• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 21

Chitra ganesan

Active member
யமி சொன்னது எல்லாம் சரிதான். ஆனால் சொன்ன நேரமும்,இடமும் சரியில்லை.அதுக்காக நிரோ அறைந்தது ரொம்ப தப்பு.அவள் உரிமையுடன் பேசினா இவனுக்கு பிடிப்பது இல்ல.இவன் இப்ப எந்த உரிமை வச்சு அடிச்சானாம்🤨

நிரோ செயலால் அவன் நண்பர்கள் கூட யமியை தான் மோசமாக நினைக்கிறார்கள்..🤨
யமியின் மன உளைச்சலை புரிந்து கொள்ளாத காதல்,காதலன் நிரோ.தந்தை இறப்பு,அக்காவின் சுயநலம்,அம்மாவின் நிலை எல்லாமே அவளின் மனதை பாதித்து இருக்கிறது தெரிந்தும் அவளுக்கான நம்பிக்கையை,தைரியத்தை தராமல் அவளையே குற்றம் சொல்லி அவனின் நண்பர்கள் இடையேயும் அவளை கெட்டவள் ஆக்கி விட்டு விட்டான் நிரோ.
மேல் சவனிஸ்ட்😡
 

kiaara🦋

New member
பேசி பேசி உன் இயல்பு மாறி போச்சுனு பிரிய இன்டைரக்ட்டா சொல்லுவாங்க இவனும் கேட்டுட்டு விட்டுட்டு போயிடுவான். அப்ப யமி பாவம் இல்லையா..
சத்தியமா இப்படி இருக்கும் நிரோ அவளுக்கு தேவையில்லை.. நண்பர்கள் பற்றி நினைக்கும் அளவுக்கு கூட யாமினியை நினைக்கல..
நிரோ கிட்ட இதை எதிர்பாக்கல.. 😡😡
Yamimini deserves a better life.... பேசாம நரேன் கூட சேர்த்து வைங்க.......
 

Sowdharani

Well-known member
நிதானம் கொஞ்சம் கூட இல்லை இரண்டு பேருக்கும்.... இப்போ அதே தான் நிரோ நண்பர்கள் கிட்டவும்... இதே போல உங்க காசை நிரோ திருப்பி கெடுக்காமல் இருந்த தெரிந்து இருக்கும்....
 

Ananthi.C

Well-known member
சண்டையோ....சமாதானமோ எதுவாயிருந்தாலும் மற்றவர் முன்னிலையில் நடக்கும் பொழுது யார் மீது சரி தவறு என்பதை விட தனக்கு வேண்டியவர்களுக்கே ஆதரவும்... எதிரில் இருப்பவர் மீது வெறுப்பும் கோபமும் ஏற்படுவது இயல்பு...

நிரோஜன் அன்றும் இன்றும் நண்பர்கள் முன்னிலையில் அவளுக்கு அவமரியாதையை தேடி தந்துவிட்டான்...

வாங்கிய காசை திருப்பி கொடுக்கும் பழக்கமே இல்லை என்ற மகேஷ்யெல்லாம் அவளை கீழாக நினைக்கும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டானே... ஏன் நாளை இவர்களின் மனைவிமார் வந்து இதுபோல் சொல்லும் போது கேட்காமல் அவர்களோடு சண்டை பிடிப்பார்களா??

மூன்றாம் மனிதர் முன்னால் தன் துணையை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் வரை தான் அந்த உறவு ஆரோக்கியமான உறவாக வளரும்...
நிரோஜன் நினைப்பது போல் யமி மீதே மொத்த தவறும் இருந்தாலும் கூட பிறர் பார்க்க இவன் நடந்து கொண்ட முறை மிகவும் அநாகரீகமானது...
 
Last edited:
பிள்ளையார் பிடிக்க குரங்காக வந்த கதையாகி விட்டது நிரோ யமி காதல்.
பிரிந்து இருந்து அவர்களை அவர்களே உணரவேண்டும். ஆனால் நண்பர்கள் பிழைவிடக் கூடாது.
 

Yasomoorthy

New member
Oh my god அடுத்தது திலினி என்ன செய்வான்னு தெரியல நிதா mam இந்த சண்டை மீண்டும் மீண்டும் தொடருமா பாவம் யாமினி நல்லதுனு நினைத்து செய்ய அது அவளுக்கே பிரச்சனையா முடியுது
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom