அத்தியாயம் 10
அந்த வீடு முதல் இரண்டு நாள்களும் நாவினியின் கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டுக்கொண்டே இருந்தது. அதன் பிறகு தன் குடும்பத்தினரோடான ஏதோ ஒரு சம்பவமோ, பேச்சோ நினைவில் வந்து சுகமான சோகமாக அவளைத் தாலாட்டியது.
ஏதோ ஒரு மூலையில் தரையில் அமர்ந்து, அந்த வீட்டையே பார்த்துக்கொண்டிருப்பாள். இலேசான கண்ணீரும் மெல்லிய புன்னகையும் முகத்தில் படர்ந்திருக்கும். சிந்தை மட்டும் என்றோ ஒரு நாள் நடந்த நிகழ்வில் தொலைந்துபோயிருக்கும். அப்படியான பொழுதுகளில் வைதேகி கூட அவளைத் தொந்தரவு செய்வதில்லை.
இந்த இழப்பையெல்லாம் கடந்து வரவே முடியாது. அவற்றிலிருந்து வெளியே வரவும் முடியாது. அந்த இழப்போடு வாழப் பழகுதல் மட்டுமே இதற்கான தீர்வு. அதை உணர்ந்திருந்த பெண்மணி, அவளறியாமல் அவளுக்கு இதமாக இருந்துகொள்வார்.
இப்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் தெளிந்திருந்தாள் நாவினி. அன்னை போய்வந்த கோயில்களுக்குப் போய் வந்தாள். அவரின் ஊருக்குச் சென்று அவர்களின் சொந்தங்களைப் பார்த்துப் பேசி நலன் விசாரித்துக்கொண்டு வந்தாள். அப்படியே நாகரத்தினத்தின் உறவினர்களையும் பார்த்து வந்தாள்.
பரிமளா வீட்டு உறவுகள் பக்கம் மட்டும் போகவில்லை. போகக் கூடாது என்கிற எண்ணமெல்லாம் இல்லை. அவர்கள் வீசுகிற மோசமான வார்த்தைகளைத் தாங்குற சக்தி இல்லை. அதில் அவர்களை மட்டும் தவிர்த்தாள்.
மாதவனின் உதவியோடு ஒரு குடும்பத்தை அவள் வீட்டில் வாடகைக்கு இருப்பதற்குப் பேசி முடித்தாள். முறைப்படி வழக்கறிஞரை வைத்து எழுதி, அவர்களுக்குக் கீழ்ப் பகுதியை வசதி செய்து கொடுத்தாள். மாடியைத் தனக்கு என்று வைத்துக்கொண்டாள்.
அவள் போன பிறகு மாடியை வாரம் ஒரு முறை துப்பரவு செய்வதுபோல் ஒருவரை நியமித்தாள். வீடு, காணி எங்கும் கமரா பூட்டி, தன் கைப்பேசியில் பார்ப்பதுபோல் செய்தாள்.
வங்கிக் கணக்கு ஒன்றினைத் திறந்து, அதை அவள் அங்கிருந்தே கவனிப்பதுபோல் மாற்றி, வாடகைப் பணத்தைப் போடச் சொன்னாள்.
இதெல்லாம் கேசிகனின் காதுக்கு வந்துகொண்டுதான் இருந்தது. அன்று தந்தையோடு அவன் மாமா வீட்டுக்கு வந்து உதவி கேட்டவள், இன்று அவன் ஒருவனும் அதே ஊரில்தான் இருக்கிறான் என்கிற நினைப்பே இல்லாமல் அத்தனை வேலைகளையும் தானே பார்த்தாள்.
ஒருமுறை எதேற்சையாக அவளை வீதியில் வைத்துக் கண்டபோது, என்ன உதவி என்றாலும் தயங்காது கேட்கச் சொன்னான். சிறு முறுவலோடு சரி என்பதுபோல் தலையசைத்தாளே தவிர்த்து அவனிடம் ஒன்றுக்கும் வரவில்லை.
போனமுறை தந்தை உதவிக்காக ஒவ்வொருவரையும் அணுகியதையும், அவர்கள் எல்லோரும் நாசுக்காக மறுத்ததையும் பக்கத்தில் நின்றே பார்த்தவளாயிற்றே.
இங்கிருக்கிற யாரிடமும் உதவி என்று சென்று நின்றுவிடக் கூடாது என்று முன்கூட்டியே யோசித்து, அங்கிருந்து வரும்போதே அத்தனை ஆயத்தங்களோடுதான் வந்தாள்.
அவளைப் பிள்ளையாகத் தாங்கும் குடும்பம் அத்தனைக்கும் ஏற்பாடு செய்துகொடுக்க, அனைத்தையும் கச்சிதமாகச் செய்து முடித்திருந்தாள். இனி அவள் புறப்பட வேண்டும். இங்குச் செய்ய வேண்டிய அனைத்து அலுவல்களும் முடிந்திருந்தன.
கூட ஒரு குடும்பம் அவளுக்குத் துணையாக இருப்பதில் மாதவனும் வைதேகியும் பருத்தித்துறைக்குப் புறப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு இவளை விட்டுவிட்டுப் போக மனமில்லை. இவள்தான் இனிப் பயமில்லை என்று சொல்லி அனுப்பியிருந்தாள். அவர்கள் அவளுக்குச் செய்தவை மிகப்பெரிய உதவிகள். அப்படியிருக்க இன்னுமின்னும் சிரமம் கொடுப்பது அழகில்லையே.
பிரேமா அடிக்கடி அவளுக்கு எதையாவது செய்து, கொண்டு சென்று கொடுப்பதைக் கேசிகன் அறிவான். எத்தனையோ முறை வீட்டுக்கு வரும்படி அழைத்து அவள் வரவில்லையாம் என்று அவர் குறை படுவதும் தெரியும்.
அவனுக்குத்தான் அவளோடு பேசவோ அவளைப் பார்க்கவோ எந்தக் காரணங்களும் இல்லை. அதுகூட விசித்திரமாக இருந்தது. ஒரு காலத்தில் அத்தனைக்கும் அவனிடமே ஓடிவந்த பெண், இன்று அவனை எதற்கும் தேடவில்லை.
இன்னும் இரண்டு நாள்களில் நாவினி புறப்பட வேண்டும். என்னவோ மனம் அன்னையோடு அடிக்கடி செல்லும் ஊர்ப் பிள்ளையாரைத் தேடியது. நடந்தே சென்றாள். கால்களைக் கழுவிக்கொண்டு அவள் உள்ளிட முதலே, “நவி அன்ட்ரி!” என்று கூவிக்கொண்டு கோயிலுக்குள்ளிருந்து ஓடி வந்தான் சஜிதன்.
பார்த்தவள் முகத்தில் பெரிய புன்னகை. அந்தப் பெரிய மனிதன் வேட்டி சட்டை அணிந்திருந்தான். எப்போதும்போல் மூன்று விரல்களினால் தீட்டியிருந்த திருநீற்றுப் பட்டை நெற்றி முழுவதையும் நிறைத்திருந்தது. இரண்டு புருவங்களிலும் முட்டுவது போன்ற பெரிய வட்டத்தில் சந்தனப்பொட்டு. இன்றைக்கு இரண்டு சாமந்திகளைக் காதில் செருகியிருந்தான்.
பக்திப் பழம்தான்.
“சஜூ பிள்ளையார் கும்பிட்டவன். அன்னதானம் சாப்பிட்டவன். நீங்களும் பிள்ளையார் கும்பிடப்போறீங்களா? அன்னதானம் இன்னும் இருக்கு. ஆனா கோயில் அன்னதானத்தில இறைச்சி கேக்கக் கூடாது. அப்புச்சாமிக்குப் பிடிக்காது, சரியா?” என்று அவள் எந்தக் கேள்விகளும் கேட்கும் அவசியமே இல்லாது அனைத்தையும் சொன்னான் அவன்.
“நல்ல காலம் சஜூ முதலே சொல்லிட்டார். இல்லையோ ஐயாட்ட போய் இறைச்சி கேட்டிருப்பன் நான்.” என்றபடி அவனை அள்ளித் தூக்கிக்கொண்டு அவள் நிமிர்ந்தபோது அங்கே கேசிகனும் பிரேமாவும் வந்துகொண்டிருந்தனர்.
அதுவும் மகனைப் போலவே வேட்டி சட்டை அணிந்து, நெற்றியில் ஒற்றைக் கீற்றாகத் திருநீறு, சந்தனம், குங்குமம் தீட்டி, கையில் அர்ச்சனைத் தட்டுடன் வந்தவனைக் கண்டு ஒரு நொடி அவள் உள்ளம் தடுமாறிப்போயிற்று.
சிறு வயது முதலே அவள் சிந்தையை எங்குமே திரும்ப விடாது சிறைப்பிடித்து வைத்த ஆண்மகன். அவளின் காதல் கனவுகள் தொடங்கி, கலியாண ஆசைகள் வரை அத்தனையிலும் நீக்கமற நிறைந்திருந்தவன். இன்றைக்கு யாரோதான். அவன் உள்ளத்தில் இன்னொருத்தி இருக்கிறாள்தான்.
ஆனால், அவள் உள்ளம் இன்னும் வெறுமையாகத்தானே இருக்கிறது. அதனாலாக்கும் வேட்டி சட்டையில், நெஞ்சை நிறைக்கும் தோற்றத்தில் அவனைப் பார்த்ததும் ஒரு கணம் அசையமுடியாமல் நின்றுவிட்டாள். அதைச் சமாளிக்கிறவளாகச் சஜிதன் புறம் திரும்பிப் பேச்சுக்கொடுக்க முயன்றாள்.
“கொஞ்சம் முதல் வந்திருக்கலாமேம்மா. இண்டைக்கு எங்கட பூசை. அன்னதானமும் குடுத்தனாங்க.” என்று சொன்னபடி கையில் இருந்த அர்ச்சனைத் தட்டில் தேடி எடுத்து, அவள் நெற்றியில் திருநீற்றினைப் பிரேமா பூசிவிட்டார்.
சட்டென்று நிலைகுலைந்துபோனாள் நாவினி. முதன் முதலில் அவள் நெற்றியில் அவன் திருநீற்றினைத் தீற்றிவிட்ட தருணத்தில் இருந்துதான் அத்தனையும் மாற ஆரம்பித்தது. அன்றைக்குப் பிறகு அவள் கண்ட கனவுகளும், அதில் மகிழ்ந்திருந்த தருணங்களும்தான் எத்தனை?
அத்தனையும் மண்ணோடு மண்ணாயிற்று. அவனிடம் பாயப்பார்த்த விழிகளை அடக்கிக்கொண்டாலும் விழிகள் சட்டென்று கலங்கிவிட்டிருந்தன.
“உங்களுக்கு நேரமாகியிருக்கும். நீங்க போங்கோ அன்ட்ரி. நான் கும்பிட்டுட்டு வாறன்” என்று சின்னவனையும் இறக்கி விட்டுவிட்டு, விறு விறுவென்று கோயிலுக்குள் நுழைந்தாள். அதன் பிறகுமே கொஞ்ச நேரத்திற்கு அவளால் சமாளித்துக்கொள்ளவே முடியாது போயிற்று.
தம்மைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி அவள் ஓடியதும், அதன் காரணமும் கேசிகனுக்கு ஏன் என்று புரிந்தது. அவனுக்கும் அனைத்தும் நினைவில் வராமல் இல்லை. ஆனால் என்ன செய்ய?
இன்றைய நாள் முழுக்க அந்தத் தெய்வத்திடம் அவன் வைத்த வேண்டுதல்கள் எல்லாமே அவளுக்கானதாகத்தான் இருந்தன. அவள் உள்ளத்தில் அமைதியைக் கொடுத்து, அவளுக்கு நல்ல வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொடு இறைவா என்றுதான் வேண்டினான்.
“ஏனப்பு திடீர் எண்டு முகம் கலங்கிப்போயிற்று அவாக்கு?” என்று விசாரித்தார் பிரேமா.
உள்ளதைச் சொல்ல முடியாமல், “அபி அன்ட்ரின்ர நினைவு வந்திருக்கும் அம்மா. என்ன ஏது எண்டு கேக்காதீங்க.” என்று சொன்னான்.
“இருக்குமப்பு. அபியும் இப்பிடித்தான். கோயில் குளம் எண்டு இருந்தவாதானே. என்ன கறுமப் பிறப்போ தெரியேல்ல. விவரம் அறியா வயசில பெத்த தாயைப் பறிகுடுத்தது காணாது எண்டு, வாழ வேண்டிய வயசில மொத்தக் குடும்பத்தையும் இழந்துபோட்டு நிக்கிறா.”
நேசித்தவனையும் சேர்த்து இழந்திருக்கிறாள். இதை அன்னையிடம் சொல்ல முடியாமல், “நில்லுங்கம்மா வாறன்.” என்று சொல்லிவிட்டு விலகி நடந்தான். அவனுக்குத் தன்னைச் சமாளித்துக்கொள்ள வேண்டியிருந்தது.
அப்பம்மாவோடு நிற்காமல் அவளைத் தேடிக்கொண்டு கோயிலுக்குள் ஓடி வந்தான் சஜிதன். அதுவும் பெரிய மனிதனைப் போன்று விநாயகரைப் பார்த்து மூன்று முறை தலையில் குட்டிக் கும்பிட்டான்.
அவள் அழைத்துச் செல்லும் அவசியமே இல்லை. வலப்பக்கத்திலிருந்து இடமாகப் பிள்ளையார் சந்நிதியை அவளுக்கு முந்திக்கொண்டு சுற்றி வந்து, கடைசியாகச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியவனைக் கண்டு, நாவினியின் துன்பங்கள் எல்லாம் அகன்றே போயின.
அவ்வளவு நேரமாக யாரிடமும் பகிர முடியா வலியில் துடித்துக்கொண்டிருந்த அவள் இதயம் இலேசாகிப் போயிற்று.
உண்மையில் அவன் ஒரு தெய்வக் குழந்தையாகத்தான் தெரிந்தான். அவன் உயரத்துக்கு அமர்ந்து, “பிள்ளையாரப்பாட்ட என்ன கேட்டனீங்க?” என்று கனிவுடன் கேட்டவளுக்கு ஏனோ விழிகள் கலங்கும் நிலை.
“இரவுக்கு அப்பும்மா மீன் பொரிக்கோணும் எண்டு கேட்டனான்.” என்றதும் தன்னை மீறிச் சிரித்திருந்தாள்.
அந்த முகத்தோடு கோயிலை விட்டு வெளியே வந்தவளைக் கண்ட பிறகே கேசிகனின் உள்ளம் அமைதியாயிற்று. இதற்குள் அவளுக்கும் அன்னதானச் சாப்பாடு கட்டி எடுத்துக்கொண்டு வந்திருந்தார் பிரேமா.
அந்த வீடு முதல் இரண்டு நாள்களும் நாவினியின் கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டுக்கொண்டே இருந்தது. அதன் பிறகு தன் குடும்பத்தினரோடான ஏதோ ஒரு சம்பவமோ, பேச்சோ நினைவில் வந்து சுகமான சோகமாக அவளைத் தாலாட்டியது.
ஏதோ ஒரு மூலையில் தரையில் அமர்ந்து, அந்த வீட்டையே பார்த்துக்கொண்டிருப்பாள். இலேசான கண்ணீரும் மெல்லிய புன்னகையும் முகத்தில் படர்ந்திருக்கும். சிந்தை மட்டும் என்றோ ஒரு நாள் நடந்த நிகழ்வில் தொலைந்துபோயிருக்கும். அப்படியான பொழுதுகளில் வைதேகி கூட அவளைத் தொந்தரவு செய்வதில்லை.
இந்த இழப்பையெல்லாம் கடந்து வரவே முடியாது. அவற்றிலிருந்து வெளியே வரவும் முடியாது. அந்த இழப்போடு வாழப் பழகுதல் மட்டுமே இதற்கான தீர்வு. அதை உணர்ந்திருந்த பெண்மணி, அவளறியாமல் அவளுக்கு இதமாக இருந்துகொள்வார்.
இப்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் தெளிந்திருந்தாள் நாவினி. அன்னை போய்வந்த கோயில்களுக்குப் போய் வந்தாள். அவரின் ஊருக்குச் சென்று அவர்களின் சொந்தங்களைப் பார்த்துப் பேசி நலன் விசாரித்துக்கொண்டு வந்தாள். அப்படியே நாகரத்தினத்தின் உறவினர்களையும் பார்த்து வந்தாள்.
பரிமளா வீட்டு உறவுகள் பக்கம் மட்டும் போகவில்லை. போகக் கூடாது என்கிற எண்ணமெல்லாம் இல்லை. அவர்கள் வீசுகிற மோசமான வார்த்தைகளைத் தாங்குற சக்தி இல்லை. அதில் அவர்களை மட்டும் தவிர்த்தாள்.
மாதவனின் உதவியோடு ஒரு குடும்பத்தை அவள் வீட்டில் வாடகைக்கு இருப்பதற்குப் பேசி முடித்தாள். முறைப்படி வழக்கறிஞரை வைத்து எழுதி, அவர்களுக்குக் கீழ்ப் பகுதியை வசதி செய்து கொடுத்தாள். மாடியைத் தனக்கு என்று வைத்துக்கொண்டாள்.
அவள் போன பிறகு மாடியை வாரம் ஒரு முறை துப்பரவு செய்வதுபோல் ஒருவரை நியமித்தாள். வீடு, காணி எங்கும் கமரா பூட்டி, தன் கைப்பேசியில் பார்ப்பதுபோல் செய்தாள்.
வங்கிக் கணக்கு ஒன்றினைத் திறந்து, அதை அவள் அங்கிருந்தே கவனிப்பதுபோல் மாற்றி, வாடகைப் பணத்தைப் போடச் சொன்னாள்.
இதெல்லாம் கேசிகனின் காதுக்கு வந்துகொண்டுதான் இருந்தது. அன்று தந்தையோடு அவன் மாமா வீட்டுக்கு வந்து உதவி கேட்டவள், இன்று அவன் ஒருவனும் அதே ஊரில்தான் இருக்கிறான் என்கிற நினைப்பே இல்லாமல் அத்தனை வேலைகளையும் தானே பார்த்தாள்.
ஒருமுறை எதேற்சையாக அவளை வீதியில் வைத்துக் கண்டபோது, என்ன உதவி என்றாலும் தயங்காது கேட்கச் சொன்னான். சிறு முறுவலோடு சரி என்பதுபோல் தலையசைத்தாளே தவிர்த்து அவனிடம் ஒன்றுக்கும் வரவில்லை.
போனமுறை தந்தை உதவிக்காக ஒவ்வொருவரையும் அணுகியதையும், அவர்கள் எல்லோரும் நாசுக்காக மறுத்ததையும் பக்கத்தில் நின்றே பார்த்தவளாயிற்றே.
இங்கிருக்கிற யாரிடமும் உதவி என்று சென்று நின்றுவிடக் கூடாது என்று முன்கூட்டியே யோசித்து, அங்கிருந்து வரும்போதே அத்தனை ஆயத்தங்களோடுதான் வந்தாள்.
அவளைப் பிள்ளையாகத் தாங்கும் குடும்பம் அத்தனைக்கும் ஏற்பாடு செய்துகொடுக்க, அனைத்தையும் கச்சிதமாகச் செய்து முடித்திருந்தாள். இனி அவள் புறப்பட வேண்டும். இங்குச் செய்ய வேண்டிய அனைத்து அலுவல்களும் முடிந்திருந்தன.
கூட ஒரு குடும்பம் அவளுக்குத் துணையாக இருப்பதில் மாதவனும் வைதேகியும் பருத்தித்துறைக்குப் புறப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு இவளை விட்டுவிட்டுப் போக மனமில்லை. இவள்தான் இனிப் பயமில்லை என்று சொல்லி அனுப்பியிருந்தாள். அவர்கள் அவளுக்குச் செய்தவை மிகப்பெரிய உதவிகள். அப்படியிருக்க இன்னுமின்னும் சிரமம் கொடுப்பது அழகில்லையே.
பிரேமா அடிக்கடி அவளுக்கு எதையாவது செய்து, கொண்டு சென்று கொடுப்பதைக் கேசிகன் அறிவான். எத்தனையோ முறை வீட்டுக்கு வரும்படி அழைத்து அவள் வரவில்லையாம் என்று அவர் குறை படுவதும் தெரியும்.
அவனுக்குத்தான் அவளோடு பேசவோ அவளைப் பார்க்கவோ எந்தக் காரணங்களும் இல்லை. அதுகூட விசித்திரமாக இருந்தது. ஒரு காலத்தில் அத்தனைக்கும் அவனிடமே ஓடிவந்த பெண், இன்று அவனை எதற்கும் தேடவில்லை.
இன்னும் இரண்டு நாள்களில் நாவினி புறப்பட வேண்டும். என்னவோ மனம் அன்னையோடு அடிக்கடி செல்லும் ஊர்ப் பிள்ளையாரைத் தேடியது. நடந்தே சென்றாள். கால்களைக் கழுவிக்கொண்டு அவள் உள்ளிட முதலே, “நவி அன்ட்ரி!” என்று கூவிக்கொண்டு கோயிலுக்குள்ளிருந்து ஓடி வந்தான் சஜிதன்.
பார்த்தவள் முகத்தில் பெரிய புன்னகை. அந்தப் பெரிய மனிதன் வேட்டி சட்டை அணிந்திருந்தான். எப்போதும்போல் மூன்று விரல்களினால் தீட்டியிருந்த திருநீற்றுப் பட்டை நெற்றி முழுவதையும் நிறைத்திருந்தது. இரண்டு புருவங்களிலும் முட்டுவது போன்ற பெரிய வட்டத்தில் சந்தனப்பொட்டு. இன்றைக்கு இரண்டு சாமந்திகளைக் காதில் செருகியிருந்தான்.
பக்திப் பழம்தான்.
“சஜூ பிள்ளையார் கும்பிட்டவன். அன்னதானம் சாப்பிட்டவன். நீங்களும் பிள்ளையார் கும்பிடப்போறீங்களா? அன்னதானம் இன்னும் இருக்கு. ஆனா கோயில் அன்னதானத்தில இறைச்சி கேக்கக் கூடாது. அப்புச்சாமிக்குப் பிடிக்காது, சரியா?” என்று அவள் எந்தக் கேள்விகளும் கேட்கும் அவசியமே இல்லாது அனைத்தையும் சொன்னான் அவன்.
“நல்ல காலம் சஜூ முதலே சொல்லிட்டார். இல்லையோ ஐயாட்ட போய் இறைச்சி கேட்டிருப்பன் நான்.” என்றபடி அவனை அள்ளித் தூக்கிக்கொண்டு அவள் நிமிர்ந்தபோது அங்கே கேசிகனும் பிரேமாவும் வந்துகொண்டிருந்தனர்.
அதுவும் மகனைப் போலவே வேட்டி சட்டை அணிந்து, நெற்றியில் ஒற்றைக் கீற்றாகத் திருநீறு, சந்தனம், குங்குமம் தீட்டி, கையில் அர்ச்சனைத் தட்டுடன் வந்தவனைக் கண்டு ஒரு நொடி அவள் உள்ளம் தடுமாறிப்போயிற்று.
சிறு வயது முதலே அவள் சிந்தையை எங்குமே திரும்ப விடாது சிறைப்பிடித்து வைத்த ஆண்மகன். அவளின் காதல் கனவுகள் தொடங்கி, கலியாண ஆசைகள் வரை அத்தனையிலும் நீக்கமற நிறைந்திருந்தவன். இன்றைக்கு யாரோதான். அவன் உள்ளத்தில் இன்னொருத்தி இருக்கிறாள்தான்.
ஆனால், அவள் உள்ளம் இன்னும் வெறுமையாகத்தானே இருக்கிறது. அதனாலாக்கும் வேட்டி சட்டையில், நெஞ்சை நிறைக்கும் தோற்றத்தில் அவனைப் பார்த்ததும் ஒரு கணம் அசையமுடியாமல் நின்றுவிட்டாள். அதைச் சமாளிக்கிறவளாகச் சஜிதன் புறம் திரும்பிப் பேச்சுக்கொடுக்க முயன்றாள்.
“கொஞ்சம் முதல் வந்திருக்கலாமேம்மா. இண்டைக்கு எங்கட பூசை. அன்னதானமும் குடுத்தனாங்க.” என்று சொன்னபடி கையில் இருந்த அர்ச்சனைத் தட்டில் தேடி எடுத்து, அவள் நெற்றியில் திருநீற்றினைப் பிரேமா பூசிவிட்டார்.
சட்டென்று நிலைகுலைந்துபோனாள் நாவினி. முதன் முதலில் அவள் நெற்றியில் அவன் திருநீற்றினைத் தீற்றிவிட்ட தருணத்தில் இருந்துதான் அத்தனையும் மாற ஆரம்பித்தது. அன்றைக்குப் பிறகு அவள் கண்ட கனவுகளும், அதில் மகிழ்ந்திருந்த தருணங்களும்தான் எத்தனை?
அத்தனையும் மண்ணோடு மண்ணாயிற்று. அவனிடம் பாயப்பார்த்த விழிகளை அடக்கிக்கொண்டாலும் விழிகள் சட்டென்று கலங்கிவிட்டிருந்தன.
“உங்களுக்கு நேரமாகியிருக்கும். நீங்க போங்கோ அன்ட்ரி. நான் கும்பிட்டுட்டு வாறன்” என்று சின்னவனையும் இறக்கி விட்டுவிட்டு, விறு விறுவென்று கோயிலுக்குள் நுழைந்தாள். அதன் பிறகுமே கொஞ்ச நேரத்திற்கு அவளால் சமாளித்துக்கொள்ளவே முடியாது போயிற்று.
தம்மைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி அவள் ஓடியதும், அதன் காரணமும் கேசிகனுக்கு ஏன் என்று புரிந்தது. அவனுக்கும் அனைத்தும் நினைவில் வராமல் இல்லை. ஆனால் என்ன செய்ய?
இன்றைய நாள் முழுக்க அந்தத் தெய்வத்திடம் அவன் வைத்த வேண்டுதல்கள் எல்லாமே அவளுக்கானதாகத்தான் இருந்தன. அவள் உள்ளத்தில் அமைதியைக் கொடுத்து, அவளுக்கு நல்ல வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொடு இறைவா என்றுதான் வேண்டினான்.
“ஏனப்பு திடீர் எண்டு முகம் கலங்கிப்போயிற்று அவாக்கு?” என்று விசாரித்தார் பிரேமா.
உள்ளதைச் சொல்ல முடியாமல், “அபி அன்ட்ரின்ர நினைவு வந்திருக்கும் அம்மா. என்ன ஏது எண்டு கேக்காதீங்க.” என்று சொன்னான்.
“இருக்குமப்பு. அபியும் இப்பிடித்தான். கோயில் குளம் எண்டு இருந்தவாதானே. என்ன கறுமப் பிறப்போ தெரியேல்ல. விவரம் அறியா வயசில பெத்த தாயைப் பறிகுடுத்தது காணாது எண்டு, வாழ வேண்டிய வயசில மொத்தக் குடும்பத்தையும் இழந்துபோட்டு நிக்கிறா.”
நேசித்தவனையும் சேர்த்து இழந்திருக்கிறாள். இதை அன்னையிடம் சொல்ல முடியாமல், “நில்லுங்கம்மா வாறன்.” என்று சொல்லிவிட்டு விலகி நடந்தான். அவனுக்குத் தன்னைச் சமாளித்துக்கொள்ள வேண்டியிருந்தது.
அப்பம்மாவோடு நிற்காமல் அவளைத் தேடிக்கொண்டு கோயிலுக்குள் ஓடி வந்தான் சஜிதன். அதுவும் பெரிய மனிதனைப் போன்று விநாயகரைப் பார்த்து மூன்று முறை தலையில் குட்டிக் கும்பிட்டான்.
அவள் அழைத்துச் செல்லும் அவசியமே இல்லை. வலப்பக்கத்திலிருந்து இடமாகப் பிள்ளையார் சந்நிதியை அவளுக்கு முந்திக்கொண்டு சுற்றி வந்து, கடைசியாகச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியவனைக் கண்டு, நாவினியின் துன்பங்கள் எல்லாம் அகன்றே போயின.
அவ்வளவு நேரமாக யாரிடமும் பகிர முடியா வலியில் துடித்துக்கொண்டிருந்த அவள் இதயம் இலேசாகிப் போயிற்று.
உண்மையில் அவன் ஒரு தெய்வக் குழந்தையாகத்தான் தெரிந்தான். அவன் உயரத்துக்கு அமர்ந்து, “பிள்ளையாரப்பாட்ட என்ன கேட்டனீங்க?” என்று கனிவுடன் கேட்டவளுக்கு ஏனோ விழிகள் கலங்கும் நிலை.
“இரவுக்கு அப்பும்மா மீன் பொரிக்கோணும் எண்டு கேட்டனான்.” என்றதும் தன்னை மீறிச் சிரித்திருந்தாள்.
அந்த முகத்தோடு கோயிலை விட்டு வெளியே வந்தவளைக் கண்ட பிறகே கேசிகனின் உள்ளம் அமைதியாயிற்று. இதற்குள் அவளுக்கும் அன்னதானச் சாப்பாடு கட்டி எடுத்துக்கொண்டு வந்திருந்தார் பிரேமா.