மீண்டும் அவர்களின் நாட்கள் வீடியோ கோலிலேயே நகர்ந்தது. அவர்கள் ஆவலுடன் காத்திருந்த விடயமும் நடந்தேறியது. பிரியந்தினி தாய்மை உற்றாள். இரு வீட்டினருக்கும் அந்தச் செய்தி வந்தடைந்த நாள் திருவிழாவைப் போலாயி...
“மன்னிக்கிற அளவுக்கு நீங்க பெரிய பிழை ஏதும் செய்தீங்களா எண்டு தெரியா கோகுல். ஆனா, நிறைய நாள் அழுத்திருக்கிறன், இனி என்ன நடக்குமோ எண்டு பயந்திருக்கிறன், உங்களோட கதைக்கிறதை நினைச்சாலே நெஞ்சு படபட எண்டு ...
நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்துகொண்டிருந்தது. என்னவோ பெரிதாக ஏற்பாடு செய்கிறேன் என்றான், சத்தமே இல்லாமல் இருக்கிறானே என்று பிரியந்தினி யோசித்துக்கொண்டு இருக்க, சொன்னதுபோலவே செய்திருந்தான் கோகுலன். அவன...
அன்று மட்டுமல்ல அதன் பிறகும் தினமும் ஏதோ ஒரு குறுஞ்செய்தி அவனிடமிருந்து வந்தது. அவனைப் பற்றியதாய், அவன் மனதில் இருக்கிற அவளைப் பற்றியதாய் என்று ஏதோ ஒன்றைச் சொல்லி, அவள் உலகத்தை அழகாக மாற்றிக்கொண்டிருந...
“எனக்கோ உனக்கோ எதிர்பாலினம் புதுசு இல்ல யதி. படிச்ச பள்ளிக்கூடத்தில இருந்து, கம்பஸ்ல இருந்து, இப்ப வேலை வரைக்கும் நண்பர்கள் நண்பிகள் எண்டு நிறைய இருக்கு. நிறையப்பேரோட சகஜமா பழகி இருக்கிறோம். நிறையப்பே...
கோகுலன் சொன்ன அந்தச் சிங்கள ஆச்சி, அன்று இரவே இவளோடு தங்குவதற்கு ஆயத்தமாக வந்து சேர்ந்திருந்தார். தனியாக இருக்கிறோம் என்கிற பயம் அகன்றிருந்தபோதும், அவன் இல்லாமல் பிரியந்தினிக்கு இரவிரவாக உறக்கமே இல்லை...
ஒரு பிடிவாதத்துடன் அவனைச் சற்றே தள்ளி வைத்துவிட்டு, குளித்து, சாப்பிட்டு, வீட்டினரோடு பேசி, ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறார்களா என்று ஜெயராணிக்கு அழைத்துக் கேட்டுவிட்டு, அவள் உறங்கி ...
காலிக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள் பிரியந்தினி. நெஞ்சுக்குள் தாங்கொணா பாரம் கிடந்து அழுத்தியது. அவர்களின் பார்வைக்கு மறைய முதல், மனமே இல்லாமல் கையை ஆட்டி விடைபெற்றுப் போனவனிலேயே அவளின் எண்ணங்கள் நின்...
அவள் விழியோரம் மெல்லக் கரித்தது. பார்வையை அருந்தும் கப்புக்கு மாற்றினாள். சற்று நேரம் அமைதியில் கழிய, மெல்ல கையை நீட்டி அந்த அட்டையை எடுத்துக்கொண்டாள். அவன் மனம் நிறைந்துபோனது. இதோ, இரண்டு நாட்...
கோகுலன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தாள் பிரியந்தினி. இவன் என்ன அவளோடு விளையாடுகிறானா? அல்லது, அவளைப் பேசவைக்கும் முயற்சியா? அந்தளவில் நம்ப முடியாததாக இருந்தது அவன் சொன்ன செய்தி. ...
