அவள் போய்விட்டாள். அவளோடு எல்லாமே போய்விட்டது போலிருந்தது பிரணவனுக்கு. இதே ஊரில்தான் பிறந்தான். இங்கேதான் வளர்ந்தான். அவனுடைய கற்பனைகளை, இலட்சியங்களை, எதிர்காலத் திட்டங்களை எல்லாம் இங்கேதான் வகுத்தான்...
ஒரே தெருவில் கவினுடைய மூன்று பெரியப்பாமார் வசிக்கிறார்கள். ஒரு பெரியப்பா வீட்டில் கவினுடைய அப்பம்மாவும் இருக்கிறார். “அப்பம்மா வீட்டில தான் அப்பாவும் நிக்கிறார். வாங்க கூட்டிக்கொண்டு போய் வி...
சுறுசுறுப்பான இயக்கத்திலிருந்தது அப்பெரிய அடுக்குமாடிக் கடைத்தொகுதி! “இந்த ஃபிளோரில டொமி ஷொப் இருக்கா இலக்கியா? டீ சேர்ட்ஸ் பார்ப்பமா?” அத்தளத்திலிருந்த கடைகளின் பெயர்ப்பலகைகளைத் தொட்டு வ...
“நான் என்னத்துக்கு இருக்கிறன்? அதெல்லாம் நான் கட்டிவிடுவன். இப்ப இதைக் கழட்டிக் கவனமா பெட்டிக்க எடுத்துவை.” பிரணவனும் அங்கிருக்கிறான் என்கிற ஆபத்துமணி அப்போதுதான் அடிக்க, மகளை அனுப்புவதில் மும்முரமானா...
நாட்கள் எப்படி நகர்ந்தது என்றே தெரியாமல் ஒருவாரம் கடந்திருந்தது. சுந்தரேசனும் லலிதாவும் திரும்பி வந்திருந்தனர். திருமணத்துக்குச் செல்ல என்று தயாரானவர்களின் பேச்சு, ஆர்கலிக்குப் பேச இருக்கும் பெடியனைப்...
“தேவையில்லாம எங்கட வீட்டு விசயத்தில நீ தலையிடாத ஆர்கலி. உன்ர வேலை எதுவோ அதை மட்டும் பார்! நாளைக்கு டாட்டா பாய்பாய் காட்டிப்போட்டு நீ போய்டுவாய். அவே ரெண்டு பேரும் இந்த ஊருலதான் இருக்கவேணும். அதுக்கேற்...
சாப்பாட்டு மேசையில் எல்லாவற்றையும் தமயந்தியும் புவனாவுமாகக் கொண்டுவந்து வைத்தனர். பசுமதிச் சோறு நெய்யில் பளபளக்க, கோழியிறைச்சிக் குழம்பு காமகமத்தது. நண்டினைப் பிரட்டி, இராலினைப் பொரித்து, கத்தரிக்காயி...
அவளோ மிக இயல்பாக இருந்தாள். யாராவது பார்த்தால்? சுற்றிவர உயரமாக மதில் கட்டிய வீடுதான். என்றாலும்? வேகமாக டிராக்டரை விரட்டினான். அவளோ பல ரவுண்டுகளை கெஞ்சிக் கெஞ்சியேச் சாதித்தாள். நண்டு கழுவ என்று வீட்...
அவனுடைய சோபாவை ஆர்கலி ஆக்கிரமித்துக்கொண்டதில், அவன் அமர்ந்திருந்த சின்ன சோபா பிரணவனின் ஒற்றைக் காலுக்கே போதாமலிருந்து. எதிரில் அவள் உறங்கிக்கொண்டு இருந்தது வேறு ஆழ்ந்த உறக்கத்தை வரவிடவில்லை. அதிகாலையி...
“நித்திரையே வருது இல்ல. எட்டிப்பாத்தா நீங்களும் படுக்கேல்ல. அதுதான் வந்தனான்.” என்றாள் ரகசியக் குரலில். அவள் சொன்னவிதம் அவன் உதட்டினில் மெல்லிய முறுவலை வரவைத்தது. “ஏன் இந்த ரகசியக் குரல்?” என்று அவனும...
