யசோதினி -அகத்தியன் வாழ்வில் இணைந்தது அருமை.
முதல் திருமணம் அதிலும் காதல் திருமணத்தில் சில வருடங்களே வாழ்ந்து,இரு பெண் குழந்தைகளை பெற்று,அம்மா அக்கா குடும்பத்துடன் இருந்தாலும் ,தனக்கும் தன் குழந்தைகளுக்கும் உண்மையான துணை யாரும் இல்லை என உணர்ந்து, சமூகத்திற்கு பயப்படாமல்,மறு திருமணம் செய்ய முடிவெடுக்கும்
யசோ Wow super bold lady
ஆனால் அதற்கு அவள் அன்னையிடமும், தமக்கையிடமும் பட்ட பாடு ,வாங்கிய சுடு சொற்கள் ,மனதை கனக்க வைத்தது.
அகத்தியன் ஆகட்டும்,தன் தமக்கைக்கு திருமணம் முடிந்த இடத்திலேயே,பெண் எடுத்து இன்பமாய் காலம் நகர்திருக்க வேண்டிய நேரத்தில் ,அவன் மனைவி சவீதா மூலம் எத்தனை பெரிய அதிர்ச்சி!!!இப்படிப்பட்ட மனிதர்கள் கூட உண்டோ நாட்டிலே என அயர வைத்தவர்கள் சவீதாவும்,அவள் அன்னையும்.
எப்படியோ அவர்களை கடந்து ,divorce பெற்று,சிறிது சிறிதாக தாய்,தமக்கையின் முயற்சிகளுக்கு செவி சாய்க்காமல்,கடைசியில் யசோதினியை மணக்க ஒப்புக் கொண்டது பெரும் ஆறுதல்.
சுசீலா அம்மா என்னே ஒரு உயரிய பெண்மணி.மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர்.அபூர்வ மனுசி..
குழந்தைகள் தூரிகாவிற்கும் சிந்தூரி க்கும்,தான் அவர்கள் குடும்பத்தில் இணைவதற்கு, அவர்களை,அகத்தியன், புரிய வைத்த (தாமினியுடன்)
இடம் ,கண்களை பணிக்க வைக்கிறது.
சிம்புலாகல பாறை tour அருமை. (இலங்கையில் உண்டோ)நானே நேராய் போய் பார்த்த feel..So natural..
திருமணம் செய்து,யசோவின் நம்பிக்கையை காப்பாற்றி,இருவரின் தாயார்,மற்றும் அக்காக்களின் மனம் மகிழும் படி வாழ்ந்து காட்டிய யசோ-அகத்தியன் தம்பதியின் வாரிசாய் விதரனும் வந்தது மகிழ்ச்சி.
இரண்டு பக்கமும் மறுமணம் என்ற பட்சத்தில்,இரு வீட்டாரின் மனநிலை,பேச்சுக்கள்,அருகிருந்து பார்த்தது போல் ,யதார்த்த நடையில் நாவலை தந்த விதம் awesome



Nithama.

