அத்தியாயம்-17 ரஞ்சனின் கடைக்கு முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தும்போதே சித்ராவின் விழிகள் மெலிதாகக் கலங்கின. அவனைக் காணப்போகிறோம் என்று நினைக்கவே உடல் முழுவதும் ஒரு துடிப்பு ஓடியது. அந்தளவுக்கு அவளத...
கையைக் கழுவிவிட்டு குடுகுடுவென்று வந்து பிள்ளைகள் கன்னத்தில் பச்சுப் பச்சு என்று முத்தம் வைக்க, தன் கன்னத்தையும் காட்டினான், பூபாலன். கயல் பார்வையும் அவர்களில்தான். கடந்த இரு கிழமைகளுக்கும் மேலாக அ...
“எனக்கும் விளங்குது கயல். ஆனாலும்…” “ஏன், உமக்கே மனசுக்க பயம் இருக்கு. அப்பிடியிருக்க கொஞ்ச நாளுக்குத்தானே? பூபாலன் அண்ணாவ விட்டு விலகியே இருக்க பிரச்சினை இல்ல காயு. நான் வர முதல் பிள்ளைகளப் பா...
அவள் திருமணத்திற்கு சம்மதித்ததே அவரிடம் ஒரு துள்ளலைக் கொடுத்திருந்தது. அதோடு, திருமண வீட்டுக்குச் செல்லும் மகளை நல்ல குடும்பத்தவர்கள் யாராவது பார்த்துப் பெண் கேட்டாலும் கேட்பார்கள் இல்லையா.. ஒர...
“சரிம்மா. நீ சொன்னபடியே செய்கிறேன். இப்போது உன் பெறாமகளின் விஷயம் சொல்லு. நாம் எப்போது போவது?” என்று மனைவியைத் திசை திருப்பினார் அவர். “பாரு இப்போதே வரச் சொல்கிறாள். போவதுதான் நன்றாக இருக்கும்....
அத்தியாயம்-16 தங்கள் காதலராம் வண்டுகளின் வரவிற்காய் பனியில் குளித்துவிட்டு உற்சாகமாகக் காத்திருந்தன காலை நேரத்து மலர்கள். அவற்றைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சித்ராவின் மலர் முகத்தைப் பார்த...
அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள் சித்ரா. “இல்லை இதயன். இவை எதுவுமே எனக்கு வேண்டாம். இதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. நான் எதிர்பார்த்தது நீங்களாக விரும்பிச் சொல்லும் ஒரேயொரு பிறந்தநாள் வாழ்த்தை மட்டும...
பணம் வந்தால், வசதி மட்டுமல்ல பிரிந்துபோன சொந்த பந்தமும் அல்லவா வந்து ஒட்டிக்கொள்ளும். அப்படி, இந்த ஒரு வருடத்துக்குள் அவனது சொந்தங்களும், ‘நீயும் எங்கள் அண்ணாவைப் போல் கெட்டிக்காரன் என்று எங்கள...
அத்தியாயம்-15 ரஞ்சனோடு வெளியே செல்லப் போகிறோம் என்கிற குதூகலத்தோடு, தாய் பரிசாகக் கொடுத்த சேலையை வேகவேகமாகக் கட்டிக் கொண்டு, ஈரமாக இருந்த கூந்தலைக் காயவைத்துத் தளரப் பின்னிக் கொண்டவள், பெற்றவர்...
“இங்கே ஒரு குறையும் இல்லை அங்கிள். நீங்களும் எங்களை நல்லபடியாகத்தான் நடத்துகிறீர்கள்.” என்று அவசரமாகச் சொன்னவனை யோசனையோடு பார்த்தார் சந்தானம். “பிறகு என்ன? ஏன் வேறு கடைக்குப் போகிறேன் என்கிறாய்...
