மன்னிப்பாயா காதலே - நிதனிபிரபு
அத்தியாயம் 1
ஜெர்மனியின் டுசல்டோர்ஃப் விமான நிலையம் என்றும்போல் அன்றும் மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. இலங்கை செல்வதற்காக அங்கு வந்திறங்கிய நாவினியைப் பழைய நினைவுகள் சுழற்றி அடித்தன. நெஞ்சுக்குள் எதுவோ அடைத்துக்கொண்டு வர, விழிகள் தானாகக் கலங்கின.
விமானப் பயணங்கள் அனைத்தும் அவளுக்கு மனத்தில் கனமோடே நிகழ்ந்திருக்கின்றன. என்ன, ஒவ்வொரு முறையும் பக்கத்தில் துனையாக அவள் குடும்பத்தில் யாரோ ஒருவர் இருந்தார். இந்தமுறை தனியாக. இனிக் காலம் முழுக்க அவள் தனிதான் என்கிற வலிமிகுந்த நிதர்சனத்தோடு பயணிக்கிறாள்.
சிவதாசன் அவளின் லக்கேஜை தள்ளிக்கொண்டு முன்னே நடக்க, அவரின் பின்னால் கூட்டத்தில் தொலைந்துபோன குழந்தையின் மனநிலையுடன் மேனகாவோடு சேர்ந்து நடந்தாள் நாவினி.
“அக்கா! எவ்வளவு பெரிய எயாபோர்ட் எண்டு பாத்தீங்களா?” என்ற சின்ன தம்பியின் குரலும், “செல்லக்குஞ்சு, அப்பா எங்க நிக்கிறார் எண்டு பாரன. எந்தப் பக்கம் பாத்தாலும் பளபளவெண்டு மின்னுறதில ஒண்டும் தெரியுதில்ல.” என்ற அன்னையின் கனிந்த குரலும் காதினுள் ஒலித்தன. பொது இடம் என்பதையும் மறந்து வெடித்து அழுதுவிடுவோமோ என்று பயந்துபோனாள் நாவினி.
ஒன்றுக்கு நான்கு உயிர்கள்! கொத்தாகப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள். ஐயோ ஐயோ என்று உள்ளம் இப்போதும் அலறித் துடித்தது. ஆற்றுவாரும் தேற்றுவாரும் இல்லாமல் இப்படித் தனியாக நிற்க வைத்துவிட்டுப் போவதற்குத்தான் மொத்த அன்பையும் அள்ளிக்கொட்டி வளர்த்தார்கள் போலும்.
அதிர்ந்து பேசவோ அதட்டிப் பேசவோ தெரியாதவள் நாவினி. அமைதிதான் அவள் சுபாவம். அவளின் அந்த மென்மையான குணமே அவளிடம் யாரையும் இலேசில் கோபப்பட விடாது. அப்படியானவளின் விழிகளின் ஓரத்தில் மரணவலி நிரந்தரமாகப் பதிந்தே போயிற்று.
அவளோடு நடந்து வந்துகொண்டிருந்த மேனாகாவிற்குள்ளும் பெரும் பரிதவிப்பு. எதையும் பேசி அவளை இன்னும் அழவைக்க வேண்டாம் என்று தன்னை அடக்கிக்கொண்டிருந்தார்.
ஆனாலும் மனம் கேளாமல், “ஒண்டுக்கும் யோசிக்கக் கூடாதம்மா. எங்கட நாவினிக்கு நாங்க இருக்கிறோம். அங்க நீங்க கொழும்பில போய் இறங்கினதும், உங்களக் கூட்டிக்கொண்டு போறதுக்கு அண்ணா வந்து நிப்பார். நீங்க பயப்பிடவே தேவையில்ல, சரியா?” என்றார் கனிவுடன்.
அந்தக் கனிவு கூட அவளை உடைத்தது. கண்ணீர் மல்கச் சரி என்று தலையை அசைத்தாள்.
இப்படிக் கண்ணீரைக் கண்களுக்குள் தேக்கியபடி இருப்பவளைக் கண்டு மேனகாவுக்கும் மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லை. எதையும் மனம் திறந்து பேசுகிற பெண்ணும் இல்லை. அதுவும் இப்போதெல்லாம் நத்தை ஓட்டுக்குள் சுருங்கிக்கொள்வதுபோல் இன்னுமே சுருங்கிக்கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் கலங்கிக் கிடந்த அவள் முகத்தைப் பார்க்க முடியாமல், “என்னம்மா இது? அழக் கூடாது. எதையும் யோசிக்கவும் கூடாது. காரணமில்லாம கடவுள் ஒண்டையும் செய்றேல்லையாம். தைரியமா இருக்கோணும் குஞ்சு.” என்று, அவளை அரவணைத்து முதுகில் தட்டிக்கொடுத்துச் சொன்னார்.
அப்படி, அவளின் மொத்தக் குடும்பத்தையும் பறித்ததற்கு என்ன காரணம் சொல்வாராம் கடவுள்? அப்படியே ஏதாவது சொன்னாலும் அது அவள் வலிக்கு ஈடாகுமா என்ன? மனம் குமுறினாலும், “ஓம் அன்ட்ரி. சொறி!” என்றபடி ஜீன்ஸ் பொக்கெட்டில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்துக் கண்களை ஒற்றிக்கொண்டாள். ஆனாலும், துடைக்க துடைக்க கண்ணீர் பெருகி வழிந்தது.
“தைரியம் சொல்லுறன் எண்டு நீங்களே அழவைக்கிறேல்ல மேனகா. நேரமாகுது வாங்கோ.” என்று பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்று, முதல் வேலையாக அவளுடைய லக்கேஜை போட்டார் சிவதாசன்.
அவள் கடவைக்குள் செல்வதற்கு முதல் உணவகத்துக்கு அழைத்து வந்தார். உணவுக்குச் சொல்லிவிட்டு வட்ட மேசையைச் சுற்றி மூவரும் அமர்ந்துகொண்டனர்.
மேனகாவிற்கு அவளைத் தனியாக அனுப்ப மனமேயில்லை. சம்மர் காலத்தில் ஆறு கிழமை விடுமுறை எடுத்திருந்த காரணத்தினால் அவரால் இந்தமுறை வேலையில் விடுமுறை எடுக்க முடியவில்லை. நாவினியின் இந்தப் பயணமும் தள்ளிப்போடும் நிலையில் இல்லை. அதனால் மட்டுமே அவளைத் தனியாக அனுப்பச் சம்மதித்தார்.
எல்லாம் சரிதான். கண்ணீரைக் கண்களுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, அவர்களுக்காகச் சாப்பிடுகிறேன் என்று காட்டிக்கொண்டிருந்தவளைப் பார்க்கையில் அவர் உள்ளமும் பெரும் இரைச்சலுடன் ஓலமிட்டது.
“காணி உறுதி எல்லாம் கொண்டுபோறீங்கதானே? தனியா போய் என்ன செய்யப்போறன், எனக்கு ஆர் இருக்கினம் எண்டெல்லாம் நினைக்கக் கூடாது. மாதவனிட்ட எல்லாம் சொல்லியிருக்கிறன். இப்பவே பாதி வேலைய அவர் முடிச்சிட்டார். மிச்சத்தையும் அவரே பாப்பார். ஆர் என்ன சொன்னாலும், என்ன வெருட்டினாலும் மாதவனிட்டச் சொல்லுங்கோ. ஒண்டுக்கும் யோசிக்கக் கூடாது.” கனிவையும் கண்டிப்பையும் சரி விகிதத்தில் கலந்து அவளுக்குத் தெம்பூட்டும் விதமாகப் பேசினார் சிவதாசன்.
“நன்றி அங்கிள். நீங்க எல்லாரும் இல்லாட்டி…” என்றவளால் மேலே பேச முடியவில்லை. இதழ்கள் நடுங்கக் கண்ணீர் கன்னத்தைத் தொட்டிருந்தன.
நாவினி வசிக்கும் அதே ஊரில், அதே தெருவில் நான்கு வீடுகள் தள்ளி இருக்கிறார்கள் சிவதாசன் குடும்பத்தினர். நெருங்கிய நண்பர்கள். ஆனால் இன்று, அவளைச் சொந்தப் பெண்போல் கவனித்துக்கொள்பவர்கள்.
“உனக்கு என்ன விசாராம்மா? நீ எங்கட பிள்ளையாச்சி. சும்மா நன்றி அது இதெல்லாம் சொல்லி எங்களைத் தள்ளி வைக்கிறேல்ல!” அதட்டியபடி எழுந்துவந்து அவளைத் தன் வயிற்றுடன் சேர்த்து அணைத்துக்கொண்டார் மேனகா.
அந்தச் செய்கை அன்னையை நினைவூட்டிவிட, அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு சத்தமே இல்லாமல் கண்ணீர் உகுத்தாள் நாவினி.
அம்மா, அப்பா, இரண்டு தம்பிகள் என்று தேன்கூடு போன்று அழகான குடும்பம் அவளது. ஒரு தடவை அந்த முழு வாரமும் மொத்தக் குடும்பத்துக்கும் விடுமுறையாக அமைந்து வந்தது. இப்படி விடுமுறை கிடைத்தால் அதை அவர்கள் சும்மா விடுவதே இல்லை. அந்த முறையும் ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினைச் சென்று பார்த்துவரலாம் என்று புறப்பட்டிருந்தார்கள்.
நாவினிதான் காரை எடுத்தாள். அவளருகில் தந்தை நாகரத்தினம். பின்னால் அன்னையை ஒரு பக்கமாக விட்டுவிட்டுத் தம்பிகள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் எப்போதும் அப்படித்தான். எவ்வளவுதான் சண்டை பிடித்தாலும் சேர்ந்துதான் இருப்பார்கள்.
பாட்டும் கும்மாளமும் என்று உற்சாகமாகப் போய்க்கொண்டிருந்தது பயணம். ஒரு பெரிய சந்தியின் சிக்கனலில் நிறுத்தியிருந்தாள். இவளுக்குப் பச்சை விழுகையில் வலப்பக்கமாகத் திரும்ப வேண்டும். அதேபோல் பச்சையும் விழுந்தது.
இவள் வலப்பக்கமாகத் திருப்பிய வேளையில், நேரெதிரில் வந்த பார ஊர்தி ஒன்று, தன் கட்டுப்பாட்டை இழந்து, சிவப்பு விளக்கு எரிந்தும் நிறுத்த முடியாமல் வந்து, இவர்கள் காரின் பக்கவாட்டில் மோதியது. அதன் பிறகும் அதனால் நிறுத்த முடியாமல் போனதில், இடித்துத் தள்ளிச் சென்ற அந்தப் பார ஊர்தியினுள் கிட்டத்தட்ட இவர்களின் கார் அகப்பட்டு நசியுண்டு போயிற்று.
அந்தப் பக்கமாக இருந்த அப்பாவும் இரண்டு தம்பிகளும் அந்த இடத்திலேயே, அதுவும் பார ஊர்திக்குள் நசியுண்டு இறந்துபோயினர். அவளும் அன்னையும் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்கள்.
ஒரு வாரம் கழிந்த நிலையில் அவள் அன்னையும் அவளை விட்டுப் போயிருந்தார். இதெல்லாம் நடந்து ஒன்றரை வருடங்களாயிற்று. இன்னுமே அவளால் அதிலிருந்து கொஞ்சமும் வெளிவர முடியவில்லை.
நேரமாகிவிட்டதில் கண்ணீரும் அணைப்புமாக அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டாள் நாவினி. தைரியமான வார்த்தைகள் பல சொல்லி அவளை அனுப்பிவைத்தாலும் தானும் கூடப் போயிருக்கலாமோ என்று அந்தரித்துப்போனார் மேனகா.
இந்தளவில் மேனகா கலங்கும் அளவிற்கு அவள் சிறு பெண் அல்லள். பக்குவமற்ற நடத்தைகள் கொண்டவளும் அல்லள். இருபத்தி ஏழு வயது நிரம்பியவள். பொறுப்பானவள். பதினேழு வயதில் ஜெர்மனிக்கு வந்தாலும் மிக நன்றாகவே மொழியைப் படித்து, கல்வியும் கற்று, ஜெர்மனியின் வங்கி ஒன்றில் வாங்கிக்கடன்கள் பெற்றுக்கொடுக்கும் பகுதிக்கு வங்கி மேலாளராக இருக்கிறாள்.
அவள் அங்கே அனைத்து செக்கிங்குகளும் முடித்து, விமானம் ஏறுவதற்குக் காத்திருக்கும் பகுதிக்குள் சென்றுவிட்டாளாம் என்று அழைத்துச் சொன்ன பிறகே, கணவன் மனைவி இருவரும் புறப்பட்டனர்.
“இந்தப் பயணத்த முடிச்சுக்கொண்டு வரட்டும். எப்பிடியாவது ஒரு கலியாணத்தக் கட்டி வச்சிடோணும்.” விமானநிலையத்தின் வாகன நெரிசல்களுக்குள் இருந்து சிவதாசன் காரை வெளியில் எடுத்து, அதிவேக வீதியில் இணைத்துக்கொள்ளும் வரை பொறுத்திருந்துவிட்டுச் சொன்னார் மேனகா.
அத்தியாயம் 1
ஜெர்மனியின் டுசல்டோர்ஃப் விமான நிலையம் என்றும்போல் அன்றும் மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. இலங்கை செல்வதற்காக அங்கு வந்திறங்கிய நாவினியைப் பழைய நினைவுகள் சுழற்றி அடித்தன. நெஞ்சுக்குள் எதுவோ அடைத்துக்கொண்டு வர, விழிகள் தானாகக் கலங்கின.
விமானப் பயணங்கள் அனைத்தும் அவளுக்கு மனத்தில் கனமோடே நிகழ்ந்திருக்கின்றன. என்ன, ஒவ்வொரு முறையும் பக்கத்தில் துனையாக அவள் குடும்பத்தில் யாரோ ஒருவர் இருந்தார். இந்தமுறை தனியாக. இனிக் காலம் முழுக்க அவள் தனிதான் என்கிற வலிமிகுந்த நிதர்சனத்தோடு பயணிக்கிறாள்.
சிவதாசன் அவளின் லக்கேஜை தள்ளிக்கொண்டு முன்னே நடக்க, அவரின் பின்னால் கூட்டத்தில் தொலைந்துபோன குழந்தையின் மனநிலையுடன் மேனகாவோடு சேர்ந்து நடந்தாள் நாவினி.
“அக்கா! எவ்வளவு பெரிய எயாபோர்ட் எண்டு பாத்தீங்களா?” என்ற சின்ன தம்பியின் குரலும், “செல்லக்குஞ்சு, அப்பா எங்க நிக்கிறார் எண்டு பாரன. எந்தப் பக்கம் பாத்தாலும் பளபளவெண்டு மின்னுறதில ஒண்டும் தெரியுதில்ல.” என்ற அன்னையின் கனிந்த குரலும் காதினுள் ஒலித்தன. பொது இடம் என்பதையும் மறந்து வெடித்து அழுதுவிடுவோமோ என்று பயந்துபோனாள் நாவினி.
ஒன்றுக்கு நான்கு உயிர்கள்! கொத்தாகப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள். ஐயோ ஐயோ என்று உள்ளம் இப்போதும் அலறித் துடித்தது. ஆற்றுவாரும் தேற்றுவாரும் இல்லாமல் இப்படித் தனியாக நிற்க வைத்துவிட்டுப் போவதற்குத்தான் மொத்த அன்பையும் அள்ளிக்கொட்டி வளர்த்தார்கள் போலும்.
அதிர்ந்து பேசவோ அதட்டிப் பேசவோ தெரியாதவள் நாவினி. அமைதிதான் அவள் சுபாவம். அவளின் அந்த மென்மையான குணமே அவளிடம் யாரையும் இலேசில் கோபப்பட விடாது. அப்படியானவளின் விழிகளின் ஓரத்தில் மரணவலி நிரந்தரமாகப் பதிந்தே போயிற்று.
அவளோடு நடந்து வந்துகொண்டிருந்த மேனாகாவிற்குள்ளும் பெரும் பரிதவிப்பு. எதையும் பேசி அவளை இன்னும் அழவைக்க வேண்டாம் என்று தன்னை அடக்கிக்கொண்டிருந்தார்.
ஆனாலும் மனம் கேளாமல், “ஒண்டுக்கும் யோசிக்கக் கூடாதம்மா. எங்கட நாவினிக்கு நாங்க இருக்கிறோம். அங்க நீங்க கொழும்பில போய் இறங்கினதும், உங்களக் கூட்டிக்கொண்டு போறதுக்கு அண்ணா வந்து நிப்பார். நீங்க பயப்பிடவே தேவையில்ல, சரியா?” என்றார் கனிவுடன்.
அந்தக் கனிவு கூட அவளை உடைத்தது. கண்ணீர் மல்கச் சரி என்று தலையை அசைத்தாள்.
இப்படிக் கண்ணீரைக் கண்களுக்குள் தேக்கியபடி இருப்பவளைக் கண்டு மேனகாவுக்கும் மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லை. எதையும் மனம் திறந்து பேசுகிற பெண்ணும் இல்லை. அதுவும் இப்போதெல்லாம் நத்தை ஓட்டுக்குள் சுருங்கிக்கொள்வதுபோல் இன்னுமே சுருங்கிக்கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் கலங்கிக் கிடந்த அவள் முகத்தைப் பார்க்க முடியாமல், “என்னம்மா இது? அழக் கூடாது. எதையும் யோசிக்கவும் கூடாது. காரணமில்லாம கடவுள் ஒண்டையும் செய்றேல்லையாம். தைரியமா இருக்கோணும் குஞ்சு.” என்று, அவளை அரவணைத்து முதுகில் தட்டிக்கொடுத்துச் சொன்னார்.
அப்படி, அவளின் மொத்தக் குடும்பத்தையும் பறித்ததற்கு என்ன காரணம் சொல்வாராம் கடவுள்? அப்படியே ஏதாவது சொன்னாலும் அது அவள் வலிக்கு ஈடாகுமா என்ன? மனம் குமுறினாலும், “ஓம் அன்ட்ரி. சொறி!” என்றபடி ஜீன்ஸ் பொக்கெட்டில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்துக் கண்களை ஒற்றிக்கொண்டாள். ஆனாலும், துடைக்க துடைக்க கண்ணீர் பெருகி வழிந்தது.
“தைரியம் சொல்லுறன் எண்டு நீங்களே அழவைக்கிறேல்ல மேனகா. நேரமாகுது வாங்கோ.” என்று பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்று, முதல் வேலையாக அவளுடைய லக்கேஜை போட்டார் சிவதாசன்.
அவள் கடவைக்குள் செல்வதற்கு முதல் உணவகத்துக்கு அழைத்து வந்தார். உணவுக்குச் சொல்லிவிட்டு வட்ட மேசையைச் சுற்றி மூவரும் அமர்ந்துகொண்டனர்.
மேனகாவிற்கு அவளைத் தனியாக அனுப்ப மனமேயில்லை. சம்மர் காலத்தில் ஆறு கிழமை விடுமுறை எடுத்திருந்த காரணத்தினால் அவரால் இந்தமுறை வேலையில் விடுமுறை எடுக்க முடியவில்லை. நாவினியின் இந்தப் பயணமும் தள்ளிப்போடும் நிலையில் இல்லை. அதனால் மட்டுமே அவளைத் தனியாக அனுப்பச் சம்மதித்தார்.
எல்லாம் சரிதான். கண்ணீரைக் கண்களுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, அவர்களுக்காகச் சாப்பிடுகிறேன் என்று காட்டிக்கொண்டிருந்தவளைப் பார்க்கையில் அவர் உள்ளமும் பெரும் இரைச்சலுடன் ஓலமிட்டது.
“காணி உறுதி எல்லாம் கொண்டுபோறீங்கதானே? தனியா போய் என்ன செய்யப்போறன், எனக்கு ஆர் இருக்கினம் எண்டெல்லாம் நினைக்கக் கூடாது. மாதவனிட்ட எல்லாம் சொல்லியிருக்கிறன். இப்பவே பாதி வேலைய அவர் முடிச்சிட்டார். மிச்சத்தையும் அவரே பாப்பார். ஆர் என்ன சொன்னாலும், என்ன வெருட்டினாலும் மாதவனிட்டச் சொல்லுங்கோ. ஒண்டுக்கும் யோசிக்கக் கூடாது.” கனிவையும் கண்டிப்பையும் சரி விகிதத்தில் கலந்து அவளுக்குத் தெம்பூட்டும் விதமாகப் பேசினார் சிவதாசன்.
“நன்றி அங்கிள். நீங்க எல்லாரும் இல்லாட்டி…” என்றவளால் மேலே பேச முடியவில்லை. இதழ்கள் நடுங்கக் கண்ணீர் கன்னத்தைத் தொட்டிருந்தன.
நாவினி வசிக்கும் அதே ஊரில், அதே தெருவில் நான்கு வீடுகள் தள்ளி இருக்கிறார்கள் சிவதாசன் குடும்பத்தினர். நெருங்கிய நண்பர்கள். ஆனால் இன்று, அவளைச் சொந்தப் பெண்போல் கவனித்துக்கொள்பவர்கள்.
“உனக்கு என்ன விசாராம்மா? நீ எங்கட பிள்ளையாச்சி. சும்மா நன்றி அது இதெல்லாம் சொல்லி எங்களைத் தள்ளி வைக்கிறேல்ல!” அதட்டியபடி எழுந்துவந்து அவளைத் தன் வயிற்றுடன் சேர்த்து அணைத்துக்கொண்டார் மேனகா.
அந்தச் செய்கை அன்னையை நினைவூட்டிவிட, அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு சத்தமே இல்லாமல் கண்ணீர் உகுத்தாள் நாவினி.
அம்மா, அப்பா, இரண்டு தம்பிகள் என்று தேன்கூடு போன்று அழகான குடும்பம் அவளது. ஒரு தடவை அந்த முழு வாரமும் மொத்தக் குடும்பத்துக்கும் விடுமுறையாக அமைந்து வந்தது. இப்படி விடுமுறை கிடைத்தால் அதை அவர்கள் சும்மா விடுவதே இல்லை. அந்த முறையும் ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினைச் சென்று பார்த்துவரலாம் என்று புறப்பட்டிருந்தார்கள்.
நாவினிதான் காரை எடுத்தாள். அவளருகில் தந்தை நாகரத்தினம். பின்னால் அன்னையை ஒரு பக்கமாக விட்டுவிட்டுத் தம்பிகள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் எப்போதும் அப்படித்தான். எவ்வளவுதான் சண்டை பிடித்தாலும் சேர்ந்துதான் இருப்பார்கள்.
பாட்டும் கும்மாளமும் என்று உற்சாகமாகப் போய்க்கொண்டிருந்தது பயணம். ஒரு பெரிய சந்தியின் சிக்கனலில் நிறுத்தியிருந்தாள். இவளுக்குப் பச்சை விழுகையில் வலப்பக்கமாகத் திரும்ப வேண்டும். அதேபோல் பச்சையும் விழுந்தது.
இவள் வலப்பக்கமாகத் திருப்பிய வேளையில், நேரெதிரில் வந்த பார ஊர்தி ஒன்று, தன் கட்டுப்பாட்டை இழந்து, சிவப்பு விளக்கு எரிந்தும் நிறுத்த முடியாமல் வந்து, இவர்கள் காரின் பக்கவாட்டில் மோதியது. அதன் பிறகும் அதனால் நிறுத்த முடியாமல் போனதில், இடித்துத் தள்ளிச் சென்ற அந்தப் பார ஊர்தியினுள் கிட்டத்தட்ட இவர்களின் கார் அகப்பட்டு நசியுண்டு போயிற்று.
அந்தப் பக்கமாக இருந்த அப்பாவும் இரண்டு தம்பிகளும் அந்த இடத்திலேயே, அதுவும் பார ஊர்திக்குள் நசியுண்டு இறந்துபோயினர். அவளும் அன்னையும் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்கள்.
ஒரு வாரம் கழிந்த நிலையில் அவள் அன்னையும் அவளை விட்டுப் போயிருந்தார். இதெல்லாம் நடந்து ஒன்றரை வருடங்களாயிற்று. இன்னுமே அவளால் அதிலிருந்து கொஞ்சமும் வெளிவர முடியவில்லை.
நேரமாகிவிட்டதில் கண்ணீரும் அணைப்புமாக அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டாள் நாவினி. தைரியமான வார்த்தைகள் பல சொல்லி அவளை அனுப்பிவைத்தாலும் தானும் கூடப் போயிருக்கலாமோ என்று அந்தரித்துப்போனார் மேனகா.
இந்தளவில் மேனகா கலங்கும் அளவிற்கு அவள் சிறு பெண் அல்லள். பக்குவமற்ற நடத்தைகள் கொண்டவளும் அல்லள். இருபத்தி ஏழு வயது நிரம்பியவள். பொறுப்பானவள். பதினேழு வயதில் ஜெர்மனிக்கு வந்தாலும் மிக நன்றாகவே மொழியைப் படித்து, கல்வியும் கற்று, ஜெர்மனியின் வங்கி ஒன்றில் வாங்கிக்கடன்கள் பெற்றுக்கொடுக்கும் பகுதிக்கு வங்கி மேலாளராக இருக்கிறாள்.
அவள் அங்கே அனைத்து செக்கிங்குகளும் முடித்து, விமானம் ஏறுவதற்குக் காத்திருக்கும் பகுதிக்குள் சென்றுவிட்டாளாம் என்று அழைத்துச் சொன்ன பிறகே, கணவன் மனைவி இருவரும் புறப்பட்டனர்.
“இந்தப் பயணத்த முடிச்சுக்கொண்டு வரட்டும். எப்பிடியாவது ஒரு கலியாணத்தக் கட்டி வச்சிடோணும்.” விமானநிலையத்தின் வாகன நெரிசல்களுக்குள் இருந்து சிவதாசன் காரை வெளியில் எடுத்து, அதிவேக வீதியில் இணைத்துக்கொள்ளும் வரை பொறுத்திருந்துவிட்டுச் சொன்னார் மேனகா.
Last edited by a moderator: