மித்ராவின் கைபேசி எடுப்பார் யாருமின்றி அலறிக்கொண்டிருந்தது. ‘அறைக்குள் தானே இருக்கிறாள். பிறகும் ஏன் அழைப்பை ஏற்காமல் இருக்கிறாள்..’ என்றெண்ணியபடி தங்களின் அறைக்கு வந்தான் கீதன். அங்கே கட்டிலில...
சம்மந்தி அம்மா மித்ராவுக்கு எடுக்கவில்லையே என்றெண்ணி அவரைத் தப்பாக நினைக்கவும் வழியில்லாமல், அதே நேரத்தில் நீ எங்கள் குடும்பத்தில் சேர்த்தியில்லை, அதனால் உனக்கு எடுக்கவில்லை என்பதை மித்ராவுக்கும் நாசு...
யமுனா புருவங்கள் சுருங்க அவரைப் பார்ப்பது புரிய, “தேவை இல்லாததுகளைப் பேசாதே அண்ணா. நாம் இப்போது கதைப்பது உன் திருமணத்தைப் பற்றி. எதற்காக யமுனாவை வேண்டாம் என்கிறாய் நீ? திரும்பவும் அந்த ஒழுக்கம் கெட்டவ...
“இல்லை வேண்டாம். இனி நீங்களாக வந்தால் கூட எனக்கு வேண்டாம்! என் அண்ணாக்களை எல்லாம் குறை சொல்லும் அளவுக்கு நீங்கள் என்ன அவ்வளவு பெரிய இவரா? இனிமேல் உங்கள் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டேன். உங்களை விட...
நடந்த சம்பாசனைகளை எல்லாம் கேட்டபடி மகளுக்குப் பால் கரைக்க அங்கே வந்த கவிதாவுக்குத் தமையன் மித்ரா நிற்கும் இடத்தில் நிற்பதை பார்க்கவே எரிச்சலாக இருந்தது. இதை விடக்கூடாது என்று நினைத்து, “அண்ணா எ...
கவிதா வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் கீர்த்தனன். முதல் நாளிரவு மனம் சஞ்சலத்தில் இருந்ததில் அவன் உறங்கவே நடுநிசியைத் தாண்டியிருந்தது. இதில் முதல்நாள் செய்த பயணத்தினால் உண்டான களைப்பும் மனதிற்கு ...
“அப்படிச் சொல்லாதே யமுனா! ஆசைப்பட்டவனோடு வாழ்வது தானே வாழ்க்கை. உன் ஆசைப்படி எல்லாம் நடக்கும், பாரேன்!” என்று ஆசைகாட்டினாள் யமுனாவின் தோழி. “என்னவோ கவி. ஆனால், இங்கிருந்து போய் அண்ணாக்களுக்கு ந...
“கிழிக்கும்! போகிற போக்கில் அவளையே உன் அண்ணா திரும்பவும் கட்டிக்கொள்கிறாரோ தெரியவில்லை.” “கடைசி வந்தாலும் அது நடக்காது! என் அண்ணாவைப் பற்றித் தெரியாமல் பேசுகிறாய் நீ.” என்று உறுதியாக மறுத்தாள் ...
ஒரு சோபா கூட இல்லாத அந்த அறையைப் பார்த்து முழித்துக்கொண்டு நிற்க மட்டுமே முடிந்தது அவளால். எப்படியாவது சமாளிக்கத்தான் வேண்டும் என்றெண்ணியவள் மகனுக்கு இலகுவான உடையை மாற்றிவிட்டு, தனக்கான இரவு உடையை எடு...
அங்கிருந்த எல்லோருக்கும் அவனது உரிமைப்போராட்டம் புன்னகையை வரவழைத்தது. “பார் தனா உன் மகனின் பொறாமையை. என் மகள் உன் மடியில் இருப்பது அவனுக்குப் பொறுக்கவில்லை.” என்று சொல்லிச் சிரித்த சேகரன், “சந்...
