செம்புலம் 11
மேதினூர்:
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த பாரி, கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவனின் ஆழ்மனதில் படிப்பு முடித்த நிம்மதியை விட, குடும்பத்தின் மீதான ஏக்கம் தான் அதிகமாக இருந்தது.
இத்தனை ஆண்டுகள் லண்டனில் இருந்தபோது கிடைக்காத ஒரு கதகதப்பு, தனது ஊர் மண்ணில் கால் வைத்தவுடன் அவனுக்குக் கிடைத்ததை போல உணர்ந்தவன் எங்கே தன்னைச் சேர்ந்தவர்கள் யாரையும் காணுமென்று சுற்றி பார்க்க, அவனது வீட்டினரைத் தவிர எல்லாருக்கும் ஆட்கள் வந்திருப்பது தெரிந்தது.
ஒரு புள்ள இத்தனை வருஷம் கழிச்சு ஊருக்கு வரானே அவனை வரவேற்கணும் என்கிற எண்ணம் கொஞ்சமாவது இருக்கா?. சரி அவங்களுக்கு தான் இல்ல கூட பிறந்த ஒருத்தி இருக்கிறாளே அண்ணா நீதான் என் உயிர் நீ இல்லன்னாக்க எனக்கு உலகமே இல்லை என்றவளுக்கு கூட பாசம் இல்லையேடா பாரி என்று புலம்பிக் கொண்டிருக்கும்போது சின்னத்தம்பி என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க,அவர்கள் வீட்டின் டிரைவர் தான் நின்றார்.
வாங்க சின்ன தம்பி உங்களை அழைச்சிட்டு போக தான் நான் வந்திருக்கிறேன் என்கவும், அப்படிங்களா மாமா, நல்லா இருக்கீங்களா?.வீட்டில் அத்தை மனோ கனி நல்லா இருக்காங்களா என்றான்.
எல்லாரும் நல்லா இருக்காங்க தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க? படிப்பு எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா என்று அவனது லக்கேஜை வாங்கிக் கொண்டவர் பேசிக்கொண்டே கார் நிற்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் லக்கேஜை பின்னாடி வைத்துவிட்டு இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர, வீடே அன்று திருவிழா கோலம் பூண்டிருந்தது.
அந்த அலங்காரத்தை பார்த்து சிரித்துக் கொண்டே காரில் இருந்து கீழே இறங்கினான். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடியிருக்க, மாலை நேரத்து மின்னொளியில் அந்தத் தோட்டம் பளபளப்பாக ஜொலித்தது.
மகன் வந்திறங்கியதும் அவனது அப்போ சேயோன், கண்ணா என்றவாறு வேகமாக வந்தவரோ மகனை இறுக்கி அணைத்துக் கொண்டவரின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது.
ம்ம்...என்றவாறு மகனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு போ கண்ணா..ரெடி ஆகி வா என்று மகனை உள்ளே அனுப்பி வைத்தார்.
அவனும் வேகமாக வீட்டிற்குள் வரவும், ப்பே என்ற சத்தம் கேட்க அங்கே அவனது தங்கை பவதாரணி குரங்கு முகமூடி போட்டுக் கொண்டிருக்கவும், ஹாய் மங்கி என்றான்.
அதைக் கேட்டவள் அண்ணா என்று சிணுங்கி கொண்டே முகமூடியை கழட்ட இப்பொழுது தனது தங்கையின் ஒரிஜினல் முகத்தை பார்த்தவன் அய்யய்யோ பேய் என்று அலறி அடித்துக் கொண்டு படிகளில் ஏறி மேலே ஓடினான்.
அரை மணி நேரம் கடந்து இருந்தது.
மின்னும் தோரணங்கள், மெல்லிய இசை, நண்பர்களின் கேலிப்பேச்சு என பாரின் வீடு திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. நீல நிறப் பட்டுச் சட்டையில் பாரி கம்பீரமாகத் தெரிந்தாலும், அவனது கண்கள் மட்டும் ஏதோ ஒன்றைத் தேடி வாசல் பக்கமே அலைபாய்ந்து கொண்டிருந்தன.
சரியாக அந்தத் தருணத்தில், "எங்கப்பா அந்தப் பிறந்தநாள் நாயகன்?" என்ற குரலுடன் பாரி-யின் தாய் மாமா குடும்பத்தினர் உள்ளே நுழைந்தனர்.
மாமாவும் அத்தையும் பாரியை அணைத்து வாழ்த்துக் கூறிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பின்னால் ஒரு மெல்லிய நிழலாக வந்து நின்றாள் மலர்விழி (அவன் மாமா மகள்).
பாரியின் பார்வை அவள் மீது விழுந்த அந்த நொடி... அவன் உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்தது. அவன் நினைவில் இருந்த மலர், இரண்டு ஜடைகளுடன், மூக்கு முனையில் வியர்க்க ஓடித் திரியும் ஒரு சுட்டிப் பெண். ஆனால், இப்போது அவன் முன்னே நிற்பது?
கல்லூரிப் படிப்பு ஒரு பெண்ணுக்குள் அறிவை மட்டுமல்ல, ஒரு வசீகரமான முதிர்ச்சியையும் கொண்டு வரும் என்பதற்கு மலர் தான் சாட்சியாக நின்றாள். பாரியின் பிறந்தநாள் விழா மேடையில் அவள் ஏறியபோது, அங்கிருந்த விளக்குகளின் வெளிச்சம் அவளது முகப் பொலிவிடம் சற்றுத் தோற்றுப் போனது போல இருந்தது.
பள்ளிச் சீருடையில் பார்த்த அந்தச் சிறுமி, இன்று இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு பட்டதாரிப் பெண்ணாகத் தன் முன்னே நிற்பதை பாரியால் நம்பவே முடியவில்லை.
கல்லூரிப் பருவம் அவளுக்கு ஒரு கம்பீரமான நடையையும், தீர்க்கமான பார்வையும் தந்திருந்தது. கலைநயமிக்க சுடிதாரில், காற்றில் ஆடும் அவளது கூந்தலும், எதற்கும் அஞ்சாத அந்தப் புத்திசாலித்தனமான கண்களும் பாரியை ஒரு நிமிடம் நிலைகுலையச் செய்தன என்பது மறுக்க முடியாத உண்மை.
அவர்கள் கம்பெனிக்கு மலர் தான் ஆடிட்டராக இருக்கிறாள்.
"சில ஆண்டுகள் முன்பு வரை என் பின்னால் ஓடி வந்த சிறுமி, இன்று இவ்வளவு அழகாக, அறிவார்ந்த பெண்ணாக மாறிவிட்டாளே!" என்று வியந்து போனான். அவளது அமைதியிலும் ஒரு அதிகாரம் இருந்தது. அந்தப் பேரழகைப் பார்த்த மாத்திரத்தில், பாரியின் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத ராகம் ஒலிக்கத் தொடங்கியது.
மலருக்கும் அதே நிலைதான். கல்லூரித் தோழர்கள் பலரைப் பார்த்திருந்தாலும், தன் அத்தை மகனிடம் இன்று அவள் கண்ட அந்த 'ஆண்மை கலந்த மென்மை' அவளைப் பெரிதும் ஈர்த்தது.
பாரியின் கம்பீரமான தோற்றம், தீர்க்கமான பார்வை, ஆளுமை நிறைந்த சிரிப்பு என ஒரு முழுமையான இளைஞனாக உயர்ந்து நின்ற தன் அத்தை மகனைப் பார்த்ததும் அவளுக்குள் ஆயிரம் மின்னல்கள் வெட்டின.
"இத்தனை வருடம் கழித்துப் பார்க்கிறேன்... இன்னும் அதே தேடல் அவன் கண்ணில் தெரிகிறதே!" என்று நினைத்தபோது அவளது இதயம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. கல்லூரிப் பாடப்புத்தகங்கள் சொல்லிக் கொடுக்காத ஒரு புதிய பாடத்தை, பாரியின் அந்த ஒற்றைப் பார்வை தற்போது அவளுக்கு உணர்த்தியது.
அந்தப் பார்வை மோதிக்கொண்ட கணத்தில், அவளது இதழ்களில் ஒரு மெல்லிய நாணமும், உள்ளுக்குள் சொல்ல முடியாத பூரிப்பும் உண்டாக "இவன் என்னுடையவன்" என்ற உரிமை உணர்வு அவளது கன்னங்களைச் சிவக்க வைத்தது.
செல்லம் என்று மாறன் கூப்பிட, பின்னர் சுதாரித்து மெதுவாக அவனருகில் வந்தவளோ , ஒரு சிறிய ரோஜாப்பூவை நீட்டினாள். அதை வாங்கும் போது அவள் விரல்கள் அவன் கையில் பட்ட அந்த ஒரு நொடி, இருவருக்கும் இடையில் ஒரு மின்சாரம் பாய்ந்தது.
"பிறந்தநாள் வாழ்த்துகள் அத்தான்" என அவள் மிக மெல்லிய குரலில் சொன்னபோது, அந்த வார்த்தைகள் பாரியின் காதுகளில் தேனாகப் பாய்ந்தன.
அவனோ அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்தவன் "படிப்புதான் முடிஞ்சிருக்கு விழி... ஆனா உன்னைப் பத்தின தேடல் இப்பதான் எனக்கு ஆரம்பமாகுது," என்று அவன் சொல்லாமல் சொல்லிய அந்தப் பார்வை, அவளைத் தலைகுனிய வைத்தது.
அங்கே கூடியிருந்த உறவினர்களுக்கு மத்தியிலும், அந்த இரண்டு இதயங்கள் மட்டும் ஒரு புதிய ரகசிய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. அன்று பாரியின் பிறந்தநாளை விட, மலர்விழியின் இந்தத் திரும்புதலே அவனுக்குப் பெரிய பரிசாக அமைந்தது.
யாரும் கவனிக்காத அந்தச் சில நொடிகள், அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியது. வார்த்தைகள் இல்லை, ஆனால் அங்கிருந்த கூட்டத்தின் இரைச்சலைத் தாண்டி அவர்களின் மௌனம் பல ரகசியங்களைப் பேசிக்கொண்டது.
மாமா அவனுக்குப் பரிசு கொடுக்க முன்வந்தபோது, பாரி-யின் கண்கள் மட்டும் பரிசு கொடுத்த அந்த "பேரழகியிடமே" தஞ்சமடைந்திருந்தன. அது ஒரு பிறந்தநாள் பரிசை விட மேலான ஒரு அழகான உணர்வின் தொடக்கமாக அமைந்தது.
அவன் தன்னை இமைக்காமல் பார்ப்பதை உணர்ந்தபோது, மலருக்குள் ஒரு மின்னல் வெட்டியது. "இவன் என்னையேவா பார்க்கிறான்?" என்ற எண்ணமே அவளுக்குள் ஒரு சொல்ல முடியாத பூரிப்பைத் தந்தது. தன் மீது படியும் அவனது ஆழமான பார்வையில் அவளது நாணம் மெல்ல எட்டிப்பார்த்தது.
தலை குனிந்து அவள் புன்னகைத்த போது, அவளது கன்னங்களில் விழுந்த குழி பாரின் இதயத்தை முழுவதுமாக கொள்ளையடித்தது.
ஒரு துண்டு கேக் எடுத்து தனது மகனுக்கு ஊட்டிய காஞ்சனா
"இன்னைக்கு உன்னோட 27-வது பிறந்தநாள் கண்ணா. ஆனா இதைவிட பெரிய கொண்டாட்டம் வேற ஒன்னு இருக்கு," என புன்னகையுடன் சொன்னாள்.
அப்போது மேடை ஏறிய சேயோன், மைக் பிடித்து பேசத் தொடங்கினார்.
"என் பையன் பாரி, படிப்புல மட்டும் இல்ல, பொறுப்புலயும் பாறை மாதிரி உறுதியானவன்னு எனக்குத் தெரியும். இதுவரை நான் பார்த்துக்கிட்ட நம்ம குடும்பத் தொழிலை, இன்னையில இருந்து அவனோட இளரத்தத்துகிட்டயும், அறிவுகிட்டயும் ஒப்படைக்கிறேன். இது அவனுக்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு இல்ல... என் நம்பிக்கை!" என்றார்.
அவர் கூறிய அந்த வார்த்தைகள் பாரியை நெகிழச் செய்தது. தன் கையில் இருந்த அந்த 'நிறுவனத்தின் முத்திரை மோதிரத்தை' மகனின் விரலில் அணிவிக்க, அங்கிருந்த மொத்தக் கூட்டமும் கைதட்டல்களால் அந்த இடத்தை அதிரச் செய்தது.
தனது அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்ட பாரியின், கண்களில் சிறு ஈரம் படர்ந்தது. பின்னர் தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கினான்:
"அப்பா, இது ஒரு பிசினஸ் இல்ல, உங்களோட இத்தனை வருஷ உழைப்பு. அதைச் சிதையாமப் பாதுகாத்து, இன்னும் உயரத்துக்குக் கொண்டு போவேன். என்னை நம்பி இத்தனை பெரிய பொறுப்பை ஒப்படைத்ததோடு மட்டுமே நிற்காமல் உங்க வழிகாட்டுதல் தான் எனக்குப் பெரிய பலம்." என் கூட இருந்து வழி நடத்த வேண்டும் ப்பா என்கவும், மகனின் வார்த்தைகளில் பூரித்துப் போனவர் என் தங்கமே என்று அவனை அணைத்துக் கொண்டவருக்கும் சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது.
செம்புலம் தொடரும்..