• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என்னைக் களவாட வந்தவளே - 26

Vishakini

Moderator
Staff member



அத்தியாயம் 26:



அந்தப் பெரிய தோட்டத்தில் பூங்கொடியின் உடைந்த வளையல் துண்டுகள் இளமாறனின் கைகளில் ரத்தச் சிவப்பாய் குத்தின. அவனது கண்கள் கோபத்தில் சிவந்து போயிருந்தன.


"பொறுக்கிப்பய கருணாகரன்... அவன் வேலையாத்தான் இருக்கும்! ஊரை விட்டு விரட்டினதுக்கு இப்படியா பழி வாங்குவான்?" என பொற்செழியன் ஆவேசத்தில் கத்தினான்.


"இல்ல மச்சான்... கருணாகரன் தனியா இதைப் பண்ணத் துணிய மாட்டான். அவனுக்குப் பின்னாடி யாரோ ஒரு பெரிய கை இருக்கு. அந்த கலையரசன் தான் இதுக்கு காரணமா இருக்கணும்!" என்றான் இளமாறன், தன் சட்டையை மடித்துவிட்டபடி.




இளமாறன் உடனே தன் நண்பர்களுக்கு போன் செய்து, கோயம்புத்தூர் செல்லும் அனைத்துச் சாலைகளையும் கண்காணிக்கச் சொன்னான். செந்தூர் பாண்டியன் மற்றும் இளஞ்செழியன் இருவரும் தங்கள் பைக்குகளில் வெவ்வேறு திசைகளில் பாய்ந்தனர்.


மறுபுறம், ஒரு பழைய பாழடைந்த கிடங்கிற்கு பூங்கொடி கொண்டு செல்லப்பட்டாள். அவளது கைகள் கட்டப்பட்டிருக்க, எதிரே கருணாகரன் நக்கலாகச் சிரித்துக்கொண்டிருந்தான்.


"என்ன பூங்கொடி? பட்டுப் புடவை கட்டி மாப்பிள்ளைக்காகக் காத்துட்டு இருந்தியா? இப்போ நான் தான் உன் மாப்பிள்ளை. உன் இளமாறன் இப்போ எங்க தேடுறானோ தெரியலையே!" என அவள் முகத்தில் கை வைத்தான் கருணாகரன்.



பூங்கொடி சீறினாள், "உன் கைய எடுடா! என் அத்தான் வந்தா உன்னை உயிரோட விடமாட்டாரு. செத்துடுவ நீ!"


கருணாகரன் பலமாகச் சிரித்துவிட்டு, கலையரசனுக்கு போன் செய்தான். "வேலை முடிஞ்சது கலையரசன்... பொண்ணு இப்போ என் கஸ்டடில தான் இருக்கா. இளமாறன் இனி அவ முகத்துல முழிக்கவே முடியாது."



இளமாறனின் கார் நெடுஞ்சாலையில் 120 கி.மீ வேகத்தில் பறந்தது. வழியில் ஒரு சிசிடிவி கேமராவின் காட்சிகளை வைத்து, கார் செல்லும் திசையை அவன் கணித்துவிட்டான். அவனது வேட்டை நாயின் கண்கள் அந்தப் பழைய கிடங்கை நோக்கித் திரும்பின.



"மச்சான்... அங்கே பாரு, கருணாகரனோட வெள்ளை நிற கார் நிக்குது!" என பொற்செழியன் கத்தினான்.
காரை பிரேக் போட்டு நிறுத்திய இளமாறன், ஒரு பெரிய இரும்புத் தடியை எடுத்துக்கொண்டான்.



"இன்னைக்கு அந்த கருணாகரன் உயிரோட இருக்கக்கூடாது. மச்சான்... நீ பின்னாடி வழியா போ, நான் முன்னாடி போறேன். அப்படியே மச்சான் ரெண்டு பேருக்கும் கால் பண்ணி சொல்லிரு," எனச் சொல்லிவிட்டு புயலாக உள்ளே நுழைந்தான்.



அந்தப் பாழடைந்த கிடங்கிற்குள் பூங்கொடி தூக்கி வீசப்பட்டாள். அவளது நிச்சயதார்த்தப் பட்டுப்புடவை அங்கங்கே கிழிந்து, கலைந்து போயிருந்தது. எதிரே கருணாகரன் மதுவின் போதையிலும், பழைய பகையின் வெறியிலும் கொடூரமாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.



"இளமாறன் கிட்ட அடி வாங்கிட்டு ஓடினேன்னு பார்த்தியா? இப்போ அவன் உயிராவே நினைக்கிற உன்னை அவன் கண்ணு முன்னாடியே சிதைப்பேன்டி!" எனச் சொல்லி, பூங்கொடியின் தோள் மீது கிடந்த அவளது பட்டுச் சேலையின் முந்தானையைப் பற்றி வன்முறையாக உருவினான்.


"ஐயோ! அத்தான்... அண்ணே... யாராவது காப்பாத்துங்க!" என பூங்கொடி கதறினாள். ஆனால் அந்தக் காலி இடத்தில் அவள் குரல் எதிரொலித்து அடங்கியது.


இளமாறன் உள்ளே செல்ல வழி தெரியாமல் தேடிக் கொண்டிருந்தான். அப்போதே செந்தூரனும், இளஞ்செழியனும் வந்து விட்டனர். மூவரும் முன்பக்கம் பார்க்க பொற்செழியன் பின்பக்கம் தேடிக் கொண்டிருந்தான்.

கருணாகரன் அவளை நெருங்க முயன்றபோது, கிடங்கின் இரும்புக்கதவு "தடால்" என உடைந்து தெறித்தது.



வாசலில் இளமாறன், கண்கள் சிவக்க, கையில் ஒரு பெரிய இரும்புச் சங்கிலியுடன் நின்றிருந்தான். அவனுக்கு இருபுறமும் பூங்கொடியின் அண்ணன்கள் இளஞ்செழியனும், செந்தூர் பாண்டியனும் கையில் அரிவாளுடன் எமனாக வந்து நின்றனர்.



தன்னுடைய தங்கையின் சேலை கலைந்து, அவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த இளஞ்செழியன் கர்ஜித்தான். "டேய் பரதேசி! என் தங்கச்சி மேல கையை வச்சிட்ட இல்ல... இன்னைக்கு நீ உசிரோட இருக்கக் கூடாதுடா!"


இளமாறன் யாரிடமும் எதுவும் பேசவில்லை. பாய்ந்து வந்து கருணாகரனின் கழுத்தைப் பற்றிச் சுவரோடு சேர்த்தார். "எனக்கு பொண்டாட்டி ஆக போறவ மேல கை வைக்கணும்னு நினைச்சியாலே... அந்த கை உனக்கு இருக்கக் கூடாது!" எனச் சொல்லி அவன் கையைப் பிடித்து ஒடித்தான். எலும்பு முறியும் சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது.



மற்ற அடியாட்கள் தாக்க வர, செந்தூர் பாண்டியன் தன் கையில் இருந்த அரிவாளைச் சுழற்றினான். "எங்க குடும்பத்து மானத்தையே தொடப் பார்த்த உங்களை வெட்டாம விடமாட்டோம்டா!" எனச் சொல்லி முன்னால் வந்த மூவரை நிலைகுலைக்கச் செய்தான்.



பொற்செழியன் சத்தம் கேட்டு வந்தவன் அடியாட்களைத் துவம்சம் செய்துவிட்டு, ஓடிச் சென்று தரையில் விழுந்து கிடந்த பூங்கொடியைத் தன் மேல் சட்டையை கழற்றி போர்த்தி அணைத்துக் கொண்டான். "பயப்படாதடா பூவு... உன் அண்ணன்ங்க நாங்க இருக்கோம். இனி உன்னை ஒருத்தனும் தொட முடியாது," என அவளைத் தேற்றினான்.



இளமாறன் கருணாகரனை ரத்த வெள்ளத்தில் மிதித்துவிட்டு, தன் சட்டைப் பையிலிருந்த போனை எடுத்து கலையரசனுக்கு 'வீடியோ கால்' செய்தான்.
மறுமுனையில் பதட்டமாகப் பேசிய கலையரசனிடம், ரத்தக் கறையுடன் இருக்கும் கருணாகரனைக் காட்டினான். "பார்த்துக்கோ கலையரசன்... உன் ஆளுக்கு நடந்த கதி தான் உனக்கும். இது வெறும் ஆரம்பம் தான்.


இனி பூங்கொடியைத் தொடணும்னு நினைச்சா, அந்த நிமிஷமே உன் குடும்பமே இருக்காது!" என கர்ஜித்தான் இளமாறன்.
இளஞ்செழியனும், செந்தூர் பாண்டியனும் பூங்கொடியைப் பத்திரமாகத் தாங்கிப் பிடித்துக் கொள்ள, இளமாறன் அவளது கையைப் பற்றினான்.


கிடங்கில் நடந்த அந்த ரத்த சரித்திரத்திற்குப் பிறகு, இளமாறன் தன் கையில் இருந்த சங்கிலியைத் தூர எறிந்தான். பூங்கொடி இன்னும் அதிர்ச்சியில் இளஞ்செழியனின் தோள்களில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள்.


செந்தூர் பாண்டியன் ஆத்திரத்துடன் கருணாகரனின் முடியைப் பிடித்துத் தூக்கினான். "டேய்! எங்க குடும்பத்துத் தங்கச்சியையே சீண்டுற அளவுக்கு உனக்குத் திமிர் வந்துடுச்சா? இவனை இங்கேயே முடிச்சுடலாம் மாறா," என்று இளமாறனைப் பார்த்துச் சத்தமிட்டான்.


"வேண்டாம் மச்சான்... இவனைப் போட்டுத் தள்ளுறது ஒரு நிமிஷ வேலை. ஆனா இவனை வச்சே அந்த கலையரசனுக்கு ஒரு பாடம் புகட்டணும்!" என்றான் இளமாறன் ஆக்ரோஷமாக....
 
Top Bottom