அத்தியாயம் 7
“ஹலோ அம்மா!”
“கவனமா போயிட்டீங்களா பிள்ள?”
“ஓமம்மா. ஒரு பிரச்சினையும் இல்லாம வந்திட்டன்.”
அவ்வளவு நேரமாகப் பயந்துகொண்டிருந்த குணவதிக்கு மகளின் செயலில் கோபம் உண்டாயிற்று.
“அத ஒரு வார்த்த எடுத்துச் சொல்ல மாட்டீங்களா? இஞ்ச அம்மாவும் அப்பாவும் உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு இருக்கிறம். மிளிரையும் எல்லா கூட்டிக்கொண்டு போனனீங்க.” என்று அதட்டினார்.
தன் தவறு அவளுக்கும் புரிந்தது. ஆனால், எதையும் சிந்தித்து நடக்கும் மனநிலையில் அவள் இப்போது வரை இல்லையே.
அதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“எங்க மிளிர்?”
“அவவின்ர அப்பாவோட போயிட்டா.” அதைச் சொல்லும்போதே அவள் குரல் அடைத்து, உள்ளே போயிற்று.
“அவன் எல்லாம் ஒரு அப்பன். நன்றி கெட்ட நாய்! கனநேரம் அவனோட விட வேண்டாம். அதுகளின்ர கள்ளக்குணம் எங்கட குழந்தைக்கும் வந்திடும். சும்மா பாத்தா காணும். அவன் எல்லாம் ஒரு ஆள் எண்டு…” அவர் பொரிந்துகொண்டு போக அவளுக்கு வலித்தது.
அவன் குணம் எப்படி என்று அவளைத் தவிர்த்து இன்னொருவரால் சொல்லிவிட இயலுமா என்ன? அவன் குணம் தங்கம். என்ன, அதைக் காலத்துக்கும் அனுபவித்து வாழும் கொடுப்பினை அவளுக்குத்தான் இல்லாமல் போயிற்று.
“சரியம்மா. அவே வருகினம். நான் வைக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
திரும்பவும் நெஞ்சையும் தொண்டையையும் அடைத்துக்கொண்டு வந்தது. இதயத்தினுள் ஹோ என்று பெரும் இரைச்சல். ஐயோ ஐயோ என்று ஒரு பரிதவிப்பு. அவனைப் பாராமலேயே இருந்திருக்கலாம் போல. இனி இப்படிப் பரிதவிக்கும் மனத்தை அடங்குவதற்குள் அவள் பாதியாகிப் போவாள்.
ஆனால், அவள் வீட்டினருக்கு மட்டும் இன்னுமே அவர்கள் பெண் எதை இழந்துவிட்டு நிற்கிறாள் என்று விளங்கவேயில்லை. வீட்டுப் பிள்ளையைப் போல் பார்த்தவன் துரோகம் செய்துவிட்டான், நன்றி கெட்டவன், அவனால் அவர்களின் மானம் மரியாதை எல்லாமே போய்விட்டது என்பதிலேயே நிற்கிறார்கள். கசப்பான முறுவல் ஒன்று கண்ணீருடன் வந்து போயிற்று.
அன்று நடந்தது அவனுக்கு மானப் பிரச்சினையாயிற்று. அவர்களுக்குக் கௌரவப் பிரச்சினை.
அதன் பிறகு அவனைப் பார்க்க அவளுக்குக் கிடைக்கவேயில்லை. அவள் இளம் பெண்ணாக இருந்த காலத்திலேயே தனியாக வெளியில் விட்டதில்லை. கைக்குழந்தையோடு இருக்கிறவளையா விடுவார்கள்?
மாலையானதும் கோழிகளை அதன் கூட்டினுள் அடைப்பதுபோல்தான் அவளுக்குப் பகல்களும் இரவுகளும் கழிந்தன.
ஒரு காலம் சொர்க்கமாக இருந்த வாழ்க்கை நரகமாகத் தெரியத் தொடங்கிய காலமது.
அன்று தென்னையில் மோதியதில் மண்டை பிளந்து, ஒரு வாரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் கிடந்தான் பவன். அந்த நாள்களில் கணவனைப் பார்க்கப் போகட்டுமா என்று கேட்பதற்கே தைரியம் வராமல் அழுது கரைந்தாள் அவள்.
கைப்பேசியிலாவது அவனோடு பேசுவோம் என்று அழைக்க அழைக்க அவன் அழைப்பை ஏற்கவேயில்லை. அவள் அனுப்பிய குறுந்தகவல்களுக்கும் பதில் இல்லை.
அடுத்து வந்த நாள்களில் அவள் வீட்டினர் அவளுக்குத் தெரியாமலேயே அவனைப் பழி வாங்க ஆரம்பித்தனர்.
வீட்டில் நகைகளைக் காணவில்லை, கடையில் பணத்தைக் காணவில்லை என்று காவல் நிலையத்திற்குப் புகார் போனது. அதன் அடிப்படையில் இளங்கோ கைது செய்யப்பட்டான். அவன்தான் களவெடுத்தான் என்பதற்கு ஆதாரமாகக் கடையில் வேலை செய்த யாரோ ஒருவர் சாட்சி சொன்னார். அடி, உதை என்று உணவு, தண்ணீர் இல்லாமல் பெரும் கொடுமைக்கு ஆளானான் இளங்கோ.
நான்தான் களவெடுத்தேன் என்று அவன் ஒப்புக்கொள்ளச் சொல்லி அவனுக்கு நடந்ததெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சித்திரவதைகள். நகக் கண்களைக் கூடப் பிடுங்க ஆரம்பிக்கவும் அதற்குமேல் அவனால் வலிதாங்க முடியவில்லை. ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டான்.
கடைசியில் காணாமல் போன நகைகள், கடையில் காணாமல் போன பணம் அனைத்திற்கும் ஈடாகப் பல இலட்சங்களைக் கொடுக்கச் சொன்னார்கள். கடன் பட்டு, இந்துவின் நகைகளை எல்லாம் விற்று, அவள் கணவனிடமும் இரவல் வாங்கி அதைக் கொடுத்த பிறகே அவனை வெளியில் விட்டனர்.
வந்தவன் உடலில் உயிரை மட்டுமே சுமந்து வந்தான். பார்த்த மங்கை தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுதார். இனிமேல் வாணியோடு அவனுக்கு வாழ்க்கை இல்லை என்று நின்றார்.
அந்தளவில் பவன் அவர்களை விரட்டி விரட்டி அடித்தான். கதிர்வேலன் பார்த்த வேலை பறிபோய், வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல், பட்ட கடனைக் கட்ட வழியும் இல்லாமல் நின்றனர்.
இளங்கோவின் பெயர் டவுனுக்குள் கள்ளனாக முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதுவும் ஆரம்ப காலம் தொட்டே அவன் கடையில் களவெடுத்திருக்கிறான் என்றும், நம்பிக்கையில் இவர்கள் கவனிக்காமல் இருந்து ஏமாந்து போனார்களாம் என்றும் பேச்சு.
வெளியில் தலைகாட்டவே முடியவில்லை. உயிரைத் துறந்துவிடலாமா என்று அவன் யோசித்த காலகட்டம் அது. ஆனால், கூடப்பிறந்தவளின் மொத்த நகைகளையும் வாங்கி, அவள் கணவனிடம் கடன்பட்டு, ஊருக்குள் வட்டிக்கு வாங்கி என்று அத்தனையையும் அவனுக்காகச் செய்த அவள் குடும்பத்தினர் அவன் இல்லாமல் என்னாவார்கள்?
கதிர்வேலனுக்குமே இனி மகனுக்கு அந்த வீட்டோடு வாழ்க்கை பொருந்திப் போகாது என்றுதான் தோன்ற ஆரம்பித்திருந்தது. அவர்தான் உள்ளூரில் வேலை கிடைக்காமல் கண்டியில் போயிருந்தது கூலி வேலை செய்து அவனையும் சேர்த்துப் பார்த்துக்கொண்டார்.
இப்படி இருக்கையில்தான் விவாகரத்துக் கேட்டு நோட்டீஸ் வந்தது. மங்கைக்கு மகிழ்ச்சி. கொடுத்துவிடச் சொன்னார். அவர் சொல்வதைக் கேளாமல் அவன் அவள்தான் வேண்டும் என்று போனால் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு, என்னை நானே கொளுத்திக்கொள்வேன் என்று மிரட்டினார்.
இத்தனை நாள்களாக இல்லாமல் வாணிக்கு அழைத்தான் இளங்கோ.
“இளங்கோ!” அவன் பெயரே அவளுக்கு அழுகையாகத்தான் வந்தது.
“என்னட்ட இருந்து விவாகரத்து வேணுமா உனக்கு?” ஒட்டாத குரலில் யாரோவாக நின்று கேட்டான் அவன்.
“என்ன சொல்லுறீங்க இளங்கோ? என்ன விவாகரத்து?” அவள் தலையில் இடி விழுந்தது.
“இது உனக்குத் தெரியுமா தெரியாதா?”
“எனக்கு எதுவுமே தெரியா இளங்கோ. வீட்டில ஒருத்தரும் ஒண்டும் என்னட்டச் சொல்லுறேல்ல.” என்று அழுதாள் அவள்.
“என்னட்ட வாறியா?”
“இளங்கோ!”
“பிள்ளையையும் தூக்கிக்கொண்டு வா.”
“நீங்க வந்து கூட்டிக்கொண்டு போங்கோ இளங்கோ!”
“நான் வேணுமெண்டா வெளிக்கிட்டு எங்கட வீட்டுக்கு வா சத்யா.”
“இளங்கோ ப்ளீஸ். நீங்க வந்து கதைக்கிறீங்களா?”
“ஏன் உனக்கு வாயில்லையா? உனக்கு என்ன வேணும் எண்டு நீதான் முடிவு எடுக்கோணும் சத்யா.” அவள் விழிகளில் கலக்கத்தைக் கண்டாலே முதல் வேலையாக அதை அகற்றுகிற அவள் கணவன் இன்று, அவள் கண்ணீர் விட்டும் இறங்கிவர மறுத்தான்.
“இளங்கோ ப்ளீஸ்.”
“உன்ர வீட்டு ஆக்கள் எனக்குச் செய்த எல்லாத்துக்கும் உன்ன விட்டுட்டு நான்தான் ஓடி இருக்கோணும் சத்யா. ஆனா இப்பவும், இந்தளவு தூரம் அவமானப்பட்டு, கேவலப்பட்டு, சந்தி சிரிச்ச பிறகும் என்ர குடும்பம் எனக்கு வேணும் எண்டு நினைக்கிறன். இனி நீதான் முடிவு எடுக்கோணும். சரியா 10 நாள். இந்தப் பத்து நாளுக்க நீ வராட்டி நானும் ஓம் எண்டு சொல்லி டிவோர்ஸுக்கு குடுத்திடுவன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அவனின் காயப்பட்ட மனத்துக்கு அவர்களை மீறி அவள் வந்து ஆறுதல் தர வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால், அவள் வாயிருந்தும் ஊமை என்று உணராமல் போனான்.
அவள் அழைத்து, குறுஞ்செய்தி அனுப்பி என்று எதற்கும் பிரயோசனம் இல்லை. இரண்டு நாள் கழித்துப் பயந்து பயந்து குணவதியிடம் சொன்னாள்.
“எனக்கு அவரிட்டப் போகோணும் அம்மா. மிளிரும் அப்பாவைப் பாக்காம அழுறா.”
“உனக்கு என்ன விசரா? அதுகள் கள்ளர் கூட்டம். நாளைக்கு காசு பணத்துக்காக உங்களைக் கொலை செய்யக் கூட யோசிக்காதுகள்.”
“அவர் அப்பிடி இல்ல அம்மா. இளங்கோவை உங்களுக்குத் தெரியாதா?” அவன் பற்றிய பிழையான ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் உள்ளத்தைத் துண்டாடின.
“உனக்கு ஒண்டும் தெரியாது. பேசாம போ பிள்ளை!”
“அம்மா ப்ளீஸ். அவர் செய்தது பிழையா இருந்தாலும் ஜெயிலுக்க போட்டு, அடிச்சு, லட்சக் கணக்கில காசும் வாங்கிட்டீங்க தானே? பிறகும் ஏனம்மா இவ்வளவு கோவம்? எனக்கு அவரிட்டப் போகோணும் அம்மா.” என்றதும் குணவதிக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று.
“கேடு கெட்ட நாய் உன்ர மனதையும் குழப்பிப்போட்டான் என்ன? அதுசரி! திரும்ப இந்த வீட்டுக்குப் பூறுறதுக்கு அவனுக்கு இருக்கிற ஒரே வழி நீதானே.” என்று கத்தினார்.
“இல்லை அம்மா. அவராத் தேடி எடுக்கேல்ல. அண்ணா அவருக்கு விவாகரத்துக் கேட்டு அனுப்பி இருக்கிறாராம். எனக்குத் தெரியாம ஏன் அம்மா விவாகரத்துக்குப் போட்டனீங்க? இதுக்கு நான் ஓம் எண்டு சொல்லவே மாட்டன்!” என்றவளுக்கு குணவதி விட்டார் ஒரு அறை.
“ஓம் எண்டு சொல்லாம என்ன செய்யப் போறாய்? அவனோட போயிருந்தது பிச்சை எடுக்கப் போறியா?”
குணவதிக்கு அகங்காரம். அவர்கள் கேட்ட விவாகரத்தைத் தருவதை விட்டுவிட்டு மகள் மூலம் காரியம் சாதிக்கப் பார்க்கிறான் என்கிற கோபத்தில் கணவரிடம் விடயத்தைக் கொண்டுபோனார்.
சிவமூர்த்தியுமே டவுனுக்குள் கடை திறப்பதற்கு அவன் பார்த்துக்கொண்டு திரிகிறான் என்று அறிந்து வெகுண்டுபோயிருந்தார். அவனைக் காலூன்ற விட்டுவிட்டால் தன்னைத் தாண்டி வந்து நிற்பான் என்று நிச்சயமாகத் தெரியும்.
அதற்கு அவனை விடக் கூடாது. மகன் மீதே கை வைத்தவனோடு மகளை இனியும் வாழ விடுவதில் அவருக்கு உடன்பாடும் இல்லை. இது எல்லாவற்றுக்கும் தீர்வு அவர்களின் பிரிவு ஒன்றே என்று முடிவு செய்தார்.
மிக மிகக் கூர்மையாய்
என்னை ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய்ப் பேசியே என்னுள் வசித்தது
உன் வார்த்தைதான்
என்றொலித்த அவள் கைப்பேசியின் சத்தத்தில் நினைவுகள் கலைந்தாள் வாணி. குணவதி அழைத்துக்கொண்டிருந்தார். என்னை ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய்ப் பேசியே என்னுள் வசித்தது
உன் வார்த்தைதான்
“ஹலோ அம்மா!”
“கவனமா போயிட்டீங்களா பிள்ள?”
“ஓமம்மா. ஒரு பிரச்சினையும் இல்லாம வந்திட்டன்.”
அவ்வளவு நேரமாகப் பயந்துகொண்டிருந்த குணவதிக்கு மகளின் செயலில் கோபம் உண்டாயிற்று.
“அத ஒரு வார்த்த எடுத்துச் சொல்ல மாட்டீங்களா? இஞ்ச அம்மாவும் அப்பாவும் உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு இருக்கிறம். மிளிரையும் எல்லா கூட்டிக்கொண்டு போனனீங்க.” என்று அதட்டினார்.
தன் தவறு அவளுக்கும் புரிந்தது. ஆனால், எதையும் சிந்தித்து நடக்கும் மனநிலையில் அவள் இப்போது வரை இல்லையே.
அதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“எங்க மிளிர்?”
“அவவின்ர அப்பாவோட போயிட்டா.” அதைச் சொல்லும்போதே அவள் குரல் அடைத்து, உள்ளே போயிற்று.
“அவன் எல்லாம் ஒரு அப்பன். நன்றி கெட்ட நாய்! கனநேரம் அவனோட விட வேண்டாம். அதுகளின்ர கள்ளக்குணம் எங்கட குழந்தைக்கும் வந்திடும். சும்மா பாத்தா காணும். அவன் எல்லாம் ஒரு ஆள் எண்டு…” அவர் பொரிந்துகொண்டு போக அவளுக்கு வலித்தது.
அவன் குணம் எப்படி என்று அவளைத் தவிர்த்து இன்னொருவரால் சொல்லிவிட இயலுமா என்ன? அவன் குணம் தங்கம். என்ன, அதைக் காலத்துக்கும் அனுபவித்து வாழும் கொடுப்பினை அவளுக்குத்தான் இல்லாமல் போயிற்று.
“சரியம்மா. அவே வருகினம். நான் வைக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
திரும்பவும் நெஞ்சையும் தொண்டையையும் அடைத்துக்கொண்டு வந்தது. இதயத்தினுள் ஹோ என்று பெரும் இரைச்சல். ஐயோ ஐயோ என்று ஒரு பரிதவிப்பு. அவனைப் பாராமலேயே இருந்திருக்கலாம் போல. இனி இப்படிப் பரிதவிக்கும் மனத்தை அடங்குவதற்குள் அவள் பாதியாகிப் போவாள்.
ஆனால், அவள் வீட்டினருக்கு மட்டும் இன்னுமே அவர்கள் பெண் எதை இழந்துவிட்டு நிற்கிறாள் என்று விளங்கவேயில்லை. வீட்டுப் பிள்ளையைப் போல் பார்த்தவன் துரோகம் செய்துவிட்டான், நன்றி கெட்டவன், அவனால் அவர்களின் மானம் மரியாதை எல்லாமே போய்விட்டது என்பதிலேயே நிற்கிறார்கள். கசப்பான முறுவல் ஒன்று கண்ணீருடன் வந்து போயிற்று.
அன்று நடந்தது அவனுக்கு மானப் பிரச்சினையாயிற்று. அவர்களுக்குக் கௌரவப் பிரச்சினை.
அதன் பிறகு அவனைப் பார்க்க அவளுக்குக் கிடைக்கவேயில்லை. அவள் இளம் பெண்ணாக இருந்த காலத்திலேயே தனியாக வெளியில் விட்டதில்லை. கைக்குழந்தையோடு இருக்கிறவளையா விடுவார்கள்?
மாலையானதும் கோழிகளை அதன் கூட்டினுள் அடைப்பதுபோல்தான் அவளுக்குப் பகல்களும் இரவுகளும் கழிந்தன.
ஒரு காலம் சொர்க்கமாக இருந்த வாழ்க்கை நரகமாகத் தெரியத் தொடங்கிய காலமது.
அன்று தென்னையில் மோதியதில் மண்டை பிளந்து, ஒரு வாரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் கிடந்தான் பவன். அந்த நாள்களில் கணவனைப் பார்க்கப் போகட்டுமா என்று கேட்பதற்கே தைரியம் வராமல் அழுது கரைந்தாள் அவள்.
கைப்பேசியிலாவது அவனோடு பேசுவோம் என்று அழைக்க அழைக்க அவன் அழைப்பை ஏற்கவேயில்லை. அவள் அனுப்பிய குறுந்தகவல்களுக்கும் பதில் இல்லை.
அடுத்து வந்த நாள்களில் அவள் வீட்டினர் அவளுக்குத் தெரியாமலேயே அவனைப் பழி வாங்க ஆரம்பித்தனர்.
வீட்டில் நகைகளைக் காணவில்லை, கடையில் பணத்தைக் காணவில்லை என்று காவல் நிலையத்திற்குப் புகார் போனது. அதன் அடிப்படையில் இளங்கோ கைது செய்யப்பட்டான். அவன்தான் களவெடுத்தான் என்பதற்கு ஆதாரமாகக் கடையில் வேலை செய்த யாரோ ஒருவர் சாட்சி சொன்னார். அடி, உதை என்று உணவு, தண்ணீர் இல்லாமல் பெரும் கொடுமைக்கு ஆளானான் இளங்கோ.
நான்தான் களவெடுத்தேன் என்று அவன் ஒப்புக்கொள்ளச் சொல்லி அவனுக்கு நடந்ததெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சித்திரவதைகள். நகக் கண்களைக் கூடப் பிடுங்க ஆரம்பிக்கவும் அதற்குமேல் அவனால் வலிதாங்க முடியவில்லை. ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டான்.
கடைசியில் காணாமல் போன நகைகள், கடையில் காணாமல் போன பணம் அனைத்திற்கும் ஈடாகப் பல இலட்சங்களைக் கொடுக்கச் சொன்னார்கள். கடன் பட்டு, இந்துவின் நகைகளை எல்லாம் விற்று, அவள் கணவனிடமும் இரவல் வாங்கி அதைக் கொடுத்த பிறகே அவனை வெளியில் விட்டனர்.
வந்தவன் உடலில் உயிரை மட்டுமே சுமந்து வந்தான். பார்த்த மங்கை தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுதார். இனிமேல் வாணியோடு அவனுக்கு வாழ்க்கை இல்லை என்று நின்றார்.
அந்தளவில் பவன் அவர்களை விரட்டி விரட்டி அடித்தான். கதிர்வேலன் பார்த்த வேலை பறிபோய், வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல், பட்ட கடனைக் கட்ட வழியும் இல்லாமல் நின்றனர்.
இளங்கோவின் பெயர் டவுனுக்குள் கள்ளனாக முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதுவும் ஆரம்ப காலம் தொட்டே அவன் கடையில் களவெடுத்திருக்கிறான் என்றும், நம்பிக்கையில் இவர்கள் கவனிக்காமல் இருந்து ஏமாந்து போனார்களாம் என்றும் பேச்சு.
வெளியில் தலைகாட்டவே முடியவில்லை. உயிரைத் துறந்துவிடலாமா என்று அவன் யோசித்த காலகட்டம் அது. ஆனால், கூடப்பிறந்தவளின் மொத்த நகைகளையும் வாங்கி, அவள் கணவனிடம் கடன்பட்டு, ஊருக்குள் வட்டிக்கு வாங்கி என்று அத்தனையையும் அவனுக்காகச் செய்த அவள் குடும்பத்தினர் அவன் இல்லாமல் என்னாவார்கள்?
கதிர்வேலனுக்குமே இனி மகனுக்கு அந்த வீட்டோடு வாழ்க்கை பொருந்திப் போகாது என்றுதான் தோன்ற ஆரம்பித்திருந்தது. அவர்தான் உள்ளூரில் வேலை கிடைக்காமல் கண்டியில் போயிருந்தது கூலி வேலை செய்து அவனையும் சேர்த்துப் பார்த்துக்கொண்டார்.
இப்படி இருக்கையில்தான் விவாகரத்துக் கேட்டு நோட்டீஸ் வந்தது. மங்கைக்கு மகிழ்ச்சி. கொடுத்துவிடச் சொன்னார். அவர் சொல்வதைக் கேளாமல் அவன் அவள்தான் வேண்டும் என்று போனால் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு, என்னை நானே கொளுத்திக்கொள்வேன் என்று மிரட்டினார்.
இத்தனை நாள்களாக இல்லாமல் வாணிக்கு அழைத்தான் இளங்கோ.
“இளங்கோ!” அவன் பெயரே அவளுக்கு அழுகையாகத்தான் வந்தது.
“என்னட்ட இருந்து விவாகரத்து வேணுமா உனக்கு?” ஒட்டாத குரலில் யாரோவாக நின்று கேட்டான் அவன்.
“என்ன சொல்லுறீங்க இளங்கோ? என்ன விவாகரத்து?” அவள் தலையில் இடி விழுந்தது.
“இது உனக்குத் தெரியுமா தெரியாதா?”
“எனக்கு எதுவுமே தெரியா இளங்கோ. வீட்டில ஒருத்தரும் ஒண்டும் என்னட்டச் சொல்லுறேல்ல.” என்று அழுதாள் அவள்.
“என்னட்ட வாறியா?”
“இளங்கோ!”
“பிள்ளையையும் தூக்கிக்கொண்டு வா.”
“நீங்க வந்து கூட்டிக்கொண்டு போங்கோ இளங்கோ!”
“நான் வேணுமெண்டா வெளிக்கிட்டு எங்கட வீட்டுக்கு வா சத்யா.”
“இளங்கோ ப்ளீஸ். நீங்க வந்து கதைக்கிறீங்களா?”
“ஏன் உனக்கு வாயில்லையா? உனக்கு என்ன வேணும் எண்டு நீதான் முடிவு எடுக்கோணும் சத்யா.” அவள் விழிகளில் கலக்கத்தைக் கண்டாலே முதல் வேலையாக அதை அகற்றுகிற அவள் கணவன் இன்று, அவள் கண்ணீர் விட்டும் இறங்கிவர மறுத்தான்.
“இளங்கோ ப்ளீஸ்.”
“உன்ர வீட்டு ஆக்கள் எனக்குச் செய்த எல்லாத்துக்கும் உன்ன விட்டுட்டு நான்தான் ஓடி இருக்கோணும் சத்யா. ஆனா இப்பவும், இந்தளவு தூரம் அவமானப்பட்டு, கேவலப்பட்டு, சந்தி சிரிச்ச பிறகும் என்ர குடும்பம் எனக்கு வேணும் எண்டு நினைக்கிறன். இனி நீதான் முடிவு எடுக்கோணும். சரியா 10 நாள். இந்தப் பத்து நாளுக்க நீ வராட்டி நானும் ஓம் எண்டு சொல்லி டிவோர்ஸுக்கு குடுத்திடுவன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அவனின் காயப்பட்ட மனத்துக்கு அவர்களை மீறி அவள் வந்து ஆறுதல் தர வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால், அவள் வாயிருந்தும் ஊமை என்று உணராமல் போனான்.
அவள் அழைத்து, குறுஞ்செய்தி அனுப்பி என்று எதற்கும் பிரயோசனம் இல்லை. இரண்டு நாள் கழித்துப் பயந்து பயந்து குணவதியிடம் சொன்னாள்.
“எனக்கு அவரிட்டப் போகோணும் அம்மா. மிளிரும் அப்பாவைப் பாக்காம அழுறா.”
“உனக்கு என்ன விசரா? அதுகள் கள்ளர் கூட்டம். நாளைக்கு காசு பணத்துக்காக உங்களைக் கொலை செய்யக் கூட யோசிக்காதுகள்.”
“அவர் அப்பிடி இல்ல அம்மா. இளங்கோவை உங்களுக்குத் தெரியாதா?” அவன் பற்றிய பிழையான ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் உள்ளத்தைத் துண்டாடின.
“உனக்கு ஒண்டும் தெரியாது. பேசாம போ பிள்ளை!”
“அம்மா ப்ளீஸ். அவர் செய்தது பிழையா இருந்தாலும் ஜெயிலுக்க போட்டு, அடிச்சு, லட்சக் கணக்கில காசும் வாங்கிட்டீங்க தானே? பிறகும் ஏனம்மா இவ்வளவு கோவம்? எனக்கு அவரிட்டப் போகோணும் அம்மா.” என்றதும் குணவதிக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று.
“கேடு கெட்ட நாய் உன்ர மனதையும் குழப்பிப்போட்டான் என்ன? அதுசரி! திரும்ப இந்த வீட்டுக்குப் பூறுறதுக்கு அவனுக்கு இருக்கிற ஒரே வழி நீதானே.” என்று கத்தினார்.
“இல்லை அம்மா. அவராத் தேடி எடுக்கேல்ல. அண்ணா அவருக்கு விவாகரத்துக் கேட்டு அனுப்பி இருக்கிறாராம். எனக்குத் தெரியாம ஏன் அம்மா விவாகரத்துக்குப் போட்டனீங்க? இதுக்கு நான் ஓம் எண்டு சொல்லவே மாட்டன்!” என்றவளுக்கு குணவதி விட்டார் ஒரு அறை.
“ஓம் எண்டு சொல்லாம என்ன செய்யப் போறாய்? அவனோட போயிருந்தது பிச்சை எடுக்கப் போறியா?”
குணவதிக்கு அகங்காரம். அவர்கள் கேட்ட விவாகரத்தைத் தருவதை விட்டுவிட்டு மகள் மூலம் காரியம் சாதிக்கப் பார்க்கிறான் என்கிற கோபத்தில் கணவரிடம் விடயத்தைக் கொண்டுபோனார்.
சிவமூர்த்தியுமே டவுனுக்குள் கடை திறப்பதற்கு அவன் பார்த்துக்கொண்டு திரிகிறான் என்று அறிந்து வெகுண்டுபோயிருந்தார். அவனைக் காலூன்ற விட்டுவிட்டால் தன்னைத் தாண்டி வந்து நிற்பான் என்று நிச்சயமாகத் தெரியும்.
அதற்கு அவனை விடக் கூடாது. மகன் மீதே கை வைத்தவனோடு மகளை இனியும் வாழ விடுவதில் அவருக்கு உடன்பாடும் இல்லை. இது எல்லாவற்றுக்கும் தீர்வு அவர்களின் பிரிவு ஒன்றே என்று முடிவு செய்தார்.