அத்தியாயம் 6
அன்று இளங்கோ வீடு வரும்போதே முகம் சரியில்லாமல்தான் வந்தான். அதுவே அவனுக்குச் செய்தி போய்விட்டது என்று சொல்ல, அவனைக் கூப்பிட்டுப் பேசினார் சிவமூர்த்தி.
“தம்பி, நாங்க ஆரும் உங்கட அம்மாவப் பிழையா நினைக்கேல்ல. வீடு முழுக்கத் தேடிக் காணேல்ல எண்ட பிறகுதான் வாணி எடுத்துக் கேட்டவா. அதுவும் எங்கயாவது எடுத்து வச்சிட்டுப் போனாவோ எண்டுதான். அஞ்சு பவுன். சும்மா விடேலாதுதானே?” நயமாகவே தம் நிலையை எடுத்துச் சொன்னார் சிவமூர்த்தி.
“விளங்குது மாமா.” என்றுவிட்டு வந்தவனுக்கு அப்போதும் முகம் சரியில்லை.
“மாமிய நான் சந்தேகப்படேல்ல இளங்கோ. அம்மாவக் கேட்டனான். அப்பாவைக் கேட்டனான். அப்பிடித்தான் மாமியையும் கேட்டனான். ஆனா மாமி அதப் பிழையா எடுத்திட்டா.” கண்ணீருடன் கணவனின் முகம் பார்த்துச் சொன்னாள் வாணி.
“விடு!” என்றுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு படுத்துவிட்டான் இளங்கோ.
என்னவோ மனம் சரியே இல்லை. அதுவும் அவன் அன்னை, “அண்டைக்கும் இஞ்ச எங்கட வீட்டுக்கு வந்திட்டுத்தான் கைச் செயினை காணேல்ல எண்டு சொன்னவா. இப்ப நான் அங்க போயிட்டு வந்த பிறகு செயினை காணேல்லையாம். நான் வாறது பிடிக்காட்டிச் சொல்லச் சொல்லு தம்பி. ஒரு நேரக் கஞ்சியோட இருந்த காலத்தில கூட மானத்தோட வாழ்ந்தவளப்பு நான். இந்த வயசில எல்லாம் கள்ளிப் பட்டம் கேக்கத் தெம்பில்ல.” என்று அழுததே காதினுள் எதிரொலித்துக்கொண்டிருந்தது.
அவன் அன்னையைப் பற்றி அவனுக்குத் தெரியும். அதே நேரம் அவன் மனைவியும் இப்படி யார் மீதும் வீண் பழி போடுகிறவள் கிடையாது. பவன் கொஞ்சம் தராதரம் பார்ப்பானே தவிர்த்து அவள் வீட்டினரும் இப்படி அற்பத்தனமாக நடப்பவர்கள் இல்லை.
வேறு யார்? எப்படி இந்த நகைகள் காணாமல் போகின்றன?
விடையில்லாக் கேள்விகளே எல்லோர் மனத்திலும் எஞ்சி நின்றன.
அதன் பிறகும் அந்தச் செயின் கிடைக்கவே இல்லை. அன்றைக்கே சிவமூர்த்தி சின்ன லொக்கர் ஒன்றை வாங்கி வந்து கொடுத்தார். “நாங்க எங்கட பொருளில கவனமா இருந்திட்டா இந்தப் பிரச்சினைகள் வராது வாணி. இனி நகைகளை வெளில வைக்க வேண்டாம். இதுக்கையே வச்சு எடுங்கோம்மா.”
அதன் பிறகு மங்கையும் வரவில்லை. அதுவே ஒரு வித உறுத்தலாகத் தங்கிவிட கணவனை விசாரித்தாள்.
“தெரியா சத்யா. நேரம் இல்லை போல.” என்று சமாளித்தான் அவன்.
அவள் விடாமல் பார்க்க அவன் உதட்டில் மெல்லிய முறுவல்.
“என்ன பார்வை?” என்றான் அவள் விழிகளில் முத்தமிட்டு.
“சத்தியமா வேணுமெண்டு நான் கேக்கேல்லை.” விழிகளில் கண்ணீர் திரளச் சொன்னாள் அவள்.
“எனக்கு உன்னைத் தெரியாதா?”
“பிறகு ஏன் மாமி வாறேல்ல?”
“அத நீ உன்ர மாமியைத்தான் கேக்கோணும்.” அவளைத் தன்னிடம் இழுத்தபடி சொன்னான் அவன்.
“நான் மாமியக் கூப்பிடப்போறன்.”
“நான் மாமின்ர மருமகளக் கூப்பிடப்போறன்.” என்றவன் அந்த மருமகளைக் கொஞ்ச நேரத்திற்கு வேறு எதையும் பேச விடாமல் செய்திருந்தான்.
தந்தையிடம் பேசி மங்கையை அவர்கள் வீட்டுக்கு வரவழைத்தாள் வாணி. அவரும் கணவரோடு வந்தார். அங்கே விறாந்தையில் இரு தரப்புப் பெரியவர்களும் நடந்ததைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, திரும்பவும் ஏதும் பிரச்சனையாகிவிடுமோ என்று பயந்துகொண்டிருந்தவளை மேலே தங்களின் பகுதிக்குத் தள்ளிக்கொண்டு வந்தான் இளங்கோ.
அவர்களின் அறைக்குள் சென்றதும், “சும்மா பயப்பிடுறேல்ல. கீழ இருக்கிற ரெண்டு குரூப்பும் என்ன எண்டாலும் கதைக்கட்டும். உன்னில இருக்கிற என்ர பாசம் எப்பவும் குறையாது சரியா?” என்றான்.
அவளும் சரி என்று வேகவேகமாகத் தலையாட்டினாள்.
“நீயும் என்னை விட்டிற மாட்டியே?”
பதில் தெரிந்த கேள்விக்குப் பாய்ந்துகொண்டு பதிலளிக்கும் மாணவியைப் போன்று மிக வேகமாய் இல்லை என்று தலையை ஆட்டினாள் வாணி.
“அவ்வளவுக்கு என்னைப் பிடிக்குமா?”
இந்தக் கேள்வியில் எப்போதும் முகம் சிவக்கிறவள் அன்றைக்கு விழிகள் கலங்கிச் சிவக்க ஆம் என்று வேகமாகத் தலையை அசைத்தாள்.
அவன் கைகள் அவளைத் தனக்குள் இழுத்துக்கொண்டன. கலங்கிக் கிடந்த விழிகளையும் ஆதூரத்துடன் துடைத்து விட்டுவிட்டு, “எனக்கும்தான். இந்த மயில்குட்டியக் காலம் முழுக்கக் கைக்கையே வச்சிருக்கோணும் எண்டு நினைக்கிற அளவுக்குப் பிடிக்கும்.” என்று சொன்னான்.
அன்று நேசத்தின் அச்சாரமாக நிகழ்ந்தேறிய நிகழ்வுகள் எல்லாம் பின்நாள்களில் அவள் நினைத்து நினைத்து அலுவதற்குத்தான் என்று தெரியாமலேயே போயிற்று.
அன்று அப்படிச் சொன்னவனுக்குப் பிறகு எப்படி அவளைப் பிடிக்காமல் போனது? அல்லது வீட்டினரைப் பிடிக்காமல் போனதால் அவளையும் விட்டுவிட்டானா?
இல்லை, அவன் மீது தவறில்லை. அவன் வா என்றுதான் கூப்பிட்டான். அவள்தான் போகவில்லை. போகத் துணிவிருக்கவில்லை. அப்படி ஒரு பெரிய முடிவை அன்னை தந்தையைக் கேளாமல் அதுவரை அவள் எடுத்ததேயில்லை. திடீரென்று முடிவை நீ எடு என்றால் எப்படி எடுப்பாள்?
அவள் அவனுக்காக நிற்கவில்லையாம் என்று அவனுக்குக் கோபம். ஆனால், அவள் அவளுக்காகக் கூட நின்றதில்லை என்பதை அவன் யோசிக்காமல் விட்டுவிட்டான்.
அவளுக்கும் சேர்த்து யோசித்து, அவளையும் கூட்டிக்கொண்டு காலமெல்லாம் பயணிப்பான் என்று நம்பினாள். கடைசியில்…
தைரியம் இல்லாத ஒருத்தியாக வளர்ந்தவள் அவள். அதைப் பார்த்திருந்தவனும் அவளை அப்படியேதான் வைத்திருந்தான். பிறகு எப்படி அவளாக ஒரு முடிவை எடுப்பாள் என்று நினைத்தான்? அவ்வளவு காலமும் அவளுக்கும் சேர்த்து முடிவுகளை எடுத்துக்கொண்டிருந்தவன் அன்று மட்டும் ஏன் அவளை முடிவெடுக்கச் சொன்னான்?
‘நான் வேணும் எண்டா என்னோட வா!’ என்று நின்றானே. ‘நீ என்ர மனுசி. வாடி என்னோட!’ என்று இழுத்துக்கொண்டுதானே போயிருக்க வேண்டும்.
அவன் கூட்டிக்கொண்டு போயிருந்தால் அவள் இன்று இப்படி நின்றிருக்க மாட்டாளே! பொது இடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் மறந்து கண்ணீர் உகுத்தாள்.
கைக்குட்டை இனிப் பயன்படுத்தவே முடியாது என்கிற அளவுக்கு மாறிப்போயிற்று. தண்ணீர் போத்தலில் தண்ணீர் முடிந்திருந்தது. அதைத் தூக்கிக் குப்பைவாளிக்குள் போட்டுவிட்டு, அங்கிருந்த கடை ஒன்றில் இன்னொரு தண்ணீர் போத்தலை வாங்கி அருந்தினாள். கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. விழிகளைச் சுழற்றி அப்பாவையும் மகளையும் தேடினாள்.
இருவரும் அவள் பார்வை வட்டத்தில் இல்லை. மகள் சேர்ந்துகொண்டாள் போலும். நிம்மதியான ஒரு வலி உள்ளே பரவியது. திரும்பவும் பழைய இடத்திலேயே சென்று அமர்ந்துகொண்டாள்.
அன்றைக்குப் பிறகு மங்கை பழையபடி வந்து போக ஆரம்பித்தார். அவளும் நகைகளில் கவனமாக இருக்க எல்லாம் சரியாகப் போனது. அந்த நகைகளின் நினைவு வருகையில் ஒரு கவலையும், இதையெல்லாம் செய்தது யார் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
ஒரு வழியாக மிளிர் பிறந்தாள். சுகப்பிரவசம். இரு வீடுமே தமது அடுத்த வரிசைக் கொண்டாடித் தீர்த்தார்கள். பேத்தியை விட்டு இருக்க முடியாத மங்கையும் அடிக்கடி வந்து போனார்.
இப்படி இருக்கையில்தான் பவனுக்குத் திருமணத்திற்குப் பொருந்தி வந்திருந்தது. அன்று பெண் வீட்டினர் இவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்கள். கதிர்வேலனும் மங்கையும் கூட அங்குதான் இருந்தார்கள்.
எல்லாமே மிக மிகத் திருப்தியாக நடந்தது. திடீர் என்று பார்த்தால் மிளிரின் கழுத்தில் கிடந்த செயினைக் காணவில்லை.
அவளின் நகைகள் காணாமல் போனபோதுகூட வாணியால் தாங்கிக்கொள்ள முடிந்தது. பிறந்து மூன்று மாதங்களேயான அவள் குழந்தையின் செயின் காணாமல் போனதை ஜீரணிக்கவே முடியவில்லை.
செய்தி இளங்கோ முதற்கொண்டு மெல்ல மெல்ல வீட்டிலிருந்த எல்லோருக்கும் வந்து சேர்ந்தது. யாருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை.
ஆனால், இதற்கு ஒரு முடிவு கண்டேயாக வேண்டும் என்று நின்றான் பவன். சிவமூர்த்தியுமே அந்த நிலைக்குத்தான் வந்திருந்தார். பவனின் தலைமையில் விசாரணை ஆரம்பித்தது.
அன்று எல்லோர் கைக்குமே மிளிர் போய் வந்திருந்தாள். அப்படியிருக்க யாரைச் சந்தேகப்படுவது? வாணி வீட்டினருக்கு மங்கை மீதுதான் சந்தேகம். இருந்தாலும் உறுதியாகத் தெரியாமல் வெளிப்படுத்த யோசித்தனர்.
“கடைசியா எப்ப செயினை பாத்தனி?” பவன் வாணியைப் பார்த்து வினவினான்.
“எனக்கு நினைவு இல்லையே அண்ணா.” நடுங்கியபடி சொன்னவளுக்குச் சட்டென்று ஒன்று தோன்றவும் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.
அன்றைய நாளின் விசேசத்துக்காக மிளிருக்கும் புது உடைகள் போட்டு, மிக அழகாகத் தயார் படுத்தியிருந்ததில் புகைப்படங்கள் எடுத்திருந்தாள்.
அன்று இளங்கோ வீடு வரும்போதே முகம் சரியில்லாமல்தான் வந்தான். அதுவே அவனுக்குச் செய்தி போய்விட்டது என்று சொல்ல, அவனைக் கூப்பிட்டுப் பேசினார் சிவமூர்த்தி.
“தம்பி, நாங்க ஆரும் உங்கட அம்மாவப் பிழையா நினைக்கேல்ல. வீடு முழுக்கத் தேடிக் காணேல்ல எண்ட பிறகுதான் வாணி எடுத்துக் கேட்டவா. அதுவும் எங்கயாவது எடுத்து வச்சிட்டுப் போனாவோ எண்டுதான். அஞ்சு பவுன். சும்மா விடேலாதுதானே?” நயமாகவே தம் நிலையை எடுத்துச் சொன்னார் சிவமூர்த்தி.
“விளங்குது மாமா.” என்றுவிட்டு வந்தவனுக்கு அப்போதும் முகம் சரியில்லை.
“மாமிய நான் சந்தேகப்படேல்ல இளங்கோ. அம்மாவக் கேட்டனான். அப்பாவைக் கேட்டனான். அப்பிடித்தான் மாமியையும் கேட்டனான். ஆனா மாமி அதப் பிழையா எடுத்திட்டா.” கண்ணீருடன் கணவனின் முகம் பார்த்துச் சொன்னாள் வாணி.
“விடு!” என்றுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு படுத்துவிட்டான் இளங்கோ.
என்னவோ மனம் சரியே இல்லை. அதுவும் அவன் அன்னை, “அண்டைக்கும் இஞ்ச எங்கட வீட்டுக்கு வந்திட்டுத்தான் கைச் செயினை காணேல்ல எண்டு சொன்னவா. இப்ப நான் அங்க போயிட்டு வந்த பிறகு செயினை காணேல்லையாம். நான் வாறது பிடிக்காட்டிச் சொல்லச் சொல்லு தம்பி. ஒரு நேரக் கஞ்சியோட இருந்த காலத்தில கூட மானத்தோட வாழ்ந்தவளப்பு நான். இந்த வயசில எல்லாம் கள்ளிப் பட்டம் கேக்கத் தெம்பில்ல.” என்று அழுததே காதினுள் எதிரொலித்துக்கொண்டிருந்தது.
அவன் அன்னையைப் பற்றி அவனுக்குத் தெரியும். அதே நேரம் அவன் மனைவியும் இப்படி யார் மீதும் வீண் பழி போடுகிறவள் கிடையாது. பவன் கொஞ்சம் தராதரம் பார்ப்பானே தவிர்த்து அவள் வீட்டினரும் இப்படி அற்பத்தனமாக நடப்பவர்கள் இல்லை.
வேறு யார்? எப்படி இந்த நகைகள் காணாமல் போகின்றன?
விடையில்லாக் கேள்விகளே எல்லோர் மனத்திலும் எஞ்சி நின்றன.
அதன் பிறகும் அந்தச் செயின் கிடைக்கவே இல்லை. அன்றைக்கே சிவமூர்த்தி சின்ன லொக்கர் ஒன்றை வாங்கி வந்து கொடுத்தார். “நாங்க எங்கட பொருளில கவனமா இருந்திட்டா இந்தப் பிரச்சினைகள் வராது வாணி. இனி நகைகளை வெளில வைக்க வேண்டாம். இதுக்கையே வச்சு எடுங்கோம்மா.”
அதன் பிறகு மங்கையும் வரவில்லை. அதுவே ஒரு வித உறுத்தலாகத் தங்கிவிட கணவனை விசாரித்தாள்.
“தெரியா சத்யா. நேரம் இல்லை போல.” என்று சமாளித்தான் அவன்.
அவள் விடாமல் பார்க்க அவன் உதட்டில் மெல்லிய முறுவல்.
“என்ன பார்வை?” என்றான் அவள் விழிகளில் முத்தமிட்டு.
“சத்தியமா வேணுமெண்டு நான் கேக்கேல்லை.” விழிகளில் கண்ணீர் திரளச் சொன்னாள் அவள்.
“எனக்கு உன்னைத் தெரியாதா?”
“பிறகு ஏன் மாமி வாறேல்ல?”
“அத நீ உன்ர மாமியைத்தான் கேக்கோணும்.” அவளைத் தன்னிடம் இழுத்தபடி சொன்னான் அவன்.
“நான் மாமியக் கூப்பிடப்போறன்.”
“நான் மாமின்ர மருமகளக் கூப்பிடப்போறன்.” என்றவன் அந்த மருமகளைக் கொஞ்ச நேரத்திற்கு வேறு எதையும் பேச விடாமல் செய்திருந்தான்.
தந்தையிடம் பேசி மங்கையை அவர்கள் வீட்டுக்கு வரவழைத்தாள் வாணி. அவரும் கணவரோடு வந்தார். அங்கே விறாந்தையில் இரு தரப்புப் பெரியவர்களும் நடந்ததைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, திரும்பவும் ஏதும் பிரச்சனையாகிவிடுமோ என்று பயந்துகொண்டிருந்தவளை மேலே தங்களின் பகுதிக்குத் தள்ளிக்கொண்டு வந்தான் இளங்கோ.
அவர்களின் அறைக்குள் சென்றதும், “சும்மா பயப்பிடுறேல்ல. கீழ இருக்கிற ரெண்டு குரூப்பும் என்ன எண்டாலும் கதைக்கட்டும். உன்னில இருக்கிற என்ர பாசம் எப்பவும் குறையாது சரியா?” என்றான்.
அவளும் சரி என்று வேகவேகமாகத் தலையாட்டினாள்.
“நீயும் என்னை விட்டிற மாட்டியே?”
பதில் தெரிந்த கேள்விக்குப் பாய்ந்துகொண்டு பதிலளிக்கும் மாணவியைப் போன்று மிக வேகமாய் இல்லை என்று தலையை ஆட்டினாள் வாணி.
“அவ்வளவுக்கு என்னைப் பிடிக்குமா?”
இந்தக் கேள்வியில் எப்போதும் முகம் சிவக்கிறவள் அன்றைக்கு விழிகள் கலங்கிச் சிவக்க ஆம் என்று வேகமாகத் தலையை அசைத்தாள்.
அவன் கைகள் அவளைத் தனக்குள் இழுத்துக்கொண்டன. கலங்கிக் கிடந்த விழிகளையும் ஆதூரத்துடன் துடைத்து விட்டுவிட்டு, “எனக்கும்தான். இந்த மயில்குட்டியக் காலம் முழுக்கக் கைக்கையே வச்சிருக்கோணும் எண்டு நினைக்கிற அளவுக்குப் பிடிக்கும்.” என்று சொன்னான்.
அன்று நேசத்தின் அச்சாரமாக நிகழ்ந்தேறிய நிகழ்வுகள் எல்லாம் பின்நாள்களில் அவள் நினைத்து நினைத்து அலுவதற்குத்தான் என்று தெரியாமலேயே போயிற்று.
அன்று அப்படிச் சொன்னவனுக்குப் பிறகு எப்படி அவளைப் பிடிக்காமல் போனது? அல்லது வீட்டினரைப் பிடிக்காமல் போனதால் அவளையும் விட்டுவிட்டானா?
இல்லை, அவன் மீது தவறில்லை. அவன் வா என்றுதான் கூப்பிட்டான். அவள்தான் போகவில்லை. போகத் துணிவிருக்கவில்லை. அப்படி ஒரு பெரிய முடிவை அன்னை தந்தையைக் கேளாமல் அதுவரை அவள் எடுத்ததேயில்லை. திடீரென்று முடிவை நீ எடு என்றால் எப்படி எடுப்பாள்?
அவள் அவனுக்காக நிற்கவில்லையாம் என்று அவனுக்குக் கோபம். ஆனால், அவள் அவளுக்காகக் கூட நின்றதில்லை என்பதை அவன் யோசிக்காமல் விட்டுவிட்டான்.
அவளுக்கும் சேர்த்து யோசித்து, அவளையும் கூட்டிக்கொண்டு காலமெல்லாம் பயணிப்பான் என்று நம்பினாள். கடைசியில்…
தைரியம் இல்லாத ஒருத்தியாக வளர்ந்தவள் அவள். அதைப் பார்த்திருந்தவனும் அவளை அப்படியேதான் வைத்திருந்தான். பிறகு எப்படி அவளாக ஒரு முடிவை எடுப்பாள் என்று நினைத்தான்? அவ்வளவு காலமும் அவளுக்கும் சேர்த்து முடிவுகளை எடுத்துக்கொண்டிருந்தவன் அன்று மட்டும் ஏன் அவளை முடிவெடுக்கச் சொன்னான்?
‘நான் வேணும் எண்டா என்னோட வா!’ என்று நின்றானே. ‘நீ என்ர மனுசி. வாடி என்னோட!’ என்று இழுத்துக்கொண்டுதானே போயிருக்க வேண்டும்.
அவன் கூட்டிக்கொண்டு போயிருந்தால் அவள் இன்று இப்படி நின்றிருக்க மாட்டாளே! பொது இடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் மறந்து கண்ணீர் உகுத்தாள்.
கைக்குட்டை இனிப் பயன்படுத்தவே முடியாது என்கிற அளவுக்கு மாறிப்போயிற்று. தண்ணீர் போத்தலில் தண்ணீர் முடிந்திருந்தது. அதைத் தூக்கிக் குப்பைவாளிக்குள் போட்டுவிட்டு, அங்கிருந்த கடை ஒன்றில் இன்னொரு தண்ணீர் போத்தலை வாங்கி அருந்தினாள். கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. விழிகளைச் சுழற்றி அப்பாவையும் மகளையும் தேடினாள்.
இருவரும் அவள் பார்வை வட்டத்தில் இல்லை. மகள் சேர்ந்துகொண்டாள் போலும். நிம்மதியான ஒரு வலி உள்ளே பரவியது. திரும்பவும் பழைய இடத்திலேயே சென்று அமர்ந்துகொண்டாள்.
அன்றைக்குப் பிறகு மங்கை பழையபடி வந்து போக ஆரம்பித்தார். அவளும் நகைகளில் கவனமாக இருக்க எல்லாம் சரியாகப் போனது. அந்த நகைகளின் நினைவு வருகையில் ஒரு கவலையும், இதையெல்லாம் செய்தது யார் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
ஒரு வழியாக மிளிர் பிறந்தாள். சுகப்பிரவசம். இரு வீடுமே தமது அடுத்த வரிசைக் கொண்டாடித் தீர்த்தார்கள். பேத்தியை விட்டு இருக்க முடியாத மங்கையும் அடிக்கடி வந்து போனார்.
இப்படி இருக்கையில்தான் பவனுக்குத் திருமணத்திற்குப் பொருந்தி வந்திருந்தது. அன்று பெண் வீட்டினர் இவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்கள். கதிர்வேலனும் மங்கையும் கூட அங்குதான் இருந்தார்கள்.
எல்லாமே மிக மிகத் திருப்தியாக நடந்தது. திடீர் என்று பார்த்தால் மிளிரின் கழுத்தில் கிடந்த செயினைக் காணவில்லை.
அவளின் நகைகள் காணாமல் போனபோதுகூட வாணியால் தாங்கிக்கொள்ள முடிந்தது. பிறந்து மூன்று மாதங்களேயான அவள் குழந்தையின் செயின் காணாமல் போனதை ஜீரணிக்கவே முடியவில்லை.
செய்தி இளங்கோ முதற்கொண்டு மெல்ல மெல்ல வீட்டிலிருந்த எல்லோருக்கும் வந்து சேர்ந்தது. யாருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை.
ஆனால், இதற்கு ஒரு முடிவு கண்டேயாக வேண்டும் என்று நின்றான் பவன். சிவமூர்த்தியுமே அந்த நிலைக்குத்தான் வந்திருந்தார். பவனின் தலைமையில் விசாரணை ஆரம்பித்தது.
அன்று எல்லோர் கைக்குமே மிளிர் போய் வந்திருந்தாள். அப்படியிருக்க யாரைச் சந்தேகப்படுவது? வாணி வீட்டினருக்கு மங்கை மீதுதான் சந்தேகம். இருந்தாலும் உறுதியாகத் தெரியாமல் வெளிப்படுத்த யோசித்தனர்.
“கடைசியா எப்ப செயினை பாத்தனி?” பவன் வாணியைப் பார்த்து வினவினான்.
“எனக்கு நினைவு இல்லையே அண்ணா.” நடுங்கியபடி சொன்னவளுக்குச் சட்டென்று ஒன்று தோன்றவும் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.
அன்றைய நாளின் விசேசத்துக்காக மிளிருக்கும் புது உடைகள் போட்டு, மிக அழகாகத் தயார் படுத்தியிருந்ததில் புகைப்படங்கள் எடுத்திருந்தாள்.