கோட்டை ரயில் நிலையம் இரவின் கனம் சுமந்து இருந்தது.
கோணி மூட்டைகள் சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றப் படும் சத்தமும் சிங்கள மொழி ஏவல்களும், எங்கோ தூரத்தில் ரயில் வரும் சத்தமும் இதுவும் தூங்கா நகரம் எனக் கூவியது.
புகையிரத மேடையில் வீசிக் கிடந்த வெற்று ஐஸ்கிரீம் கோப்பையை காலால் தட்டில் தட்டி குப்பைத்தொட்டி புறம் நகரத்தியபடி ஃபோன் பேசிக் கொண்டிருந்தான் வரோதயன்.
காத்திருப்பு ஆசனத்தில் பிரார்த்தனா அமர்ந்திருந்தாள். வாடை காற்று குத்தும் கையையும் சேர்த்து துப்பட்டாவால் மூடி இருந்தவள் கைப்பையை மடியில் வைத்திருந்தாள்.
வாய் பூட்டு போட்டுக் கொண்ட மௌனத் திரைக்கு பின்னால் நிச்சயம் ஒரு மீன் சந்தையே இயங்கும்.
பிரார்த்தனாவினுளும் கூவி கூவி விற்கிறது.
வசந்தாவுடன் தங்கச் சொல்லி அவளே சொன்ன தாய் போயிருப்பாளா? மருந்து மாத்திரை மறக்காமல் எடுத்து சென்று இருப்பாளா...
'எங்க போனிங்க எல்லாரும், கதவு பூட்டி கிடக்கு?' என்று சற்று முன்பு அழைத்துக் கேட்ட அரை போதை தகப்பன் பூத் தொட்டிக்கடியில் மறைத்த சாவியை கண்டு பிடித்து இருப்பானா.. கதவு திறந்தவன் சரியாக பூட்டி இருப்பானா..
எந்தப் பலனும் இல்லாது நான் ஏன் உன்னோடு அவளுக்காக அலைய வேண்டும் என்ற தம்பியார் என்ன போக்கில் எங்கே அலைகிறாரோ..
இத்தனையோடும், இங்கு எங்கோ தான் நிலானி இருக்கிறாள் அவளை நெருங்கி விட்டோம் என்று உள்ளுணர்வு கட்டியம் கூறுகிறது..
வெகு நேரமாய் ஃபோன் பேசும் வரோதயன் பற்றியும் சிந்தனை சுழன்றது.
பொறுமையாக வருகிறான். கரிசனமாக நடந்து கொள்கிறான். ஃப்ளாட்பாரத்தில் துணையாக நிற்கிறான்.
ஒரு லார்ச்சில் அறை எடுத்து ஓய்வு கொள்ளும் அவசியம் உண்டு இருவருக்கும்.
இந்த பனியில் சாமத்தில் நான்கு மணிக்கு புறப்பட இருக்கும் சிலாபம் ரயிலுக்கு காத்திருந்து நேரத்தை கடத்தும் இவளுடைய சுயநலமான தீர்மானத்துக்கு தலை அசைத்து இருக்கிறான்.
ஒரு இடத்தில் வெறுப்பு காட்டவில்லை. களைப்பை வெளிப்படுத்தவில்லை.
இதற்கெல்லாம் காரணம் என்னவென்று யோசிக்கலாம்..
தவிர்த்தாள்.
உன்னை அறிந்து கொள்ள ஆவல் என்றவன் கூடவே இருந்து அறிந்து கொள்ளட்டும். என் முதுகில் எத்தனை மூட்டை அழுக்கு, என் குடும்பத்தில் எத்தனை எத்தனை கிழிஞ்சல் என்று தெரிந்து கொள்ளட்டும்.
இந்நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்திருப்பான். நிலானியை சந்திக்கும் தருணம் அவனது அபிப்பிராயம் அதளபாதாளத்திலும் வீழலாம்.
ஹ்ஹ்ம்ம்..
ஸ்டேஷன் கடைகளின் ஓரத்தில் தார்பாய் விரித்து சுருண்டிருந்த யாசகர், அடுத்த ரயிலுக்கு விநியோகிக்க கோப்பி தயாரிக்கும் நடமாடும் கடை வியாபாரி, தூரம் இருந்து வந்து அகாலத்தில் சிக்கிக் கொண்டு அழைத்து செல்ல ஆள் வரக் காத்திருக்கும் வயதான தம்பதி, யாத்திரை செல்ல வந்த வெள்ளையுடை குழு என இந்த அகன்ற புகையிரத நிலையத்தில் அவளுக்கு தைரியம் பல வகையில் கிடைக்கிறது.
இளம் காதல் ஜோடி ஒன்று.. காதல் ஜோடியா அல்லது, வேறு தேவையா தெரியவில்லை.. அநாகரிக நெருக்கத்தில் விளக்கு வெளிச்சம் விழாத ஒதுக்கத்தில் நெளிவதும் ஒரு அங்கமாக..
அவளைப் போல அங்கிருந்த அவர்களும் விடுதி தேடவில்லை. போக்கு வரத்து சிரமம் இருக்கலாம். பணக் கஷ்டமும் இருக்கலாம்.
பணம் பற்றி எண்ணும் போது, கொழும்பு வந்து இறங்கியதில் இருந்து உண்ணக், குடிக்க விரோதயனே பர்ஸை கரைப்பது ஒரு ஓரத்தில் உறுத்துகிறது.
வாலட்டை எடுக்க முன்பே கணக்கு முடித்து விடுகிறான் அவன்.
பிரதியுபகாரமாக என்ன செய்யலாம்?
‘இது உங்களுக்காக கொழும்புல வாங்கி வந்தன்’ என்று சொல்லிக் கொடுக்க ஒரு நல்ல புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் அவன் தாய்க்கு.
அவனைப் பற்றி சிந்திக்கும் போது அவனையே பார்த்தாள். கவனித்தவன் அலைபேசியை காதில் இருந்து அகற்றி வந்தான்.
அமர்ந்தவன் அவனை அவள் தேடுவதாக உணர்ந்து என்ன எனக் கேட்க,
"நித்திரைய சமாளிக்க கஷ்டப்படுறிங்க போல.."
"உங்களுக்கு சொக்குதா?"
"இல்ல எனக்கு வரல்ல.. வராது..நீங்க கொஞ்சம் சாஞ்சி இருக்கலாம்.."
"பரவால்ல.."
"ஃபோன்ல அம்மாவோ.. வேலை முடிஞ்சா எண்டு கேட்டாங்களோ?"
புன்னகையுடன் முதுகை சாய்த்து நெடிய கால்களை அகட்டி நீட்டியவன் "அம்மா நேரத்துக்கே படுத்துட்டா.. இது பஞ்சு.."
"பஞ்சு? தம்பியா?"
"எனக்கு தம்பி இல்லயே!"
"சொரி! ஒரு அண்ணன் மட்டும் தானே என.."
'ம்.. பஞ்சு என்ர மாமிட மகன். அவன் நான் இன்னொருவர் ராசு. மூணு பேரும் ஒரு செட். பஞ்சலிங்கம் சோளக்காட்டுக்கு காவலுக்கு போய் நிக்கான். அவனுக்கு நித்திர வரக் கூடாது. எடுத்து வச்சி அலம்பிக் (அலட்டிக்) கொண்டிருந்தான்.."
பஞ்சு ராசு பற்றிக் கேட்டவளுக்கு ரமணி ஞாபகம் வந்தது. தன்னை கொஞ்சமாக சிரிக்க வைக்கும் ஜீவன் அவர். அடுத்தடுத்து அழைத்து தொந்தரவு செய்யவில்லை. குறுஞ்செய்தியாக அனுப்பி கொண்டிருந்தார்.
'எனக்கு உன் பயணத்துடன் உடன்பாடில்லை. உருப்படி இல்லாத உறவைத் தேடிப் போவது பயித்தியக்காரத் தனம். சொல்லிப் பார்த்தேன். தடுக்க முடியவில்லை. கிளம்பி விட்டாய். கவனம்! கவனம் நீ! சீக்கிரம் திரும்பி வா. நான் அம்மாளாச்சியை மனம் உருக வேண்டிக் கொண்டிருக்கிறேன் உனக்காக' தனது தவிப்பை அக்கறையை பல விதங்களில் எழுத்தாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
ஃபோன் எடுத்து நேரம் பார்க்க, மூன்று முப்பது. சிலாபம் ரயில் வந்தது. பயமும் சேர்ந்து சுரந்தது.
ரெஸ்ரூம் போனவள் பல் துலக்கி முகம் கழுவி வந்தாள். சூடாக கோப்பியுன் காத்திருந்தான் வரோதயன். பருகியதும் பெட்டியில் ஏறி அமர்ந்தனர்.
தலைநகர் கொழும்பில் இருந்து 80 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள கடற்கரை நகரம் சிலாபம்.
வடமேல் மாகாணம் பழங்காலத்தில் முத்துக்குளிப்பிற்கு பெயர் போனது. பெரிய மீன்பிடி துறைமுகம் இன்றும் சிலாபத்தில் உண்டு.
பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான உலகம் புகழ்பெற்ற முன்னேஸ்வரம் கோவில் அங்கே அமைந்துள்ள. ராமர் சிவனை வழிபட்ட இடம் எனும் ஐதீகமும் உடையது.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என கலந்து வாழ்கின்றனர். மீன்பிடி, தென்னை, இறால் வளர்ப்பு முக்கிய தொழில்.
விடிந்தது சிலாபத்தை அடைந்தனர். ஸ்டேஷன் விட்டு வெளியேறி முட்சக்கர வண்டி தேடும் போது, எதிரில் உள்ள சைவ உணவகம் கண்ணில் பட்டது. "சாப்பிட்டு போவம்!" என்றான் வரோதயன்.
"
நீங்க சாப்பிட்டு வாங்க.. நான் இங்க இருக்கிறன்.." என அமர இடம் தேடியவளை பார்த்து நெற்றி சுரண்டினான்.
"பரவால்ல நீங்க போங்க வரோதயன்"
"
தங்கச்ச தேடத் தான் வேணும். பட்டினி கிடந்து தேடணும் எண்டு இல்ல. போற நாம எங்க எப்புடி அலைய போறம் எண்டு தெரியாது சைவக் கடையா இருக்கு. டீயாவது குடிச்சிட்டு போவம்.." வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.
டீயுடன் ஒரு உழுந்து வடையும் உட்கொள்ளவதற்கு தொண்டை வெகுவாக அவஸ்தை பட்டது.
வரோதயன் இட்லி சட்னி சாம்பாருடன் நிறைவாக சாப்பிட்டு கை அலம்பியதும் அவனது பசி உணர்ந்தவளுக்கு சங்கடம் இடுக்கியது.
ஆட்டோ காரன் முகவரி சிட்டையை பார்த்து சில ஆயிரங்கள் கேட்டான் கொண்டு விடுவதற்கு.
ஒத்துக் கொண்ட வரோதயன் பிரார்த்தனா ஆட்சேபித்து வார்த்தை வளர்ப்பாளோ என்று தயங்க, இதய லயம் கெட்டிருந்தவள் உள்ளே ஏறி அமர்ந்து விட்டாள்.
பஸ்ஸில் செல்ல வேண்டிய தூரம் அது. ஆட்டோ இவர்களை சுமந்து சென்று காம்பவுண்ட் வீட்டு வரிசைத் தெருவில் நிறுத்தியது.
"இது தான் ரோட்.." என்று பணத்தை வாங்கிக் கொண்டு போனது.
தெருவில்
பாடசாலை சிறுவர்கள் நடையிலும் சைக்கிள்களிலும் கடக்க, பிள்ளையை கை பிடியில் அழைத்து வந்த பெண்மணியிடம் விசாரித்தான் வரா.
நல்ல வேளை அவருக்கு தெரிந்து இருந்தது. அடையாங்கள் கூறி நேரே கை காட்டினார்.
வீட்டில் ஷ்யாம் இருப்பானா, நிலானி நிற்பாளா.. இருவரும் இல்லாமல் வேறெவரும் இருந்தால்?
"ஒழுங்கைல திரும்பி மூணாவது வீடு எண்டு சொன்னாங்க.. இடது கை பக்கமா இதானே மூணாவது" என்று குத்து மதிப்பாக அந்த வீட்டு கேட்டில் தட்டினான் வரோதயன்.
வீட்டு முற்றத்தில் பிள்ளைக்கு ஜடை போட்டுக் கொண்டிருந்த
பெண் வந்தாள். "யாரு?" என்றாள்.
"நாங்க ஷ்யாம் சேர்ர பார்க்க வந்திருக்கிறம்!"
வரோதயனை அச்சம் கலந்து நோக்கியவள் அவன் பின்னால் நின்ற பிரார்த்தனாவை சந்தேகமாக பார்த்தாள்.
"அம்மா, அப்பா கூப்பிடுறார்.." என்று உள்ளிருந்து பெண் பிள்ளை அழைக்க, "அப்பாவ வரச் சொல்லுங்க துஷிமா.." என்றாள் இவள்.
ஏழெட்டு இருக்கும் வயது. வெள்ளை சீருடையில் பள்ளிக் கூடம் செல்ல ஜடை போட்டிருந்த பிள்ளை அரை ரவுசர் டீஷர்டில் ஒருவனை கூட்டி வந்தது. பொண்டிங் தாடி கலைந்த தலையுடன் வயது முப்பது முப்பத்தைந்து சொல்லலாம்.
"யாரு?"
"ஷ்யாம்?"
"ஓம்.."
பிரார்த்தனா வரோயனை தாண்டி முன் வர, அவள் கரம் பற்றித் தடுத்து "உள்ளுக்கு வந்து கதைக்கலாமா நாங்க?" என்று தணிவாக கேட்டான் வரோதயன்.
அந்த தன்மை அவனை ஒத்துக் கொள்ள வைத்தது.
கோணி மூட்டைகள் சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றப் படும் சத்தமும் சிங்கள மொழி ஏவல்களும், எங்கோ தூரத்தில் ரயில் வரும் சத்தமும் இதுவும் தூங்கா நகரம் எனக் கூவியது.
புகையிரத மேடையில் வீசிக் கிடந்த வெற்று ஐஸ்கிரீம் கோப்பையை காலால் தட்டில் தட்டி குப்பைத்தொட்டி புறம் நகரத்தியபடி ஃபோன் பேசிக் கொண்டிருந்தான் வரோதயன்.
காத்திருப்பு ஆசனத்தில் பிரார்த்தனா அமர்ந்திருந்தாள். வாடை காற்று குத்தும் கையையும் சேர்த்து துப்பட்டாவால் மூடி இருந்தவள் கைப்பையை மடியில் வைத்திருந்தாள்.
வாய் பூட்டு போட்டுக் கொண்ட மௌனத் திரைக்கு பின்னால் நிச்சயம் ஒரு மீன் சந்தையே இயங்கும்.
பிரார்த்தனாவினுளும் கூவி கூவி விற்கிறது.
வசந்தாவுடன் தங்கச் சொல்லி அவளே சொன்ன தாய் போயிருப்பாளா? மருந்து மாத்திரை மறக்காமல் எடுத்து சென்று இருப்பாளா...
'எங்க போனிங்க எல்லாரும், கதவு பூட்டி கிடக்கு?' என்று சற்று முன்பு அழைத்துக் கேட்ட அரை போதை தகப்பன் பூத் தொட்டிக்கடியில் மறைத்த சாவியை கண்டு பிடித்து இருப்பானா.. கதவு திறந்தவன் சரியாக பூட்டி இருப்பானா..
எந்தப் பலனும் இல்லாது நான் ஏன் உன்னோடு அவளுக்காக அலைய வேண்டும் என்ற தம்பியார் என்ன போக்கில் எங்கே அலைகிறாரோ..
இத்தனையோடும், இங்கு எங்கோ தான் நிலானி இருக்கிறாள் அவளை நெருங்கி விட்டோம் என்று உள்ளுணர்வு கட்டியம் கூறுகிறது..
வெகு நேரமாய் ஃபோன் பேசும் வரோதயன் பற்றியும் சிந்தனை சுழன்றது.
பொறுமையாக வருகிறான். கரிசனமாக நடந்து கொள்கிறான். ஃப்ளாட்பாரத்தில் துணையாக நிற்கிறான்.
ஒரு லார்ச்சில் அறை எடுத்து ஓய்வு கொள்ளும் அவசியம் உண்டு இருவருக்கும்.
இந்த பனியில் சாமத்தில் நான்கு மணிக்கு புறப்பட இருக்கும் சிலாபம் ரயிலுக்கு காத்திருந்து நேரத்தை கடத்தும் இவளுடைய சுயநலமான தீர்மானத்துக்கு தலை அசைத்து இருக்கிறான்.
ஒரு இடத்தில் வெறுப்பு காட்டவில்லை. களைப்பை வெளிப்படுத்தவில்லை.
இதற்கெல்லாம் காரணம் என்னவென்று யோசிக்கலாம்..
தவிர்த்தாள்.
உன்னை அறிந்து கொள்ள ஆவல் என்றவன் கூடவே இருந்து அறிந்து கொள்ளட்டும். என் முதுகில் எத்தனை மூட்டை அழுக்கு, என் குடும்பத்தில் எத்தனை எத்தனை கிழிஞ்சல் என்று தெரிந்து கொள்ளட்டும்.
இந்நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்திருப்பான். நிலானியை சந்திக்கும் தருணம் அவனது அபிப்பிராயம் அதளபாதாளத்திலும் வீழலாம்.
ஹ்ஹ்ம்ம்..
ஸ்டேஷன் கடைகளின் ஓரத்தில் தார்பாய் விரித்து சுருண்டிருந்த யாசகர், அடுத்த ரயிலுக்கு விநியோகிக்க கோப்பி தயாரிக்கும் நடமாடும் கடை வியாபாரி, தூரம் இருந்து வந்து அகாலத்தில் சிக்கிக் கொண்டு அழைத்து செல்ல ஆள் வரக் காத்திருக்கும் வயதான தம்பதி, யாத்திரை செல்ல வந்த வெள்ளையுடை குழு என இந்த அகன்ற புகையிரத நிலையத்தில் அவளுக்கு தைரியம் பல வகையில் கிடைக்கிறது.
இளம் காதல் ஜோடி ஒன்று.. காதல் ஜோடியா அல்லது, வேறு தேவையா தெரியவில்லை.. அநாகரிக நெருக்கத்தில் விளக்கு வெளிச்சம் விழாத ஒதுக்கத்தில் நெளிவதும் ஒரு அங்கமாக..
அவளைப் போல அங்கிருந்த அவர்களும் விடுதி தேடவில்லை. போக்கு வரத்து சிரமம் இருக்கலாம். பணக் கஷ்டமும் இருக்கலாம்.
பணம் பற்றி எண்ணும் போது, கொழும்பு வந்து இறங்கியதில் இருந்து உண்ணக், குடிக்க விரோதயனே பர்ஸை கரைப்பது ஒரு ஓரத்தில் உறுத்துகிறது.
வாலட்டை எடுக்க முன்பே கணக்கு முடித்து விடுகிறான் அவன்.
பிரதியுபகாரமாக என்ன செய்யலாம்?
‘இது உங்களுக்காக கொழும்புல வாங்கி வந்தன்’ என்று சொல்லிக் கொடுக்க ஒரு நல்ல புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் அவன் தாய்க்கு.
அவனைப் பற்றி சிந்திக்கும் போது அவனையே பார்த்தாள். கவனித்தவன் அலைபேசியை காதில் இருந்து அகற்றி வந்தான்.
அமர்ந்தவன் அவனை அவள் தேடுவதாக உணர்ந்து என்ன எனக் கேட்க,
"நித்திரைய சமாளிக்க கஷ்டப்படுறிங்க போல.."
"உங்களுக்கு சொக்குதா?"
"இல்ல எனக்கு வரல்ல.. வராது..நீங்க கொஞ்சம் சாஞ்சி இருக்கலாம்.."
"பரவால்ல.."
"ஃபோன்ல அம்மாவோ.. வேலை முடிஞ்சா எண்டு கேட்டாங்களோ?"
புன்னகையுடன் முதுகை சாய்த்து நெடிய கால்களை அகட்டி நீட்டியவன் "அம்மா நேரத்துக்கே படுத்துட்டா.. இது பஞ்சு.."
"பஞ்சு? தம்பியா?"
"எனக்கு தம்பி இல்லயே!"
"சொரி! ஒரு அண்ணன் மட்டும் தானே என.."
'ம்.. பஞ்சு என்ர மாமிட மகன். அவன் நான் இன்னொருவர் ராசு. மூணு பேரும் ஒரு செட். பஞ்சலிங்கம் சோளக்காட்டுக்கு காவலுக்கு போய் நிக்கான். அவனுக்கு நித்திர வரக் கூடாது. எடுத்து வச்சி அலம்பிக் (அலட்டிக்) கொண்டிருந்தான்.."
பஞ்சு ராசு பற்றிக் கேட்டவளுக்கு ரமணி ஞாபகம் வந்தது. தன்னை கொஞ்சமாக சிரிக்க வைக்கும் ஜீவன் அவர். அடுத்தடுத்து அழைத்து தொந்தரவு செய்யவில்லை. குறுஞ்செய்தியாக அனுப்பி கொண்டிருந்தார்.
'எனக்கு உன் பயணத்துடன் உடன்பாடில்லை. உருப்படி இல்லாத உறவைத் தேடிப் போவது பயித்தியக்காரத் தனம். சொல்லிப் பார்த்தேன். தடுக்க முடியவில்லை. கிளம்பி விட்டாய். கவனம்! கவனம் நீ! சீக்கிரம் திரும்பி வா. நான் அம்மாளாச்சியை மனம் உருக வேண்டிக் கொண்டிருக்கிறேன் உனக்காக' தனது தவிப்பை அக்கறையை பல விதங்களில் எழுத்தாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
ஃபோன் எடுத்து நேரம் பார்க்க, மூன்று முப்பது. சிலாபம் ரயில் வந்தது. பயமும் சேர்ந்து சுரந்தது.
ரெஸ்ரூம் போனவள் பல் துலக்கி முகம் கழுவி வந்தாள். சூடாக கோப்பியுன் காத்திருந்தான் வரோதயன். பருகியதும் பெட்டியில் ஏறி அமர்ந்தனர்.
தலைநகர் கொழும்பில் இருந்து 80 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள கடற்கரை நகரம் சிலாபம்.
வடமேல் மாகாணம் பழங்காலத்தில் முத்துக்குளிப்பிற்கு பெயர் போனது. பெரிய மீன்பிடி துறைமுகம் இன்றும் சிலாபத்தில் உண்டு.
பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான உலகம் புகழ்பெற்ற முன்னேஸ்வரம் கோவில் அங்கே அமைந்துள்ள. ராமர் சிவனை வழிபட்ட இடம் எனும் ஐதீகமும் உடையது.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என கலந்து வாழ்கின்றனர். மீன்பிடி, தென்னை, இறால் வளர்ப்பு முக்கிய தொழில்.
விடிந்தது சிலாபத்தை அடைந்தனர். ஸ்டேஷன் விட்டு வெளியேறி முட்சக்கர வண்டி தேடும் போது, எதிரில் உள்ள சைவ உணவகம் கண்ணில் பட்டது. "சாப்பிட்டு போவம்!" என்றான் வரோதயன்.
"
நீங்க சாப்பிட்டு வாங்க.. நான் இங்க இருக்கிறன்.." என அமர இடம் தேடியவளை பார்த்து நெற்றி சுரண்டினான்.
"பரவால்ல நீங்க போங்க வரோதயன்"
"
தங்கச்ச தேடத் தான் வேணும். பட்டினி கிடந்து தேடணும் எண்டு இல்ல. போற நாம எங்க எப்புடி அலைய போறம் எண்டு தெரியாது சைவக் கடையா இருக்கு. டீயாவது குடிச்சிட்டு போவம்.." வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.
டீயுடன் ஒரு உழுந்து வடையும் உட்கொள்ளவதற்கு தொண்டை வெகுவாக அவஸ்தை பட்டது.
வரோதயன் இட்லி சட்னி சாம்பாருடன் நிறைவாக சாப்பிட்டு கை அலம்பியதும் அவனது பசி உணர்ந்தவளுக்கு சங்கடம் இடுக்கியது.
ஆட்டோ காரன் முகவரி சிட்டையை பார்த்து சில ஆயிரங்கள் கேட்டான் கொண்டு விடுவதற்கு.
ஒத்துக் கொண்ட வரோதயன் பிரார்த்தனா ஆட்சேபித்து வார்த்தை வளர்ப்பாளோ என்று தயங்க, இதய லயம் கெட்டிருந்தவள் உள்ளே ஏறி அமர்ந்து விட்டாள்.
பஸ்ஸில் செல்ல வேண்டிய தூரம் அது. ஆட்டோ இவர்களை சுமந்து சென்று காம்பவுண்ட் வீட்டு வரிசைத் தெருவில் நிறுத்தியது.
"இது தான் ரோட்.." என்று பணத்தை வாங்கிக் கொண்டு போனது.
தெருவில்
பாடசாலை சிறுவர்கள் நடையிலும் சைக்கிள்களிலும் கடக்க, பிள்ளையை கை பிடியில் அழைத்து வந்த பெண்மணியிடம் விசாரித்தான் வரா.
நல்ல வேளை அவருக்கு தெரிந்து இருந்தது. அடையாங்கள் கூறி நேரே கை காட்டினார்.
வீட்டில் ஷ்யாம் இருப்பானா, நிலானி நிற்பாளா.. இருவரும் இல்லாமல் வேறெவரும் இருந்தால்?
"ஒழுங்கைல திரும்பி மூணாவது வீடு எண்டு சொன்னாங்க.. இடது கை பக்கமா இதானே மூணாவது" என்று குத்து மதிப்பாக அந்த வீட்டு கேட்டில் தட்டினான் வரோதயன்.
வீட்டு முற்றத்தில் பிள்ளைக்கு ஜடை போட்டுக் கொண்டிருந்த
பெண் வந்தாள். "யாரு?" என்றாள்.
"நாங்க ஷ்யாம் சேர்ர பார்க்க வந்திருக்கிறம்!"
வரோதயனை அச்சம் கலந்து நோக்கியவள் அவன் பின்னால் நின்ற பிரார்த்தனாவை சந்தேகமாக பார்த்தாள்.
"அம்மா, அப்பா கூப்பிடுறார்.." என்று உள்ளிருந்து பெண் பிள்ளை அழைக்க, "அப்பாவ வரச் சொல்லுங்க துஷிமா.." என்றாள் இவள்.
ஏழெட்டு இருக்கும் வயது. வெள்ளை சீருடையில் பள்ளிக் கூடம் செல்ல ஜடை போட்டிருந்த பிள்ளை அரை ரவுசர் டீஷர்டில் ஒருவனை கூட்டி வந்தது. பொண்டிங் தாடி கலைந்த தலையுடன் வயது முப்பது முப்பத்தைந்து சொல்லலாம்.
"யாரு?"
"ஷ்யாம்?"
"ஓம்.."
பிரார்த்தனா வரோயனை தாண்டி முன் வர, அவள் கரம் பற்றித் தடுத்து "உள்ளுக்கு வந்து கதைக்கலாமா நாங்க?" என்று தணிவாக கேட்டான் வரோதயன்.
அந்த தன்மை அவனை ஒத்துக் கொள்ள வைத்தது.