ராதாவின் அன்றைய உறக்கத்தையும் களவாடியிருந்தான் மோகனன். அவளும் அவனைப் புறம் தள்ளிவிட்டு கொஞ்சமாவது உறங்குவோம் என்றுதான் பார்க்கிறாள். முடிந்தால் தானே? மூடிய கண்களுக்குள்ளும் வந்து நிற்கிறவனை என்னதான் ச...
“சித்தப்பா! எனக்கு இன்னும் நீங்க பஞ்ச்பேக் வாங்கித் தரேல்ல.” இடையில் மிதுனாவின் குரல் புகுந்தது. “உங்களுக்கு ஏற்றது இங்க இல்ல செல்லம். சித்தப்பா கொழும்புல ஓடர்(ஆர்டர்) குடுத்திட்டன். பார்சல் வந்ததும் ...
அவன் அவளை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்க்கவில்லை போலும். அவளைக் கண்டுவிட்டு கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான். அவளின் முகம் சுருங்கியது. இப்போது என்ன அன்றுபோலவே போ என்கிறானா? இல்லை, இன்னும் போகாமல...
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. பதுமை போன்று நடமாடிக்கொண்டிருந்தாள் ராதா. ஏன் இப்படியானோம் என்று அவளுக்குப் புரியவே மாட்டேன் என்றது. பள்ளிக்கூடம் சென்றாள். பாடம் நடத்தினாள். அன்னைக்கு உதவியாக இருந்தாள்....
உணவை முடித்துக்கொண்டு, கடைசியாகப் பால் அப்பம் ஒன்றைக் கையில் வைத்துச் சாப்பிட்டுக்கொண்டே வந்த யாழினியும் தமையனை அங்கு எதிர்பார்க்கவில்லை. “அண்ணா! என்னண்ணா இங்க நிக்கிறீங்க?” என்றாள் ஆச்சரியத்தோடு. அவள...
அடுத்த நொடியே, “அண்ணி!” என்றபடி அவளின் கைகளுக்குள் புகுந்திருந்தாள் ராதா. “சொறி, சொறி அண்ணி! அது கோபத்தில யோசிக்காம..” “ஓ..! அப்ப கோவம் வந்தா நீங்க என்னவும் கதைப்பீங்க. அப்பிடியா மேடம்?” “அண்ணி..” அவள...
ஞாயிறுக்கே உரித்தான சோம்பல் நிறைந்த காலைப்பொழுது புலர்ந்திருந்தது. அதற்கு மாறாக, அடுப்படியில் நின்று சுறுசுறுப்பாகச் சமைத்துக்கொண்டிருந்தார் பரிமளா. முதல் நாள் இரவே குழைத்து, புளிக்க வைத்திருந்த அப்ப ...
“பொய் பொய் பொய்! அண்ணா சொல்லுறது முழுக்கப் பொய் அம்மா. இந்த வீடு முடிஞ்சதும் இன்னொரு வீடு எண்டு ஆரம்பிப்பார், பாருங்கோ!” என்றபடி தங்கள் அறையிலிருந்து வந்தாள் யாழினி. சிறு சிரிப்புடன் அவளைத் திரும்பிப்...
பொழுது முற்பகலை நெருங்கியிருந்தது. எல்லோருக்கும் குளிர்பானம் தருவித்திருந்தான் மோகனன். அதில் ஒன்றை எடுத்து அவளுக்கும் கொடுத்தான். அமைதியாகவே இருவரும் பருகினர். வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்...
இதையெல்லாம் ஒருவித மலைப்புடன் பார்த்து முடித்தவளின் விழிகளில், ‘Chity Construction and Engineering’ என்று பெரிதாக பெயர் பொறிக்கப்பட்ட பலகை, வீதியில் போகிறவர்கள் வருகிறவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக இரண்டு...
