வயிற்றை நிரப்பியபடி நண்பன் ஒருவனைச் சந்திக்க மட்டக்களப்புக்குச் சென்றுவிட்டு ஒரு பத்து நாட்களுக்கு அங்கேயே தங்கப்போவதாகத் தெரிவித்தான் மோகனன். “விளையாடுறியா நீ? அதெல்லாம் சரிவராது!” என்று உடனேயே மறுத்...
நேற்றைய இரவின் தடுமாற்றம் மோகனனை நிம்மதியாக உறங்கவிடவில்லை. அதனாலோ என்னவோ அதிகாலையிலேயே விழிப்பும் வந்திருந்தது. எழுந்து, ட்ரெயினிங் செட்டை மாட்டிக்கொண்டு வீதிக்கு இறங்கினான். கவிழ்ந்திருந்த இருளை விர...
கௌசிகனின் முறுவல் விரிந்தது. “கொஞ்ச நாள் போகச் சேர்ந்திடுவான். விட்டுப்பிடி.” என்றுவிட்டு, “சரி, நீ போய்ப் படு! நீதான் என்னைவிட வேலை பாத்துக் களைச்சுப்போனாய்.” என்றபடி மாடியேறினான். அவன் மனத்துக்குள்,...
செல்வராணிக்குத் தன்னிலை மீள்வதற்குச் சற்று நேரம் பிடித்தது. கண்முன்னே சிதறிக் கிடந்த அவனின் கைப்பேசி வேறு கண்களைக் கலங்க வைத்தது. பதட்டத்தில், பிரச்சனைகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்கிற பயத்தில் அவச...
ஒழுங்கான உறக்கமில்லாமலேயே அடுத்த நாளும் விடிந்தது. நல்ல கணவனாகக் கொழும்பு சென்று சேர்ந்துவிட்டதைத் தெரிவித்திருந்த நிலன், “நீ ஓகேயா?” என்றும் கேட்டிருந்தான். அவளுக்கு எழுந்து தயாராவதற்கே உடலில் தெம்பி...
இன்னுமே சோகத்துடன் அமர்ந்திருந்த சந்திரமதியைக் கவனித்துவிட்டு, “விடு மதி. தம்பியாவது நிம்மதியா இருக்கட்டும். நானும் எல்லாத்தையும் சமாளிச்சுப் போவம் எண்டுதான் நினைச்சன். அது நடக்காது போல இருக்கு. இஞ்ச ...
“நீ பேசாம நில்லு! கொஞ்சமா சிரி. ம்ம்ம்… என்னைப் பார். கொஞ்சம் தலையை நிமித்து… இப்ப சிரி.” அருகில் யாருமே இல்லை என்பதுபோல் அவளுக்கு மட்டும் சொல்லியபடி நான்கைந்து புகைப்படங்களைத் தட்டினான். எடுத்தவை எல்...
ரஜீவன் யாழினியின் கனவு மேடை. கணவன் மனைவியாக அவனும் அவளும். யாழினிக்கு அவன் மீதான ஊடல் காணாமல் போயிருந்தது. மாலை சூடி, மங்கல நாணைப் பூட்டி அவளைத் தன்னவளாக்கிக் கொண்டவனின் அண்மை தித்தித்தது. எதிர்கால வா...
இந்தக் கடை பிடிக்கும். இதன்மூலம் கிடைத்த செல்வாக்கும், ராஜநாயகத்தின் மருமகன் என்கிற பெயரும் கூடப் பிடிக்கும்தான். தன் சொந்தக் கடையைப் போல் அவன் உணர ஆரம்பித்ததும் உண்மைதான். அதற்கென்று அவனைச் சொத்துக்க...
யாழினியைச் சமாதானம் செய்து முடிப்பதற்குள் ரஜீவனுக்குப் போதும் போதும் என்றாயிற்று. மோகனனைக் கண்ட அந்த நொடி கொடுத்த சினத்தில் செய்தவைதான் அனைத்தும். தான் சற்றே எல்லை மீறுகிறோம் என்று அப்போதே தெரியாமல் இ...
