அத்தியாயம் 8
நிலாயினிக்கு பூ வைத்து முடிக்கவும், "நீங்களும் தென்காசிக்கு ஒருநாள் வாங்க. நல்ல நாள் பாத்துட்டு நானே கூட கால் பண்றேன், மாப்ள வீடு பாக்க வாங்க, அன்னக்கே கூட நம்ம கடையிலக் கல்யாணத்துக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்துடுவோம், ரெண்டு அலைச்சல் வேணாம். அப்றம் கல்யாணம் எங்க செலவு தான், நீங்க ரிசப்ஷன் வேணா வச்சுக்கோங்க. முதல்ல மண்டபம் பார்த்ததும் பத்திரிகை அடிக்கைல யார் பேரெல்லாம் சேக்கணும்னு சொல்லுங்க சேத்தே அடிச்சுடலாம், உங்களுக்குப் பத்திரிக்கை எவ்வளவு தேவைப்படும்னு கலந்துப் பேசிட்டு சொல்லுங்க. முந்தின நாள் நிச்சயம் பண்ணிப் பொண்ண அழைச்சுட்டுப் போய் காலைல முகூர்த்தத்துல கல்யாணம். சரி தானே? நாள் கம்மியா இருக்குல்ல அதான் எல்லாத்தையும் ஒரேயடியா சொல்லிட்டேன்" என தங்கமாடத்தி படபடவென்று அடுக்க, மலைத்துப் பார்த்தனர் நிலாயினி வீட்டினர்.
"என்ன எல்லாரும் அமைதியாவே இருக்கீங்க? உங்க மருமகன் பேசுறப் பேச்சுக்கு நீங்க இப்படி அமைதியா இருந்தா, தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டுப் போயிருவானே?" என்றார் ஆரனின் சித்தி.
"அதென்னவோ உண்மை" என முனங்கினாள் நிலாயினி.
"திடீர்னு வந்து நின்னுட்டு என்னலாமோ பேசுறாங்களேன்னு நினைக்கிறீங்களா? இல்ல அவன் போலீஸ்காரனாச்சேன்னு பயப்படுறீங்களா?" என்றார் இளங்கோவன்,
"அத்தான நாங்க ரெண்டு மாசமா பாக்றோம். அவர் இங்க வந்தப்றம் இந்த ஏரியாவே சைலன்ட் ஆகிடுச்சு. பயம் இல்லாம போய்ட்டு வர முடியுது. அண்ட் எல்லார்ட்டையும் நல்லா பேசுவாங்க. இங்க அவங்களுக்கு நல்ல நேம் இருக்கு. அதனாலயே எங்க அக்காக்கு ஏசிபி சார் டபுள் ஓகே. இன்னைக்கு அதும் இப்ப ஒரு மணிநேரத்துக்கு முன்ன தான் நீங்க வரப்போறதாவே சொன்னாங்க. இங்க அந்த டென்ஷன் தான் எல்லாருக்கும்" என்றாள் சந்திரா.
"அப்ப எல்லாருக்கும் சந்தோஷம் தானே?" என மாடத்தி மறுபடியும் கேட்க,
"நீயே சொல்லும்மா!" என வினோதினியிடம் தீக்ஷி சொல்ல,
"முதல்லயே சொல்லாத பதட்டம் தானுங்க. இவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி நேத்து தான் டிஸ்ஜார்ஜ் பண்ணிக் கூட்டிட்டு வந்தேன். இன்னைக்கு காலைலயே இப்படின்னதும் ஒன்னும் ஓடல எங்களுக்கு. ரொம்ப ரொம்ப சந்தோஷங்க" என்றார் வினோ பதட்டமாகவே.
"அச்சோ அப்படியா? அவன் உடம்பு சரியில்லன்னு மட்டுந்தான் சொன்னான். அதான் தலைல பேண்டேஜ் போட்ருக்கீங்களா? இப்படி சூழ்நிலைன்னு தெரியாது, அவனும் சொல்லல. பெருசா எதும் இல்ல தானே? இன்னும் வலி எங்கையும் இருக்குதா? தலைலனா ரொம்ப கவனம் எல்லாம் செக் பண்ணிட்டீங்க தானே?" என வந்த எல்லாருமே மாற்றி மாற்றிக் கேட்க,
செல்வகுமார், "அதெல்லாம் ஒன்னுமில்ல, கார் கண்ணாடில மண்டை முட்டிருச்சு, அதனால தலைல தான் லேசா அடி. ஸ்கேன்லாம் எடுத்து பாத்துட்டோம் எல்லாம் நார்மலா இருக்குன்னு சொல்லிட்டாங்க. இன்னையோட பத்து நாளாகிடுச்சு"
"கல்யாண வேலைலாம் பாக்க முடியுமா? இல்ல இன்னொரு மாசம் போட்டுமா? இதோட எப்படி அலைவீங்க?" என்றார் இளங்கோவன். உண்மையில் பார்ப்பதற்கு எங்கும் கட்டோட, நடக்க முடியாமலோ எதுவும் இல்லை. தலையில் அதுவும் ஒரு பக்கத்தில் தையல் போட்டிருக்கும் இடம் மட்டுமே முடியில்லாமல் வெறிச்சென்று தெரிந்தது, அதனாலேயே ஆரன் குடும்பத்தினரால் கண்டுகொள்ள முடியவில்லை.
"எங்க சைட் பெருசா சொந்தங்கள் யாரும் இல்ல அங்கிள். எட்டு வருஷம் முன்ன வந்த சின்ன சண்டைல எல்லாம் கோச்சுட்டுப் போய்ட்டாங்க. நாங்களும் அப்படியே விட்டுட்டோம். அதனால பெருசா யாரையும் இன்வைட் பண்ற வேலைலாம் எங்க பக்கம் கிடையாது" என்றாள் நிலாயினி. அவ்வளவு நேரத்திற்கு பிறகு அப்போது தான் பேசியிருந்தாள்.
"பரவால்ல லஷ்மி. நீ வா நமக்கு அங்க ஆளுங்க அதிகம். நாங்க பெருசா தான் பண்ணனும், ஒரே மகன் கல்யாணம், எங்க வளசலும் பெருசு, ஒருத்தர விட்டு ஒருத்தர கூப்பிட்டுன்னு முடியாது, எங்களுக்கு வேலை ஜாஸ்தி தான் இருக்கும்மா. நீங்க உங்களுக்கு அலைய முடியுமான்னு பாருங்க, இல்லனா அதையும் சொல்லுங்க நாங்களே சேர்த்து அழைப்பு வச்சுடுறோம்" என்றனர் ஆரனின் பெற்றவர்கள்.
"கண்டிப்பா சொல்றோம்மா. நீங்க கேட்டதே பெரிய விஷயமா தான் இருக்கு எங்களுக்கு" என்றார் வினோதினி.
"அப்ப வரட்டுமா? போய்ட்டு கால் பண்றேன் நான்" என விடைபெற்றுக் கிளம்பினர்.
அவர்கள் அந்தப்பக்கம் கிளம்பியதுமே, "என்ட்ட சொல்லணும்னு கூட தோணலையாடி உங்களுக்கு? அப்படியா நா ஒரே நாள்ல வேண்டாதவளாகிட்டேன்?" என ஆரம்பித்தார் வினோதினி.
"நீ மட்டும் சொல்லிட்டா இவர இங்க கூட்டிட்டு வந்த? அப்ப எங்கள நீயும் வேண்டாம்னு தான் நினச்சியா?" என்றாள் நிலாயினி.
"நானு உங்கூட வந்துடுறேன். தனியா விட்டுப் போயிடாதன்னு கெஞ்சுறவர என்ன செய்ய சொல்ற? இந்த மனுஷன் இங்க இருந்த வர, எங்கிட்ட எதுக்காகவும் கெஞ்சி நின்னதில்ல. எதுக்காகவுமே! நீ இல்லனா என்னால செய்ய முடியாதா என்னன்னு அகம்பாவமா நடந்துப்பார். எல்லாம் அவர் வச்சதுதான் இந்த வீட்ல. அப்படிபட்டவர் இன்னைக்கு என் கையப் பிடிச்சுட்டுக் கெஞ்சுறாரு. அவர மாதிரி உதறிட்டு வர தெரியல எனக்கு. இவர காரணம் காட்டி தான உன் கல்யாணம் தள்ளிட்டுப் போகுது, அடுத்து வேற ரெண்டு பொண்ணுங்க இருக்காங்களேன் பயம் எனக்கு. நீங்க உங்கள பாத்துப்பீங்கனாலும், அப்பான்னு அவர் இருந்தும், அவர் இல்லாம ஏன் உங்களுக்கு நல்லது பண்ணனும்னு தான் வரட்டும்னு விட்டேன். அவர்கூட சோடிபோட்டுட்டுப் போற ஆசைல எதையும் செய்யல நான். உங்க மூணுப் பேருக்காக மட்டுந்தான் கூட்டிட்டு வந்தேன்" என அவர் கண்ணீரைத் துடைக்க,
"போம்மா நீயும் உன் விளக்கமும்" என சென்றுவிட்டாள் நிலாயினி.
"அடுத்த வாரம் எக்ஸாம் இருக்கு எனக்கு. கல்யாணத்துக்கு எதுவும் ப்ளான் பண்றதா இருந்தா, சண்டே பண்ணக் கூடாது. லஷ்மி மாமியார் பேசினாங்கனா சொல்லும்மா" என சொல்லிச் சென்றாள் சந்திரா.
கண் முன், தான் இழந்ததைக் கண்டு மறுகி நின்றார் செல்வகுமார். என்ன செய்தும் செய்ததை சரிசெய்து அவரை உத்தமனாக மீட்க முடியாதே! ஆணவத்தையும் ஆசையையும் கட்டுப்படுத்தாமல் விட்டதன் விளைவு இன்று உயிருக்குப் பயந்து ஓடிவரவேண்டிய நிலையில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. எதற்காக அந்த விபத்து என்று அவருக்கு தெரிந்திருந்தும் வாயைத் திறக்கவில்லை அவர். ஒரு ஏசிபியுடன் கல்யாணம் என்பது அவர் மகள் லஷ்மி நிலாயினிக்கும் பாதுகாப்பு அவர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு, திருமணம் நல்லபடியாக நடந்துவிட வேண்டும் என தான் வேண்டிக்கொண்டே இருந்தார். தன் தவறு எவ்வகையிலும் பெண் பிள்ளைகளைப் பாதித்துவிடக் கூடாது, இப்போதும் அதை தான் எண்ணி எண்ணி வருந்தினார்.
உள்ளே வந்த நிலாயினி, ஆரன் கேட்டுகிட்டது போல, ஒரு செல்ஃபியை எடுத்து அவனுக்கு அனுப்பி வைக்க, ஒரு மணி நேரம் கழித்து அதைப் பார்த்தவன், முத்த ஸ்மைலியை அனுப்பிவிட, பதிலுக்கு வக்கனம் காட்டும் ஸ்மைலியை அனுப்பி வைத்தாள் நிலா.
அடுத்து வந்த நாட்கள், நிலாயினி வங்கிக்கு செல்ல மட்டுமே அறையிலிருந்து கிளம்பி வெளியே வருவாள், எதையாவது எளிமையாக செய்து உண்டுவிட்டு அதையே மதியத்துக்கும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். இரவு எட்டு மணி வரை அங்கேயே இருந்துவிட்டு வருபவள், அறைக்குள் முடங்கிவிடுவாள்.
"சோறு தான் பொங்கிட்டேன்ல அத எடுத்துட்டு போயேன்டி. ஏன் இப்படி பண்ற லஷ்மி?" என வினோதினி பேசினாலும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவாள்.
சந்திரா முழுமூச்சாக படிப்பில் இறங்கியிருக்க, அவளுக்கு உதவி செய்யவும் தவறவில்லை நிலா. இரவுகளில் பெண்கள் மூவரும் ஒரே அறையில் தான் முடங்கிக் கொள்வர். அங்கு சந்திராவோடு அமர்ந்து அவள் படிக்க உதவுவதை வாடிக்கையாகக் கொண்டாள் நிலாயினி.
"நைட்டெல்லாம் ஒழுங்கா படிச்சியா? மதியம் வந்து பரீட்சை வைப்பேன், ஒழுங்கா பாஸாகணும் சொல்லிட்டேன்" என காலையில் வம்பிழுக்கும் தீக்ஷி தலையில் கொட்டிவிட்டு தான் கோச்சிங் வகுப்பு செல்வாள் சந்திரா.
முதலில் சந்திரா, தீக்ஷி இருவரும் வினோதினி சமைத்துத் தருவதை எடுத்துக் கொள்வர். நிலாவையும் அப்படித்தான் எடுத்துச் செல்கிறாள் என நினைத்திருந்தனர்.
"நிலாக்கு நீயாவாது காலைல எழுந்து செஞ்சு குடுடி, இட்லியையும் தோசையையும், ரெண்டு நாளா மதியத்துக்கும் கொண்டுப் போறா" என வினோதினி சொன்ன பிறகே, நிலா மொத்தமாக விலகி நிற்பது இளையவர்களுக்குப் புரிந்தது. அதன்பின், நிலாவின் உணவு தீக்ஷி கையாலானது.
"ஒரு செஃப்ப வீட்ல வச்சுட்டு நீ இப்படி ல்ஞ்சுக்குத் தோசைய கொண்டு சாப்பிடுறது என்னைய அவமான படுத்துறதுக்கு சமம்னு தோணலையாக்கா?" என்றாள் வினோதினி சொன்ன அன்று இரவு.
"உன் சாப்பாட சாப்புடறதுக்கு அந்த காஞ்ச தோசையே மேல்னு அக்காக்கு தெரியாதுன்னா நினைச்ச?"
"படிக்கும் போது இப்படி கதை பேச வராத. மூடிட்டு படி"
"உனக்கு தான் படிப்பு வரல படிக்குறவளனாலும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தெரியல? பேசிக் சென்ஸில்ல? நீ மூடிட்டு போடி" என சந்திரா பேச, சண்டை பெருசாக போக,
"நீ போய் மூணு பேருக்கும் எதாவது செஞ்சு எடுத்துட்டு வா. கிளம்பு" என நிலாயினியே அனுப்பி வைத்துவிட, அப்படித்தான் நிலாயினி, சந்திரா, தீக்ஷி மூவரின் உணவும் தீக்ஷி கையால் என்றானது. நிலாயினியை தனித்து விடாமல் இளையவர்கள் இருவரும் கூடவே சேர்ந்து நின்றனர். அதில் வினோதினிக்கு திருப்தியே, அதனால் அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி கடக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆரனும், மதுரனும் முகநூலில் பெண்கள் ஐடியில் சிக்கிய நான்கு பேரை, அவர்கள் ஐடி செயல்பாட்டில் இருக்கும் நேரத்தில் இடத்தைக் கண்டுபிடித்து அங்குள்ள போலீசை வைத்தே மடக்கிப் பிடித்தனர். நால்வருமே வெவ்வேறு இடத்தில் இருந்தனர், கடலூரில் ஒருவன், சென்னையில் ஒருவன், மதுரையில் ஒருவன், விழுப்புரத்தில் ஒருவன் என நால்வரையும் பிடித்து திருநெல்வேலி கொண்டு வர வைத்தனர்.
வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஆபாச வீடியோக்களை அனுப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு உயிர்பயம் என்றால் என்ன என உணர்ந்த தருணங்கள் அவை.
"உங்களால எட்டுப் பொண்ணுங்க சூசைட் பண்ணிகிட்டாங்க. எதுக்குடா அனுப்புனீங்க? அறிவில்ல? சோறு தான திங்கிறீங்க? அப்படி என்ன அத்துக்கிட்டுப் போறளவுக்கு?அசிங்கமா பேச அவங்களையும் கூப்பிடுவீங்ளோ? இப்ப கொலை கேஸ்ல உள்ள போ போறீங்களே, உள்ள போய் பேச ஆள் வேணும்ல என்ன செய்வீங்க? உங்களுக்குள்ளயே மாத்தி மாத்திப் பேசிக்கோங்க சரியா" என லத்தியால் வெளுத்துவிட்டான் ஆரன்.
"கொலையா? இல்ல சார் இல்ல சார் இனி அனுப்ப மாட்டேன் சார். தெரியாம பண்ணிட்டேன் சார்" என கதறியவர்களைக் கண்டு கொள்ளவில்லை அவன்.
"வெளிய விட்டாதானடா இன்னொருக்கா வேற அனுப்புவீங்க? சாணிய திங்க சொன்னா திண்பியா நீ? அறுவறுப்பா மூஞ்ச சுழிக்க மாட்ட? அந்தப் பிள்ளைங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் நீ அனுப்புற வீடியோ எல்லாம். கருமத்த நீ பாத்து சாவு, எதுக்கு அடுத்தவங்களுக்கு அனுப்பி சாகடிக்கிற? காயத்ரி, ப்ரியா, சூர்யா, செண்பகா, ரூபிணி, இந்த அஞ்சு பேரும் இப்ப உயிரோட இல்ல. பொம்பளைங்க நேம்ல ஐடி க்ரியேட் பண்ணி ஆறுதல் நொட்டுவீங்களோ நீங்க? இன்னும் யாருக்கெல்லாம் அனுப்பி எங்கெல்லாம் உங்களால பொண்ணுங்க பாதிக்கப் பட்ருக்காங்கன்னு செக் பண்ணி எடுத்துட்டு வந்து மறுபடியும் வெளுக்குறேன்டா உங்கள" என வெளியே வந்தான்.
அவர்களின் நான்கு மொபைல்களும் கண்காணிப்பில் இருந்தது, மதுரனும் சைபர் செல்லை சார்ந்த இருவரும் அவர்கள் மொபைலில் இருந்து தகவல்களை சேகரிப்பதில் இருந்தனர்.
"சார் பூராம் பிட் படமா வச்சுருக்காய்ங்க. வேற ஒன்னும் தேரல. வேலைப் பொழப்பு ஒன்னும் கிடையாது போல. நாலு அஞ்சுன்னு ஃபேஸ்புக் ஐடி வச்சுருக்கானுங்க, அதுல ஒன்னு மட்டுந்தான் அவனவன் பேர்ல இருக்கு. மத்த எல்லாம் பொம்பள பிள்ளைங்க பேர்ல இருக்கு. ஆம்பளையும் ஆம்பளையுமே பொம்பளைங்க ஐடில இருந்து ஆம்பளன்னு தெரியாம பேசிருக்காய்ங்க. ச்சை கன்றாவி" என மதுரன் முகத்தைச் சுளிக்க, சிரித்தான் ஆரன் விஷ்வேஷ்வரன்.
"இவனுங்க லோக்கல் இல்லன்னு தெரியவுமே இவனுங்கட்ட ஒன்னும் தேறாதுன்னு தெரியும் மதுரா. இருந்தாலும் பயம் காட்டினாலாவது திருந்துவானுங்களான்னு பாக்க தான் கொண்டு வர வச்சது. சுய ஒழுக்கம் வேணும். கைல இருக்க மொபைல்ல நம்ம செய்றது எவனுக்குத் தெரியபோவுதுன்னு தான இஷ்டம்போல செய்றானுங்க. ஆனா உண்மை? நாம பாக்றதெல்லாம் ஏதோ ஒரு இடத்துல ரெக்கார்ட் ஆகிட்ருக்கு, வாட்ச் பண்ண ஆளு இருக்குன்னு தெரிஞ்சா பயம் வரும்ல? நீ என்னத்தையும் பார்த்து நாசமா போ, அத அடுத்த பொண்ணுட்ட தீர்த்துக்க ட்ரை பண்ணாத, அது அசிங்கம்னு புரியணும்ல" என்க,
"இவனுங்களாம் திருந்த மாட்டானுங்க சார்"
"பத்து நாள் உள்ள வச்சே அனுப்புவோம். விஷயத்த ப்ரஸுக்கு சொல்லிடு, நல்லா வைரல் ஆகணும்" என்றுவிட்டான்.
இதற்குள் தங்கமாடத்தியிடமிருந்து பதினைந்து அழைப்புகள் வந்துவிட்டிருந்தது. பெண் பார்த்துவிட்டு சென்று ஒரு வாரம் ஓடியிருந்தது.
"என்னம்மா?" என வெளியே வந்து, எதிர்க்கடை பையனிடம் கைக்காட்ட, அவன் டீயுடன் ஓடிவந்துவிட்டான்.
"ஃபோன் பண்ணா எடுக்க இவ்ளோ நேரமா?"
"நா சும்மாவா உட்கார்ந்துருக்கேன்?"
"நாங்க மட்டும் உனக்கு கால் பண்ணிட்டே இருக்க சும்மாவா உட்கார்ந்துருக்கோம்?" என்றார் அவரும்.
"சரி சொல்லு"
"சொல்லவா? உனக்கு கல்யாணம் பண்ணணுமா வேணாமா?"
"பண்ணி வைப்பியா மாட்டியா நீ?"
"இந்தாங்க நீங்களே பேசுங்க இவன்ட்ட. வாய மட்டும் எங்கிருந்து வாடகைக்கு பிடிச்சுட்டு வந்தாம்னே தெரியல, மனுஷி பேசுவாளா இவன்ட்ட" என திட்டியபடி குடுப்பது கேட்க, குபீர் சிரிப்பு தான் ஆரனுக்கு.
"விஷ்வா! பத்திரிகை வந்துருச்சு. கோவில்ல வச்சு கும்பிட நீ வரணும். பொங்கல் வச்சு உன் பேருக்கும் பொண்ணு பேருக்கும் அர்ச்சனை பண்ணனும்" என இளங்கோவன் சொல்ல,
"சரி நாளைக்கு காலைல வந்துடுறேன்" என உடனே சொல்லிவிட்டான், அடுத்து அவரே செல்வகுமாருக்கு அழைத்து நிலாயினி வீட்டினரையும் அழைத்துவிட்டு வைத்தார்.
செல்வகுமார் இன்னும் வேலைக்கு செல்லவில்லை, ஒரு மாத மருத்துவ விடுப்பில் இருந்தார்.
"நீயும் நானும் போய்ட்டு வருவோமா வினோ?" என மெதுவாக கேட்க,
"ம்ம் பொண்ணு கல்யாணம் அதுக்காக போணும்ல. ஆனா லஷ்மி என்ன சொல்லுவான்னு தெரியாது கேட்டுப் பாப்போம்" என்றிருந்தார்.
அன்று தான் சந்திராவிற்கும் பரீட்சை. அவள் ஒருத்தி எழுத மூவரும் கிளம்பி சென்றிருந்தனர். அவளை தேர்வு மையத்திற்குள் அனுப்பிவிட்டு, இவர்கள் இருவரும் அருகிலிருந்த தியேட்டரில் சென்று அமர்ந்தனர்.
மூன்று மணிநேரத்தைப் போக்கிவிட்டு வர, சந்திராவும் பரீட்சையை முடித்து வெளியே வந்திருந்தாள்.
"பல்லெல்லாம் தெரியிறத பார்த்தா பாஸ் பண்ணிடுவியோ?" என தீக்ஷி கேட்க,
"ஹன்ட்ரட் பெர்சன்ட். எக்ஸாம் பேப்பர் நல்ல ஈசி தான்" என்க,
நிலாயினியும் கேள்வித்தாளை வாங்கிப் பார்த்தாள். க்ரூப் டூ வினாத்தாள் அது. அவளுக்கு அதில் அப்டியூட்டும், கரெண்ட் அஃபையர்ஸும் மட்டுமே தெரியும் என்பதால் அதுப் சம்பந்தமான கேள்விகளைத் தனித்து பார்த்தாள். சந்திராவிடம், 'இதுக்கு என்ன ஆன்சர் பண்ண? அதுக்கு என்ன பண்ண?' என கேட்டு, சரியும் பார்த்துக்கொண்டாள், அவள் கூறிய பதிலில் நிலாயினிக்கும் திருப்தியே, தேர்ச்சிப் பெற்றுவிடுவாள் என்ற நம்பிக்கை வர, "சூப்பர்டி!" என அணைத்துக்கொண்டாள்.
"அப்ப இன்னைக்கு நைட் டின்னர் என் ட்ரீட். ஸ்பெஷலா செய்றோம்" என தீக்ஷி குதூகலிக்க,
"லஷ்மிக்கு கல்யாணம், இனி அந்த அலைச்சல் இருக்கும் நமக்கு, போற இடத்துலலாம் வயித்த புடிச்சுட்டு பாத்ரூம்ல போய் உட்கார முடியாது. இனிதான் நாம கவனமா இருக்கணும் லஷ்மி" என சந்திரா சொல்ல, அவள் முதுகில் அடித்தாள் தீக்ஷி.
"அதெல்லாம் தீக்ஷி சூப்பரா சமைச்சு தர்றா"
"அப்படி சொல்லுக்கா. இன்னைக்கு நாம கேன்டில் லைட் டின்னர் சாப்பிடுவோம். அக்காவோட பேச்சிலர் பார்ட்டி, உன்னோட எக்ஸாம் பார்ட்டி, ரெண்டுக்கும் சேர்த்து என் ட்ரீட்" என்றவள் கையோடு, பொருட்கள் வாங்க நாலைந்து கடைகளுக்கு இழுத்துச் சென்றாள். அதிலேயே மாலை வரை சென்றுவிட்டது அவர்களுக்கு.
"நைட்டு இவ செஞ்சு தரப்போற ஊத்தாப்பத்துக்கு மதியத்துல இருந்து விரதமிருக்க வச்சுட்டா" என புலம்பியபடி தான் வீடு வந்திறங்கினர்.
"நீங்க ரெண்டு பேரும் போய் ரெடியாகுங்க, நா முடிச்சு ப்ளேட்டிங் பண்ணிட்டுக் கூப்பிடுறேன்" என தீக்ஷி சமையலறை செல்ல,
"கிச்சன் கதறப்போகுது" என்ற சந்திரா, "லஷ்மி நாம மொட்டமாடில டைனிங் செட் பண்ணுவோமா? அவளோட டின்னருக்கு நம்ம காம்பிளிமெண்ட்" என்க, தலையசைத்தாள் நிலாயினி.
இருவரும் மாடியேறி, பிறந்தநாட்களுக்காக வாங்கிய, பலூன் கம்பி செட்டப்புகளை பலூன் வைக்காமல் சுற்றி நிற்க வைத்து ஸ்க்ரு செய்தனர், அதில் ஸ்கிரின் துணியை கூடாரம் போல செட் செய்தனர். நடுவில் குட்டி மேசை போட்டு, சுற்றி தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல, குட்டிக் குட்டியாக மூன்று பாய் போட்டனர். அங்கங்கு வாசனை மெழுகுவர்த்தியை வைத்தனர். எளிமையாக அழகாகவே இருந்தது.
"சாப்பிட உட்காரும் போது, கேன்டில் ஏத்தி வச்சுப்போம்" என முடித்து நிமிர, எதிரில் மாடிவீட்டின் வாசலில் குறுகுறுவென இவர்கள் இருவரையும் பார்த்தபடி, ஆரனும் மதுரனும் நின்றனர்.
நிலாயினிக்கு பூ வைத்து முடிக்கவும், "நீங்களும் தென்காசிக்கு ஒருநாள் வாங்க. நல்ல நாள் பாத்துட்டு நானே கூட கால் பண்றேன், மாப்ள வீடு பாக்க வாங்க, அன்னக்கே கூட நம்ம கடையிலக் கல்யாணத்துக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்துடுவோம், ரெண்டு அலைச்சல் வேணாம். அப்றம் கல்யாணம் எங்க செலவு தான், நீங்க ரிசப்ஷன் வேணா வச்சுக்கோங்க. முதல்ல மண்டபம் பார்த்ததும் பத்திரிகை அடிக்கைல யார் பேரெல்லாம் சேக்கணும்னு சொல்லுங்க சேத்தே அடிச்சுடலாம், உங்களுக்குப் பத்திரிக்கை எவ்வளவு தேவைப்படும்னு கலந்துப் பேசிட்டு சொல்லுங்க. முந்தின நாள் நிச்சயம் பண்ணிப் பொண்ண அழைச்சுட்டுப் போய் காலைல முகூர்த்தத்துல கல்யாணம். சரி தானே? நாள் கம்மியா இருக்குல்ல அதான் எல்லாத்தையும் ஒரேயடியா சொல்லிட்டேன்" என தங்கமாடத்தி படபடவென்று அடுக்க, மலைத்துப் பார்த்தனர் நிலாயினி வீட்டினர்.
"என்ன எல்லாரும் அமைதியாவே இருக்கீங்க? உங்க மருமகன் பேசுறப் பேச்சுக்கு நீங்க இப்படி அமைதியா இருந்தா, தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டுப் போயிருவானே?" என்றார் ஆரனின் சித்தி.
"அதென்னவோ உண்மை" என முனங்கினாள் நிலாயினி.
"திடீர்னு வந்து நின்னுட்டு என்னலாமோ பேசுறாங்களேன்னு நினைக்கிறீங்களா? இல்ல அவன் போலீஸ்காரனாச்சேன்னு பயப்படுறீங்களா?" என்றார் இளங்கோவன்,
"அத்தான நாங்க ரெண்டு மாசமா பாக்றோம். அவர் இங்க வந்தப்றம் இந்த ஏரியாவே சைலன்ட் ஆகிடுச்சு. பயம் இல்லாம போய்ட்டு வர முடியுது. அண்ட் எல்லார்ட்டையும் நல்லா பேசுவாங்க. இங்க அவங்களுக்கு நல்ல நேம் இருக்கு. அதனாலயே எங்க அக்காக்கு ஏசிபி சார் டபுள் ஓகே. இன்னைக்கு அதும் இப்ப ஒரு மணிநேரத்துக்கு முன்ன தான் நீங்க வரப்போறதாவே சொன்னாங்க. இங்க அந்த டென்ஷன் தான் எல்லாருக்கும்" என்றாள் சந்திரா.
"அப்ப எல்லாருக்கும் சந்தோஷம் தானே?" என மாடத்தி மறுபடியும் கேட்க,
"நீயே சொல்லும்மா!" என வினோதினியிடம் தீக்ஷி சொல்ல,
"முதல்லயே சொல்லாத பதட்டம் தானுங்க. இவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி நேத்து தான் டிஸ்ஜார்ஜ் பண்ணிக் கூட்டிட்டு வந்தேன். இன்னைக்கு காலைலயே இப்படின்னதும் ஒன்னும் ஓடல எங்களுக்கு. ரொம்ப ரொம்ப சந்தோஷங்க" என்றார் வினோ பதட்டமாகவே.
"அச்சோ அப்படியா? அவன் உடம்பு சரியில்லன்னு மட்டுந்தான் சொன்னான். அதான் தலைல பேண்டேஜ் போட்ருக்கீங்களா? இப்படி சூழ்நிலைன்னு தெரியாது, அவனும் சொல்லல. பெருசா எதும் இல்ல தானே? இன்னும் வலி எங்கையும் இருக்குதா? தலைலனா ரொம்ப கவனம் எல்லாம் செக் பண்ணிட்டீங்க தானே?" என வந்த எல்லாருமே மாற்றி மாற்றிக் கேட்க,
செல்வகுமார், "அதெல்லாம் ஒன்னுமில்ல, கார் கண்ணாடில மண்டை முட்டிருச்சு, அதனால தலைல தான் லேசா அடி. ஸ்கேன்லாம் எடுத்து பாத்துட்டோம் எல்லாம் நார்மலா இருக்குன்னு சொல்லிட்டாங்க. இன்னையோட பத்து நாளாகிடுச்சு"
"கல்யாண வேலைலாம் பாக்க முடியுமா? இல்ல இன்னொரு மாசம் போட்டுமா? இதோட எப்படி அலைவீங்க?" என்றார் இளங்கோவன். உண்மையில் பார்ப்பதற்கு எங்கும் கட்டோட, நடக்க முடியாமலோ எதுவும் இல்லை. தலையில் அதுவும் ஒரு பக்கத்தில் தையல் போட்டிருக்கும் இடம் மட்டுமே முடியில்லாமல் வெறிச்சென்று தெரிந்தது, அதனாலேயே ஆரன் குடும்பத்தினரால் கண்டுகொள்ள முடியவில்லை.
"எங்க சைட் பெருசா சொந்தங்கள் யாரும் இல்ல அங்கிள். எட்டு வருஷம் முன்ன வந்த சின்ன சண்டைல எல்லாம் கோச்சுட்டுப் போய்ட்டாங்க. நாங்களும் அப்படியே விட்டுட்டோம். அதனால பெருசா யாரையும் இன்வைட் பண்ற வேலைலாம் எங்க பக்கம் கிடையாது" என்றாள் நிலாயினி. அவ்வளவு நேரத்திற்கு பிறகு அப்போது தான் பேசியிருந்தாள்.
"பரவால்ல லஷ்மி. நீ வா நமக்கு அங்க ஆளுங்க அதிகம். நாங்க பெருசா தான் பண்ணனும், ஒரே மகன் கல்யாணம், எங்க வளசலும் பெருசு, ஒருத்தர விட்டு ஒருத்தர கூப்பிட்டுன்னு முடியாது, எங்களுக்கு வேலை ஜாஸ்தி தான் இருக்கும்மா. நீங்க உங்களுக்கு அலைய முடியுமான்னு பாருங்க, இல்லனா அதையும் சொல்லுங்க நாங்களே சேர்த்து அழைப்பு வச்சுடுறோம்" என்றனர் ஆரனின் பெற்றவர்கள்.
"கண்டிப்பா சொல்றோம்மா. நீங்க கேட்டதே பெரிய விஷயமா தான் இருக்கு எங்களுக்கு" என்றார் வினோதினி.
"அப்ப வரட்டுமா? போய்ட்டு கால் பண்றேன் நான்" என விடைபெற்றுக் கிளம்பினர்.
அவர்கள் அந்தப்பக்கம் கிளம்பியதுமே, "என்ட்ட சொல்லணும்னு கூட தோணலையாடி உங்களுக்கு? அப்படியா நா ஒரே நாள்ல வேண்டாதவளாகிட்டேன்?" என ஆரம்பித்தார் வினோதினி.
"நீ மட்டும் சொல்லிட்டா இவர இங்க கூட்டிட்டு வந்த? அப்ப எங்கள நீயும் வேண்டாம்னு தான் நினச்சியா?" என்றாள் நிலாயினி.
"நானு உங்கூட வந்துடுறேன். தனியா விட்டுப் போயிடாதன்னு கெஞ்சுறவர என்ன செய்ய சொல்ற? இந்த மனுஷன் இங்க இருந்த வர, எங்கிட்ட எதுக்காகவும் கெஞ்சி நின்னதில்ல. எதுக்காகவுமே! நீ இல்லனா என்னால செய்ய முடியாதா என்னன்னு அகம்பாவமா நடந்துப்பார். எல்லாம் அவர் வச்சதுதான் இந்த வீட்ல. அப்படிபட்டவர் இன்னைக்கு என் கையப் பிடிச்சுட்டுக் கெஞ்சுறாரு. அவர மாதிரி உதறிட்டு வர தெரியல எனக்கு. இவர காரணம் காட்டி தான உன் கல்யாணம் தள்ளிட்டுப் போகுது, அடுத்து வேற ரெண்டு பொண்ணுங்க இருக்காங்களேன் பயம் எனக்கு. நீங்க உங்கள பாத்துப்பீங்கனாலும், அப்பான்னு அவர் இருந்தும், அவர் இல்லாம ஏன் உங்களுக்கு நல்லது பண்ணனும்னு தான் வரட்டும்னு விட்டேன். அவர்கூட சோடிபோட்டுட்டுப் போற ஆசைல எதையும் செய்யல நான். உங்க மூணுப் பேருக்காக மட்டுந்தான் கூட்டிட்டு வந்தேன்" என அவர் கண்ணீரைத் துடைக்க,
"போம்மா நீயும் உன் விளக்கமும்" என சென்றுவிட்டாள் நிலாயினி.
"அடுத்த வாரம் எக்ஸாம் இருக்கு எனக்கு. கல்யாணத்துக்கு எதுவும் ப்ளான் பண்றதா இருந்தா, சண்டே பண்ணக் கூடாது. லஷ்மி மாமியார் பேசினாங்கனா சொல்லும்மா" என சொல்லிச் சென்றாள் சந்திரா.
கண் முன், தான் இழந்ததைக் கண்டு மறுகி நின்றார் செல்வகுமார். என்ன செய்தும் செய்ததை சரிசெய்து அவரை உத்தமனாக மீட்க முடியாதே! ஆணவத்தையும் ஆசையையும் கட்டுப்படுத்தாமல் விட்டதன் விளைவு இன்று உயிருக்குப் பயந்து ஓடிவரவேண்டிய நிலையில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. எதற்காக அந்த விபத்து என்று அவருக்கு தெரிந்திருந்தும் வாயைத் திறக்கவில்லை அவர். ஒரு ஏசிபியுடன் கல்யாணம் என்பது அவர் மகள் லஷ்மி நிலாயினிக்கும் பாதுகாப்பு அவர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு, திருமணம் நல்லபடியாக நடந்துவிட வேண்டும் என தான் வேண்டிக்கொண்டே இருந்தார். தன் தவறு எவ்வகையிலும் பெண் பிள்ளைகளைப் பாதித்துவிடக் கூடாது, இப்போதும் அதை தான் எண்ணி எண்ணி வருந்தினார்.
உள்ளே வந்த நிலாயினி, ஆரன் கேட்டுகிட்டது போல, ஒரு செல்ஃபியை எடுத்து அவனுக்கு அனுப்பி வைக்க, ஒரு மணி நேரம் கழித்து அதைப் பார்த்தவன், முத்த ஸ்மைலியை அனுப்பிவிட, பதிலுக்கு வக்கனம் காட்டும் ஸ்மைலியை அனுப்பி வைத்தாள் நிலா.
அடுத்து வந்த நாட்கள், நிலாயினி வங்கிக்கு செல்ல மட்டுமே அறையிலிருந்து கிளம்பி வெளியே வருவாள், எதையாவது எளிமையாக செய்து உண்டுவிட்டு அதையே மதியத்துக்கும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். இரவு எட்டு மணி வரை அங்கேயே இருந்துவிட்டு வருபவள், அறைக்குள் முடங்கிவிடுவாள்.
"சோறு தான் பொங்கிட்டேன்ல அத எடுத்துட்டு போயேன்டி. ஏன் இப்படி பண்ற லஷ்மி?" என வினோதினி பேசினாலும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவாள்.
சந்திரா முழுமூச்சாக படிப்பில் இறங்கியிருக்க, அவளுக்கு உதவி செய்யவும் தவறவில்லை நிலா. இரவுகளில் பெண்கள் மூவரும் ஒரே அறையில் தான் முடங்கிக் கொள்வர். அங்கு சந்திராவோடு அமர்ந்து அவள் படிக்க உதவுவதை வாடிக்கையாகக் கொண்டாள் நிலாயினி.
"நைட்டெல்லாம் ஒழுங்கா படிச்சியா? மதியம் வந்து பரீட்சை வைப்பேன், ஒழுங்கா பாஸாகணும் சொல்லிட்டேன்" என காலையில் வம்பிழுக்கும் தீக்ஷி தலையில் கொட்டிவிட்டு தான் கோச்சிங் வகுப்பு செல்வாள் சந்திரா.
முதலில் சந்திரா, தீக்ஷி இருவரும் வினோதினி சமைத்துத் தருவதை எடுத்துக் கொள்வர். நிலாவையும் அப்படித்தான் எடுத்துச் செல்கிறாள் என நினைத்திருந்தனர்.
"நிலாக்கு நீயாவாது காலைல எழுந்து செஞ்சு குடுடி, இட்லியையும் தோசையையும், ரெண்டு நாளா மதியத்துக்கும் கொண்டுப் போறா" என வினோதினி சொன்ன பிறகே, நிலா மொத்தமாக விலகி நிற்பது இளையவர்களுக்குப் புரிந்தது. அதன்பின், நிலாவின் உணவு தீக்ஷி கையாலானது.
"ஒரு செஃப்ப வீட்ல வச்சுட்டு நீ இப்படி ல்ஞ்சுக்குத் தோசைய கொண்டு சாப்பிடுறது என்னைய அவமான படுத்துறதுக்கு சமம்னு தோணலையாக்கா?" என்றாள் வினோதினி சொன்ன அன்று இரவு.
"உன் சாப்பாட சாப்புடறதுக்கு அந்த காஞ்ச தோசையே மேல்னு அக்காக்கு தெரியாதுன்னா நினைச்ச?"
"படிக்கும் போது இப்படி கதை பேச வராத. மூடிட்டு படி"
"உனக்கு தான் படிப்பு வரல படிக்குறவளனாலும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தெரியல? பேசிக் சென்ஸில்ல? நீ மூடிட்டு போடி" என சந்திரா பேச, சண்டை பெருசாக போக,
"நீ போய் மூணு பேருக்கும் எதாவது செஞ்சு எடுத்துட்டு வா. கிளம்பு" என நிலாயினியே அனுப்பி வைத்துவிட, அப்படித்தான் நிலாயினி, சந்திரா, தீக்ஷி மூவரின் உணவும் தீக்ஷி கையால் என்றானது. நிலாயினியை தனித்து விடாமல் இளையவர்கள் இருவரும் கூடவே சேர்ந்து நின்றனர். அதில் வினோதினிக்கு திருப்தியே, அதனால் அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி கடக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆரனும், மதுரனும் முகநூலில் பெண்கள் ஐடியில் சிக்கிய நான்கு பேரை, அவர்கள் ஐடி செயல்பாட்டில் இருக்கும் நேரத்தில் இடத்தைக் கண்டுபிடித்து அங்குள்ள போலீசை வைத்தே மடக்கிப் பிடித்தனர். நால்வருமே வெவ்வேறு இடத்தில் இருந்தனர், கடலூரில் ஒருவன், சென்னையில் ஒருவன், மதுரையில் ஒருவன், விழுப்புரத்தில் ஒருவன் என நால்வரையும் பிடித்து திருநெல்வேலி கொண்டு வர வைத்தனர்.
வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஆபாச வீடியோக்களை அனுப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு உயிர்பயம் என்றால் என்ன என உணர்ந்த தருணங்கள் அவை.
"உங்களால எட்டுப் பொண்ணுங்க சூசைட் பண்ணிகிட்டாங்க. எதுக்குடா அனுப்புனீங்க? அறிவில்ல? சோறு தான திங்கிறீங்க? அப்படி என்ன அத்துக்கிட்டுப் போறளவுக்கு?அசிங்கமா பேச அவங்களையும் கூப்பிடுவீங்ளோ? இப்ப கொலை கேஸ்ல உள்ள போ போறீங்களே, உள்ள போய் பேச ஆள் வேணும்ல என்ன செய்வீங்க? உங்களுக்குள்ளயே மாத்தி மாத்திப் பேசிக்கோங்க சரியா" என லத்தியால் வெளுத்துவிட்டான் ஆரன்.
"கொலையா? இல்ல சார் இல்ல சார் இனி அனுப்ப மாட்டேன் சார். தெரியாம பண்ணிட்டேன் சார்" என கதறியவர்களைக் கண்டு கொள்ளவில்லை அவன்.
"வெளிய விட்டாதானடா இன்னொருக்கா வேற அனுப்புவீங்க? சாணிய திங்க சொன்னா திண்பியா நீ? அறுவறுப்பா மூஞ்ச சுழிக்க மாட்ட? அந்தப் பிள்ளைங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் நீ அனுப்புற வீடியோ எல்லாம். கருமத்த நீ பாத்து சாவு, எதுக்கு அடுத்தவங்களுக்கு அனுப்பி சாகடிக்கிற? காயத்ரி, ப்ரியா, சூர்யா, செண்பகா, ரூபிணி, இந்த அஞ்சு பேரும் இப்ப உயிரோட இல்ல. பொம்பளைங்க நேம்ல ஐடி க்ரியேட் பண்ணி ஆறுதல் நொட்டுவீங்களோ நீங்க? இன்னும் யாருக்கெல்லாம் அனுப்பி எங்கெல்லாம் உங்களால பொண்ணுங்க பாதிக்கப் பட்ருக்காங்கன்னு செக் பண்ணி எடுத்துட்டு வந்து மறுபடியும் வெளுக்குறேன்டா உங்கள" என வெளியே வந்தான்.
அவர்களின் நான்கு மொபைல்களும் கண்காணிப்பில் இருந்தது, மதுரனும் சைபர் செல்லை சார்ந்த இருவரும் அவர்கள் மொபைலில் இருந்து தகவல்களை சேகரிப்பதில் இருந்தனர்.
"சார் பூராம் பிட் படமா வச்சுருக்காய்ங்க. வேற ஒன்னும் தேரல. வேலைப் பொழப்பு ஒன்னும் கிடையாது போல. நாலு அஞ்சுன்னு ஃபேஸ்புக் ஐடி வச்சுருக்கானுங்க, அதுல ஒன்னு மட்டுந்தான் அவனவன் பேர்ல இருக்கு. மத்த எல்லாம் பொம்பள பிள்ளைங்க பேர்ல இருக்கு. ஆம்பளையும் ஆம்பளையுமே பொம்பளைங்க ஐடில இருந்து ஆம்பளன்னு தெரியாம பேசிருக்காய்ங்க. ச்சை கன்றாவி" என மதுரன் முகத்தைச் சுளிக்க, சிரித்தான் ஆரன் விஷ்வேஷ்வரன்.
"இவனுங்க லோக்கல் இல்லன்னு தெரியவுமே இவனுங்கட்ட ஒன்னும் தேறாதுன்னு தெரியும் மதுரா. இருந்தாலும் பயம் காட்டினாலாவது திருந்துவானுங்களான்னு பாக்க தான் கொண்டு வர வச்சது. சுய ஒழுக்கம் வேணும். கைல இருக்க மொபைல்ல நம்ம செய்றது எவனுக்குத் தெரியபோவுதுன்னு தான இஷ்டம்போல செய்றானுங்க. ஆனா உண்மை? நாம பாக்றதெல்லாம் ஏதோ ஒரு இடத்துல ரெக்கார்ட் ஆகிட்ருக்கு, வாட்ச் பண்ண ஆளு இருக்குன்னு தெரிஞ்சா பயம் வரும்ல? நீ என்னத்தையும் பார்த்து நாசமா போ, அத அடுத்த பொண்ணுட்ட தீர்த்துக்க ட்ரை பண்ணாத, அது அசிங்கம்னு புரியணும்ல" என்க,
"இவனுங்களாம் திருந்த மாட்டானுங்க சார்"
"பத்து நாள் உள்ள வச்சே அனுப்புவோம். விஷயத்த ப்ரஸுக்கு சொல்லிடு, நல்லா வைரல் ஆகணும்" என்றுவிட்டான்.
இதற்குள் தங்கமாடத்தியிடமிருந்து பதினைந்து அழைப்புகள் வந்துவிட்டிருந்தது. பெண் பார்த்துவிட்டு சென்று ஒரு வாரம் ஓடியிருந்தது.
"என்னம்மா?" என வெளியே வந்து, எதிர்க்கடை பையனிடம் கைக்காட்ட, அவன் டீயுடன் ஓடிவந்துவிட்டான்.
"ஃபோன் பண்ணா எடுக்க இவ்ளோ நேரமா?"
"நா சும்மாவா உட்கார்ந்துருக்கேன்?"
"நாங்க மட்டும் உனக்கு கால் பண்ணிட்டே இருக்க சும்மாவா உட்கார்ந்துருக்கோம்?" என்றார் அவரும்.
"சரி சொல்லு"
"சொல்லவா? உனக்கு கல்யாணம் பண்ணணுமா வேணாமா?"
"பண்ணி வைப்பியா மாட்டியா நீ?"
"இந்தாங்க நீங்களே பேசுங்க இவன்ட்ட. வாய மட்டும் எங்கிருந்து வாடகைக்கு பிடிச்சுட்டு வந்தாம்னே தெரியல, மனுஷி பேசுவாளா இவன்ட்ட" என திட்டியபடி குடுப்பது கேட்க, குபீர் சிரிப்பு தான் ஆரனுக்கு.
"விஷ்வா! பத்திரிகை வந்துருச்சு. கோவில்ல வச்சு கும்பிட நீ வரணும். பொங்கல் வச்சு உன் பேருக்கும் பொண்ணு பேருக்கும் அர்ச்சனை பண்ணனும்" என இளங்கோவன் சொல்ல,
"சரி நாளைக்கு காலைல வந்துடுறேன்" என உடனே சொல்லிவிட்டான், அடுத்து அவரே செல்வகுமாருக்கு அழைத்து நிலாயினி வீட்டினரையும் அழைத்துவிட்டு வைத்தார்.
செல்வகுமார் இன்னும் வேலைக்கு செல்லவில்லை, ஒரு மாத மருத்துவ விடுப்பில் இருந்தார்.
"நீயும் நானும் போய்ட்டு வருவோமா வினோ?" என மெதுவாக கேட்க,
"ம்ம் பொண்ணு கல்யாணம் அதுக்காக போணும்ல. ஆனா லஷ்மி என்ன சொல்லுவான்னு தெரியாது கேட்டுப் பாப்போம்" என்றிருந்தார்.
அன்று தான் சந்திராவிற்கும் பரீட்சை. அவள் ஒருத்தி எழுத மூவரும் கிளம்பி சென்றிருந்தனர். அவளை தேர்வு மையத்திற்குள் அனுப்பிவிட்டு, இவர்கள் இருவரும் அருகிலிருந்த தியேட்டரில் சென்று அமர்ந்தனர்.
மூன்று மணிநேரத்தைப் போக்கிவிட்டு வர, சந்திராவும் பரீட்சையை முடித்து வெளியே வந்திருந்தாள்.
"பல்லெல்லாம் தெரியிறத பார்த்தா பாஸ் பண்ணிடுவியோ?" என தீக்ஷி கேட்க,
"ஹன்ட்ரட் பெர்சன்ட். எக்ஸாம் பேப்பர் நல்ல ஈசி தான்" என்க,
நிலாயினியும் கேள்வித்தாளை வாங்கிப் பார்த்தாள். க்ரூப் டூ வினாத்தாள் அது. அவளுக்கு அதில் அப்டியூட்டும், கரெண்ட் அஃபையர்ஸும் மட்டுமே தெரியும் என்பதால் அதுப் சம்பந்தமான கேள்விகளைத் தனித்து பார்த்தாள். சந்திராவிடம், 'இதுக்கு என்ன ஆன்சர் பண்ண? அதுக்கு என்ன பண்ண?' என கேட்டு, சரியும் பார்த்துக்கொண்டாள், அவள் கூறிய பதிலில் நிலாயினிக்கும் திருப்தியே, தேர்ச்சிப் பெற்றுவிடுவாள் என்ற நம்பிக்கை வர, "சூப்பர்டி!" என அணைத்துக்கொண்டாள்.
"அப்ப இன்னைக்கு நைட் டின்னர் என் ட்ரீட். ஸ்பெஷலா செய்றோம்" என தீக்ஷி குதூகலிக்க,
"லஷ்மிக்கு கல்யாணம், இனி அந்த அலைச்சல் இருக்கும் நமக்கு, போற இடத்துலலாம் வயித்த புடிச்சுட்டு பாத்ரூம்ல போய் உட்கார முடியாது. இனிதான் நாம கவனமா இருக்கணும் லஷ்மி" என சந்திரா சொல்ல, அவள் முதுகில் அடித்தாள் தீக்ஷி.
"அதெல்லாம் தீக்ஷி சூப்பரா சமைச்சு தர்றா"
"அப்படி சொல்லுக்கா. இன்னைக்கு நாம கேன்டில் லைட் டின்னர் சாப்பிடுவோம். அக்காவோட பேச்சிலர் பார்ட்டி, உன்னோட எக்ஸாம் பார்ட்டி, ரெண்டுக்கும் சேர்த்து என் ட்ரீட்" என்றவள் கையோடு, பொருட்கள் வாங்க நாலைந்து கடைகளுக்கு இழுத்துச் சென்றாள். அதிலேயே மாலை வரை சென்றுவிட்டது அவர்களுக்கு.
"நைட்டு இவ செஞ்சு தரப்போற ஊத்தாப்பத்துக்கு மதியத்துல இருந்து விரதமிருக்க வச்சுட்டா" என புலம்பியபடி தான் வீடு வந்திறங்கினர்.
"நீங்க ரெண்டு பேரும் போய் ரெடியாகுங்க, நா முடிச்சு ப்ளேட்டிங் பண்ணிட்டுக் கூப்பிடுறேன்" என தீக்ஷி சமையலறை செல்ல,
"கிச்சன் கதறப்போகுது" என்ற சந்திரா, "லஷ்மி நாம மொட்டமாடில டைனிங் செட் பண்ணுவோமா? அவளோட டின்னருக்கு நம்ம காம்பிளிமெண்ட்" என்க, தலையசைத்தாள் நிலாயினி.
இருவரும் மாடியேறி, பிறந்தநாட்களுக்காக வாங்கிய, பலூன் கம்பி செட்டப்புகளை பலூன் வைக்காமல் சுற்றி நிற்க வைத்து ஸ்க்ரு செய்தனர், அதில் ஸ்கிரின் துணியை கூடாரம் போல செட் செய்தனர். நடுவில் குட்டி மேசை போட்டு, சுற்றி தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல, குட்டிக் குட்டியாக மூன்று பாய் போட்டனர். அங்கங்கு வாசனை மெழுகுவர்த்தியை வைத்தனர். எளிமையாக அழகாகவே இருந்தது.
"சாப்பிட உட்காரும் போது, கேன்டில் ஏத்தி வச்சுப்போம்" என முடித்து நிமிர, எதிரில் மாடிவீட்டின் வாசலில் குறுகுறுவென இவர்கள் இருவரையும் பார்த்தபடி, ஆரனும் மதுரனும் நின்றனர்.