அத்தியாயம் 7
நிலாயினி வங்கியின் தெரு முனை வரை அவ்வளவு கவனமாகத் தான் சென்றாள். அந்த தெருவிற்குள் நுழைந்த பின்னரே கொஞ்சம் ஆசுவாசம் கொண்டாள். அவள் பிரச்சனையை அவளே சரிபார்த்து பழக்கிக் கொண்டதால் ஆரனைத் துணைக்கழைக்கலாம் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை. அவனிடம் கூறிவிட்டபடியால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வந்துவிடாது என்ற நம்பிக்கையும் இருந்தது. அதையும் மீறிய பயமும் இருந்தது. இரண்டையும் உள்ளுக்குள் வைத்தே தான் வங்கி முன் வந்து வண்டியை நிறுத்தினாள்.
அவள் வண்டியை விட்டு இறங்கும் முன், "ஹாய் நிலா!" என வந்து நின்றான் ஒருவன்.
"எஸ்!" என்றாள் தைரியமாகவே,
"கல்யாணம்னு சொல்லிருக்கேன். இவ்ளோ சிம்பிளா வந்து நிக்கிற? சேரில வந்துருக்கலாம்ல?"
"யார் நீங்க?"
"குருதேவ். இதோ இது என் வீடு இங்கிருந்து தான் உன்ன ஒரு வருஷமா ஃபாலோ பண்றேன். பட் அதுக்கும் முன்னவே உன்ன எனக்கு தெரியும். நீ இங்கேயே இல்லாதனால உன்கிட்ட வர லேட்டாகிடுச்சு. நா இங்க இருந்து பாக்றது உனக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும். அந்த ஏசிபி உன்ன மிரட்டிருப்பான்னும் தெரியும். அதான் ஸ்டெரெயிட்டா மேரேஜ் ப்ரப்போசலோட வந்துட்டேன்" என சிரிக்க,
"சாரி நீங்க யாருன்னு எனக்கு தெரியல"
"நிலா! கமான்" என்றான் குருதேவ்.
"எனக்கு உங்கள யாருன்னு தெரியல சார். நீங்களும் எதோ மிஸ் அன்டர்ஸ்டான்டிங்க்ல பேசிட்ருக்கீங்கன்னு நினைக்கிறேன். இனி இப்படி வந்து நிக்காதீங்க. எனக்கு இதெல்லாம் பிடிக்காது" என்றவள், கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, வண்டியிலிருந்து லஞ்ச் பையையும் எடுத்தாள்.
"பேசாம வந்தா வேலை ஈசியா முடியும். இல்லனா நா வேறமாதிரி நடந்துப்பேன். அது உனக்கு தான் நல்லதில்ல" என சிரித்தபடியே மிரட்டினான்.
"என்ன பண்ணுவ? எங்க பண்ணுப் பாப்போம்?" என அவள் முறைக்க, அவளின் முக மாற்றத்தைக் கவனித்திருந்த வங்கி செக்யூரிட்டி, "என்னாச்சு மேடம்?" என வேகமாக அவள் அருகில் வந்துவிட்டார்.
"யோவ் போயா. உன்னைய யாரு இப்ப கூப்பிட்டா?" என ஒரு நொடியில் அவரைத் தள்ளிவிட்டுவிட்டான் குருதேவ்.
"ஹே என்ன பண்ற?" என்றவள் குனிந்து அவரைத் தூக்கப் போக, வங்கியினுள் இருந்தும், அப்போதென வேலைக்கு வந்திறங்கியவர்களும் என எல்லாரும் வேகமாக வந்துவிட, குருதேவ்விற்கு டென்ஷன் அதிகமானது.
"ஒழுங்கா வந்திரு நிலா. என்னைய டென்ஷன் ஏத்திப் பாக்காத, அப்புறம் என்ன செய்வேன்னு தெரியாது" என குருதேவ் மிரட்ட,
"யார் மேடம் இவன்?" என்றனர் சக ஊழியர்கள்.
"தெரியல. சும்மா உளறிட்ருக்கான். இவன நா இதுக்கு முன்ன பாத்ததே இல்ல" என்றாள் நிலா எரிச்சலுடன்.
"டேய் என்ன? எங்க வந்து பிரச்சனைப் பண்ற? போலீஸ்ட்ட பிடிச்சுக் குடுக்கவா? பேங்க்ல திருட வந்தியா நீ? போறியா என்ன? ஊருக்குள்ள நிறைய பைத்தியங்க இப்படி தான் சுத்துது, எல்லாத்தையும் தன்வந்திரில கொண்டு சேர்க்காம தெருவுல விட்டு வேடிக்கைப் பாக்றாங்க" என ஆண்கள் நான்குபேர் மிரட்டவும் பயந்துவிட்டான் குருதேவ்,
"சார் ப்ளீஸ் சார். நா நிலாவ நாலஞ்சு வருஷமா லவ் பண்றேன் சார். நிலா உன்கிட்ட வந்து சொல்லாம நா லவ் பண்ணேன் நிலா. நீ வேலைக்குன்னு எங்கெங்கயோ போனாலும் நா உன்ன தான் நினைச்சுட்ருந்தேன் நிலா. என்னைய வேணாம்னு சொல்லாத. நா பாவம் நிலா. நீ இல்லனா நா செத்தே போயிடுவேன் நிலா. உனக்காக நா நிறைய காசு சேர்த்து வச்சுருக்கேன். என்னைய லவ் பண்ணு நிலா. கல்யாணம் பண்ணிக்கோ நிலா. நீ இல்லாம என்னால வாழவே முடியாது நிலா" என ஆண்கள் தள்ளிவிட விட நிலாவிடம் கெஞ்சிக்கொண்டு முன்னேறி வந்துகொண்டே இருந்தான் குருதேவ். உடனே உடனே மாறும் அவன் முகத்தை குழப்பமாக தான் பார்த்தாள் நிலாயினி, 'மனநலம் குன்றியவனோ?' என்றுகூட தோன்றியது அவளுக்கு.
"என்ன பேங்க் வாசல்ல மாநாடு? ஸ்ட்ரைக் எதுவும் பண்றீங்களா? பெர்மிஷன் வாங்கியாச்சா? என்ன மேனேஜர் மேடம் சொல்லுங்க?" என வண்டியைக் கூட்டத்தின் நடுவில் கொண்டு நிறுத்தி நின்றான் ஆரன் விஷ்வேஷ்வரன். அவன் குரலில் அனைவரும் அவனிடம் திரும்பினர்.
அவனைக் கண்டதும் அதுவரை இழுத்துப்பிடித்த தைரியத்தை அப்படியே சரியவிட்டாள் நிலாயினி. அழவேண்டும் போலிருந்தது, ஆனால் இருக்கும் இடம் கருதி அதை அடக்கினாள். கண்கள் லேசாக கலங்கும் போலிருந்தும், அதைக் கண்ணைச் சிமிட்டி சரி செய்து, பாவமாக ஆரனைப் பார்த்தாள்.
வங்கி ஊழியர்கள் அவனிடம் விஷயத்தை விளக்கிக்கொண்டிருக்க, அணிந்திருக்கும் கூலிங் கிளாஸ் வழி அவன் பார்வை மொத்தமும் அவன் நிலவின் மேல் தான்.
ஆரனையும் மதுரனையும் பார்த்ததுமே, குருதேவ் ஓடிவிட முனைய, இழுத்துப் பிடித்திருந்தனர் அங்குள்ள மக்கள்.
"சார் இது நம்ம ரோமியோ சார். அங்க ஆண்டாள் டெத் விசாரிக்க போனோமே. அங்க நின்னு சீன் போட்ட சாரு தான்" என மதுரன் இறங்கிச் சென்று அவனைப் பார்த்துவிட்டு சொல்ல,
"உன்னைய அன்னைக்கே என்ன சொன்னேன்? பேசிபாரு. பிடிக்கலன்னு சொல்லிட்டா விலகிருன்னு தான சொன்னேன்"
"பேசிப் பாக்க தான் சார் வந்தேன்" என்றான் குருதேவ் நடுங்கியவனாக.
"சார் ஒரே பிரச்சனை சார். எங்க செக்யூரிட்டியத் தள்ளிவிட்டுட்டு மேடம் மேல பாய பார்த்தான் சார்" என்றார் ஒருவர்.
"கம்ப்ளைன்ட் குடுக்றீங்களா மேனேஜர் மேடம்? உள்ள தூக்கி வச்சு லாடங்கட்டிட்டா இனி யார்ட்டயும் இப்டி நடந்துக்கத் தோணாது" என இப்போதும் நிலாவில் தான் பார்வை.
"இல்ல சார் பிரச்சனை பெருசாக வேணாம். இனி அந்த பையன் எங்கிட்ட பிரச்சனை பண்ணக் கூடாதுன்னு வார்ன் மட்டும் பண்ணுங்க" என்றாள்.
"பேங்க்ல வந்து பிரச்சனைப் பண்ணான்னு நாங்க வேணா கேஸ் தரோம் சார். இவன் மறுபடியும் வந்து பிரச்சனை பண்ணக் கூடாது" என்றனர் மற்ற ஊழியர்கள்.
"சார் வேணாம் சார். லவ் பண்ணக் கூடாதுன்னு எந்த சட்டமு சொல்லல தான சார். லவ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கக் கேட்டது தப்புன்னு அரெஸ்ட் பண்ணுவீங்களா சார்? நிலாக்கு இன்னும் கல்யாணம் ஆகல தான சார். அப்ப அவள யார் வேணா அப்ரோச் பண்ணலாமே சார்?" என்றான் குருதேவ். அவன் பேச்சே வித்தியாசமாக தான் தெரிந்தது.
"ஓ! இன்னும் வேற பண்ணுவியா நீ? கல்யாணம் ஆனாலும் ஆகலனாலும் சம்மந்தப்பட்ட பொண்ணுக்குப் பிடிக்காம நீ என்ன பண்ணாலும் அது அஃபன்ஸ் தான். பத்து நாள் கம்பி எண்ண விட்டா எல்லாம் சரியா போயிடும். போவோமா?" என்றான் ஆரன் விரல் நீட்டி எச்சரித்து.
"இனி இனி பண்ண மாட்டேன் சார்
சாரி சார்" என்றான் உடனேயே.
"என்ன பண்ண மாட்ட?"
"நிலாவ ஃபாலோ பண்ண மாட்டேன் சார்"
"பண்ணக் கூடாது. இது லாஸ்ட் வார்னிங் உனக்கு" என மிரட்ட, விறுவிறுவென எதிரே இருந்த அவன் வீட்டினுள் சென்றுவிட்டான் குருதேவ்.
"இங்க தான் இவன் வீடா?" என அனைவருமே அதிர்ந்து தான் பார்த்தனர்.
"இங்கேயே இருக்கான் இவன தெரியாதா உங்களுக்குலாம்?" என்றான் மதுரன்.
"பாத்ததே இல்ல சார் இவன. இப்பதான் இங்க வந்துருக்கானோ என்னவோ. இந்த வீடு எப்பவும் பூட்டியே தான் கடக்கும். இன்னைக்கு தான் திறந்திருந்தே பாக்றோம்" என்றார் செக்யூரிட்டி. அவர்தானே எப்போதும் வெளியே இருக்கக் கூடியவர்.
"இனி பிரச்சனைப் பண்ண மாட்டான்னு நினைக்கிறேன். அப்படி பண்ணா மேனேஜர் ஒரு கால் குடுங்க, வந்துத் தூக்கிட்டுப் போயிடுறேன்" என ஆரன் சொல்ல, கண்கள் சுருக்கிப் பார்த்தாள் நிலாயினி.
"லஷ்மியோட ராசி சார். அவளுக்கு எதிர் வீட்ல இருக்கவங்க எல்லாருக்கும் அவ மேல லவ் வந்துடுது" என மதுரன் மெதுவாக சொல்ல,
"க்ரௌட க்ளியர் பண்ணு மேன்" என்றான் ஆரன்.
நிலாவிடம் திரும்பிய ஆரன், "மேனேஜர் மேடம் வர்றீங்களா ஒரு ஜுஸ் குடிச்சுட்டு வருவோம்" என அழைக்க, ஒரு நொடி யோசித்தாலும் உடனே சரி என தலையாட்டினாள். கையிலிருந்த லஞ்ச் பேக்கை அவள் அறையின் வெளியே அமர்ந்திருக்கும் பெண்ணிடம் கொடுத்து உள்ளே வைக்கச் சொன்னவள், ஸ்கூட்டியை எடுக்கப் போக,
"டபுள்ஸ் ஓட்டுவியா?" என்றான் ஆரன்.
"ஆ! நீங்க உங்க வண்டீல வாங்க"
"இதென்னமா இந்தா இருக்கக் கடைக்கு ரெண்டு வண்டியா? நாடே பெட்ரோல் தட்டுபாடுல போயிட்ருக்கும்போது நாம பொறுப்பில்லாம நடக்கலாமா?"
"அதுக்காகலாம் உங்கள வண்டில ஏத்திக்க முடியாது ஏசிபி சார்"
"சரி அப்ப நீ வந்து என் வண்டீல ஏறு"
"கல்யாணத்துக்கு முன்ன நோ டபுள்ஸ் ஏசிபி" என அவள் ஸ்டிரிக்டாக சொல்ல,
"நடுவுல ஹேண்ட்பேக் வச்சுட்டு பாதுகாப்பா கூட உட்காருடி" என பல்லைக் கடித்தான்.
"நோ!" என்றாள். இருவரையும் சுவாரஸ்யமாக பார்த்தவாறு தான் ஊழியர்கள் உள்ளே சென்றனர்.
"மேடம் ஏசிபி சார தான் கல்யாணம் பண்ணப் போறாங்களா?" என மதுரனிடம் கேட்கவும் செய்ய,
"ஆமா, எப்டியும் நெக்ஸ்ட் மந்த் கல்யாணம் இருக்கும்" என அடித்துவிட்டான் மதுரன்.
"டேய் மதுரா!" என ஆரன் அரட்டி அழைக்கவும்,
"சார் சும்மா சொல்லிட்ருந்தேன் சார். நல்ல காரியம் சீக்கிரம் நடக்கட்டுமேன்னு" என மழுப்பியபடி ஆரனிடம் வர,
"என்ன சொல்லிட்ருந்த?"
"கேட்கலையா உங்களுக்கு? நானா தான் உளறுனேனா?" என்க,
"பைக்கப் பிடி. மேடம் கூட வாக்கிங்ல தான் வரணுமாம். உனக்கு எதுவும் வேலை இருந்தா முடிச்சுட்டு அரைமணி நேரத்துல, அந்த காலேஜ் ஆப்போசிட் ஐஸ்கிரீம் கடைக்கு வந்துரு" என சொல்லி சாவியைக் கொடுத்து இறங்கி நடக்கத் துவங்க,
"போற இடத்துலலாம் வேலை இருந்தா பாருன்னுட்டு போயிடுறாரு. நா என்ன தூர்வார்ற வேலையா பாக்றேன்? படக்குன்னு உட்கார்ந்து குழிய தோண்டுறதுக்கு?" என புலம்பினான் மதுரன்.
அங்கு நடக்கத் துவங்கியவனிடம் சென்று, "நா ஸ்கூட்டில முன்னாடி போயிடவா?" என்றாள் நிலாயினி.
"கொன்றுவேன்டி உன்ன" என விரல் நீட்டி மிரட்டவும், பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, அவனோடு சேர்ந்து நடந்தாள். இருவரும் மெதுவாக நடக்க, இவர்களை அங்கு எதிர்வீட்டின் ஜன்னலிலிருந்து குரோதமாக பார்த்து நின்றான் குருதேவ்.
"எனக்கு ஏன் ஃபோன் பண்ணல நீ?" என்றான் நாலடி எடுத்து வைத்ததும்.
"இவ்ளோ பேர் இருக்காங்க, ப்ளஸ் என்னால என்னைய பாதுகாத்துக்க முடியும்னு ஒரு எண்ணம்"
"ஆசிட் எதுவும் தூக்கி அடிச்சுருந்தா?" என்றான் பந்து வீசுபவன் போல கையைச் சுழற்றி,
"ஆசிட் தூக்கி அடிச்சுருந்தா நீங்க வந்தாலும் என்னைய காப்பாத்திருக்க முடியாது தானே?"
நிலாயினி வங்கியின் தெரு முனை வரை அவ்வளவு கவனமாகத் தான் சென்றாள். அந்த தெருவிற்குள் நுழைந்த பின்னரே கொஞ்சம் ஆசுவாசம் கொண்டாள். அவள் பிரச்சனையை அவளே சரிபார்த்து பழக்கிக் கொண்டதால் ஆரனைத் துணைக்கழைக்கலாம் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை. அவனிடம் கூறிவிட்டபடியால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வந்துவிடாது என்ற நம்பிக்கையும் இருந்தது. அதையும் மீறிய பயமும் இருந்தது. இரண்டையும் உள்ளுக்குள் வைத்தே தான் வங்கி முன் வந்து வண்டியை நிறுத்தினாள்.
அவள் வண்டியை விட்டு இறங்கும் முன், "ஹாய் நிலா!" என வந்து நின்றான் ஒருவன்.
"எஸ்!" என்றாள் தைரியமாகவே,
"கல்யாணம்னு சொல்லிருக்கேன். இவ்ளோ சிம்பிளா வந்து நிக்கிற? சேரில வந்துருக்கலாம்ல?"
"யார் நீங்க?"
"குருதேவ். இதோ இது என் வீடு இங்கிருந்து தான் உன்ன ஒரு வருஷமா ஃபாலோ பண்றேன். பட் அதுக்கும் முன்னவே உன்ன எனக்கு தெரியும். நீ இங்கேயே இல்லாதனால உன்கிட்ட வர லேட்டாகிடுச்சு. நா இங்க இருந்து பாக்றது உனக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும். அந்த ஏசிபி உன்ன மிரட்டிருப்பான்னும் தெரியும். அதான் ஸ்டெரெயிட்டா மேரேஜ் ப்ரப்போசலோட வந்துட்டேன்" என சிரிக்க,
"சாரி நீங்க யாருன்னு எனக்கு தெரியல"
"நிலா! கமான்" என்றான் குருதேவ்.
"எனக்கு உங்கள யாருன்னு தெரியல சார். நீங்களும் எதோ மிஸ் அன்டர்ஸ்டான்டிங்க்ல பேசிட்ருக்கீங்கன்னு நினைக்கிறேன். இனி இப்படி வந்து நிக்காதீங்க. எனக்கு இதெல்லாம் பிடிக்காது" என்றவள், கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, வண்டியிலிருந்து லஞ்ச் பையையும் எடுத்தாள்.
"பேசாம வந்தா வேலை ஈசியா முடியும். இல்லனா நா வேறமாதிரி நடந்துப்பேன். அது உனக்கு தான் நல்லதில்ல" என சிரித்தபடியே மிரட்டினான்.
"என்ன பண்ணுவ? எங்க பண்ணுப் பாப்போம்?" என அவள் முறைக்க, அவளின் முக மாற்றத்தைக் கவனித்திருந்த வங்கி செக்யூரிட்டி, "என்னாச்சு மேடம்?" என வேகமாக அவள் அருகில் வந்துவிட்டார்.
"யோவ் போயா. உன்னைய யாரு இப்ப கூப்பிட்டா?" என ஒரு நொடியில் அவரைத் தள்ளிவிட்டுவிட்டான் குருதேவ்.
"ஹே என்ன பண்ற?" என்றவள் குனிந்து அவரைத் தூக்கப் போக, வங்கியினுள் இருந்தும், அப்போதென வேலைக்கு வந்திறங்கியவர்களும் என எல்லாரும் வேகமாக வந்துவிட, குருதேவ்விற்கு டென்ஷன் அதிகமானது.
"ஒழுங்கா வந்திரு நிலா. என்னைய டென்ஷன் ஏத்திப் பாக்காத, அப்புறம் என்ன செய்வேன்னு தெரியாது" என குருதேவ் மிரட்ட,
"யார் மேடம் இவன்?" என்றனர் சக ஊழியர்கள்.
"தெரியல. சும்மா உளறிட்ருக்கான். இவன நா இதுக்கு முன்ன பாத்ததே இல்ல" என்றாள் நிலா எரிச்சலுடன்.
"டேய் என்ன? எங்க வந்து பிரச்சனைப் பண்ற? போலீஸ்ட்ட பிடிச்சுக் குடுக்கவா? பேங்க்ல திருட வந்தியா நீ? போறியா என்ன? ஊருக்குள்ள நிறைய பைத்தியங்க இப்படி தான் சுத்துது, எல்லாத்தையும் தன்வந்திரில கொண்டு சேர்க்காம தெருவுல விட்டு வேடிக்கைப் பாக்றாங்க" என ஆண்கள் நான்குபேர் மிரட்டவும் பயந்துவிட்டான் குருதேவ்,
"சார் ப்ளீஸ் சார். நா நிலாவ நாலஞ்சு வருஷமா லவ் பண்றேன் சார். நிலா உன்கிட்ட வந்து சொல்லாம நா லவ் பண்ணேன் நிலா. நீ வேலைக்குன்னு எங்கெங்கயோ போனாலும் நா உன்ன தான் நினைச்சுட்ருந்தேன் நிலா. என்னைய வேணாம்னு சொல்லாத. நா பாவம் நிலா. நீ இல்லனா நா செத்தே போயிடுவேன் நிலா. உனக்காக நா நிறைய காசு சேர்த்து வச்சுருக்கேன். என்னைய லவ் பண்ணு நிலா. கல்யாணம் பண்ணிக்கோ நிலா. நீ இல்லாம என்னால வாழவே முடியாது நிலா" என ஆண்கள் தள்ளிவிட விட நிலாவிடம் கெஞ்சிக்கொண்டு முன்னேறி வந்துகொண்டே இருந்தான் குருதேவ். உடனே உடனே மாறும் அவன் முகத்தை குழப்பமாக தான் பார்த்தாள் நிலாயினி, 'மனநலம் குன்றியவனோ?' என்றுகூட தோன்றியது அவளுக்கு.
"என்ன பேங்க் வாசல்ல மாநாடு? ஸ்ட்ரைக் எதுவும் பண்றீங்களா? பெர்மிஷன் வாங்கியாச்சா? என்ன மேனேஜர் மேடம் சொல்லுங்க?" என வண்டியைக் கூட்டத்தின் நடுவில் கொண்டு நிறுத்தி நின்றான் ஆரன் விஷ்வேஷ்வரன். அவன் குரலில் அனைவரும் அவனிடம் திரும்பினர்.
அவனைக் கண்டதும் அதுவரை இழுத்துப்பிடித்த தைரியத்தை அப்படியே சரியவிட்டாள் நிலாயினி. அழவேண்டும் போலிருந்தது, ஆனால் இருக்கும் இடம் கருதி அதை அடக்கினாள். கண்கள் லேசாக கலங்கும் போலிருந்தும், அதைக் கண்ணைச் சிமிட்டி சரி செய்து, பாவமாக ஆரனைப் பார்த்தாள்.
வங்கி ஊழியர்கள் அவனிடம் விஷயத்தை விளக்கிக்கொண்டிருக்க, அணிந்திருக்கும் கூலிங் கிளாஸ் வழி அவன் பார்வை மொத்தமும் அவன் நிலவின் மேல் தான்.
ஆரனையும் மதுரனையும் பார்த்ததுமே, குருதேவ் ஓடிவிட முனைய, இழுத்துப் பிடித்திருந்தனர் அங்குள்ள மக்கள்.
"சார் இது நம்ம ரோமியோ சார். அங்க ஆண்டாள் டெத் விசாரிக்க போனோமே. அங்க நின்னு சீன் போட்ட சாரு தான்" என மதுரன் இறங்கிச் சென்று அவனைப் பார்த்துவிட்டு சொல்ல,
"உன்னைய அன்னைக்கே என்ன சொன்னேன்? பேசிபாரு. பிடிக்கலன்னு சொல்லிட்டா விலகிருன்னு தான சொன்னேன்"
"பேசிப் பாக்க தான் சார் வந்தேன்" என்றான் குருதேவ் நடுங்கியவனாக.
"சார் ஒரே பிரச்சனை சார். எங்க செக்யூரிட்டியத் தள்ளிவிட்டுட்டு மேடம் மேல பாய பார்த்தான் சார்" என்றார் ஒருவர்.
"கம்ப்ளைன்ட் குடுக்றீங்களா மேனேஜர் மேடம்? உள்ள தூக்கி வச்சு லாடங்கட்டிட்டா இனி யார்ட்டயும் இப்டி நடந்துக்கத் தோணாது" என இப்போதும் நிலாவில் தான் பார்வை.
"இல்ல சார் பிரச்சனை பெருசாக வேணாம். இனி அந்த பையன் எங்கிட்ட பிரச்சனை பண்ணக் கூடாதுன்னு வார்ன் மட்டும் பண்ணுங்க" என்றாள்.
"பேங்க்ல வந்து பிரச்சனைப் பண்ணான்னு நாங்க வேணா கேஸ் தரோம் சார். இவன் மறுபடியும் வந்து பிரச்சனை பண்ணக் கூடாது" என்றனர் மற்ற ஊழியர்கள்.
"சார் வேணாம் சார். லவ் பண்ணக் கூடாதுன்னு எந்த சட்டமு சொல்லல தான சார். லவ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கக் கேட்டது தப்புன்னு அரெஸ்ட் பண்ணுவீங்களா சார்? நிலாக்கு இன்னும் கல்யாணம் ஆகல தான சார். அப்ப அவள யார் வேணா அப்ரோச் பண்ணலாமே சார்?" என்றான் குருதேவ். அவன் பேச்சே வித்தியாசமாக தான் தெரிந்தது.
"ஓ! இன்னும் வேற பண்ணுவியா நீ? கல்யாணம் ஆனாலும் ஆகலனாலும் சம்மந்தப்பட்ட பொண்ணுக்குப் பிடிக்காம நீ என்ன பண்ணாலும் அது அஃபன்ஸ் தான். பத்து நாள் கம்பி எண்ண விட்டா எல்லாம் சரியா போயிடும். போவோமா?" என்றான் ஆரன் விரல் நீட்டி எச்சரித்து.
"இனி இனி பண்ண மாட்டேன் சார்
சாரி சார்" என்றான் உடனேயே.
"என்ன பண்ண மாட்ட?"
"நிலாவ ஃபாலோ பண்ண மாட்டேன் சார்"
"பண்ணக் கூடாது. இது லாஸ்ட் வார்னிங் உனக்கு" என மிரட்ட, விறுவிறுவென எதிரே இருந்த அவன் வீட்டினுள் சென்றுவிட்டான் குருதேவ்.
"இங்க தான் இவன் வீடா?" என அனைவருமே அதிர்ந்து தான் பார்த்தனர்.
"இங்கேயே இருக்கான் இவன தெரியாதா உங்களுக்குலாம்?" என்றான் மதுரன்.
"பாத்ததே இல்ல சார் இவன. இப்பதான் இங்க வந்துருக்கானோ என்னவோ. இந்த வீடு எப்பவும் பூட்டியே தான் கடக்கும். இன்னைக்கு தான் திறந்திருந்தே பாக்றோம்" என்றார் செக்யூரிட்டி. அவர்தானே எப்போதும் வெளியே இருக்கக் கூடியவர்.
"இனி பிரச்சனைப் பண்ண மாட்டான்னு நினைக்கிறேன். அப்படி பண்ணா மேனேஜர் ஒரு கால் குடுங்க, வந்துத் தூக்கிட்டுப் போயிடுறேன்" என ஆரன் சொல்ல, கண்கள் சுருக்கிப் பார்த்தாள் நிலாயினி.
"லஷ்மியோட ராசி சார். அவளுக்கு எதிர் வீட்ல இருக்கவங்க எல்லாருக்கும் அவ மேல லவ் வந்துடுது" என மதுரன் மெதுவாக சொல்ல,
"க்ரௌட க்ளியர் பண்ணு மேன்" என்றான் ஆரன்.
நிலாவிடம் திரும்பிய ஆரன், "மேனேஜர் மேடம் வர்றீங்களா ஒரு ஜுஸ் குடிச்சுட்டு வருவோம்" என அழைக்க, ஒரு நொடி யோசித்தாலும் உடனே சரி என தலையாட்டினாள். கையிலிருந்த லஞ்ச் பேக்கை அவள் அறையின் வெளியே அமர்ந்திருக்கும் பெண்ணிடம் கொடுத்து உள்ளே வைக்கச் சொன்னவள், ஸ்கூட்டியை எடுக்கப் போக,
"டபுள்ஸ் ஓட்டுவியா?" என்றான் ஆரன்.
"ஆ! நீங்க உங்க வண்டீல வாங்க"
"இதென்னமா இந்தா இருக்கக் கடைக்கு ரெண்டு வண்டியா? நாடே பெட்ரோல் தட்டுபாடுல போயிட்ருக்கும்போது நாம பொறுப்பில்லாம நடக்கலாமா?"
"அதுக்காகலாம் உங்கள வண்டில ஏத்திக்க முடியாது ஏசிபி சார்"
"சரி அப்ப நீ வந்து என் வண்டீல ஏறு"
"கல்யாணத்துக்கு முன்ன நோ டபுள்ஸ் ஏசிபி" என அவள் ஸ்டிரிக்டாக சொல்ல,
"நடுவுல ஹேண்ட்பேக் வச்சுட்டு பாதுகாப்பா கூட உட்காருடி" என பல்லைக் கடித்தான்.
"நோ!" என்றாள். இருவரையும் சுவாரஸ்யமாக பார்த்தவாறு தான் ஊழியர்கள் உள்ளே சென்றனர்.
"மேடம் ஏசிபி சார தான் கல்யாணம் பண்ணப் போறாங்களா?" என மதுரனிடம் கேட்கவும் செய்ய,
"ஆமா, எப்டியும் நெக்ஸ்ட் மந்த் கல்யாணம் இருக்கும்" என அடித்துவிட்டான் மதுரன்.
"டேய் மதுரா!" என ஆரன் அரட்டி அழைக்கவும்,
"சார் சும்மா சொல்லிட்ருந்தேன் சார். நல்ல காரியம் சீக்கிரம் நடக்கட்டுமேன்னு" என மழுப்பியபடி ஆரனிடம் வர,
"என்ன சொல்லிட்ருந்த?"
"கேட்கலையா உங்களுக்கு? நானா தான் உளறுனேனா?" என்க,
"பைக்கப் பிடி. மேடம் கூட வாக்கிங்ல தான் வரணுமாம். உனக்கு எதுவும் வேலை இருந்தா முடிச்சுட்டு அரைமணி நேரத்துல, அந்த காலேஜ் ஆப்போசிட் ஐஸ்கிரீம் கடைக்கு வந்துரு" என சொல்லி சாவியைக் கொடுத்து இறங்கி நடக்கத் துவங்க,
"போற இடத்துலலாம் வேலை இருந்தா பாருன்னுட்டு போயிடுறாரு. நா என்ன தூர்வார்ற வேலையா பாக்றேன்? படக்குன்னு உட்கார்ந்து குழிய தோண்டுறதுக்கு?" என புலம்பினான் மதுரன்.
அங்கு நடக்கத் துவங்கியவனிடம் சென்று, "நா ஸ்கூட்டில முன்னாடி போயிடவா?" என்றாள் நிலாயினி.
"கொன்றுவேன்டி உன்ன" என விரல் நீட்டி மிரட்டவும், பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, அவனோடு சேர்ந்து நடந்தாள். இருவரும் மெதுவாக நடக்க, இவர்களை அங்கு எதிர்வீட்டின் ஜன்னலிலிருந்து குரோதமாக பார்த்து நின்றான் குருதேவ்.
"எனக்கு ஏன் ஃபோன் பண்ணல நீ?" என்றான் நாலடி எடுத்து வைத்ததும்.
"இவ்ளோ பேர் இருக்காங்க, ப்ளஸ் என்னால என்னைய பாதுகாத்துக்க முடியும்னு ஒரு எண்ணம்"
"ஆசிட் எதுவும் தூக்கி அடிச்சுருந்தா?" என்றான் பந்து வீசுபவன் போல கையைச் சுழற்றி,
"ஆசிட் தூக்கி அடிச்சுருந்தா நீங்க வந்தாலும் என்னைய காப்பாத்திருக்க முடியாது தானே?"