“என்ன நீங்க …நான் வெளில போகோணும் கல்யாணி…”அவன் சொன்ன தோரணையில் சுதாகரித்திருந்தாள். ‘கடுவன் பூனை கணக்கில திரிஞ்ச மனுசன் செய்யிற அலும்பு இருக்கே!’ மனத்துள் சொன்னவள், “அதுக்கு நான் என்ன செய்ய? ...
உணவு உண்டபின் கல்யாணியும் டேமியனுமாக மேசையை ஒதுக்க ஆரம்பித்தார்கள். “நானும்…” என்று உதவிக்கு வந்தாள், பெரியவள். நாங்கள் செய்கிறோம் என்று, கல்யாணி சொன்னதற்கு அழகாக முறுவலித்துவிட்டு, மேசையைத் துடைத்த...
“நான் ஒருக்கா ஹக் பண்ணலாமா கல்யாணி?” கேட்டவன், அவள் அனுமதிக்காகக் காத்திராது அவளை அணைத்திருந்தான். இறுகவே! “சொறி!”மீண்டும் முணுமுணுத்தவன் தலை அவள் தோள் வளைக்குள் தஞ்சம் தேடிச் சாய்ந்தது. மீண்டும் மீ...
பிள்ளைகள் மூவரும் வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்கள். கையில் ஐஸ் கோன். கல்யாணி, அவ்வீட்டினுள் எத்தனையோ தடவைகள் வந்து போயிருக்கிறாள். அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தவளாக வந்து போவதற்க...
எதிர்பார்க்காத இச்செயலில் அவளுள்ளம் மிகவுமே தடுமாறியது. வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தளம்பித் ததும்பி நிற்க, நீ என்ன பருவ வயதுப் பெட்டையா என்று, தன்னைத்தான் கேட்டுச் சுதாகரிக்க முயன்றாள். அவனோ, உறைந்து...
சற்றும் தாமதியாது சகோதரனுக்கு அழைத்துவிட்டாள். அவள் கதைப்பதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான், டேமியன். “அக்கா, கலியாணம் செய் செய் எண்டீங்க தானே? எனக்குப் பிடிச்ச பிள்ளையச் செய்யிறதில உங்களுக்கும் அம...
தான் கல்யாணியைத் திருமணம் செய்யப்போவதைப் பிள்ளைகளிடம் சொன்னான், டேமியன். கிறிஸ்டினா பார்த்தும் பாராத பாவனையில் அங்குமிங்குமாகப் போய் வந்துகொண்டிருந்தார். பிள்ளைகள் மூவரும் எதிர்மறையாக ஏதாவது சொல்லிச...
உடலை நிமிர்த்தி அமர்ந்தவரின் தலை விண்ணென்று வலித்தது. ஒற்றைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டே எழுந்து நின்றவர் மெதுவாகக் கதவைத் திறந்தார். “சுமதிம்மா!” அவரைப் பார்த்த டேமியனில் பதற்றம். “என்ன இப்...
விறுவிறுவென்று வெளியேறிய டேமியன் சென்று நின்ற இடம், அவர்கள் தோட்ட வீடு. வெளியில் அவ்வளவு புழுக்கம். வெக்கையும் அமுக்கமுமாக மழை கொட்டப்போவதைக் கட்டியம் கூறி நிற்க, அவன் மனத்திலோ, பெரும் சூரைக்காற்றோடு...
டேமியன் விசுக்கென்று எழுந்துவிட்டான். நிதானமாக வந்து தாய்க்கு முன்னால் நின்றான். அவரைக் காயப்படுத்த அவன் விரும்பவில்லை. ஆனால், அவர்,அவனை மிகவுமே காயப்படுத்திவிட்டாரே! கிட்டத்தட்ட கண்ணாடிப்பாத்திரத்தை...
