உன் காதலால் என்னை மீட்டுவிடு
இரண்டு வருடம் கழித்து
இந்தியாவின் சிறந்த தேசிய சேவைக்கான விருதை திருமதி மகிழினி ஆதித்ய இளஞ்செழியன் பெற்றுக் கொள்கிறார் என்று அறிவிக்க அவரை சுற்றிக் கரகோஷம் எழுந்து கொண்டே இருந்தது
முதல் வரிசையில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தான் ஆதித்ய இளஞ்செழியன் தன் ஒரு வயது பெண் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு
மருத்துவமனை சம்பந்தமான அத்தனை பொறுப்புகளையும் ராஜா அட்சயா , இருவரும் மகிழினியுடன் சேர்ந்து பார்க்கச் சொல்லி விட்டான் இளஞ்செழியன்
இப்பொழுதெல்லாம் இளஞ்செழியன் கொடுமானவரை இந்தியாவில் மட்டுமே இருக்கிறான் மாதத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ ஜெர்மனி சென்று அண்ணன் பிசினஸுக்கு உறுதுணையாக இருக்கிறான்
வதன பிரியா தற்பொழுது ஏழு மதம் கர்ப்பிணியாக இருக்கிறாள் அவளின் வளைகாப்பு அடுத்து இரண்டு நாட்களில் அறிவிப்பு வரும் அனைவரும் வந்து கலந்து கொள்க
விக்ரமின் அம்மாவும் சுபாவும் இப்பொழுது மகிழினி பேலஸ்சில் தான் இருக்கிறார்கள்
பாஸ்கர வர்மன் தாத்தாவும் இவர்களுடனே வந்திருந்து விட்டார்
அனைவரும் பிக்னிக் போல காடுவெட்டி கிராமத்திற்கு சென்று வருகிறார்கள் நேரம் கிடைக்கும்போது எல்லாம்
.