அடுத்த கால் மணித்தியாலத்தில் எல்லோரும் வெளியில் வர, வரவேற்பிலமர்ந்த சுகுணாவும் விறுவிறுவென்று வந்து வானில் ஏறியமர்ந்து விட்டார்.
"அங்கிள், நானும் அங்கதான் வாறன், இலக்கியா என்னோட வரட்டுமே!" வேந்தன்.
சுதர்சன் பதில் சொல்ல முதல், "இதெல்லாம் கேட்டுக்கொண்டா இருப்பீங்க! என்னவோ ரெண்டு கிழமையா எல்லாம் கேட்டுக் கேட்டுச் செய்த கணக்கில என்னப்பா? போ போடி!" அவளைப் பிடித்து அவன் புறமாகத் தள்ளிவிட்டுவிட்டு, "ஆனா நாங்க அங்க போய் இறங்க நீங்களும் வந்திறங்க வேணும்." விழிகளில் விசமத்தோடு கேலி செய்த தமக்கையைப் பார்க்கையில் மீண்டும் இலக்கியாவின் கண்கள் ஊறின.
“கவலையே வேணாம், நான் முன்னால போறன் பின்னுக்கு வாங்க என்ன." சாரதியிடம் சொன்ன வேந்தன், “ஏறும்” முன்கதவைத் திறந்து பிடித்தான். பார்த்து நின்ற வீட்டினருக்கு தலையாட்டி விடைபெற்று ஏறியமர்ந்தவள், மீண்டும் வெடித்து அழுதுவிடுவேனோ என்ற நிலையிலிருந்தாள்.
எதுவுமே நடவாத பாவனையில் காரை செலுத்தியவன், தொண்டையைச் செருமிக்கொண்டு அவளைப் பார்க்க அவளோ, வெளியில் பார்த்தாள்.
"ம்ம் பிறகு...சொல்லும்."
சட்டென்று திரும்பியவள் பார்வையைக் கண்ணீர் மறைத்தது.
"பச்! திரும்ப அழுது வடிஞ்சு கொண்டு வரப்போறிறா? அதும் வீட்டாக்கள் எல்லாரும் 'ஆர் எங்கட வீட்டுக்கு வரப்போற இளவரசி' எண்டு பார்க்க வாசலில வந்து நிப்பினம் பா!" எதுவுமே நடவாத பாவனையில் சொல்லி, அவள் விழிகளைத் தளம்ப வைத்தான். காரை ஓரமாக நிறுத்தி அவளோடு நாலு வார்த்தைகள் கதைக்க மனம் உண்ணியது. பின்னால் வருபவர்களை மனதில் வைத்துக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
'நீ எப்பிடி அப்படியெல்லாம் எழுதலாம்?' என்ற கோபம் ஆரம்பத்திலிருந்தாலும் இப்போது மட்டுப்பட்டிருந்தது. எல்லாம் ஓரளவு சுமுகமாயிற்று என்ற நிம்மதியே பிரதானமாக நின்றிற்று.
"அப்ப அழுமூஞ்சியாத்தான் வரப்போறீர்?"
"சொறி வேந்தன் எனக்கு...எனக்கு வேற வழி தெரியேல்ல. நேற்று உங்களோட கதைச்சிட்டு வர..." திக்கி நிறுத்தியவள், முதல் நாள் என்ன பாடுபட்டிருப்பாள் என்றுணர முடிந்தது அவனால்.
"விடும் எண்டுறன் எல்லா."
"இல்ல... சொறி!"
"சரி."
"இல்ல உங்களுக்குக் கோவம்."
"ஹா...ஹா...பின்ன? கோவம் தான், அதுக்கு இப்ப என்ன செய்யிறது விடும்." சொல்லிக்கொண்டிருக்கையில் அவர்களைக் கடந்தது சென்றது, கவியாட்கள் இருந்த வாகனம். கை காட்டிக்கொண்டு சென்றாள், கவி. "பின்னால வரச் சொன்னவர்." சாரதி சொல்ல, “இப்ப வந்த ரிஷப்சன் ஹோலுக்குத் தான் போறம், நீங்க ஓவர் டேக் செய்து போங்க!" சொல்லிச் செய்ய வைத்தது அவள்தான்.
"அக்கா ...கவிக்கா ..." மனதில் நினைப்பதைக் கோர்வையாகச் சொல்ல முடியவில்லை இலக்கியாவாள். பட்டென்று அவன் தோளில் சாய்ந்துகொண்டாளவள். அழுகிறாள் என்று புரிந்தது அவனுக்கு.
"இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு ஒருத்தரும் எதிர்பார்க்கேல்ல இலக்கி. நடந்திட்டு. இனி ஒண்ணும் செய்யேலாது. அழாதேயும்!" கன்னத்தில் தட்டியவன் அவள் தெளியவில்லை என்றதும் காரை வளைத்துத் திருப்பி இடம் பார்த்து நிறுத்தினான்.
"போவம் வேந்தன், அவே என்ன நினைப்பினம்." நிமிர்ந்தமர்ந்தவள், "அப்ப முதல் அழுறத நிப்பாட்டும். பார்க்கச் சகிக்கேல்ல." அவன் சொல்ல மீண்டும் அவன் தோளில் சாய்ந்து விட்டாள்.
“அவ்வளவு சந்தோசமா எல்லாரும் நிண்டவே, இண்டைக்கு உங்கட வீட்டாக்களோடு எல்லாரும் எப்பிடிச் சந்தோசமா நிண்டவையோ அப்படி...” சொல்லிக்கொண்டு அவன் மேல்கையை இறுக்கப் பற்றிக்கொண்டவள், “எனக்கு எனக்கு..உண்மையாவே என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல வேந்தன். அழுறதத் தவிர ...இரவிரவா யோசிச்சுக் கடைசிலதான்...” மெல்ல அவனைப் பார்த்தாள், கண்ணீரோடு!
“பொறுப்புத்துறப்பு போல ஒரு மெசேஜ் போட்டிட்டிர் என்ன? உம்மை...” இடக்கையால் அவள் தலையைப் போட்டு ஆட்டினான்.
“என்ன துணிச்சலடி உனக்கு? நீ அப்பிடிப் போட்டதும் நான் அப்பிடியே போயிருவன் எண்டு நினைச்சிருக்கிறியே எண்டு நினைக்க நினைக்கத்தான் எனக்குக் கோபம் வந்தது. என்ன எண்டாலும் பார்க்கலாம், வேந்தன் இருக்கிறான் நம்மோட எண்டு நீ நினைக்கேல்லயே! நினைச்சிருக்க, உனக்குத் தெரிஞ்ச்சத உடனே எனக்குச் சொல்லி இருப்ப. ஃபோன ஒஃப் செய்திருக்க மாட்ட.” முதல் நாளிலிருந்து கடந்த கணம் வரை பட்ட பாடு எவ்வளவு தடுக்க நினைத்தாலும் வெளியில் வந்திருந்தது.
அவள் உடனே வாய் திறக்கவில்லை.
“விடு...முடிஞ்சது எல்லாம் முடிஞ்சிட்டு!” அவன் தான் சமாதானம் செய்விக்கும் வகையில் சொல்லியிருந்தான்.
“நீங்க சொல்லுற அளவெல்லாம் நான் நினைகேல்ல வேந்தன். முழு நினைவிலும் கவிக்கா மட்டும் தான் நிண்டவா. அவாட சந்தோசத்த நீங்க பார்க்கேல்லையே! அதில நான் மண்ணள்ளிப்போட்டதா இருக்கக் கூடாதெண்டு தான் நினைக்க வச்சுது.” என்றவளை, என்ன செய்வதென்று தெரியாது முறைப்போடு பார்த்தான், வேந்தன்.
அவன் தன்னை முறைப்பதை உணர்ந்தவள் பார்வை அவனை ஏறிடவில்லை. அவன், தனக்கு இனி இல்லையென்று நினைத்திருந்தாளே! இந்தக் கணம் அவளின் அந்த அசட்டுத்தனமான எண்ணமெல்லாம் பொய்யென்று நிரூபித்தவன் தன்னோடிருப்பதே கனவு போலிருந்தது. தலையை அவன் தோளில் நன்றாக அழுத்திக் கரத்தை இரு கரங்களாலும் இறுகப் பற்றிக்கொண்டாள்.
“ஏனெண்டா ஏனெண்டா...” எண்டவள் பார்வை இன்னமும் முறைப்பிலிருக்கும் அவன் பார்வையைத் தொட்டது. மெல்ல விலகி நிமிர்ந்தமர்ந்தாள்.
அவள் விலகியதும் முகத்தில் வந்திருந்த யோசனையும் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘ஏற்கனவே நொந்து போயிருக்கிறாள். இப்ப இந்த விசாரணை எல்லாம் ஏன்? முதல் தேவையா என்ன?’ மனம் இடித்துரைத்தது
“விடு இலக்கி, நான் விளக்கம் எல்லாம் கேட்கேல்ல.” அவள் கரத்தைப் பற்றிக்கொண்டான்.
“இப்ப இந்த நிமிசம் நான்...இல்ல நாம சந்தோசமா இருக்கிறம் தானே. இதத்தானே ரெண்டு கிழமையா ஆவலா எதிர்பார்த்திருந்தம். நிச்சயம் உன்ர வீட்டாக்களுக்குக் கொஞ்ச நாளுக்கு ஒரு மாதிரித்தான் இருக்கும். கவிக்கு நல்லதா ஒரு கல்யாணம் நடக்க எல்லாம் மறைஞ்சிரும்.” அவன் இப்படிச் சொல்ல, அவளோ, தன்மடியில் கிடந்த சிறுகைப்பையைத் திறந்து அதிலிருந்த சிறு பெர்சை எடுத்துத் திறந்தாள். 'என்ன செய்யிறா?' என்றெண்ண வைத்தது அவள் முகத்திலிருந்த உணர்வுகோலம்!
அதிலிருந்து எடுத்து அவன் முன்னால் நீட்டியது, சிறு புகைப்படமொன்று!
வரியுடுப்பில் ஆணும் பெண்ணும்! முன்னால் ஆணும் பெண்ணுமாக பிள்ளைகளிருவர்! நெற்றி சுருங்கப் பார்த்தவன், "ஆர் இவையள் இலக்கி? இயக்க ஆக்கள் என்ன?" கேட்டவன் விழிகள் விரிந்து போயின! அதிர்வா ஆச்சரியமா கூடவே தொத்திக்கொண்ட யோசனையா? அவளை ஏறிட்டான். அவள் பார்வையோ முன்னால் பாதையில்.
"டோய்...இதில இருக்கிற பொம்பளப் பிள்ள நீரோ?! முகம் அப்படியே உம்மைப் போல இருக்கு!" வியப்போடு கேட்டவன் அவள் கண்களால் உதிர்ந்த கண்ணீரில் அதிர்ந்தான். "அப்பிடி எண்டா?" மிகுதியைச் சொல்லவில்லை, அவன். இலக்கியா மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"அங்கிள், நானும் அங்கதான் வாறன், இலக்கியா என்னோட வரட்டுமே!" வேந்தன்.
சுதர்சன் பதில் சொல்ல முதல், "இதெல்லாம் கேட்டுக்கொண்டா இருப்பீங்க! என்னவோ ரெண்டு கிழமையா எல்லாம் கேட்டுக் கேட்டுச் செய்த கணக்கில என்னப்பா? போ போடி!" அவளைப் பிடித்து அவன் புறமாகத் தள்ளிவிட்டுவிட்டு, "ஆனா நாங்க அங்க போய் இறங்க நீங்களும் வந்திறங்க வேணும்." விழிகளில் விசமத்தோடு கேலி செய்த தமக்கையைப் பார்க்கையில் மீண்டும் இலக்கியாவின் கண்கள் ஊறின.
“கவலையே வேணாம், நான் முன்னால போறன் பின்னுக்கு வாங்க என்ன." சாரதியிடம் சொன்ன வேந்தன், “ஏறும்” முன்கதவைத் திறந்து பிடித்தான். பார்த்து நின்ற வீட்டினருக்கு தலையாட்டி விடைபெற்று ஏறியமர்ந்தவள், மீண்டும் வெடித்து அழுதுவிடுவேனோ என்ற நிலையிலிருந்தாள்.
எதுவுமே நடவாத பாவனையில் காரை செலுத்தியவன், தொண்டையைச் செருமிக்கொண்டு அவளைப் பார்க்க அவளோ, வெளியில் பார்த்தாள்.
"ம்ம் பிறகு...சொல்லும்."
சட்டென்று திரும்பியவள் பார்வையைக் கண்ணீர் மறைத்தது.
"பச்! திரும்ப அழுது வடிஞ்சு கொண்டு வரப்போறிறா? அதும் வீட்டாக்கள் எல்லாரும் 'ஆர் எங்கட வீட்டுக்கு வரப்போற இளவரசி' எண்டு பார்க்க வாசலில வந்து நிப்பினம் பா!" எதுவுமே நடவாத பாவனையில் சொல்லி, அவள் விழிகளைத் தளம்ப வைத்தான். காரை ஓரமாக நிறுத்தி அவளோடு நாலு வார்த்தைகள் கதைக்க மனம் உண்ணியது. பின்னால் வருபவர்களை மனதில் வைத்துக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
'நீ எப்பிடி அப்படியெல்லாம் எழுதலாம்?' என்ற கோபம் ஆரம்பத்திலிருந்தாலும் இப்போது மட்டுப்பட்டிருந்தது. எல்லாம் ஓரளவு சுமுகமாயிற்று என்ற நிம்மதியே பிரதானமாக நின்றிற்று.
"அப்ப அழுமூஞ்சியாத்தான் வரப்போறீர்?"
"சொறி வேந்தன் எனக்கு...எனக்கு வேற வழி தெரியேல்ல. நேற்று உங்களோட கதைச்சிட்டு வர..." திக்கி நிறுத்தியவள், முதல் நாள் என்ன பாடுபட்டிருப்பாள் என்றுணர முடிந்தது அவனால்.
"விடும் எண்டுறன் எல்லா."
"இல்ல... சொறி!"
"சரி."
"இல்ல உங்களுக்குக் கோவம்."
"ஹா...ஹா...பின்ன? கோவம் தான், அதுக்கு இப்ப என்ன செய்யிறது விடும்." சொல்லிக்கொண்டிருக்கையில் அவர்களைக் கடந்தது சென்றது, கவியாட்கள் இருந்த வாகனம். கை காட்டிக்கொண்டு சென்றாள், கவி. "பின்னால வரச் சொன்னவர்." சாரதி சொல்ல, “இப்ப வந்த ரிஷப்சன் ஹோலுக்குத் தான் போறம், நீங்க ஓவர் டேக் செய்து போங்க!" சொல்லிச் செய்ய வைத்தது அவள்தான்.
"அக்கா ...கவிக்கா ..." மனதில் நினைப்பதைக் கோர்வையாகச் சொல்ல முடியவில்லை இலக்கியாவாள். பட்டென்று அவன் தோளில் சாய்ந்துகொண்டாளவள். அழுகிறாள் என்று புரிந்தது அவனுக்கு.
"இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு ஒருத்தரும் எதிர்பார்க்கேல்ல இலக்கி. நடந்திட்டு. இனி ஒண்ணும் செய்யேலாது. அழாதேயும்!" கன்னத்தில் தட்டியவன் அவள் தெளியவில்லை என்றதும் காரை வளைத்துத் திருப்பி இடம் பார்த்து நிறுத்தினான்.
"போவம் வேந்தன், அவே என்ன நினைப்பினம்." நிமிர்ந்தமர்ந்தவள், "அப்ப முதல் அழுறத நிப்பாட்டும். பார்க்கச் சகிக்கேல்ல." அவன் சொல்ல மீண்டும் அவன் தோளில் சாய்ந்து விட்டாள்.
“அவ்வளவு சந்தோசமா எல்லாரும் நிண்டவே, இண்டைக்கு உங்கட வீட்டாக்களோடு எல்லாரும் எப்பிடிச் சந்தோசமா நிண்டவையோ அப்படி...” சொல்லிக்கொண்டு அவன் மேல்கையை இறுக்கப் பற்றிக்கொண்டவள், “எனக்கு எனக்கு..உண்மையாவே என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல வேந்தன். அழுறதத் தவிர ...இரவிரவா யோசிச்சுக் கடைசிலதான்...” மெல்ல அவனைப் பார்த்தாள், கண்ணீரோடு!
“பொறுப்புத்துறப்பு போல ஒரு மெசேஜ் போட்டிட்டிர் என்ன? உம்மை...” இடக்கையால் அவள் தலையைப் போட்டு ஆட்டினான்.
“என்ன துணிச்சலடி உனக்கு? நீ அப்பிடிப் போட்டதும் நான் அப்பிடியே போயிருவன் எண்டு நினைச்சிருக்கிறியே எண்டு நினைக்க நினைக்கத்தான் எனக்குக் கோபம் வந்தது. என்ன எண்டாலும் பார்க்கலாம், வேந்தன் இருக்கிறான் நம்மோட எண்டு நீ நினைக்கேல்லயே! நினைச்சிருக்க, உனக்குத் தெரிஞ்ச்சத உடனே எனக்குச் சொல்லி இருப்ப. ஃபோன ஒஃப் செய்திருக்க மாட்ட.” முதல் நாளிலிருந்து கடந்த கணம் வரை பட்ட பாடு எவ்வளவு தடுக்க நினைத்தாலும் வெளியில் வந்திருந்தது.
அவள் உடனே வாய் திறக்கவில்லை.
“விடு...முடிஞ்சது எல்லாம் முடிஞ்சிட்டு!” அவன் தான் சமாதானம் செய்விக்கும் வகையில் சொல்லியிருந்தான்.
“நீங்க சொல்லுற அளவெல்லாம் நான் நினைகேல்ல வேந்தன். முழு நினைவிலும் கவிக்கா மட்டும் தான் நிண்டவா. அவாட சந்தோசத்த நீங்க பார்க்கேல்லையே! அதில நான் மண்ணள்ளிப்போட்டதா இருக்கக் கூடாதெண்டு தான் நினைக்க வச்சுது.” என்றவளை, என்ன செய்வதென்று தெரியாது முறைப்போடு பார்த்தான், வேந்தன்.
அவன் தன்னை முறைப்பதை உணர்ந்தவள் பார்வை அவனை ஏறிடவில்லை. அவன், தனக்கு இனி இல்லையென்று நினைத்திருந்தாளே! இந்தக் கணம் அவளின் அந்த அசட்டுத்தனமான எண்ணமெல்லாம் பொய்யென்று நிரூபித்தவன் தன்னோடிருப்பதே கனவு போலிருந்தது. தலையை அவன் தோளில் நன்றாக அழுத்திக் கரத்தை இரு கரங்களாலும் இறுகப் பற்றிக்கொண்டாள்.
“ஏனெண்டா ஏனெண்டா...” எண்டவள் பார்வை இன்னமும் முறைப்பிலிருக்கும் அவன் பார்வையைத் தொட்டது. மெல்ல விலகி நிமிர்ந்தமர்ந்தாள்.
அவள் விலகியதும் முகத்தில் வந்திருந்த யோசனையும் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘ஏற்கனவே நொந்து போயிருக்கிறாள். இப்ப இந்த விசாரணை எல்லாம் ஏன்? முதல் தேவையா என்ன?’ மனம் இடித்துரைத்தது
“விடு இலக்கி, நான் விளக்கம் எல்லாம் கேட்கேல்ல.” அவள் கரத்தைப் பற்றிக்கொண்டான்.
“இப்ப இந்த நிமிசம் நான்...இல்ல நாம சந்தோசமா இருக்கிறம் தானே. இதத்தானே ரெண்டு கிழமையா ஆவலா எதிர்பார்த்திருந்தம். நிச்சயம் உன்ர வீட்டாக்களுக்குக் கொஞ்ச நாளுக்கு ஒரு மாதிரித்தான் இருக்கும். கவிக்கு நல்லதா ஒரு கல்யாணம் நடக்க எல்லாம் மறைஞ்சிரும்.” அவன் இப்படிச் சொல்ல, அவளோ, தன்மடியில் கிடந்த சிறுகைப்பையைத் திறந்து அதிலிருந்த சிறு பெர்சை எடுத்துத் திறந்தாள். 'என்ன செய்யிறா?' என்றெண்ண வைத்தது அவள் முகத்திலிருந்த உணர்வுகோலம்!
அதிலிருந்து எடுத்து அவன் முன்னால் நீட்டியது, சிறு புகைப்படமொன்று!
வரியுடுப்பில் ஆணும் பெண்ணும்! முன்னால் ஆணும் பெண்ணுமாக பிள்ளைகளிருவர்! நெற்றி சுருங்கப் பார்த்தவன், "ஆர் இவையள் இலக்கி? இயக்க ஆக்கள் என்ன?" கேட்டவன் விழிகள் விரிந்து போயின! அதிர்வா ஆச்சரியமா கூடவே தொத்திக்கொண்ட யோசனையா? அவளை ஏறிட்டான். அவள் பார்வையோ முன்னால் பாதையில்.
"டோய்...இதில இருக்கிற பொம்பளப் பிள்ள நீரோ?! முகம் அப்படியே உம்மைப் போல இருக்கு!" வியப்போடு கேட்டவன் அவள் கண்களால் உதிர்ந்த கண்ணீரில் அதிர்ந்தான். "அப்பிடி எண்டா?" மிகுதியைச் சொல்லவில்லை, அவன். இலக்கியா மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.