(punny) , அழகான முயல் குட்டி போல திருதிரு துறுதுறு 🫂🫂🤩🤩



யசோதா மம்மி நீங்க சாருவை மருமகளா ஏத்துக்கொள்ளாததுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கும்னு எதிர் பார்க்கலை🫂🫂🫂🫂🥺🥺



சொந்தத்தில் காதலித்து சொத்து வெளியே போகாது என்ற எண்ணத்தில் கல்யாணமும் செய்து அதனால் குழந்தை குறையாக பிறந்தால் காதலித்து கைபிடித்து மனைவியை கொடுமை செய்வது எப்படி நியாயம் 🥺🥺🥺அதையே அவரின் பிள்ளையும் செய்வான்னு தாய் அந்த பிள்ளை முன்னாடி பேசலாமா😥😥😥




அபி சரண்யா என்னடா நடக்குது இங்க இங்குண்டு ஒரு தனி லவ் ட்ராக் ஓட்டியிருக்கானுங்க ❣❣❣❣
இந்த சிடுவனுக்குள்ளேயும் இவ்வளவு பெரிய காதல் மன்னன் ஒளிச்சு இருந்துருக்கான்😍😍😍
சாரு உன் மனசை நீ புரிஞ்சு உன் மாமா மேல் நீ வச்சது தகப்பன் போன்ற அன்புனு புரிஞ்சுக்க இந்த பிரிவு உதவியிருக்கு😍😍
தாம்பத்யத்தில் ஆண் என்ன பெண் என்ன குறையாத காதல் இருந்தால் போதும் இருவரும் என்றும் பல்லாண்டு காலம் வாழ்க 💐💐💐💐
நல்ல எதார்த்தமான கலகலப்பான கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 💐 ❤
 
  • Love
Reactions: STN - 50