அவன் சொன்னது போல, இன்னொரு பெண்ணோடு சூர்யாவை குழந்தை குட்டி என்று மனக்கண்ணில் கூட அவளால் பார்க்க முடியவில்லை. நினைக்கவே மனம் கசந்து வழிந்தது. இந்தத் துயருக்கு முடிவுதான் என்ன? அவள் மனத் துயரை முகத்தில்...
ஜெயன் சொன்னது போலவே, அன்றே அவளை டொச் வகுப்புக்கு அழைத்துச் சென்றான். அந்த மரத்தடியைப் பார்க்கவே கூடாது என்கிற பிடிவாதத்துடன், முகத்தை நேராக வைத்துக்கொண்டு நடந்தவளை, வகுப்பு முடியும் வரை ஒன்றுமே சொல்லவ...
“நானும் உன்னை அந்த இடத்தைப் பார்க்கச் சொல்லவில்லையே. வகுப்புக்குத் தானே வரச் சொல்கிறேன்.” என்றவனிடம், தன் நிலையை எப்படிச் சொல்வது என்று புரியவில்லை அவளுக்கு. எனவே கோபத்தை துணைக்கழைத்தவள், “நான் வரவில்...
பைத்தியத்துக்கு ஒப்பிடுகிறான் என்று புரிந்தாலும், அவளுக்குக் கோபம் வரவில்லை. அது உண்மைதானே! சூர்யாவின் மேல் பைத்தியமாகத் தானே இருக்கிறாள். இதோ, இந்த நிமிடம் வரை. உள்ளம் கசந்தபோதும், “இல்லை.. அப்படி.. ...
தூரத் தெரிந்த மலை முகட்டில், வெள்ளைக் கம்பளமாய் படர்ந்திருந்த பனிமூட்டத்திலேயே நிலைத்திருந்தது ஜெயனின் விழிகள். கடும் வெயிலில் கூடக் கரையாது, தேங்கி நின்ற பனியைப் பார்க்கையில், இப்படித்தான் சனாவின் நி...
“இவ்வளவு கஷ்டப்பட்டு நீ சிரிக்கத்தான் வேண்டுமா?” என்று அவன் கேட்டபோதும் அவள் முகத்தில் உயிர்ப்பில்லை. அதைப் பார்த்ததும், அவளிடம் உயிர்ப்பைக் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்கிற வெறி எழுந்தது அவனுக்கு. “சரி,...
மாலை வெய்யில் மறைந்து, மெல்லிய குளிர் காற்று வீசி, மேனியை நடுங்கச் செய்வதைக் கூட உணர முடியாமல் தொய்ந்து அமர்ந்திருந்தாள் லட்சனா. கண்கள் அதன் பாட்டுக்கு கண்ணீரை வடிக்க, துடைக்கும் தெம்பை இழந்திருந்தவளி...
அவன் அவள் அடிமையா? என்ன கதை இது? அவள் தானே அவன் அடிமை. அதுவும் இஷ்டப்பட்டு அவன் காலடியில் அவள்தானே கிடக்கிறாள். கடைசிவரையும் அவன் காலடிதான் வேண்டும் என்று அவள் நெஞ்சம் கதறுவது அவன் காதில் கேட்கவில்லைய...
ஜெர்மனியில் வெய்யில் காலம் கடந்துசெல்ல, இலையுதிர் காலம் உள்ளே புகுந்துகொண்டிருந்தது. பகல் பொழுதில் வெப்பமாக இருந்தாலும் இரவுப் பொழுதுகள் குளிரைத் தாங்கி நின்றன. மெல்லிய குளிர் காற்று இலைகளை இடம் பெயர்...
“பார். ஒரு கையில் பியர். மறுகையில் சிகரெட். இதில் உன் அத்தானுக்கு வேறு கொடுக்கிறான். எங்கள் ஊராக இருந்தால், வயதில் பெரியவர்களுக்கு முன் இப்படிச் செய்வார்களா? ஒரு மரியாதை என்பது மருந்துக்கும் இல்லை. இவ...
